என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரல் வீடியோ"

    • தன்னைவிட 41 வயது இளையவரின் காலில் விழுந்து வணங்க முயன்ற தேவேந்திர குமாரின் இந்தச் செயல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • இது முற்றிலும் கலாசார வெளிப்பாடு.

    பாஜக எம்.பி.யும் மத்திய தகவ்லதொடர்புத் துறை அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் காலில் 73 வயது பாஜக எம்எல்ஏ, விழுந்து வணங்க முற்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

    மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ வான தேவேந்திர குமார் ஜெயின் (73) உடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில், ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மஹாரியமான் சிந்தியாவும் கலந்து கொண்டார்.

    இதன்போது, கேக் வெட்டி, தேவேந்திர குமாருக்கு மஹாரியமான் ஊட்டி விட்டார்.

    இதைத்தொடர்ந்து 31 வயதேயான மஹாரியமானின் காலில் 73 வயதான தேவேந்திர குமார் விழுந்து வணங்க முயன்றார்.

    தன்னைவிட 41 வயது இளையவரின் காலில் விழுந்து வணங்க முயன்ற தேவேந்திர குமாரின் இந்தச் செயல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பேசிய தேவேந்திர குமார் , "எனக்காக மஹாரியமான் பிறந்தநாள் வாழ்த்து பாடியதால் நான் உணர்ச்சிவசப்பட்டேன். இதனால்தான், அவரது கால்களைத் தொட முயன்றேன்.

    இது முற்றிலும் கலாசார வெளிப்பாடு. இளம் வயதினரின் கால்களைத் தொடுவது குறித்து அரசியலமைப்பில் எதுவும் எழுதப்படவில்லை" என்று தெரிவித்தார். 

    • ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நீதா அம்பானி மும்பையில் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
    • இந்த விழாவிற்கு ஹர்திக் பாண்டியா மற்றும் மஹீகா சர்மா இருவரும் ஜோடியாக வருகை தந்தனர்.

    இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா, தனது காதலி மஹீகா சர்மாவை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு அறிமுகம் செய்து வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் அணிகளின் உலகக்கோப்பை வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நீதா அம்பானி மும்பையில் நேற்று முன்தினம் இரவு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் மற்றும் சினிமா துறையைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவிற்கு ஹர்திக் பாண்டியா மற்றும் மஹீகா சர்மா இருவரும் ஜோடியாக வருகை தந்தனர்.

    விழாவின் போது, அங்கு வந்திருந்த பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சனிடம், ஹர்திக் பாண்டியா தனது காதலியை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர்கள் உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

      

    • பீகார் பெண்கள் ஒன்றும் சந்தையில் விற்கும் பொருட்கள் அல்ல. இது பீகார் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம்.
    • அவர் இவ்வளவு கீழ்த்தரமாகப் பேசியிருப்பது அவரது புத்தியின் வறுமையைக் காட்டுகிறது

    பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக ரேகா ஆர்யா உள்ளார்.

    ரேகா ஆர்யாவின் கணவர் கிரிதாரி லால் சாஹுவும் பாஜகவில் முக்கிய தலைவர் ஆவார். அவர் பீகார் பெண்கள் குறித்து கீழ்த்தரமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரகாண்டின் அல்மோராவில் சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கிரிதாரி லால் சாஹு கலந்து கொண்டார்.

    அப்போது அங்கிருந்த இளைஞர்களிடம் திருமணத்தைப் பற்றிப் பேசிய அவர், "உங்களுக்குத் திருமணம் ஆகவில்லையா? வயதான காலத்திலா திருமணம் செய்யப் போகிறீர்கள்? கவலைப்படாதீர்கள், உங்களால் திருமணம் செய்ய முடியாவிட்டால் நாங்கள் பீகாரிலிருந்து உங்களுக்குப் பெண் அழைத்து வருவோம். அங்கே ரூ.20,000 முதல் ரூ.25,000 கொடுத்தால் பெண் கிடைக்கும்" என்று பேசியுள்ளார்.

    பீகாரின் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள், பாஜகவின் பெண்களுக்கு எதிரான மனநிலையை இது காட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளன.

    கிரிதாரி லால் கருத்துக்கு பீகார் மாநில பாஜகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    "பீகார் பெண்கள் ஒன்றும் சந்தையில் விற்கும் பொருட்கள் அல்ல. இது பீகார் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம்" என்று பீகார் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    "அவரது மனைவி பெண்கள் நலத்துறை அமைச்சராக இருக்கும்போதே, அவர் இவ்வளவு கீழ்த்தரமாகப் பேசியிருப்பது அவரது புத்தியின் வறுமையைக் காட்டுகிறது" என்று கூறி பீகார் மாநில மகளிர் ஆணையத் தலைவி அஸ்பரா தெரிவித்தார்.

    இதுதொடர்பாக மகளிர் ஆணையம் கிரிதாரி லாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதற்கிடையே தனது வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், தான் பெண்களை மிகவும் மதிப்பவன் என்றும் கிரிதாரி லால் மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    • அந்தப் பிஞ்சு சிறுவனின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவன் மரணத்திற்குப் பழகிப் போய்விட்டான்.
    • அந்தச் சிறுவன் பேசத் தொடங்கிய மாத்திரத்திலேயே என் கண்கள் குளம் போன்றதாகிவிட்டன.

    71 வயதான ஜாக்கி சான் 'Unexpected Family" என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சீன தலைநகர் பீஜிங்-இல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜாக்கி சான் கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்வில் பேசிய ஜாக்கி சான், அண்மையில், காசா குழந்தைகளின் துயரங்களை விவரிக்கும் வீடியோ ஒன்றை பார்த்து மனமுடைந்தேன். 

    அந்த வீடியோவில், ஒரு பாலஸ்தீன சிறுவனிடம், பெரியவனானதும் நீ என்னவாக விரும்புகிறாய்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அந்தச் சிறுவன் எவ்வித உணர்ச்சியுமின்றி, மிகச் சாதாரணமாக, "எங்கள் ஊரில் குழந்தைகள் வளர்வதே இல்லை. ஏனெனில் வளர்வதற்கு முன்பே கொல்லப்பட்டு விடுகிறோம்" என்று பதிலளித்தான்.

     அந்தச் சிறுவன் பேசத் தொடங்கிய மாத்திரத்திலேயே என் கண்கள் குளம் போன்றதாகிவிட்டன.

    என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தப் பிஞ்சு சிறுவனின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவன் மரணத்திற்குப் பழகிப் போய்விட்டான்.

    நாம் முதுமையை ஒரு சுமையாக நினைக்கிறோம். ஆனால் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு அந்த முதுமை மறுக்கப்படுகிறது. அவர்கள் வளர்வதற்கு முன்பே போரினால் சிதைக்கப்படுகிறார்கள்.

    வன்முறை என்பது ஒரு குழந்தையின் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு ஆழமாக ஊடுருவியிருந்தால், மரணத்தைப் பற்றி அந்தச் சிறுவனால் இவ்வளவு சாதாரணமாகப் பேச முடியும் என்பதுதான் உலகிற்கு அது சொல்லும் செய்தி" என்று உருக்கமாக தெரிவித்தார்.

    2 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசா போரில் இதுவரை 71,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    குறிப்பாக 20,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது கடந்த 23 மாதங்களில் காசாவில் 1 மணி நேரத்துக்கு 1 குழந்தை கொல்லப்பட்டுள்ளது.

    • இளம்பெண்கள் அதிக மதுபோதையில் சாலைகளில் தடுமாறி விழுவதும், மயக்க நிலையில் இருப்பதும் பதிவாகியுள்ளது.
    • இந்திய நகரங்களின் இரவு நேரக் கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதம் நடந்து வருகிறது.

    புத்தாண்டு கொண்டாட்டத்துடன் 2026 ஆண்டு ஆண்டு நேற்று இனிதே தொடங்கியது. டிசம்பர் 31 இரவில் புத்தாண்டை வரவேற்க இந்தியாவெங்கும் பலர் வீதிகளில் திரண்டனர்.

    அதே சமயம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இளைஞர்கள், பாட்டு, கச்சேரி, பார்ட்டி என அன்றைய இரவு புத்தாண்டை கொண்டாடித் தீர்த்தனர்.

    அந்த வகையில் நாடு முழுவதிலுமிருந்து வந்து, இளைஞர்கள் அதிகம் பணியாற்றும் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் இரவில் கொண்டாட்டம் களைகட்டியது.

    ஆனால் பல இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அன்றைய இரவு மது மற்றும் போதையின் பிடியில் வீதிகளில் தள்ளாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    இளைஞர்கள் மத்தியில் வளர்த்து வரும் போதைக் கலாச்சாரம் குறித்த கவலையை இவை ஏற்படுத்தி உள்ளன. பலரும் இந்த வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்த வீடியோக்களில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அதிக மதுபோதையில் சாலைகளில் தடுமாறி விழுவதும், சிலர் மயக்க நிலையில் இருப்பதும் பதிவாகியுள்ளது. 

    குறிப்பாக, பெங்களூருவின் புகழ்பெற்ற எம்.ஜி. சாலைமற்றும் இந்திரா நகர் பகுதிகளில் இதுபோன்ற காட்சிகள் அதிகமாகக் காணப்பட்டன. அதேபோல டெல்லி அருகே உள்ள குரேகானிலும் இதுபோன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு, இந்திய நகரங்களின் இரவு நேரக் கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  

    • நயன்தாரா தானாக முன்வந்து, 'என்ன அனில், படத்துக்கு புரோமோஷன் இல்லையா?' எனக் கேட்கிறார்.
    • இதைக் கேட்டு அனில் ரவிபுடி மயங்கி விழுவது போன்ற காட்சி காமெடியாக காட்டப்பட்டுள்ளது.

    தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 157 படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    படத்திற்கு 'மன ஷங்கர வரபிரசாத் காரு' என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். கேத்ரீன் தெரேசா முக்கிய கதாப்பாத்திரம் ஏற்றுள்ளார்.

    படத்தை சாகு கரபதி மற்றும் சுஷ்மிதா கொனிடேலா தயாரிக்கின்றனர். இந்த படத்தின் முதல் பாடல் "மீசால பில்லா" பாடல் வைரலானது.

    இப்படம் பொங்கலை ஒட்டி வரும் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் பு ரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த படத்தின் புரோமோஷனில் நயன்தாரா கலந்துகொண்டுள்ளார்


    பொதுவாக நயன்தாரா தான் நடிக்கும் படங்களில் புரோமோஷனில் கலந்துகொள்ளவே மாட்டார். இதை ஒரு ரூல் ஆகவே அவர் கடைபிடித்து வந்தார். இது பலமுறை விமர்சனத்துக்கும் உள்ளானது.

    ஒரு படத்திற்கு புரோமோஷன் என்பது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசிய தேவகையாகவே மாறிவிட்டது.

    ஆனால் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் தான் நடித்த படத்திற்கு நயன்தாரா புரோமோஷன் செய்யாதது தயாரிப்பாளர்களை முகம் சுழிக்க வைத்தது. அவர் சமீபமாக நடித்த எனது தமிழ் படங்களின் புரோமோஷனிலும் கலந்துகொள்ளவில்லை.

    ஆனால் தற்போது தெலுங்கு படத்திற்காக நயன்தாரா தனது பிடிவாதத்தை தளர்த்தியுள்ளது மேலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படத்தில் புரோமோஷனில் ஆரம்பம் முதலே நயன்தாரா பங்கேற்று வருகிறார்.

    இதற்கிடையே 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நயன்தாரா தானாக முன்வந்து, 'என்ன அனில், படத்துக்கு புரோமோஷன் இல்லையா?' எனக் கேட்கிறார். இதைக் கேட்டு அனில் ரவிபுடி மயங்கி விழுவது போன்ற காட்சி காமெடியாக காட்டப்பட்டுள்ளது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தமிழ் ரசிகர்கள், விமர்சகர்கள் நயன்தாராவின் பாரபட்சமான செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

    தமிழ் சினிமா மூலமே லேடி சூப்பர்ஸ்டார் என்ற அளவுக்கு வளர்ந்த நயன்தாரா தமிழ் சினிமா மீது பாரபட்சம் காட்டுவது பலரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • அவரின் அருகில் நின்றிருந்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் மயங்கி விழுந்தார்.
    • சிறுணியம் மயங்கி விழுந்ததை பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி தனது பேச்சை தொடர்ந்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவரைப்பேட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    தனது பரப்புரை வாகனத்தில் நின்று எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தபோது வாகனத்தில் அவரின் அருகில் நின்றிருந்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென மயங்கி விழுந்தார்.

    மயங்கிய மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமனை அருகில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் ரமணா கைத்தாங்கலாக எழுப்பி பேருந்திற்குள் அனுப்பி வைத்தார். சிறுணியம் மயங்கி விழுந்ததை பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி தனது பேச்சை தொடர்ந்தார்.

    சிறிது நேரம் பேருந்தில் ஓய்வெடுத்த சிறுணியம், உரையை முடித்து புறப்படும் போது எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து வீர வாள் பரிசளித்தார். மணியம் மயங்கி விழுந்ததும், பழனிச்சாமி பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்ந்ததும் வீடியோவில் பதிவாகி உள்ளது. 

    • இதனைத் தட்டிக்கேட்ட நோயாளி, மரியாதையாகப் பேசுங்கள் என்று மருத்துவரை கடிந்துள்ளார்.
    • அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்தனர்.

    இமாச்சல பிரதேசத்தில் நோயாளி ஒருவரை மருத்துவர் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ஷிம்லா மாவட்டத்தின் குப்வி பகுதியைச் சேர்ந்த நோயாளி ஒருவர், சுவாசக் கோளாறு காரணமாகச் ஞாயிற்றுக்கிழமை ஷிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவரிடம் தனது உடல்நிலை குறித்து விளக்கியுள்ளார்.

    அந்த சமயத்தில், மருத்துவர் மிகவும் அநாகரீகமாக பேசியதாக தெரிகிறது.

    இதனைத் தட்டிக்கேட்ட நோயாளி, மரியாதையாகப் பேசுங்கள் என்று மருத்துவரை கடிந்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர், நோயாளியைத் தாக்கியுள்ளார். இதை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து வெளியிட்ட நிலையில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

    இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள், மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நோயாளி மீது தாக்குதல் நடத்திய மருத்துவரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    • பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் எழுத்துபூர்வமாக ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார்.
    • 2019-ஆம் ஆண்டு முதல் இ சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. நாளை டிசம்பர் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

    இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி கீர்த்தி ஆசாத் மக்களவையில் அவைக்குள்ளேயே இ-சிகரெட் பிடித்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் பாஜக வெளியிட்டுள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு பாஜக எம்.பி அனுராக் தாக்கூர், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் அவைக்குள்ளேயே இ-சிகரெட் பயன்படுத்துவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்திருந்தார். அப்போது அவர் அந்த உறுப்பினரின் பெயரை குறிப்பிடவில்லை.

    இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு முதல் இ சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அனுராக் தாக்கூர் தனது புகாரில் சுட்டிக்காட்டினார்.

    குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி அளித்தார்.

    இந்நிலையில் பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், கீர்த்தி ஆசாத் தனது உள்ளங்கைக்குள் இ-சிகரெட்டை மறைத்து வைத்துப் புகைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    அவையின் சிசிடிவி பதிவுகள் மற்றும் வீடியோக்களை ஆய்வு செய்த பிறகு, விதிமுறைகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    • டெல்லியில் பாஜகவின் வாக்கு திருட்டுக்கு எதிராக ராம்லீலா மைதானத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றுகொண்டிருந்தார்.
    • இந்த சம்பவத்தால் மனம் நெகிழ்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பதிவில் அஞ்சலிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    கர்நாடகாவின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் மருத்துவருமான அஞ்சலி நிம்பல்கர் விமானப் பயணத்தின் போது சக பயணியின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பாராட்டை குவித்து வருகிறது.

    கோவாவின் பொறுப்பான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் இருக்கும் நிம்பல்கர்,

    டெல்லியில் பாஜகவின் வாக்கு மோசடியை கண்டித்து ராம்லீலா மைதானத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள அவர் கோவாவிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

    இதற்கிடையில், அதே விமானத்தில் பயணித்த அமெரிக்க பெண் உடல்நிலை சரியில்லாமல் போனார்.

    சோர்வு மற்றும் நடுக்கம் எடுத்து அவரின் பல்ஸ் இறங்கியது. உடனே அவருக்கு அஞ்சலி CPR சிகிச்சை கொடுத்தார். பின்னர், சற்று சுயநினைவு அடைந்த அவரை பயணம் முழுவதும் கவனித்துக்கொண்டார்.

    டெல்லியில் தரையிறங்கிய உடனேயே அப்பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அஞ்சலி அளித்த சிபிஆர் சிகிச்சையால் அப்பெண்ணின் உயிர் காட்டப்பற்றது.

    இந்த சம்பவத்தால் மனம் நெகிழ்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பதிவில் அஞ்சலிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.  

    • அரசிற்கு எதிராக இந்தியாவின் கைப்பாவையாகச் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினார்.

    பாகிஸ்தானின் ராணுவ மக்கள் தொடர்புப் பிரிவின் தலைமை இயக்குநர், லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் சௌத்ரி செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர் ஒருவரை பார்த்து கண் அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

    அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அகமது ஷெரீஃப், சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியவர் என்றும், அரசிற்கு எதிராக இந்தியாவின் கைப்பாவையாகச் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினார்.

    இது குறித்து கேள்வியெழுப்பிய பத்திரிகையாளர் அப்சா கோமல், "கடந்த காலத்தில் இருந்து இப்போது என்ன வேறுபாடு உள்ளது. அல்லது எதிர்காலத்தில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்க வேண்டுமா?" எனக் கேட்டார்.

    இதற்கு பதிலளித்த அகமது, கேலியான தொனியில், "அவர் (இம்ரான் கான்) ஒரு மன நோயாளி" என்று கூறிவிட்டு, சிரித்துக்கொண்டே கோமலைப் பார்த்து கண் சிமிட்டினார்.

    அகமது ஷெரீஃப், ஓசாமா பின்லேடனின் உதவியாளராக இருந்தவரும், அறிவிக்கப்பட்ட பயங்கரவாதியுமான சுல்தான் பஷிருதீன் மஹ்மூத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.   

    • நீதிமன்றத்திற்குட்பட்ட கார்கர்டூமா வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
    • அடிவாங்கிய ராகேஷ் கிஷோர் அவர்களை அடிக்காபாய்ந்து சனாதன தர்மம் வாழ்க என கோஷமிட்டுள்ளார்.

    உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததாக கூறி அவர் மீது காலனியை வீரியவர் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர். இதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்நிலையில் நீதிமன்றத்திற்குட்பட்ட கார்கர்டூமா வளாகத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் சென்றுகொண்டிருந்தபோது அங்கு நடந்து சென்றுகொண்டிருந்த ராகேஷ் கிஷோர் மீது சிலர் காலணி வீசித் தாக்கி உள்ளனர்.

    அவர்களை மற்ற வழக்கறிஞர்கள் தடுக்க முயன்றுள்ளனர். அடிவாங்கிய ராகேஷ் கிஷோர் அவர்களை அடிக்காபாய்ந்து சனாதன தர்மம் வாழ்க என கோஷமிட்டுள்ளார்.

    ராகேஷ் கிஷோரை காலணியால் தாக்குபவர்கள் யார் என்பது குறித்தும் எந்தவித தகவலும் இல்லை. ஆனால் இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

    ×