என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிபத்து"

    • இங்கிலாந்து ராணுவ தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் உள்பட 3 பேர் பலியாகினர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் தென்கிழக்கு பிராந்தியமான ஆக்ஸ்போர்டுஷையர் நகரில் ராணுவ தளம் அமைந்துள்ளது. விமானப்படைக்குச் சொந்தமான அந்த ராணுவ தளத்தில் கூட்டுப்போர் பயிற்சி, வழக்கமான ராணுவ பயிற்சிகள் போன்றவை நடைபெற்றன.

    தற்போது அந்த ராணுவ தளங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன. கைவிடப்பட்ட அந்த ராணுவ தளம் தற்போது ஆயுதங்கள், வெடிமருந்துகள் கிடங்காகப் பயன்படுகின்றது.

    இந்நிலையில், இந்த ராணுவ பயிற்சி தளத்தில் நேற்று திடீரென தீப்பிடித்தது. அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியதால் அந்த இடம் முழுதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் உள்பட 3 பேர் உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து, பலியான தீயணைப்பு வீரர்களுக்கு அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது இரங்கலைத் தெரிவித்தார். தீ விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    • தீவிபத்தில் கோடிக்கணக்கான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.
    • தீவிபத்து ஏற்பட்ட இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து தான் பல வெளி மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. இரண்டாவது அனல்மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இன்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது. பல மணி நேரமாக பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

    3 மணி நேரத்திற்கும் மேலாக தீ பற்றி எரிந்து வரும் நிலையில் மற்ற இடங்களுக்கும் பரவாமல் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த தீவிபத்தில் கோடிக்கணக்கான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. தீவிபத்து ஏற்பட்ட இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து தான் பல வெளி மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. 

    • 200-க்கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இது நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 3,025 படுக்கைகளுடன் இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாக திகழ்கிறது.

    இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பல நவீன கருவிகள் இருக்கின்றன. இதனால் இந்த மருத்துவமனைக்கு கோழிக்கோடு மாவட்டம் மட்டுமின்றி, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக நோயாளிகள் வருகிறார்கள்.

    இந்தநிலையில் கோழிக்கோடு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தரை தளத்தில் உள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவுக்கு அருகில் இருந்த யு.பி.எஸ். அமைப்பில் தீப்பிடித்துள்ளது.

    இதன் காரணமாக ஆஸ்பத்திரியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவை முழுவதுமாக புகை மூட்டம் சூழ்ந்தது. ஆஸ்பத்திரியில் இருந்த தீயணைப்பு கருவிகள் மூலமாக தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

    ஆகவே தீவிபத்து குறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கடற்கரை மற்றும் வெள்ளிமடுக்குன்னு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்குள் அதிரடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்பு புகைமூட்டம் இருந்த மற்ற வார்டுகளில் இருந்த நோயாளிகளும் வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.

    பல்வேறு வார்டுகளில் சிகிச்சை பெற்று வந்த 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். அவர்களை வேறு மருத்துவமனைகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆம்புலன்சு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

    முதலில் அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் இருந்த 30 நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தேவைப்பட்டதால், அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். மற்ற நோயாளிகள் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மின் கசிவு காரணமாகவே இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த தீ விபத்தில் சிக்கி 5 நோயாளிகள் இறந்து விட்டதாக தகவல் பரவியது.

    கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்து வந்த இளம்பெண் கங்கா (வயது34), கங்காதரன்(70), கோபாலன்(55), சுரேந்திரன்(59), நஜிரா(44) ஆகிய 5 நோயாளிகள் நேற்று இரவு இறந்தனர். அவர்கள் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி இறந்துவிட்டதாக தகவல் வெளியானது.

    புகை மூட்டத்தில் சிக்கிய நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்றியபோது 5 பேர் இறந்திருப்பதாக சித்திக் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார். ஆனால் அவர்கள் 5 பேரும் புகை மூட்டத்தில் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகவில்லை என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    ஒரு பெண் நோயாளி ஏறகனவே வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தவர் என்றும், 2 நோயாளிகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும், ஒரு நோயாளி கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர் என்றும், ஒரு நோயாளி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பெற்றவர் எனவும், அவரவர் உடல்நல பிரச்சனை காரணமாகவே அவர்கள் இறந்திருப்பதாக கோழிக்கோடு மருத்துவமனை கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

    இந்த தீவிபத்துக்காக விரிவான விசாரணை நடத்துமாறு மருத்துவக்கல்வி இயக்குனருக்கு கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது. மேலும் பொறியாளர் குழுவும் ஆய்வை தொடங்கியுள்ளது.

    5 நோயாளிகள் மரணத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்த மருத்துவ வாரியம் இன்று கூடுகிறது. மருத்துவ கல்வி இயக்குனர் விசாரணை மற்றும் மருத்துவ வாரிய ஆலோசனை உள்ளிட்டவைகள் முடிந்த பிறகே 5 நோயாளிகளின் இறப்புக்காக காரணம் வெளியிடப்படும் என தெரிகிறது.

    • சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
    • இந்த மாதத்தில் சீனாவில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய தீ விபத்தாகும்.

    சீனாவின் லியோனிங் மாகாணத்தில் சியாங் நகரில் உள்ள உணவகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.

    இன்று மதியம் 12.25 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்ததாக அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியது.

    தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், மீட்புப்பணிகளுக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த உணவக தீ விபத்து, இந்த மாதத்தில் சீனாவில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய தீ விபத்து. முன்னதாக, வடக்கு சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

    • 27 தீயணைப்பு வாகனங்கள் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
    • சேரியில் சீரற்ற மின் கம்பிகள் மற்றும் பல எல்பிஜி சிலிண்டர்கள் காணப்பட்டன

    டெல்லியின் ரோகிணி செக்டார் -17 இல் அமைந்துள்ள குடிசைப் பகுதியில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில், இரண்டு சிறு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

    டெல்லி தீயணைப்பு சேவை (DFS) அதிகாரிகளின் கூற்றுப்படி, தீ மிக வேகமாகப் பரவியதால் 800க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

    தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு காலை 11:55 மணிக்கு தகவல் கிடைத்தது. 27 தீயணைப்பு வாகனங்கள் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. தீயை முழுமையாக அணைக்கும் பணி இன்னும் நடந்து வருகிறது.

    இரண்டரை வயது மற்றும் மூன்று வயதுடைய இரண்டு குழந்தைகளின் உடல்கள் தீயில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி அமித் கோயல் தெரிவித்தார்.

    குடிசைப் பகுதியின் முன்புறத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் உயரமான சுவர்கள் இருந்ததால், தீயணைப்பு வாகனங்கள் உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்பட்டதால், தீயை அணைப்பது கடினமாக இருந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

    தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையின்படி, சேரியில் சீரற்ற மின் கம்பிகள் மற்றும் பல எல்பிஜி சிலிண்டர்கள் காணப்பட்டன, இதன் காரணமாக தீ வேகமாக பரவியிருக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • விபத்தில் குடோனுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பைக்குகளும் எரிந்து சேதமடைந்தன.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வாழைக்குளம் குடியிருப்பை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது34). இவர் புதுச்சேரி பட்டேல் சாலை-செஞ்சி ரோடு சந்திப்பில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு பைக்குகளை வாடகை விடும் தொழிலும் செய்து வருகிறார்.

    இதற்காக கேண்டின் வீதியில் உள்ள மனோன்மணி அம்மன் கோவில் பின்புறம் குடோனில் பைக்குகளை நிறுத்தி வைத்திருந்தார்.

    நள்ளிரவு 2 மணிக்கு குடோன் எரிவதாக புதுச்சேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    அப்போது குடோனுக்குள் ஒருவர் தீக்காயங்களுடன் கிடந்தார். அவரை பெரியக்கடை போலீசார் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிளாட் பாரத்தில் வசிக்கும் சுரேஷ் (26) என்பதும், நள்ளிரவில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் பைக்குகளில் இருந்து பெட்ரோல் திருடும் அவர் மணிவண்ணன் வாகனம் நிறுத்தி வைத்திருந்த குடோனுக்கு பெட்ரோல் திருட சென்றதாக கூறப்படுகிறது.

    அங்கு அவர் பைக்குகளில் பெட்ரோல் திருடிய படி சிகரெட் பிடித்துள்ளார். அப்போது பெட்ரோல் மீது நெருப்பு பட்டு குடோன் தீப்பிடித்தது தெரிய வந்தது. இந்த விபத்தில் குடோனுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பைக்குகளும் எரிந்து சேதமடைந்தன. தீக்காயமடைந்த சுரேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து சுரேஷ் மீது பெரியக் கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பலர் காங்கோ நதி மற்றும் அதன் துணை நதிகளின் வழியே படகு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
    • தீ மளமளவென பரவியதால் மரத்தால் ஆன படகு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

    மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் போதுமான சாலை உள்கட்டமைப்பு இல்லாததால் பலர் காங்கோ நதி மற்றும் அதன் துணை நதிகளின் வழியே படகு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர். மோசமான பராமரிப்புள்ள படகுகளால் அவ்வப்போது விபத்துகளும் நேர்கிறது.

    இந்நிலையில் காங்கோவின் ஈக்வடூர் மாகாணத்தில் இருந்து அருகே உள்ள மாகாணத்திற்கு 150க்கும் மேற்பட்டோரை ஏற்றுக்கொண்டு மரப்படகு ஒன்று ருகி ஆற்றில் சென்றுகொண்டிருந்தது. படகில் எரிபொருட்களும் ஏற்றிச் செல்லப்பட்டன.

    பண்டமா என்ற பகுதியில் சென்றபோது படகில் சமையல் செய்துகொண்டிருந்தபோது தீயானது எரிபொருட்கள் மீது பற்றியது. தீ மளமளவென பரவியதால் மரத்தால் ஆன படகு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

    இந்த சம்பவத்தில் படகில் பயணித்த 143 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் ஆற்றில் குதித்த மாயமாகினர். இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது.

    போதிய தகவல் தொடர்பு வசதி இல்லாததால் இந்த விபத்து குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ஆற்றில் குதித்து மாயமானவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட உடல்கள் முற்றிலும் எறிந்த நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மூன்றாவது மாடியில் அமைந்துள்ள ஸ்பாவில் தீ விபத்து ஏற்பட்டது.
    • உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள பார்க் ஹயாட் ஹோட்டலில் இன்று (திங்கள்கிழமை) தீ விபத்து ஏற்பட்டது. அங்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) இந்தியன் பிரீமியர் லீக் (IPL) அணியின் வீரர்கள் தங்கியிருந்தனர். சொகுசு ஹோட்டலின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள ஸ்பாவில் தீ விபத்து ஏற்பட்டது.

    தீ விபத்து ஏற்பட்டபோது, SRH குழுவினர் ஹோட்டல் வளாகத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறினர்.

    ஹோட்டல் ஊழியர்களால் தீ உடனடியாக அணைக்கப்பட்டதாகவும், யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

    குறிப்பிடத்தக்க சேதம் இல்லாமல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தால் ஹோட்டலில் இருந்த விருந்தினர்களுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.

    • இப்ராஹிம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • தீயின் தீவிரம் மீட்புப் பணிகளை சவாலானதாக மாற்றியுள்ளது.

    உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

    விவரங்களின்படி, மாவட்டத்தின் இப்ராஹிம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இந்த தீவிபத்து நடந்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    தீ விபத்து ஏற்பட்டபோது தொழிற்சாலைக்குள் பல தொழிலாளர்கள் இருந்ததாகவும், சிலர் இன்னும் சிக்கியிருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் ஒருவர் மீட்கப்பட்டு மருதுவானமைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    தீயின் தீவிரம் மீட்புப் பணிகளை சவாலானதாக மாற்றியது. நீண்ட போராட்டத்திற்கு பின் தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அடர்ந்த புகை மற்றும் அபாயகரமான பொருட்கள் ஆகியவை மீட்புப் பணிகளை மேலும் சிக்கலாக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்பட வில்லை.

    விருதுநகர்:

    விருதுநகர் சிவன் கோவில் அருகில் பெருமாள் கோவில் தெரு பேட்டை பகுதி உள்ளது. இங்குள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் தினக் கூலி தொழிலாளர்கள், கட்டிட வேலைக்கு செல்வோர் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது குடிசை வீட்டில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீர் என தீப்பற்றியது. உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் தூக்கம் கலைந்து அலறி யடித்துக் கொண்டு வெளி யேறினர். ஆனால் அதற்குள் அந்த வீட்டின் பெரும்பாலான பகுதி எரிந்து சேதம் அடைந்தது.

    அதிகாலை நேரத்தில் மிதமான காற்றும் வீசியதால் தீயானது மளமளவென பரவி அந்த பகுதியில் அருகிலிருந்த 20-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளிலும் தீப்பற்றியது. அப்போது அந்த வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. மேலும் அருகில் இருந்த பால் பண்ணையிலும் தீ பரவியது.

    உடனடியாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை பாதுகாப்பாக வெளியேற்றினர். இதுகுறித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 15-க்கும் மேற்பட்டோர் 3 தீயணைப்பு வாகனங்களில் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

    இந்த விபத்தில் வீட்டிலிருந்து உயிர் தப்பி வெளியே ஓடி வந்த கணேஷ் மூர்த்தி என்பவர் பலத்த காயம டைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த தீ விபத்து குறித்து பஜார் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவ இடத்தை விருதுநகர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தீ விபத்து ஏற்பட்ட பகுதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்பட வில்லை. ஆனால் பல லட்சம் மதிப்பிலான குடிசை வீடுகளில் இருந்த உடமைகள் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

    • ஆறு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
    • பல லட்சம் மதிப்பிலான எண்ணெய் வித்து பொருள்கள் எரிந்து நாசமானது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பள்ளி வாசல் தெருவில் வசிப்பவர் சாகுல் (வயது 40).

    இவர் அதே பகுதியில் ஆயில் மில் நடத்தி வருகிறார். ஆயில் மில் மேல் தளத்தில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் எண்ணெய் தயாரிப்பதற்கான அட்டைப்பெட்டிகள், எள் மூட்டைகள், கடலை பருப்பு மூட்டைகள் உள்ளிட்ட ஆயில் பொருட்களை வைத்துள்ளார்.

    வழக்கம் போல் நேற்று இரவு வேலைகளை முடித்துவிட்டு ஆயில் மில்லை வழக்கம் போல் சாகுல் பூட்டிவிட்டு சென்றார்.

    இந்த மில்லில் இருந்து நள்ளிரவில் பொருட்கள் வைத்திருத்த தளத்தில் இருந்து புகையுடன் தீ பற்றியது. பின்னர் தீ மளமளவென பரவி ஆயில் மில் மேல் தளத்தில் உள்ள குடோன் முழுவதும் பரவியது இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆலங்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரமாக போராடினர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து இது ஆயில் குடுடோன் என்பதால் இதற்கு என பிரத்தியேகமாக உள்ள தீயணைப்பு வாகனம் புதுக்கோட்டையில் இருந்து வரவழைக்கப்பட்டது.

    அவர்கள் ஆறு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள கட்டிடங்களிலும் தண்ணீர் பீச்சியடித்து தீ பரவாமல் தடுத்தனர்.

    இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்து பொருள்கள் எரிந்து நாசமானது. நள்ளிரவில் நடந்த இந்த தீ விபத்தால் ஆலங்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • தீ விபத்து காரணமாக விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    • தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

    லண்டன்:

    உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் உலகின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்துக்கு மின்சாரம் வழங்கக்கூடிய துணை மின் நிலையத்தில் நேற்று இரவு 11.23 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் கடுமையான புகை மூட்டமாக இருந்தது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்து காரணமாக விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு கருதி அங்கிருந்து 150-க்கும் மேற்பட்ட பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 200 மீட்டர் சுற்றளவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    விமான நிலையமும் இன்று இரவு 11.59 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஹீத்ரோ விமானநிலையத்துக்கு வந்த விமானங்கள் மற்ற விமானநிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டது.

    விமான நிலையத்துக்கு பயணிகள் யாரும் வரவேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு விமானம் புறப்படும் நேரத்தை உறுதி செய்து கொள்ளுமாறும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் விமான பயணிகள் தவிப்புக்கு உள்ளானார்கள்.

    விமான நிலையம் அருகில் இருந்த 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 

    ×