என் மலர்
நீங்கள் தேடியது "எல்ஐசி"
- கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வமுள்ள ரவீந்திரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்.
- அவர் காலையில் அதிகாலையில் எழும்போது நலமுடனே இருந்தார். தந்தையுடன் தேநீர் அருந்தினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் சிப்ரி பஜார் பகுதியில் உள்ள நல்கஞ்சில் வசித்து வந்தவர் 30 வயதான ரவீந்திர அஹிர்வார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எல்.ஐ.சி.யில் மேம்பாட்டு அதிகாரியாக ரவீந்திரன் பணியில் சேர்ந்தார்.
கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வமுள்ள ரவீந்திரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். நேற்று காலை, உள்ளூரில் அரசுக் கல்லூரி மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.
விளையாடும்போது அசௌகரியத்தை உணர்ந்த ரவீந்திரனின் மைதானத்திலிருந்து தண்ணீர் குடிக்க சென்றார். அவர் தண்ணீரை குடித்த உடனே வாந்தி எடுத்து சுயநினைவை இழந்து மயங்கி விழுந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சச்சின் மகோர், பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் உணமையான காரணம் புலனாகும் என்று தெரிவித்தார்.
ரவீந்திரனின் தம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில், அவர் காலையில் அதிகாலையில் எழும்போது நலமுடனே இருந்தார். தந்தையுடன் தேநீர் அருந்தினார். விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்றார். 1 மணி நேரதிற்கு பிறகு அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்தது" என்று தெரிவித்தார்.
- 3 மத்திய அரசு நிறுவனங்களும் சேர்ந்து ரகசிய திட்டம் ஒன்றை தீட்டியதாக வாஷிங்க்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
- எஸ்பிஐயிலிருந்து 525 கோடி ரூபாய் அதானியின் எஃப்பிஓவில் முதலீடு செய்யப்பட்டது ஏன்?
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) மூலம் அதானி குழுமத்துக்கு 3.9 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ.33,000 கோடி) முறைகேடாக நிதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டதாக அமெரிக்காவின் வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிகையின் குற்றம்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தொடர் முறைகேடு குற்றச்சாட்டுகளால் நஷ்டமடைந்த அதானி குழுமத்தை மீட்க கடந்த மே மாதம், மத்திய நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை (DFS), LIC ஆகிய 3 மத்திய அரசு நிறுவனங்களும் சேர்ந்து ரகசிய திட்டம் ஒன்றை தீட்டியதாக வாஷிங்க்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக மே மாத இறுதியில், கடனை தீர்க்க, அதானி குழுமத்தின் கீழ் உள்ள அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (APSEZ) சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டபோது இதனை LIC முழுமையாக வாங்கியது.
மேலும் இதே போல பல முதலீடு வழிகளில் LIC இன் நிதி மொத்தம் ரூ.33,000 கோடி அதானி குழுமத்திற்கு முறைகேடாக வழங்குவதே அந்த ரகசிய திட்டம் என்றும் அதற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலும் கிடைத்தது என்பதே வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின் குற்றச்சாட்டாக உள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையின் குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை என LIC நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகாயர்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், LIC எல்ஐசி பிரீமியத்தின் ஒவ்வொரு பைசாவையும் செலுத்தும் ஒரு சாதாரண சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க நபருக்கு, மோடி தனது சேமிப்பைப் பயன்படுத்தி அதானியை மீட்கிறார் என்பது தெரியுமா? இது நம்பிக்கை துரோகம் இல்லையா? இது கொள்ளை இல்லையா?
அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட எல்ஐசி பணத்திற்கும், மே 2025 இல் ROO 33,000 கோடி முதலீடு செய்யும் திட்டத்திற்கும் மோடி அரசாங்கம் பதிலளிக்குமா?
இதற்கு முன்பே, 2023 இல், அதானியின் பங்குகளில் 32% க்கும் அதிகமான சரிவு இருந்தபோதிலும், எல்ஐசி மற்றும் எஸ்பிஐயிலிருந்து 525 கோடி ரூபாய் அதானியின் எஃப்பிஓவில் முதலீடு செய்யப்பட்டது ஏன்?
மோடி தனது நண்பரின் பைகளை நிரப்புவதில் மும்முரமாக இருக்கிறார். 30 கோடி எல்ஐசி பாலிசிதாரர்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை கொள்ளையடிக்கிறார்" என்று விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா எல்ஐசியின் பதில் அறிக்கையை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, LIC India, எதை நீங்கள் பொய் என்று கூறுகிறீர்கள்?, நீங்கள் வரிசெலுத்துவோரின் ரூ.30,000 கோடியை அதானிக்கு உதவ பயன்படுத்தியதையா அல்லது அதானிக்கு நிதி வழங்க விரைந்து அனுமதி வழங்குமாறு நிதியமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்ததை பொய் என்று கூறுகிறீர்களா? என்று வினவியுள்ளார்.
- LIC இன் நிதி மொத்தம் ரூ.33,000 கோடி அதானி குழுமத்திற்கு முறைகேடாக வழங்குவதே திட்டத்தின் நோக்கம்.
- இந்தியாவின் வலுவான நிதித் துறை அடித்தளத்தையும் கெடுக்கும் நோக்கத்துடனும் செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) மூலம் அதானி குழுமத்துக்கு 3.9 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ.33,000 கோடி) முறைகேடாக நிதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டதாக அமெரிக்காவின் வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிகையின் குற்றம்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தொடர் முறைகேடு குற்றச்சாட்டுகளால் நஷ்டமடைந்த அதானி குழுமத்தை மீட்க கடந்த மே மாதம், மத்திய நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை (DFS), LIC ஆகிய 3 மத்திய அரசு நிறுவனங்களும் சேர்ந்து ரகசிய திட்டம் ஒன்றை தீட்டியதாக வாஷிங்க்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக மே மாத இறுதியில், கடனை தீர்க்க, அதானி குழுமத்தின் கீழ் உள்ள அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (APSEZ) சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டபோது இதனை LIC முழுமையாக வாங்கியது.
மேலும் இதே போல பல முதலீடு வழிகளில் LIC இன் நிதி மொத்தம் ரூ.33,000 கோடி அதானி குழுமத்திற்கு முறைகேடாக வழங்குவதே அந்த ரகசிய திட்டம் என்றும் அதற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலும் கிடைத்தது என்பதே வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையின் குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை என LIC நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை ஆகும். கட்டுரையில் குற்றம் சாட்டப்பட்டதைப் போன்ற எந்தவொரு ஆவணமோ அல்லது திட்டமோ எல்.ஐ.சி-யால் ஒருபோதும் தயாரிக்கப்படவில்லை.
முதலீட்டு முடிவுகள், அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின்படி LIC-யால் சுயமாக எடுக்கப்படுகின்றன. நிதிச் சேவைகள் துறை (DFS) அல்லது வேறு எந்த அமைப்புக்கும் எங்களின் முடிவுகளில் எந்தப் பங்கும் இல்லை.
LIC -இன் அனைத்து முதலீட்டு முடிவுகளும், அனைத்து பங்குதாரர்களின் சிறந்த நலனுக்காக, தற்போதைய கொள்கைகள், சட்டங்களில் உள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கட்டுரையில் கூறப்பட்டுள்ள இந்த அறிக்கைகள், LIC -யின் திடமாக வரையறுக்கப்பட்ட முடிவெடுக்கும் செயல்முறையை களங்கப்படுத்தும் நோக்கத்துடனும், LIC-யின் மதிப்பு மற்றும் பிம்பத்தையும், இந்தியாவின் வலுவான நிதித் துறை அடித்தளத்தையும் கெடுக்கும் நோக்கத்துடனும் செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டபோது இதனை LIC முழுமையாக வாங்கியது.
- நெருக்கடியில் சிக்கிய அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்து முதலீட்டாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) மூலம் அதானி குழுமத்துக்கு 3.9 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ.33,000 கோடி) முறைகேடாக நிதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டதாக அமெரிக்காவின் வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிகை குற்றம்சாட்டி உள்ளது.
இதுதொடர்பாக விசாரணை அறிக்கை ஒன்றை வாஷிங்கடன் போஸ்ட் வெளியிட்டுள்ளது.
2023 இல், ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் மீது பங்குகளைக் தவறாக கையாண்டு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டை அண்மையில் மத்திய அரசின் பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி நிராகரித்தது.
மேலும் அதானியும் அவரது கூட்டாளிகளும் பல பில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் வழக்கு நடந்து வருகிறது. இதில், எரிசக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2,000 கோடி சட்டவிரோதப் பணம் கொடுத்த குற்றச்சாட்டும் அடங்கும்.
இந்த தொடர் குற்றச்சாட்டுகளால் அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்து முந்தைய ஆண்டை விட கடன் 20% அதிகரித்தது. இதனால் சர்வதேச வங்கிகள் கடன் கொடுக்க தயங்கினர். மேலும் முதலீட்டாளர்கள் அதானி குழும பங்குகளை வாங்க தயங்கினர்.
இந்த சூழலில் இருந்து அதானி குழுமத்தை மீட்க கடந்த மே மாதம், மத்திய நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை (DFS), LIC ஆகிய 3 மத்திய அரசு நிறுவனங்களும் சேர்ந்து ரகசிய திட்டம் ஒன்றை தீட்டியதாக வாஷிங்க்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்த முதலீட்டு வியூகம் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றது என்பதற்கான ஆவணங்களை வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டி உள்ளது.
இதன் ஒரு பகுதியாக மே மாத இறுதியில், கடனை தீர்க்க, அதானி குழுமத்தின் கீழ் உள்ள அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (APSEZ) சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டபோது இதனை LIC முழுமையாக வாங்கியது.
மேலும் இதே போல பல முதலீடு வழிகளில் LIC இன் நிதி மொத்தம் ரூ.33,000 கோடி அதானி குழுமத்திற்கு முறைகேடாக வழங்குவதே அந்த ரகசிய திட்டம் என்றும் அதற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலும் கிடைத்தது என்பதே வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின் குற்றச்சாட்டாக உள்ளது.
நெருக்கடியில் சிக்கிய அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்து முதலீட்டாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம்.

இந்த நோக்கத்திற்காக ஒரே நிறுவனத்தில் அதிக முதலீடு செய்வது அதிக ஆபத்தானது மற்றும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தே கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு காப்பீடு அளிக்கும் பொதுத்துறை நிறுவனமான LIC பணத்தை மத்திய அரசு பயன்படுத்தி உள்ளது என்பதே இந்த குற்றச்சாட்டின் சாராம்சமாகும்.
ஆனால் அதானி குழுமம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் மத்திய அரசு முடிவுகளில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், அரசியல் சலுகை என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளது. LIC பல கார்ப்பரேட் குழுமங்களில் முதலீடு செய்கிறது, அதானிக்கு மட்டும் சலுகை அளிக்கப்படுவதாகக் கூறுவது தவறானது என்பதே அக்குழுமத்தின் வாதமாக உள்ளது.
முன்னதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதானி நிறுவனத்தில் LIC-யின் அதிகப்படியான முதலீடு குறித்து சந்தேகம் எழுப்பி வந்த நிலையில் வாஷிங்டன் போஸ்ட் விசாரணை அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- LIC இன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
- அதானி குழும நிறுவனங்களில் சுமார் ரூ.33,000 கோடி LIC நிதி முதலீடு.
அதானி குழுமத்தின் நலனுக்காக எல்ஐசி பாலிசிதாரர்களின் சேமிப்பு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மோதானி (மோடி + அதானி) கூட்டு முயற்சியானது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தையும் (LIC) அதன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தியது என்பது குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
2025 மே மாதத்தில் பல்வேறு அதானி குழும நிறுவனங்களில் சுமார் ரூ.33,000 கோடி LIC நிதியை முதலீடு செய்வதற்கான திட்டத்தை இந்திய அதிகாரிகள் வரைவு செய்து செயல்படுத்தியதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதன் இலக்குகளாக அதானி குழுமத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது" மற்றும் "மற்ற முதலீட்டாளர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பது ஆகியவை அறிவிக்கப்பட்டன.
இந்த மோதானி மெகா மோசடி முழுமையையும், நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் மட்டுமே விசாரிக்க முடியும் என்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது வருகிறது. இது தொடர்பாக 100 கேள்விகளை நாங்கள் எழுப்பியுள்ளோம்.
நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் அதிகாரிகள் யாருடைய அழுத்தத்தின் கீழ், நிதி சிக்கல்களை எதிர்கொள்ளும் ஒரு தனியார் நிறுவனத்தை பிணை எடுப்பது என்று முடிவு செய்தனர்?
2024 செப்டம்பர் 21, அன்று அமெரிக்காவில் கவுதம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எல்ஐசி பங்குகள் நான்கு மணி நேர வர்த்தகத்தில் 7,850 கோடி ரூபாய் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது.
முதல் கட்டமாக, குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு (PAC), LIC எவ்வாறு அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்பந்திக்கப்பட்டது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- இந்த திட்டம் ‘ஆப்லைன்' மற்றும் ‘ஆன்லைன்' மூலமாகவும் கிடைக்கிறது.
- ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் இருந்து வாழ்நாள் முழுவதும் பென்ஷன் அளிக்கப்படும்.
சென்னை :
எல்.ஐ.சி. மண்டல மேலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எல்.ஐ.சி. ஆப் இந்தியா கடந்த 5-ந்தேதி முதல் பென்ஷன் (ஆன்டியு) திட்டமான புதிய ஜீவன் சாந்தி பாலிசியில் வருடாந்திர பென்ஷன் விகிதங்களை உயர்த்தி உள்ளது. அதிக கொள்முதல் விலைக்கான ஊக்கத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு காலத்தின் அடிப்படையில் கொள்முதல் விலை ரூ.1,000-க்கு ரூ.3 முதல் ரூ.9.75 வரையில் பென்ஷன் விகிதங்கள் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளன.
ஒற்றை பிரிமீய திட்டமான இந்த பாலிசியில் பாலிசிதாருக்கு தனிநபர் மற்றும் கணவர், மனைவியுடன் கூடிய 'ஜாயிண்ட் லைப்' ஒத்திவைக்கப்பட்ட பென்ஷனை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த பாலிசி, பணியில் இருப்பவர்களுக்கு அல்லது சுயதொழில் செய்பவர்களுக்கு, குறிப்பிட்ட ஒத்திவைக்கப்பட்ட காலத்துக்குப்பின் நிலையான பென்ஷன் வருமானத்தை அளிக்கக்கூடியது. முதலீட்டுக்காக உபரியாக பணம் வைத்திருப்போருக்கும் ஏற்றது.
இந்த திட்டம் இளம் வயதினர் தங்களது ஓய்வுகாலத்தை சிறந்த வகையில் திட்டமிட வழிவகுக்கிறது. பாலிசியின் தொடக்கத்திலேயே வருடாந்திர பென்ஷன் விகிதங்கள் உத்தரவாதமாக அளிக்கப்படுகின்றன. ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் இருந்து வாழ்நாள் முழுவதும் பென்ஷன் அளிக்கப்படும்.
புதிய ஜீவன் சாந்தி திட்டத்தின் வருடாந்திர பென்ஷன் தொகையை எல்.ஐ.சி.யின் இணையதளம் மற்றும் பல்வேறு எல்.ஐ.சி. ஆப்களில் உள்ள கால்குலேட்டர் மூலம் கணக்கிடலாம். இந்த திட்டம் 'ஆப்லைன்' மற்றும் 'ஆன்லைன்' மூலமாகவும் கிடைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு www.licindia.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம் அல்லது அருகில் உள்ள எல்.ஐ.சி. கிளையை தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அதானி குழுமத்தில் மொத்தம் 10 நிறுவனங்கள் உள்ளன.
- எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடியாக உள்ளது.
மும்பை :
இந்தியாவின் 'நம்பர் 1' கோடீஸ்வரரான கவுதம் அதானியின் அதானி குழுமம், முறைகேடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது.
அது, அதானி குழுமத்துக்கு பலத்த அடியாக அமைந்தது. அந்நிறுவன பங்குகள் ரூ.4.20 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. தங்கள் மீது தெரிவிக்கப்படும் முறைகேடுகளை மறுத்துள்ள அதானி குழுமம், இது இந்தியாவுக்கு எதிரான சதி என்று கூறியுள்ளது.
அதேவேளையில், அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்துள்ளதால், அவற்றுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக குரல் எழுந்துள்ளது.
இந்நிலையில் எல்.ஐ.சி. நிறுவனம் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. சார்பில் ரூ.36 ஆயிரத்து 474 கோடியே 78 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அது கடந்த டிசம்பர் 31-ந்தேதியன்று ரூ.35 ஆயிரத்து 917 கோடியே 31 லட்சமாக இருந்தது. அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. பங்குகளின் மொத்த வாங்கு மதிப்பு ரூ.30 ஆயிரத்து 127 கோடியாகவும், கடந்த 27-ந்தேதி நிலவரப்படி அதன் சந்தை மதிப்பு ரூ.56 ஆயிரத்து 142 கோடியாகவும் உள்ளது. அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடு, எல்.ஐ.சி.யின் மொத்த முதலீடுகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு' என்று தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்தில் மொத்தம் 10 நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை எல்.ஐ.சி. தெரிவிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடியாக உள்ளது.
- எல்.ஐ.சி.யின் வணிகம் தொடர்ந்து வலுவான நிலையில் உள்ளது.
- தனிநபர் பிரிவில் 1.29 கோடி தனிநபர் பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
சென்னை :
கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 9 மாத காலத்தில் எல்.ஐ.சி.யின் மொத்த பிரீமிய வருவாய் ரூ.3 லட்சத்து 42 ஆயிரத்து 244 கோடியாக உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்து 673 கோடியாக இருந்தது. கடந்த 2021-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், பிரீமிய வருவாய் 20.65 சதவீதம் அதிகம் ஆகும்.
இதேபோல 9 மாதத்தில், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.22 ஆயிரத்து 970 கோடியாகும். இது கடந்த ஆண்டு இதே சமயத்தில் ரூ.1,672 கோடியாக இருந்தது.
நடப்பு காலத்தில் லாப உயர்வுக்கு காரணம், ரூ.19,941.60 கோடி (வரிகள் நீங்கலாக), 'நான் பேர்' கணக்கில் இருந்து முதலீட்டாளர்கள் கணக்குக்கு மாற்றப்பட்டதே ஆகும். எல்.ஐ.சி.யின் வணிகம் தொடர்ந்து வலுவான நிலையில் உள்ளது. அதன் விளைவாக, 9 மாதங்களுக்கான முதல் வருட பிரீமிய வருவாய் அடிப்படையில் எல்.ஐ.சி.யின் ஒட்டுமொத்த சந்தை பங்கு 65.38 சதவீதம். இது கடந்த வருடம் இதே கால கட்டத்தில் 61.40 சதவீதம் ஆக இருந்தது.
இதேபோல, 9 மாதத்தில் தனிநபர் பிரிவில் 1.29 கோடி தனிநபர் பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இது கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 1.26 கோடியாக இருந்தது. இது 1.92 சதவீதம் அதிகம் ஆகும். எல்.ஐ.சி. தனது வாடிக்கையாளர் நம்பகத்தன்மை, சொத்துகளின் சந்தை மதிப்பு, புது வணிக லாப விளிம்பு போன்ற செயல்திறன் வழிகாட்டிகள் அனைத்திலும் நல்ல முன்னேற்றத்தை 3-வது காலாண்டு முடிவுகள் காட்டியுள்ளது.
இதுகுறித்து, எல்.ஐ.சி.யின் தலைவர் எம்.ஆர்.குமார் கூறுகையில், "இலக்கை அடைவதில் நாங்கள் உறுதியாக முன்னேறி வருகிறோம். வளர்ந்து வரும் காப்பீட்டு சந்தையில் எங்கள் சந்தை பங்களிப்பை தக்க வைப்பது மட்டுமல்லாமல் அதிகரித்து முன்னேறி செல்வோம் என திடமாக நம்புகிறோம்" என்றார்.
மேற்கண்ட தகவல் எல்.ஐ.சி. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
- அதானி குழுமத்தில் எல்ஐசி மேற்கொண்டிருந்த முதலீட்டு மதிப்பானது ரூ.81,000 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஒரு மாதத்தில் அதானி குழும பங்குகள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பு சரிவை சந்தித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை:
அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ஹிண்டன்பெர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தையில் பெரும் பின்னடைவை சந்தித்தது அதானி குழுமத்தின் பங்குகள். இதனால், அதானி குழுமத்தில் எல்ஐசி செய்த முதலீடு மதிப்பானது 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கிட்டத்தட்ட ரூ.83,000 கோடியாக இருந்தது. இதுவே, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி ரூ.33,000 கோடியாக சரிந்துள்ளது. அதாவது, ஜனவரி 24ஆம் தேதி ஹிண்டன்பெர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்ட போது, அதானி குழுமத்தில் எல்ஐசி மேற்கொண்டிருந்த முதலீட்டு மதிப்பானது ரூ.81,000 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி குழுமத்தின் மிகப்பெரிய பங்குகளை வாங்கியிருக்கும் எல்ஐசி நிறுவனம், ஜனவரி 30ஆம் தேதிக்குப் பிறகு எந்தவிதமான பங்குகளையும் வாங்கவோ விற்கவோ இல்லை என்று கருதப்படுகிறது. இதுவரை அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனப் பங்குகளை எல்ஐசி நிறுவனம் ரூ.30,127 கோடிக்கு வாங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதானியின் குழுமத்தில் உள்ள 7 நிறுவனங்களின் பங்குகளை எல்ஐசி 1.28 சதவிகிதம் முதல் 9.14 சதவிகிதம் வரை வாங்கியிருக்கிறது. அதானி போர்ட்ஸ் பங்குகளில் 9 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. இது ஜனவரியில் 15 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 11 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதுபோல அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 4.23 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்திருக்கும் அதானி குழுமத்தின் பங்குகளில், எல்ஐசியின் முதலீட்டு மதிப்பும் 25,500 கோடியிலிருந்து ரூ.5,200 கோடியாக சரிவடைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பங்குச் சந்தைகளில் அதானி குழும பங்குகள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பு சரிவை சந்தித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- எல்ஐசியின் சொத்து மதிப்புரூ.51,21,887 கோடியை எட்டியுள்ளது.
- கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் எல்ஐசியின் சொத்துமதிப்பு ரூ.43,97,205 கோடியாக இருந்தது.
எல்ஐசி நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 50 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது இலங்கை, பாகிஸ்தான், நேபாள நாடுகளின் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
எல்ஐசியின் சொத்துக்கள் ஆண்டுக்கு ஆண்டு (ஒய்ஒய்) 16.48% அதிகரித்து மார்ச் இறுதிக்குள் ரூ.51,21,887 கோடியை (616 மில்லியன் டாலர்) எட்டியுள்ளது. இதுவே கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் ரூ.43,97,205 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டென்மார்க், பின்லாந்து, சிங்கப்பூர், ஹாங்ஹாங் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை விட எல்ஐசியின் சொத்து மதிப்பு அதிகமாகும்.
2024 நிதியாண்டில் எல்ஐசி ரூ.40,676 கோடி லாபம் ஈட்டியுள்ளது. எல்ஐசியின் மொத்த பிரீமியம் வருமானம் ரூ.4,75,070 கோடியாகும். இந்த நிதியாண்டில் பங்குபெறும் பாலிசிதாரர்களுக்கு ரூ.52,955.87 கோடியை போனஸாக எல்ஐசி நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது.
- தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல்.
- சூர்யா நடித்துள்ள ‘கங்குவா' படமும் தீபாவளிக்கு ரிலீஸ்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் 'விடாமுயற்சி' படத்தில் நடித்திருக்கிறார். திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'விடாமுயற்சி' படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படமும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
சூர்யாவின் திரை பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் 'கங்குவா', 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் திரைக்கு வர இருக்கிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது விடுதலை இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படமும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்ற புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

அடுத்ததாக நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார் கவின். இந்த படத்திற்கு `கிஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படமும் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் `எல்ஐசி'. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் தவிர எஸ்.ஜே.சூர்யா, கிரித்தி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படமும் தீபாவளி ரேசில் இணையும் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த 5 படங்களும் மோதிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஐந்து படங்கள் ரிலீசாவது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.
- பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதளத்தில் இயல்பு நிலை மொழியாக (Default Language) இந்தி மாற்றப்பட்டிருக்கிறது.
இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LIC-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.
எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.
மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல். அது ஏற்புடையதல்ல.
அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றவும், இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.






