search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modi"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.
    • மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரியாக இருக்கிறார்.

    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.

    மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

    3 மாநிலத்தில் பெற்ற வெற்றியால் பா.ஜனதா மிகுந்த உற்சாகம் அடைந்து உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற ஆர்வத்தில் உள்ளது.

    இந்த நிலையில் 3 மாநிலத்துக்கும் புதுமுக முதல்-மந்திரிகள் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்-மந்திரி தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அவரது வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மாநில தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 4½ மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நீடித்தது. கட்சி தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்வதற்காக புதுமுகம் அவசியம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதனால் புதுமுக முதல்-மந்திரிகள் தேர்வு செய்யப் படலாம் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

    மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரியாக இருக்கிறார். அவருக்கு 5-வது முறையாக முதல்-மந்திரி பதவி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் மேலிடம் அவருக்கு மீண்டும் பதவி கொடுக்க தயக்கம் காட்டி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் காங்கிரசில் 50 சதவீத பெண்களை முதல்-மந்திரிகளாக ஆக்குவோம்.
    • பெண்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசுக்கு இடையேயான போராட்டம்.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி வயநாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

    மூன்றாம் நாளான நேற்று எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் கடந்த காங்கிரஸ் மாநில மகளிர் மாநாட்டை ராகுல் காந்தி தொடங்கிவைத்தார். அந்த மாநாட்டில் அவர் பேசியதாவது:-

    நமது கட்சியில் இன்று ஒரு பெண் முதல்-மந்திரி கூட இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரிகளாகும் நற்பண்புகள் கொண்ட பல பெண்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் தனது கட்டமைப்புக்குள் பெண்களை தீவிரமாக ஊக்குவிக்க வேண்டும். நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் காங்கிரசில் 50 சதவீத பெண்களை முதல்-மந்திரிகளாக ஆக்குவோம்.

    பெண்கள் தாழ்ந்தவர்கள் அல்ல என்று காங்கிரஸ் அடிப்படையில் நம்புகிறது.ஆண்களை விட பெண்கள் பல வழிகளில் உயர்ந்த வர்கள். ஆண்களை விட அவர்களுககு பொறுமை அதிகம். அதிக உணர்திறன் மற்றும் இரக்கமுள்ளவர்கள். அதிகார கட்டமைப்பின் ஒரு பகுதியாக பெண்கள் இருக்க வேண்டும்.

    பெண்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசுக்கு இடையேயான போராட்டம். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற போதிலும், அதை அமல்படுத்தாமல் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். அதன் முழு வரவலாற்றிலும் பெண்களை அதன் அணிகளில் அனுமதிக்கவில்லை. இதற்கு முன் இதை நான் இருமுறை கூறியபோது, தங்களிடம் பெண்கள் அமைப்புகள் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். கூறியது. ஆனால் அவர்களிடம் பெண்கள் அமைப்புகள் இருக்கிறதா இல்லையா? என்பது கேள்வி அல்ல.

    ஆர்.எஸ்.எஸ்-ல் பெண்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறார்களா? என்பது தான் கேள்வி. அந்த கேள்விக்கு முழுமையாக இல்லை என்பதே பதில். இந்திய அரசியலை ஆழமாக பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். மற்றும் காங்கிரசுக்கு இடையேயான உண்மையான சண்டை, அரசியலில் பெண்களின் பங்கை பற்றியது என்பதை நீங்கள் காணலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 10 ஆண்டுகளாக எனது பணியை பார்த்து அரசின் மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனர்.
    • என்னை பொறுத்தவரை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என நான்கு பெரிய ஜாதிகள்தான் உள்ளன.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி, இன்று அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சங்கல்ப் யாத்திரை (விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா) பயனாளிகளுடன் அவர் பேசினார்.

    பிரதமரின் மகளிர் வேளாண் டிரோன் மையத்தை தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 15 ஆயிரம் டிரோன்கள் வழங்கப்படும்.

    மானிய விலையில் மருந்துகளை வழங்கும் மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    தியோகரில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் 10 ஆயிரமாவது மக்கள் மருந்தகத்தை மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த 2 திட்டங்களையும் இந்த ஆண்டு சுதந்திர தின உரையின் போது பிரதமர் அறிவித்த வாக்குறுதிகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. இதுவரை 12 ஆயிரம் பஞ்சாயத்துக்களை எட்டி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக எனது பணியை பார்த்து அரசின் மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனர்.

    மற்றவர்களிடம் இருந்து மக்களின் எதிர்பார்ப்புகள் முடிவடையும் இடத்தில் இருந்து மோடியின் உத்தர வாதம் தொடங்குகிறது என்ற குரல் நாடு முழுவதும் கேட்கிறது. என்னை பொறுத்தவரை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என நான்கு பெரிய ஜாதிகள்தான் உள்ளன. அவர்களின் வளர்ச்சியே இந்தியாவை முன்னேற்றம் அடைய செய்யும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    • தெலுங்கானா மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    தெலுங்கானா சட்டசபை தேர்தல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தெலுங்கானாவை சேர்ந்த எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் வாக்களிப்பில் சாதனை நிகழ்த்தி ஜனநாயகத்தை வலுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில் கூறும்போது, "தெலுங்கானா சகோதர, சகோதரிகள் திரளாக வாக்களிப்பில் கலந்து கொள்ள வேண்டும். தெலுங்கானா சிறந்த கட்டமைப்புக்கு வாக்களியுங்கள். காங்கிரசை வெற்றி பெற செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தெலுங்கானா மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 70 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்பவர்கள் இந்த தொகுதியின் வளர்ச்சி எதையும் செய்யவில்லை.
    • தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திருத்துறைப்பூண்டி தொகுதி மற்றும் திருவாரூர் தொகுதி தான் மிகவும் பின் தங்கி உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை வந்த தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அண்ணாநகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது . கொட்டும் மழையில் தொண்டர்களுடன் நடந்து வந்த அண்ணாமலை பழைய பஸ்நிலையம் காமராஜர் சிலை அருகில் பேசியதாவது:-

    70 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்பவர்கள் இந்த தொகுதியின் வளர்ச்சி எதையும் செய்யவில்லை. இந்த தொகுதி என்ன வளர்ச்சி அடைந்திருக்கிறது? என்ற நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த தொகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன செய்தார்.

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திருத்துறைப்பூண்டி தொகுதி மற்றும் திருவாரூர் தொகுதி தான் மிகவும் பின் தங்கி உள்ளது. தி.மு.க. அரசு மணல் விற்பனையில் ரூ.4700 கோடி ஊழல் செய்துள்ளது என்று அமலாக்கத்துறை கோர்ட்டில் கூறியுள்ளது.

    பா.ஜனதா ஆட்சி அமைந்துள்ள மாநிலங்கள் எல்லாம் வளர்ச்சி பாதையில் சென்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் வளர்ச்சி மிகவும் மோசமாக உள்ளது. எனவே நீங்கள் தமிழகம் வளர்ச்சி அடைய பிரதமர் மோடிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். 45 லட்சம் விவசாயிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். பிரதமர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். எனவே வரும் காலங்களில் பிரதமர் மோடிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை வேதாரண்யம் தோப்புத்துறையில் என் மண் என்மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் 2026-ல் பா.ஜ.க. ஆட்சி அமைந்த உடன் இந்து சமய அறநிலையத்துறை என்பதே இருக்காது. திமுக தேர்தல் அறிக்கையில் மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறிவிட்டு தற்போது 6 ஆயிரம் ரூபாய் வழங்குகின்றனர். மீனவர்களுக்கு எதிரான கட்சி என்றால் அது தி.மு.க.தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    என் மண் என் மக்கள் பாதயாத்திரையானது நாளை நாகை பகுதியில் நடைபெறும் என திட்டமிட்டு இருந்த நிலையில் அங்கு மழை பெய்வதாலும், புயல் உருவாகி கனமழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகி உள்ளதால் பாதயாத்திரை ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மிகவும் கெட்டுவிட்ட தமிழகத்தை மீட்டெடுக்க பா.ஜனதாவால் மட்டுமே முடியும்.
    • போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சி தான்.

    தஞ்சாவூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழகத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் திருவையாறில் தனது பாதயாத்திரையை தொடங்கினார். பின்னர் மாலையில் தஞ்சை கொடிமரத்து மூலையில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார்.

    அவருக்கு பா. ஜனதா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் அண்ணாமலையிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

    இதையடுத்து அண்ணாமலை வடக்கு வீதி, மேலவீதி, தெற்கு வீதி வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு கீழ வீதி நிக்கல்சன் கூட்டுறவு வங்கி அருகே வந்தார். அவருடன் ஏராளமான பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பாதயாத்திரையாக வந்தனர்.

    இதைத்தொடர்ந்து அண்ணாமலை பேசியதாவது:-

    தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது 113 ஆவது தொகுதியாக தஞ்சாவூர் தொகுதியில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் கார்த்திகை தீப திருநாளில் பாதயாத்திரை மேற்கொண்டது சிறப்பு வாய்ந்தது. இந்த பாதயாத்திரை ஜனவரி மாதம் சென்னையில் நிறைவடையும் போது அகில இந்திய அளவில் புரட்டி போட்டு இருக்கும்.

    தமிழகத்தில் சாலை, பாலம் உள்பட ஒரு பணியும் உருப்படியாக நடைபெறவில்லை. மிக மோசமான அளவுக்கு தமிழகத்தை தி.மு.க மாற்றி வைத்துள்ளது. மிகவும் கெட்டுவிட்ட தமிழகத்தை மீட்டெடுக்க பா.ஜனதாவால் மட்டுமே முடியும்.

    தமிழ் கலாச்சாரத்தை உலகெங்கும் பரப்பியவர் பிரதமர் மோடி. புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் வைத்து பெருமை சேர்த்துள்ளார். டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் வைக்கப்பட்ட பெரிய நடராஜர் சிலை சுவாமி மலையில் இருந்து தான் சென்றது. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பேசும் மனதின் குரல் நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை குறித்து பேசினார். அதன் பிறகு தலையாட்டி பொம்மை விற்பனை 240 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்படி தமிழின் புகழை உலகெங்கும் பரப்பியதில் முக்கிய பங்காற்றி வருகிறார். தமிழினத் தலைவர் பிரதமர் மோடி.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தூக்கி எறியப்பட வேண்டும். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.

    வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் 400-க்கும் அதிகமான மக்களவை உறுப்பினர்களுடன் மீண்டும் 3-வது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்கவுள்ளார். அதில், தஞ்சாவூர் தொகுதியிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, மோடியின் அமைச்சரவையை அலங்கரிக்கச் செய்ய மக்கள் முன்வர வேண்டும்.

    உதான் திட்டத்தின் கீழ் தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு 20 இருக்கைகள் கொண்ட விமானச் சேவை தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை பா.ஜனதா அரசுதான் கொண்டு வந்துள்ளது .

    எந்த மாநிலங்களிலும் இல்லாத ஒன்று தமிழகத்தில் நடந்துள்ளது. அதாவது போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சி தான்.

    கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தவரை தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் தண்ணீர் வரவில்லை. இதனால் முப்போகம் விளையும் டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்கள் தரிசாக கிடைக்கிறது. நெல் உற்பத்தியும் கணிசமாக குறைந்துள்ளது. தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை எதையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. தஞ்சை மாவட்டத்திற்கு அளித்த தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி 5 டிரில்லியன் டாலரை நோக்கியதாக இருக்கிறதா?
    • வளர்ச்சியின் கதாநாயகனாக மோடி தன்னை முன்னிலைப்படுத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி 5 டிரில்லியன் டாலரை நோக்கியதாக இருக்கிறதா? இதுவரை இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ மதிப்பீடு ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் மோடியின் கனவு கேள்விக்குறியாகவே இருக்க முடியும். ஆனால், அதற்குள்ளாக சமூக ஊடகத்தில் தவறான புள்ளி விவரத்தின் அடிப்படையில் 4 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட்டதாக செய்திகள் பரப்பப்பட்டது. இதன்மூலம் ஐந்து மாநில தேர்தல்களில் வாக்காளர்களை ஏமாற்றி விடலாம் என்று பா.ஜ.க. பகல் கனவு காண்கிறது.

    விநியோகம் அல்லது சமத்துவமற்ற குறியீட்டின் அடிப்படையில் மட்டுமே 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய முடியும். இந்த குறியீடு 0-100 என உலகப் பொருளாதாரத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி சீனா மற்றும் ஜப்பானின் மதிப்பு 50 க்கும் மேல் உள்ளது. ஆனால், 21.9 மதிப்பு உள்ள இந்தியாவை விடப் பல மடங்கு அதிகமாக இந்த நாடுகளின் பொருளாதார பங்களிப்பு உள்ளது.

    5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தால் ஏழைகள், பணக்காரர்கள் என்று இந்தியா இரண்டாகப் பிளவுபடுமா? பெரும்பாலான மக்கள் இன்னும் வளர்ச்சிப் பாதையில் இணைக்கப்படாமலேயே மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது. வளர்ச்சியில் சமநிலைத்தன்மை இல்லை. மோடி ஆட்சி என்பது யாருக்காக நடைபெறுகிறது என்பதை மேற்கண்ட புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. அதேநேரத்தில் வளர்ச்சியின் கதாநாயகனாக மோடி தன்னை முன்னிலைப்படுத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 10 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழப்பு ஏற்பட்டதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது
    • போரை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என இஸ்ரேல் அறிவித்தது

    பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக அறிவித்துள்ள இஸ்ரேல், கடந்த அக்டோபர் 7 முதல் அவர்கள் மறைந்திருக்கும் காசா பகுதியில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் 32-வது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

    இஸ்ரேலுக்கும் ஹமாஸிற்கும் இடையேயான இந்த போரில் பாலஸ்தீன காசா பகுதியில் இருக்கும் அப்பாவி பாலஸ்தீனியர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன தரப்பு அறிவித்துள்ளது.

    உலக நாடுகள் விடுத்த போர் நிறுத்த கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்து விட்டது.

    இதற்கிடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தொலைபேசியில் பேசினார்.

    இரு நாட்டு தலைவர்களும் இந்தியா-ஈரான் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்தும் உரையாடியுள்ளனர்.

    இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு ரீதியான இந்த உரையாடலில் இப்ராஹிம் தெரிவித்திருப்பதாவது:

    மேற்கத்திய நாடுகளின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியா நடத்திய போராட்டங்களும், அணி சேரா நாடுகளை ஒருங்கிணைப்பதில் எடுத்த முயற்சிகளையும் ஈரான் இத்தருணத்தில் நினைவு கூர்கிறது. தன்னிடம் உள்ள அனைத்து திறனையும் முழுவதுமாக உபயோகித்து பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் போரை இந்தியா முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இது நடக்கும் என நாங்கள் நம்புகிறோம். காசாவில் நடப்பது அங்குள்ள மக்களுக்கு எதிரான குற்றம். போர் நீண்டு கொண்டே சென்றால் பிற நாடுகளுக்கும் பரவலாம் எனும் அச்சம் மேற்கு ஆசிய நாடுகளிடையே அதிகரித்து வருகிறது. அது நிலைமையை இன்னும் சிக்கலாக்கும். பாலஸ்தீன மக்களின் துன்பங்களை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்படும் எந்த உலகளாவிய நடவடிக்கைக்கும் ஈரான் ஆதரவளிக்கும். பாலஸ்தீன சுதந்திரத்திற்காக பாடுபடும் அமைப்புகளுக்கு தங்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராட முழு உரிமை உண்டு.

    இவ்வாறு ஈரான் அதிபர் கூறியுள்ளார்.

    முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "பாலஸ்தீன பிரச்சனையை தீர்ப்பதற்கும், மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து அங்கு கிடைப்பதை உறுதி செய்யவும், விரைவில் அமைதி திரும்பவதையும் இந்தியா விரும்புகிறது" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் தெரிவித்திருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரீஸ்டார்ட் அல்லது பேட்டரியை சார்ஜ் செய்வது அல்லது பேட்டரியை மாற்றினாலும் கூட வேலை செய்யவில்லை
    • மொபைல் பிராட்பேண்ட் வேகத்தில் இந்தியா முன்னதாக 118-வது இடத்தில் இருந்தது. தற்போது 43-வது இடம்

    2004 மற்றும் 2009-ல் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அடுத்தடுத்து வெற்றி பெற்று மன்மோகன் சிங் பிரதமரானார்.

    2014-ல் தேர்தலில் பா.ஜனதா மோடியை முன்னிறுத்தி "குஜராத் மாடல்" முழக்கத்துடன் மக்களை சந்தித்தது. இந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து 2019 தேர்தலில் தனிப்பெரும்பான்மைக்கான இடங்களை பிடித்தது. அடுத்த வருடம் நடைபெற இருக்கும் தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் "2014" வெறும் தேதி மட்டுமல்ல. அது மாற்றம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

    "2014" வெறும் தேதியல்ல. இது மாற்றம். காங்கிரஸ் கட்சி காலாவதியான போனாக (செல்போன்) இருந்தது. எத்தனை முறை ஸ்வைப் செய்தாலும் அல்லது பட்டனை அழுத்தினாலும், செயல்படாத உடைந்த ஸ்கிரீனை கொண்ட கலாவதியான போன் போன்று காங்கிரஸ் ஆட்சி இருந்தது.

    ரீஸ்டார்ட் அல்லது பேட்டரியை சார்ஜ் செய்வது அல்லது பேட்டரியை மாற்றினாலும் கூட வேலை செய்யவில்லை. 2014-ல் மக்கள் காலாவதியான போன் போன்ற அரசாங்கத்தை புறந்தள்ளி, நாட்டை ஆள்வதற்கு எங்களுக்கு வாய்ப்பு அளித்தனர்.

    5ஜி நெட்வொர்க் அறிமுகப்படுத்திய பிறகு, 6ஜி-யில் இந்தியா தன்னை முன்னோடியாக நிலை நிறுத்துவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா தயாரிக்கும் போன்களை உலகம் பயன்படுத்தி வருகிறது.

    மொபைல் பிராட்பேண்ட் வேகத்தில் இந்தியா முன்னதாக 118-வது இடத்தில் இருந்தது. தற்போது 43-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் நான்கு லட்சம் 5ஜி பேஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo