search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modi"

    • மோடி இந்தியாவின் பிரதமராகமாட்டார் என்பதை எழுத்துப்பூர்வ உறுதியாக அளிக்கிறேன்.
    • எந்த டெம்போ, என்ன வகையான பணத்தை அதானி அனுப்பினார் என்பது மோடிக்கு தெரியும்.

    காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களையும், இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    உத்தர பிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேரடியாக களம் இறங்கியுள்ளார். அவரை ஆதரித்து ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

    நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகமாட்டார். அவரது பிரதமர் காலம் முடிந்தது. இதை எழுத்துப்பூர்வ உறுதியாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

    கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால், பிரதமர் மோடி அதானி மற்றும் அம்பானி பெயரை உச்சரித்தது கிடையாது. தற்போது அவர்களால் மோடியை காப்பாற்ற முடியும் என அவர் நினைக்கிறார்.

    இந்தியா கூட்டணி என்னை சூழ்ந்து சுற்றி வளைத்துள்ளது. நான் தோற்றுக் கொண்டு வருகிறேன். என்னை காப்பாற்றுங்கள். அதானி- அம்பானி ஜி என்னை காப்பாற்றுங்கள் என மோடி, அவரது தொழில் அதிபர் நண்பர்களிடம் கூறும் நிலையில் மோடி இருக்கிறார் என்பதுபோல் ராகுல் காந்தி கிண்டல் செய்தார்.

    ஆகவே எந்த டெம்போ, என்ன வகையான பணத்தை அதானி அனுப்பினார் என்பது மோடிக்கு தெரியும். டெம்போ குறித்த தனிப்பட்ட அனுபவம் மோடிக்கு உள்ளது.

    உத்தர பிரசேதத்தில் நீங்கள் பார்க்க போகிறீர்கள்... இந்தியா கூட்டணி என்ன புயல் வந்து கொண்டிருக்கிறது. இங்கு பா.ஜனதா மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நான் உங்களுக்கு எழுத்துப்பூர்வ உறுதியாக தருகிறேன். இந்தியாவில் மாற்றம் நிகழப் போகிறது. மக்கள் முடிவு செய்துவிட்டனர். உ.பி.யில் மாற்றம் நிகழும் என மக்கள் முடிவு செய்திருந்தனர்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

    • பொய்யான செய்திகளை பரப்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
    • இது புனையப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டமா? என்ற கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு தொடர்பாக, சமீபத்தில் வெளியிட்ட ஆவணத்தின் உண்மைத்தன்மை குறித்து, சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் கச்சத்தீவு குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஒரு தகவலை வெளியிட்டார். அதாவது, வெளியுறவு துறை அமைச்சகத்தில் இருந்து, தகவல் உரிமை சட்டமான ஆர்.டி.ஐ., வாயிலாக, தனக்கு கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது: கடந்த, 1961ல் அப்போதைய பிரதமர் நேரு, குட்டித் தீவான கச்சத் தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை என்றும், அதன் உரிமையை இலங்கைக்கு விட்டுத் தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    இது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் தனது எக்ஸ் தளபதிவில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்

    அதில் கூறியிருப்பதாவது,

    கச்சத்தீவு விவகாரம் புனையப்பட்டது. எனக்கு ஆச்சரியமில்லை. அவர்கள் பொய்யான செய்திகளை பரப்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    கச்சத்தீவு குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட RTI தகவல் தற்போது உண்மையில்லை என நிருபணமாகியுள்ளது.

    1976ல் எந்த பகுதியும் இலங்கைக்கு கொடுக்கப்படவில்லை என 2015ல் பிரதமர் மோடி அரசால் வெளியிடப்பட்ட மற்றொரு RTI தகவலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை தெளிவுப்படுத்தியுள்ளது.

    இது புனையப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டமா? என்ற கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது மாதிரி நடத்தை விதிகளை மீறுவதைத் தவிர, அரசாங்கப் பதிவேடுகளைத் திருத்துதல் மற்றும் பொய்யாக்குதல் போன்ற கிரிமினல் குற்றங்களை ஈர்க்கவில்லையா?

    இதுபற்றி காவல்துறையில் புகார் பதிவு செய்து இந்தப் பிரச்சனையை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன்.

    2024 பாராளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் நாட்டின் பிரதமரால் கச்சத்தீவு பற்றி கண்டுபிடிக்க முடியும்? இது தேர்தல் பாசாங்குதனம் இல்லையா? 2024 ஜனவரியில் இருந்து மட்டும் எப்படி தமிழகத்தை நினைவு கூர்ந்தார்களோ அதேபோல் தான் கச்சத்தீவு விவகாரத்திலும் நுழைந்து இருக்கிறார்கள். கச்சத்தீவை மீட்பத்தில் பா.ஜ.க. அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் 2014 முதல் 2024 வரை ஏன் ஒரு சிறு விரலை கூட அசைக்கவில்லை? என்று அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்.

    • உங்களின் ஒரு வாக்கு 500 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரமாண்டமான ராமர் கோவிலை உருவாக்கியது.
    • காங்கிரசின் நோக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ள, 20 முதல் 25 ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்களைக் கேட்டு பாருங்கள்.

    போபால்:

    பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் கர்கோனில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    உங்கள் ஒரு வாக்கு இந்தியாவை 5வது பெரிய பொருளாதாரமாக மாற்றியது. இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை அதிகரித்தது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.

    ஆதிவாசி மகளை ஜனாதிபதியாக்கியது. பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது. ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்பியது. இலவச உணவு மற்றும் சிகிச்சைக்கு உத்தரவாதம் அளித்தது.

    இளைஞர்களின் எதிர்காலத்தை உயர்த்தியது. வரம்பற்ற வாய்ப்புகளை உருவாக்கியது. 25 கோடி மக்களை வறுமையில் இருந்து விடுவித்தது. உங்களின் ஒரு வாக்கு 500 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரமாண்டமான ராமர் கோவிலை உருவாக்கியது.

    பாகிஸ்தானில், இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் செய்யப் போவதாக பயங்கரவாதிகள் மிரட்டி வருகின்றனர். மோடிக்கு எதிராக வாக்களிக்க சிலரையும் காங்கிரஸ் கேட்டுக் கொள்கிறது.

    குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களிடம் மோடிக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர். அவர்கள் அவநம்பிக்கையால் சூழப்பட்டிருக்கிறார்கள். வாக்கு ஜிகாத் ஏற்கத்தக்கதா? இதை ஜனநாயகத்தில் அனுமதிக்க முடியுமா? காங்கிரஸ் எனக்கு எதிராக வாக்களிக்கும் ஜிகாத்துக்கு அழைக்கிறது. அவர்களை நான் அம்பலப்படுத்தியதால், எனக்கு எதிரான துஷ்பிரயோகங்களை செய்கி றார்கள்.

    வரலாற்றின் திருப்பு முனையில் இந்தியா உள்ளது, வாக்கு ஜிகாத் பலிக்குமா அல்லது ராம ராஜ்ஜியமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.


    காங்கிரசின் நோக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ள, 20 முதல் 25 ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்களைக் கேட்டு பாருங்கள். ராமர் கோவிலுக்கு சென்றதற்காக தான் மிகவும் துன்புறுத்தப் பட்டதாகவும், அதனால் காங்கிரசை விட்டு வெளியேறியதாகவும் ஒரு பெண் கூறினார்.

    காங்கிரசை முஸ்லீம் லீக் மற்றும் மாவோயிஸ்டுகள் அபகரித்துள்ளனர் என்று மற்றொருவர் கூறினார். இன்னொருவர் கூறும் போது, ஷா பானோ வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அவரது தந்தை மாற்றியது போல் ராமர் கோவில் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் இளவரசர் (ராகுல்காந்தி) மாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.

    மக்களின் நம்பிக்கை அல்லது தேச நலன் பற்றி காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கவலைப்படவில்லை. இவர்களுக்குள் தேச விரோத கருத்துக்களை வெளியிடுவதில் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்டமாக காங்கிரசுக்கு பாகிஸ்தான் மீதான அன்பு அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஒருவர், நமது ராணுவம் தீவிரவாத தாக்குதல் நடத்துகிறது என்றும் பாகிஸ்தான் அப்பாவி என்றும் கூறினார்.

    மும்பை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இல்லை என மற்றொரு காங்கிரஸ் தலைவர் கூறினார். பாகிஸ்தான் மீது அன்பையும், நமது ராணுவத்தின் மீது வெறுப் பையும் காங்கிரஸ் காட்டுகிறது. இது ஏன் என்று காங்கிரசை கேட்க விரும்புகிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சி இதுவரை 326 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது
    • காங்கிரஸ் 272 இடங்களில் கூட போட்டியிடவில்லை என்றால் எப்படி ஆட்சி அமைப்பது என்று பிரதமர் கூறுகிறார்

    அண்மையில் குஜராத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மோடி,"இந்தியாவில் ஆட்சி அமைக்க விரும்பினால், குறைந்தது 272 இடங்கள் தேவை. பாஜகவைத் தவிர, நாட்டில் வேறு எந்த அரசியல் கட்சியும் 272 இடங்களில் போட்டியிடவில்லை, பின்னர் அவர்கள் (காங்கிரஸ்) எப்படி ஆட்சி அமைப்போம் என்று கூறுகிறார்கள்" என்று பேசியிருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "காங்கிரஸ் கட்சி இதுவரை 326 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. ஆனால் காங்கிரஸ் 272 இடங்களில் கூட போட்டியிடவில்லை என்றால் எப்படி ஆட்சி அமைப்பது என்று பிரதமர் கூறுகிறார்.

    மோடி அவர்களே... உங்களது கணித திறமை அபாரமானது. நீங்கள் முழு கணிதவியல் பாடத்திற்கான டிகிரி வைத்திருக்கிறீர்களா. உத்தரபிரதேசத்தில் உள்ள கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியராக உங்களை அடுத்த மாதமே நியமிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    • இந்தியாவின் சாதனைக்காக காங்கிரஸ் வெட்கப்படுகிறது.
    • தேச நலனில் இருந்து அந்த கட்சி விலகி வெகு தூரம் சென்றுவிட்டது. குடும்ப நலனில் தான் காங்கிரஸ் மூழ்கியுள்ளது.

    பெங்களூரு:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கர்நாடகா மாநிலம் பெலகாவியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பலமாக மாறியுள்ளது. இதை நினைத்து அனைவரும் பெருமைபடுவார்கள். ஆனால் இந்தியாவின் சாதனைக்காக காங்கிரஸ் வெட்கப்படுகிறது.

    தேச நலனில் இருந்து அந்த கட்சி விலகி வெகு தூரம் சென்றுவிட்டது. குடும்ப நலனில் தான் காங்கிரஸ் மூழ்கியுள்ளது.

    நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க காங்கிரஸ் சதி செய்தது. இதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வயநாடு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. அமைப்பிடம் காங்கிரஸ் உதவி பெற்றுள்ளது.

    நமது ராஜா, மகாராஜாக்களை காங்கிரஸ் இளவரசர் (ராகுல்காந்தி) அவமதிக்கிறார். சத்ரபதி சிவாஜி மகாராஜ் போன்ற ஆளுமைகளை அவமதித்துள்ளார். நாம் அனைவரும் பெருமைபடும் மைசூர் அரச குடும்பத்தினர் பங்களிப்பு அவருக்கு தெரியாதா?

    ஆனால் நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாதுஷாக்கள் செய்த அட்டூழியங்களை பற்றி அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.


    நமது ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்த அவுரங்கசீப் செய்த அட்டூழியங்கள் காங்கிரசுக்கு நினைவில்லை. அவுரங்க சீப்பை புகழ்ந்து பேசும் கட்சியுடன் காங்கிரஸ் அரசியல் கூட்டணி அமைக்கலாம்.

    நமது புனித தலங்களை அழித்தவர்கள், கொள்ளையடித்தவர்கள், மக்களை கொன்றவர்கள், பசுக்களை கொன்றவர்கள் பற்றி எல்லாம் அவர்கள் பேசுவதில்லை.

    மக்களின் சொத்துக்களை 55 சதவீதம் பறிக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது.

    கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஹூப்ளியில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் மீண்டும் சமாதானத்துக்கு முன்னுரிமை அளித்தது. நேஹா போன்ற எங்கள் மகள்களின் உயிருக்கு மதிப்பில்லை. அவர்களுக்கு கவலை எல்லாம் அவர்களின் வாக்கு வங்கி மட்டுமே.

    பா.ஜனதா அரசு குற்றவியல் நிதி அமைப்பின் காலனித்துவ சட்டங்களை நீக்கியது. பயங்கரவாதம் தொடர்பான சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    இதை தொடர்ந்து உத்தரகன்னடா, தாவன கெரே, பாகல் கோட்டை ஆகிய 3 இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகிறார்.

    கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதி களில் 14 இடங்களுக்கு கடந்த 26-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. எஞ்சிய 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு மே மாதம் 7-ந் தேதி நடக்கிறது. 

    • ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை அமல்படுத்த 400 இடங்களை கோருகிறது.
    • ஆர்எஸ்எஸ் திட்டங்களாக முத்தலாக், சட்டப்பிரிவு 370-ஐ நீக்குதல், பொது சிவில் சட்டம், சிஏஏ ஆகியவற்றை செயல்படுத்துயுள்ளது.

    தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-

    பா. ஜனதாவின் 400 இடங்களுக்கு மேல் என்ற இலக்கின் காரணம், அரசியலமைப்பை முற்றிலும் மாற்ற விரும்புவதற்காகத்தான். அதன் மூலம் அவர்கள் இடஒதுக்கீட்டை ஒழிக்கவும், இடஒதுக்கீடு இல்லாம இந்தியாவை உருவாக்கவும் விரும்புகிறார்கள்.

    பிரதமர் மோடி, அமித் ஷா நாட்டின் பூர்வீகக்காரர்களாகிய தலித்கள், எஸ்டி-கள் மற்றும் ஓபிசிகள் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் செய்கிறார்கள். இந்த தேர்தலை சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கான களமாக மாற்ற அவர்கள் (பாஜக) முடிவு செய்துள்ளனர்.

    ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை அமல்படுத்த 400 இடங்களை கோருகிறது. ஆர்எஸ்எஸ் திட்டங்களாக முத்தலாக், சட்டப்பிரிவு 370-ஐ நீக்குதல், பொது சிவில் சட்டம், சிஏஏ ஆகியவற்றை செயல்படுத்துயுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி-க்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக்க பாஜக முயற்சிக்கிறது.

    இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • ரெயில்வேஸ், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை அவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.
    • பிரதமர் மோடி நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடித்து, அதை பணக்காரர்களுக்கு கொடுத்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே இன்று அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது மல்லியாகர்ஜூன கார்கே கூறியதாவது:-

    ரெயில்வேஸ், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை அவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள். மோடி, அமித் ஷா ஆகிய இருவரும விற்பனையாளர்கள். அப்படி என்றால் வாங்குபவர்கள் யார்? அதானி, அம்பானி ஆகிய இரண்டு வாங்குபவர்கள். இப்படித்தான் நாடு வளர்ச்சி அடையும்?.

    அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக இல்லை. பிரதமர் மோடி நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடித்து, அதை பணக்காரர்களுக்கு கொடுத்துள்ளார். 16 லட்சம் கோடி ரூபாயை கோடீஸ்வரர்களுக்காக தள்ளுபடி செய்துள்ளனர். ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு அவர்கள் எதுவும் கொடுக்கவில்லை.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 16 கோடி இளைஞர்களுக்கு ₹1 லட்சம் சம்பளத்துடன் வேலை கொடுத்திருக்கலாம்.
    • இந்திய ராணுவத்தின் 3 ஆண்டுகளுக்கான செலவை செய்திருக்கலாம்

    பிரதமர் மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு தள்ளுபடி செய்த ₹16 லட்சம் கோடியில் என்னென்ன செய்திருக்கலாம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். அதில்,

    "இந்த ₹16 லட்சம் கோடி பணத்தை வைத்து,

    16 கோடி இளைஞர்களுக்கு ₹1 லட்சம் சம்பளத்துடன் வேலை கொடுத்திருக்கலாம்.

    16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் உதவித்தொகை வழங்கியிருக்கலாம்.

    இந்திய ராணுவத்தின் 3 ஆண்டுகளுக்கான செலவை செய்திருக்கலாம்.

    10 கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு கடன் தள்ளுபடி செய்து பல தற்கொலைகளை தடுத்திருக்கலாம்.

    20 ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த நாட்டுக்கும் ₹400-க்கு கேஸ் சிலிண்டர்கள் கொடுத்திருக்கலாம்.

    பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கியிருக்கலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
    • தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார்.

    மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது. "காங்கிரஸ் கட்சி பொது மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை முஸ்லிம்களுக்கு விநியோ கம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது" என அப்பட்ட மான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார்.

    நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது.

    அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3ஏ) இன் கீழ் குற்றமாகும்.

    இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தென் மாநிலங்களின் நல்வாழ்வு வளர்ச்சிக்கு எதிராக உள்ளன.
    • வட மாநிலங்களில் 2019 தேர்தலில் பெற்ற வெற்றிகளை விட பா.ஜ.க.வின் எண்ணிக்கை குறையும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தென் மாநிலங்களின் நல்வாழ்வு வளர்ச்சிக்கு எதிராக உள்ளன. மோடியின் உத்தரவாதங்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தெலுங்கானா மாநிலத்தில் பி. ஆர்.எஸ் வாக்குகளால் பா.ஜ.க. ஆதாயம் அடையலாம். ஆனால் காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் 14 இடங்களையாவது கைப்பற்றும்.

    பா.ஜ.க. தென் மாநிலங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி அப்படி இல்லை.

    தென் மாநிலம் உட்பட அனைவரையும் உள்ளடக்கி உள்ளது. தென் மாநிலங்களில் உள்ள 130 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க.வை அதிகபட்சமாக 20 இடங்களுக்கு மேல் வெற்றி பெற விடமாட்டோம். அதற்குள் அவர்களை கட்டுப்படுத்துவோம்.

    வட மாநிலங்களில் 2019 தேர்தலில் பெற்ற வெற்றிகளை விட பா.ஜ.க.வின் எண்ணிக்கை குறையும். ஒவ்வொரு மருந்துக்கும் காலாவதி தேதி உண்டு. இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தோல்வி அடைவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
    • இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது எனவும் இது டீப்பேக் AI தொழிற்நுட்பத்தின் கீழ் உருவாக்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், "நமது சோகமான வாழ்க்கை, நமது பயம், நமது வேலையின்மை மற்றும் பணவீக்கத்தை கொண்டாடுவதுதான் மோடிஜியின் நோக்கம். ஏனென்றால், நம் இந்தியா இப்போது அநீதியின் காலத்தை நோக்கி மிகவும் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. எனவே நாம் நமது வளர்ச்சி மற்றும் நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. அதனால்தான் நாம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்" ஏன்னு ரன்வீர் சிங் பேசுகிறார்.

    இந்நிலையில் இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது எனவும் இது டீப்பேக் AI தொழிற்நுட்பத்தின் கீழ் உருவாக்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    அண்மையில் பாலிவுட் பிரபல நடிகர் ரன்வீர் சிங் நடிகை க்ரிதி சனோனுடன் வாரணாசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றிருந்தார். அதன் பின்பு அந்த ஆன்மீக அனுபவங்களை அவர் ANI செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டார்.

    அந்த அசல் வீடியோவில், "உத்தரபிரதேசத்தின் வாரணாசி, காசி கோவிலில் தனது அனுபவம் மற்றும் அந்த நகரத்தில் பிரதமர் மோடி கொண்டு வந்த வளர்ச்சி குறித்து ரன்வீர் சிங் பேசுகிறார்.

    அந்த வீடியோ தான் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு எடிட் செய்து பரப்பப்பட்டு வருகிறது.

    இதற்கு முன்னதாக, அமீர் கான் கூட ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு தருவதாக கூறும் டீப்பேக் AI வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த வீடியோ போலியானது என அமீர் கான் மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருந்தார்.

    பல வருடங்களுக்கு அவர் தொகுத்து வழங்கிய 'சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சியில் இருந்து இந்த டீப்பேக் வீடியோ உருவாக்கப்பட்டிருந்தது.

    • இந்தியாவின் கடன் 2014-ல் 55 லட்சம் கோடி ஆனால் பாஜக ஆட்சியில் 204 லட்சம் கோடி
    • மோடி அரசு விளம்பரங்களுக்காக 3000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது

    மோடி தலைமையிலான பாஜகவை மக்கள் நிராகரிப்பதற்கு 100 காரணங்கள் உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளார். அவை,

    1. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு

    2. அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு

    3. 8250 கோடி தேர்தல் பத்திர ஊழல்

    4. ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழல்

    5. 23 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்ப்பு

    6. கார்ப்பரேட்டுகளின் கடன் 25 லட்சம் கோடி தள்ளுபடி

    7. GST வரி

    8. கருப்புப் பணம் ஒழிப்பு நாடகம்

    9. சிறுகுறு தொழில்கள் முடக்கம்

    10. IT, ED, CBI போன்ற தன்னாட்சி அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீது ஏவி விட்டது

    11. CAG- 7.5 லட்சம் கோடி ஊழல்

    12. ஊழல் எதிர்ப்பு அமைப்பான லோக்பால் செயலிழப்பு

    13. PM-Cares ஊழல்

    14. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் தோல்வி

    15. இந்தியாவின் கடன் 2014-ல் 55 லட்சம் கோடி ஆனால் பாஜக ஆட்சியில் 204 லட்சம் கோடி

    16. டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் தாக்குதல்

    17. சாமானிய மக்களின் வங்கி கணக்கில் இருந்து 35,000 கோடி அபேஸ்

    18. CAA

    19. பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடம்

    20. மோடி அரசு விளம்பரங்களுக்காக 3000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது

    21. சண்டிகர் மாநகர மேயர் தேர்தலில் பாஜகவின் முறைகேடு

    22. அக்னிபாத் திட்டம்

    23. புல்வாமா தாக்குதல்-40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது

    24. இந்திய பாராளுமன்ற கட்டிடத்தில் வண்ண புகை குண்டுகளை கொண்டு தாக்குதல்

    25. எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்கு முடக்கம்

    26. ஊடகங்களின் மீதான அடக்குமுறை

    27. வேலையில்லா திண்டாட்டம்

    28. பணவீக்கம்

    29. தனிநபர் வருமானம் குறைப்பு

    30. 5-டிரில்லியன் டாலர் இலக்கு தோல்வி

    31. பட்டினி குறியீட்டில் 111-வது இடம்

    32. சாதிவாரி கணக்கெடுப்பு

    33. இந்திய எல்லையான லடாக்,அருணாச்சல பிரதேசத்தை சீனாவிற்கு தாரைவார்த்தது

    34. இந்தி/சமஸ்கிருத மொழிகளுக்கே முன்னுரிமை

    35. சுங்கச்சாவடிகளில் வசூல் வேட்டை

    36. எட்டு வயது சிறுமி ஆசிபா கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது

    37. பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது

    38. உத்திரபிரதேசத்தில் பட்டியலின சிறுமி பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது

    39. பாஜக எம்.பி.பிரிட்ஜ் பூஷன் சிங், இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்

    40. மணிப்பூரில் பெண்கள் வீதிகளில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு,கொலை செய்யப்பட்டது

    41. உத்திரபிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் பட்டியலின பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது

    42. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 33% ஆக குறைப்பு

    43. பாஜக ஆட்சியில் பட்டியலின / பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் 40% சதவீதம் உயர்வு

    44. பாஜக ஐ.டி.விங் நிர்வாகிகள் 3 பேர் 20 வயது கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தது

    45. கல்வி சுதந்திர குறியீட்டில் பின்னடைவு

    46. புதிய கல்விக் கொள்கை

    47. சிறுபான்மை மாணவர்களுக்கான ஆதரவு ஊதியத்தை ரத்து செய்தது

    48. 141 நாடாளுமன்ற எம்பிக்கள் பணியிடை நீக்கம்

    49. தமிழ்நாட்டிற்கான நிதி பங்கிட்டில் பாகுபாடு

    50. மாநில சுயாட்சியில் ஓன்றிய அரசின் தலையீடு

    51. பழங்குடியின பெண் குடியரசு தலைவரை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா மற்றும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்காதது

    52. நாடாளுமன்ற நிலை குழுக்களுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் விகிதம் 71% இருந்து 21% ஆக குறைப்பு

    53. பெண்களுக்கான 33% சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாதது

    54. தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி பாஜக ஆட்சியில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை

    55. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு முறை கூட மோடி பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொள்ளவில்லை

    56. மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் பாஜக

    57. நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகள் சுரண்ட பாரத் மாலா, சாகர் மாலா, உதான் திட்டங்கள்

    58. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடு

    59. 5-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் ஊழல்

    60. ஸ்பெக்ட்ரம் ஊழல்

    61. ஸ்கில் இந்தியா மோசடி

    62. 9,000 கோடி மோசடி செய்த விஜய் மல்லையா மற்றும் 22,000 கோடி மோசடி செய்த நீரவ் மோடியை வெளிநாடுகளுக்கு தப்ப வைத்தது

    63. தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தில் ஊழல்

    64. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு

    65. ONGC ஊழல்

    66. டெண்டர் முறைகேடு

    67. கேமன் தீவு FDI ஊழல்

    68. அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நிறுவன ஊழல்

    69. வியாபம் ஊழல்

    70. DMAT ஊழல்

    71. போலி நாணய மோசடியில் பாஜகவினர்

    72. ஜார்க்கண்ட் நிலக்கரி ஊழல்

    73. குஜராத்தில் அதானிக்காக நில மோசடி

    74. அம்பானி, அதானி சொத்து மதிப்பு பாஜக ஆட்சியில் 80% உயர்ந்துள்ளது

    75. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ரூ.83.2 ஆக வீழ்ச்சி

    76. மோடி அரசு ஊழல் மூலம் தனது கட்சியின் சொத்துக்களையும், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் சொத்துக்களையும் பன்மடங்கு பெருக்கி உள்ளது

    77. 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்து பிறகு செல்லாது என அறிவித்தது

    78. பத்திரிக்கை சுதந்திரக் குறியீட்டில் 161 வது இடம்

    79. உலக ஊழல் குறியீட்டில் 93-வது இடம்

    80. கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களின் தற்கொலை ஒரு லட்சத்திற்கும் மேல்

    81. இந்தியாவில் படித்த இளைஞர்கள் 83% பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்

    82. வெளிநாட்டு முதலீடு உடைய நிறுவனங்கள் பாஜகவிற்கு நன்கொடை

    83. சமீபத்தில் ஜம்மு & காஷ்மீரில் மோடி ஆட்டிறைச்சி சாப்பிடும் மக்களை இழிவு படுத்தி இருக்கிறார்

    84. தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடியின் பேச்சு முழுக்க முழுக்க மதத்தையும், சாதியையும் சார்ந்தே உள்ளது

    85. மோடி சொன்ன அனைவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் வராதது

    86. 2019-2023 வரை 35,680 MSME தொழில்கள் மூடப்பட்டுள்ளன

    87. பல ஆயிரம் கோடி ஊழல் செய்த 25 அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்து தப்பித்துள்ளனர்

    88. இந்திய குடும்பங்களின் கடன் அளவு உயர்வு

    89. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி

    90. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை அடக்குமுறை அதிகரிப்பு

    91. இன்டர்நெட் இணைப்பை முடக்குவதில் இந்தியா முதலிடம்

    92. ரயில்வே வெயிட்டிங் லிஸ்ட் மூலம் 1230 கோடி வசூல்

    93. மக்கள் மத்தியில் நிலவும் ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு

    94. EVM தயாரிப்பில் பாஜகவினர்

    95. இந்தியாவில் 19.3% குழந்தைகள் 24 மணிநேர இடைவெளியில் பட்டினியால் தவிக்கின்றனர்

    96. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் செய்வது

    97. மணிப்பூரில் கார்கில் போருக்காக உயிர்த்தியாகம் செய்ய முன்வந்த ராணுவ வீரரின் மனைவி பொதுவெளியில் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது

    98. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளில் 75% பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கிறது

    99. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது

    100. மோடி ஆட்சியில் வாராக்கடன் 55.5 லட்சம் கோடி

    என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    ×