என் மலர்
நீங்கள் தேடியது "பங்குச்சந்தை"
- பாதுகாப்பு பிரச்சனை இல்லை, பரிமாற்றங்களுக்கு எளிதானவை, எளிதில் பணமாக மாற்றலாம்.
- தீபாவளி அன்று, லட்சுமி தேவியை வணங்கும் சடங்காக, பொதுவாக மாலை நேரத்தில் பங்குச்சந்தை ஒரு மணிநேரம் திறக்கப்படும்.
நாளுக்கு நாள் தங்கம், வெள்ளியின் விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில், தங்கத்துடன் சேர்த்து வெள்ளியில் முதலீடு செய்யும் ஆர்வமும் பெருகி விட்டது. அதேசமயம், பங்குச்சந்தையிலும் ஏற்ற இறக்கங்கள் நீடிப்பதால், முதலீட்டாளர்களின் தேர்வு, தங்கம் மற்றும் வெள்ளியாக இருக்கிறது.
இந்நிலையில், தங்கம்-வெள்ளியில் முதலீடு செய்வது நல்லதா?, பங்குச்சந்தை முதலீடு சிறந்ததா..? என்கிற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழுவதுண்டு. இது தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார், தர்மஸ்ரீ ராஜேஸ்வரன். பங்குச்சந்தையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவரான இவர், 'சாய் ஷேர்ட்யூட்' -டின் நிறுவனர். இவர் தன்னுடைய சமூக ஊடகங்கள் வாயிலாக, முதலீடு சம்பந்தமான பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளித்து வருகிறார். அவர், தங்கம் வெள்ளி முதலீடு தொடர்பான சந்தேகங்களுக்கு, விடை கொடுக்கிறார்.
* இன்றைய நிலவரத்தில், தங்கம் வெள்ளி முதலீடு சிறந்ததாக தோன்றுகிறதே, உண்மைதானா?
இவை இரண்டுமே வங்கி சேமிப்புகள் மற்றும் இதர சேமிப்புகளை ஒப்பிடும்போது சிறந்த தேர்வுகள் தான். ஆனாலும் இவற்றில் முதலீடு செய்யும்போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.
உலகளவிலான பணவீக்க விகிதம் (Inflation), அரசியல் பதற்றங்கள் (Geopolitical Tensions), அமெரிக்க டாலரின் விலை ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் பின்னணியில், தங்கம் ஒரு சிறந்த பாதுகாப்பான முதலீடாக (Safe Haven) உள்ளது. அதேசமயம் வெள்ளி ஒரு அதிக ஏற்ற இறக்கமுள்ள (Volatile) உலோகம். இது தொழில்துறை தேவை (சோலார் பேனல், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி) மற்றும் முதலீட்டுத் தேவை ஆகிய இரண்டையும் சார்ந்துள்ளது. பொருளாதாரம் வலுவாக இருந்தால் வெள்ளி விலை உயரும், ஆனால் மந்த நிலையில் விலை வீழ்ச்சி அதிகம். எனவே, தங்கத்தில் அதிக முதலீடும், வெள்ளியில் சிறு பங்கு முதலீடும் நல்லது.
* பங்குச்சந்தையில் தங்கம், வெள்ளி வாங்க முடியுமா? லாபகரமாக இருக்குமா? எப்படி வாங்குவது? என்னென்ன தேவைப்படும்?
ஆம்! முடியும். டிமாட் மற்றும் டிரேடிங் கணக்கு இருந்தால், நீங்கள் பங்குச்சந்தையிலும் தங்கம், வெள்ளி வாங்கலாம். தங்கம், வெள்ளி இ.டி.எப். வகைகளில், முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு நிப்பான் இந்தியா இ.டி.எப்., ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ சில்வர் இ.டி.எப். போன்றவை, தங்கம்-வெள்ளி சார்ந்த பிரபலமான பங்குச்சந்தை முதலீடுகள். நகைகள், நாணயங்களை விட இவற்றில் கட்டணங்கள் குறைவு. பாதுகாப்பு பிரச்சினை இல்லை, பரிமாற்றங்களுக்கு எளிதானவை, எளிதில் பணமாக மாற்றலாம்.
* தீபாவளிக்கு என பிரத்யேகமாக நடைபெறும், பங்கு வர்த்தகம் பற்றி விளக்குங்கள்?
தீபாவளி அன்று, லட்சுமி தேவியை வணங்கும் சடங்காக, பொதுவாக மாலை நேரத்தில் பங்குச்சந்தை ஒரு மணிநேரம் திறக்கப்படும். இந்த நேரத்தில் வர்த்தகம் செய்வது வருடம் முழுவதும் நல்ல லாபம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரும் என்பது நம்பிக்கை. முகூர்த்த சிறப்பு வர்த்தகத்தில் நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு நல்ல நிறுவனத்தின் பங்குகளைச் சிறிய எண்ணிக்கையில் வாங்கலாம். அல்லது, உங்கள் எஸ்.ஐ.பி.-ஐ இந்த நாளில் தொடங்கலாம்.
* பங்குச்சந்தை, நிலையாக இருக்கிறதா? இந்த சமயத்தில் எந்த துறையில் முதலீடு செய்வது நல்லது? எந்தத் துறையைத் தவிர்ப்பது நல்லது?
தற்போதைய பங்குச்சந்தை 'நிலையான ஏற்ற இறக்கம்' (Stable Volatility) கொண்டதாக உள்ளது. உலகப் பொருளாதாரச் சவால்கள் இருப்பினும், இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சி (ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம்) சந்தையைத் தாங்கி நிற்கிறது. பெரும் சரிவு வருவதற்கான வாய்ப்பு தென்படவில்லை. ஆனால் அதி விரைவான வளர்ச்சியையும் எதிர்பார்க்க முடியாது. இந்த சூழலில் வங்கி மற்றும் நிதி சார்ந்த பங்குகள் (Banking & Financial Services), அடிப்படை கட்டுமானம் மற்றும் மூலப் பொருட்கள் (Infrastructure & Capital Goods), உள்நாடு சார்ந்த துறைகளில் (Domestic Cyclicals) முதலீடு செய்யலாம். ஐ.டி. சேவைகள் (IT Services), ஏற்றுமதி சார்ந்த துறைகளை (Export-oriented sectors) தவிரிப்பது நல்லது.
* தங்கத்திற்கு மாற்றாக, வெள்ளியில் முதலீடு செய்வது சிறப்பானதா? இல்லாதபட்சத்தில் வேறு எதில் முதலீடு செய்யலாம்?
வெள்ளியை, தங்கத்திற்கு மாற்றாக கருதமுடியாது. இப்போது வெள்ளியின் விலை ஏற்றம் பெற்றாலும், அதன் நிலைப்புத்தன்மை கொஞ்சம் கேள்விக்குறியாகவே உள்ளது. அதனால் முதலீட்டின் ஒரு பகுதியாக, வெள்ளியை வைத்து கொள்ளலாம். ஆனால் முழு பணத்தையும் அதில் முதலீடு செய்வது தவறு.
அதற்கு மாற்றாக, ரியல் எஸ்டேட் மியூச்சுவல் பண்டுகள் (REITs) மற்றும் கார்ப்பரேட் பாண்ட் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாம். இவற்றில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தை விட குறைந்த ஆபத்து மற்றும் நிலையான வருமானம் உண்டு.
- ஜேன் ஸ்ட்ரீட் இந்திய சந்தையில் வர்த்தகம் செய்யத் தடை விதிக்கப்பட்டு, ரூ.4,843 கோடி லாபம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- மோடி அரசு யாருடைய விருப்பத்தின் பேரில் கண்களை மூடிக்கொண்டு இருந்தது?" என்று கேள்வி எழுப்பினார்.
அமெரிக்க வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் இந்திய பங்குச்சந்தையில் , ஜனவரி 2023 முதல் மே 2025 வரையிலான காலகட்டத்தில், பங்குகள், ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) சந்தைகளில் ஒரே நேரத்தில் பந்தயம் கட்டி, குறியீடுகளை கையாண்டு லாபம் ஈட்டியதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி கண்டறிந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, ஜேன் ஸ்ட்ரீட் இந்திய சந்தையில் வர்த்தகம் செய்யத் தடை விதிக்கப்பட்டு, ரூ.4,843 கோடி லாபம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "செபி இவ்வளவு காலம் ஏன் அமைதியாக இருந்தது? மோடி அரசு யாருடைய விருப்பத்தின் பேரில் கண்களை மூடிக்கொண்டு இருந்தது?" என்று கேள்வி எழுப்பினார்.
ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) சந்தை பெரிய முதலீட்டாளர்களுக்கு ஒரு விளையாட்டு மைதானமாக மாறிவிட்டதாகவும், சிறிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பணத்தை இழந்து வருவதாகவும் 2024-ஆம் ஆண்டிலேயே தான் குறிப்பிட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
- 15 செயலிகளுக்கு தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- இது தொடர்பாக செபி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 15 செயலிகளுக்கு தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஐபிஎல் சூதாட்டத்தை, பங்குச்சந்தை வர்த்தகம் (opinion trading) போன்று விளம்பரம் செய்து பொதுமக்களை ஏமாற்றியதாக 15 ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பிரோபோ (Probo), எம்.பி.எல் (MPL) மற்றும் ஸ்போர்ட்ஸ் பாஸி (SportsBaazi) போன்ற முக்கிய நிறுவனங்களும் அடங்கும்.
இது தொடர்பாக ஏற்கனவே பங்குச்சந்தை ஒழுங்குபடுத்தல் அமைப்பான செபி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் 1% வரை சரிந்தன.
- பிஎஸ்இ சென்செக்ஸில் டாடா ஸ்டீல் (0.73%), இன்ஃபோசிஸ் (0.08%), மற்றும் ஐடிசி (0.07%) ஆகியவை லாபம் ஈட்டின.
இந்திய பங்குச் சந்தை வணிகம் நேற்றைத் தொடர்ந்து இன்றும் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் 1% வரை சரிந்தன.
சர்வதேச சந்தைகளின் பலவீனமான போக்கு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனை, சந்தைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 872 புள்ளிகள் இழந்து 81,186 ஆக இருந்தது.
தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 261 புள்ளிகள் சரிந்து 24,683 ஆக இருந்தது.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.85.63 ஆக உள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸில் டாடா ஸ்டீல் (0.73%), இன்ஃபோசிஸ் (0.08%), மற்றும் ஐடிசி (0.07%) ஆகியவை லாபம் ஈட்டின.
மாருதி (-2.76%), மஹிந்திரா & மஹிந்திரா (-2.13%), அல்ட்ராடெக் சிமென்ட் (-2.04%), பவர் கிரிட் கார்ப்பரேஷன் (-2.01%), நெஸ்லே இந்தியா (-1.92%) ஆகியவை அதிக இழப்பை சந்தித்தன.
நேற்றும் பங்குச் சந்தை சரிவுடனே காணப்பட்டது. சென்செக்ஸில் மட்டும் 443.67 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதன்மூலம் சமீபத்திய நிலவரப்படி, முதலீட்டாளர்களுக்கு ரூ. 5.47 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
- ரஃபேல் போர் விமானங்களில் இருந்து SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் ஹப்பை பயன்படுத்தி தாக்கியது.
- போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை உபயோகித்து வருகிறது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்கி வைத்துள்ளது. இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. மேலும் 63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க சமீபத்தில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
இதற்கிடையே கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்க இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை தாக்கியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு கூறுகிறது.
முப்படைகள் இணைந்து நடத்திய இந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் வான்படை சார்பில் ரஃபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ரஃபேல் போர் விமானங்களில் இருந்து SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் ஹப் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்கிடையே பாகிஸ்தான் கூற்றுப்படி, அந்நாட்டு ராணுவம், 3 ரஃபேல் விமானங்களையும், 2 ஜெட் ரக விமானங்களையும் தாக்கி அழித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த கேள்விக்கு இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் பார்தி, சண்டையில் இழப்புகள் சகஜம் என்று பொத்தாம்பொதுவாக பதில் கூறினார். மேலும் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நேரடி மோதலில் இறங்கியது. தொடர்ந்து சர்வதேச தலையீட்டின் பின் கடந்த சனிக்கிழமை சண்டை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ரஃபேல் போர் விமானங்கள் பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டது என்று கூறப்படுவதன் காரணமாக அவ்விமானங்களை தயாரிக்கும் பிரான்ஸை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு அடுத்த நாள், மே 8 அன்று, ஐரோப்பிய பங்குச்சந்தையில் டசால்ட் பங்குகள் 1.75 சதவீதம் உயர்ந்தன.
ஆனால் அதன்பின் பாகிஸ்தான் ராணுவம் ரஃபேலை வீழ்த்தியதாக கூறப்படுவதன் காரணமாக கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் டசால்ட் ஏவியேஷன் பங்குகள் 10 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளன. குறிப்பாக திங்களன்று(மே 12 அன்று) , இந்த நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் சரிவைக் கண்டன. அன்றைய தினம் டசால்ட் ஏவியேஷன் பங்குகள் சுமார் 292 யூரோக்களாக இருந்தது. நாள் முழுவதும் அது 291 யூரோக்களுக்கும் 295 யூரோக்களுக்கும் இடையில் ஏற்ற இறக்கமாக இருந்தது.
ஒருபுறம், ரஃபேல் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகள் சரிவைக் கண்ட அதே நேரத்தில், J-10 போர் விமானங்களை தயாரிக்கும் சீன நிறுவனமான செங்டு விமானக் கார்ப்பரேஷன் (CAC) பங்கு விலை மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டது.

திங்களன்று (மே 12 அன்று) CAC நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் உயர்ந்தன. நிறுவனத்தின் பங்கு மதிப்பு 95.86 சீன யுவானை எட்டியது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 60 சதவீதம் அதிகமாகும். சீனாவின் இந்த J-10 போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை உபயோகித்து வருகிறது. இந்த J-10 மூலமே 3 ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியதாக கூறப்படுகிறது.
- ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல் ஆகியவற்றின் பங்குகள் சரிந்துள்ளன.
- டாடா மோட்டார்ஸ், டைட்டன் ஆகியவற்றின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் மோதல் காரணமாக இன்றைய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான பிஎஸ்இ சென்செக்ஸ் 829 புள்ளிகள் சரிந்து 79,505 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 50, 255 புள்ளிகள் சரிந்து 24,018 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அப்போலோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, HDFC வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, இன்போசிஸ், ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல் ஆகியவற்றின் பங்குகள் சரிந்துள்ளன.
ஆசியன் பெயிண்ட், டாக்டர் ரெட்டி, கோடக் மகேந்திரா வங்கி, எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், டைட்டன் ஆகியவற்றின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் மேலும் அதிகரித்து வருவதால் பங்குச்சந்தை வரும் நாட்களில் மேலும் சரிவை சந்திக்கும் என முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
- மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 79,830 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது
- எச்.சி.எல் டெக், எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவை லாபத்தில் உள்ளன.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவதால் இந்திய பங்குச் சந்தைகள் சரிவில் வர்த்தகமாகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 79,830 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது, ஆனால் காலை 11.30 மணிக்கு 1,004 புள்ளிகள் வரை சரிந்து 78,797.39 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 50 24,289 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கி, காலை 11.30 மணிக்கு 338 புள்ளிகள் சரிந்து 23,908 புள்ளிகளாகக் குறைந்தது.
ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை பின்தங்கின. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், எச்.சி.எல் டெக், எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவை லாபத்தில் உள்ளன.
- இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
- சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் பின்தங்கி காணப்பட்டன.
வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் குறியீடு ஆரம்ப வர்த்தகத்தில் 599.66 புள்ளிகள் உயர்ந்து 79,152.86 புள்ளிகளில் நிலைபெற்றது.
தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 152.55 புள்ளிகள் உயர்ந்து 24,004.20 புள்ளிகளில் நிலைபெற்றது.
சென்செக்ஸ் நிறுவனங்களில், டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, இன்போசிஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
அதானி போர்ட்ஸ், ஐடிசி, பாரதி ஏர்டெல், டைட்டன், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் பின்தங்கி காணப்பட்டன.
- நிஃப்டி மெட்டல் குறியீடு 4.30% மற்றும் பார்மா 2.50% உயர்ந்துள்ளன.
- சீனாவை தவிர இந்தியா உட்பட மற்ற நாடுகளான வரிவிதிப்பை 90 நாட்களுக்கு தாற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தார்.
உலகளாவிய நிச்சயமின்மைக்கு மத்தியில் இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் கடைசி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) உயர்வுடன் வர்த்தமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் சுமார் 1400 புள்ளிகள் (1.54%) அதிகரிப்புடன் 75,200 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டியும் 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 22,850 புள்ளிகளில் உள்ளது.
NSE-யில் உள்ள 50 பங்குகளில் 46 பங்குகள் ஏற்றத்தில் உள்ளன. நிஃப்டி மெட்டல் குறியீடு 4.30% மற்றும் பார்மா 2.50% உயர்ந்துள்ளன. அதே நேரத்தில், ஆட்டோமொபைல் மற்றும் ஐடி துறை குறியீடுகள் சுமார் 2% அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன.
டிரம்ப்பின் பரஸ்பர வரிவிதிப்பால் உலகளாவிய பங்குச் சந்தைகளில் இந்த வார தொடக்கத்தில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. இதற்கிடையே சீனாவை தவிர இந்தியா உட்பட மற்ற நாடுகளான வரிவிதிப்பை 90 நாட்களுக்கு தாற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்த நிலையில் பங்குச்சந்தைகள் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளன.
- உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
- இந்திய பங்கு சந்தையில் 10 மாதத்தில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு அதற்கு எதிரான சீனாவின் பதில் வரி என உலக வர்த்தக போர் தீவிரமடைந்து வருகிறது.
இதனை தொடர்ந்து உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்திய பங்கு சந்தையில் 10 மாதத்தில் இல்லாத சரிவு ஏற்பட்டு ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ. 14 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்திய முதலீட்டாளர்கள் சரிவை சந்தித்து வருகின்றனர். இதனால் இதுவரை இந்திய முதலீட்டாளர்களுக்கு தோராயமாக ரூ.45.57 லட்சம் கோடி சந்தை மூலதனம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 20-ந் தேதி நிலவரப்படி நமது நாட்டின் சந்தை மூலதனம் ரூ. 4,31,59,726 கோடியாக இருந்தது. இன்று ரூ.3,86,01,961 கோடியாக குறைந்துள்ளது.
மொத்தம் 517 நிறுவனங்களின் பங்குகள் கீழ் சுற்றுக்கு சரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், இன்று இந்திய பங்கு சந்தை சற்று உயர்வுடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
- பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
- உலக பங்குச்சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.
அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் அறிவித்தார்.
டிரம்ப் வரிவிதிப்புக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சீனா டிரம்ப் வரிவிதிப்புக்கு எதிர் வரிவிதிப்பு நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத கூடுதல் வரி விதித்தது. டிரம்ப் தொடங்கியுள்ள வர்த்தக போரால் உலக பங்குச்சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது பரஸ்பர வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், டிரம்ப் தனது பரஸ்பர வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியான தகவல் போலியானது என்று என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
- சிங்கப்பூரின் பங்குகள் இன்று சந்தை தொடக்கத்தில் ஏழு சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன.
- வரி விதிப்புகள் மிகவும் அழகான விஷயம் என்பதை ஒரு நாள் மக்கள் உணர்வார்கள்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.
அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் அறிவித்தார்.
டிரம்ப் வரிவிதிப்புக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சீனா டிரம்ப் வரிவிதிப்புக்கு எதிர் வரிவிதிப்பு நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத கூடுதல் வரி விதித்தது. டிரம்ப் தொடங்கியுள்ள வர்த்தக போரால் உலக பங்குச்சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்படத் தொடங்கி உள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் எலான் மஸ்க் உள்ளிட்ட உலகின் முதல் 500 பணக்காரர்கள் ஒட்டுமொத்தமாக 208 பில்லியன் டாலர்களை இழந்தனர்.
இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று உலக பங்குச்சந்தைகளில் கடும் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் 1987 க்கு பின் நிகழும் மிகப்பெறிய பங்குச்சந்தை சரிவாக அமையும். ஏற்கனவே 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு இன்று பங்குச்சந்தை சரிவு கடுமையாக உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சிங்கப்பூரின் பங்குகள் இன்று சந்தை தொடக்கத்தில் ஏழு சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன.
ஆசியா முழுவதும் சந்தைகள் சரிவைச் சந்தித்ததால், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு 281.84 புள்ளிகள் (7.37 சதவீதம்) சரிந்து 3,544.02 ஆக உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட கூர்மையான சரிவுகள், தனது வர்த்தக வரிகள் பயனுள்ளதாக இருப்பதைக் காட்டுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
புளோரிடாவில் WEEKEND முடித்து வாஷிங்டனுக்கு ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பியபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில நேரங்களில் எதையாவது சரிசெய்ய மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார். மேலும் வர்த்தக பங்காளிகள் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளனர் என்றும் கூறினார்.
இதற்கிடையே தனது சொந்த சமூக ஊடகமாக ட்ரூத் சோசியலில் இன்று அவர் வெளியிட்ட பதிவில், சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளுடன் நமக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை உள்ளது.
இந்தப் பிரச்சினையை தீர்க்க ஒரே வழி, வரி விதிப்புகள் மட்டுமே. இவை இப்போது அமெரிக்காவிற்கு பல பில்லியன் டாலர்களை கொண்டு வருகின்றன. அவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.
மேலும் பார்ப்பதற்கு ஒரு அழகான விஷயம். தூங்கும் ஜனாதிபதி ஜோ பைடனின் காலத்தில் இந்த நாடுகளுடனான உபரி வளர்ந்துள்ளது. நாம் அதை மாற்றப் போகிறோம், விரைவில் மாற்றப் போகிறோம். அமெரிக்காவிற்கான வரி விதிப்புகள் மிகவும் அழகான விஷயம் என்பதை ஒரு நாள் மக்கள் உணர்வார்கள்! என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்கா வுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்ப தாக டிரம்பின் ஆலோசகர்கள் தெரிவித்து உள்ளனர்.






