என் மலர்
நீங்கள் தேடியது "பங்குச்சந்தை"
- அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்
- இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்போவதாக டிரம்ப் அறிவிப்பு
பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. பட்ஜெட்டில், பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான வரி சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முதியீட்டாளர்கள் பீதியடைந்தனர்.
எனவே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
டிரம்பின் இந்த அறிவிப்பால் இன்று இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3657 புள்ளிகள் வரையும் தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 1220 புள்ளிகள் வரையும் உயர்ந்து உயர்வுடன் தொடங்கியது.
இந்நிலையில், இன்றைய பங்குச்சந்தை முடிவில் சென்செக்ஸ் 2072 புள்ளிகள் உயர்ந்து 83,739 புள்ளிகளிலும் நிஃப்டி 639 புள்ளிகள் உயர்ந்து 25,727 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
- அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
- அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. பட்ஜெட்டில், பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான வரி சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முதியீட்டாளர்கள் பீதியடைந்தனர்.
எனவே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.
இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
டிரம்பின் இந்த அறிவிப்பால் இன்று இந்திய பங்குச்சந்தை தாறுமாறாக உயர்ந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 4000 புள்ளிகள் வரையும் தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 1200 புள்ளிகள் வரையும் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
11 மணிநேர நிலவரப்படி சென்செக்ஸ் 84,000 புள்ளிகளிலும் நிஃப்டி 25,750 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது.
- சம்மன்களை அதிகாரப்பூர்வ வழிகளில் வழங்குவதற்கான முந்தைய முயற்சிகளை இந்தியா இரண்டு முறை நிராகரித்தது.
- அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்று கூறி நிராகரித்துள்ளது
அதானி குழுமப் பங்குகள் இன்று 10% வீழ்ச்சியடைந்துள்ளன. குறிப்பாக அதானி கிரீன், அதானி என்டர்பிரைசஸ், அதானி எனர்ஜி மற்றும் அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகள் 10% வரை சரிவைக் கண்டுள்ளன. கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோருக்கு மின்னஞ்சல் வாயிலாக நேரடியாக சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றத்தின் அனுமதியை அந்நாட்டின் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கோரியுள்ள நிலையில் அதானி குழும பங்குகள் சரிவைக் கண்டுள்ளன.
சம்மன்களை அதிகாரப்பூர்வ வழிகளில் வழங்குவதற்கான முந்தைய முயற்சிகளை இந்தியா இரண்டு முறை நிராகரித்ததால், அவை தோல்வியடைந்ததாக அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு அறிவிப்புகளை வழங்க அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் முயற்சித்து வருகிறது. அமெரிக்காவில் இந்தியப் பெருநிறுவனம் ஒன்று தொடர்புடைய மிக முக்கியமான சட்ட வழக்காக இது கருதப்படுகிறது.
இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, அதானி கிரீன் நிறுவனத்தின் பங்குகள் 10% சரிந்து ஒருநாள் வர்த்தகத்தில் குறைந்தபட்ச விலையான ரூ. 823-ஐ எட்டின. அதே சமயம் குழுமத்தின் முன்னணி நிறுவனமான அதானி என்டர்பிரைசஸின் பங்குகள் 8% சரிந்து ரூ. 1,936-ஐத் தொட்டன. மேலும், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு 5% சரிந்து ரூ. 1,343-க்கும், அதானி எனர்ஜி நிறுவனத்தின் பங்கு 8% சரிந்து ஒரு பங்கின் விலை ரூ. 852-க்கும் சரிந்தது.
முன்னதாக அதானி கிரீன் எனர்ஜி தயாரிக்கும் மின்சாரத்திற்கான கொள்முதல் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தில் அதானி குழுமத்தின் நிர்வாகிகள் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டுகள் எழுந்தது. அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்று கூறி நிராகரித்துள்ளது. மேலும், தனது நிலைப்பாட்டைத் தக்கவைக்கத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதாக அக்குழுமம் தெரிவித்துள்ளது.
- Oracle of Omaha என்பது வாரன் பஃபெட்-க்கு வழங்கப்பட்ட புனைப்பெயர்
- உலகின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவர்
பங்குச்சந்தை உலகின் ஜாம்பவனாக அறியப்படும் வாரன் பஃபெட், சுமார் ஆறு சதாப்தங்களுக்கு பிறகு பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றார். தனது வாரிசும், நம்பகமான உதவியாளருமான கிரெக் ஏபலிடம் தலைமை பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
பங்குச்சந்தையில் லாபம் ஈட்டும் மாயஜாலக்காரர் என புகழப்பெற்ற வாரன் பஃபெட், 1962-இல் பெர்க்ஷயர் ஹாத்வே (Berkshire Hathaway) நிறுவனத்தை வாங்கினார். பெரும் நஷ்டத்தில் இருந்த அந்த ஜவுளி நிறுவனத்தை, 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு பிரம்மாண்டமான முதலீட்டு நிறுவனமாக மாற்றினார்.
அதனைத்தொடர்ந்து 1972-இல், அவர் See's Candies நிறுவனத்தை 25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார். இந்த முதலீடு அவருக்கு பெரும் லாபத்தை அள்ளிக் கொடுத்தது. 2019-ஆம் ஆண்டிற்குள், இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை வரிக்கு முந்தைய வருமானமாக (pre-tax earnings) ஈட்டியிருந்தது. இதனைத்தொடர்ந்து அவர் எடுத்த மற்றொரு சிறந்த யோசனை கோகா-கோலா நிறுவனத்தின் பங்குத்தாரர் ஆனது. இவ்வாறு பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான வாரனின் மொத்த சொத்து மதிப்பு ரூ.15 லட்சம் கோடி ஆகும். உலகின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவராகத் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
Oracle of Omaha என்பது வாரன் பஃபெட்-க்கு வழங்கப்பட்ட புனைப்பெயர் ஆகும். ஒரு நிறுவனத்தின் உண்மையான மதிப்பை அறிந்து அதில் முதலீடு செய்வது, பங்குச்சந்தையில் அவசரப்படாமல் பொறுமையாக இருக்க வேண்டும், குறுகிய கால லாபத்தை எதிர்பார்க்காமல், பல ஆண்டுகள் முதலீட்டைத் தொடர்வது போன்ற அணுகுமுறைகளும், புத்திசாலித்தனமுமே வாரனின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தன.
யார் இந்த கிரெக் ஏபல்?
கடந்த 2000 ஆம் ஆண்டில் மிட்அமெரிக்கன் எனர்ஜியை பெர்க்ஷயர் ஹாத்வே (Berkshire Hathaway) கையகப்படுத்தியபோது அதில் ஏபல் இணைந்தார். பஃபெட் அடிக்கடி ஒரு சோர்வில்லா உழைப்பாளி மற்றும் நேர்மையான தொடர்பாளர் என்று ஏபலை பாராட்டியுள்ளார். 63 வயதுடைய ஏபல், 2018 ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தின் துணைக் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.






