என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sensex"

    • 76.1 புள்ளிகள் உயர்ந்து 24,201.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
    • காளையின் ஆதிக்கத்துடன் லாபத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

    வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) (ஏப்ரல் 22) பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது.

    மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் உயர்ந்து வர்த்தகமாகின்றன.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 319.89 புள்ளிகள் உயர்ந்து 79,728.39 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

    தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 76.1 புள்ளிகள் உயர்ந்து 24,201.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

    நேற்று இவ்விரண்டு குறியீடுகளும் காளையின் ஆதிக்கத்துடன் லாபத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.   

    • இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
    • சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் பின்தங்கி காணப்பட்டன.

    வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் குறியீடு ஆரம்ப வர்த்தகத்தில் 599.66 புள்ளிகள் உயர்ந்து 79,152.86 புள்ளிகளில் நிலைபெற்றது.

    தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 152.55 புள்ளிகள் உயர்ந்து 24,004.20 புள்ளிகளில் நிலைபெற்றது.

    சென்செக்ஸ் நிறுவனங்களில், டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, இன்போசிஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

    அதானி போர்ட்ஸ், ஐடிசி, பாரதி ஏர்டெல், டைட்டன், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் பின்தங்கி காணப்பட்டன.

    • சென்செக்ஸ் 309.40 புள்ளிகள் உயர்ந்து 77,044.29 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
    • நிஃப்டி 108.65 புள்ளிகள் உயர்ந்து 23,437.20 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் இன்று தொடர்ந்து 3ஆவது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பால் இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது. உலக நாடுகள் எதிர்ப்பால் டிரம்ப் 90 நாட்களுக்கு இந்த வரி விதிப்பை நிறுத்தி வைத்துள்ளார்.

    இதனால் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. நேற்றைய முன்தினம், நேற்றைய வர்த்தக முடிவில் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டிருந்தன. இந்த நிலையில் இன்றும் பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.

    புதிய வெளிநாட்டு முதலீடு, சில்லறை பணவீக்கம் கடந்த ஆறு வருடங்களாக இல்லாத வகையில் குறைந்துள்ளது பங்குச் சந்தை உயர்வுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

     மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் செக்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 76,734.89 ஆக இருந்தது. இன்று காலை சுமார் 260 புள்ளிகள் உயர்ந்து 76,996.78 புள்ளிகள் வர்த்தகம் தொடங்கியது. குறைந்தபட்சமாக 76,543.77 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 77,110.23 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 309.40 புள்ளிகள் உயர்ந்து 77,044.29 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 23,328.55 புள்ளியாக இருந்தது. இன்று காலை 16 புள்ளிகள் உயர்ந்து 23,344.10 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. குறைந்தபட்சமாக 23,273.05 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,452.20 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 108.65 புள்ளிகள் உயர்ந்து 23,437.20 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது.

    • நிஃப்டி மெட்டல் குறியீடு 4.30% மற்றும் பார்மா 2.50% உயர்ந்துள்ளன.
    • சீனாவை தவிர இந்தியா உட்பட மற்ற நாடுகளான வரிவிதிப்பை 90 நாட்களுக்கு தாற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தார்.

    உலகளாவிய நிச்சயமின்மைக்கு மத்தியில் இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் கடைசி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) உயர்வுடன் வர்த்தமாகி வருகிறது.

    மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் சுமார் 1400 புள்ளிகள் (1.54%) அதிகரிப்புடன் 75,200 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டியும் 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 22,850 புள்ளிகளில் உள்ளது.

    NSE-யில் உள்ள 50 பங்குகளில் 46 பங்குகள் ஏற்றத்தில் உள்ளன. நிஃப்டி மெட்டல் குறியீடு 4.30% மற்றும் பார்மா 2.50% உயர்ந்துள்ளன. அதே நேரத்தில், ஆட்டோமொபைல் மற்றும் ஐடி துறை குறியீடுகள் சுமார் 2% அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன.

    டிரம்ப்பின் பரஸ்பர வரிவிதிப்பால் உலகளாவிய பங்குச் சந்தைகளில் இந்த வார தொடக்கத்தில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. இதற்கிடையே சீனாவை தவிர இந்தியா உட்பட மற்ற நாடுகளான வரிவிதிப்பை 90 நாட்களுக்கு தாற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்த நிலையில் பங்குச்சந்தைகள் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளன.

    • மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று காலை 3,915.35 புள்ளிகள் சரிந்து 71,449.94 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது.
    • இந்திய பங்குச் சந்தை இன்று காலை நிஃப்டி 1,146.05 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் தொடங்கியது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக உலகளாவிய பங்குச் சந்தைகள் இன்று கடும் ஆட்டம் கண்டன. அமெரிக்கா முதல் இந்திய பங்கு சந்தை வரை கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. ஜெர்மனி பங்குச் சந்தை 10 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி ஆகியவை இன்று கடும் சரிவை சந்தித்தன. கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 75,364.69 புள்ளிகளில் முடிவடைந்தது.

    இன்று காலை 3,915.35 புள்ளிகள் சரிந்து 71,449.94 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

    மதியம் ஒரு மணி வரை சற்று ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. மதியம் ஒரு மணிக்குப் பிறகு மெல்லமெல்ல ஏற்றம் கண்டது. இறுதியாக 2,226.79 புள்ளிகள் சரிந்து 73,137.90 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று அதிகபட்சமாக 73,403.99 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 71,425.01 புள்ளிகளிலும் வர்த்தகமானது.

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் போல், இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று தொடக்கத்தில் கடுமையாக சரிவை சந்தித்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 22,904.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இன்று காலை நிஃப்டி 1,146.05 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 22,254.00 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 21,743.65 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 742.85 புள்ளிகள் குறைந்து 22,161.60 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

    • இன்று சென்செக்ஸ் 3000 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்தது.
    • இன்று நிஃப்டி 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்தன.

    அதன்பின் கடந்த செவ்வாய்க்கிழமை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் புதன்கிழமை சற்று ஏற்றம் கண்டது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக வியாழன், வெள்ளி

    ஆகிய நாட்களில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.

    கடந்த வாரம் சென்செக்ஸ் 930.67 புள்ளிகளும், நிஃப்டி 345.65 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்நிலையில், இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒன்று ஒருநாளில் மட்டும் ரூ.19 லட்சம் கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் கடந்த வார வர்த்தக முடிவில் 75,364.69 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று மதியம் 1 மணியளவில் சுமார் 3200 புள்ளிகள் சரிந்து 72,133 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி கடந்த வார வர்த்தகத்தில் 22,904.45 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று மதியம் 1 மணியளவில் சுமார் 1000 புள்ளிகள் சரிந்து 21, 850 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    இன்றைய நாள் முடிவில் பங்குச்சந்தை மேலும் சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.
    • செக்செக்ஸ் இன்று காலை சுமார் 2600 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்தன.

    அதன்பின் கடந்த செவ்வாய்க்கிழமை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் புதன்கிழமை சற்று ஏற்றம் கண்டது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக வியாழன், வெள்ளி

    ஆகிய நாட்களில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.

    கடந்த வாரம் சென்செக்ஸ் 930.67 புள்ளிகளும், நிஃப்டி 345.65 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் கடந்த வார வர்த்தக முடிவில் 75,364.69 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் 2600 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. சற்று நேரத்தில் 72, 735 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி கடந்தவாரே வர்த்தகத்தில் 22,904.45 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை ஏறக்குறைய 800 புள்ளிகளில் சரிந்து 22,075 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. 

    • Sensex tumbles 930.67 points to close at 75,364.69; Nifty declines 345.65 points to 22,904.45
    • நிஃப்டி நேற்று 166.65 புள்ளிகளும், இன்று 345.65 புள்ளிகளும் சரிந்து வர்த்தகம் நிறைவு.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்தன.

    அதன்பின் கடந்த செவ்வாய்க்கிழமை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் புதன்கிழமை சற்று ஏற்றம் கண்டது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக நேற்றும் இன்றும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. நேற்று (புதன்கிழமை) சென்செக்ஸ் 322.08 புள்ளிகளும், நிஃப்டி 166.65 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 76,295.36 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் 130 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. சற்று நேரத்தில் 76,258.12

    புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. அதன்பின் தொடர்ந்து சரிவை சந்தித்தது. இறுதியாக 930.67 புள்ளிகள் சரிவை சந்தித்து 75,364.69 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தகத்தில் 23,250.10 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை ஏறக்குறைய 60 புள்ளிகளில் சரிந்து 23,190.40 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிகபட்சமாக 23,214.70 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 22,857.45 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 345.65 புள்ளிகள் சரிந்து 22,904.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    • நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,390.41 புள்ளிகள் சரிந்தது
    • இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 592.93 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வார வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டன.

    ஆனால் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,390.41 புள்ளிகள் சரிந்து 76,024.51 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 353.654 புள்ளிகள் சரிந்து 23,165.70 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 592.93 புள்ளிகள் உயர்ந்து 76,671.44 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    நிஃப்டி 166.65 புள்ளிகள் உயர்ந்து 23,332.35 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    • 2025-26-ம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குசந்தை சரிவுடன் தொடங்கியது.
    • அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரி நாளை முதல் அமலுக்கு வருகிறது

    2025-26-ம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குசந்தை சரிவுடன் தொடங்கியது.

    இன்று வர்த்தகம் தொடங்கியவுடன் நிப்டி 178 புள்ளிகள் சரிந்து 23,341 ஆகவும், சென்செக்ஸ் 536 புள்ளிகள் சரிந்து 76,878 ஆகவும் வர்த்தகமானது.

    காலை 10. 30 நிலவரப்படி நிப்டி 23,292.25 புள்ளியாகவும் சென்செக்ஸ் 76,511.96 புள்ளியாகவும் தொடர்ந்து சரிவை கண்டது.

    மதியம் 12.15 மணி நிலவரப்படி நிப்டி 23,240 புள்ளியாகவும் சென்செக்ஸ் 76,269 புள்ளியாகவும் தொடர்ந்து சரிவை கண்டது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரி நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில் உலகளாவிய சந்தைகளில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.

    • சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் உயர்ந்தது.
    • நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 35 நிறுவன பங்குகள் உயர்ந்தது.

    தொடர்ந்து 7 நாட்களாக ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நேற்று சரிவை சந்தித்தது. இந்நிலையில், இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சற்று உயர்ந்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 77,288.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 77,087.39 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் படிப்படியாக சென்செக்ஸ் ஏறத்தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக 77,082.51 புள்ளிகளிலும் அதிகபட்சமாக 77,747.46 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 317.93 புள்ளிகள் சரிந்து 77,606.43 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் உயர்ந்தது. 10 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    மும்பை பங்குச் சந்தை போன்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று சற்று உயர்ந்தது.

    நேற்று நிஃப்டி 23,486.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,433.95 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் நிஃப்டி ஏறுமுகமாக இருந்தது. இன்று குறைந்தபட்சமாக 23,412.20 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,646.45 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக நிஃப்டி 105.10 புள்ளிகள் சரிந்து 23,591.95 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 35 நிறுவன பங்குகள் உயர்ந்தது. 15 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    • சென்செக்ஸ் 0.93 சதவீதமும் நிஃப்டி 0.77 சதவீதமும் சரிந்து இன்று வர்த்தகம் ஆனது.
    • சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது.

    தொடர்ந்து 7 நாட்களாக ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 0.93 சதவீதமும் நிஃப்டி 0.77 சதவீதமும் சரிந்து இன்று வர்த்தகம் ஆனது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 78,017.19 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 77,966.59 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் இறங்குவதுமாகவே சென்செக்ஸ் இருந்தது. இன்று குறைந்தபட்சமாக 77,194.22 புள்ளிகளிலும் அதிகபட்சமாக 78,167.87 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 728.93 புள்ளிகள் சரிந்து 77,288.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 6 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

    மும்பை பங்குச் சந்தை போன்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று சரிவை சந்தித்தது.

    நேற்று நிஃப்டி 23,668.65 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,685.85 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் இறங்குவதுமாகவே நிஃப்டி இருந்தது. இன்று குறைந்தபட்சமாக 23,451.70 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,736.50 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக நிஃப்டி 181.80 புள்ளிகள் சரிந்து 23,486.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 41 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 9 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

    ×