search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sensex"

    • நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இன்றைய இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது.
    • இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது.

    நேற்று [ஜூலை 2] மும்பை பங்குச் சந்தை குறியீட்டு [BSE] சென்செக்ஸ் 79,856 என்று சாதனையை எட்டிய பின்னர் 31 புள்ளிகள் குறைந்து 79,441 என்ற புள்ளிகணக்கில் முடிவடைந்தது. மேலும் நேற்றைய தினம் தேசிய பங்குச் சந்தை குறியீடு எண் [NSE] நிஃப்டி குறியீடு 24,124 என்ற புள்ளிகணக்கில் நிலைபெற்று முடிவடைந்தது.

    இந்நிலையில் நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 574 புள்ளிகள் அதிகரித்து 80,015 புள்ளிகணக்கிலும் நிஃப்டி 172 புள்ளிகள் அதிகரித்து 24,296 என்ற புள்ளிகணக்கிலும் தற்போது வர்த்தகமாகி வருகிறது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 80,000 புள்ளிகளைக் கடப்பது இதுவே முதல் முறை ஆகும்.

     

    HDFC வங்கியால் இந்த உயர்வு ஏற்பட்டு உள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் நெஸ்லே ஆகியவை அதிக லாபத்தைப் பெற்றுள்ளன.  

     

    • நேற்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 78,759.40 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
    • இன்று அதையும் தாண்டி 79,396.03 புள்ளிகளில் வர்த்தகமாகி உச்சத்தை எட்டியுள்ளது.

    மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் கடந்த சில தினங்களாக ஏறுமுகமாக இருந்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று சென்செக்ஸ் 78,759.40 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இதுதான் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சமாக இருந்தது.

    இந்த நிலையில் இன்று 79 ஆயிரத்தை கடந்த 79,396.03 புள்ளிகளில் வர்த்தகமாகி இது இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது.

    நேற்று சென்செக்ஸ் 78,674.25 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 78,758.67 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்றைய வர்த்தகம் முடிவடைவதற்கு சற்றுமுன் 3.15 மணியளவில் 79,396.03 புள்ளிகளை எட்டியது. அதன்பின் சற்று குறைந்து 79,243.18 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று குறைந்த பட்சமாக 78,467.34 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    நிஃப்டி

    அதேபோல் இந்திய பங்கு சந்தை நிஃப்டியும் இன்று இதுவரை இல்லாத வகையில் 24,087.45 புள்ளிகளை எட்டி வர்த்தகம் ஆனது. நேற்று 23,868.80 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,881.55 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்றைய குறைந்த வர்த்தகம் 23,805.40 புள்ளிகள் ஆனது.

    மக்களவை தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியான அடுத்த இரண்டு நாட்கள் மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) மற்றும் இந்திய பங்குச் சந்தை (நிஃப்டி) உயர்வை சந்தித்தன.

    வாக்கு எண்ணிக்கை நாளன்று பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டதால் கடுமையான சரிவை சந்தித்தன. அதன்பின் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்கும் என உறுதியான பிறகு பங்குச் சந்தை உயர்ந்த வண்ணம் உள்ளது.

    • ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், அல்ட்ரெ டெக் சிமெண்ட் ஏற்றம் கண்டன.
    • மகிந்த்ரா அண்டு மகிந்த்ரா, டாடா ஸ்டீல், டெக் மகிந்த்ரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் பங்குகள் சரிவை சந்தித்தன.

    மக்களவை தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியான அடுத்த இரண்டு நாட்கள் மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) மற்றும் இந்திய பங்குச் சந்தை (நிஃப்டி) உயர்வை சந்தித்தன.

    வாக்கு எண்ணிக்கை நாளன்று பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டதால் கடுமையான சரிவை சந்தித்தன. அதன்பின் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்கும் என உறுதியான பிறகு பங்குச் சந்தை உயர்ந்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) மற்றும் இந்திய பங்குச் சந்தை (நிஃப்டி) ஆகியவை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்வை சந்தித்து வர்த்தகமானது.

    சென்செக்ஸ்

    மும்பை பங்கு சந்தை வர்த்தகம் நேற்று 78,053.52 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 78,094.02 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல உயர்ந்து வண்ணம் இருந்தது. மதியம் 3 மணியளவில் 78,759.40 புள்ளிகளை தொட்டு வர்த்தகம் ஆனது. இது இதுவரை இல்லாத உச்சமாகும். அதன்பின் சற்று குறைந்து வர்த்தகம் சென்செக்ஸ் 78,674.28 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று 0.80 சதவீதம் உயர்ந்தது.

    நிஃப்டி

    அதேபோல் இந்திய பங்கு சந்தை நிஃப்டியும் இதுவரை இல்லாத அளவிற்கு 23,889.90 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. நேற்றைய வர்த்தகம் நிஃப்டி 23721.30 புள்ளிகளுடன் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,723.10 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது.

    சற்று ஏற்ற இறக்கம் கண்ட நிலையில் புதிய உச்சமான 23,889.90 புள்ளிகளில் வர்த்தகமாகி 23,868.80 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது.

    30 சென்செக்ஸ் நிறுவனங்களில் ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், அல்ட்ரெ டெக் சிமெண்ட், சன் பார்மா, அதானி போர்ட், ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, பஜாஜ் பினான்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் மிகப்பெரிய அளவில் உயர்வை கண்டன.

    மகிந்த்ரா அண்டு மகிந்த்ரா, டாடா ஸ்டீல், டெக் மகிந்த்ரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    ஆசிய மார்க்கெட்டுகளான சியோல், டோக்கியோ, ஷாங்காள், ஹாங் காங் மார்கெட்டுகளும் இன்று உயர்ந்து காணப்பட்டன.

    • கருத்துக் கணிப்பு அடுத்த நாளில் மும்பை பங்குச் சந்தை தாறுமாறாக எகிறியது.
    • பாஜக தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகியதால் வாக்கு எண்ணிக்கை நாளில் தலைகீழாக இறங்கியது.

    இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்போது மும்பை பங்கு சந்தை, இந்திய பங்கு சந்தைகளில் ஏற்றம் இறக்கம் காணப்படும்.

    நிலையான ஆட்சி அமைகிறதா? நிலையறற ஆட்சி அமைகிறதா? என்பதை கருத்தில் கொண்டு முதலீட்டார்கள் முதலீடு செய்வார்கள். முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுத்துக் கொள்வார்கள்.

    அதேபோன்றுதான் கடந்த வாரம் சனிக்கிழமை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது. அதில் பிரதமர் மோடி மீண்டும் பதவி வகிப்பார் என தகவல் வெளியானது.

    இதனால் திங்கட்கிழமை (ஜூன் 3-ந்தேதி) காலை 9.15 மணிக்கு மும்பை பங்கு சந்தை தொடங்கியதும் சென்செக்ஸ் புள்ளிகள் தாறுமாறுமாக ஏறி வர்த்தகம் ஆனது.

    வெள்ளிக்கிழமை மும்பை பங்கு சந்தை வர்த்தகம் 73,961.31 புள்ளிகளுடன் முடிவடைந்தது. திங்கட்கிழமை காலை அதாவது ஜூன் 3-ந்தேதி காலை சுமார் 1600 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் தொடங்கியது. அன்றைய தினம் 46,468.78 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகம் முடிவடைந்தது. இதனால் முதலீடு செய்தவர்களுக்கு சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாக கூறப்பட்டது.

    செவ்வாய்க்கிழமை அதாவது ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும். பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலை நிலவியதால் மும்பை பங்கு சந்தை வர்த்தகம் பாதாளத்திற்கு சென்றது. அன்றைய தினம் சுமார் 4 ஆயிரம் சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

    76468.78-ல் இருந்து 72079.05-க்கு இறங்கியதால் முதலீட்டார்கள் சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் இழந்தனர் எனத் தகவல் வெளியானது. இது மிகப்பெரிய மோசடி. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தது.

    பின்னர் பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும், கூட்டணி கட்சிகளுடன் நிலையான ஆட்சி அமைக்கப் போவதாகவும், பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார் எனவும் உறுதியான தகவல் வெளியானது.

    அத்துடன் ஆர்பிஐ வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி உயர்த்தப்படாது. இந்தியாவின் ஜிடிபி அதிகரிக்கும் எனத் தெரிவித்தது. இதனால் மும்பை பங்கு சந்தை வர்த்தகம் சரிவில் இருந்து மீண்ட்டது.

    5-ந்தேதி 3 சதவீதம் உயர்ந்து 74,382 புள்ளியுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றும் ஏறுமுகமாக இருந்து 75,074 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இன்று காலை 75,031 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. பின்னர் சென்செக்ஸ் புள்ளிகள் ஏறிக்கொண்டு இருந்தது. இறுதியாக 76,606 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று அதிகபட்சமாக 76,790.63 சென்செக்ஸ் புள்ளிகளில் வர்த்தம் ஆனது. இதுதான் இதுவரை இல்லாத அளவிலான உச்சமாகும்.

    • தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
    • நிஃப்டி 700.32 புள்ளிகளை இழந்து 22633.12-ல் தடுமாறி வருகிறது.

    மக்களவைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்திய தேசிய ஜனநாயகக்கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

    இந்த நிலையில் முடிவுகள் குறித்து நிலையான யூகத்திற்கு வர முடியாததால் தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.

    இறக்கத்துடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை சென்செக்சில் 2303.45 புள்ளிகளை இழந்து 74275.46 இறக்கத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் நிஃப்டி 700.32 புள்ளிகளை இழந்து 22633.12-ல் தடுமாறி வருகிறது.

    மேலும் இன்றைய பங்குச்சந்தை முடிவில் 3000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மும்பை பங்குச் சந்தை முதன்முறையாக 75,499.91 புள்ளிகளை தொட்டுள்ளது.
    • இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 23 ஆயிரத்தை நெருங்கியது.

    மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகம் நேற்று 74.221.06 சென்செக்ஸ் புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு வர்த்தகம் 74.253 சென்செக்ஸ் புள்ளிகளுடன் தொடங்கியது.

    நேரம் செல்லசெல்ல வர்த்தகத்தின் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து கொண்டே சென்றது. மதியம் 3.15 மணியளவில் வர்த்தகம் 75,499.91 புள்ளியை தொட்டது. மும்பை பங்கு சந்தையில் இதுவரை இந்த உயரத்தை வர்த்தகம் தொட்டது கிடையாது.

    முதன்முறையாக 75,499.91 புள்ளிகளை தொட்டுள்ளது. இன்று குறைந்தபட்சமாக 74,158.35 சென்செக்ஸ் புள்ளிகளில் வர்த்தகமானது. அதன்பின் உச்சத்தை எட்டியது. நேற்றைய முடிவில் இருந்து கணக்கிடும்போது மும்பை பங்குச்சந்தை வர்த்தம் 1196.98 புள்ளிகள் அதிகரித்தது.

    அதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 23 ஆயிரத்தை நெருங்கியது. இன்று அதிகபட்சமாக நிஃப்டி 22,993.60 புள்ளிகளில் வர்த்தகமானது. 22,967.65 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது.

    மகிந்திரா அண்டு மகிந்திரா, லார்சன் அண்டு டூர்போ, ஆக்சிஸ் பேங்க், மாருதி, அல்ட்ராடெக் சிமென்ட், இந்துஸ்இந்த் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பாரதி ஏர்டெல், ஐசிஐசி பேங்க், டைட்டன், டாட்டா கல்சல்டன்சி சர்வீசஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டட்ரிஸ் பங்குகள் மிகப்பெரிய அளவில் உயர்வை கண்டன.

    சன் பார்மா, பவர்கிரிட், என்டிபிசி பங்குகள் சரிவை சந்தித்தன.

    மார்ச் 31 வரையிலான நிதியாண்டில் அரசுக்கு 2.1 லட்சம் கோடி ரூபாய் பங்கு ஆதாயம் (ஈவுத்தொகை) கொடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது பட்ஜெட் எதிர்பார்ப்பை விட இரண்டு மடங்காகும். வரவிருக்கும் அரசின் வருவாய் உயர்வுக்கு இது உதவியாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. இதனால் பங்குச்சந்தையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    புதன்கிழமையை பொறுத்தவரையில் ஆசிய பங்குசந்தைகளில் சியோல் பங்கு சந்தை ஏற்றத்தில் முடிவடைந்தது. ஷாங்காய், ஹாங்காங் இறக்கத்தில் முடிவடைந்தது. ஐரோப்பிய மார்க்கெட்டுகள் ஏறக்குறைய ஏற்றத்தில்தான் இருந்தது.

    • அதிகபட்சமாக அதானி கிரீன் எனெர்ஜி நிறுவன பங்குகள் 13% சரிவடைந்துள்ளது
    • 2024-ம் ஆண்டில் அதானி கிரீன் எனெர்ஜி மிக அதிக அளவில் சரிவை சந்தித்த நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது

    தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 338 சரிந்து, 21,997 புள்ளிகளுடனும், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 906 புள்ளிகள் சரிந்து 72,761 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்நிலையில், அதானி குழும நிறுவன பங்குகள் இன்று ஒரே நாளில் ₹90,000 கோடி சரிவை கண்டுள்ளது. அதிகபட்சமாக அதானி கிரீன் எனெர்ஜி நிறுவன பங்குகள் 13% சரிவடைந்துள்ளது. 2024-ம் ஆண்டில் அதானி கிரீன் எனெர்ஜி மிக அதிக அளவில் சரிவை சந்தித்த நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது.

    அதானி எண்டர்பிரைசஸ் 5.5% சரிவையும், அதானி போர்ட்ஸ் 5.3% சரிவையும் கண்டுள்ளது. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், என்டிடிவி மற்றும் அதானி வில்மர் ஆகியவற்றின் பங்குகள் 4 முதல் 7 சதவீதம் வரை சரிவை சந்தித்தன.

    இதனால், அதானி குழுமத்தின் பங்குகள் ஒட்டுமொத்தமாக ரூ.90,000 கோடியை இழந்துள்ளது. இது அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மூலதனமான ரூ. 15.85 லட்சம் கோடியில் 5.7%. ஆகும்.

    • நிஃப்டி 22,115 எனும் புதிய உயரத்தை எட்டியது
    • சென்செக்ஸ் 73,402 எனும் புதிய உயரத்தை எட்டியது

    ஜனவரி 15, இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்தது.

    பங்கு சந்தையில் பதிவு பெற்ற முக்கிய நிறுவனங்களான ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் ஆகியவற்றின் பங்குகள் உயர்வை தொட்டன.

    நிறுவனங்களின் நம்பிக்கையூட்டும் காலாண்டு வருவாய், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு, நேர்மறையான உலக பொருளாதார குறியீடுகள், மக்களவை தேர்தலுக்கு பிறகு நிலையான ஆட்சி அமைய கூடிய சாத்தியக்கூறு உள்ளிட்டவை பங்கு சந்தையின் ஏற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

    தேசிய பங்கு சந்தையின் (NSE) குறியீட்டு எண்ணான நிஃப்டி (Nifty), 22,053 என தொடங்கி முதல் முறையாக 22,115 எனும் புதிய உயரத்தை எட்டி, 22,097 எனும் அளவில் நிறைவடைந்தது.

    மும்பை பங்கு சந்தையின் (BSE) குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex), 73,049 என தொடங்கி முதல் முறையாக 73,402 எனும் புதிய உயரத்தை எட்டி 73,327 எனும் அளவில் நிறைவடைந்தது.

    இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 3 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சந்தையில் முதலீடு சுமார் ரூ.82 லட்சம் கோடியாக அதிகரித்தது
    • 5 பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபம் தருவதில் முன்னிலை வகித்தன

    கடந்த 2023ல் இந்திய பங்கு சந்தை சுமார் 20 சதவீதம் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை தந்தது.

    சந்தை மூலதன மதிப்பின்படி அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் நாடுகளின் பங்கு சந்தைக்கு அடுத்த இடத்தில் இந்தியா உருவெடுத்தது.

    மியூச்சுவல் ஃபண்டுகளின் பெருக்கம், அயல்நாட்டு முதலீடு அதிகரிப்பு, பொருளாதார நிலையில் வளர்ச்சி, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு உள்ளிட்டவை இதற்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன.

    சந்தை முதலீடு சுமார் ரூ.82 லட்சம் கோடி எனும் அளவில் அதிகரித்தது.

    2023ல் சென்செக்ஸ் குறியீட்டில் 5 பங்குகள் மிக அதிக லாபம் ஈட்டி தந்தன.

    பெருமளவு உயர்வை கண்ட பங்குகள்:

    1. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) - 102 சதவீதம்

    2. என்டிபிசி லிமிடெட் (NTPC) - 96 சதவீதம்

    3. லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் (L&T) - 69 சதவீதம்

    4. பவர் க்ரிட் கார்ப்பரேஷன் (Power Grid) - 55 சதவீதம்

    5. அல்ட்ரா டெக் சிமென்ட் (Ultra Tech Cement) - 51 சதவீதம்

    பங்குகளின் விலை, சந்தை நிலவரத்தை பொறுத்து மாறுபடும் என்பதால் தகுந்த பங்கு சந்தை வல்லுனர்களின் ஆலோசனைப்படி பங்குகளில் முதலீடு செய்து வருவது முதலீட்டாளர்களுக்கு பயன் தரும் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

    • விப்ரோ, இன்போசிஸ், டாடா கல்சல்டன்சி சர்வீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் போன்றவை ஏற்றம் கண்டன.
    • மகிந்திரா அண்டு மகிந்திரா, மாருதி, ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யுனிலிவர் போன்றவை சரிவை சந்தித்தன.

    மும்பை பங்குச்சந்தை கடந்த சில தினங்களாக உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் சிறிது நேரத்தில் மளமளவென உயர்ந்து 71,913.07 புள்ளியில் வர்த்தகமானது. மும்பை பங்கு சந்தையில் இந்த உச்சம் இதுவரை இல்லாததாகும். நேற்று 71.437.19 புள்ளிகள் முடிவடைந்து, இன்று காலை 71,647.66 புள்ளிகளில் தொடங்கியது.

    இதுபோல் இந்திய பங்கு சந்தை நிஃப்டி இன்று காலை 138.8 புள்ளிகள் உயர்ந்து 21,591.90-ல் வர்த்தகமானது. இதுவும் புதிய உச்சமாகும். நேற்று 21453.10 புள்ளிகளில் முடிவடைந்து இன்று காலை 21,477.65 புள்ளிகளில் தொடங்கியது.

    விப்ரோ, இன்போசிஸ், டாடா கல்சல்டன்சி சர்வீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, என்.டி.பி.சி, மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்றவை ஏற்றத்தை கண்டன.

    மகிந்திரா அண்டு மகிந்திரா, மாருதி, ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யுனிலிவர் போன்றவை சரிவை சந்தித்தன.

    ஆசியாவில் ஷாங்காய் பங்கு சந்தை சரிவை சந்தித்த போதிலும் சியோர், டோக்கியோ, ஹாங்காங் போன்ற சந்தைகள் உயர்ந்து காணப்பட்டன. 

    • அந்நிய முதலீட்டாளர்கள் பெறுமளவில் இந்திய பங்குகளில் முதலீடு செய்கின்றனர்
    • முதல் முறையாக மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் 70 ஆயிரத்தை தாண்டியது

    கோவிட் பெருந்தொற்று பரவலை தடுக்க கொண்டு வரப்பட்ட ஊரடங்கு காலகட்டத்தில் பலருக்கு தொழில் முடக்கமும் வேலை இழக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் வருவாயை அதிகரிக்க பலர் இந்திய பங்கு சந்தைகளில் பணத்தை முதலீடு செய்ய தொடங்கினர்.

    2020 வரை சீரான அளவில் இருந்து வந்த முதலீட்டாளர் எண்ணிக்கை, அதற்கு பிறகு அதிகரிக்க தொடங்கியது. இதனால் பங்கு சந்தையில் பல முன்னணி பங்குகள் அதிக விலைக்கு வர்த்தகம் ஆக தொடங்கி தற்போது வரை முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

    உலகளாவிய பொருளாதார மந்த நிலை, சீன பொருளாதார சரிவு, அமெரிக்க-ரஷிய உறவில் சீர்கேடு, ரஷிய-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர் என பல காரணிகள் இருந்தாலும் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய அந்நிய முதலீட்டாளர்களும், இந்திய முதலீட்டாளர்களும் தொடர்ந்து விருப்பம் காட்டி வருகிறார்கள்.

    கடந்த மாதம், 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மூன்றில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், தெலுங்கானாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் வென்றது.

    இப்பின்னணியில், வார முதல் நாளான இன்று இந்திய பங்கு சந்தையில், வர்த்தக துவக்கத்திலேயே மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex) 69,825 எனும் அளவில் வர்த்தகமானது.

    சிறிது நேரத்தில் முதல் முறையாக 70,048 எனும் புதிய உச்சத்தை தொட்டது.

    கடந்த வாரம் மத்திய ரிசர்வ் வங்கி அடுத்த காலாண்டிற்கான இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த தங்கள் கணிப்பை அதிகரித்து அறிக்கை வெளியிட்டது. இத்துடன் உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதும், இந்திய பொருளாதாரத்தின் வலுவான உள்கட்டமைப்பும், இந்திய தொழில் நிறுவனங்களில் நிகர லாபம் அதிகரித்திருப்பதும் பங்கு சந்தையின் உயர்வுக்கு காரணங்களாக கூறப்படுகிறது.

    • திங்கட்கிழமை மும்பை பங்கு சந்தை சரிவை சந்தித்தது
    • நேற்றும் இன்றும் உயர்வை சந்தித்துள்ளது

    ஹமாஸ்- இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் உலகளவில் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. போர் தொடங்கியதும் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தது.

    நேற்று முன்தினம் மும்பை பங்கு சந்தை, இந்திய பங்கு சந்தையில் சரிவு காணப்பட்டது. இந்த சரிவு இந்த வாரம் தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், நேற்று வர்த்தகம் உயர்ந்தே காணப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை மும்பை பங்கு சந்தை தொடங்கியதும் வர்த்தகம் 300 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.

    நேற்று மும்பை பங்கு சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 66,079.36 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை வர்த்தகம் சென்செக்ஸ் 66,376.42 புள்ளிகளுடன் ஆரம்பமானது. அதிகபட்சமாக 66,571.98 புள்ளிகள் வர சென்றது. குறைந்த பட்சமாக 66,299.79 புள்ளிகளுக்கு இறங்கியது.

    அதேபோல் நிஃப்டியும் தொடக்கத்தில் உயர்வை சந்தித்தது நேற்று 19,689.85 புள்ளிகளுடன் நிறைவடைந்த, இந்திய பங்கு சந்தை நிஃப்டி வர்த்தகம் 19,767.00 புள்ளிகளுடன் தொடங்கியது. தற்போது 19,805.05 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது. அதிகபட்சமாக 19,832 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 19,756.95 வர்த்தகமானது.

    மத்திய கிழக்கு பகுதியில் இந்த சண்டை மிகப்பெரிய அளவில் நெருக்கடியாக மாறாது, எண்ணெய் விலை உயரும் என்கிற நம்பிக்கையில் இந்த உயர்வு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

    ஆசியாவின் ஜப்பான், சீனா, ஹாங்காங் பங்கு சந்தைகளும் உயர்வை கண்டுள்ளன. நேற்று ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா சந்தைகளும் உயர்வுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

    ×