என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "share market"

    • தனது கடைசி நாட்களை அங்கேயே கழித்த அவர் சமீபத்தில் இறந்தார்.
    • தனது தாத்தாவின் வீட்டை சுத்தம் செய்யும் போது, ​​குப்பைத் தொட்டியில் பங்குச் சான்றிதழ்கள் கிடைத்துள்ளன.

    குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டத்தின் உனா கிராமத்தைச் சேர்ந்த சவ்ஜி படேல், டையூவில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக பணியாற்றினார்.

    சவ்ஜி படேலின் தந்தைக்கு அவரது சொந்த கிராமத்தில் ஒரு வீடு இருந்தது. வயதான காலத்தில் தனது சொந்த கிராமத்திற்குச் சென்ற சவ்ஜி படேல், தனது கடைசி நாட்களை அங்கேயே கழித்த அவர் சமீபத்தில் இறந்தார்.

    இறப்பதற்கு முன்பு தனது பேரன் தனது சொத்திற்கு வாரிசாக இருப்பார் என்று ஒரு உயில் எழுதியிருந்தார்.

    சவ்ஜி படேலின் மகனும் டையூவில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிகிறார். இந்த சூழலில், சவ்ஜி படேலின் பேரன் சமீபத்தில் உனா கிராமத்திற்குச் சென்றார்.

    தனது தாத்தாவின் வீட்டை சுத்தம் செய்யும் போது, குப்பைத் தொட்டியில் பங்குச் சான்றிதழ்கள் கிடைத்துள்ளன. அவற்றை ஆன்லைனில் சரிபார்த்தபோது, அவற்றின் மதிப்பு ரூ. 2.5 கோடி என தெரியவரவே உற்சாகத்தில் மூழ்கினார்.

    ஆனால் இதை அறிந்த இளைஞனின் தந்தையும் தனது தந்தையின் பங்கில் தனக்கு தான் உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.

    தனது தாத்தா முழு சொத்தையும் தனக்கு உயில் எழுதிக் கொடுத்ததால், இந்தப் பங்குகளும் தன்னுடையவை என்று பேரன் வாதிட்டார்.

    பங்குகளின் உரிமைக்காக தந்தை மற்றும் மகன் இருவரும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. 

    • நடிகர் காளி வெங்கட் இந்த விழிப்புணர்வு வீடியோவில் நடித்துள்ளார்.
    • பொது மக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.

    ஆன்லைன் பங்கு சந்தை மோசடி தொடர்பாக சென்னை காவல்துறை விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    பொது மக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.

    நடிகர் காளி வெங்கட் இந்த விழிப்புணர்வு வீடியோவில் நடித்துள்ளார்.

    இந்த வீடியோவை சென்னை காவல்துறை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அத்துடன், ஆன்லைன் பங்கு சந்தை மோசடியில் இருந்து பொது மக்கள் விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 511.38 புள்ளிகள் சரிவை சந்தித்தது.
    • இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 140.50 புள்ளிகள் சரிவை சந்தித்தது.

    இஸ்ரேல்- ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியல் பதற்றமான நிலை உருவாகியுள்ளது. ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் உலகளவில் எரிபொட்களின் விலை கடுமையாக உயரும் என அஞ்சப்படுகிறது.

    இந்த நிலையில் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தக முடிவில் 511.38 புள்ளிகள் சரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 82,408.17 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று 700 புள்ளிகள் சரிவுடன் 81,704.07 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. குறைந்த பட்சமாக 81,476.76 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 82,169.67 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 511.38 புள்ளிகள் சரிந்து 81,896.79 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி இன்றைய வர்த்தகத்தில் 140.50 புள்ளிகள் சரிவை சந்தித்தது. கடந்த வெள்ளிக்கிழமை நிஃப்டி 25,112.40 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் 75 புள்ளிகள் சரிந்து 24,939.75 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்த பட்சமாக 24,824.85 புள்ளிகலும், அதிக பட்சமாக 25,057.00 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 140.50 புள்ளிகள் சரிவடைந்து 24,971.90 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    ஹெச்.சி.எல்.டெக், இன்போசிஸ், எல் அண்டு டி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, இந்துஸ்தான் யுனிலிவர், ஐடிசி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மாருதி நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

    பாரத் எலக்ட்ரானிக்ஸ், பஜாஜ் பைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.

    • மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 320.70 புள்ளிகள் உயர்ந்தன.
    • இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 81.15 புள்ளிகள் உயர்ந்தன.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி ஆகியவை கடந்த இரண்டு நாட்களாக சரிவை சந்தித்தன. இந்த நிலையில் இன்று சென்செக்ஸ் 320.70 புள்ளிகளும், நிஃப்டி 81.15 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

    நேற்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் 81,312.32 புள்ளிகளாக இருந்தது. இன்று காலை சுமார் 270 புள்ளிகள் உயர்வுடன் 81,591.03 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிக பட்சமாக 81,816.89 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 81,106.98 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 320.70 (0.39%) புள்ளிகள் உயர்ந்து 81,633.02 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 24,752.45 புள்ளியாக இருந்தது. இன்று காலை சுமார் 73 புள்ளிகள் உயர்வுடன் 24,825.10 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிக பட்சமாக 24,892.60 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 24,677.30 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 81.15 (0.33%) உயர்ந்து 24,833.60 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    நேற்றைய முன்தினம் (செவ்வாய்க்கிழமை) வர்த்தகத்தில் சென்செக்ஸ் 624.82 புள்ளிகளும், நிஃப்டி 174.95 புள்ளிகளும் சரிவை சந்தித்தன.

    நேற்று (புதன்கிழமை) மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 239 புள்ளிகளும், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 73.75 புள்ளிகளும் சரிவை சந்தித்தன.

    • அல்ட்ரா சிமெண்ட் (22.1 சதவீதம்), ஐடிசி (2.01 சதவீதம்), டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி பங்குகள் சரிவு.
    • சன் பார்மா, அதானி போர்ட்ஸ், நெஸ்ட்லே, ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் ஏற்றம் கண்டன.

    இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 624.82 புள்ளிகளும், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் 174.95 புள்ளிகளும் சரிந்தன.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 82,176.45 புள்ளிகளாக இருந்தது. இன்று காலை 130 புள்ளிகள் குறைந்து 82,038.20 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் சுமார் 1050 புள்ளிகள் வரை சரிவை சந்தித்தது. பின்னர் மெல்லமெல்ல ஏற்றம் கண்டது. இன்று அதிக பட்சமாக 82,410.52 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 81,121.70 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 624.82 (0.76%) புள்ளிகள் சரிந்து 81,551.63 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 25,001.15 புள்ளியாக இருந்தது. இன்று காலை 5 புள்ளிகள் குறைந்து 24,956.65 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. பின்னர் 295 புள்ளிகள் வரை குறைந்து, குறைந்த பட்சமாக 24,704.10 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. அதன்பின் கடகடவென உயர்ந்தது. அதிபட்சமாக 25,062.90 புள்ளிகளில் வர்த்தகமானது. இறுதியாக 174.95 (0.70%) புள்ளிகள் சரிந்து 24,826.20 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    அல்ட்ரா சிமெண்ட் (22.1 சதவீதம்), ஐடிசி (2.01 சதவீதம்), டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்.சி.எல். டெக், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிசிஐ வங்கி பங்குகள் சரிவை சந்தித்தன.

    இந்தூஸ்இந்த் வங்கி, சன் பார்மா, அதானி போர்ட்ஸ், நெஸ்ட்லே, ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் ஏற்றம் கண்டன.

    • சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் சரிவை சந்தித்தது.
    • நிஃப்டி 42.30 புள்ளிகள் சரிவை சந்தித்தது.

    சென்செக்ஸ் 200.15 புள்ளிகள், நிஃப்டி 42.30 புள்ளிகள் சரிவுடன் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 82,530.74 புள்ளியாக இருந்தது. இன்று காலை 82,392.63 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்று குறைந்த பட்சமாக 82,146.95 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 82,514.81 புள்ளிகளிலும வர்த்தகமானது. இறுதியாக 200.15 புள்ளிகள் சரிந்து 82,330.59 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 25,062.10 புள்ளியாக இருந்தது. இன்று காலை 25,064.65 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்த பட்சமாக 24,953.05 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 25,070.00 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 42.30 புள்ளிகள் சரிந்து 25,019.80 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    பாரதி ஏர்டெல் நிறுவன பங்கு இன்று 2.81 சதவீதம் சரிவை சந்தித்தது.

    ஹெச்.சி.எல். டெக், எஸ்பிஐ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் பின்சர்வ், எல் அண்டு டி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டைட்டன் நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.

    இந்துஸ்தான் யுனிலிவர், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, டாட்டா மோட்டார்ஸ், என்.டி.பி.சி. நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.

    ஆசிய மார்க்கெட்டுகளில் ஜப்பானின் Nikkei 225 index, ஷாங்காயின் SSE Composite index, ஹாங் காங்கின் Hang Seng பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. தென்கொரியாவின் Kospi, ஐரேப்பிய பங்குசு் சந்தைகள், அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.

    நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,200.18 புள்ளிகள் உயர்ந்து கடந்த ஏழு மாதங்களில் இல்லாத வகையில் 82,530.74 புள்ளிகளை தொட்டது. அதேபோல் நிஃப்டி 395.20 புள்ளிகள் உயர்ந்து 25,062.10 புள்ளிகளை தொட்டது.

    • சென்செக்ஸ் 1200.18 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
    • டாட்டா மோட்டார்ஸ் நிறுவன பங்கு 4 சதவீதத்திற்கும் மேல் ஏற்றம் கண்டது.

    அமெரிக்கா மற்ற நாடுகள் மீது கடுமையாக வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தை சரிவை எதிர்கொண்டு வந்தது. பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதனால் பங்குச் சந்தை மெல்ல மெல்ல ஏற்றம் கண்டன.

    கடந்த வாரம் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததால் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட ஒப்பந்தம் ஏற்பட்டது.

    அதேவேளையில் அமெரிக்கா சீனா மீது விதித்த கடுமையான பரஸ்பர வரியை வெகுவாக குறைத்துள்ளது. இவற்றுடன் வெளிநாட்டு நிதிகள் மற்றும் முதலீட்டார்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியதால் இன்று மதியத்திற்குப் பிறகு பங்குச் சந்தையில் அதிக அளவு ஏற்றம் காணப்பட்டது.

    இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 1200.18 புள்ளிகளும், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 395.20 புள்ளிகளும் உயர்ந்தன.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 81,330.56 புள்ளிகளாக இருந்து. இன்று காலை 81,354.43 புள்ளிகளில் தொடங்கியது. குறைந்த பட்சமாக 80,762.16 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 82,718.14 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 1,200.18 புள்ளிகள் உயர்ந்து 82,530.74 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 24,666.90 புள்ளியாக இருந்தது. இன்று காலை 24,694.45 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. குறைந்த பட்சமாக 24,494.45 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 25,116.25 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 395.20 புள்ளிகள் உயர்ந்து நிஃப்டி 25,062.10 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் 30 நிறுவன பங்குகளை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இதில் 29 நிறுவன பங்குகள் இன்று ஏற்றம் கண்டன. டாட்டா மோட்டார்ஸ் நிறுவன பங்கு 4 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் கண்டது.

    இந்தூஸ்இந்த் வங்கி பங்கு மட்டும் சரிவை சந்தித்தது.

    • இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது
    • சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை தலா 2.75% உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.

    இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் அபாயத்தால் கடந்த வாரத்தின் இறுதிநாளில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி ஆகியவை தலா 1% வரை சரிவை சந்தித்தது.

    இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டதால் இன்று காலை முதல் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை தலா 2.75% உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 79,454.47 ஆக இருந்தது. இன்று காலை சுமார் 2145 புள்ளிகள் சரிந்து 81.600 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 24,008 புள்ளியாக இருந்தது. இன்று காலை 667 புள்ளிகள் சரிந்து 24,675 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 

    • நேற்றிரவு இந்தியா- பாகிஸ்தான் இடையே கடும் டிரோன் தாக்குதல் நடைபெற்றது.
    • போர் பதற்றம் காரணமாக பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளன.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று பாகிஸ்தான் இந்தியாவை நோக்கி சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்தியா அவைகளை நடுவானில் இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இந்தியாவும் பதிலுக்கு டிரோன் தாக்குதல் நடத்தியது.

    இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி ஆகியவை தலா 1% வரை சரிவை சந்தித்துள்ளது.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 80,334.81 ஆக இருந்தது. இன்று காலை சுமார் 660 புள்ளிகள் சரிந்து 78,968.34 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. குறைந்தபட்சமாக 78,968.34 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 80,032.93 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 880.34 புள்ளிகள் (1.10 சதவீதம்) சரிந்து 79,454.47 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 24,273.80 புள்ளியாக இருந்தது. இன்று காலை 338.05 புள்ளிகள் சரிந்து 23,935.75 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக 23,935.75 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 24,164.25 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 265.80 புள்ளிகள் சரிந்து (1.10 சதவீதம்) 24,008.00 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பஜாஜ் பின்செர்வ், அதானி போர்ட்ஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    மார்ச் மாதம் வரையிலான 4ஆவது காலாண்டில் 871 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக அறிக்கை வெளியிட்டிருந்து டைட்டன் நிறுவனத்தின பங்கு சதவீதம் வரை உயர்ந்தது. அதேபோல் லார்சன் அண்டு டூர்போ நிறுவன பங்கும் 4 சதவீதம் உயர்ந்தது.

    டாட்டா மோட்டார்கள், எஸ்பிஐ, ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன. ஆசிய மார்க்கெட்டுகளில் பெரும்பாலானவை இன்று ஏற்றம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 155.77 புள்ளிகள் சரிவு.
    • இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 81.55 புள்ளிகள் சரிவு

    இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 155.77 புள்ளிகளும், இந்திய பங்குச் சந்தை குறியீடு 81.55 புள்ளிகளும் சரிவை சந்தித்தன.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 80,796.84 புள்ளியாக இருந்தது. இன்று காலை சுமார் 111 புள்ளிகள் உயர்ந்து 80,907.24 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 80,981.58 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 80,481.03 புள்ளிகளிலும் வர்த்தகமானது.

    இறுதியாக 155.77 புள்ளிகள் குறைந்தது சென்செக்ஸ் 155.77 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 24,461.15 புள்ளியாக இருந்தது. இன்று காலை 39 புள்ளிகள் உயர்ந்து 24,500.75 புள்ளியில் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிக பட்சமாக 24,509.65 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 24,331.80 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 81.55 புள்ளிகள் குறைந்து 24,379.60 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    • மும்பை பங்குச் சந்தை குறியீடு என் சென்செக்ஸ் 294.85 புள்ளிகள் உயர்ந்தது.
    • இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 114.45 புள்ளிகள் உயர்ந்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு என் நிஃப்டி இன்றைய வர்த்தகத்தில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 80,501.99 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் 160 புள்ளிகள் உயர்ந்து 80,661.62 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று அதிக பட்சமாக 81,049.03 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 80,657.71 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 294.85 புள்ளிகள் உயர்ந்து 80,796.84 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 24,346.70 புள்ளிகளில நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 73 புள்ளிகள் உயர்ந்து 24,419.50 புள்ளிகளில் தொடங்கியது. இன்று அதிக பட்சமாக 24,526.40 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 24,400.65 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 114.45 புள்ளிகள் உயர்நத 24,461.15 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    • சென்செக்ஸ் 309.40 புள்ளிகள் உயர்ந்து 77,044.29 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
    • நிஃப்டி 108.65 புள்ளிகள் உயர்ந்து 23,437.20 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் இன்று தொடர்ந்து 3ஆவது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பால் இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது. உலக நாடுகள் எதிர்ப்பால் டிரம்ப் 90 நாட்களுக்கு இந்த வரி விதிப்பை நிறுத்தி வைத்துள்ளார்.

    இதனால் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. நேற்றைய முன்தினம், நேற்றைய வர்த்தக முடிவில் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டிருந்தன. இந்த நிலையில் இன்றும் பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.

    புதிய வெளிநாட்டு முதலீடு, சில்லறை பணவீக்கம் கடந்த ஆறு வருடங்களாக இல்லாத வகையில் குறைந்துள்ளது பங்குச் சந்தை உயர்வுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

     மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் செக்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 76,734.89 ஆக இருந்தது. இன்று காலை சுமார் 260 புள்ளிகள் உயர்ந்து 76,996.78 புள்ளிகள் வர்த்தகம் தொடங்கியது. குறைந்தபட்சமாக 76,543.77 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 77,110.23 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 309.40 புள்ளிகள் உயர்ந்து 77,044.29 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 23,328.55 புள்ளியாக இருந்தது. இன்று காலை 16 புள்ளிகள் உயர்ந்து 23,344.10 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. குறைந்தபட்சமாக 23,273.05 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,452.20 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 108.65 புள்ளிகள் உயர்ந்து 23,437.20 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது.

    ×