என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "local body elections"

    • வழக்கமாக பொங்கல் பண்டிகை அன்று பங்கு சந்தை செயல்படும்
    • நாளை எவ்வித பங்கு வர்த்தகமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே நாளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாநகராட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், நாளை மும்பை மாநகராட்சியில் தேர்தல் நடைபெற உள்ளதால் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை எவ்வித பங்கு வர்த்தகமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக பொங்கல் பண்டிகை அன்று செயல்படும் பங்கு சந்தைக்கு இந்தாண்டு உள்ளாட்சி தேர்தலால் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
    • எதிர்க்கட்சி வேட்பாளர்களை ED, CBI மூலம் மிரட்டி பயமுறுத்துகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் வருகிற 15-ந்தேதி நடக்கிறது. மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், பாஜக கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த அனைவரும் வாபஸ் பெற்றதால், அக்கூட்டணி 68 இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது.

    எதிர்க்கட்சி வேட்பாளர்களை ED, CBI மூலம் மிரட்டி பயமுறுத்தி, அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து வெற்றிகளை விலைக்கு வாங்க பாஜக முயற்சிக்கிறது என்றும் இதனை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்று உத்தவ் சிவசேனா கட்சி காட்டமாக தெரிவித்துள்ளது. 

    • மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
    • உத்தவ் காம்ப்ளே மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் வருகிற 15-ந்தேதி நடக்கிறது. மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. புனே மாநகராட்சியின் 34-வது வார்டுக்கு சிவசேனா சார்பில் உத்தவ் காம்ப்ளே, மச்சிந்திரா தவலே ஆகியோர் போட்டியிட்டனர்.

    அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளரை அறிவிக்க ஏ, பி விண்ணப்பங்களை வழங்கும். இந்த இருவருக்கும் அந்த வார்டில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப கடிதத்தை சிவசேனா கட்சி வழங்கி இருந்தது. இதனால் வேட்பு மனு தாக்கலின்போது வார்டு அலுவலகத்தில் இருவருக்கும் இடைேய கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் உத்தவ் காம்ப்ளே ஆத்திரமடைந்து மச்சிந்திரா தவலேயின் கையில் இருந்த கட்சி வழங்கிய அங்கீகார விண்ணப்ப கடிதத்தை பிடுங்கி கிழித்து வாயில் போட்டு விழுங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிவசேனா வேட்பாளர் உத்தவ் காம்ப்ளே மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, தேர்தல் பணியின் போது அரசு ஊழியரை அவரது கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக உத்தவ் காம்ப்ளே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

    • தேசியவாத கட்சியை உடைத்து சரத் பவாரின் அண்னன் மகன் அஜித் பவார் பாஜகவுடன் கைகோர்த்து துணை முதல்வர் பதவி பெற்றார்.
    • குடும்பம் ஒன்றுபட்டுள்ளது என்று அஜித் பவார் இதை உறுதிப்படுத்தினார்.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசியவாத கட்சியை உடைத்து சரத் பவாரின் அண்னன் மகன் அஜித் பவார் பாஜகவுடன் கைகோர்த்து துணை முதல்வர் பதவி பெற்றார்.

    சமீபத்தில் நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி வெற்றி பெற்றது. மீண்டும் அஜித் பவார் துணை முதல்வர் ஆனார்.

    அங்கு சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டத்தில் பாஜக மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. உள்ளாட்சித் தேர்தல் என்பதால், முதல் கட்டத் தேர்தலிலேயே மகாயுதியில் உள்ள பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தனித்தனியே போட்டியிட்டன.

    2-வது கட்டமாக புனே, பிம்ப்ரி சிஞ்ச்வட் உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில் பிம்ப்ரி–சிஞ்ச்வட் மாநகராட்சி தேர்தலில் சரத்பவார் கட்சியும், எதிரணியில் உள்ள அஜித் பவார் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்ததன் மூலம் குடும்பம் ஒன்றுபட்டுள்ளது என்று அஜித் பவார் இதை உறுதிப்படுத்தினார்.

    பிம்ப்ரி-சின்ச்வாட் எப்போதும் பவார் குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்பட்டது. இந்நிலையில் குடும்பப் பிளவால் வாக்குகள் சிதறுவதைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

    • "நகராட்சியில் LDF தோல்வியடைந்தால், நான் என் மீசையை மழித்துவிடுவேன்" என்று தேர்தலுக்கு முன்பு சபதம் எடுத்தார்.
    • முந்தைய தேர்தல்களில் 12 இடங்களை வென்ற LDF, இந்த முறை ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது.

    கேரளாவில் நடைபெற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 6 மாநகராட்சிகளில் 4 இல் காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது. 

    மேலும் நகராட்சிகளிலிலும் காங்கிரஸ் கூட்டணி (UDF) கணிசமான இடங்களை கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF) அதிக இடங்களில் வென்றுள்ளது. பாஜக திருவனநாதபுரத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    LDF கணிசமான இடங்களில் வென்றாலும் காங்கிரஸ் கூட்டணியை விட பின்தங்கியது பேசுபொருளாகி வருகிறது.

    இந்நிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இடது முன்னணி LDF தொண்டர் ஒருவர் தனது மீசையை சிரைத்துள்ளார்.

    "நகராட்சியில் LDF தோல்வியடைந்தால், நான் என் மீசையை மழித்துவிடுவேன்" என்று தேர்தலுக்கு முன்பு பகிரங்கமாகக் கூறிய பாபு வர்கீஸ், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கூறியது போல் தனது மீசையை மழித்துக் கொண்டார்.

    பத்தனம்திட்டா மாவட்ட பஞ்சாயத்தில் உள்ள 16 இடங்களில் 12 இடங்களை வென்றதன் மூலம் காங்கிரசின் UDF பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

    முந்தைய தேர்தல்களில் 12 இடங்களை வென்ற LDF, இந்த முறை ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது.

    கூடுதலாக, UDF 34 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் ஏழு தொகுதி பஞ்சாயத்துகளில் பெரும்பான்மையைப் பெற்றது.

    • எர்ணாகுளத்தில் உள்ள ஏலூர் பகுதியை சேர்ந்தவர் 46 வயதான சுபாஷ் சந்திரன்
    • கடந்த 2006 இல் நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றபோது குணா குகையில் உள்ள குழிக்குள் தவறி விழுந்துவிட்டார்.

    கேரளாவில் நடைபெற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 6 மாநகராட்சிகளில் 4 இல் காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது.

    மேலும் நகராட்சிகளிலிலும் காங்கிரஸ் கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக ஆளும் இடது முன்னணி கூட்டணி அதிக இடங்களில் வென்றுள்ளது. பாஜக திருவனநாதபுரத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில் 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் பின்னால் உள்ள உண்மைக் கதைக்கு சொந்தக்காரரான சுபாஷ் சந்திரன் ஏலூர் நகராட்சியில் உள்ள 27-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜனநாயக முன்னணி வேட்பாளராக களமிறங்கினார்.

    எர்ணாகுளத்தில் உள்ள ஏலூர் பகுதியை சேர்ந்த 46 வயதான சுபாஷ் சந்திரன், கடந்த 2006 இல் நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றபோது குணா குகையில் உள்ள குழிக்குள் தவறி விழுந்துவிட்டார்.

    அப்போது அவரை நண்பர் ஒருவர் சக நண்பர்கள் உதவியுடன் மீட்டு கொண்டுவந்தார். இதை வைத்து இயக்கப்பட்ட 'மஞ்சும்மல் பாய்ஸ்' பெரு வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் சுபாஷ் சந்திரன் தான் போட்டியிட்ட ஏலூர் நகராட்சி வார்டில் வாக்கு எண்ணிக்கையில் 3-ம் இடத்தை பிடித்து தோல்வியை தழுவினார்.  

    • தடை நீக்கப்பட்டதால் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • காலப்போக்கில் ஆந்திர மாநிலத்தில் கருவுறுதல் விகிதம் குறைந்து விட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 1994-ம் ஆண்டு 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை செய்யப்பட்டது. அவர்களை போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யவும் சட்டம் இயற்றப்பட்டது.

    காலப்போக்கில் ஆந்திர மாநிலத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துவிட்டது. அதே நேரத்தில், முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தற்போது மாநிலத்தில் மொத்த குழந்தைகள் பிறப்பு விகிதம் 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

    ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் வருங்காலத்தில் முதியோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனால் மாநிலங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும்.


    தென் மாநில மக்கள் அதிக அளவில் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்தார்.

    மேலும் ஆந்திர மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை நீக்கப்படும் எனவும் அறிவித்தார்.

    இந்நிலையில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்து நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் செய்ய முன்மொழியப்பட்ட மசோதாக்கள் நேற்று ஆந்திர சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

    தடை நீக்கப்பட்டதால் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் இந்த சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    • வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகாது.
    • அரசின் உத்தரவாதத்தை ஏற்று இதுதொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

    வார்டு மறுவரையறை மற்றும் பட்டியலினத்தவர், பழங்குடியினர், மகளிருக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் குறித்து முடிவு செய்த பிறகே தேர்தல் அறிவிப்பை வெளியிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    அப்போது, "வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகு தான் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

    மேலும், வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அரசின் உத்தரவாதத்தை ஏற்று இதுதொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

    • ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது முருகன் கோட்டைகருங்குளம் பஞ்சாயத்து தலைவர்பதவிக்கு போட்டியிட்டுள்ளார்.
    • தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாாரித்தனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள கோட்டைகருங்குளம் வடிவம்மாள்பட்டியை சேர்ந்தவர் முருகன்(வயது 42). தொழிலாளி.

    இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாாரித்தனர். ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது முருகன் கோட்டை கருங்குளம் பஞ்சாயத்து தலைவர்பதவிக்கு போட்டியிட்டுள்ளார்.

    ஆனால் அதில் அவர் தோல்வி அடைந்துவிட்டார். இதற்காக பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி செலுத்த முடியாததால் மிகவும் மன வருத்தத்துடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே கடன்பிரச்சினை காரணமாக முருகனை அவரது மனைவி திரவுபதி பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் வாழ்வில் வெறுப்படைந்த முருகன் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெற்றி பெற்ற ஆட்டோ டிரைவர் பால்ராஜிடம் வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலர் ராஜம் வழங்கினார்.
    • 148 வாக்குகள் பெற்று நாச்சியார் என்பவர் வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் கண்ணன் வழங்கினார்.

    தென்காசி:

    தமிழகம் முழுவதும் விடுபட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலி பதவியிடங்களுக்கான தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் அம்பை யூனியன், வாகைகுளம் ஊராட்சி 8-வது வார்டுக்கும், சேரன்மகாதேவி யூனியன் உலகன்குளம் ஊராட்சி 1-வது வார்டுக்கும் உறுப்பினர் தேர்வுக்கான தேர்தல் நடந்தது.

    நேற்று காலை வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில் வாகைகுளம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக பால்ராஜ் என்பவர் 70 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பால்ராஜ் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். அவரது வார்டில் மொத்தம் 197 வாக்குகள். ஆனால் அதில் 142 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. அவருக்கு வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலர் ராஜம் வழங்கினார்.

    தென்காசி

    இதேபோல் உலகன்குளம் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினராக ஜெயந்தி என்பவர் 106 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதேபோல் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் மேலப்பாவூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் 4 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 306 வாக்குகள் பதிவான நிலையில் 148 வாக்குகள் பெற்று நாச்சியார் என்பவர் வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் கண்ணன் வழங்கினார். இவர்கள் நாளை மறுநாள்(15-ந்தேதி) பதவி ஏற்கின்றனர்.

    • இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.
    • வெற்றி பெற்றவர்களின் விபரம் அறிவிக்கப்பட்டது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டத்தில் பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர், டி.வாடிப்பட்டி கிராம ஊராட்சி மன்ற 4வது வார்டு உறுப்பினர் மற்றும் சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னஓவுலாபுரம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 3 உள்ளாட்சி மன்ற பதவிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 9 தேதி நடைபெற்று முடிந்தது.

    வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 10 பேர், டி.வாடிப்பட்டி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர், சின்னஓவுலாபுரம் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர் என மொத்தம் 15 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

    வடபுதுப்பட்டியில் 9,379 வாக்காளர்கள், டி.வாடிப்பட்டியில் 126 வாக்காளர்கள், சின்னஓவலாபுரத்தில் 480 வாக்காளர்கள் என மொத்தம் 9,872 வாக்காளர்கள் இருந்த நிலையில் 7510 வாக்குகள் மட்டுமே பதிவானது.

    இந்நிலையில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வாடிப்பட்டி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ரவி, 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    • ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
    • ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி நடந்து முடிந்துள்ளன. இதைப்போல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

    இதில் 3 மனுக்கள் தள்ளுபடியானது. மீதமுள்ள 39 மனுக்கள் ஏற்கப்பட்டன.

    இதில் அந்தியூர் யூனியன் குப்பாண்டம்பாளையம் பஞ்சாயத்து வார்டு–4, நம்பியூர் யூனியன் கெட்டிசெவியூர் பஞ்சாயத்து வார்டு எண்–10, பொலவபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–5.

    பெருந்துறை யூனியன் கருக்குபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–6, சத்தியமங்கலம் யூனியன் உக்கரம் பஞ்சாயத்து வார்டு எண்–4, டி.என்.பாளையம் யூனியன் பெருமுகை பஞ்சாயத்து வார்டு எண்–11,

    கணக்கம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–1, புளியம்பட்டி பஞ்சாயத்து வார்டு எண்–3, தாளவாடி யூனியன் தலமலை பஞ்சாயத்து வார்டு எண்–2 என 9 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    இது தவிர அம்மாபேட்டை யூனியன் சிங்கம்பேட்டை பஞ்சாயத்து வார்டு எண்.2-ல் 2 பேர், பவானி யூனியன் பெரியபுலியூர் பஞ்சாயத்து வார்டு எண்–.3-ல் 4 பேர், பவானிசாகர் யூனியன் தொப்பம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்.–3-ல் 2 பேர், கோபி யூனியன் கோட்டுபுள்ளா ம்பாளையம் பஞ்சாயத்து, வார்டு எண்–1ல் இருவர்,

    மொடக்குறிச்சி யூனியன் 46 புதூர் பஞ்சாயத்து வார்டு எண்.–1-ல் நால்வர், அத்தாணி டவுன் பஞ்சாயத்து வார்டு எண்–.3-ல் 3 பேர், அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்து, வார்டு எண்.–2-ல் 3 பேர் என, 7 பதவிக்கு 20 பேர் போட்டியில் உள்ளனர்.

    நாளை(சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இதை ஒட்டி அதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி நடந்து முடிந்துள்ளன. இதைப்போல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து வரும் 12-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 12-ந் தேதியும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இதன்படி, ஈரோடு அருகே 46 புதூர் 1-வது வார்டு பகுதி, ஆணைக்கல்பாளையம், லக்காபுரம், சோலார், மூலப்பாளையம், ரெயில் நிலையம் ஆகிய பகுதியில் உள்ள 12 டாஸ்மாக் கடைகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அம்மாபேட்டை, அத்தாணி, கோபி, பவானிசாகர், அந்தியூர் பகுதியில் உள்ள, 24 டாஸ்மாக் கடைகளுக்கும் இவ்விரு தினங்கள் விடுமுறை விடுக்கப்படுகிறது.

    ×