என் மலர்
நீங்கள் தேடியது "Shiv Sena"
- 2024 பாராளுமன்ற தேர்தலில் அது பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சவலாக அமையும்.
- ஜனதா தளம் கட்சியை உடைக்க பா.ஜனதா முயற்சி செய்தது.
மும்பை :
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. எனினும் நிதிஷ்குமாருக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இந்தநிலையில் அவர் பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்து ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சி அமைத்து உள்ளார்.
இதுகுறித்து சிவசேனா சாம்னாவில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் மத்திய மந்திரி ஆர்.சி.பி. சிங்கிற்கு பின்னால் இருந்து ஜனதா தளம் கட்சியை உடைக்க பா.ஜனதா முயற்சி செய்தது. இதை உணர்ந்து கொண்ட நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார்.
நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி புயலை உருவாக்கி உள்ளார். இது சூறாவளியாக மாறினால், வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் அது பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சவலாக அமையும். மேலும் இந்த புதிய கூட்டணியில் நிதிஷ்குமார், லாலுபிரசாத் இடையேயான பகை முடிவுக்கு வரும். சிவசேனாவுக்கு எதிராக கலகம் செய்த ஏக்நாத் ஷிண்டே டெல்லிக்கு முன்னால் மண்டியிட்டார். ஆனால் பா.ஜனதா இல்லாமல் வாழ முடியும் என நிதிஷ்குமார் அவருக்கு காட்டி உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
- வருகிற 12-ந்தேதி தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது.
மும்பை
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கவிழ்ந்தது. இதையடுத்து சிவசேனா அதிருப்தி அணி- பா.ஜனதா கட்சியின் கூட்டணி அரசு பதவி ஏற்று சுமார் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 18 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர்.
இதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் 'சாம்னா' பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-
ஒரு வழியாக மந்திரி சபை விரிவாக்கம் நடந்து விட்டது. எங்களது அதிருப்தியாளர்கள் கங்கையில் நீராடி விட்டனர். ஆனால் அவர்கள் செய்த துரோகத்தின் பாவத்தை கழுவ முடியுமா?.
மந்திரிகளுக்கு பதவி ஏற்பு விழாவில் ஒரு தெய்வீக செயலை செய்து வைத்தது போல கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் முகம் பளிச்சிட்டது. மந்திரி சபை விரிவாக்கத்துக்கு முன்னதாக ஏக்நாத் ஷிண்டே 7 தடவை தலைநகர் சென்று டெல்லி முன் தலைகுனிந்துள்ளார்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அவர்களது தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. வருகிற 12-ந் தேதி தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. அதற்கு முன் மந்திரி சபை விரிவாக்கத்தின் அவசரம் ஏன்?.
இதன் பொருள், நீதித்துறை மீது எந்த பயமும் இல்லை என்பது தான். தங்களது விருப்பத்தை நிறைவேற்ற எதையும் செய்யலாம் என்பதை இது காட்டுகிறது. இது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டம் மீது நடத்தப்பட்ட ஜனநாயக படுகொலை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பத்ரா சால் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை கைதுசெய்துள்ளது.
- சஞ்சய் ராவத் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியராக உள்ளார்.
மும்பை:
மும்பையில் பத்ரா சால் என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்தை விசாரணைக்கு அழைத்துச்சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கடந்த 1-ம் தேதி அதிரடியாக கைது செய்தனர்.
இதையடுத்து, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஆகஸ்டு 8-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அமலாக்கத்துறை காவல் இன்று முடிவடைந்த நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே முன் சஞ்சய் ராவத் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சஞ்சய் ராவத்துக்கு ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
- மோடிக்கு ஆதரவாக இருந்தவர் பால் தாக்கரே என சிவசேனா கூறியுள்ளது.
- சிவசேனா 25 ஆண்டுகளாக பா.ஜனதாவை தோளில் சுமந்து வந்தது.
மும்பை :
சிவசேனா 2 ஆக உடைந்து உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என பிரிந்து உள்ளது. கட்சி உடைந்ததற்கு பா.ஜனதா தான் முக்கிய காரணம் என சிவசேனா குற்றம்சாட்டி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சிவசேனா உள்ளிட்ட குடும்ப கட்சிகள் அழிந்துவிடும் என பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா பேசியிருந்தார்.
இந்தநிலையில் 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு பிறகு ஒட்டு மொத்த உலகமே அப்போதைய அந்த மாநில முதல்-மந்திரி மோடிக்கு எதிராக நின்றது. ஆனால் இந்துத்வாவுக்காக மோடிக்கு ஆதரவாக இருந்தவர் பால் தாக்கரே என சிவசேனா கூறியுள்ளது.
இது தொடர்பாக அந்த கட்சியின் 'சாம்னா' பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-
குஜராத் கலவரத்தின் போது அவரது சொந்த கட்சியினரே அவருக்கு ராஜ தர்மத்தை பற்றி யோசனை கூறினர். அந்த நேரத்தில் 'ராஜ தர்மத்தை ஓரமாக வையுங்கள், மோடி மீது கைவைக்க கூடாது. அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க கூடாது' என கூறியவர் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே. குஜராத் கலவரத்திற்கு பிறகு பால் தாக்கரே தான் மோடிக்கு ஆதரவாக நின்றார்.
தற்போது நீங்கள் (பா.ஜனதா) சிவசேனாவை அழிக்க விரும்புகிறீர்கள்?. சிவசேனா 25 ஆண்டுகளாக பா.ஜனதாவை தோளில் சுமந்து வந்தது. இன்று 2 கட்சிகளுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பா.ஜனதா மராட்டியத்தில் பால்தாக்கரேவின் பெயரை பயன்படுத்தி வருகிறது.
பா.ஜனதாவால் சிவசேனாவுடன் மோத முடியாது என்பதால், அவர்களை அமலாக்கத்துறை மூலம் பயம் காட்டி கட்சியை உடைத்து உள்ளனர். உங்களுக்கு அதிகம் பேர் கிடைக்கலாம். ஆனால் பால் தாக்கரேயின் சிவசேனா மீண்டும் வான் உயரத்தை அடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏக்நாத் ஷிண்டே 40 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியை உருவாக்கினார்.
- பா.ஜனதாவுடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார்.
மும்பை :
கடந்த ஜூன் மாத இறுதியில் நடந்த மகாராஷ்டிரா அரசியல் சூறாவளியால் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது.
சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே 40 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியை உருவாக்கினார். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்டு வந்த சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. மேலும் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார்.
இந்தநிலையில் மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
குறிப்பாக ஏக்நாத் ஷிண்டே அணியினர் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்றும், கட்சியின் 'வில் அம்பு' சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தை அடுத்து, இரு தரப்பினரும் வருகிற 8-ந் தேதிக்குள் உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதற்கு எதிராகவும் உத்தவ் தாக்கரே தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஷிண்டே தரப்பு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே, "கட்சி தாவல் தடை சட்டம், கருத்து வேறுபாடுகளுக்கு எதிரான சட்டமாக இருக்க முடியாது. தகுதி நீக்கம் கண்டறியப்படும் வரை, சட்டத்திற்கு புறம்பான செயல் எதுவும் இல்லை" என்று வாதிட்டார்.
உத்தவ் தாக்கரே தரப்பில் ஆஜரான மூத்த வக்கில் கபில் சிபல், "40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் தங்கள் நடத்தை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்படும் நிலையில் உள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் தங்களை உண்மையான சிவசேனா என்று எப்படி உரிமை கோர முடியும்?.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் வேறு அரசியல் கட்சியுடன் இணைவதன் மூலம் மட்டுமே அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணையின் கீழ் தகுதி நீக்கத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும்" என்றார்.
தேர்தல் ஆணையமும் தனது தரப்பு வாதத்தை முன் வைத்தது.
அனைத்து தரப்பு வாதத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மகாராஷ்டிரா அரசியல் குழப்பநிலை தொடர்புடைய மனுக்களை அரசியலமைப்பு சாசன அமர்வுக்கு மாற்றுவதா?, வேண்டாமா? என்பது குறித்த உத்தரவு வருகிற திங்கட்கிழமை பிறப்பிக்கப்படும்.
அதுவரை தங்களையே உண்மையான சிவசேனா என அறிவிக்க கோரும் ஏக்நாத் ஷிண்டேவின் மனு மீது எந்தவித அவசர நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கக்கூடாது. ஏக்நாத் ஷிண்டேவின் மனுவுக்கு பதிலளிக்க உத்தவ் தாக்கரே தரப்பு அவகாசம் கோரினால் அதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவு ஷிண்டே அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
- 1966-ம் ஆண்டு நிறுவப்பட்ட சிவசேனா கட்சி பல்வேறு சரிவுகளை சந்தித்துள்ளது.
- அதிருப்தி அணி பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
மும்பை :
மறைந்த தலைவர் பால் தாக்கரேவால் 1966-ம் ஆண்டு நிறுவப்பட்ட சிவசேனா கட்சி பல்வேறு சரிவுகளை சந்தித்துள்ளது.
சக்திவாய்ந்த தலைவர்கள் பலரும் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.
ஆனால் சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட அதிருப்தி அணி பிரிவு சிவசேனாவுக்கு கடும் பின்னடைவாக அமைந்துள்ளது.
மராட்டியத்தில் ஆட்சியில் இருந்து சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எதிர்ப்பு காரணமாக கவிழ்ந்தது. இந்த அதிருப்தி அணி பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
மேலும் உண்மையான சிவசேனா நாங்கள் தான் என கூறிவரும் அதிருப்தி அணியினர் இதற்காக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
மேலும் வரும் காலத்தில் பா.ஜனதா போன்ற சித்தாந்தம் உள்ள கட்சிகள் மட்டுமே பிழைக்கும், குடும்ப அரசியல் செய்யும் மற்ற கட்சிகள் அழிந்துவிடும் என்று பா.ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா கூறியிருந்தார்.
இதை மேற்கோள் காட்டும் வகையில் நேற்று 'மாதோஸ்ரீ' இல்லத்தில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
சிவசேனாவை பிளவுபடுத்த பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆனால் இப்போது கட்சியை முழுவதும் ஒழித்துக்கட்ட புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தின் வீட்டில் அமலாக்கத்துறை இயக்குனரகம் நடத்திய சோதனை கட்சியை அழிக்கும் அவர்களின் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
சிவசேனா தொடர்பான வழக்கில் எனக்கு நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமலாக்கத்துறை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை கைது செய்து உள்ளது.
- கைதான சஞ்சய் ராவத் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியராக உள்ளார்.
சிவசேனாவின் குரலாக கருதப்படும் சஞ்சய் ராவத் எம்.பி. பத்ரா சால் வழக்கில் சிக்கியது பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
பத்ரா சால் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை கைது செய்து உள்ளது. பத்ரா சால் மோசடி என்றால் என்ன?. இதில் சஞ்சய் ராவத் சிக்கியது எப்படி? என்பது பற்றிய விவரம் வருமாறு:-
மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ளது சித்தார்த் நகர். இது பத்ரா சால் என பரவலாக அழைக்கப்படுகிறது. இங்கு சுமார் 47 ஏக்கர் பரப்பில் 672 குடும்பங்கள் குடிசை வீடுகளில் வசித்து வந்தனர். 2007-ம் ஆண்டு பத்ரா சாலை சீரமைக்க மகாடா நிறுவனம், எச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் கிளை நிறுவனமான குரு ஆஷிசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் எச்.டி.ஐ.எல். நிறுவனத்திற்கு கிடைக்க தொழில் அதிபர் பிரவின் ராவத் உதவி செய்தார். பிரவின் ராவத், சஞ்சய் ராவத்திற்கு நெருக்கமானவர் ஆவார். குரு ஆஷிஸ் நிறுவனத்தின் இயக்குனர்களாக ராகேஷ் வாதவன், சாரங் வாதவன் மற்றும் பிரவின் ராவத் இருந்தனர்.
மகாடா குரு ஆஷிஸ் நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தின்படி அவர்கள் முதலில் குடிசைப்பகுதியில் வசித்த 672 குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும். மீதமுள்ள இடத்தின் ஒரு பகுதியில் மகாடாவுக்கு 3 ஆயிரம் வீடும், 2.8 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் வீடு கட்டி விற்பனை செய்யலாம்.
ஆனால் குரு ஆஷிஸ் நிறுவனம் குடிசைப்பகுதி மக்களுக்கு வீடு கட்டாமல், முதலில் விற்பனை செய்வதற்காக அடுக்குமாடி கட்டிட பணிகளை தொடங்கியுள்ளது. மேலும் வீடு கட்டி தருவதாக கூறி பலரிடம் ரூ.138 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த நிறுவனம் மகாடா கொடுத்த நிலத்தை முறைகேடாக பல்வேறு கட்டுமான அதிபர்களுக்கு ரூ.1,034 கோடிக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பத்ரா சால் குடிசைப்பகுதி மக்களுக்கும் வீடு கட்டி கொடுக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக பத்ரா சால் வழக்கில் ரூ.1,200 கோடி வரை முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் பத்ரா சால் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை பிரவின் ராவத்தை கைது செய்தது. விசாரணையில் அவர் 2008 முதல் 2010-ம் ஆண்டு வரை எச்.டி.ஐ.எல். நிறுவனத்திடம் இருந்து ரூ.112 கோடியை பெற்றது தெரியவந்தது.
இந்த பணத்தை பிரவின் ராவத் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டவர்களுக்கும் கொடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக 2010-ம் ஆண்டு பிரவின் ராவத்தின் மனைவி மாதுரி, சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவுக்கு ரூ.83 லட்சம் வட்டியில்லா கடனாக கொடுத்து இருக்கிறார். இந்த பணத்தில் வர்ஷா தாதரில் வீடு ஒன்றை வாங்கி உள்ளார்.
இதேபோல மோசடி மூலம் கிடைத்த பணத்தில் மாதுரி ராவத், வர்ஷா ராவத், தொழில் அதிபர் சுஜித் பட்கரின் முன்னாள் மனைவி சுவப்னா பட்கா் ஆகியோர் பெயர்களில் அலிபாக், கிம் கடற்கரையில் 8 பிளாட் நிலம் வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறை தாதரில் உள்ள வர்ஷா ராவத்தின் வீடு, அலிபாக்கில் உள்ள நிலம் என ரூ.11 கோடி சொத்துக்களை முடக்கியது.
இந்தநிலையில் தான் இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத்திடமும் அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. மேலும் அவர் பத்ரா சால் மோசடி வழக்கில் நேற்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சஞ்சய் ராவத் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியராக உள்ளார். அவரது எழுத்துக்கள் சிவசேனா தொண்டர்களை கவரும் வகையில் ஆவேசமாக இருக்கும். சிவசேனாவின் குரலாகவே கருதப்படும் இவர் முறைகேடு வழக்கில் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
- சஞ்சய் ராவத் மக்கள், அரசு மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்
மும்பை :
சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத்தின் மும்பை வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சஞ்சய் ராவத் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "எந்த ஊழலிலும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மறைந்த சிவசேனா நிறுவன தலைவர் பாலாசாகேப் பால் தாக்கரே மீது சத்தியம் செய்து கூறுகிறேன்" என தெரிவித்தார்.
இதுமட்டும் இன்றி எதிர்க்கட்சிகள் அவரின் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து நிருபர்களிடம் கூறுகையில், "சஞ்சய் ராவத் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று அறிவித்துள்ளார். அப்படியானால், அவர் விசாரணைக்கு பயப்படுவது ஏன்? அது தொடர்ந்து நடக்கட்டும். நீங்கள் நிரபராதி என்றால் ஏன் பயம்?"
சந்தர்ப்ப சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தால் தான் சிவசேனா அதிருப்தி அணியில் இணைந்ததாக சிவசேனா தலைவர் அர்ஜூன் கோட்கர் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "நாங்கள் அவரை அழைத்தோமா? அமலாக்கத்துறைக்கு பயந்து அல்லது எந்த அழுத்தத்தாலும் எங்களிடமோ அல்லது பா.ஜனதாவுக்கு வரவேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் மந்திரி கிரிஷ் மகாஜன் கூறுகையில், "சஞ்சய் ராவத் மறைந்த பால் தாக்கரேயின் பெயரை தேவையில்லாமல் இந்த பிரச்சினையில் எழுப்பி மத்திய அரசுக்கு எதிராக சிவசேனா தொண்டர்களை தூண்டிவிடுகிறார். அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றால் அவர் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர் மக்கள், அரசு மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்" என்றார்.
மற்றொரு பா.ஜனதா தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கிரித் சோமையா கூறுகையில், "சஞ்சய் ராவத் தற்போது விசாரணையில் இருக்கிறார். அவர் மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. அவர் இப்போது எந்த அரசியல் சார்ந்த கருத்துகளையும் கூறக்கூடாது. அவர் ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான நடவடிக்கைகளை அவர் எதிர்கொள்ள வேண்டும்" என்றார்.
- சிவசேனா இந்துக்கள் மற்றும் மராத்தி மக்களுக்கு பலம் அளித்து வருகிறது.
- எதிர்க்கட்சிகளை எதிரிகளாக கருதக்கூடாது என்று இந்திய தலைமை நீதிபதி கூட கூறியுள்ளார்.
மும்பை :
சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் வீட்டில் நேற்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதற்கு மத்தியில் தானே மாவட்டத்தை சேர்ந்த கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் தனது இல்லமான மாதோஸ்ரீயில் உத்தவ் தாக்கரே உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அமலாக்கத்துறை விருந்தினர்கள் தற்போது சஞ்சய் ராவத்தின் வீட்டில் உள்ளனர். அவர் கைது செய்யப்படலாம். இது என்ன வகையான சதி? சிவசேனா இந்துக்கள் மற்றும் மராத்தி மக்களுக்கு பலம் அளித்து வருகிறது. எனவே சிவசேனாவை அழிக்க சதி நடக்கிறது. இந்த நடவடிக்கை அதில் ஒரு அங்கமாகும்.
சிவசேனாவால் அரசியல் ரீதியாக வளர்ந்தவர்கள் தற்போது தங்களின் விசுவாசத்தை மாற்றிக்கொண்டுள்ளனர்.
முன்னாள் மந்திரி அர்ஜுன் கோட்கர் குறைந்தபட்சம் அழுத்தத்தின் கீழ் தான் அதிருப்தி அணிக்கு செல்வதாக ஒப்புக்கொண்டார்.
ஆனந்த் திகே 2 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது சிவசேனா தொண்டர்களுக்கு விசுவாசம் என்றால் என்ன என்பதை காட்டினார்.
கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் மும்பை குறித்த கருத்தால் மராத்தியர்கள் மற்றும் மராட்டியத்தை அவமதித்துள்ளார். அவருக்கு கோலாப்பூரின் செருப்புகளை காட்ட வேண்டும்.
இந்த விஷயத்தில் அடிமைகளாக மாறியவர்களின் எதிர்வினை என்னவாக இருந்தது. இது மிகவும் லேசானது. எங்களுக்கு அவரின் பேச்சில் உடன்பாடில்லை என்று கூறி கடந்துவிட்டனர்.
எதிர்க்கட்சிகளை எதிரிகளாக கருதக்கூடாது என்று இந்திய தலைமை நீதிபதி கூட கூறியுள்ளார். ஆனால் நாங்கள் கூட்டணி கட்சிகளாக இருந்தபோதும் எதிரிகளாக கருதப்பட்டோம்.
அஞ்சாத, அநீதிக்கு எதிராக போராடும் அர்ப்பணிப்புள்ள தொண்டர்கள் கட்சிக்கு தேவைப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி பதவியை மிக மோசமான முறையில் பெற்றுள்ளார்.
- ஜனநாயகத்தில் எந்த கட்சியும் நிரந்தர வெற்றி பெறாது.
மும்பை :
சிவசேனா கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே நேற்று தனது 62-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதை முன்னிட்டு் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
டெல்லி அரசு தற்போது சிவசேனாவுக்கு எதிராக சிவசேனாவுக்குள்ளேயே சண்டையை தூண்டி மராத்தி பேசும் மக்களை பிளவுபடுத்த விரும்புகிறது.
தற்போதைய ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சிகளை பார்த்து பயப்படுகிறார்கள் என்றால் அது அவர்களின் திறமையின்மையை காட்டுகிறது. ஜனநாயகத்தில் எந்த கட்சியும் நிரந்தர வெற்றி பெறாது.
நான் மேற்கொண்ட மகா விகாஸ் கூட்டணி சோதனையை மக்கள் வரவேற்றுள்ளனர்.
சிவசேனாவை சேர்ந்தவர் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார். இதற்காக கட்சியை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபடுவேன். இதற்காக ஆகஸ்ட் மாதம் முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்க்க விரும்புகிறேன்.
2019-ம் ஆண்டு பா.ஜனதாவிடம் நான் என்ன கேட்டேன்? 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி, அது ஒப்புக்கொள்ளப்பட்டது. இதுவும் எனக்காக இல்லை. நான் சிவசேனாவை சேர்ந்தவரை முதல்-மந்திரி ஆக்குவேன் என்று சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயிடம் வாக்குறுதி அளித்திருந்தேன். எனது வாக்குறுதி இன்னும் முழுமையடையவில்லை.
2019-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்ட அனைத்தையும் மறுத்ததன் மூலம் பொய்யின் அனைத்து எல்லைகளையும் பா.ஜனதா கடந்தது. இதனால் மகா விகாஸ் அகாடி பிறந்தது.
ஆனால் தற்போது அதிருப்தியாளர்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சிவசேனாவுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறுகின்றனர். இது வெறும் சாக்குப்போக்கு தான்.
அவர் (ஏக்நாத் ஷிண்டே) முதல்-மந்திரி பதவியை மிக மோசமான முறையில் பெற்றுள்ளார். அதிகார மோகத்தில் இப்படி செய்துவிட்டு தன்னை மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுடன் ஒப்பிட்டு கொள்கிறார்.
நாளை அவர் தன்னை நரேந்திர மோடி என்று கூறிக்கொண்டு பிரதமர் பதவிக்கு கூட உரிமை கோர வாய்ப்பு உள்ளது. பா.ஜனதாவினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிருப்தி அணியினர் எல்லோரும் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல.
- மகாவிகாஸ் கூட்டணியில் ஒருவரை, ஒருவர் மதித்தோம்.
மும்பை :
மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை அடுத்து, முதல்-மந்திரி பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் முதல் முறையாக தனது கட்சி பத்திரிகையான 'சாம்னா'வுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
அதிருப்தி அணியினர் மரத்தில் அழுகிய இலைகள். அவை கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும். இது மரத்திற்கு நல்லது. மரத்தில் புதிய இலைகள் வளரும்.
அதிருப்தி அணியினர் அவர்கள் உண்மையான சிவசேனா என கூறுகிறார்கள். இதற்கான பதில் தேர்தல் வந்தால் தெரிந்துவிடும். மக்கள் ஒன்று எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். அல்லது அவர்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கு யார் காரணம் என கேட்கிறார்கள். சில சிவசேனா தொண்டர்கள், தலைவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துவிட்டேன் என தோன்றுகிறது. அவர்களை நீண்ட காலமாக நம்பியது எனது தவறுதான்.
பா.ஜனதா சிவசேனாவை உடைக்க மட்டும் முயற்சி செய்யவில்லை. மற்ற கட்சிகளை சேர்ந்த சிறந்த தலைவர்களையும் தங்கள் அரசியலுக்காக பயன்படுத்த முயற்சி செய்கிறது. காங்கிரஸ் தலைவர் சர்தார் வல்லபாய் பட்டேலை பயன்படுத்த முயற்சி செய்தது போல, மறைந்த எனது தந்தை பால்தாக்கரேயையும் பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள். அதிருப்தி அணியினர் எல்லோரும் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல. அவர்கள் சிவசேனா தொண்டர்கள் இடையே தான் பகையை ஏற்படுத்துகின்றனர்.
மகாவிகாஸ் கூட்டணி நல்ல முயற்சி. மக்களுக்கு அது தவறான நடவடிக்கை என்றால், அவர்கள் எங்கள் கூட்டணிக்கு எதிராக எழுவார்கள். மகாவிகாஸ் கூட்டணியில் ஒருவரை, ஒருவர் மதித்தோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.