என் மலர்
நீங்கள் தேடியது "Shiv Sena"
- 2019-24 சட்டமன்றத் தேர்தலுக்கு இடையில் அவரது சொத்துக்கள் கணிசமாக அதிகரித்துள்ளது
- சஞ்சய் ஷிர்சத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கோரியுள்ளார்.
மகாராஷ்டிர அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத் ஒரு தனியார் அறையில் பணம் நிறைந்த புகைபிடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
2019-24 சட்டமன்றத் தேர்தலுக்கு இடையில் அவரது சொத்துக்கள் கணிசமாக அதிகரித்துள்ளது தொடர்பாக விளக்கம் நேற்று வருமான வரித் துறை சமீபத்தில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு வெளியிடப்பட்ட மறுநாளே இந்த வீடியோ வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அவுரங்காபாத் (மேற்கு) தொகுதி எமில்ஏவும் பாஜக கூட்டணி அரசின் அமைச்சருமான சஞ்சய் ஷிர்சாத், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவைச் சேர்ந்தவர்.
இந்த வீடியோவை உத்தவ் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் வீடியோவில் காணப்படும் சூட்கேசில் பணம் இல்லை என்றும், அது துணிகளை வைப்பதற்கான பை என்றும் சஞ்சய் ஷிர்சாத் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
சிலர் வருமான வரித்துறையில் தனக்கு எதிராக புகார் அளித்ததாகவும், இதன் காரணமாக தனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார். இதற்கிடையேசஞ்சய் ஷிர்சத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கோரியுள்ளார்.
- நீங்கள் ஒருவரை அடித்தால் அந்த சம்பவத்தை வீடியோ எடுக்காதீர்கள்.
- குஜராத்தி அல்லது வேறு யாராக இருந்தாலும் மகாராஷ்டிராவில் மராத்தி பேச வேண்டும்
தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.
இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு ஜூலை 5 ஆம் தேதியான இன்று பேரணி நடத்துவதாக அறிவித்தது. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பார்த்து பயந்த பாஜக மகாயுதி அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் உத்தரவை நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெற்றுவரும் இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றினார். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒன்றாக இணைந்துள்ளனர்.
இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "மகாராஷ்டிராவில் ஒருவர் வேண்டுமென்றே மராத்தி பேசாவிட்டால் அவரின் காதுகளுக்குக் கீழே அடியுங்கள். நீங்கள் ஒருவரை அடித்தால் அந்த சம்பவத்தை வீடியோ எடுக்காதீர்கள். நீங்கள் அடித்ததை வெளியில் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். குஜராத்தி அல்லது வேறு யாராக இருந்தாலும் மகாராஷ்டிராவில் மராத்தி பேச வேண்டும்'' என்று தெரிவித்தார்.
- 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒன்றாக இணைந்துள்ளனர்.
- இந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளபோது. இந்திக்கு இங்கு என்ன தேவை உள்ளது?
தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.
இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு ஜூலை 5 ஆம் தேதியான இன்று பேரணி நடத்துவதாக அறிவித்தது. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பார்த்து பயந்த பாஜக மகாயுதி அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் உத்தரவை நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெற்றுவரும் இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றினார். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒன்றாக இணைந்துள்ளனர்.
இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம். உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தானுக்கு மூன்றாவது மொழி என்ன? இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளார்கள். அவர்கள் இந்தி பேசாத மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து வருகிறார்கள். இந்தி அவர்களின் வளர்ச்சிக்கு ஏன் உதவவில்லை.
இந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளபோது. இந்திக்கு இங்கு என்ன தேவை உள்ளது? 3ம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ஆனாலும், நாம் இந்தி கற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், ஏன்?.
மகாராஷ்டிராவில் மராட்டியத்திற்கு மட்டுமே முக்கியத்துவம். ஆனால் பாஜக இந்தியை திணிக்கிறது. மராட்டியத்தில் இருந்து மும்பையைப் பிரிக்க சதி நடக்கிறது. இந்தியா முழுவதும் மராட்டிய பேரரசர்கள் ஆட்சி செய்தபோது மராத்தியை திணிக்கவில்லை" என்று தெரிவித்தார்.
- மகாராஷ்டிராவில் பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கியது.
- எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு பாஜக அரசு பணிந்தது.
தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.
இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு ஜூலை 5 ஆம் தேதியான இன்று பேரணி நடத்துவதாக அறிவித்தது. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பார்த்து பயந்த பாஜக மகாயுதி அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் உத்தரவை நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெற்றுவரும் இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றினார். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒன்றாக இணைந்துள்ளனர்.
சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா (எம்என்எஸ்) என்ற கட்சியை தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மராத்தி மொழிக்காக ஒன்றாக கைகோர்த்துள்ளனர்.
இந்த சூழலில், இந்த கூட்டு பேரணி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. நகராட்சி தேர்தல்கள் நெருங்கி வருவதால், உத்தவ்-ராஜ் கூட்டணி இந்தியா கூட்டணிக்கும் வலுவானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளும் மும்பை, தானே, கொங்கன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் பலமாக உள்ளன.
- தேசிய கல்விக் கொள்கையின்படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கியது.
- இந்த கூட்டு பேரணி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது.
தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியுள்ளது.
இந்நிலையில் இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ளன. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்துள்ளது.
வரும் ஜூலை 5 ஆம் தேதி, கிர்கான் சௌபட்டியில் இருந்து ஆசாத் மைதானம் வரை நடைபெறும் பேரணியில் இருவரும் பங்கேற்பார்கள்.
இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜும் உத்தவும் இணைகிறார்கள். சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா (எம்என்எஸ்) என்ற கட்சியை தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மாநிலத்திற்காக கைகோர்ப்பதாக அண்மையில் சூசகமாக தெரிவித்தனர்.
இந்த சூழலில், இந்த கூட்டு பேரணி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. நகராட்சி தேர்தல்கள் நெருங்கி வருவதால், உத்தவ்-ராஜ் கூட்டணி இந்தியா கூட்டணிக்கும் வலுவானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளும் மும்பை, தானே, கொங்கன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் பலமாக உள்ளன.
- மகராஷ்டிராவில் டிரைவராக பணிபுரியும் ஒருவருக்கு ஏன் பரிசுப் பத்திரம் கொடுக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது.
- சிவசேனா எம்.பி. மற்றும் அவரது மகன் மற்றும் டிரைவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சலார் ஜங்க் என்ற வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். செல்வாக்கு மிகுந்த இந்த குடும்பத்தினர் கடந்த காலத்தில் ஐதராபாத் நிஜாம்களிடம் பணியாற்றியுள்ளனர்.
இந்த குடும்பத்தினருக்கு பல கோடி மதிப்பிலான நிலங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த சிவசேனா எம்.பி.சந்தீபன்ராவ் பூம்ரேவிடம் டிரைவராக ஜாவேத் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு மகாராஷ்டிராவில் சுமார் ரூ.150 கோடி மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை சலார்ஜன் குடும்பத்தினர் பரிசாக வழங்கியுள்ளனர். இதற்கான ஆவணத்தையும் டிரைவர் ஜாவேத்திடும் கொடுத்துள்ளனர்.
எம்.பி.யின் டிரைவருக்கு திடீரென செல்வாக்கு மிகுந்த குடும்பத்தினர் ரூ.150 கோடி மதிப்பிலான இடத்தை பரிசாக வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மகராஷ்டிராவில் டிரைவராக பணிபுரியும் ஒருவருக்கு ஏன் பரிசுப் பத்திரம் கொடுக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக அந்த மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். சிவசேனா எம்.பி. மற்றும் அவரது மகன் மற்றும் டிரைவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும், புலனாய்வாளர்கள் கேட்ட விவரங்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளேன் சலார் ஜங் குடும்பத்தின் சந்ததியினருடன் எனக்கு நல்ல உறவு உள்ளன, எனவே அவர்கள் அந்த நிலத்தை எனக்கு பரிசாக அளித்தனர்," என்று டிரைவர் கூறினார்.
ஜாவேத் எங்கள் டிரைவர் என்றாலும், அவர் செய்யும் எல்லாவற்றின் மீதும் எங்களுக்கு கட்டுப்பாடு இல்லை. எப்படியிருந்தாலும், ஹிபனாமா என்பது சொத்துக்களை பரிசாக வழங்குவதற்கான சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று எம்.பி.யின் மகன் கூறினார்.
வக்கீல் ஒருவர் அளித்த புகாரின் பேரில் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீஸ் கமிஷனர் பிரவீன் பவார் தெரிவித்தார்.
- மும்பை புறநகர் ரெயிலில் பயணம் செய்தவர்களில் 5 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர்.
- ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை ரெயில் நிலையத்துக்கு புறநகர் ரெயிலில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகமான கூட்டம் காரணமாக படிக்கட்டுகளில் அதிக அளவிலான பயணிகள் தொங்கியபடி பயணம் செய்தனர்.
தானேயை அடுத்த திவா மற்றும் கோபர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்று கொண்டு இருந்தபோது படிக்கட்டுகளில் தொடங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்தனர்.
படுகாயத்துடன் கிடந்த அவர்களை ரெயில்வே போலீசார் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 5 பேர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர். பலியானவர்களுக்கு 30 முதல் 35 வயதே இருக்கும். காயம் அடைந்த 6 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ரெயில் பயணிகள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் விபத்துக்கு மத்திய ரெயில் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என சிவசேனா (UBT) கட்சித் தலைவர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-
ரெயில் மந்திரி (அஷ்வினி வைஷ்ணவ்) ரீல் மந்திரியாகியுள்ளார். கடந்த 2 முதல் 3 வருடங்களாக பயங்கரமான பல ரெயில் விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், எந்தவொரு பொறுப்பையும் ஏற்ப ஒருவர் கூட முன்வரவில்லை. ரெயில்வே துறை மற்றும் ரெயில்வே அமைச்சர் மட்டுமு இந்த விபத்துக்களுக்கு பொறுப்பு. இந்திய மக்கள் ரெயில் மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் பல முறை வற்புறத்தியுள்ளனர். ஆனால் அவர் அதை கடந்து செல்கிறார்.
இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
- இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
- எங்களுக்குள் நிலவும் பிரச்னைகளைவிட மகாராஷ்டிராவின் நலனே பெரியது.
இந்தி திணிப்பு
மகாராஷ்டிராவில் தேசிய கல்விக் கொள்கை அமலில் உள்ளது. இந்நிலையில் மும்மொழிக் கொள்கையின் கீழ் 3வது மொழியாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயம் என அம்மாநில பாஜக கூட்டணி அரசு உத்தரவிட்டது.
மேலும் 2025 - 26 கல்வியாண்டு முதல் படிப்படியாக அமல்படுத்தப்படும், 2028 - 29ஆம் கல்வியாண்டிற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது என சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
ராஜ் தாக்கரே
நேற்று கலந்துரையாடல் ஒன்றில் பேசிய ராஜ் தாக்கரே, 'சிவசேனாவின் நான் இருந்தபோது உத்தவ் தாக்கரேவுடன் பணியாற்றுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை. தற்போது என்னுடன் இணைந்து பணியாற்ற உத்தவ் தாக்கரே தயாராக இருக்கிறாரா?
எங்களுக்குள் நிலவும் பிரச்னைகளைவிட மகாராஷ்டிராவின் நலனே பெரியது. மராத்தியா்களுக்காக போராடுவதை ஒப்பிடுகையில் எங்களின் பிரச்னைகள் மிகவும் சிறியது. மீண்டும் நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவது கடினமான காரியமல்ல' என்று தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே
அதே சமயம் நேற்று தனது கட்சி உறுப்பினா்கள் மத்தியில் சனிக்கிழமை பேசிய உத்தவ் தாக்கரே, சிறிய பிரச்னைகளை புறந்தள்ளிவிட்டு மராத்தியா் நலனுக்கு முன்னுரிமை அளிப்பவா்களுடன் ஓரணியில் திரள நானும் தயாா்.
மக்களவைத் தேர்தலின் போது, மகாராஷ்டிராவின் தொழிற்சாலைகள் குஜராத்துக்கு இடம்பெயர்கின்றன என்று நாங்கள் சொன்னபோது, அவர்கள் (ராஜ் தாக்கரே) அப்போது எதிர்த்திருந்தால், இன்று மத்திய அரசு ஆட்சியில் இருந்திருக்காது.
மகாராஷ்டிராவின் நலனைப் பற்றி சிந்திக்கும் மத்திய மற்றும் மாநில அளவில் ஒரு அரசாங்கத்தை நாங்கள் அமைத்திருப்போம். மக்களவைத் தோ்தலின்போது பாஜகவுக்கு ஆதரவளித்துவிட்டு, பேரவைத் தோ்தலின்போது அவா்களை எதிா்த்துவிட்டு மீண்டும் அவா்களுடன் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டால் எதுவும் மாறாது.
முதலில் மகராஷ்டிரத்துக்கு எதிராக செயல்படுபவா்களை இங்கு வரவேற்காதீா்கள். அதன் பிறகு மாநில நலன் குறித்துப் பேசலாம். எனக்கு யாருடனும் மோதல் இல்லை. பாஜகவுடனான கூட்டணி வேண்டுமா? அல்லது எங்கள் கட்சியுடன் கூட்டணி வேண்டுமா என்பதில் மராத்திய மக்கள் தெளிவான முடிவெடுக்க வேண்டும் " என்று தெரிவித்தார்.

சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் இணைவது குறித்து பேசியிருப்பது மகாராஷ்டிர அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர்கள் இணைவதில் மகிழ்ச்சியே என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கேலி செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
- நிர்மலா தாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து கருத்து தெரிவித்த குணால் கம்ராவுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், தற்போது மத்திய அமைச்சர் குறித்த கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்கு காவல் நிலையத்தில் விசாராணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல் துறையினர் குணால் கம்ராவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில், நேற்று (புதன் கிழமை) குணால் கம்ரா வெளியிட்ட மற்றொரு வீடியோவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கேலி செய்யும் வகையிலான காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
அந்த வீடியோவில் 1987ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'மிஸ்டர் இந்தியா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஹவா ஹவாய்' என்ற பாடலில் பாப்கார்ன் எமோஜிக்கள் இடம்பெற்று இருந்தன. இவை திரையரங்குகளில் வாடிக்கையாக விற்பனை செய்யப்படும் பாப் கார்ன் மீது ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை கிண்டல் செய்யும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அந்த வீடியோவில் சாலைகளில் குழிகள் இருப்பதும், மெட்ரோ பணிகளுக்காக சாலையில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மேம்பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்களை கேலி செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சரிவாலி தீதி மற்றும் நிர்மலா தாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே குறித்த சர்ச்சைக்கு காவல் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதற்கு பதிலளித்த குணால் கம்ரா காவல் நிலையத்தில் ஆஜராக ஒருவார காலம் அவகாசம் கோரியிருந்தார். காவல் துறையினர் குணால் கம்ரா கோரிக்கையை நிராகரித்ததுடன் காவல் நிலையத்தில் ஆஜராக மீண்டும் சம்மன் வழங்கியுள்ளனர்.
- ஆட்சி அதிகாரத்துக்காக உத்தவ் தாக்கரே, சத்திரபதி சிவாஜி மகாராஜின் கொள்கைகளில் இருந்து வலுவி அவுரங்கசீப்பின் சித்தாந்தத்தை பின்பற்றி காங்கிரசுடன் சேர்ந்தார்.
- அதிகார பசிக்காக ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவுக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியிடம் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டதாகவும், பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்ததாகவும் மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த சட்டமேலவை கூட்டத்தின்போது பேசிய ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியிடம் தன்னை விசாரணை அமைப்புகளிடம் இருந்து காப்பாற்றுமாறு மன்றாடினார். மோடியிடம் தலைதாழ்த்தி மன்னிப்பு கேட்ட தாக்கரே மீண்டும் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் டெல்லியில் இருந்து மகாராஷ்டிரவுக்கு திரும்பியதும் தனது முடிவை உத்தவ் மாற்றிக்கொண்டார்.
ஆட்சி அதிகாரத்துக்காக உத்தவ் தாக்கரே, சத்திரபதி சிவாஜி மகாராஜின் கொள்கைகளில் இருந்து வலுவி அவுரங்கசீப்பின் சித்தாந்தத்தை பின்பற்றி காங்கிரசுடன் சேர்ந்தார்.
காங்கிரஸிடம் சிவசேனா கொடுத்த வில் அம்பை நாங்கள்தான் வீரத்துடன் மீட்டெடுத்தோம். இப்போது உத்தவ் சிவசேனா சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை. ஏனெனில் அவர்கள் அவுரங்கசீப்பின் சித்தாந்தத்தை ஏற்றவர்கள் என்று தெரிவித்தார். ஏக்நாத் ஷிண்டேவின் பேச்சால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே கூறியவற்றை உத்தவ் தாக்கரே மறுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், சிவசேனாவை உடைத்ததை நியாயப்படுத்தி வரலாற்றை திரிக்கும் முயற்சி இது. அதிகார பசிக்காக ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவுக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். பாலசாகேப் தாக்கரேவின் நற்பெயரை கெடுத்து சிவசேனா சித்தாந்தத்தில் இருந்து நழுவியவர் ஷிண்டே என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 இல் சிவசேனாவை உடைத்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணிக்கு தாவிய ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கோவில் அருகே கட்சி நிர்வாகிகளுடன் போராட்டம் நடத்திய போது துப்பாக்கியால் சுடப்பட்டார்.
- துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்து காவல்துறை விசாரணை.
அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநில சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரி அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. அமிர்தசரஸ் நகரில் உள்ள கோபால் மந்திர் என்ற கோவில் அருகே இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது.
அந்த கோவில் வளாகத்திற்கு வெளியே உள்ள குப்பையில் உடைந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், இது குறித்து அறிந்த சூரி, தமது கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்று கோவில் அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் திடீரென அவர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து குண்டு காயத்துடன மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சூரி உயிரிழந்ததாக அமிர்தசரஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமிர்தசரஸ் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
- சஞ்சய் ராவத் சுமார் 100 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடியிருப்பு சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற காவலில் மத்திய மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த நவம்பர் 2-ம் தேதியுடன் முடிந்தது. இதனை தொடர்ந்து சஞ்சய் ராவத் எம்.பி.யின் நீதிமன்ற காவலை 9-ம் தேதி வரை நீட்டித்த கோர்ட்டு, அன்று ஜாமீன் மனு குறித்த தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தது.
அதன்படி, சஞ்சய் ராவத்தின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து, 100 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு சஞ்சய் ராவத் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய தொண்டர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த சஞ்சய் ராவத் பிரபாதேவி நகரில் உள்ள பிரபலமான சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அவருடன் சிவசேனா கட்சி நிர்வாகிகளும் வழிபாடு நடத்தினர்.






