என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மராத்தி"

    • குடிபோதையில் காரை பெண் மீது இடித்து விபத்து ஏற்படுத்தியுள்ளார்.
    • காரைவிட்டு இறங்கும்போது அரை நிர்வாணமாக இருந்தது தெரிய வந்தது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டதற்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (MNS) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பை முன்னெடுத்தார். இதனால் மகாராஷ்டிரா அரசு மும்மொழிக்கொள்ளை திட்டத்தை திரும்பப் பெற்றது.

    இதற்காக ராஜ் தாக்கரே வெற்றி விழா நடத்தினார். மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் என தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் எம்.என்.எஸ். கட்சித் தலைவரின் மகன் குடிபோதையில், அரை நிர்வாணமாக மராத்தி பெண்ணிடம் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் ஜாவித் ஷேக்கின் மகன் ரஹில் ஷேக். இவர் கடுபோதையில், மேலாடை இல்லாமல் கார் ஓட்டி வந்துள்ளார். கார் ஒரு பெண்ணின் மீது மோத, காரில் இருநது இருந்து இறங்கிய ரஹில் ஷேக் நடந்து கொண்ட விதம் முகம் சுழிக்கும் வகையில் இருந்தது.

    இச்சம்பவம் குறித்த வீடியோவை அந்த பெண் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இதை ரீ-போஸ்ட் செய்த சிவசேனா தலைவர் சஞ்சய் நிருபம், எம்என்எஸ் கட்சியை மிகவும் சாடியுள்ளார். மராத்தி கலாச்சாரத்தை பாதுகாப்பும் எனக் கூறும் அவர்களுடைய உண்மையான முகம் இதுதான் எனத் தெரிவித்துள்ளார்.

    • இந்தி பேசுபவர்களை நவநிர்மாண் சேனா கட்சி தொண்டர்கள் தொடர்ச்சியாக தாக்கி வருகின்றனர்.
    • நான் மராத்தி கற்றுக்கொள்ளவும் மாட்டேன் என்று ராஜ் தாக்கரேவை குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார்.

    தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.

    இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு ஜூலை 5 ஆம் தேதியான இன்று பேரணி நடத்துவதாக அறிவித்தது. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது.

    எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பார்த்து பயந்த பாஜக மகாயுதி அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் உத்தரவை நிறுத்தி வைத்தது.

    இதனிடையே மகாராஷ்டிராவில் மராத்தி பேசாமல் இந்தி பேசுபவர்களை நவநிர்மாண் சேனா கட்சி தொண்டர்கள் தொடர்ச்சியாக தாக்கி வருகின்றனர்.

    இந்நிலையில், தொழிலதிபர் சுஷில் கெடியா என்பவர் தனது எக்ஸ் பதிவில், "நான் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கிறேன். எனக்கு மராத்தி தெரியாது. நான் மராத்தி கற்றுக்கொள்ளவும் மாட்டேன்" என்று ராஜ் தாக்கரேவை குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார்.

    மராத்தி கற்க மாட்டேன் என்று கூறிய தொழிலதிபர் சுஷில் கெடியாவின் கெடியோனோமிக்ஸ் அலுவலகத்தை மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தொண்டர்கள் சூறையாடினர்.

    அலுவலகத்தின் மீது கற்களை வீசி நவநிர்மான் சேனா தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது ஜெய் மகாராஷ்டிரா என்று அவர்கள் முழக்கம் எழுப்பினர்.

    இதனையடுத்து, மராத்தி கற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியதற்கு தொழிலதிபர் சுஷில் கெடியா தற்போது மன்னிப்பு கோரியுள்ளார். 

    • நீங்கள் ஒருவரை அடித்தால் அந்த சம்பவத்தை வீடியோ எடுக்காதீர்கள்.
    • குஜராத்தி அல்லது வேறு யாராக இருந்தாலும் மகாராஷ்டிராவில் மராத்தி பேச வேண்டும்

    தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.

    இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு ஜூலை 5 ஆம் தேதியான இன்று பேரணி நடத்துவதாக அறிவித்தது. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது.

    எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பார்த்து பயந்த பாஜக மகாயுதி அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் உத்தரவை நிறுத்தி வைத்தது.

    இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெற்றுவரும் இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றினார். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒன்றாக இணைந்துள்ளனர்.

    இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "மகாராஷ்டிராவில் ஒருவர் வேண்டுமென்றே மராத்தி பேசாவிட்டால் அவரின் காதுகளுக்குக் கீழே அடியுங்கள். நீங்கள் ஒருவரை அடித்தால் அந்த சம்பவத்தை வீடியோ எடுக்காதீர்கள். நீங்கள் அடித்ததை வெளியில் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். குஜராத்தி அல்லது வேறு யாராக இருந்தாலும் மகாராஷ்டிராவில் மராத்தி பேச வேண்டும்'' என்று தெரிவித்தார். 

    • மகாராஷ்டிராவில் புதிய கல்வி கொள்கையை பாஜக கூட்டணி அரசு அமல்படுத்தியுள்ளது.
    • புதிய கல்வி கொள்கை படி அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள்

    மகாராஷ்டிராவில் 1-5 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் 3 ஆவது மொழியாக இந்தி மொழி கட்டாயம் கற்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மகாராஷ்டிராவில் புதிய கல்வி கொள்கையை பாஜக கூட்டணி அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம் மராத்தி, ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் 3 ஆவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    புதிய கல்வி கொள்கை படி அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், பெங்களூரு மாநகர போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு வழங்கியுள்ளன.
    • பள்ளி-கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்.

    பெங்களூரு:

    பெலகாவியில் கடந்த மாதம்(பிப்ரவரி) 21-ந் தேதி மராத்தியில் பேச மறுத்த கர்நாடக அரசு பஸ் கண்டக்டர் மீது மராட்டிய அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரம் கர்நாடகம்-மராட்டியம் இடையே மொழி பிரச்சனையாக மாறியது. கர்நாடகத்தில் மராட்டிய மாநில பஸ்களும், மராட்டியத்தில் கர்நாடக அரசு பஸ்களும் தாக்கப்பட்டன. இந்த விவகாரம் இரு மாநிலங்களிடையே பதற்றமான சூழலை ஏற்படுத்தியது.

    பேச்சுவாா்த்தைக்கு பிறகு இரு மாநிலங்களிடையே இயல்பு நிலை திரும்பியது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகத்தில் 22-ந் தேதி(இன்று) முழு அடைப்பு நடத்துவதாக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அந்த கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

    அதன்படி கர்நாடகத்தில் இன்று(சனிக்கிழமை) முழுஅடைப்பு நடைபெற உள்ளது. இந்த முழு அடைப்புக்கு அனைத்து தரப்பு மக்களும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த முழு அடைப்புக்கு கர்நாடக ரக்ஷண வேதிகே(சிவராமே கவுடா அணி) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளன.

    கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், பெங்களூரு மாநகர போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு வழங்கியுள்ளன. ஆனால் பஸ்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் அதிகாரப்பூர்வமாக தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அதனால் ஆட்டோக்கள், வாடகை கார்கள் வழக்கம் போல் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பள்ளி-கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும். பல்வேறு வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும். தியேட்டர்களில் ஒரு காட்சியை மட்டும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்பு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. கன்னட அமைப்பினர் பெங்களூருவில் இன்று ஊர்வலம் நடத்த உள்ளனர்.முழு அடைப்பையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வலுக்கட்டாயமாக கடைகளை மூடும்படி கூறினால் அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • மகாராஷ்டிராவில் ஏர்டெல் பெண் ஊழியர் மராத்தி மொழியில் பேச மறுத்து இந்தியில் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
    • மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தேவையில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசியது சர்ச்சையானது.

    மகாராஷ்டிராவில் இந்தி Vs மராத்தி என்ற பிரச்சனை வெடித்துள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பேசிய அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "மகாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்தி தான். இங்கு உள்ள ஒவ்வொருவரும் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதனிடையே மகாராஷ்டிராவில் ஏர்டெல் பெண் ஊழியர் மராத்தி மொழியில் பேச மறுத்து இந்தியில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி அம்மாநிலத்தில் மொழி பிரச்சனையை பெரிதுபடுத்தி உள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் இனி மராத்தி மொழியிலும் நடத்தப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சட்டசபையில் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், "அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் ஏற்கனவே மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படுகின்றன. இருப்பினும், சில வேளாண் பொறியியல் தொடர்பான சில தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது தான் இந்தப் பாடங்களுக்கான பாடப்புத்தகங்கள் மராத்தியில் கிடைக்கவில்லை என்பது தெரியவந்தது. மராத்தியில் பொறியியல் படிப்புகளை நடத்த மாநில அரசு இப்போது முடிவு செய்துள்ளது. ஆகவே இந்த தேர்வுகள் இனிமேல் மராத்தியிலும் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

    • இந்தியை திணித்து தமிழை அழிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக ஆளும் திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
    • மராத்தி தான் மும்பையின் மொழி என்று MLA ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையின் மூலம் இந்தியை திணித்து தமிழை அழிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக ஆளும் திமுக அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இக்கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பையாஜி ஜோஷி, "மும்பையில் ஒரு மொழி பேசுபவர்கள் மட்டும் கிடையாது. இங்கு ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு மொழிகளை பேசுபவர்கள் இருக்கிறார்கள். காட்கோபர் பகுதி மக்கள் குஜராத்தி பேசுகிறார்கள். ஆதலால் நீங்கள் மும்பையில் வசித்தால் மராத்தி மொழி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.

    இதே நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோபா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

    மராத்தி குறித்து பையாஜி ஜோஷி தெரிவித்த கருத்துக்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ் காட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன

    இந்த விவகாரம் குறித்து பேசிய எம்.பி. சஞ்சய் ராவத், "பாஜகவின் கொள்கை வகுப்பாளரும் ஆர்.எஸ்.எஸ் தலைவருமான பையாஜி ஜோஷி, மராத்தி மும்பையின் மொழி இல்லை என்று கூறியிருக்கிறார். அவர் கொல்கத்தாவிற்கு சென்று பெங்காலி அவர்களின் மொழி இல்லை என்று கூறுவாரா? அவர் சென்னைக்கு சென்று தமிழ் அவர்களின் மொழி இல்லை என்று கூறுவாரா?" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

    • மும்பையில் வாழ மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று RSS தலைவரின் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • RSS தலைவரின் கருத்துக்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ் காட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பையாஜி ஜோஷி, "மும்பையில் ஒரு மொழி பேசுபவர்கள் மட்டும் கிடையாது. இங்கு ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு மொழிகளை பேசுபவர்கள் இருக்கிறார்கள். காட்கோபர் பகுதி மக்கள் குஜராத்தி பேசுகிறார்கள். ஆதலால் நீங்கள் மும்பையில் வசித்தால் மராத்தி மொழி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.

    இதே நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோபா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

    மராத்தி குறித்து சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்த கருத்துக்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ் காட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி கருத்து தொடர்பாக பாஜக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஜாதவ் கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு சட்டமன்றத்தில் பதில் அளித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசியதை நான் கேட்கவில்லை. மகாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்தி தான். இங்கு உள்ள ஒவ்வொருவரும் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் அரசாங்கம் அனைத்து மொழிகளையும் மதிக்கிறது.

    நீங்கள் உங்கள் சொந்த மொழியை நேசித்து மதிக்கிறீர்கள் என்றால், மற்ற மொழிகளையும் அவ்வாறே நேசிப்பீர்கள். இந்த கருத்தில் சுரேஷ் பையாஜி என்னுடன் உடன்படுவார் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார். 

    ×