என் மலர்
நீங்கள் தேடியது "three language policy"
- பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் 2 அரசாணைகளை மகாராஷ்டிரா அரசு திரும்ப பெற்றது.
- மொழி வெறியை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையின்கீழ் , மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை 3-வது கட்டாய மொழியாக மாற்ற அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்டது.
இதற்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா ஆகிய எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் 2 அரசாணைகளை மகாராஷ்டிரா அரசு திரும்ப பெற்றது.
தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக நவநிர்மாண் சேனா மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியினர் இணைந்து மும்பையில் நேற்று வெற்றி பேரணி நடத்தினர்.
மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகிய இருவரும் ஒரே மேடையில் தோன்றினர்.
இந்த கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, "மொழி வெறியை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார். மகாராஷ்டிர மாநிலத்திற்கு வெளியே மராத்தி மொழியை திணிக்க மராட்டியர் யாராவது முயற்சி செய்துள்ளார்களா?
தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் இந்தியை திணிக்க முயற்சி செய்து பாருங்கள்!. நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை, ஆனால் நீங்கள் எங்களை கட்டாயப்படுத்தினால், எங்கள் சக்தியைக் நாங்கள் காட்டுவோம்" என்று தெரிவித்தார்.
- மாணவர்களுக்கு இந்தியை கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என மராட்டிய அரசு அறிவித்திருந்தது.
- உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் மராட்டிய அரசு பணிந்துள்ளது..
மகாராஷ்டிராவில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்ற தீர்மானத்தை மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு திரும்பப் பெற்றதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் மூலம், மராட்டிய மாநிலம் முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என மராட்டிய மாநில அரசு அறிவித்திருந்தது.
இந்தித் திணிப்புக்கு எதிராக மும்பையில் ஜூலை 5ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க கல்வியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்படும். வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இது குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "அரசாணைகள் திரும்ப பெறப்பட்டது மராத்திய அமைப்புகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி" என்றார்.
இந்நிலையில், இது தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், "மூன்றாம் மொழியாக இந்தியை திணிக்கும் முடிவு ரத்து. மீண்டும் பணிந்தது மராட்டிய அரசு. இந்தியாவை ஹிந்தியாவாக மாற்ற நினைக்கும் பாஜகவின் முயற்சி ஒரு போதும் வெற்றிபெறாது" என்று தெரிவித்துள்ளார்
- உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.
மகாராஷ்டிராவில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்ற தீர்மானத்தை மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு திரும்பப் பெற்றதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் மூலம், மராட்டிய மாநிலம் முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என மராட்டிய மாநில அரசு அறிவித்திருந்தது.
இந்தித் திணிப்புக்கு எதிராக மும்பையில் ஜூலை 5ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க கல்வியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்படும். வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இது குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "அரசாணைகள் திரும்ப பெறப்பட்டது மராத்திய அமைப்புகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி" என்றார்.
- மகாராஷ்டிராவில் புதிய கல்வி கொள்கையை பாஜக கூட்டணி அரசு அமல்படுத்தியுள்ளது.
- புதிய கல்வி கொள்கை படி அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள்
மகாராஷ்டிராவில் 1-5 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் 3 ஆவது மொழியாக இந்தி மொழி கட்டாயம் கற்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிய கல்வி கொள்கையை பாஜக கூட்டணி அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம் மராத்தி, ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் 3 ஆவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கை படி அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சுமார் 90,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. அதேவேளையில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றன.
- பத்தாண்டுகளில் நமது கல்வி முறைகளில் 'பொது சேவை' என்கிற உணர்வு திட்டமிட்டு துடைத்தெறியப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு கடந்த 2019 இல் கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கை (NEP) விவாதப்பொருளாக மாறி வருகிறது. இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கை குறித்த கடுமையான விமர்சனங்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்வைத்துள்ளார்.
கல்வித்துறையில் அதிகாரம், வணிகமயமாக்கல், வகுப்புவாதம் (centralisation of power, commercialisation, and communalisation)' ஆகியவற்றுக்கான கருவியாக, கல்விக் கொள்கையை மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருவதாக சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
செய்தி இதழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசின் நடவடிக்கைகள் மூலம், கல்வியில் தமது மூன்று முக்கிய கொள்கைகளை அமல்படுத்துவதிலேயே அரசு தீவிரமாக இருப்பதை காண முடிகிறது.
"மத்திய அரசுடன் அதிகாரத்தை மையப்படுத்துதல்; கல்வியில் முதலீடுகளை வணிகமயமாக்குதல் மற்றும் தனியார் துறைக்கு அவுட்சோர்சிங் செய்தல், மற்றும் பாடப்புத்தகங்கள், பாடத்திட்டங்கள் மற்றும் கல்வி நிறுவங்களில் வகுப்புவாதத்தை திணித்தல்" ஆகிய கொள்கைகளை அமல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துகிறது.
மத்திய கல்வி ஆலோசனை வாரியம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கல்வி அமைச்சர்களைக் கொண்டுள்ளது. ஆனால் செப்டம்பர் 2019க்குப் பிறகு ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை.
குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (RTE) சட்டத்தை செயல்படுத்த தேவையான நிதி உதவியின் ஒரு பகுதியாக சமக்ர சிக்ஷா அபியான் (SSA) நிதி பல ஆண்டுகளாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் சமக்ர சிக்ஷா அபியான் (SSA) திட்டத்திற்கான மானியங்களை நிறுத்தி வைத்து , PM-SHRI திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு மிரட்டி வருகிறது. SSA நிதியை மத்திய அரசு ஒதுக்கிட பாராளுமன்ற நிலைக்குழுவும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

உயர்கல்வியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்து குறிப்பிட்ட அவர், 2025 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) புதிய வரைவு உருவாக்கப்பட்டது. இது துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசுகளின் பங்கைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்படும் ஆளுநர்கள் மூலம் - மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஏகபோக அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது கூட்டாட்சிக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பள்ளிக்கல்வியை தனியார்மயமாக்கலை நோக்கி மத்திய அரசு நகர்த்தி வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல், சுமார் 90,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. அதேவேளையில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றன என்று தெரிவித்துள்ள சோனியா காந்தி NEP உடைய பின்விளைவுகள் குறித்து எச்சரித்துள்ளார்.
மேலும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களைக் கடன் வாங்கும் சூழலுக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் தள்ளியிருப்பதாகத் தெரிவித்த அவர், இதன்மூலம் மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் உயர்ந்துள்ளாககுறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அரசாங்கம் கல்வி முறை மூலம் வகுப்புவாத வெறுப்பைப் போதித்து வளர்ப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மகாத்மா காந்தியின் படுகொலை மற்றும் முகலாய வரலாறு பற்றிய குறிப்புகளை நீக்கிய NCERT பாடப்புத்தகங்களில் திருத்தங்களை அவர் மேற்கோள் காட்டியா அவர், கல்வித் தகுதியை விட கருத்தியல் பரிசீலனைகளின் அடிப்படையில் ஆசிரியர்களை பணியமர்த்துவதை விமர்சித்தார்.

முக்கிய நிறுவனங்களில் தலைமைப் பதவிகள், தங்கள் சித்தாந்தங்களுக்கு வளைந்து கொடுப்பவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இது பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்களுக்கான தகுதிகளை நீர்த்துப்போகச் செய்துள்ளதாகச் சாடினார்.
இந்தியாவின் பொது கல்வி அமைப்பை இரக்கமின்றி அழிக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதாகவும், கடந்த பத்தாண்டுகளில் நமது கல்வி முறைகளில் 'பொது சேவை' என்கிற உணர்வு திட்டமிட்டு துடைத்தெறியப்பட்டுள்ளது.
கல்விக் கொள்கை வகுக்கப்படும்போது கல்வியின் தரத்தை குறித்து கண்டுகொள்வதேயில்லை என்பதும் தெளிவாகிறது என்று சோனியா காந்தி கடுமையான விமர்சனங்களைத் தனது கட்டுரையில் முன்வைத்துள்ளார்.
- கல்வித்துறை வெளியிட்ட தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.
- 24,80,45,828 பேருக்கு மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.
இந்தியா முழுக்க செயல்பட்டு வரும் 14 லட்சம் பள்ளிகளில் சுமார் 61.6 சதவீத பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில் 28.3 சதவீதம் பள்ளிகளில் இரண்டு மொழிகளும், 10.1 சதவீதம் பள்ளிகளில் ஒற்றை மொழி கற்பிக்கப்பட்டு வருவது மத்திய கல்வித்துறை வெளியிட்ட தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 3.2 சதவீத பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி வெளியிட்ட தகவல்களின் படி, "1471891 இந்திய பள்ளிகளில் 61.6 சதவீதம் பள்ளிகளில் 74.7 சதவீத மாணவர்கள் அதாவது 248045828 பேருக்கு மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன."
"மொத்தமாக உள்ள இந்திய பள்ளிகளில் 28.3 சதவீதம் பள்ளிகளில் 16.8 சதவீதம் மாணவர்களுக்கு இரண்டு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இதில் 10.1 சதவீதம் பள்ளிகளில் ஒற்றை மொழி மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது," என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதில் அருணாசல பிரதேசத்தில் 0.3 சதவீத பள்ளிகளில் மட்டுமே மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. நாகாலாந்தில் 2.5 சதவீதமும், தமிழ்நாட்டில் 3.2 சதவீதம் பள்ளிகளிலும் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே மூன்று மொழிகளில் கற்பிக்கும் முதல் மாநிலமாக குஜராத் உள்ளது. குஜராத்தில் 97.6 சதவீத பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன என்று மத்திய கல்வித்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.
- ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொழியை நீங்கள் விரும்புகிறீர்கள், ஆனால் இந்திய மொழியை நீங்கள் விரும்பவில்லை.
- மொழியின் பெயரால் உங்கள் ஊழலையும் மறைக்க முயற்சிக்கிறீர்கள். நாங்கள் உங்களை அம்பலப்படுத்துவோம்.
இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது தேசிய கல்விக்கொள்கையில் (NEP) உள்ள மும்மொழிக் கொள்கையை இந்தி திணிப்பு என குற்றம்சாட்டி, தமிழ்நாடு ஏற்க மறுப்பது குறித்து காட்டமான கருத்துக்களை அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அவையில் அமித் ஷா கூறியதாவது, அவர்கள் தங்கள் ஊழலை மறைக்க மொழியின் பெயரால் கடை விரிக்கிறார்கள். ஒவ்வொரு மொழியும் நாட்டின் ரத்தினம் போன்றது. நாங்கள் தென் மாநில மொழிகளுக்கு எதிரானவர்கள் என அவர்கள் சொல்ல விரும்புகிறீர்களா?..
மொழியின் பெயரால் அரசியல் செய்பவர்கள், தனிக்கப்பட்ட உள்நோக்கம் கொண்டிருக்கிறார்கள். பொறியியல் மற்றும் மருத்துவத் தேர்வுகளை தமிழில் நடந்த (தமிழ்நாடு அரசுக்கு) தைரியம் இல்லை.

அவர்கள் மொழியின் பெயரால் விஷத்தைப் பரப்புகிறார்கள். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொழியை நீங்கள் விரும்புகிறீர்கள், ஆனால் இந்திய மொழியை நீங்கள் விரும்பவில்லை.
மொழியின் பெயரால் நாட்டைப் பிரிக்கக் கூடாது. உங்கள் தவறுகளையும், மொழியின் பெயரால் உங்கள் ஊழலையும் மறைக்க முயற்சிக்கிறீர்கள். நீங்கள் வளர்ச்சி பற்றிப் பேச வேண்டும். நாங்கள் உங்களை அம்பலப்படுத்துவோம், உங்கள் தவறுகளை அம்பலப்படுத்த ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்வோம் என்று பேசியுள்ளார்.
மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டுக்கான ரூ.2000 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்தியில் 90,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி.
- எதற்காக மூன்றாம் மொழியாக இந்தியை கட்டாயப்படுத்துகிறது.
கர்நாடகாவில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) தேர்வில் மூன்றாம் மொழிப்பாடமான இந்தியில் 90,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
மும்மொழிக் கொள்கையை நிறைவேற்றுவதற்காக பல மாநிலங்களில் இந்தி மூன்றாவது மொழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அது மாணவர்களின் அறிவுக்கு பங்களிக்கவோ, அவர்களின் எதிர்காலத்திற்குப் பயனுள்ளதாகவோ இல்லை என்பதையே இந்த முடிவு எடுத்துக் காட்டுவதாக கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும், மாநில அரசு மாணவர்களின் எதிர்கால நலனில் தொடர்புடைய ஒன்றை தேர்வு செய்ய அனுமதிக்காமல், எதற்காக மூன்றாம் மொழியாக இந்தியை கட்டாயப்படுத்துகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மூன்றாவது மொழியாக இந்தியை கற்பதால் ஏற்படும் கூடுதல் சுமையால், தாய்மொழி மற்றும் இரண்டாம் மொழியான ஆங்கிலத்தை கற்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. அரசாங்கம் கன்னடம் மற்றும் ஆங்கிலக் கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அதுவே அவர்களின் கல்வி மற்றும் தொழில்முறை சார்ந்த எதிர்காலத்திற்கு இன்றியமையாததாக இருக்கும் என்று பேராசிரியர் நிரஞ்சனாராத்யா வலியுறுத்தியுள்ளார்.
- ஹிந்தியை ஒரு மொழியாக ஒருபோதும் எதிர்க்கவில்லை.
- மக்களை தவறாக வழிநடத்தும் தந்திரம் மட்டுமே.
மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லாப நோக்கத்துக்காக தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், ஏன் அனுமதிக்கிறார்கள்? என்று ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் திரைப்படங்களை பணத்துக்காக இந்தியில் டப்பிங் செய்ய கூறிவிட்டு இந்தியை எதிர்ப்பது ஏன்? பாலிவுட்டில் இருந்து பணத்தை விரும்பும் அவர்கள் இந்தியை மட்டும் ஏன் ஏற்க மறுக்கின்றனர்?" என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, மொழி விவகாரம் குறித்து பேசிய கருத்துக்களுக்கு பவன் கல்யாண் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஒரு மொழியை திணிப்பதும், கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உகந்தவை அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பதும், ஒரு மொழியை கண்மூடித்தனமாக எதிர்ப்பதும்—இவை இரண்டுமே இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உகந்தவை அல்ல.
நான் ஹிந்தியை ஒரு மொழியாக ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால், அதை கட்டாயமாக்குவதற்காக முன்பு எடுக்கப்பட்ட முயற்சிக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தேன். தேசியக் கல்விக் கொள்கை 2020 (NEP 2020) ஹிந்தியை எந்த வகையிலும் கட்டாயமாக்கவில்லை என்ற நிலையில், அதைப் பற்றிய தவறான தகவல்களை பரப்புவது அரசியல் நோக்கத்திற்காக மக்களை தவறாக வழிநடத்தும் தந்திரம் மட்டுமே.
NEP 2020-ன் படி, மாணவர்கள் தங்கள் தாய்மொழியுடன் சேர்த்து எந்த இரண்டு இந்திய மொழிகளையும் (அவை ஹிந்தியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை) மற்றும் ஒரு வெளிநாட்டு மொழியையும் தேர்வு செய்யும் சுதந்திரம் பெற்றுள்ளனர். அவர்கள் ஹிந்தியை படிக்க விரும்பவில்லை என்றால், அதற்குப் பதிலாக தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, அஸ்ஸாமி, காஷ்மிரி, ஓடியா, வங்காள மொழி, பஞ்சாபி, சிந்தி, போடோ, டோகரி, கொங்கணி, மைதிலி, மணிப்பூரி மொழி, நேபாளி, சந்தாலி, உருது உள்ளிட்ட எந்த இந்திய மொழிகளையும் தேர்வு செய்யலாம்.
பன்மொழிக் கொள்கை மாணவர்களுக்கு விருப்பத்தேர்வையும், கல்விச் சுதந்தரத்தையும் வழங்குகிறது. இது தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதோடு, இந்தியாவின் மொழிப் பன்மையை பாதுகாக்கும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை தவறாக விளக்கி, அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துவது, அல்லது பவன் கல்யாண் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார் எனத் தவறாக கூறுவது—மொழிக் கொள்கையைப் பற்றிய புரிதலின்மையையே காட்டுகிறது.
ஜன சேனா கட்சி மொழித் தேர்வுச் சுதந்திரமும், கல்விச் சுதந்தரமும் ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது என்பதில் உறுதியாக உள்ளது," என குறிப்பிட்டுள்ளார்.
- 2-வது மொழி ஆங்கிலம் என்று புதிய கல்விக்கொள்கை சொல்கிறது.
- தமிழ்நாட்டில் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையை நாம் அமல்படுத்தி இருக்கிறோம். இந்த நிலையில் மும்மொழி கொள்கையை திணிப்பது எந்த விதத்தில் நியாயம். வடமாநிலங்களில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். அவர்களுக்கு ஒரு மொழி தான் தெரியும். பேச்சு மொழி இந்தி, அரசு மொழி, பயிற்சி மொழி, பாட மொழி என்று அனைத்தும் இந்தி தான்.
2-வது மொழி ஆங்கிலம் என்று புதிய கல்விக்கொள்கை சொல்கிறது. ஆனால் வடமாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்களையே நியமிக்கவில்லை. தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. நான் பார்த்தவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படவில்லை. அப்படி இருக்கும்போது தமிழ்நாட்டை மட்டும் குற்றம் சாட்டி, மும்மொழி கொள்கையை அமல்படுத்தாததால் நிதி தரமாட்டோம் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளிலும் தமிழையே கற்றுக் கொடுக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் இந்த பிரச்சனையில் பா.ஜ.க.வை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஓரணியில் நிற்கிறார்கள். இதை நான் வரவேற்கிறேன்.
பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்காமல் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
- மராத்தியில் பேச வேண்டும் என்று எங்கு எழுதப்பட்டுள்ளது?
- மகாராஷ்டிரா உங்களுக்கு சொந்தமானதா?
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் பெண் ஊழியர் மராத்தி மொழியில் பேச மறுத்த சம்பவம் அம்மாநிலத்தில் மொழி பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.
வைரல் வீடியோவில்,பிரபல தொலைத் தொடர்பு நிறுவனம் ஏர்டெல் ஸ்டோரில் பணியாற்றும் பெண் ஒருவர் மராத்தி மொழி பேச மறுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில் அந்த ஊழியர், "நான் ஏன் மராத்தி மொழியில் பேச வேண்டும்? மகாராஷ்டிராவில் மராத்தியில் பேச வேண்டும் என்று எங்கு எழுதப்பட்டுள்ளது? என்னிடம் முறையாக பேசுங்கள்."
"நான் ஏன் மராத்தியில் பேச வேண்டும்? நீங்கள் தான் மகாராஷ்டிராவை வாங்கியுள்ளீர்களா? மகாராஷ்டிரா உங்களுக்கு சொந்தமானதா, நான் எங்கு வேலை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று நீங்கள் எனக்கு கூறுகின்றீர்களா? பதிவு செய்வதற்கு அனுமதி இல்லை, மீறி செய்தால் நான் காவல் துறையை தொடர்பு கொள்வேன்," என்று கூறியுள்ளார்.
இதற்கு அந்த வாடிக்கையாளர், "நீங்கள் என் பிரச்சனையை தீர்க்கவில்லை, மேலும் என்னிடம் சரியாகவும் பேச மறுக்கின்றீர்கள்," என்று கூறியுள்ளார். ஏர்டெல் ஊழியர் மற்றும் வாடிக்கையாளர் இடையே மொழி விவகாரம் குறித்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் உள்ளூர் மொழியை ஊக்குவிப்பது அவசியம் என்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சித்ரா வாக் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா பா.ஜ.க.வின் மகளிர் அணி தலைவராகவும் இருக்கும் சித்ரா வாக், " ஒருவர் மகாராஷ்டிராவில் வசித்தால், அவர்களுக்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டும். ஒருவேளை தெரியவில்லை எனில், அவர்கள் அதனை கற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் அல்லது மொழிக்கு மதிப்பளிக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.