என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Experts"
- தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.
- மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் முன்னிலை வகித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாநகரை அழகுபடுத்துவது தொடர்பாக மேம்பாட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.
மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில், தஞ்சை மாநகருக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் தஞ்சை மாநகரை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தி புதிய பொலிவை ஏற்படுத்தும் பொருட்டு பல்வேறு துறைகளின் வல்லுனர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், கலைத்துறை வல்லுனர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.
அவர்களும் பல்வேறு கருத்துக்களை கூறினர்.
இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகராட்சி செயற்பொறியாளர் (பொறுப்பு) ராஜசேகரன் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களின் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி தமிழக அரசு தனது பிரதிநிதிகளை நேற்று நியமித்தது.
இந்த நிலையில் இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமியிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதனால் கர்நாடகத்திற்கு ஏற்படும் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் குறித்து ஆராய வேண்டும். இதுகுறித்து நிபுணர்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும். கர்நாடகத்தின் நலனை காக்க மாநில அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு குமாரசாமி கூறினார். #CauveryManagementAuthority #Kumaraswamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்