என் மலர்
நீங்கள் தேடியது "Cauvery Management Authority"
- காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று நடக்கிறது.
- இது காணொலி வாயிலாக நடைபெறும் என கூறப்படுகிறது.
புதுடெல்லி:
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் திடீரென கர்நாடக அரசு தண்ணீரை நிறுத்தி விட்டது.
இரண்டாவது கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மேலும் அனைத்துக் கட்சி அவசர ஆலோசனைக் கூட்டமும் நடந்தது. இதில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
இதற்கிடையே, ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த பிறகும் கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவதுதான் கடைசி முடிவு என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து இருந்தார். மேற்படி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 21-ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.
இந்த விசாரணையின்போது காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன? என நீதிபதிகள் கேட்கக்கூடும் என்பதால், அதுகுறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் அவசரமாக கூட இருக்கிறது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இது காணொலி வாயிலாக நடைபெறும் என கூறப்படுகிறது.
இதில் தமிழ்நாடு அரசுசார்பில் பங்கேற்கும் அதிகாரிகள் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட போராடுவார்கள். தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று நடைபெறுவதால் அதில் தமிழகத்தின் நிலை குறித்து அதிகாரிகள் எடுத்துக் கூறுவார்கள். அதன்பேரில், காவிரி மேலாண்மை ஆணையம் நியாயமான உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழகத்திற்கு நாள்தோறும் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட பிறப்பித்த உத்தரவு.
- உச்சநீதிமன்றத்தில் 6ம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் கர்நாடகா மனு தாக்கல்.
காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மறு ஆய்வு செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு நாள்தோறும் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட கோரும் தமிழ்நாடு அரசின் மனு, உச்சநீதிமன்றத்தில் 6ம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் கர்நாடகா மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளது
- கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை.
காவிரி நீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தரா மையா இன்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளது. இதனால் காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதன் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- காவிரி நீரை திறந்து விடாததால் காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்ட தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது.
- உடனே காவிரியில் தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்
சென்னை:
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் இன்று மதியம் கூடுகிறது.
தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தரவேண்டிய காவிரி நீரை திறந்து விடாததால் காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்ட தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது.
அதன் அடிப்படையில் இந்த கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய சேர்மன் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இதில் தமிழ்நாட்டின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இன்றைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு முறைப்படி வழங்காததால், உடனே காவிரியில் தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இந்த மாதம் வரை தமிழகத்திற்கு 40 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா திறந்து விடாமல் பாக்கி வைத்துள்ளது. அதுகுறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
- காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20-வது கூட்டம் டெல்லியில் இன்று காலை தொடங்கியது.
- கோடைக்கால நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
புதுடெல்லி:
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20-வது கூட்டம் டெல்லியில் இன்று காலை தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் ஆலோசனை நடந்தது.
தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது தவிர கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அரசு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கோடைக்கால நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
பருவமழை மற்றும் பாசன ஆண்டு விரைவில் தொடங்க உள்ள நிலையில் காவிரியில் மழைஅளவு, நீர் வரத்து, நீர் இருப்பு, தரவுகள் பற்றி மற்ற அம்சங்கள் குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
- கர்நாடக அரசின் முயற்சி உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும்.
- புதிய திட்டங்களை பரிசீலிப்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி கிடையாது.
கர்நாடகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசின் முயற்சிக்கு, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறி உள்ளதாவது: மேகதாது அணை திட்டத்தை கொண்டு வரும் கர்நாடக அரசின் முயற்சி உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும். மேகதாது அணை விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசனை உள்ளிட்ட எதையும் செய்ய முடியாது.
புதிய திட்டங்களுக்கான அனுமதி போன்றவற்றை பரிசீலிப்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி கிடையாது. காவிரி விவகாரத்தில் தீர்ப்பு செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதே காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணியாகும். கர்நாடக அரசு அனுமதியின்றி செயல்படுத்தும் நீர் திட்டங்களை தடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் தவறிவிட்டது. இவ்வாறு அந்த மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தமிழகம் எதிர்ப்பு
- முன்னதாக ஜூன் 17, 23 தேதிகளில் நடைபெற இருந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
டெல்லியில் நாளை நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவது குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி, மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். தமிழக அரசின் எதிர்ப்பு நிலை காரணமாக ஏற்கனவே ஜூன் 17, 23 தேதிகளில் நடைபெறவிருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஒத்தி வைக்கப் படுவதாக காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
- மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
- காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் முதலில் ஜூன் 17-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது.
சென்னை:
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு கட்ட முயற்சி செய்யும் மேகதாது அணை பற்றி விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
அதோடு இந்த கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி குழுவையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி அனுப்பி உள்ளார். என்றாலும் கர்நாடக அரசு தனது முடிவில் தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை தள்ளி வைப்பதாக அதன் தலைவர் ஹல்தர் அறிவித்துள்ளார். அதன்படி அடுத்தமாதம் (ஜூலை 6-ந்தேதி) கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் முதலில் ஜூன் 17-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. அது 23-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது 2-வது முறையாக மீண்டும் இந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தின் முடிவில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு இந்த மாதம்(ஜூலை) 31.24 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் என்பதில் ஆணையம் உறுதியோடு இருக்க வேண்டும். அது மட்டுமல்ல இந்த மாதத்திற்கான தண்ணீரை திறந்து விடுவதோடு, வருகின்ற மாதம் தோறும் தமிழகத்திற்கான தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்பதில் மேலாண்மை ஆணையம் கண்காணிப்பை மேற்கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவு வறட்சியின் விளிம்பில் இருந்த தமிழக விவசாயிகளுக்கு கிடைத்திருக் கின்ற முதல் வெற்றியாகும். எனவே தற்போதைய மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்கும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை முறையாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GKVasan
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் மசூத் அசார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நதிநீர் பங்கீடு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் ஜூலை மாத பங்காக தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மசூத் உசைன் கூறியதாவது:-
நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதில் மகிழ்ச்சி. ஆணையத்தின் பணிகள், தேவையான கட்டுமானம், நீர் இருப்பு, திறப்பு அளவு தகவல்கள் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு கூடுதலாக 3 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் ஜூலை 5ம் தேதி நடைபெறும்.
அதுபோக, ஜூலை மாத பங்கீட்டை கர்நாடகா திறந்து விட வேண்டும். காவிரி ஆணைய உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் மதிக்க வேண்டும்.
என அவர் கூறினார். தமிழக உறுப்பினர் சுப்பிரமணியன் கூறுகையில், “காவிரி ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கர்நாடக அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம் செயல்படுத்தவில்லை என்றால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பின்னர் பார்க்கப்படும். கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் எந்த கருத்தையும் கூட்டத்தில் முன் வைக்கவில்லை” என தெரிவித்தார்.