search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers' Struggle"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்துக்கு வினாடிக்கு 21ஆயிரத்து 964 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

    கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 21ஆயிரத்து 964 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மேல்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. புட்டஅன்னையா என்பவரது தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மேலும் ஸ்ரீரங்கபட்டினம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விவசாய சங்கங்கள் சார்பில் கள் இறக்க அனுமதி கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பனை, தென்னை மரங்களில் கள் இறக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். தீங்கு விளைவிக்கும் சாரா யக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்.

    சேலம்:

    விவசாய முன்னேற்ற கழகம், தமிழ்நாடு கள் இயக்கம், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் உள்பட பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் கள் இறக்க அனுமதி கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தொடர்ந்து ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்ற விவசாய முன்னேற்ற கழக நிறுவன தலைவர் செல்லராசாமணி நிருபர்களிடம் கூறியதாவது:

    பனை, தென்னை மரங்களில் கள் இறக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். தீங்கு விளைவிக்கும் சாரா யக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்.

    போராட்டம்

    கள் விற்பனைக்கு அனு மதி அளிக்க கேட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 21-ந் தேதி கள் இறக்கி விற்கும் போராட்டம் நடைபெறும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கள் இறக்கி விற்க அனுமதிக்கும் கட்சிக்கு விவசாயிகள் ஆதர வளிப்பார்கள். மேகதாது அணை கட்டுவதை தடுக்கா விட்டால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதி பாலைவனமாகிவிடும்.

    கொப்பரை தேங்காயை மத்திய அரசு வருடம் முழுவதும் கொள்முதல் செய்து கிலோ ஒன்றுக்கு ரூ.150 வழங்க வேண்டும். தேங்காய் எண்ணையை ரேஷன் கடைகளில் விற்க வேண்டும்.

    சத்துணவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வாரத்தில் 2 முறை இளநீர் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கள் நல்லுசாமி, இயற்கை விவசாயிகள் சங்க தலைவர் தங்கராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
    • அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த கலப்பளாம்பட்டு கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்காத்திருப்பு போராட்டம் கடந்த 7-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது.

    10-வது நாளாக நேற்று கலப்பளாம்பட்டு கிராமத்தில் விவசாயிகள் கருப்பு துணியால் வாயை கட்டிக் கொண்டு, கையில் திருவோடு ஏந்தியும், தேங்காய் உடைத்தும், பாலை கீழே ஊற்றி போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வஜ்ஜிரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி, கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இயற்கை விவசாயி பிரபாகரன் வரவேற்றார்.

    இதில் உழவர்களின் விவசாயிகளின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும், குறைந்தப்பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய, சட்டம் இயற்ற வேண்டும். தென்னை, பனையில் கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும்.

    தேங்காய், கடலை, நல்லெண்ணைபோன்ற எண்ணெய் வகைகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளில் மானிய விலையில் விற்க வேண்டும்.

    கோரிக்கை

    கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவிற்கு, 150 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும்.செய்ய வேண்டும். தேங்காய் ஒரு டன், 40 ஆயிரம் ரூபாய் என கொள்முதல் செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கு, 3,000 ரூபாய், கரும்பு டன்னுக்கு 5,000 ரூபாய், உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

    இதில் நெமிலி, பனப்பாக்கம், பாணாவரம், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உரித்த தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் வழங்க வேண்டும்.
    • தமிழக அரசே தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு அருகே மொளசி பகுதியில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உரித்த தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் வழங்க வேண்டும், தமிழக அரசே தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 140 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் பெருமாள் தலைமை தாங்கினார். விவசாயிகள் பூபதி, ஆதிநாராயணன், நல்லா கவுண்டர், முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற னர். சாலையில் தேங்காயை உடைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காவிட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
    • தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை திரட்டி கோட்டையை முற்றுகையிடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசி பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்துகள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 6-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காவிட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். விவசாயிகளின் அவல நிலையை மத்திய மாநில அரசுகளுக்கு உணர்த்தும் வகையில் கஞ்சி தொட்டி அமைத்து கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தில் இருந்து விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். 10 அம்ச கோரிக்கைகளை பரிசீலனை செய்து விவசாயிகளை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை திரட்டி கோட்டையை முற்றுகையிடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தேங்காய்களை கையில் ஏந்தியபடி போராட்டம் நடத்தினர்.

    பல்லடம்:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் நடைபெற்று வருகிறது.

    பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும், மத்திய அரசு எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கை படி சாகுபடி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து அனைத்து விவசாய பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்,

    தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தேங்காய்களை கையில் ஏந்தியபடி போராட்டம் நடத்தினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடுவனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஒரு குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுவதில்லை .

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியான பாக்கம், புதூர், கானாங்காடு, தொழுவந்தாங்கல், மூக்கனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் வைப்பு தொகையாகவும் மற்றும் பயிர் கடன், நகை கடன் உள்ளிட்டவைகளை பெற்றும் வந்தனர். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கடுவனூர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் தான் பயிர் கடன் தரப்படும் என்றும் கூறி விவசாயிகளை அலை க்கழிப்பது மட்டுமல்லாமல் உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளையும் வழங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பயிர் கடன் தர மறுப்பதை கண்டித்தும், உடனடியாக பயிர் கடன் வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதயடுத்துவிவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திகாயத்தின் கைதுக்கு ஆம் ஆத்மி கட்சியும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
    • ஏராளமான போலீசார் எல்லைகளில் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி :

    விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று (திங்கட்கிழமை) விவசாயிகள் போராட்டம் (மகா பஞ்சாயத்து) நடத்த முடிவு செய்துள்ளனர்.

    வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்த அமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சாதான் இதற்கும் அழைப்பு விடுத்திருந்தது.

    இதை ஏற்று டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் நேற்று முதலே ஜந்தர் மந்தரை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் ஆக்கிரமித்து இருந்ததால், இந்த போராட்டத்தை தீவிரமாக ஒடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லியை அடையும் அனைத்து சாலைகளிலும் தடுப்பு வேலிகள் அமைத்து மூடியுள்ளனர். அத்துடன் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த ஏராளமான போலீசாரை எல்லைகளில் காவலுக்கு நிறுத்தி உள்ளனர்.

    மேலும் ரெயில்வே தண்டவாளங்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது. எந்தவித அசம்பாவிதங்களையும் தவிர்ப்பதற்காக டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாரதீய கிசான் யூனியன் செய்தி தொடர்பாளரும், சன்யுத் கிசான் மோர்சசா அமைப்பின் மூத்த தலைவருமான ராகேஷ் திகாயத் நேற்று ஜந்தர் மந்தர் சென்று கொண்டிருந்தார்.

    அவரை காசிப்பூரில் தடுத்து நிறுத்திய டெல்லி போலீசார், பின்னர் கைது செய்து மது விகார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு வைத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடந்தது.

    போலீசாரின் வற்புறுத்தலை தொடர்ந்து அவர் போராட்டக்களம் செல்லாமல் திரும்பி சென்றார். எனினும் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் ஆணைப்படி இயங்கும் டெல்லி போலீசாரால், விவசாயிகளின் குரலை அடக்க முடியாது என அவர் தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

    திகாயத்தின் கைதுக்கு ஆம் ஆத்மி கட்சியும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன் வைத்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வானூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுதரகோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
    • நிலத்தை மீட்டுதரகோரி விவசாயிகள் கோஷம் போட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தைலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காடு பகுதியில் நிலமற்ற ஆதி திராவிட விவசாயிகளுக்கு 11 ஏக்கர் நிலம் 1965-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை விவசாயிகள் ஒன்று திரண்டனர். அவர்கள் வானூர் தாலுகா அலுவலகம் முன்புபோராட்டம் செய்தனர். அப்போது நிலத்தை மீட்டுதரகோரி விவசாயிகள் கோஷம் போட்டனர்.

    அதன்பின்பு தாசில்தார் (பொறுப்பு)பிரபு வெங்கடேசிடம் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைக்ககூடாது என்று கிராம பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • பெரியபாளையம் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் ஆறு வழிச்சாலைக்காக விளைநிலத்தை சமன் செய்யும் பணி தொடங்கியது

    பெரியபாளையம்:

    பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த சாலை கண்ணிகை