என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers' Struggle"

    • இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி பெண்கள் கோஷம் எழுப்பினார்கள்.
    • விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏராளமான சலவை தொழிலாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    திருச்சி:

    கொள்ளிடம் அழகிரிபுரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டு ரூ.7 கோடியில் கட்டிய தடுப்பணை சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக சலவை தொழில் செய்து வந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து சலவை தொழிலாளர்களுக்கு தடுப்பு சுவர், படித்துறை கட்டி தர கோரியும், காவிரியுடன் அய்யாற்றை இணைக்க வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தப்பட்டது.

    இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி பெண்கள் கோஷம் எழுப்பினார்கள். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏராளமான சலவை தொழிலாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. 

    • தினசரி மார்க்கெட் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.
    • உழவர்சந்தை விவசாயிகளின் போராட்டத்தால் தாராபுரத்தில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணாநகரில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு தாராபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை கொண்டு வந்து அதிகாலை 4 மணி முதல் விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தரைக்கடை காய்கறி வியாபாரிகள் உழவர் சந்தை அருகே உள்ள பொள்ளாச்சி சாலையில் சாலையோரம் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், விற்பனை ஆகாத காய்கறிகளை குப்பையில் கொட்டுவதாகவும் உழவர்சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இது தொடர்பாக ஏற்கனவே போராட்டம் நடத்தி உள்ளனர். அப்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதும், பின்னர் மீண்டும் தரைக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்வதுமாக இருந்தனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி தாராபுரம் உழவர்சந்தை விவசாயிகள் இன்று காலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். காய்கறிகளை விற்காமல் தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். உழவர் சந்தையிலேயே சமையல் செய்து சாப்பிட்டு உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் தாராபுரம் தாசில்தார் திரவியம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் , போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொள்ளாச்சி சாலையில் உள்ள வியாபாரிகளை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.


    இது குறித்து ரங்கபாளையத்தை சேர்ந்த விவசாயி கருப்புசாமி கூறுகையில், நாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழ வகைகள், ஊட்டி காய்கறிகள் என அனைத்தையும் உழவர்சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு மீதியை மொத்த மார்க்கெட்டுக்கு கொடுத்து வருகிறோம். தாராபுரத்தில் உள்ள தினசரி மார்க்கெட் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.

    மார்க்கெட்டில் கடை அமைத்தவர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் தற்போது உழவர்சந்தை அருகே உள்ள பொள்ளாச்சி சாலை மற்றும் உழவர் சந்தையை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருவதால் எங்களுடைய வியாபாரம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை நாங்கள் போராட்டம் நடத்திய போதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    உழவர்சந்தை அருகிலேயே கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருவதால் பொது மக்கள் உழவர் சந்தைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் நாங்கள் கொண்டுவரும் காய்கறிகளில் 30 சதவீதம் மற்றும் 40 சதவீதம் மட்டுமே விற்பனை செய்து பின்னர் குப்பையில் போட வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும். பொள்ளாச்சி சாலை மற்றும் உழவர் சந்தை பகுதிகளில் இருந்து 200 மீட்டர் தள்ளி தரைக்கடை வியாபாரிகள் கடைகளை அமைக்க வேண்டும் என்றனர். சாலையோர கடை வியாபாரிகள் கூறுகையில்,

    தாராபுரம் தினசரி மார்க்கெட் இடிக்கப்பட்டு வணிக வளாகம் கட்டி வருவதால் அரசின் விதிப்படி சாலை ஓரங்களில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம் என்றனர். உழவர்சந்தை விவசாயிகளின் போராட்டத்தால் தாராபுரத்தில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

    • கடுவனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஒரு குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுவதில்லை .

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியான பாக்கம், புதூர், கானாங்காடு, தொழுவந்தாங்கல், மூக்கனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் வைப்பு தொகையாகவும் மற்றும் பயிர் கடன், நகை கடன் உள்ளிட்டவைகளை பெற்றும் வந்தனர். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கடுவனூர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் தான் பயிர் கடன் தரப்படும் என்றும் கூறி விவசாயிகளை அலை க்கழிப்பது மட்டுமல்லாமல் உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளையும் வழங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பயிர் கடன் தர மறுப்பதை கண்டித்தும், உடனடியாக பயிர் கடன் வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதயடுத்துவிவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

    • பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தேங்காய்களை கையில் ஏந்தியபடி போராட்டம் நடத்தினர்.

    பல்லடம்:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் நடைபெற்று வருகிறது.

    பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும், மத்திய அரசு எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கை படி சாகுபடி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து அனைத்து விவசாய பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்,

    தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தேங்காய்களை கையில் ஏந்தியபடி போராட்டம் நடத்தினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காவிட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
    • தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை திரட்டி கோட்டையை முற்றுகையிடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசி பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்துகள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 6-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காவிட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். விவசாயிகளின் அவல நிலையை மத்திய மாநில அரசுகளுக்கு உணர்த்தும் வகையில் கஞ்சி தொட்டி அமைத்து கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தில் இருந்து விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். 10 அம்ச கோரிக்கைகளை பரிசீலனை செய்து விவசாயிகளை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை திரட்டி கோட்டையை முற்றுகையிடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    • விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உரித்த தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் வழங்க வேண்டும்.
    • தமிழக அரசே தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு அருகே மொளசி பகுதியில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உரித்த தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் வழங்க வேண்டும், தமிழக அரசே தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 140 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் பெருமாள் தலைமை தாங்கினார். விவசாயிகள் பூபதி, ஆதிநாராயணன், நல்லா கவுண்டர், முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற னர். சாலையில் தேங்காயை உடைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

    • 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
    • அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த கலப்பளாம்பட்டு கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்காத்திருப்பு போராட்டம் கடந்த 7-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது.

    10-வது நாளாக நேற்று கலப்பளாம்பட்டு கிராமத்தில் விவசாயிகள் கருப்பு துணியால் வாயை கட்டிக் கொண்டு, கையில் திருவோடு ஏந்தியும், தேங்காய் உடைத்தும், பாலை கீழே ஊற்றி போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வஜ்ஜிரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி, கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இயற்கை விவசாயி பிரபாகரன் வரவேற்றார்.

    இதில் உழவர்களின் விவசாயிகளின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும், குறைந்தப்பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய, சட்டம் இயற்ற வேண்டும். தென்னை, பனையில் கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும்.

    தேங்காய், கடலை, நல்லெண்ணைபோன்ற எண்ணெய் வகைகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளில் மானிய விலையில் விற்க வேண்டும்.

    கோரிக்கை

    கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவிற்கு, 150 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும்.செய்ய வேண்டும். தேங்காய் ஒரு டன், 40 ஆயிரம் ரூபாய் என கொள்முதல் செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கு, 3,000 ரூபாய், கரும்பு டன்னுக்கு 5,000 ரூபாய், உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

    இதில் நெமிலி, பனப்பாக்கம், பாணாவரம், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • விவசாய சங்கங்கள் சார்பில் கள் இறக்க அனுமதி கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பனை, தென்னை மரங்களில் கள் இறக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். தீங்கு விளைவிக்கும் சாரா யக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்.

    சேலம்:

    விவசாய முன்னேற்ற கழகம், தமிழ்நாடு கள் இயக்கம், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் உள்பட பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் கள் இறக்க அனுமதி கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தொடர்ந்து ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்ற விவசாய முன்னேற்ற கழக நிறுவன தலைவர் செல்லராசாமணி நிருபர்களிடம் கூறியதாவது:

    பனை, தென்னை மரங்களில் கள் இறக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். தீங்கு விளைவிக்கும் சாரா யக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்.

    போராட்டம்

    கள் விற்பனைக்கு அனு மதி அளிக்க கேட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 21-ந் தேதி கள் இறக்கி விற்கும் போராட்டம் நடைபெறும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கள் இறக்கி விற்க அனுமதிக்கும் கட்சிக்கு விவசாயிகள் ஆதர வளிப்பார்கள். மேகதாது அணை கட்டுவதை தடுக்கா விட்டால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதி பாலைவனமாகிவிடும்.

    கொப்பரை தேங்காயை மத்திய அரசு வருடம் முழுவதும் கொள்முதல் செய்து கிலோ ஒன்றுக்கு ரூ.150 வழங்க வேண்டும். தேங்காய் எண்ணையை ரேஷன் கடைகளில் விற்க வேண்டும்.

    சத்துணவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வாரத்தில் 2 முறை இளநீர் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கள் நல்லுசாமி, இயற்கை விவசாயிகள் சங்க தலைவர் தங்கராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • தமிழகத்துக்கு வினாடிக்கு 21ஆயிரத்து 964 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

    கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 21ஆயிரத்து 964 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மேல்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. புட்டஅன்னையா என்பவரது தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மேலும் ஸ்ரீரங்கபட்டினம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • சாலையோர வியாபாரிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மறியல் போராட்டத்தின் காரணமாக பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம் பாளையத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தென்னம் பாளையம் பகுதியில் சாலையோரம் வியாபாரிகள் பலர் கடைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கப்பட்டு வருவதாகவும் , இதனால் சந்தை பகுதிகளில் வியாபாரிகள் ரோட்டோரம் காய்கறி கடைகளை அமைக்க கூடாது என விவசாயிகள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

    மேலும் கடந்த ஒரு வார காலமாக விவசாயிகள் உழவர் சந்தைக்கு செல்லாமல் சாலையோர வியாபாரிகளுக்கு போட்டியாக திருப்பூர் பல்லடம் சாலையிலேயே கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது .

    பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலை தென்னம் பாளையத்தில் சாலையோர வியாபாரிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது எனவும் மாநகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்லடம் சாலை டி.கே.டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர வியாபாரிகளும் போட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கலெக்டர் அலுவலகத்திற்கு பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் வந்தனர்.
    • மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் கடந்த 1 - ந்தேதி நடைபெற்றது. இதில், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகா அரசின் வரைவு திட்ட அறிக்கை குறித்த வாக்கெடுப்பில் தமிழக அரசின் பிரதிநிதியான நீர் வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா எதிர்ப்பு தெரிவித்தார். இந்த எதிர்ப்பையும் மீறி வாக்கெடுப்பு நடத்த ஆணையத் தலைவர் அனுமதித்தபோது, அதில் சந்திப் சக்சேனா பங்கேற்றார்.

    உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கோடு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது மட்டுமல்லாமல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும் முரணானது என்று தமிழகத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள், விவசாயிகள் தெரிவித்தனர். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் வந்தனர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் தீபக்ஜேக்கப்பிடம் , மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளித்தனர்.

    இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று கொண்டு மேகதாது அணை தொடர்பான காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்மான நகலை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். உடனே போலீசார் எரிந்து கொண்டிருந்த நகல் மீது தண்ணீர் ஊற்றினர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீஸ் நடவடிக்கை முற்றிலும் தவறானது.
    • நாட்டின் முக்கியமானவற்றுக்காக நீங்கள் போராடுகிறீர்கள்.

    போலீஸ் நடவடிக்கையால் காயம் அடைந்த விவசாயியும், முன்னாள் ராணுவ வீரரான குர்மீத்சிங் குடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தொலைபேசியில் பேசினார். செல்போன் மூலம் இந்த உரையாடல் நடந்தது.

    காயம் அடைந்த விவசாயியிடம் எங்கே காயங்கள் ஏற்பட்டது என்று ராகுல் காந்தி கேட்டார். விவசாயி தனது கைகளிலும், கண்ணுக்கு அருகிலும் காயம் ஏற்பட்டதாக பதில் அளித்தார். போலீஸ் நடவடிக்கையால் எத்தனை போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர் என்றும் ராகுல் கேட்டார். இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி பேசியதாவது:-

    போலீஸ் நடவடிக்கை முற்றிலும் தவறானது. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். கவலை படாதீர்கள். நாட்டின் முக்கியமானவற்றுக்காக நீங்கள் போராடுகிறீர்கள். நாட்டின் உணவு வழங்குவோர் மீது மோடி அரசு சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறது.

    இவ்வாறு அந்த விவசாயியிடம் ராகுல் காந்தி பேசினார்.

    ×