என் மலர்
நீங்கள் தேடியது "பேச்சுவார்த்தை"
- 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
- இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை மாலைக்கு ஒத்திவைப்பு என தகவல் வெளியாகி உள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.
இந்திய தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இந்திய ராணுவ அதிகாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
ஆனால் சில மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியில் இறங்கி, மீண்டும் டிரோன்களை ஏவி வாலாட்டியது. அதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அதன் பின் எல்லையில் வெடிகுண்டு சத்தங்கள் ஓய்ந்தன.
4 நாட்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது. மின்வினியோகமும் வழங்கப்பட்டது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் வழக்கம்போல் நடைபெற்றது.
தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக்கட்டமாக, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை தொடங்கியது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே 2வது முறையாக ராணுவ இயக்குனர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 3-வது கட்ட பேச்சுவார்த்தை அடுத்த 3 நாட்களில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 4 நாட்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது.
- இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை மாலைக்கு ஒத்திவைப்பு என தகவல் வெளியாகி உள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.
இந்திய தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இந்திய ராணுவ அதிகாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
ஆனால் சில மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியில் இறங்கி, மீண்டும் டிரோன்களை ஏவி வாலாட்டியது. அதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அதன் பின் எல்லையில் வெடிகுண்டு சத்தங்கள் ஓய்ந்தன.
4 நாட்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது. மின்வினியோகமும் வழங்கப்பட்டது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் வழக்கம்போல் நடைபெற்றது.
தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக்கட்டமாக, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலைக்கு ஒத்திவைப்பு என தகவல் வெளியாகி உள்ளது.
3-வது கட்ட பேச்சுவார்த்தை அடுத்த 3 நாட்களில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 4 நாட்கள் போரில் பாகிஸ்தான் 140 பேரை பலி கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது.
- அமெரிக்கா கேட்டுக் கொண்டதால் இந்தியா சமரசமாக செல்ல சம்மதம் தெரிவித்தது.
புதுடெல்லி:
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து கடந்த 7-ந்தேதி இரவு இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை மேற்கொண்டன. இதில் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வந்த 9 முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்தியாவை தாக்க முயற்சி செய்தது. ஆனால் இந்தியாவின் வலிமையான வான் பாதுகாப்பு அமைப்பு அந்த ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் நடுவானில் தடுத்து அழித்தன. இதனால் இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த இயலவில்லை.
அதே சமயத்தில் 8, 9, 10-ந்தேதிகளில் 3 நாட்கள் பாகிஸ்தானிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் இந்தியாவின் முப்படைகள் மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டன. 4 நாட்கள் நடந்த தொடர் தாக்குதலில் பாகிஸ்தான் நிலைக்குலைந்தது.
நூறுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், 35-க்கும் மேற்பட்ட ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். இதனால் 4 நாட்கள் போரில் பாகிஸ்தான் 140 பேரை பலி கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் நேற்றும், இன்றும் போரில் தாங்கள் வெற்றி பெற்றது போல தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். இதையடுத்து இந்திய ராணுவம் தரப்பில் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக ஆதாரப்பூர்வ செய்திகள் இன்று வெளியிடப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் ராணுவ நிலைகள், விமானப்படை நிலையங்கள், ரேடார் சாதனங்கள் இருந்த பகுதிகள், முன்பு எப்படி இருந்தன? இந்தியா தாக்குதல் நடத்திய பிறகு அவை எப்படி உருக்குலைந்து கிடக்கின்றன என்பதை செயற்கை கோள் படங்களை வெளியிட்டு இந்திய ராணுவம் இன்று உறுதிப்படுத்தி உள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 11 ராணுவ தளங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெள்ள தெளிவாக தெரிய வந்தது.
அது மட்டுமின்றி பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்ட செயற்கைகோள் படங்களையும் இந்திய ராணுவம் வெளியிட்டு இருக்கிறது. குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் தலைமை பயிற்சி முகாம் தரைமட்டமாக்கப்பட்ட படம் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த அடி கொடுத்து இருப்பதும் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்திய விமானப்படை நேற்று முன்தினம் பாகிஸ்தானின் ராவல்பிண்டி வரை ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ராணுவ தலைமையகத்தின் ரேடார் நிலையம், வெடிப்பொருள் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை அழித்து இருப்பதற்கு இந்திய விமானப்படைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மேலும் பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களில் முக்கிய ஒன்றாக கருதப்படும் போலாரி விமானப்படை தளம் இந்திய ஏவுகணைகளால் துவம்சம் செய்யப்பட்டது. செயற்கைகோள் படங்கள் மூலம் துல்லியமாக தெரிய வந்துள்ளன. அந்த விமானப்படை தளத்தில் கட்டிடங்கள் நொறுக்கப்பட்டு இருப்பது தெள்ள தெளிவாக பாதுகாப்பு அமைச்சகம் மூலம் வெளியிடப்பட்டு உள்ளது.
சீன செயற்கைகோள் படங்களும் பாகிஸ்தானில் விமானப்படை தளங்கள் நொறுக்கப்பட்டு இருப்பதை துல்லியமாக காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமாபாத் அருகே சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நூகான் விமானப்படை தளம் பெரும்பகுதி அழிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கான செயற்கைக் கோள் படத்தையும் இந்தியா வெளியிட்டு இருக்கிறது. இந்த விமானப்படை தளத்தில் ஓடும் தளங்கள் முற்றிலும் சேதம் ஆக்கப்பட்டுள்ளன. இந்த விமானப்படை தளத்தை இனி பயன்படுத்த இயலாது என்ற நிலை உருவாக்கப்பட்டதன் எதிரொலியாகத் தான் பாகிஸ்தான் பயந்து பணிந்து அமெரிக்காவுடன் கெஞ்சி இந்தியாவுடன் சமரசம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்கா கேட்டுக் கொண்டதால் இந்தியா சமரசமாக செல்ல சம்மதம் தெரிவித்தது. அதோடு இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தவும் ஒத்துக்கொண்டது.
இதற்கிடையே பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த 19 நாட்களாக பீரங்கி தாக்குதல் நடத்தி வந்தனர். நேற்று பீரங்கி தாக்குதல் முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் எல்லையில் அமைதி நிலவியது.
மீண்டும் பீரங்கி தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா பாகிஸ்தானை எச்சரித்து இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.
- இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
- தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆபரேசன் சிந்தூர் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முப்படை தளபதிகள் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு செய்தியாளர்களை விளக்கம் அளிக்கவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
- இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு 11 மணிக்கு பிறகு எல்லைப்பகுதிகளில் எந்த தாக்குதலும் நடைபெறாததால் மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது.
- மீன்பிடித்ததல் தொடர்பாக வெகுநாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.
- ஆறு பேர் கொண்ட குழு நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
ராமேசுவரம்:
தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே பாக் ஜலசந்தியில் மீன்பிடித்ததல் தொடர்பாக வெகுநாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.
கடந்த 1974-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம் காரணமாக, அப்பகுதி இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போதிலிருந்து ராமேசுவரம் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை வைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் கைது செய்து வந்த இலங்கை அரசு இதன் மூலம் தமிழக மீனவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் பல அரசியல் வாதிகளும் அதற்கு ஆதரவு தெரிவித்தும் வந்துள்ளனர். ஆனால் சில ஆண்டுகளாகவே இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்காமலே சென்று கொண்டிருக்கிறது.
இதனிடையே ராமேசுவரம் மீனவர்கள் முயற்சியால் ராமேசுவரத்திலிருந்து விசைப்படகு தலைவர் ஜேசு ராஜா, சகாயம், ஆல்வின், ஜஸ்டின், ஜெர்மனியஸ் ஆகியோர் கொண்ட 5 பேர் கொண்ட குழு இன்று (செவ்வாய் கிழமை) விமானம் மூலம் புறப்பட்டு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சென்றடைகின்றனர்.
ஏற்கனவே நாகப்பட்டினம் சேர்ந்த சுரேஷ் என்பவர் இலங்கையில் இருப்பதால் அவருடன் சேர்ந்து ஆறு பேர் கொண்ட குழு நாளை புதன்கிழமை அன்று வாவுலியாவில் உள்ள அருந்ததி தனியார் தங்கும் விடுதியில் இருநாட்டு மீனவர்களும் சந்தித்து காலை 10 மணி அளவில் சந்தித்து மீனவர்களின் பிரச்சனைகளை ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதைத்தொடர்ந்து இலங்கையில் உள்ள மீன்வளத்துறை அமைச்சர்களையும் மற்றும் அதற்குரிய அதிகாரிகளையும் சந்தித்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வகையில் முடிவு எடுக்கப்படும் என்று விசைப்படகு மீனவ சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர்.
- ஊரணிபுரம் மதுக்கடை அருகே தகராறு ஏற்பட்டது.
- போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
திருவோணம்:
திருவோணம் அருகே உள்ள காரியாவிடுதி வெட்டி க்காட்டான் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 43).
கூலித் தொழி லாளி. இவருக்கும், புது விடுதியை சேர்ந்த ரவி என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரணிபுரம் மதுக்கடை அருகே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது
இந்நிலையில், ரவி சம்பவத்தன்று பீர் பாட்டிலால் வெள்ளை ச்சாமியை குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த வெள்ளைச்சாமி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் வெள்ளைச்சாமி அளித்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார்.
வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரவியை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ரவியை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் எனக்கூறி வெள்ளைச்சாமியின் பெற்றோர், கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் திருவோணம் காவல் நிலையத்தில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்,
- கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படுவதில்லை.
- குடிநீர் வினியோகத்தை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொத்தமங்கலம் ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக ராஜகொத்தமங்கலம், சிதம்பரகொத்தமங்கலம், பெரிய கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படுவது இல்லை என கூறியும், குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரியும் கிராம மக்கள் திடீரென காலிக்குடங்களுடன் பள்ளங்கோவில் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குடிநீர் வினியோகத்தை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதன்பேரில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக திருத்துறைப்பூண்டி -மன்னார்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கடுவனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஒரு குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுவதில்லை .
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியான பாக்கம், புதூர், கானாங்காடு, தொழுவந்தாங்கல், மூக்கனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் வைப்பு தொகையாகவும் மற்றும் பயிர் கடன், நகை கடன் உள்ளிட்டவைகளை பெற்றும் வந்தனர். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கடுவனூர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் தான் பயிர் கடன் தரப்படும் என்றும் கூறி விவசாயிகளை அலை க்கழிப்பது மட்டுமல்லாமல் உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளையும் வழங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பயிர் கடன் தர மறுப்பதை கண்டித்தும், உடனடியாக பயிர் கடன் வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதயடுத்துவிவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
- தண்ணீர் எடுக்க அடுத்த தெருவிற்கு செல்ல வேண்டிய அவலநிலை.
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து சாலையில் பள்ளம் தோண்டி இணைக்க வேண்டிய நிலை.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், மாவடுகுறிச்சி ஊராட்சி, செல்வவிநாயகபுரத்தில் குடிநீர் வசதி போதிய அளவு இல்லாததால் கூடுதலாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்தி பெண்கள் காலிக்குடங்களுடன் பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரமணி பேராவூரணி போலீசுக்கு தகவல் அளித்தார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முடிவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மூர்த்தி கூறியதாவது:-
குடிநீர் பைப் லைன் மட்டுமே உள்ளது. தண்ணீர் வரவில்லை.
தண்ணீர் எடுக்க அடுத்த தெருவிற்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் என்றும் உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் கூறினார்.
இதுகுறித்து மாவடுகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் பழனிவேல் கூறியதாவது, செல்வவிநாயகபுரத்தில் சில பகுதிகளில் கூடுதல் குடிநீர் வசதிக்காக பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து சாலையில் பள்ளம் தோண்டி இணைக்க வேண்டியுள்ளதால் நெடுஞ்சாலை துறை அனுமதி பெற்று விரைவில் போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார்.
- நேர்காணல் ரத்து செய்யப்பட்டதால் தேர்வாளர்கள் ‘திடீர்’ மறியலில் ஈடுபட்டனர்.
- தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மதுரை
மதுரை மண்டலத்தில் 20-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பருவகால பணியாளர்களை நியமிக்க நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்கா ணல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் தற்காலிக பருவகால உதவு பவர் பணியிடங்களுக்கு 16ந் தேதி (இன்று) காலை 10 மணி அளவில் நேர்காணல் நடக்கிறது.
விண்ணப்பதாரர்கள் மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார் அடையாள அட்டை, இருப்பிட சான்றுகளுடன் நேர்காணலுக்கு வர வேண்டும். இதில் கலந்து கொள்வதற்கு பயணப்படி வழங்கப்படமாட்டாது. நேர்காணலுக்கான நாளில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மற்ற நாட்களில் அனுமதிக்க இயலாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து 50-க்கும் மேற்பட்டோர் குருவிக்காரன் சாலையில் உள்ள நுகர்பொ ருள் வாணிபக் கழக அலுவலகத்துக்கு காலையிலேயே வந்து விட்டனர்.
பணியாளர் தேர்வுக்கான நேர்காணல் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனை கண்டித்து
50-க்கும் மேற்பட்டோர் குருவிக்காரன் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
- வீட்டிலிருந்த ரூ. 31 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது.
- சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரம் கிராமத்தில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடை பெற்று வந்ததுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கீழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடை பெற்று வந்தது.
இந்நிலையில் பிரதாபரா மபுரம், பூவைத்தேடி, ராமர்மடம் கிராம மக்கள் நேற்று நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹரிடம் புகார் மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பிரதாபராமபுரம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு மக்களை சந்தித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது பேசிய பொதுமக்கள் சாராயத்தை ஒழித்தால் நிச்சயம் திருட்டும் குறையும் என கூறினர்.
அப்போது கூடுதலாக தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாகவும் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றலாம் எனவும் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பொதுமக்களிடம் தெரிவித்தார். மேலும் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்த நிலையில் பூவைத்தேடி கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர் வீட்டிலும் திருட்டு சம்பவம் அரங்கேறியிருப்பது தெரியவந்தது.
அவரது வீட்டிலிருந்த 31 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து பொது மக்கள் நாகை - வேளாங்கண்ணி சாலையில் பூவைதேடி கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனே போராட்டம் கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த பகுதியில் சோதனை செய்தனர். வீட்டில் திருடர்கள் பின்புறம் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் 10 சவரன் தங்க நகை கூஜாவில் இருந்ததை திருடர்கள் கவனிக்காததால் நகைகள் தப்பியது.இது குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.






