என் மலர்
நீங்கள் தேடியது "கறிக்கோழி வளர்ப்பு"
- கறிக்கோழி வளர்ப்போர் கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- இதனால் கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் இயங்கி வரும் கறிக்கோழி பண்ணைகளில் கோழிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் விவசாயிகளுக்குக் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 காசுகள் வளர்ப்பு கூலியாக வழங்கி வருகின்றன. உற்பத்திச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய் வளர்ப்பு கூலியாக வழங்கவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.
இதனை வலியுறுத்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், சென்னையில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அலுவலகத்தில் ஜனவரி 21-ம் தேதி (நாளை) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், கால்நடை பராமரிப்புத் துறை-கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோழி வளர்ப்புக் கூலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு சாத்தியக்கூறு இல்லை என கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் வர்த்தக ரீதியிலான ஒப்பந்த விவசாய முறையில் (Contract farming on Commercial basis) கோழிப்பண்ணைகள் நடத்துகின்றனர். அவர்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களில் இருதரப்பினரும் பரஸ்பர உடன்பாட்டுடன் விலை, அளவு, தரம், நேரம் தொடர்பாக கையெழுத்திடுகின்றனர்.
இந்த ஒப்பந்தங்கள் ஏதும் கால்நடை பராமரிப்புத் துறையின் பார்வையின் கீழ் வருவதில்லை. இந்த ஒப்பந்தங்களில் ஒத்துக் கொள்ளப்பட்ட விவரங்கள் ஏதும் கால்நடை பராமரிப்புத் துறைக்கு தெரிவிக்கப்படுவதில்லை. எனவே இதுதொடர்பாக எழும் பிரச்சனைகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை நிலவுகிறது. மேலும் இது வர்த்தக ரீதியிலான தனிநபர்/குழுக்களிடையிலான ஒப்பந்தங்கள் என்பதால், இந்திய ஒப்பந்ததாரர்கள் சட்டம் 1872- ன் (Indian Contracts act,
1872) படி சட்ட நடவடிக்கைகளின் மூலமே தீர்வு காண முடியும்.
இக்காரணங்களால் அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்வதற்கான சாத்தியக்கூறு இல்லை என தெரிவிக்கப்படுகிறது. தனிநபர்/குழுக்களிடையிலான ஒப்பந்தங்கள் தொடர்பான இப்பிரச்சனையை உரிய சட்ட அமைப்பினை நாடி சட்டத்தீர்வு காணும்படி தெரிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோழி வளர்ப்பவர்களின் தொடர் போராட்டத்தால், சந்தையில் கறிக்கோழி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடக்க சாத்தியக்கூறு இல்லாத நிலையில் கறிக்கோழி விலை கிலோ ரூ.400-ஐ எட்டும் அபாயம் இருப்பதாகச் சந்தை வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
முத்தரப்பு பேச்சுவார்த்தை ரத்தான பிறகும் போராட்டத்தை தொடர தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் இயங்கி வருகிறது.
- கறிக்கோழி வளர்ப்புக்கு கூடுதல் செலவாகுவதால் கறிக்கோழி வளர்ப்போருக்கு கூலியை உயர்த்த வேண்டும்.
பல்லடம் :
பல்லடத்தில் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த குழுவானது கறிக்கோழி இறைச்சி நுகர்வை அடிப்படையாக கொண்டு தினமும் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து அறிவித்து வருகிறது. இதனை அடிப்படையாக கொண்டு தமிழகம், கேரளா, ஆந்திரா,கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கறிக்கோழி விற்பனை விலை இருக்கும்.
இதற்கிடையே கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கோழி குஞ்சுகளை 42 நாட்கள் வளர்க்க ஒரு கிலோவிற்கு ரூ.6 முதல் ரூ.9 வரை வளர்ப்பு கூலி வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் உள்ளன. இந்தநிலையில் பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் அரிகிருஷ்ணன், கௌரவத் தலைவர் ஓவியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் சிவசாமி, முத்துசாமி, சரவணன், உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்தனர். கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்க பொருளார் பழனிச்சாமியை சந்தித்து மின் கட்டண உயர்வு, தொழிலாளர் சம்பளம் அதிகரிப்பு, பராமரிப்பு செலவு ஆகியவற்றால் கறிக்கோழி வளர்ப்புக்கு கூடுதல் செலவாகுவதால் கறிக்கோழி வளர்ப்போருக்கு கூலியை உயர்த்த வேண்டும். கறிக்கோழி வளர்ப்பிற்கு கோடைகால ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்க பொருளாளர் பழனிச்சாமி கூறுகையில்:- கறிக்கோழி ஒருங்கிணைப்புக்கு குழு தலைவர் மற்றும் செயலாளர் வெளியூரில் இருப்பதால் அவர்கள் வந்தவுடன் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உங்களது கோரிக்கைகளை பரிசீலித்து இன்னும் 1 வார காலத்திற்குள் பதில் கூறுவதாக தெரிவித்தார்.இதனை கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஏற்றுக்கொண்டனர்.
- கோழி வளர்ப்பு கூலியாக ரூ.20 வழங்க வேண்டும்.
- நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழக கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கறிக்கோழிகளை கையில் ஏந்தியபடி நூதன முறையில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாநில பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குபேரன், பொருளாளர் சண்முகம் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். மாநிலத் தலைவர் லதா, மாநில பொருளாளர் வள்ளி, செயலாளர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கூலி உயர்வு சம்பந்தமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.ஒரு கிலோ கோழி வளர்ப்பு கூலியாக ரூ.20 வழங்க வேண்டும்.
கறி கோழி வளர்ப்புக்கான கூலியை அரசு விலை நிர்ணயம் செய்து தொழிலாளர்களின் நலத்துறை மூலம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் பண்ணைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் கோழிக்குஞ்சு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நல வாரியம் அமைக்க வேண்டும்.
கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு கோழிப்பண்ணைகள் அமைக்க மானியத்துடன் கூடிய வங்கி கடன் காப்பீடு மருத்துவ காப்பீடு திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கோழிப் பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்கு திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






