search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poultry farming"

    • அப்போது கோழிப்பண்ணையில் இருந்த 33 மின்விசிறிகள், மின் மோட்டார்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
    • இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே ரெட்டிச்சாவடி பெரிய காட்டு பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 68). இவருக்கு அதே பகுதியில் கோழி பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணை கடந்த 6 மாதமாக பூட்டி இருந்தது. நேற்று அதன் உரிமையாளர் ராமதாஸ் நேரில் சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அப்போது கோழிப்பண்ணையில் இருந்த 33 மின்விசிறிகள், மின் மோட்டார்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ஆகும். இதுகுறித்து ராமதாஸ் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வணிகரீதியான நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
    • கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் தயாரித்தல் குறித்தும் தொடர்பு இடங்களை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    மொடக்குறிச்சி:

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மொடக்குறிச்சி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள முகாசி அனுமன் பள்ளி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வணிகரீதியான நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானி கிருபாகரன் நாட்டுக்கோழி வளர்ப்பில் கோழிகளுக்கு ஏற்படும் நோய்கள் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் தடுப்பூசிகள் போடுவதன் அவசியம் மற்றும்

    தடுப்பூசியின் மூலம் கட்டுப்படுத்தும் நோய்கள் குறித்தும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் தயாரித்தல் குறித்தும் தொடர்பு இடங்களை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்தும் பயிற்சி அளித்தார்.

    நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் செல்வராஜ், உதவி வேளாண்மை அலுவலர் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு துறையின் திட்டங்களை பற்றி விளக்கினார்கள்.

    தொழில்நுட்ப மேலாளர்கள் விஜயகுமார், மஞ்சுரேகா, நவீன பாரதி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தனர்.

    • கோழி வளர்ப்பு கூலியாக ரூ.20 வழங்க வேண்டும்.
    • நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழக கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கறிக்கோழிகளை கையில் ஏந்தியபடி நூதன முறையில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மாநில பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குபேரன், பொருளாளர் சண்முகம் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். மாநிலத் தலைவர் லதா, மாநில பொருளாளர் வள்ளி, செயலாளர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கூலி உயர்வு சம்பந்தமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.ஒரு கிலோ கோழி வளர்ப்பு கூலியாக ரூ.20 வழங்க வேண்டும்.

    கறி கோழி வளர்ப்புக்கான கூலியை அரசு விலை நிர்ணயம் செய்து தொழிலாளர்களின் நலத்துறை மூலம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் பண்ணைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் கோழிக்குஞ்சு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நல வாரியம் அமைக்க வேண்டும்.

    கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு கோழிப்பண்ணைகள் அமைக்க மானியத்துடன் கூடிய வங்கி கடன் காப்பீடு மருத்துவ காப்பீடு திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

    கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கோழிப் பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்கு திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×