என் மலர்
நீங்கள் தேடியது "seat sharing"
- நாங்கள் திமுகவை குற்றம் சாட்டவில்லை. உண்மையைத்தான் சொல்கிறோம்.
- டிசம்பரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம்.
தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஜோடங்கள்,
"கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படாதது குறித்து காங்கிரஸ் கமிட்டி கவலைகொள்கிறது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நவம்பர் மாதம் காங்கிரஸ், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்தது. டிசம்பரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். பேச்சுவார்த்தைக்கு அழைத்து இன்றுடன் கிட்டத்தட்ட 70 நாட்கள் ஆகிறது. நாங்கள் குழு அமைத்து இரண்டு மாதங்கள் ஆகிறது. விரைவாக அவர்கள் குழு அமைப்பார்கள், உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவார்கள், எத்தனை இடங்கள், எந்த இடங்களில் நாங்கள் போட்டியிடப் போகிறோம் என்பது தெளிவுபடுத்தப்படும் என்று நம்பிக்கையோடு இருந்தோம். இருக்கிறோம்.
ஆனால் தற்போது வரை குழு அமைக்கப்படவில்லை. தொகுதிப் பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கோபமாக உள்ளனர். ஏன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்று மீண்டும் மீண்டும் கேட்டு வருகின்றனர். நாங்கள் தாமதிப்பது போல் தெரிகிறது. நாங்கள் தாமதிக்கவில்லை. தொடர்ந்து முதலமைச்சரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருகிறோம். ஆனால் யாரும் முன்வரவில்லை. மாநிலத்தலைவர் சொன்னதுபோல இது வருத்தமளிக்கிறது. தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. எங்களுக்கு போதுமான நேரம் தேவை. பேச்சுவார்த்தை தற்போதுவரை தொடங்கப்படாததற்கு என்ன காரணம் என தெரியவில்லை." என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "நாங்கள் திமுகவை குற்றம் சாட்டவில்லை. உண்மையைத்தான் சொல்கிறோம். கடந்த 70 நாட்களாக காத்திருக்கிறோம். நாங்கள் பலமுறை முயற்சி செய்தோம். முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டோம். மேலும் விளக்கினோம் ஏன் முன்கூட்டியே பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் என. ஆரம்பத்திலேயே பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் என விரும்பினோம்." என தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை நடத்த திமுகவுக்கு உடன்பாடு இல்லையா என்ற கேள்விக்கு, "எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் நாங்கள் காத்திருக்கிறோம்" என தெரிவித்தார்.
- தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும்.
- எனது பிரச்சார பயணத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி அல்லது அமித் ஷா பங்கேற்பார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:-
இதுவரையிலும் எந்த கட்சியோடும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடும் உத்தேச தொகுதிகளின் பட்டியலை அமித்ஷாவிடம் தரவில்லை.
தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.
எனது பிரச்சார பயணத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி அல்லது அமித் ஷா பங்கேற்பார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தமிழகத்தில் நேற்று முதல் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளையும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளையும் அ.தி.மு.க. ஒதுக்கீடு செய்துள்ளது.
இதேபோல் பிரதான எதிர்க்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து தமிழகத்திலும், டெல்லியிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, திமுக எம்பி கனிமொழி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கிய, தொகுதி பங்கீடு மற்றும் தொகுதிகள் குறித்த செயல் திட்டம் பற்றி விளக்கி கூறினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என 10 தொகுதிகள் வழங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து இன்று சென்னை திரும்பிய கே.எஸ்.அழகிரி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், இன்று மாலை 6 மணிக்கு தொகுதிகள் பங்கீடு குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், அதிமுக-பாமக- பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் விமர்சனம் செய்தார். #KSAlagiri #DMK #Congress
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி கடும் முயற்சி செய்து வருகிறது. குறைந்தபட்சம் 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது.
இதற்காக மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
குறிப்பாக, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கடந்த 14-ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும்,தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று பிற்பகல் சென்னை வந்தார். அதிமுக தரப்பில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பிற்பகல் 2.20 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடக்கும் ஓட்டலை வந்தடைந்தனர்.
இன்று நடைபெறும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு அளிக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance







