என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Parliment Elections"
- தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
- ரோடு ஷோ நடத்திய அமித் ஷா பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.
கர்நாடக மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதற்காக பொம்மனஹல்லியில் ரோடு ஷோ நடத்திய அமித் ஷா வாக்காளர்களிடம் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். ரோடு ஷோவில் அமித் ஷாவுடன் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா மற்றும் பெங்களூரு தெற்கு பா.ஜ.க. வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரோடு ஷோவை தொடர்ந்து பொது மக்களிடையே உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவை வாக்காளர்கள் ஐந்து லட்சத்திற்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக குற்றம்சாட்டினார். முதல்வர் சித்தராமையா சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்காததால், அப்பாவி பொது மக்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்."
"கர்நாடகா மாநிலத்தின் 28 பாராளுமன்ற தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு பாராட்டத்தக்க ஒன்றாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்று வாக்குறுதிகளை நிராகரித்து வளர்ச்சி சார்ந்த பிரதமர் மோடியின் ஆட்சியை மக்கள் மீண்டும் தேர்வு செய்ய வேண்டும்," என்று தெரிவித்தார்.
- மொத்த வாக்குகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன.
- தமிழகத்தில் 4 கோடியே 33 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.
வாக்குப் பதிவின் போது மக்கள் எந்த அளவுக்கு வாக்களித்தனர் என்ற விவரங்களை தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. எனினும், வாக்களித்த விவரம் தோராயமாக வெளியிடப்பட்டதால், இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் பதிவான மொத்த வாக்குகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் மொத்தமாக 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 81.48 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகம் முழுக்க மொத்தமாக 4 கோடியே 33 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
இதில் 2 கோடியே 12 லட்சம் வாக்காளர்கள் ஆண்கள் என்பதும், 2 கோடியே 21 லட்சம் வாக்காளர்கள் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.
- பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.
- கேரளாவில் சில நாட்களில் கேரளாவில் வாக்குப்பதிவு.
நாடு முழுக்க பாராளுமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.
அடுத்தக்கட்டமாக ஏப்ரல் 13 ஆம் தேதி நாட்டின் 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழக - கேரள எல்லை பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த நாடுகாணி சோதனை சாவடியில் பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர். கேரளாவில் ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு கேரளா மாநில எல்லைகளில் சோதனை செய்யப்படுகிறது.
- பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.
- ராஞ்சியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார்.
நாடு முழுக்க பாராளுமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.
மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராகுல் காந்தி தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று அக்கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
"ராகுல் காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவர் தற்போது டெல்லியில் இருந்து புறப்படும் நிலையில் இல்லை. சாட்னாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ராஞ்சியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார்," என்று ஜெய்ராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- நாக்பூர் தொகுதிக்காக தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- நிதின் கட்கரி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சரும், நாக்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான நிதின் கட்கரி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக தனது சொந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நாக்பூர் தொகுதிக்காக மட்டுமே இந்த தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்றால், தனது தொகுதி மக்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதை நிதின் கட்கரி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர கடந்த பத்து ஆண்டுகளில் அவர் செய்த பணி குறித்த தகவல்களையும் அதில் சேர்த்துள்ளார்.
அந்த வகையில், மூன்றாவது முறை வெற்றி பெறும் பட்சத்தில் நாக்பூரை சுத்தமாகவும், அழகாகவும் மாற்றுவது தொடர்பான பணிகளில் ஈடுபடுவதாக அவர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் சுகாதாரம், வளர்ச்சி உள்ளிட்ட பிரிவுகளில் நாக்பூரை முதல் ஐந்து நகரங்களில் ஒன்றாக மாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியோடு சேரிகளை ஒழுங்குப்படுத்தி, புதிய வீடுகளை கட்டித் தருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பான பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் அதிக பூங்காக்கள் அமைக்கப்படும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பூங்காக்கள் புதுப்பிக்கப்படும்.
நாக்பூரில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். 2029 ஆம் ஆண்டிற்குள் விதர்பா பகுதியில் ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். 2070 ஆம் ஆண்டு வரை தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என நிதின் கட்கரி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக குறிப்பிட்டுள்ளார்.
- பிரசாரத்திற்காக இன்று ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வந்தார்.
- ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாடு முழுக்க தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் வாக்குப் பதிவு நடைபெற இருப்பதை ஒட்டி, அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப் பதிவை தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில், நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்யவுள்ளார்.
பிரசாரத்திற்காக இன்று ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வந்தார். உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டர் நீட்டுக்கல் என்ற பகுதியில் தரையிறங்கியது. அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ஹெலிகாப்டரில் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையின் போது ஹெலிகாப்டரில் பணம், பரிசு பொருள் என எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
- மேற்கு வங்க மாநிலத்தில் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படாது.
- இதனால் அதற்கு விண்ணப்பிக்கவே வேண்டாம்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவால் விட்டுள்ளார். நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 400-க்கும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என கூறி வரும் நிலையில், அவர்களால் 200 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படாது என்று மீண்டும் உறுதியளித்துள்ளார். மேலும், சி.ஏ.ஏ.-வுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என பொது மக்களை மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு விண்ணப்பிக்கும் போது, நீங்கள் அந்நிய நாட்டை சேர்ந்தவராகி விடுவீர்கள், இதனால் அதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர் "பா.ஜ.க.-வினர் 400-க்கும் அதிக இடங்களை பிடிப்போம் என கூறி வருகின்றனர், நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன், அவர்கள் முதலில் 200 இடங்களில் வெற்றி பெறுவார்களா என்று பார்ப்போம். 2021 தேர்தலின் போது மேற்கு வங்கத்தில் அவர்கள் 200-க்கும் அதிக இடங்களை குறி வைத்து, வெறும் 77 இடங்களில் தான் வெற்றி பெற்றனர்."
"சி.ஏ.ஏ. தொடர்பான மோடியின் உத்தரவாதம் பூஜ்ஜியத்திற்கு சமம். சி.ஏ.ஏ. சட்டம் குடியுரிமை கொண்டவர்களை வெளிநாட்டவராக மாற்றிவிடும். சி.ஏ.ஏ.-வை அனுமதித்தால் அடுத்து என்.ஆர்.சி. வந்துவிடும். நாங்கள் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. உள்ளிட்டவைகளை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம்," என்று தெரிவித்தார்.
- மதுராந்தகத்தில் நடந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
- அப்போது, இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க.தான் என கூறினார்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அ.தி.மு.க. சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அ.தி.மு.க. கூட்டணி பற்றி தி.மு.க. ஏன் கவலைப்பட வேண்டும்?
பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகும் கள்ளக் கூட்டணி என ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். யாருடனும் கள்ளக் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் அ.தி.மு.க.விற்கு இல்லை.
தி.மு.க.வில் ஸ்டாலின் குடும்பத்தினரை தவிர வேறு யாராவது பதவிக்கு வர முடியுமா?
இந்தியாவிலேயே ஜனநாயகத்துடன் இயங்கும் கட்சி அ.தி.மு.கதான்.
அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை தி.மு.க. ஆட்சியில் உயர்ந்துவிட்டன.
கொரோனா காலத்தில் கூட அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டோம் என தெரிவித்தார்.
- சுமார் 700 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
- பலர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வர்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி துவங்கியது.
நல்ல நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 405 பேர் தமிழகம் முழுக்க வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று வரை தமிழகம் முழுக்க சுமார் 700 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 100-க்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 27) கடைசி நாள் ஆகும். கடைசி நாள் என்பதால் பிரதான கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சை என பலர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கலாம்.
இன்று மாலை 3 மணியுடன் மனு தாக்கல் செய்வதற்கான நேரம் என்பதால், மனு தாக்கல் செய்ய விரும்புவோர் 3 மணிக்குள் மனு தாக்கல் செய்வதற்கான டோக்கன் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இன்றுடன் மனு தாக்கல் நிறைவு பெறும் நிலையில், நாளை (மார்ச் 28) வேட்பு மனு பரிசீலனை நடைபெற இருக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 30 ஆம் தேதியே கடைசி நாள் ஆகும்.
- நடிகர் சிவராஜ் குமாரின் மனைவி கீதா சிவராஜ் குமார் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்
- இவர் மறைந்த முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 7 கட்டமாக நடைபெறும் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு வருகிறது.
அதன் படி காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்.
இந்த வரிசையில் புகழ்பெற்ற நடிகர் சிவராஜ் குமாரின் மனைவி கீதா சிவராஜ் குமார் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இவர் பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஷிவமொகா காங்கிரஸ் வேட்பாளர் கீதா சிவராஜ் குமார், பத்ராவதியில் பிரசாரத்தை துவங்கியுள்ளார். திறந்த வேனில் பத்ராவதி டவுன், கரேஹள்ளி கிராமத்தில் ஊர்வலமாக வந்து, ஓட்டு சேகரித்தார். அவருடன் சிவராஜ்குமார், பத்ராவதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சங்கமேஸ்வர் இருந்தனர்.
இதற்கிடையில், மக்களவை தேர்தல் முடியும்வரை கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் படங்களுக்கு தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த புகாரில், அவர் நடித்த திரைப்படங்கள், விளம்பரங்கள் காட்டுவதைத் தவிர்க்க திரையரங்குகள், தொலைக்காட்சி சேனல்கள், சமூக ஊடக தளங்களுக்கு உத்தரவு பிறப்பித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
- பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி வெளியிட்டது.
- பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி வெளியிட்டது.
முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
இதற்கிடையே, நடப்பாண்டின் யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு மே 26-ம் தேதி நாடு முழுதும் நடத்திட திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதன்மை தேர்வுகளை ஜூன் 16-ம் தேதி நடத்திட திட்டமிட்டுள்ளதாக யு.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
- முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. கடந்த 2-ம் தேதி வெளியிட்டது.
- ஷிமோகாவில் கீதா சிவராஜ்குமார் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
பெங்களூரு:
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்மந்திரி பங்காரப்பாவின் மகளும், பிரபல நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ்குமார் கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கடந்த 2-ம் தேதி பா.ஜ.க. 195 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. பிரதமர் மோடி வாரணாசியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், பா.ஜ.க. இன்று 72 பேர் கொண்ட 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மகன் ராகவேந்திரா போட்டியிடுகிறார்.
பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் இரு முன்னாள் முதல் மந்திரிகளின் வாரிசுகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் வெற்றி வாகை சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்