search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliment Elections"

    • மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
    • சவுத் பிளாக்கில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இந்தியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த கூட்டணியின் தலைவரான நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

    குடியரசு தலைவர் மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், நேற்று பதவியேற்றுக் கொண்ட பிரதமர் மோடி பிரதமர் அலுவலகத்தில் உள்ள சவுத் பிளாக்கில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி விவசாயிகளுக்கான நிதி வழங்கும் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். இந்த திட்டத்தின் 17 ஆவது தவணையை விடுவிக்கும் கோப்புகளில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.

    இந்த திட்டத்தின் கீழ் 9.2 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 20 ஆயிரம் கோடி தொகையை பிரதமர் விடுவித்தார். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. 


    • மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
    • 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

    இந்தியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த கூட்டணியின் தலைவரான நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

    குடியரசு தலைவர் மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இவரைத் தொடர்ந்து 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

    இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் மற்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.


    முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பதிவில், "தொடர்ச்சியாக மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ள திரு. நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். பிரதமராக அரசியலமைப்பை நிலைநிறுத்தி, நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பராமரித்து, கூட்டாட்சி தத்துவத்தை மேம்படுத்தி, மாநில உரிமைகளை மதிக்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்க உண்மையான உணர்வுடன் செயல்படுவீர்கள் என நம்புகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.


    கமல்ஹாசன் தனது வாழ்த்து செய்தியில், "தங்களின் மிகப்பெரிய பலத்தை பயன்படுத்தும் நாடுகள், அதன் மக்கள் மிகப் பெரிய பெருமைகளை சந்திப்பார்கள். மதிப்புக்குரிய இந்திய பிரமதர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள். தேச நலன், ஒற்றுமை மற்றும் தேசிய கடமை உணர்வில், 18-வது மக்களவையில் தேர்வாகியிருக்கும் பிரதிநிதிகள் ஒன்றிணைன்து பணியாற்றி மேலும் வலிமையான, பிரகாசமான இந்தியாவை உறுவாக்கும் கனவை நிறைவேற்ற செயல்படட்டும். ஜெய் ஹிந்த்!," என்று குறிப்பிட்டுள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது வாழ்த்து செய்தியில், "இந்திய வரலாற்றில், ஜவகர்லால் நேருவுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி அவர்களுக்கும், அவருடன் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டுவதிலும், பல்வேறு துறைகளில் சாதனை படைப்பதிலும் புதிய உச்சங்களை தங்களின் அரசு தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    • புதிய அரசு ஆட்சி அமைக்க குடியரசு தலைவரிடம் உரிமை கோரியது.
    • குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஆட்சி அமைக்கும் பணிகளில் மும்முரம் காட்டிய தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு ஆட்சி அமைக்க குடியரசு தலைவரிடம் உரிமை கோரியது.

    இதை ஏற்றுக் கொண்ட குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நரேந்திர மோடியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

     


    பிரதமர் மோடியை தொடர்ந்து 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்றுக் கொண்ட பிரதமர் மோடிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்றுக் கொண்ட திரு. நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார். 


    • வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
    • தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி.

    பா.ஜ.க.-வால் தமிழ்நாட்டை, தமிழர்களை எப்போதும் ஆளவே முடியாது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இன்று (ஜூன் 4) தமிழ்நாட்டில், தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். பல தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை தமிழகத்தில் பா.ஜ.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், "பா.ஜ.க.-வால் தமிழகத்தை ஆளவே முடியாது" என்று பேசிய ராகுல் காந்தியின் வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    • கலைஞர் கருணாநிதியை மாநில தலைவராக மட்டுமின்றி தேசிய அளவிலான தலைவராக போற்றி வணங்குகிறோம்.
    • பல பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களை முடிவு செய்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் கலைஞர்

    டெல்லியில் கலைஞர் கருணாநிதியின் 101 ஆவது பிறந்தநாள் ஒட்டி இந்தியா கூட்டணி தலைவர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி, பரூக் அப்துல்லா, சீதாராம் யெச்சூரி, டி. ராஜா ஆகியோர் கலைஞர் கருணாநிதி உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலைஞர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தியதைக் குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "கலைஞர் கருணாநிதியை மாநில தலைவராக மட்டுமின்றி தேசிய அளவிலான தலைவராக போற்றி வணங்குகிறோம்

    தேசக் கட்டுமானத்தில் முக்கிய பங்காற்றிய கலைஞர் கூட்டாட்சி மற்றும் மக்களாட்சிக்காக குரல் கொடுத்தவர்

    பல பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களை முடிவு செய்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் கலைஞர்

    நமது கூட்டணியின் வெற்றியை, இந்திய மக்களுக்கான வெற்றியை கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
    • இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது பேசிய அவர், "காணாமல் போன தேர்தல் ஆணையர்கள்' என சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பகிரப்படுவதை நாங்கள் பார்த்தோம். நாங்கள் எங்கும் காணாமல் போகவில்லை. இங்கேயேதான் இருக்கிறோம். இப்போது காணாமல் போன தேர்தல் ஆணையர்கள் மீண்டும் வந்துவிட்டார்கள் என்று மீம்ஸ் போடலாம் என்று கிண்டலாக பேசினார்.

    மேலும் பேசிய அவர், "2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 540 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால் இந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் 39 இடங்களில் மட்டும் தான் மறுவாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

    எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க, வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகள் முதலில் எண்ணத் தொடங்கப்படும். தபால் வாக்குகளை எண்ணத் தொடங்கி 30 நிமிடங்களுக்கு பிறகே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்" என்று தலைமை தேர்தல் ஆணையர் உறுதி அளித்துள்ளார்.

    • கருக்குக்கணிப்பில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் எனக்கூறப்பட்டது.
    • மூன்றாவது முறையாக மோடியே பிரதமராக வர வேண்டும்.

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் ஊடகங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. அதில் 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் எனக்கூறப்பட்டது.

     


    இதனிடையே, பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதையொட்டி, மூன்றாவது முறையாக மோடியே பிரதமராக வர வேண்டும் என கோயிலில் வழிபட்டேன்."

    "வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி இதனை நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. கன்னியாகுமரியில் பிரதமர் தியானம் செய்வதில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர். இதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்த மாட்டோம். 400க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று, நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வார்," என்று தெரிவித்தார்.

    • தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
    • வாக்காளர்களுக்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஜூன் 1 ஆம் தேதி ஏழு மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முழுமையாக நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக தேர்தல் முடிவுகள் எண்ணுவதற்கு முன் தேர்தல் ஆணையம் செய்தியாளர்களை சந்தித்தது. அதன்படி செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், முதலில் வாக்காளர்களுக்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தார்.

     


    இதைத் தொடர்ந்து பேசிய அவர், "நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 85 வயதுக்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்தனர். தேர்தல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என மொத்தம் 1.5 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்றனர்."

    "இந்த தேர்தலில் மொத்தம் 64 கோடி பேர் வாக்களித்து உள்ளனர். இது 27 ஐரோப்பிய நாடுகளின் வாக்காளர்களை விட 2.5 மடங்கு அதிகம் ஆகும். வாக்குப்பதிவை ஒட்டி நாடுமுழுக்க 135 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. சுமார் நான்கு லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன."

    "தேர்தல் திருவிழா காலக்கட்டத்தில் நாடு முழுக்க ரூ. 10 ஆயிரம் கோடி வரை பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த 2019 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் ஆகும். வாக்கு எண்ணிக்கை பணி மிகவும் வலுவான ஒன்று ஆகும். இது கடிகாரம் இயங்குவதை போன்றே மிக சரியாக நடைபெறும்," என்று தெரிவித்தார்.

    • 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு.
    • தாய்க்கு இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்களித்தனர். இன்று மட்டும் 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

    அந்த வகையில், பீகார் மாநிலத்தின் ஜெகானாபாத்தின் தேவ்குல்லி கிராமத்தை சேர்ந்தவர் மிதிலேஷ் யாதவ். இவரது தாயார் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். எனினும், இவர் முதலில் வாக்களித்து விட்டு அதன்பிறகு தாயாருக்கு இறுதிச் சடங்கு செய்வதென முடிவு செய்துள்ளார். அதன்படி இவரது குடும்பத்தினர், முதலில் வாக்களித்து விட்டு, அதன்பிறகு தான் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர்.

    இது குறித்து பேசிய மிதிலேஷ் யாதவ், "உயிரிழந்த தாய் மீண்டும் வரப்போவதில்லை. அவருக்கான இறுதிச் சடங்குகள் காத்திருக்கலாம், ஆனால் தேர்தல் காத்திருக்காது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் தேர்தல் வரும்."

    "இதனால் எங்களது குடும்பத்தினர் முதலில் வாக்களித்துவிட்டு, அதன்பிறகு எங்களது தாயாரின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்," என்று தெரிவித்தார்.

    • பகவதி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார்.
    • தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே 30) ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் பிரதமர் மோடி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

    இதைத் தொடர்ந்து மே 31 மற்றும் ஜூன் 1 ஆம் என இரண்டு நாட்கள் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருக்கிறார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்.
    • பயணத்தின் போது கேதார்நாத் சிவன் கோவிலில் வழிபாடு செய்தார்.

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 30 ஆம் தேதி மாலை கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்.

    முன்னதாக 2019 பாராளுமன்ற தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவின் போது பிரதமர் மோடி இமய மலை பயணம் செய்தார். அங்குள்ள குகை ஒன்றுக்கு சென்ற பிரதமர் மோடி தியானம் செய்தார். இந்த பயணத்தின் போது கேதார்நாத் சிவன் கோவிலில் வழிபாடு செய்தார்.

    இந்த நிலையில், தற்போது பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதை அடுத்து பிரதமர் மோடி தென் தமிழகம் வரவிருப்பது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

    • பா.ஜ.க. நிச்சயம் 400-க்கும் அதிக இடங்களில் வெற்றி.
    • மருத்துவர் முன்னிலையில் அவர் "எஸ் பார் 400 பர்" என்று தொடர்ச்சியாக கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 500 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் 400-க்கும் அதிக இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று பா.ஜ.க.வினர் தேர்தல் அறிவிப்புக்கு முன்பிருந்தே கூற ஆரம்பித்துவிட்டனர்.

    பிரதமர் மோடி தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரங்களில் பா.ஜ.க. நிச்சயம் 400-க்கும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்து இருந்தார். மேலும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களும் இதே கருத்தை தேர்தல் பரப்புரைகளில் முன்வைத்தனர்.

    இந்த நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் பா.ஜ.க. கட்சி நிச்சயம் 400-க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதை உணர்த்தும் பா.ஜ.க. முழக்கம் "எஸ் பார் 400 பர்" என்பதை தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் கூறியிருக்கிறார். இவரை கட்டுப்படுத்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முயன்றனர்.

    எனினும், அவர் தொடர்ச்சியாக முழக்கத்தை நிறுத்தாமல் கூறியதால் அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனை அழைத்து சென்றனர். மருத்துவமனையிலும், மருத்துவர் முன்னிலையில் அவர் "எஸ் பார் 400 பர்" என்று தொடர்ச்சியாக கூறினார்.

    மருத்துவர் முன்னிலையிலும் தொடர்ச்சியாக சொன்னதையே சொன்னதால் அவருக்கு என்ன சிகிச்சை அளிப்பது என்று மருத்துவரும் குழம்பினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


    ×