search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trinamool congress party"

    • மேற்கு வங்க மாநிலத்தில் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படாது.
    • இதனால் அதற்கு விண்ணப்பிக்கவே வேண்டாம்.

    மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவால் விட்டுள்ளார். நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 400-க்கும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என கூறி வரும் நிலையில், அவர்களால் 200 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படாது என்று மீண்டும் உறுதியளித்துள்ளார். மேலும், சி.ஏ.ஏ.-வுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என பொது மக்களை மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு விண்ணப்பிக்கும் போது, நீங்கள் அந்நிய நாட்டை சேர்ந்தவராகி விடுவீர்கள், இதனால் அதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர் "பா.ஜ.க.-வினர் 400-க்கும் அதிக இடங்களை பிடிப்போம் என கூறி வருகின்றனர், நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன், அவர்கள் முதலில் 200 இடங்களில் வெற்றி பெறுவார்களா என்று பார்ப்போம். 2021 தேர்தலின் போது மேற்கு வங்கத்தில் அவர்கள் 200-க்கும் அதிக இடங்களை குறி வைத்து, வெறும் 77 இடங்களில் தான் வெற்றி பெற்றனர்."

    "சி.ஏ.ஏ. தொடர்பான மோடியின் உத்தரவாதம் பூஜ்ஜியத்திற்கு சமம். சி.ஏ.ஏ. சட்டம் குடியுரிமை கொண்டவர்களை வெளிநாட்டவராக மாற்றிவிடும். சி.ஏ.ஏ.-வை அனுமதித்தால் அடுத்து என்.ஆர்.சி. வந்துவிடும். நாங்கள் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. உள்ளிட்டவைகளை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம்," என்று தெரிவித்தார்.

    கொல்கத்தா போலீஸ் - சி.பி.ஐ. மோதல் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க முன்வராததை கண்டித்து பாராளுமன்ற மக்களவையில் இருந்து திரிணாமுல் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். #TrinamoolMPs #walkoutinLS demanding #PM Modistatement
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த டெல்லியில் இருந்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் நேற்று பாராளுமன்ற இருஅவைகளிலும் எதிரொலித்தது.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இவ்விவகாரத்தை முன்வைத்து கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நேற்று எந்த அலுவலும் நடைபெறாமல் இருஅவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

    இந்நிலையில், இன்று பாராளுமன்றம் கூடியபோது மாநிலங்களவையில் இதே பிரச்சனையை மையமாக வைத்து  திரிணாமுல் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் கோஷமிட்டனர்.

    இதனால், பகல் 12 மணிவரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணிவரையிலும், இறுதியில் நாளை வரையிலும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.


    மக்களவையிலும் இன்று இதேநிலை நீடித்தது. கொல்கத்தா போலீஸ் - சி.பி.ஐ. மோதல் தொடர்பாக பிரதமர் மோடி அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று திரிணாமுல் எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.

    இதனால்,  பகல் 12 மணிவரையிலும்,பிற்பகல் 2 மணிவரையிலும், பின்னர் 4 மணிவரையிலும் சுமித்ரா மகாஜன் அவையை ஒத்திவைத்தார். 4 மணிக்கு பின்னர் அவை கூடியபோது தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மக்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். #TrinamoolMPs #walkoutinLS demanding #PM Modistatement  
    ×