என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Register of Citizens"

    • பல வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்துக் குழு கவலை தெரிவித்துள்ளது.
    • போலீசார் மக்கள் மீது அளவுக்கு அதிகமான பலத்தைப் பிரயோகிப்பது மற்றும் கும்பல் தாக்குதல் சம்பவங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளது.

    முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா தலைமையில் பாஜக ஆளும் அசாமில் வாழும் வங்காள மொழி பேசும் முஸ்லிம்களுக்கு எதிராகக் காட்டப்படும் கடுமையான பாகுபாடுகள் குறித்து ஐநா சபை கவலை தெரிவித்து கடிதம் எழுதி உள்ளது.

    ஐக்கிய நாடுகள் சபையின் இனப் பாகுபாட்டை ஒழிப்பதற்கான குழு (CERD) இந்தியாவுக்கு அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் அசாமில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது.

    அந்த கடிதத்தில், அசாமில் அமலில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) நடைமுறையில் நிலவும் பாகுபாடுகள் மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பல வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்துக் குழு கவலை தெரிவித்துள்ளது.

    மாற்று இடம் அல்லது இழப்பீடு வழங்காமல் பல மாவட்டங்களில் இருந்து மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம், வங்க மொழி பேசும் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் செயல்கள், போலீசார் மக்கள் மீது அளவுக்கு அதிகமான பலத்தைப் பிரயோகிப்பது மற்றும் கும்பல் தாக்குதல் சம்பவங்கள் குறித்துக் கடிதத்தில் CERD சுட்டிக்காட்டியுள்ளது.

    ஏற்கனவே இது தொடர்பாக இந்தியா அளித்த பதிலில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முறையான விவரங்கள் இல்லை என்று CERD அதிருப்தி தெரிவித்துள்ளது.   

    எனவே பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசு உடனடியாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அடுத்த முறை இந்தியா சமர்ப்பிக்கும் அறிக்கையில் தீர்வுகள் குறித்து விரிவாக விளக்க வேண்டும் என்றும் ஐநா குழு கேட்டுக் கொண்டுள்ளது.    

    • என் பெற்றோரின் பிறந்தநாள் கூட எனக்கு தெரியாது. அப்படியிருக்க என் பெற்றோரின் சான்றிதழ்களை அவர்கள் கேட்டால் என்னால் எப்படி அவற்றை கொடுக்க முடியும்.
    • குடியுரிமை திருத்த சட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வில்லை என்றால் நீங்கள் வெளிநாட்டினராக மாறி விடுகிறீர்கள்.

    மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அக்கூட்டத்தில் பேசிய அவர், "தேசிய குடிமக்கள் பதிவேட்டை நான் அனுமதிக்க மாட்டேன். அசாமில் 19 லட்சம் இந்து வங்காளிகளின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

    என் பெற்றோரின் பிறந்தநாள் கூட எனக்கு தெரியாது. அப்படியிருக்க என் பெற்றோரின் சான்றிதழ்களை அவர்கள் கேட்டால் என்னால் எப்படி அவற்றை கொடுக்க முடியும்.

    குடியுரிமை திருத்த சட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வில்லை என்றால் நீங்கள் வெளிநாட்டினராக மாறி விடுகிறீர்கள்.

    50 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றிதழை அவர்கள் கொண்டு வர சொன்னால், முதலில் பாஜக வேட்பாளர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தில் சான்றிதழ்கள் கொடுத்து குடியுரிமைக்கு விண்ணப்பிக்க சொல்லுங்கள்.

    பாஜகவினரே குடியுரிமை திருத்த சட்டத்தில் விண்ணப்பிக்கவில்லை என்றால் நாம் ஏன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டையும் நான் அனுமதிக்க மாட்டேன்" என்று மம்தா தெரிவித்தார். 

    ×