என் மலர்
நீங்கள் தேடியது "திரிணாமுல் காங்கிரஸ்"
- SIR தொடங்கியதிலிருந்து ஏற்கனவே 28 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
- பணிச்சுமையால் இத்தகைய விலைமதிப்பற்ற உயிர்கள் இழக்கப்படுகின்றன.
இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகள், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேற்கு வங்காளத்திலும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், மேற்குவங்கத்தில் SIR பணிகளில் ஈடுபட்டு வந்த சாந்தி முனி எக்கா என்ற பூத் லெவல் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட சாந்தி முனி எக்காவுக்கு இரங்கல் தெரிவித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இன்று மீண்டும், ஜல்பைகுரியின் மாலில் ஒரு பூத் லெவல் அதிகாரியை இழந்தோம். சாந்தி முனி எக்கா, ஒரு பழங்குடியின பெண், ஒரு அங்கன்வாடி ஊழியர், நடந்து வரும் SIR பணியின் தாங்க முடியாத அழுத்தத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
SIR தொடங்கியதிலிருந்து ஏற்கனவே 28 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். சிலர் பயம் மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாகவும், மற்றவர்கள் மன அழுத்தம் மற்றும் அதிக வேலைச்சுமை காரணமாகவும் உயிரை இழந்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் திட்டமிடப்படாத, இடைவிடாத பணிச்சுமையால் இத்தகைய விலைமதிப்பற்ற உயிர்கள் இழக்கப்படுகின்றன. முன்பு 3 ஆண்டுகள் எடுத்த ஒரு செயல்முறை, தங்களது அரசியல் எஜமானர்களை மகிழ்விக்க, தேர்தல்களுக்கு முன்னதாக 2 மாதங்களுக்குள் கட்டாயப்படுத்தப்பட்டு, BLO-க்கள் மீது மனிதாபிமானமற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
மனசாட்சியுடன் செயல்பட்டு, மேலும் உயிர்கள் இழக்கப்படுவதற்கு முன்பு இந்த திட்டமிடப்படாத SIR பணிகளை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் ஆணையத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- தேர்தல் கமிஷனின் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
- மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
கொல்கத்தா:
இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகள், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேற்கு வங்காளத்திலும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. மேற்கு வங்காள மந்திரிகள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இப்பேரணியில் பங்கேற்றனர்.
அப்போது, பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான அபிஷேக் பானர்ஜி, இரண்டு நாட்களில் இவ்வளவு பெரிய கூட்டத்தை திரட்ட முடியும் என்றால், டெல்லியில் எங்கள் போராட்டத்திற்கு எவ்வளவு பேர் திரள்வார்கள் என்பதை பா.ஜ.க. கண்டிப்பாக யோசித்துப் பார்க்க வேண்டும். டெல்லி ஜமீன்தாரர்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என தெரிவித்தார்.
- டெல்லியில் தடுத்து நிறுத்தப்பட்ட கர்ப்பிணி பெண், நாடு கடத்தப்பட்டார்.
- நாடு கடத்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என டிஎம்சி தெரிவித்துள்ளது.
நாடு கடுத்தப்பட்ட கர்ப்பிணி சோனாலி பிபி-யின் பெற்றோர் பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என திரணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கூறுகையில் "சோனாலி பிபியை இந்தியாவுக்கு அழைத்துவர, கடந்த செப்டம்பர் மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கர்ப்பிணி பெண் சோனாலி நாடு கடத்தப்பட்டது, வெறும் அதிகாரத்துவ கொடுமை மட்டுமல்ல, திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியையும் அம்பலப்படுத்துகிறது.
பெங்கால் மற்றும் அதன் மக்களின் கருத்து மீதான தாக்குதல்தான் SIR பணியின் நோக்கம். இது பயத்தை ஆயுதமாக்க முயல்கிறது. சொந்தத்தை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் குடிமக்களை அவமானப்படுத்துகிறது. மேலும் இந்த மாநிலத்தை வரையறுக்கும் சமூக கட்டமைப்பை உடைக்கிறது.
மேற்கு வங்கம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்த பணி மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. பாஜக-வின் கட்டளைப்படி இது நடைபெறுவதாக திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம செய்திருந்தது. ஆனால், இது வழக்கமான சரிபார்ப்பு பணிதான் என தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது.
சோனாலி பிபி மற்றும் அவரது கணவர், 5 வயது குழந்தை டெல்லியில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதை எதிர்த்து சோனாலி பிபி-யின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பிர்பம் மாவட்டைச் சேர்ந்த முராராய் பகுதியில் இருந்து டெல்லி சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இதனால், உயர்நீதிமன்றம் அவர்களை திரும்ப அழைத்து வர உத்தரவிட்டிருந்தது.
- வங்காளத்திலிருந்து புலம்பெயர்ந்த 30 லட்சம் தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினர் என்று வெட்கமின்றி அழைப்பவர்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்.
- இது மேற்கு வங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
வங்காளிகளை வெளிநாட்டினராக சித்தரித்தால் பாஜக எம்எல்ஏவின் வாயில் ஆசிட் வீசுவேன் என்று திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்ட டிஎம்சி தலைவர் அப்துர் ரஹீம் பக்ஷி இந்த சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளார்.
வங்காளத்திலிருந்து குடிபெயர்ந்த தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினர் என்று கோஷ் முன்னர் சட்டமன்றத்தில் பேசியதை மேற்கோள் காட்டி அவரின் பெயரை குறிப்பிடாமல் அப்துர் ரஹீம் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வங்காள மொழி பேசுபவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அட்டூழியங்களுக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் நேற்று அப்துர் ரஹீம் பக்ஷி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, "வேறு மாநிலங்களில் பணிபுரியும் வங்காளத்திலிருந்து புலம்பெயர்ந்த 30 லட்சம் தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினர் என்று வெட்கமின்றி அழைப்பவர்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்.
எந்த பாஜக எம்எல்ஏவாவது மீண்டும் அதே வார்த்தைகளைக் உதிர்த்தால், நான் உங்கள் வாயில் ஆசிட் ஊற்றி எரிப்பேன். இது மேற்கு வங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள். நாங்கள் வங்காளிகள் உங்களை சும்மா விடமாட்டோம். உங்கள் முகத்தில் ஆசிட் ஊற்றி எரிப்போம்" என்று தெரிவித்தார்.
இந்த மிரட்டலுக்கு பாஜக தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
- மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸின், பர்வான் தொகுதி எம்எல்ஏ ஜீபன் கிருஷ்ணா சாஹா அமலாக்கத்துறையால் இன்று கைது செய்தனர்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஜீபன் கிருஷ்ணா தனது மொபைல் போன்களை வீட்டின் பின்னால் உள்ள சாக்கடையில் வீசிவிட்டு, சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்றார்.
இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்கு வந்திருந்த CRPF வீரர்கள் உதவியுடன் அவரை துரைத்திச் சென்று கைது செய்தனர். பின்னர், சாக்கடையில் இருந்து தொலைபேசிகள் மீட்கப்பட்டன. எம்எல்ஏவை அதிகாரிகள் கைது செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 2023 ஆம் ஆண்டு இதே வழக்கில் ஜீபன் கிருஷ்ணா சாஹாவை சிபிஐ கைது செய்தது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த ஊழலில் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவரது நெருங்கிய தோழி அர்பிதா முகர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா உள்ளிட்ட பல முக்கிய நபர்களை அமலாக்கத் துறை ஏற்கனவே கைது செய்துள்ளது.
- எம்.பி.க்களிடம் சரியான ஒத்துழைப்பு இல்லை என் மீது குற்றம்சாட்டப்பட்டது.
- தன் மீது நியாயமற்ற முறையில் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்திய பாராளுமன்ற மக்களவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடாவாக கல்யாண் பானர்ஜி எம்.பி. இருந்து வந்தார். இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
"எம்.பி.க்களிடம் சரியான ஒத்துழைப்பு இல்லை என் மீது குற்றம்சாட்டப்பட்டது. தன் மீது நியாயமற்ற முறையில் குற்றம்சாட்டப்படுகிறது. சில எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு அரிதாகவே வருகை தருகின்றனர். இதனால் எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்" என கல்யாண் பானர்ஜி எம்.பி. தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், ஸ்ரீராம்பூரிலிருந்து நான்கு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், மூத்த வழக்கறிஞருமான கல்யாண் பானர்ஜி, கட்சி ஒழுக்கமின்மை மற்றும் மோசமான வருகைக்கு காரணமானவர்களை பொறுப்பேற்க வைக்காமல், தன்னை வீழ்ச்சியடையச் செய்ததற்காக அவமானப்படுவதாகவும் கூறியுள்ளார்.
- மஹுவா தனது தேனிலவிலிருந்து திரும்பி வந்து உடனடியாக என்னுடன் சண்டையிடத் தொடங்கிவிட்டார்!
- ஒழுக்க மீறல்களுக்காக பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு எம்.பி. இப்போது எனக்கு போதிக்கிறார்!
கொல்கத்தா சட்டக் கல்லூரியில் நடந்த சமீபத்திய கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கல்யாண் பானர்ஜி மற்றும் மஹுவா மொய்த்ரா இடையே கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
ஜூன் 25 அன்று 24 வயது சட்ட மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்யாண் பானர்ஜி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.
"ஒரு சில ஆண்கள் இந்த வகையான குற்றங்களைச் செய்கிறார்கள்.. ஆனால் ஒரு நண்பன் தன் தோழியையே பாலியல் பலாத்காரம் செய்தால் என்ன செய்ய முடியும்? பள்ளி, கல்லூரிகளில் போலீசார் பணியில் இருக்க வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
கல்யாண் பானர்ஜியின் கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்துகள் என்றும், கட்சிக்கு எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்றும் கூறி, திருணாமுல் காங்கிரஸ் கட்சி உடனடியாக தனது சமூக ஊடகப் பதிவில் விளக்கம் அளித்தது.
இந்த சூழலில் கல்யாண் பானர்ஜியின் கருத்துக்களை மஹுவா மொய்த்ரா கடுமையாகக் கண்டித்தார். தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவில் ஆணாதிக்கம் கட்சிகளைக் கடந்து பரவி வருகிறது.
யாராக இருந்தாலும் இந்த அருவருப்பான கருத்துகளை நாங்கள் கண்டிக்கிறோம் என்பதுதான் எங்களை வேறுபடுத்துகிறது" என்று பதிவிட்டார்.
மஹுவா மொய்த்ராவின் இந்தக் கண்டனத்திற்குப் பிறகு, கல்யாண் பானர்ஜி அவரை தனிப்பட்ட முறையில் கடுமையாகத் தாக்கினார்.
"மஹுவா தனது தேனிலவிலிருந்து திரும்பி வந்து உடனடியாக என்னுடன் சண்டையிடத் தொடங்கிவிட்டார்! அவர் என்னை பெண்களுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டுகிறார் - ஆனால் அவர் யார்? அவர் 40 வருட திருமணத்தை முறித்துக் கொண்டு 65 வயது மனிதரை மணந்தார். அந்தப் பெண்ணை அவர் காயப்படுத்தவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "ஒழுக்க மீறல்களுக்காக பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு எம்.பி. இப்போது எனக்கு போதிக்கிறார்! அவர் மிகவும் பெண்களுக்கு எதிரானவர்.
அவர் தனது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் மட்டுமே தெரிந்தவர்" என்று கடுமையாக விமர்சித்தார். இந்த வார்த்தை போர் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சட்டக் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவியை இரண்டு மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் ஒருவர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வலுக்கட்டாயமாக கற்பழித்ததாகவும், படம் பிடித்து மிரட்டியதாகவும், கொடூரமாக கடித்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே நண்பர்களே நண்பரை (பெண் தோழி) பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்வது? என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் இது தொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன் மித்ரா, "மாணவி அந்த இடத்திற்கு சென்றிருக்காவிட்டால், இந்த குற்றம் நடந்திருக்காது. அப்பெண் அங்கு செல்வதற்கு முன்பு யாரிடமாவது தெரிவித்திருந்தால் அல்லது தன்னுடன் இரண்டு நண்பர்களை அழைத்துச் சென்றிருந்தால், இது நடந்திருக்காது" தெரிவித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே சமயம் தனது கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி மற்றும் எம்.எல்.ஏ. மதன் மித்ராவின் கருத்துக்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
- 50 வயதான மஹுவா மொய்த்ரா பினாகி மிஸ்ராவை மே 3 அன்று திருமணம் செய்து கொண்டார்.
- பினாகி மிஸ்ரா புரி தொகுதியில் இருந்து நான்கு முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஹுவா மொய்த்ரா.
இவர் கடந்த 3-ந் தேதி, பிஜு ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யான பினாகி மிஸ்ராவை(வயது 65) ஜெர்மனியில் ரகசிய திருமணம் செய்தார். முதலில் டென்மார்க் நாட்டை சேர்ந்த பைனான்சியரான லார்ஸ் பிரார்சனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் தான் மஹுவா மொய்த்ரா ஜெர்மனியில் வைத்து ரகசியமாக 2-வது திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் மஹுவா மொய்த்ரா - பினாகி மிஸ்ரா ஆகியோரின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
பினாகியை கரம் பிடித்த மகுவா மொய்த்ரா இதுகுறித்து புகைப்படம் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் இருவரும் சேர்ந்து கேக் வெட்டுவது போல காட்சி இருந்தது. அதனுடன், மஹுவாவின் பதிவில், அன்பு மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் புதுமண தம்பதிகளான மஹுவா மொய்த்ரா-பினாகி மிஸ்ரா ஆகியோர் சேர்ந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 1967-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான ஆன் ஈவினிங் இன் பாரிஸ் படத்தில் இடம் பெற்ற காதல் பாடலான ராத் கே ஹம்சபர் பாடலுக்கு இருவரும் நடனமாடினர். வீடியோவை பார்த்த பலரும், புதுமண தம்பதியை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.
- பிஜேடி தலைவர் நான்கு முறை எம்.பி.யாக இருந்தவர்.
- உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞராக உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஹுவா மொய்த்ரா. இவருக்கு 50 வயதாகிறது. 50 வயதான மஹுவா மொய்த்ரா 65 வயதான பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரும், மூத்த வழக்கறிஞருமான மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் ஜெர்மனியில் நடைபெற்றதாக தெரிகிறது.
ஆனால், இருவரும் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஏதும் வெளியிடவில்லை. மஹுவா மொய்த்ரா ஏற்கனவே டென்மார்க்கை சேர்ந்த லார்ஸ் பிரோர்சன்னை திருமணம் செய்திருந்தார். கட்சித் தலைவர்களுடன் இவர்களுடைய திருமணத்தை உறுதி செய்யவில்லை.
பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரான பினாகி மிஸ்ரா, உச்சநீதிமன்றம் மூத்த வழக்கறிஞராக உள்ளார். புரி தொகுதியில் இருந்து நான்கு முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
- உன்னாவ் முதல் ஹத்ராஸ் வரை. பாஜக-வின் கடந்த கால சாதனைகள் மவுனத்திலும், அவமானத்திலும் மூழ்கியுள்ளன.
- வினாத்தாள் கசிவு, நீட் முறைகேடு, 45 சதவிதம் வேலைவாய்ப்பின்மை. இவைகள் மாணவர்களுக்கு பாஜக-வின் தேசிய பரிசு.
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் சென்றிருந்தார். அலிபூர்துவாரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது "இன்று, மேற்கு வங்கம் தொடர்ச்சியான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. மக்கள் கொடூரமான அரசை (Nirmam sarkar) விரும்பவில்லை. அவர்கள் மாற்றத்தையும் நல்லாட்சியையும் விரும்புகிறார்கள். அதனால்தான் முழு வங்காளமும் இனி கொடுமையையும் ஊழலையும் விரும்பவில்லை என்று கூறுகிறது" என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் ஐந்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி ஐந்து சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார். அதன் உண்மை குறித்து பேசுவோம்.
பெண்களுடைய பாதுகாப்பு?
உன்னாவ் முதல் ஹத்ராஸ் வரை. பாஜக-வின் கடந்த கால சாதனைகள் மவுனத்திலும், அவமானத்திலும் மூழ்கியுள்ளன.
இளைஞர்கள் நம்பிக்கையின்மை?
வினாத்தாள் கசிவு, நீட் முறைகேடு, 45 சதவிதம் வேலைவாய்ப்பின்மை. இவைகள் மாணவர்களுக்கு பாஜக-வின் தேசிய பரிசு.
ஊழல்?
உங்கயுடைய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஜாமினில் உள்ளனர். நீதி மெல்ல மெல்லி செத்துக் கொண்டிருக்கிறது.
அரசியல் கால்ப்புணர்ச்சியால் உங்களுடைய அரசாங்கம் மேற்கு வங்க அரசுக்கு 100 நாள் வேலைக்கான ஊதியம், அவாஸ் யோஜனா நிதிகளை தர மறுக்கிறது.
கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக சட்டம் ஒழுங்கு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குழப்பத்தை முதலில் சரி செய்யுங்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மோடி தலைமையிலான மத்திய அரசின் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை பிரதமர் மோடி திசை திருப்புகிறார் எனக் குற்றம்சாட்டியுள்ளது.
- விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்தனர்.
- விமானம் ஸ்ரீநகரில் நல்வாய்ப்பாக பத்திரமாக தரையிறங்கியது.
ஸ்ரீநகர்:
தலைநகர் டெல்லியில் புழுதிப் புயல் வீசிய நிலையில் பல இடங்களில் கனமழை பெய்தது. சில இடங்களில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
இதற்கிடையே, டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி புயலால் நடுவானில் சிக்கி குலுங்கியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்தனர். இதையடுத்து, அந்த விமானம் ஸ்ரீநகரில் நல்வாய்ப்பாக பத்திரமாக தரையிறங்கியது. முன்பகுதியில் சேதமடைந்த விமானம் பத்திரமாக ஸ்ரீநகரை அடைந்ததால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன், நடிமுல் ஹக், மம்தா தாக்குர், சகரிகா கோஷ் மற்றும் மனஸ் புனியா ஆகியோரும் பயணம் செய்திருந்தனர். அவர்கள் காஷ்மீரில் பயங்கர்வாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க உள்ளனர்.
இந்நிலையில், நடுவானில் விமானம் குலுங்கியது தொடர்பாக திரிணாமுல் காங்கிரசின் சகரிகா கோஷ் கூறியதாவது:
அது ஒரு மரண அனுபவமாக இருந்தது. என் வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தேன். மக்கள் அலறிக் கொண்டிருந்தார்கள், பிரார்த்தனை செய்தார்கள், பீதி அடைந்தார்கள்.
அந்த வழியாக எங்களை அழைத்துச் சென்ற விமானிக்கு பாராட்டுகள். நாங்கள் தரையிறங்கியபோது விமானத்தின் மூக்கு உடைந்திருப்பதைக் கண்டோம் என தெரிவித்தார்.






