என் மலர்
நீங்கள் தேடியது "திரிணாமுல் காங்கிரஸ்"
- மேற்கு வங்கத்தில் மம்தா கட்சி- பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
- தொடர்ந்து 4-வது முறையாக வெற்றி பெற மம்தா பானர்ஜி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேர்தல் பிரசார பாடலை வெளியிட்டுள்ளது.
"அனைத்து எதிர்ப்புகளையும் மீறி பெங்கால் வெற்றி பெறும்" என்பது முக்கிய பல்லவியாக இந்த பாடலில் அமைந்துள்ளது.
மேலும், "புதிய திசையுடன் ஒரு புதிய பாதையில் நாம் பயணிக்கிறோம். உங்கள் இருள் புதிய விடியலுக்கு முன்னால் தோற்றுவிடும். நாங்கள் சிஏஏ அல்லது என்ஆர்சி-க்கு அஞ்ச மாட்டோம். தாய் வங்காளத்தின் வலிமையை நீங்கள் உணர்ந்துகொள்ள இன்னும் நேரம் இருக்கிறது. இந்த பூமியில் அனைவருக்கும் இடமுண்டு. அன்பு மிரட்டலுக்குப் பணியாது போன்ற வரிகள் இடம் பிடித்துள்ளன" போன்ற வரிகளும் இடம் பிடித்துள்ளன.
நேற்று முன்தினம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் நிறுவனமான I-PAC மற்றும் அதன் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. தேர்தல் தொடர்பான முக்கியமான தரவுகளை திருட அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டது என குற்றம்சாட்டினார்.
- "வங்காளம் மோடி-ஷாவின் அசுத்தமான அரசியலை நிராகரிக்கிறது" என்ற பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
- அமித் ஷாவால் நாட்டைப் பாதுகாக்க முடியவில்லை, ஆனால் எதிர்க்கட்சிகளின் ஹார்ட் டிஸ்க் மற்றும் வேட்பாளர் பட்டியலைத் திருட மட்டும் முடிகிறது
மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் (I-PAC) நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நேற்று தீவிர சோதனைகளை மேற்கொண்டது.
கொல்கத்தாவின் சால்ட் லேக் செக்டர் V-ல் உள்ள ஐ-பேக் (I-PAC) அலுவலகம் மற்றும் லௌடன் வீதியில் உள்ள அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் இல்லம் உட்பட சுமார் 10 இடங்களில் சோதனைகள் நடைபெற்றது.
மம்தா பானர்ஜியின் தேர்தல் உத்தி குழுவின் முக்கிய உறுப்பினராக ஜெயின் பரவலாக விவரிக்கப்படுகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி கடத்தல் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சோதனை தொடர்பான செய்திகள் வெளிவந்ததும் பானர்ஜியின் ஆதரவாளர்கள் சால்ட் லேக் அலுவலகத்திற்கு வெளியே கூடினர்.
மேலும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பிரதீக் ஜெயினின் இல்லத்திற்கு சென்றுள்ளார்.
மேலும் அங்கு அவர் சில ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும், முக்கிய ஆதாரங்களை மம்தா பானர்ஜி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறி அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் தேர்தல் ரகசியங்களை அபகரிக்கவே மத்திய அரசு இந்தச் சோதனையை நடத்துவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
தன்மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு குறித்து பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் வியூகங்கள், வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் கட்சியின் ரகசியத் தரவுகளைச் சேகரிக்கவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இந்தச் சோதனையைக் கண்டித்து இன்று மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.
அதேநேரம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-க்களான மஹுவா மொய்த்ரா, டெரெக் ஓ பிரையன், கீர்த்தி ஆசாத் உள்ளிட்டோர் டெல்லியில் அமித் ஷாவின் அலுவலகம் முன்பாகத் திரண்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"வங்காளம் மோடி-ஷாவின் அசுத்தமான அரசியலை நிராகரிக்கிறது" என்ற பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டதாக எம்.பி-க்களை டெல்லி போலீசார் அவர்களை குண்டுக்கட்டதாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
"மத்திய உள்துறை அமைச்சகம் அமலாக்கத்துறையைத் தவறாகப் பயன்படுத்தி எங்களது கட்சியின் அரசியல் ரகசியங்களையும், தேர்தல் வியூகங்களையும் திருட முயற்சிக்கிறது.
மம்தா பானர்ஜி ஒரு பெண் சிங்கம், அவர் தனது கட்சியையும் மக்களையும் பாதுகாப்பார்" என்று மஹுவா மொய்த்ரா தெரிவித்தார்.
இதற்கிடையே அமித் ஷாவால் நாட்டைப் பாதுகாக்க முடியவில்லை, ஆனால் எதிர்க்கட்சிகளின் ஹார்ட் டிஸ்க் மற்றும் வேட்பாளர் பட்டியலைத் திருட மட்டும் முடிகிறது என்று மம்தா பானர்ஜி சாடினார்.
- SIR தொடங்கியதிலிருந்து, அச்சத்தின் காரணமாகப் பலர் உயிரிழந்துள்ளனர்.
- மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுடெல்லி:
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. இதற்கு மேற்கு வங்க மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்.
SIR அச்சம், துன்புறுத்தல் மற்றும் நிர்வாகத் தன்னிச்சையான செயல்களைத் தூண்டிவிட்டு, உயிரிழப்புகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளது என குற்றம்சாட்டும் மம்தா பானர்ஜி, இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தில் தன்னிச்சையான தன்மை மற்றும் நடைமுறை முறைகேடுகள் இருக்கிறது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ'பிரையன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மாநிலத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை தொடங்கப்பட்டதில் இருந்து தேர்தல் ஆணையம் முறையான எழுத்துப்பூர்வ அறிவுறுத்தல்களை வழங்குவதற்குப் பதிலாக, "முறைசாரா மற்றும் சட்டத்திற்குப் புறம்பான சேனல்கள்" மூலம், வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் வீடியோ மாநாடுகளின்போது தெரிவிக்கப்படும் வாய்மொழி வழிமுறைகள் மூலம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக, கேலிக்குரிய முறையில் செயல்படவோ அல்லது சட்டத்தை மீறவோ முடியாது. சட்டப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட மற்றும் தற்காலிக அல்லது முறைசாரா வழிமுறைகளுடன் நடைமுறைகளை அமைக்கவோ முடியாது என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
- 2009 மற்றும் 2019 ஆகிய இரண்டு முறை காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
- தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் மவுசம் நூர், இன்று மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இவருடைய மாநிலங்களை எம்.பி. பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. விரைவில் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
2009 மற்றும் 2019 ஆகிய இரண்டு முறை மால்டா தக்ஷின் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் ஜெய்ராம் ரமேஷ், மேற்கு வங்க மாநிலத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் அகமது மிர், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.
கட்சியில் இணைந்த மவுசம் நூர் "மேற்கு வங்கத்திற்கு மாற்றம் தேவை. அது என்னிடம் இருந்து தொடங்கட்டும். எந்தவொரு நிபந்தனையின்றி கட்சியில் இணைந்துள்ளேன். மம்தா பானர்ஜிக்கு என்னுடையா ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளேன். மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய ரெடியாக இருக்கிறேன். திங்கட்கிழமை ஒப்படைப்பேன்" என்றார்.
- மீன் வளர்ப்புக்காக நீர்நிலைகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு.
- போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றியபோது, கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தபோது, கும்பல் ஒன்று போலீசார் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 6 போலீசார் காயம் அடைந்தனர்.
வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி பகுதியைச் சேர்ந்த போயர்மாரி கிராமத்தில், நேற்றிரவு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி மூசா மொல்லாவை கைது செய்ய போலீசார் சென்றனர். போலீசார் கைது செய்து செய்து முசாவை போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.
அப்போது, ஒரு கும்பல் திடீரென போலீசார் மீதும், போலீஸ் வாகனம் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 போலீசார் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கூடுதல் படை வரவழைக்கப்பட்டு, நிர்வாகியை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மீன் வளர்ப்புக்காக அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை வலுக்கட்டாயமாக அபகரித்த குற்றச்சாட்டின் பேரில் போலீசார் மூசா மொல்லாவை கைது செய்துள்ளனர். கும்பல் தாக்குதலை தூண்டியதற்கான பஞ்சாயத்து தலைவர் உள்பட மேலும், இரண்டு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2024-ம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஷாஜகான் வீட்டில் சோதனை மேற்கொள்ள சென்றபோது மர்மக்கும்பல் ஒன்று அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- திரிணாமுல் காங்கிரஸ் 2021-ல் 294 தொகுதிகளில் 213-ல் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
- வரும் தேர்தலில் பாஜக 3-ல் 2 பகுதி இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என அமித் ஷா தெரிவித்திருந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் வருகிற மார்ச்- ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த வாரம் அமித் ஷா மேற்கு வங்கம் சென்றிருந்தார். அப்போது, மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை அடையாளம் மட்டும் காணமாட்டோம். அவர்களை வெளியேற்றுவோம். மேற்கு வங்கத்தில் 3-ல் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான அபிஷேக் பானர்ஜி கூறியதாவது:-
தேர்தல் ஆணையம் போன்ற சக்திகளுக்கு எதிராக என்னுடைய சண்டை இன்றிலிருந்து தொடங்குகிறது. என்னுடைய வார்த்தைக்கு குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கடந்த 2021 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் வென்றதோ, அதைவிட தற்போது குறைந்தபட்சம் கூடுதலாக ஒரு இடத்திலாவது வெற்றி பெறும்.
இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.
2021 தேர்தல் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட்டு 294 தொகுதிகளில் 213-ல் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
- வாக்காளர் பட்டியலில் சந்தேகம் உள்ளவர்களை நேரில் வந்து ஆவணங்களை வழங்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.
- முகாம்களுக்கு முதியோர்கள் வர சிரமமாக இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கையை மேற்கொண்டது. அதனடிப்படையில் தற்போது வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் சுமார் 15 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
தற்போது உயிரோடு இருப்பவர்கள் பலரது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் முகாம்களுக்கு செல்வதுடன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் இந்த செயலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பார்தா பவ்மிக் கூறியதாவது:-
இது சித்ரவதைக்கு சற்றும் குறைவானது அல்ல. தேர்தல் நேரத்தின்போது வயதானவர்கள் வாக்களிக்க வர முடியாது என்பதால், அதிகாரிகளை வாக்குப்பதிவிற்கான வீடுகளுக்கு அனுப்புகிறது. அதே நடைமுறையை இதற்கு ஏன் பயன்படுத்தவில்லை?.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால், வேண்டுமென்றே அவர்கள் இந்த கோரிக்கையை நிராகரிக்கின்றனர்.
இவ்வாறு தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் மூத்த அமைச்சர் சஷி பஞ்சா "வயது மூத்த நபர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுதிறனாளிகள் அவர்களுக்கு வழங்கப்ப்ட நாள், நேரத்தில் முகாமுக்கு செல்ல மிகப்பெரிய கஷ்டத்தை எதிர்கொள்கிறனர். 85 வயது போன்றவர்களை அவர்களுடைய வீட்டில் சந்தித்து ஆவணங்கள் குறித்து விசாரிகக் தேர்தல் ஆணையம் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
- பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் எழுத்துபூர்வமாக ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார்.
- 2019-ஆம் ஆண்டு முதல் இ சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. நாளை டிசம்பர் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி கீர்த்தி ஆசாத் மக்களவையில் அவைக்குள்ளேயே இ-சிகரெட் பிடித்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் பாஜக வெளியிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பாஜக எம்.பி அனுராக் தாக்கூர், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் அவைக்குள்ளேயே இ-சிகரெட் பயன்படுத்துவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்திருந்தார். அப்போது அவர் அந்த உறுப்பினரின் பெயரை குறிப்பிடவில்லை.
இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு முதல் இ சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அனுராக் தாக்கூர் தனது புகாரில் சுட்டிக்காட்டினார்.
குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி அளித்தார்.
இந்நிலையில் பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், கீர்த்தி ஆசாத் தனது உள்ளங்கைக்குள் இ-சிகரெட்டை மறைத்து வைத்துப் புகைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவையின் சிசிடிவி பதிவுகள் மற்றும் வீடியோக்களை ஆய்வு செய்த பிறகு, விதிமுறைகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி பாணியிலான மசூதி கட்ட அழைப்பு விடுத்தார்.
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஹூமாயூன் கபீரரை ‘சஸ்பெண்டு’ செய்தது.
மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்குள்ள பரத்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹூமாயூன் கபீர். இவர் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி பாணியிலான மசூதி கட்ட அழைப்பு விடுத்தார்.
இதைதொடர்ந்து அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 'சஸ்பெண்டு' செய்தது. இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும், இந்த மாத இறுதியில் தனிக்கட்சி தொடங்க போவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தவாறு ஹூமாயின் கபீர் மேற்குவங்காளத்தில் பாபர் மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பாபர் மசூதி கட்ட அடிக்கல் நாட்டுவது அரசியலமைப்புக்கு முரணானது எதுவும் இல்லை. வழிபாட்டு தலத்தை கட்டுவது அரசியலமைப்பு உரிமை. பாபர் மசூதி கட்டப்படும்.
33 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் இதயங்களில் ஒரு ஆழமான காயம் ஏற்பட்டது. தற்போது அந்த காயத்துக்கு ஒரு சிறிய தைலம் பூசுகிறோம்.
பாபர் மசூதி கட்ட அடிக்கல் நாட்டப்போவதாக அறிவித்த போது எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தன. இந்த நாட்டில் 40 கோடி முஸ்லிம்களும், மேற்கு வங்காளத்தில் 4 கோடி முஸ்லிம்களும் உள்ளனர். இங்கே ஒரு மசூதியை கட்ட முடியாதா? பாபர் மசூதி எனது திட்டம் மட்டுமல்ல. மாநில நிர்வாகமும், திரிணாமுல் காங்கிரசும் இதில் ஈடுபட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- SIR தொடங்கியதிலிருந்து ஏற்கனவே 28 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
- பணிச்சுமையால் இத்தகைய விலைமதிப்பற்ற உயிர்கள் இழக்கப்படுகின்றன.
இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகள், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேற்கு வங்காளத்திலும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், மேற்குவங்கத்தில் SIR பணிகளில் ஈடுபட்டு வந்த சாந்தி முனி எக்கா என்ற பூத் லெவல் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட சாந்தி முனி எக்காவுக்கு இரங்கல் தெரிவித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இன்று மீண்டும், ஜல்பைகுரியின் மாலில் ஒரு பூத் லெவல் அதிகாரியை இழந்தோம். சாந்தி முனி எக்கா, ஒரு பழங்குடியின பெண், ஒரு அங்கன்வாடி ஊழியர், நடந்து வரும் SIR பணியின் தாங்க முடியாத அழுத்தத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
SIR தொடங்கியதிலிருந்து ஏற்கனவே 28 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். சிலர் பயம் மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாகவும், மற்றவர்கள் மன அழுத்தம் மற்றும் அதிக வேலைச்சுமை காரணமாகவும் உயிரை இழந்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் திட்டமிடப்படாத, இடைவிடாத பணிச்சுமையால் இத்தகைய விலைமதிப்பற்ற உயிர்கள் இழக்கப்படுகின்றன. முன்பு 3 ஆண்டுகள் எடுத்த ஒரு செயல்முறை, தங்களது அரசியல் எஜமானர்களை மகிழ்விக்க, தேர்தல்களுக்கு முன்னதாக 2 மாதங்களுக்குள் கட்டாயப்படுத்தப்பட்டு, BLO-க்கள் மீது மனிதாபிமானமற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
மனசாட்சியுடன் செயல்பட்டு, மேலும் உயிர்கள் இழக்கப்படுவதற்கு முன்பு இந்த திட்டமிடப்படாத SIR பணிகளை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் ஆணையத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- தேர்தல் கமிஷனின் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
- மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
கொல்கத்தா:
இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகள், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேற்கு வங்காளத்திலும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. மேற்கு வங்காள மந்திரிகள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இப்பேரணியில் பங்கேற்றனர்.
அப்போது, பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான அபிஷேக் பானர்ஜி, இரண்டு நாட்களில் இவ்வளவு பெரிய கூட்டத்தை திரட்ட முடியும் என்றால், டெல்லியில் எங்கள் போராட்டத்திற்கு எவ்வளவு பேர் திரள்வார்கள் என்பதை பா.ஜ.க. கண்டிப்பாக யோசித்துப் பார்க்க வேண்டும். டெல்லி ஜமீன்தாரர்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என தெரிவித்தார்.
- டெல்லியில் தடுத்து நிறுத்தப்பட்ட கர்ப்பிணி பெண், நாடு கடத்தப்பட்டார்.
- நாடு கடத்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என டிஎம்சி தெரிவித்துள்ளது.
நாடு கடுத்தப்பட்ட கர்ப்பிணி சோனாலி பிபி-யின் பெற்றோர் பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என திரணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கூறுகையில் "சோனாலி பிபியை இந்தியாவுக்கு அழைத்துவர, கடந்த செப்டம்பர் மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கர்ப்பிணி பெண் சோனாலி நாடு கடத்தப்பட்டது, வெறும் அதிகாரத்துவ கொடுமை மட்டுமல்ல, திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியையும் அம்பலப்படுத்துகிறது.
பெங்கால் மற்றும் அதன் மக்களின் கருத்து மீதான தாக்குதல்தான் SIR பணியின் நோக்கம். இது பயத்தை ஆயுதமாக்க முயல்கிறது. சொந்தத்தை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் குடிமக்களை அவமானப்படுத்துகிறது. மேலும் இந்த மாநிலத்தை வரையறுக்கும் சமூக கட்டமைப்பை உடைக்கிறது.
மேற்கு வங்கம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்த பணி மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. பாஜக-வின் கட்டளைப்படி இது நடைபெறுவதாக திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம செய்திருந்தது. ஆனால், இது வழக்கமான சரிபார்ப்பு பணிதான் என தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது.
சோனாலி பிபி மற்றும் அவரது கணவர், 5 வயது குழந்தை டெல்லியில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதை எதிர்த்து சோனாலி பிபி-யின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பிர்பம் மாவட்டைச் சேர்ந்த முராராய் பகுதியில் இருந்து டெல்லி சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இதனால், உயர்நீதிமன்றம் அவர்களை திரும்ப அழைத்து வர உத்தரவிட்டிருந்தது.






