search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SC"

    • வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் நீதிபதி முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
    • இன்றே விசாரிக்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வக்கீல் ராம் சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

    இதனையடுத்து நேற்று நடத்தப்பட்ட விசாரணையின்போது நீதிபதிகள், 'கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதையும், அதில் பணமோசடி புகார் தொடர்புடைய கோப்பு இருந்ததையும் அமலாக்கத் துறை நிரூபிக்க வேண்டும்' என தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.

    இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் நீதிபதி அபய் எஸ்.ஒகா முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

    செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கு ஆக. 5-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    ஆக.5-ந்தேதிக்கு நீண்ட நாள் உள்ளது. இன்றே விசாரிக்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.

    லோக் அதாலத் விசாரணை இருப்பதால் செந்தில் பாலாஜி மனுவை அடுத்த வாரம் விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் விசாரணையை ஒத்திவைத்தது.

    • நீட் தேர்வு வினாத்தாளை தேசிய தேர்வு முகமை ஏப்ரல் 24-ந்தேதி அனுப்பியுள்ளது.
    • பாட்னா, ஹசாரிபாக் ஆகிய 2 மையங்களில் நீட் வினாத்தாள் கசிவு உறுதியாகியுள்ளது.

    புதுடெல்லி:

    நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டை தொடர்ந்து தேர்வு மையங்கள் மற்றும் நகரங்கள் வாரியாக முடிவுகளை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    இதை தொடர்ந்து இந்தியாவில் 4750 மையங்கள், 571 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 மையங்கள் வாரியான முடிவுகளை இணைய தளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

    நாடு முழுவதும் தேர்வு எழுதிய 23 லட்சத்து 33,162 பேரில், 2,321 மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 30 ஆயிரத்து 204 பேர் 650 மதிப்பெண்களுக்கு மேலாகவும், 81 ஆயிரத்து 550 மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் எடுத்து உள்ளனர்.

    ராஜஸ்தானில் உள்ள சிகார் மையத்தில் 4297 பேர் 600 மதிப்பெண்களுக்கு மேலும், 2037 பேர் 650-க்கு மேல் மதிப்பெண்ணும் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதே நேரத்தில் நீட் தேர்வு எழுதிய 2250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு மதிப்பெண் கூட பெறவில்லை. 9,400-க்கும் அதிக மானவர்கள் நெகடிவ் மதிப்பெண் பெற்றனர். ஒரு மதிப்பெண் கூட பெறாததற்கு எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை என்று அர்த்தமல்ல. சில கேள்விகளுக்கு சரியான பதிலும், சில கேள்விகளுக்கு தவறான பதிலும் அளித்து இருக்கலாம். சரியான பதிலுக்கு மதிப்பெண் அளிக்கப்பட்டு, தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படுவதே எந்த மதிப்பெண்ணும் பெறாததற்கு காரணமாகும்.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையில் நீதிபதிகள் கே.பி, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணை இன்று மீண்டும் வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டதாவது;-

    நீட் தேர்வு வினாத்தாளை தேசிய தேர்வு முகமை ஏப்ரல் 24-ந்தேதி அனுப்பியுள்ளது. ஆனால் மே 3-ந் தேதி தான் வங்கி லாக்கருக்கு சென்றுள்ளது. அதுவரை தனியார் அமைப்பின் கைகளில் தான் வினாத்தாள் இருந்துள்ளது.

    இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் முகிஜியா மற்றும் அவருடைய கூட்டாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றார்.

    அப்போது முக்கிய பிரச்சனையை விவாதிக்குமாறு தலைமை நீதிபதி தெரிவித்தார். மேலும் பாட்னா, ஹசாரிபாக் ஆகிய 2 மையங்களில் நீட் வினாத்தாள் கசிவு உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் மனுதாரர்கள் மற்றும் அரசு தரப்பு வாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    • கன்வர் யாத்திரை நடைபெறும் பாதைகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் பெயரை எழுதி வைக்க வேண்டும்.
    • பலகையில் உரிமையாளர் பெயரை எழுதி வைத்திருக்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது.

    உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

    பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வர் கோவில் உள்ள உஜ்ஜைன் நகரிலும் இந்த விதியை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாநிலத்திலும் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது.

    உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில் கன்வர் யாத்திரை நடைபெறும் பாதைகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் பெயரை எழுதி வைக்க வேண்டும் என்று உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

    பெயர் பலகையில் உரிமையாளர் பெயரை எழுதி வைத்திருக்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. கடைகளின் பெயர் பலகையில் உரிமையாளர் பெயர் கட்டாயம் எழுத வேண்டும் என உத்தரவிட்ட மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    உ.பி., உத்தரகாண்ட், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற உத்தரவில் தெரிவித்துள்ளது.

    • மறுதேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டியது அவசியம்.
    • கேள்வி நேரத்தை குறைந்தது இரண்டு மணி நேரமாவது நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன் எழுப்பிய கருத்துகளின் உரையில் கூறியிருப்பதாவது,

    1. முதலில், நீட் முறைகேடு குறித்த விவாதத்தின் அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறேன். NEET-UG 2024 முடிவுகளின் பகுப்பாய்வு, அதிக மதிப்பெண்கள் பெற்ற பல மாணவர்கள் ராஜஸ்தானில் அமைந்துள்ள குறிப்பிட்ட மையங்களில் குவிந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகிறது. மறுதேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டியது அவசியம். 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அதிக சதவீத விண்ணப்பதாரர்களைக் கொண்ட 50 நீட்-யுஜி தேர்வு மையங்களில், 37 மையங்கள் ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் மட்டும் அமைந்துள்ளன. 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 30,204 மாணவர்களில், 2,037 பேர் சிகாரைச் சேர்ந்தவர்கள். இந்த அரசு நீட் தேர்வை மறைக்க முயல்கிறது என்ற கருத்து நிலவுகிறது. எனவே, நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் மிக முக்கியமானது.

    2. ஒவ்வொரு உறுப்பினரும் 15 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விவாத மேடையாக பாராளுமன்றம் செயல்படுகிறது. எனவே, சபையில் ஒவ்வொரு உறுப்பினரையும் சமமாக நடத்த வேண்டும். சிறிய கட்சிகளுக்கு 2 முதல் 3 நிமிடங்கள் ஒதுக்குவது நெறிமுறைக்கு புறம்பானது. ஒவ்வொரு உறுப்பினரும் அமர்வு நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் பேசும் நேரத்தையும் நான் வலியுறுத்துகிறேன்.

    3. தற்போது, ஒரு மணி நேர கேள்வி நேரத்தில் வாய்வழி பதில்களுக்காக ஒரு நாளைக்கு 20 கேள்விகள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன, பொதுவாக 5 முதல் 6 கேள்விகள் மட்டுமே விவாதிக்கப்படும். எனவே, கேள்வி நேரத்தை குறைந்தது இரண்டு மணி நேரமாவது நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    4. எல்லை நிர்ணய நடவடிக்கையால், மீனவர் சமூகம் உட்பட பல சமூகங்களுக்கு மக்களவையில் பிரதிநிதித்துவம் இல்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, அவர்களின் படகுகள் கைது செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுகின்றனர். மத்திய அரசு அவர்களை இந்திய மீனவர்களாக அங்கீகரிக்காதது வருத்தமளிக்கிறது. இந்த அமர்வில் இந்த விவகாரம் குறித்து சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    5. பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறையின் 2023-ம் ஆண்டு இந்தியா மீதான மத சுதந்திர அறிக்கை, சிறுபான்மைக் குழுக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள், கொலைகள், தாக்குதல்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவற்றை எடுத்துக்காட்டுகிறது. இந்தப் பிரச்சினையை மேலும் மோசமாக்கும் வகையில், உத்தரப் பிரதேச அரசு, கடை உரிமையாளர்கள் தங்கள் அடையாளங்களை பெயர்ப் பலகைகளில் காட்ட வேண்டும் என்று மதப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. சிறுபான்மையினரின் நிலை குறித்து சபையில் விவாதம் அவசியம்.

    6. இறுதியாக, எஸ்சி மற்றும் எஸ்டிகளின் நிலை குறித்த விவாதத்திற்கு ஒரு நாள் ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், எஸ்சி, எஸ்டி இனத்தவருக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க ஆட்சியில் இருந்த அரசுகள் தவறிவிட்டன. NITI ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட SDG அறிக்கை, நாட்டில் சமத்துவமின்மையைக் குறைப்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மோசமான தோல்வியைக் குறிக்கிறது. எனவே, இந்த முக்கியமான பிரச்சினையில் விவாதம் அவசியம்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கபட்டுள்ளதா என்று தெரிந்த பின்பே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும்.
    • நீட் தேர்வில் தேர்வான 1.8 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமாவது மறுதேர்வு நடத்த வேண்டும்.

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.

    நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது.

    எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

    இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கடந்த மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யமுடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்றும், ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கபட்டுள்ளதா என்று தெரிந்த பின்பே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும் என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், மனுத்தாக்கல் செய்த மாணவர்களில் எத்தனை பேர் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்று  கேள்வி எழுப்பியது.

    நீட் தேர்வில் தேர்வான 1.8 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமாவது மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் மருத்துவ படிப்பில் சேர இருக்கும் மாணவர்களுக்கு மட்டும் நீட் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

    • சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது.
    • ஆன்லைன் மூலம் மனுவை அனுப்பி சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டுக்கு காவிரியில் மாதம் தோறும் திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க மறுத்து வருகிறது.

    சமீபத்தில் காவிரி நதி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் கூடி தமிழ்நாட்டுக்கு தினமும் 8 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதையும் ஏற்க கர்நாடகா அரசு மறுத்து விட்டது.

    இதையடுத்து இந்த விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சென்னையில் நேற்று சட்டசபை கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுபடி தமிழ்நாடு பெற வேண்டிய நீரை உடனடியாக பெறுவதற்கு சுப்ரீம் கோர்ட்டை நாட வேண்டும் என்று கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது.

    நாளை (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் மனுவை அனுப்பி சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நடவடிக்கை மூலம் காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட தமிழக அரசு தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
    • சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    உச்சநீதிமன்ற நீதிபதிகளாக என்.கோடீஸ்வரர் சிங், ஆர்.மகாதேவன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    ஜம்மு ஐகோர்ட் தலைமை நீதிபதி கோடீஸ்வரர், சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாகினர்.

    காலியாக இருந்த 2 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

     

    பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • குரானாவுக்கு வழங்கப்பட்ட ஜாமினுக்கு டெல்லி ஐகோர்ட் தடை விதித்தது.
    • இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் குரானா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பர்விந்தர் சிங் குரானாவுக்கு கடந்த ஆண்டு விசாரணை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    குரானாவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்துசெய்யக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை அடுத்து டெல்லி ஐகோர்ட் தடை விதித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் குரானா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐகோர்ட் விதித்த தற்காலிக தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

    இதுதொடர்பாக, நீதிபதிகள் கூறுகையில், குரானா மீது பயங்கரவாத குற்றம் சாட்டப்படாத நிலையில் ஐகோர்ட் ஜாமினில் தாமதம் செய்வது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

    மேலும், பயங்கரவாத வழக்குகளில் யாரோ ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பது போன்ற அரிதான மற்றும் விதிவிலக்கான வழக்குகளில் மட்டுமே ஜாமின் உத்தரவை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க வேண்டும். அங்கு ஒழுங்கு முறைகேடு அல்லது சட்ட விதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இப்படி சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இது பேரழிவை ஏற்படுத்தும். இப்படி தடை கொடுத்தால் பேரழிவுதான் ஏற்படும் என தெரிவித்தனர்.

    எந்தவொரு காரணமும் கூறாமல் இயந்திரத்தனமான முறையில் ஜாமின் உத்தரவுகளை நிறுத்தி வைப்பதை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும். அரிதான மற்றும் விதிவிலக்கான வழக்குகளில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    குறிப்பிட்ட காரணங்களை தெரிவிக்காமல் ஒரு ஆண்டுக்கும் மேலாக வழக்கமான ஜாமின் உத்தரவை நீட்டித்த டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சியை வெளிப்படுத்தியது.

    • மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து ஆண்டுதோறும் கோடை சீசனின்போது ஏப்ரல், மே மாதங்களில் குதிரை பந்தயம் நடத்தி வருகிறது.
    • மெட்ராஸ் கிளப் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே குதிரை பந்தய மைதானம் உள்ளது. சுமார் 52.34 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மைதானம் மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதி வருவாய்த்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் ஆகும். இந்த நிலத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து ஆண்டுதோறும் கோடை சீசனின்போது ஏப்ரல், மே மாதங்களில் குதிரை பந்தயம் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே ரூ.822 கோடி குத்தகை பாக்கியை செலுத்தக்கோரி வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் குத்தகை பாக்கியை செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகம் முன்வரவில்லை. அத்துடன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குத்தகை பாக்கியை உடனே செலுத்த வேண்டும் என்றும், செலுத்தாத பட்சத்தில் நிலத்தை கையகப்படுத்தி அரசு கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் (ஜூன்) 24-ம்தேதி உத்தரவிட்டது. அதன்பிறகும் குத்தகை தொகையான சுமார் ரூ.822 கோடியை அரசுக்கு செலுத்தாமல் இருந்ததால் வருவாய்த்துறை அதிகாரிகள் குதிரை பந்தய மைதானத்துக்கு சீல் வைத்தனர்.

    இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மெட்ராஸ் கிளப் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ் வி என் பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, குதிரை பந்தயம் மைதானத்திற்கு சீல் வைத்தது செல்லும் என தெரிவித்ததுடன், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது

    • செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
    • வழக்கின் விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    புதுடெல்லி:

    சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், தனக்கு ஜாமின் வழங்க கோரியும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது. ஒன்றரை மாத கோடை விடுமுறைக்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டில் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தது.

    அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கின் விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அமலாக்கத்துறை தரப்பின் கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அன்றைய தினம் கடைசி வழக்காக செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீதான விசாரணை நடைபெறும் என்று அறிவித்தனர்.

    • நீட் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது அவசியம்.
    • சமூக வலைதளங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததால் காட்டுத்தீ போல பல இடங்களுக்குப் பரவியுள்ளது.

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.

    நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது.

    எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

    இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    நீட் தேர்வு வினாத்தாள் செல்போன் மூலம் கசிந்துள்ளது, பள்ளிகளில் பிரிண்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது. மே 4-ல் டெலிகிராம் சேனலில் நீட் வினாத்தாள், அதன் விடைகளுடனான வீடியோ வெளியிடப்பட்டது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொள்கிறீர்களா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.

    ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள் கசிவால் பலனடைந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

    இதனையடுத்து தலைமை நீதிபதி சந்திரசூட் மத்திய அரசை நோக்கி பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்,

    கசிந்த நீட் வினாத்தாள் தேர்வர்களுக்கு கிடைத்தது எப்படி?, வினாத்தாள் லாக்கருக்கு எப்போது அனுப்பப்பட்டது?, லாக்கர்களில் இருந்து எப்போது அவை எடுக்கப்பட்டன?, நாடு முழுவதும் எத்தனை மையங்களில் நீட் தேர்வு எழுதப்பட்டன?, நீட் மறுதேர்வு கோர முகாந்திரம் என்ன?, 1,563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதா? அதில் முழு மதிப்பெண்கள் பெற்ற 6 தேர்வர்களும் அடக்கமா?

    நீட் தேர்வுத்தாள் கசிவு நடைபெறவில்லை என்று தேசிய தேர்வு முகமை நிலைப்பாடாக கொண்டாலும் 2 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டால் மொத்த தேர்வும் ரத்து செய்யப்படுவதில்லை. ஆனால் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தெளிவாகிறது. நீட் தேர்வின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் அறிய விரும்புகிறோம். எந்த கட்டத்தில் நீட் வினாத்தாள் கசிந்தது?, கசிவுக்கு காரணமானவர்கள் மீதும், பலனடைந்தவர்கள் மீதும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

    டெலிகிராம், வாட்சப் போன்ற சமூக வலைதளங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததால் காட்டுத்தீ போல பல இடங்களுக்குப் பரவியுள்ளது. ஒரு இடம் மட்டும் இல்லாமல் பல இடங்களில் பெருமளவில் நீட் வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்பு உள்ளது.

    வினாத்தாள் கசிவின் தன்மை குறித்து கவனமாக இருக்க வேண்டும். எத்தனை மாணவர்களின் தேர்வு முடிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்ட மாணவர்களின் இருப்பிடங்கள் எங்கே உள்ளது.

    இறுதியாக நீட் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது அவசியம் என்று கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு விரிவான பதிலை மத்திய அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.
    • நீட் தேர்வு வினாத்தாள் செல்போன் மூலம் கசிந்துள்ளது, பள்ளிகளில் பிரிண்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.

    நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது.

    எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

    இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    நீட் தேர்வு வினாத்தாள் செல்போன் மூலம் கசிந்துள்ளது, பள்ளிகளில் பிரிண்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது. மே 4-ல் டெலிகிராம் சேனலில் நீட் வினாத்தாள், அதன் விடைகளுடனான வீடியோ வெளியிடப்பட்டது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொள்கிறீர்களா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.

    ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள் கசிவால் பலனடைந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

    ×