search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajiv murder case"

    • பேரறிவாளனைப் போலவே இந்த 6 பேரும் நிவாரணங்களைப் பெற தகுதியானவர்கள் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
    • மத்திய அரசின் கருத்தை கேட்டு விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ராபர்ட் பயாஸ், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்திருந்தது. அதேபோல் சிறையில் இந்த 6 பேரின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு, நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். பேரறிவாளனைப் போலவே இந்த 6 பேரும் நிவாரணங்களைப் பெற தகுதியானவர்கள் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதையடுத்து 6 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

    இந்த தீர்ப்பை தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் வரவேற்றுள்ள நிலையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசின் கருத்தை கேட்டு விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    முன்னாள் பிரதமர் படுகொலை தொடர்பான வழக்கு என்பதால், இந்த உத்தரவை பிறப்பிக்கும் முன் நீதிமன்றம் மத்திய அரசை விசாரித்திருக்க வேண்டும் என மறு ஆய்வு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசை ஒரு தரப்பாக சேர்க்காமல் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் அல்லது விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு சுட்டிக்காட்டி உள்ளது.

    • மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் மனுக்களை விரைந்து விசாரிக்க கோரி முறையிட்டார்.
    • இந்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    புதுடெல்லி

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் தங்களை விடுதலை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளனர். இது தொடர்பான மனுக்கள் நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு பட்டியல் இடப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் மனுக்களை விரைந்து விசாரிக்க கோரி முறையிட்டார். அப்போது நீதிபதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிப்பதாக தெரிவித்தார். ஆனால் தமிழக அரசின் சார்பில் ஆஜராகும் மூத்த வக்கீல் ராகேஷ் துவிவேதி, வேறொரு நாளில் பட்டியிலிடுமாறு கேட்டுக்கொண்டார்.

    இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு், இந்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.

    • தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி மனு
    • தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் வழக்கு விசாரணை நடைபெற்றது

    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், இதன் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தன்னை விடுதலை செய்ய வேண்டுமென கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல், தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இதேபோல இந்த வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரவிச்சந்திரனும் தன்னை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த இரு மனுக்களும், தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

    ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக, கோர்ட் தீர்ப்பின் நகல் கிடைத்ததும் கவர்னரிடம் பரிந்துரை செய்யப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #MinisterJayakumar
    சென்னை:

    ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது பற்றி தமிழக அரசு முடிவு எடுத்து கவர்னருக்கு பரிந்துரைக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ள நிலையில் தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தெளிவான முடிவு எடுத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தார். இந்த 7 பேர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடாகும்.

    ஆனாலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்ததால் தீர்ப்புக்காக காத்திருந்தோம். இப்போது 7 பேரையும் விடுதலை செய்வது பற்றி தமிழக அரசு முடிவு எடுத்து கவர்னருக்கு பரிந்துரைக்கலாம் என்ற தீர்ப்பு மாநில அரசின் முடிவுக்கு உறுதுணையாக அமைந்துள்ளது.

    எனவே அடுத்த கட்ட நடவடிக்கையாக தீர்ப்பின் நகல் கிடைத்ததும் அதில் உள்ள உத்தரவுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆராய்ந்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி தேவையான முடிவுகளை எடுப்பார்.

    தேவைப்பட்டால் மீண்டும் அமைச்சரவை கூட்டி விவாதித்து கவர்னருக்கு பரிந்துரைக்கவும் வழிவகை இருப்பதாக தெரிகிறது.

    எனவே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி தமிழக அரசு உரிய முடிவை எடுக்கும்.

    கோர்ட்டு தீர்ப்பின் நகல் வருவதற்கு குறைந்தது 2 நாள் ஆகும். அதன் பிறகு அதை முழுவதும் படித்து பார்க்க வேண்டும். சட்ட நிபுணர்களுடன் விவாதிக்க வேண்டும்.

    இப்படி பல்வேறு நடைமுறைகள் இருப்பதால் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைந்து முடிவுகளை மேற்கொள்வார்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar
    சிறையில் இருக்கும் எனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் என ராஜீவ் கொலையாளி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். #RajivMurderCase #Perarivalan #Arputhammal #MercyKill
    திருப்பத்தூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் விடப்பட்டன.

    இதற்கிடையே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கோரிய மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்தார்.

    இந்நிலையில், சிறையில் இருக்கும் எனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் என ராஜீவ் கொலையாளி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எனது மகனை வெளியில் கொண்டு வர பல்வேறு போராட்டங்கள் நடத்தி விட்டேன். ஆனாலும் எந்த பலனும் இல்லை.

    அவனை சிறையில் இருந்து விடுவிக்க முடியாவிட்டால் கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று வலியுறுத்த உள்ளேன் என தெரிவித்துள்ளார். #RajivMurderCase #Perarivalan #Arputhammal #MercyKill
    ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில், அவர்களின் தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது. #RajivMurderCase
    புதுடெல்லி:

    முன்னாள் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ளனர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் சிறையில் இருந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.

    இந்நிலையில், சிறையில் உள்ள 7 பேரின் உடல் மற்றும் மனநிலை, அவர்களது சிறைத்தண்டனை, குடும்ப சூழல், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு இன்று கடிதம் அனுப்பியுள்ளது. 
    ×