என் மலர்
நீங்கள் தேடியது "உச்ச நீதிமன்றம்"
- சிறுவயது மாணவர்களுக்கு இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயங்களைக் கற்பிப்பது முறையானது அல்ல
- மத்திய அரசு இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது.
8ஆம் வகுப்பு (CBSE) சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் "நீதித்துறையின் பங்கு" என்ற பாடத்தில், நீதித்துறையில் நிலவும் ஊழல் குறித்த ஒரு புதிய பகுதி சமீபத்தில் சேர்க்கப்பட்டது. இது குறித்து தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து விசாரித்தது.
நீதித்துறையை இழிவுபடுத்தும் எத்தகைய செயலையும் அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் எச்சரித்ததைத் தொடர்ந்து, அந்தப் பாடப்பகுதியை நீக்க மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அந்தப் புத்தகங்கள் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. மேலும் இன்று மத்திய அரசு இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பாக பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. "நீதித்துறை ஊழல் பற்றி 8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு நாம் என்ன கற்பிக்கிறோம்?" என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இவ்வளவு சிறிய வயது மாணவர்களுக்கு இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயங்களைக் கற்பிப்பது முறையானது அல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் இந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
- பாபர் ஒரு 'படையெடுப்பாளர்'
- ஒரு மசூதியைக் கட்டப்போவதாகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் அறிவித்ததை எதிர்த்து இந்த மனு தாக்கல்
முகலாயப் பேரரசரான பாபரின் பெயரிலோ அல்லது பாபர் மசூதி என்ற பெயரிலோ மசூதிகள் கட்டுவதற்கு அல்லது மசூதிகளுக்கு பெயரிடுவதற்கு நாடு முழுவதும் தடைவிதிக்கக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பாபர் ஒரு 'படையெடுப்பாளர்' என்றும், அவர் இந்துக்களை அடிமைகள் என்றும் குறிப்பிட்டதாகவும், அவர் பெயரில் மசூதிகள் கட்டுவது இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி போன்ற ஒரு மசூதியைக் கட்டப்போவதாகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் அறிவித்ததை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது. விசாரணைக்கு நீதிபதிகள் மறுத்ததைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இதனால் இந்த மனு 'திரும்பப் பெறப்பட்டதாகக் கருதி தள்ளுபடி' செய்யப்பட்டது.
- வசதி படைத்தவர்களுக்கே எந்த வகையான இலவசமும் முதலில் போய்ச் சேருகிறது.
- ஏன் தேர்தல் நெருங்கும் வேலையில் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன?
மின்சார திருத்த விதிகள் 2024 இன் விதி 23 ஐ எதிர்த்து தமிழ்நாடு மின் விநியோக நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவை இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி மற்றும் நீதிபதி விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்திடம் கேள்விகளை அடுக்கிய நீதிபதி காந்த்,
"இவை அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்வது பொதுநலனுக்கு உகந்ததா? இலவசங்களால் ஒட்டுமொத்த நாடும் ஏற்கனவே... நாங்கள் குறிப்பாக தமிழ்நாட்டைப் பற்றி மட்டும் பேசவில்லை. ஒட்டுமொத்த இந்தியா குறித்தும் பேசுகிறோம். நாம் என்ன மாதிரியான கலாச்சாரத்தை வளர்த்து வருகிறோம்? மின்சாரக் கட்டணம் செலுத்தக்கூடிய நிலையில் இருப்பவர்களுக்கும், விளிம்புநிலை மக்களுக்கும் இடையே என்ன வேறுபாடு உள்ளது?
ஒரு நல்ல அரசு என்ற முறையில், விளிம்புநிலை மக்களுக்கு நீங்கள் நிவாரணம் வழங்க விரும்புவது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால், வசதியுள்ளவர்கள் மற்றும் வசதியற்றவர்களுக்கு இடையே எந்தப் பாகுபாடும் காட்டாமல் நீங்கள் (இலவசங்களை) வழங்கத் தொடங்கினால், அது ஒரு வகையான 'திருப்திப்படுத்தும் அரசியல்' ஆகாதா?"
நீங்கள் வருவாய் உபரி மாநிலமாக இருந்தாலும் கூட, அந்தத் தொகையை சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை மேம்படுத்துவது போன்ற ஒட்டுமொத்த பொதுமக்களின் வளர்ச்சிக்காகச் செலவிடுவது உங்கள் கடமை அல்லவா? அதற்குப் பதிலாக, நீங்கள் தொடர்ந்து உணவு மற்றும் ஆடைகளை விநியோகித்துக் கொண்டே இருக்கிறீர்கள், மக்களும் தேர்தல் நேரத்தில் அனைத்தையும் அனுபவிக்கிறார்கள். இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?
இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டியது அவசியமானது என்பது புரிந்துகொள்ளத்தக்கது. கல்வி கற்க வசதியற்ற குழந்தைகள் இருந்தால், அரசு அதை வழங்க வேண்டும். அது அரசின் கடமை. திறமையான ஆனால் மருத்துவக் கல்லூரிகளுக்குச் செல்ல வசதியற்ற குழந்தைகள் இருந்தால், அரசு அவர்களுக்கு உதவ வேண்டும். ஆனால், வசதிகளை அனுபவிக்கக்கூடிய நிலையில் இருக்கும், அனைத்து வாழ்வாதாரங்களும் கொண்ட வசதி படைத்தவர்களுக்கே எந்த வகையான இலவசமும் முதலில் போய்ச் சேருகிறது. மாநில அரசுகள் தங்களது இதுபோன்ற கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது? என்று நினைக்கிறோம்.
சமீபத்தில் தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்களை நாம் பார்த்தோம். ஏன் தேர்தல் நெருங்கும் வேலையில் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன? அனைத்து அரசியல் ஆளுமைகள், தலைவர்கள், கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். இப்படி இலவசங்களை தொடர்ந்து கொடுத்துவந்தால் அது நாட்டின் வளர்ச்சியைத் தடுத்துவிடும். ஒரு சமநிலை இருக்க வேண்டும். இந்த இலவசங்கள் எவ்வளவு நாள் நீடிக்கும்?
மாநிலங்கள் நிதிப்பற்றாக்குறையில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும், மக்களுக்கு இத்தகைய பண விநியோகங்களைச் செய்து வருவதுதான் எங்களது கவலை. அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? ஏன் அந்தப் பணத்தை வளர்ச்சிப் பணிகளுக்காக அர்ப்பணிக்கக்கூடாது? சாலைகள், நீர்ப்பாசனம், மின்சாரம் என நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதற்கான நீண்டகால வளர்ச்சி திட்டத்தை உருவாக்கலாம்.
மக்கள் சுயமாக சம்பாதித்து, கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான வேலைவாய்ப்பு வழிகளை அரசு உருவாக்க வேண்டும். இலவச உணவு, இலவச எரிவாயு, இலவச மின்சாரம் என அனைத்தையும் கொடுக்கத் தொடங்கி... நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிலேயே பணத்தையும் செலுத்தினால், பிறகு மக்கள் ஏன் வேலை செய்யப் போகிறார்கள்? தங்களுக்குத் தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்துவிடும் என்று தெரிந்த பிறகு, அவர்கள் எங்கிருந்து வேலையைக் கற்றுக்கொள்வார்கள்? நாம் இப்படித்தான் தேசத்தைக் கட்டமைக்கிறோமா?" என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
- ராணுவ ஓய்வூதிய விதிகள் 1961 அடிப்படையில், புகைபிடித்தல் காரணமாக ஏற்படும் பக்கவாதம் "பணி நிமித்தமான பாதிப்பு என்று கருதப்படாது.
- தேவையற்றப் பழக்கங்களால் ஏற்படும் நோய்களுக்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்க முடியாது
புகைபிடித்தல் காரணமாக ஏற்படும் பக்கவாதத்திற்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மது அருந்துதல், புகையிலை அல்லது போதைப்பொருள் பயன்பாடு போன்ற தனிப்பட்ட, தேவையற்றப் பழக்கங்களால் ஏற்படும் நோய்களுக்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி பி.பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அவருக்கு ஏற்பட்ட 'Stroke Ischemic RT MCA TERRITORY' (மூளையின் வலது பக்க தமனியில் ஏற்பட்ட இரத்த அடைப்பால் வந்த பக்கவாதம்) பாதிப்பு, ராணுவப் பணியால் ஏற்பட்டதோ அல்லது பணிச் சூழலால் தீவிரமடைந்ததோ அல்ல என்று மருத்துவக் குழு அறிக்கை சமர்பித்த நிலையில் மனுவை தள்ளுபடி செய்து, ஊனமுற்றோர் ஓய்வூதிய கோரிக்கையை நிராகரித்த ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதிசெய்தது.
அவரது பக்கவாதத்திற்கு புகைபிடித்தலே காரணம் என்று மருத்துவக் குழு உறுதி செய்தது. அவர் ஒரு நாளைக்கு சுமார் 10 பீடிகள் புகைக்கும் பழக்கம் கொண்டவர் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஒரு ரத்த உறைவு அல்லது கொழுப்புப் படிவம் மூளைக்குச் செல்லும் தமனியை அடைக்கும்போது, ஆக்சிஜன் விநியோகத்தைத் தடுத்து இரத்த ஓட்டத்தைக் குறைப்பதன் மூலம் 'இஸ்கிமிக் ஸ்ட்ரோக்' ஏற்படுகிறது என்றும், இதன் காரணமாக மூளைத் திசுக்கள் பாதிப்படைகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இதற்கான முக்கிய காரணிகளாக உயர் இரத்த அழுத்தம், புகைபிடித்தல், சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால், உடல் பருமன் மற்றும் இதயத் துடிப்பு ஒழுங்கற்ற நிலை ஆகியவை இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து "முதல் மருத்துவ அறிக்கை மற்றும் மருத்துவக் குழுவின் கருத்துகளை நாங்கள் ஆய்வு செய்ததில், அவருக்கு ஏற்பட்ட 'Stroke Ischemic RT MCA TERRITORY' எனும் பாதிப்பானது இராணுவப் பணியால் ஏற்பட்டதோ அல்லது பணியின் காரணமாகத் தீவிரமடைந்ததோ அல்ல என்பதில் எங்களுக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை.
மேல்முறையீடு செய்தவர் ஒரு நாளைக்கு பத்து பீடிகள் என்ற கணக்கில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர் என்பது இரண்டு அறிக்கைகளிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும்," என்று நீதிமன்றம் கூறியது.
இராணுவ ஓய்வூதிய விதிகள் 1961 மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கான வழிகாட்டுதல் 2002 ஆகியவற்றின் அடிப்படையில், புகைபிடித்தல் காரணமாக ஏற்படும் பக்கவாதம் "பணி நிமித்தமான பாதிப்பு" (Attributable to service) என்று கருதப்படாது.
- ஐதராபாத்தைச் சேர்ந்த பிரத்யுஷா தெலுங்கு மற்றும் தமிழ் என பல படங்களில் நடித்துள்ளார்.
- சினிமாவில் உச்சத்தில் இருந்த பிரத்யுஷா 22 வயதில் உயிரிழந்தார்.
1999 ஆம் ஆண்டு வெளியான மனுநீதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகை பிரதியுஷா அறிமுகமானார். ஐதராபாத்தைச் சேர்ந்த பிரத்யுஷா தெலுங்கு மற்றும் தமிழ் என பல படங்களில் நடித்துள்ளார்.
பிரபுவுடன் சூப்பர் குடும்பம், விஜயகாந்த்துடன் தவசி, ராமராஜனுடன் பொன்னான நேரம், பாரதிராஜாவின் கடல்பூக்கள் ஆகிய படங்களில் பிரத்யுஷா நடித்துள்ளார்.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே சித்தார்த் ரெட்டி என்பவரை பிரத்யுஷா காதலித்து வந்தார். ஆனால் அவர்களின் காதலுக்கு சித்தார்த் ரெட்டி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் 2002 ஆம் ஆண்டு சித்தார்த் ரெயி மற்றும் பிரத்யுஷா இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்றனர். இதில் சித்தார்த் உயிர் பிழைக்க பிரத்யுஷா உயிரிழந்தார்.
சினிமாவில் உச்சத்தில் இருந்த பிரத்யுஷா 22 வயதில் உயிரிழந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் தற்கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் சித்தார்த்த ரெட்டிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, டிசம்பர் 2011-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் சித்தார்த் ரெட்டியின் தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்து ரூ.50,000 அபராதமும் விதித்தது.
இதனால் விரக்தியடைந்த பிரத்யுஷாவின் தாய் 2012 - ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தை நாடினார். 23 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் சித்தார்த் ரெட்டி குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி 4 வாரங்களில் சித்தார்த் ரெட்டி சரணடைய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு குறைப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனைக்கான உத்தரவு ரத்து செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
- சோனம் வாங்சுக்கின் உரைகளை மத்திய அரசு "மிக அதிகமாக" ஆய்வு செய்கிறது
- இந்தியாவிற்கு எதிரான ஒன்றை நாம் மகிமைப்படுத்த வேண்டாம்.
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் 6-வது அட்டவணை பாதுகாப்பை வலியுறுத்தி போராட்டம் நடத்திய சோனம் வாங்சுக் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். காவலில் இருக்கும் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, அவரைத் தடுப்புக் காவலில் வைத்திருக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாங்சுக்கின் உடல்நிலை அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்றும், உடல்நலக் காரணங்களுக்காக அவரை விடுவிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். மேலும் "உடல்நலக் காரணங்களுக்காக வாங்சுக்கை விடுவிப்பது என்பது ஒரு 'சமூக ஊடக நாடகம்' என்று தெரிவித்தார்.
அதற்கு, பதிலளித்த நீதிமன்றம், 'ஏன் ஒரு சிறிய விஷயத்தை இவ்வளவு பெரிதுபடுத்த முயல்கிறீர்கள்? நாங்கள் கேள்விகள் கேட்கக் கூடாது என்று விரும்புகிறீர்களா?' எனக் கேட்டது. இதற்கு மேத்தா, 'நான் அதைச் சொல்லவில்லை' என்று பதிலளித்தார்.
மேலும் சோனம் வாங்சுக்கை மகாத்மா காந்தியுடன் ஒப்பிடாதீர்கள் எனவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விசாரணையின்போது சோனம் வாங்சுக்கின் உரைகளை மத்திய அரசு "மிக அதிகமாக" ஆய்வு செய்கிறது என்று நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பி.பி. வராலே அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்தது. மேலும் வாங்சுக்கின் அறிக்கைகள் மற்றும் போராட்ட முறைகள் குறித்து அரசு முன்வைத்த வாதங்களை ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, மகாத்மா காந்தியின் கடைசி உண்ணாவிரத உரையை மேற்கோள் காட்டியது. வாங்சுக் தனது உரையில் "காந்திய வழியில் இருந்து மக்கள் விலகிச் செல்வது கவலை அளிக்கிறது" என்று குறிப்பிட்டிருந்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதற்கு, முற்றிலும் இந்தியாவிற்கு எதிரான ஒன்றை நாம் மகிமைப்படுத்த வேண்டாம். அவரை தேசப்பிதாவுடன் ஒப்பிட வேண்டாம்'. 'இந்த நீதிமன்றம் சோனம் வாங்சுக்கை மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டது என்பது நாளைய தலைப்புச் செய்தியாக மாறிவிட வேண்டாம்' என்று துஷார் மேத்தா தெரிவித்தார்.
- எந்தவொரு பெண்ணையும் தனது விருப்பத்திற்கு மாறாக கர்ப்பத்தைத் தொடர கட்டாயப்படுத்த முடியாது
- இந்தியச் சட்டப்படி பொதுவாக 24 வாரங்கள் வரை மட்டுமே கருக்கலைப்புக்கு அனுமதி உண்டு
18 வயது பெண்ணின் 30 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக மும்பை உயர் நீதிமன்றம் இந்தக் கருக்கலைப்புக்கு அனுமதி மறுத்து, குழந்தையை வளர்க்க விரும்பவில்லை என்றால் தத்துக் கொடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் கருக்கலைப்பிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கருவை கலைப்பது பெண்ணின் ஆரோக்கியத்திற்கு எந்தப் பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று கூறிய மருத்துவக் குழுவின் அறிக்கையை மதிப்பாய்வு செய்தபிறகு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 17 வயதில் கருத்தரித்து தற்போது 18 வருடம் மற்றும் நான்கு மாத வயதாகிறது அப்பெண்ணுக்கு. தனது பக்கத்து வீட்டுச் சிறுவனுடன் இருந்த உறவினால் கர்ப்பமடைந்துள்ளார்.
கருக்கலைப்பு சட்டத்தில் உள்ள காலக்கெடுவைவிட, சிறுமியின் மனநலன் மற்றும் அவரது விருப்பத்திற்கே முன்னுரிமை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அப்பெண்ணிற்கு விருப்பமில்லை என்றால், கர்ப்பத்தை தொடர கட்டாயப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
எந்தவொரு பெண்ணையும், குறிப்பாக மைனர் சிறுமியை, அவரது விருப்பத்திற்கு மாறாக கர்ப்பத்தைத் தொடரக் கட்டாயப்படுத்த முடியாது என்று நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு தெரிவித்தது. பெண்ணின் இனப்பெருக்க சுயாட்சி மற்றும் உடல் மீதான உரிமை மிக முக்கியமானது. பாதுகாப்பான மருத்துவக் கருக்கலைப்புக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்தால், அது போன்ற சூழலில் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்படாத மற்றும் பாதுகாப்பற்ற இடங்களை நாடும் அபாயம் உள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
மும்பையிலுள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் அனைத்து மருத்துவப் பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி இந்தக் கருக்கலைப்பை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியச் சட்டப்படி பொதுவாக 24 வாரங்கள் வரை மட்டுமே கருக்கலைப்புக்கு அனுமதி உண்டு. அதற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் கருவை கலைக்க நீதிமன்றத்தின் சிறப்பு அனுமதி கட்டாயமாகும்.
- SC, ST மற்றும் OBC பிரிவு மாணவர்களுக்கு, இந்தத் தேர்ச்சி சதவீதம் 40-லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் சுமார் 65,000 முதல் 70,000 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன.
நீட் முதுகலை தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கு தொடர்பாக மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே அடங்கிய அமர்வு இன்று இந்த வழக்கை விசாரித்தது. அப்போது தேர்வே எழுதாதவர்கள் கூட இந்த கட்-ஆஃப் முறையால் சிறந்த நிலையில் இருக்கும் சூழல் உருவாவதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து பூஜ்ஜியம் மற்றும் மைனஸ் 40 (-40) போன்ற மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களையும் மருத்துவ மேற்படிப்பிற்குத் தகுதியானவர்களாக அறிவிப்பது நோயாளி பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தரத்தை பாதிக்கும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் காலியாக உள்ள 18,000-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்காக கட்-ஆஃப் குறைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் பொதுப்பிரிவு மற்றும் EWS (பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்) மாணவர்களுக்கான தகுதித் தேர்ச்சி சதவீதம் 50-லிருந்து 7-ஆகவும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 45-லிருந்து 5-ஆகவும், SC, ST மற்றும் OBC பிரிவு மாணவர்களுக்கு. இந்தத் தேர்ச்சி சதவீதம் 40-லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. இதில் எதிர்மறை மதிப்பெண் முறை உள்ளதால், அவர்களுக்கான தகுதி மதிப்பெண் 800-க்கு -40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்வை எழுதாதவர்கள் கூட இதைவிட சிறந்த நிலையில் இருப்பார்கள் என்று குறிப்பிட்டு, -40 மதிப்பெண் தகுதியை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. மறுபுறம் இந்த விவகாரம் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டாலும், தற்போதைய நீட் பிஜி 2025-26 கவுன்சிலிங் செயல்முறைக்கு உச்சநீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை.
- ஆளுநர் தன்னிச்சையாக துணைவேந்தர்களை நியமிப்பதாக அரசு குற்றம்சாட்டியது.
- மாநில அரசின் சட்டம் UGC விதிகளுக்கு முரணாக இருப்பதாகவும் கூறி இந்தத் தடை விதிக்கப்பட்டது.
தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க அதிகாரம் வழங்கும் சட்டத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்த விவகாரம் மாநில அரசின் உரிமை மற்றும் ஆளுநரின் அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையேயான நீண்ட காலப் போராட்டத்தின் முக்கிய மைல்கல்லாகும். கடந்தாண்டு மே மாதம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், (லட்சுமி நாராயணன் அமர்வு அரசின் சட்டத்திற்கு தடை விதித்திருந்தனர்.
தமிழ்நாடு அரசு 2022-2024 காலகட்டத்தில் பல்வேறு பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்தது. அதில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து நீக்கப்பட்டு, மாநில அரசுக்கே வழங்கப்பட்டது.
ஆளுநர் தன்னிச்சையாக துணைவேந்தர்களை நியமிப்பதாக அரசு குற்றம்சாட்டியது. மாநில அரசின் கொள்கைகளுக்கு இணக்கமான மற்றும் கல்விசார் தகுதியுள்ளவர்களை நியமிக்க இந்த அதிகாரம் அவசியம் என அரசு வாதிட்டது.
கடந்த ஆண்டு இந்த சட்டத்திருத்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு, இதற்கு இடைக்காலத் தடை விதித்தது.
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) விதிகளின்படி, துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்குப் பங்கு இருக்க வேண்டும் என்றும், மாநில அரசின் சட்டம் UGC விதிகளுக்கு முரணாக இருப்பதாகவும் கூறி இந்தத் தடை விதிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பல்வேறு காரணங்களுக்காக உயர் நீதிமன்றத் தடையை நீக்கியது:
பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்க்க இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவது அவசியம் எனக் கருதப்பட்டது.
தமிழக பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களை முதல்வரே நியமிக்கும் சட்டத்துக்கு எதிரான உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம் இதனால் முதல்வரே துணை வேந்தர்களை நியமிக்கும் சட்டத்துக்கு தடை நீங்கியது.
- தன்னை வாதிட அனுமதித்த உச்சநீதிமன்றத்திற்கு மம்தா நன்றி தெரிவித்தார்
- பெயர்களை நீக்கியதற்கு எதிரான மாநில அரசின் ஆதாரங்களை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் SIR பணி நடைபெற்று வருவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முரண்பாடு இருப்பதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, நீண்ட வரிசையில் மக்களை காக்க வைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், SIR பணியால் பலர் உயிரிழந்துள்ளனர் எனக் குற்றம் சாட்டியுனார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பில் பிரதிநிதிகள் ஆகியோருடன் மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்தார். அப்போது, பேசிக்கொண்டிருந்தபோது, பாதிலேயே மம்தா பானர்ஜி வெளியேறினார்.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் SIR வழக்கில் மம்தா பேனர்ஜி வழக்கறிஞராக ஆஜராவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் SIR வழக்கில் ஆஜரான மம்தா பேனர்ஜி தனது வாதங்களை தொடங்கியுள்ளார்.
அப்போது "SIR விவகாரத்தில் பல வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டாலும் எங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்திற்கு 6 முறை கடிதம் அனுப்பினோம், எந்த பதிலும் இல்லை என மேற்குவங்கம் தரப்பு வாதத்தை மம்தா எடுத்துவைத்தார்.
பெயர்களை நீக்கியதற்கு எதிரான மாநில அரசின் ஆதாரங்களை தேர்தல் ஆணையம் நிராகரிப்பதாக கூறிய மம்தா பானர்ஜி, பெயர்களை நீக்கும் நடவடிக்கையில் மட்டுமே தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
SIR விவகாரத்தில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது, எந்த வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மம்தா பானர்ஜி மனு மீது 2 நாட்களில் பதிலளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. .
இதனையடுத்து தன்னை வாதிட அனுமதித்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்த மம்தா மக்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டுகோள் விடுத்தார்.
- உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
- SIR பணியால் பலர் உயிரிழந்துள்ளனர் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுனார்.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் SIR பணி நடைபெற்று வருவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முரண்பாடு இருப்பதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, நீண்ட வரிசையில் மக்களை காக்க வைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், SIR பணியால் பலர் உயிரிழந்துள்ளனர் எனக் குற்றம் சாட்டியுனார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பில் பிரதிநிதிகள் ஆகியோருடன் மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்தார். அப்போது, பேசிக்கொண்டிருந்தபோது, பாதிலேயே மம்தா பானர்ஜி வெளியேறினார்.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் SIR வழக்கில் மம்தா பேனர்ஜி வழக்கறிஞராக ஆஜராவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் SIR வழக்கில் ஆஜரான மம்தா பேனர்ஜி தனது வாதங்களை தொடங்கியுள்ளார்.
அப்போது "SIR விவகாரத்தில் பல வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டாலும் எங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்திற்கு 6 முறை கடிதம் அனுப்பினோம், எந்த பதிலும் இல்லை என மேற்குவங்கம் தரப்பு வாதத்தை மம்தா எடுத்துவைத்தார்.
SIR விவகாரத்தில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது, எந்த வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
- நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் குற்றம் சாட்டியது.
- மெட்டா நிறுவனத்துக்கு 213.14 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
பிரபல சமூக ஊடகங்களான வாட்ஸ்அப். பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மாற்றப்பட்ட வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகள் மூலம் வாட்ஸ்அப் பயனாளர்களின் தகவல்களை, பேஸ்புக்கிடம் கொடுத்து சமூக வலைதள சந்தையின் நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) குற்றம் சாட்டியது.
இதனால் மற்ற சமூக வலைத்தளங்களுக்கு வணிக ரீதியிலான இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி மெட்டா நிறுவனத்துக்கு 213.14 கோடி ரூபாய் அபராதம் விதித்து இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த நியாயமற்ற நடைமுறையை உடனடியாக மெட்டா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே இந்த உத்தரவை எதிர்த்து மெட்டா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி சூர்யகாந்த், "நுகர்வோர் தனிப்பட்ட தரவைப் பகிர்ந்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள் நுகர்வோரின் தனியுரிமையுடன் நீங்கள் எப்படி விளையாட முடியும்.
தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய நாட்டின் சட்டத்திற்கு இணங்க வேண்டும். எங்கள் நாட்டின் தனியுரிமையுடன் நீங்கள் விளையாட முடியாது எங்கள் தரவின் ஒரு இலக்கத்தை கூட நீங்கள் பகிர்ந்து கொள்ள நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம் மேலும் நாட்டின் சட்டங்கள் பின்பற்றப்படாவிட்டால் உங்கள் நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் பிப்ரவரி 9ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.






