என் மலர்
நீங்கள் தேடியது "உச்ச நீதிமன்றம்"
- ஒரு விலங்கின் நடத்தையை கணிப்பதோ அல்லது ஒரு நாய் 'கடிக்கும் மனநிலையில்' இருக்கிறதா என்பதை அறிவதோ சாத்தியமற்றது
- 'குத்து', 'பொல்லாதவன்', 'வாரணம் ஆயிரம்' போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து கையிலெடுத்துள்ள தெருநாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, ஒரு விலங்கின் நடத்தையை கணிப்பதோ அல்லது ஒரு நாய் 'கடிக்கும் மனநிலையில்' இருக்கிறதா என்பதை அறிவதோ சாத்தியமற்றது என்று உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.
இந்நிலையில் இந்தக் கருத்தை குறிப்பிட்டு, "ஆண்களின் மனதையும் கணிக்க முடியாது, அவர்கள் எப்போது குற்றம் செய்வார்கள் என்று தெரியாது, அதற்காக எல்லா ஆண்களையும் சிறையில் அடைக்க முடியுமா? என நடிகை திவ்யா ஸ்பந்தனா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "ஒரு ஆணின் மனதையும் படிக்க முடியாது -- அவன் எப்போது பாலியல் வன்கொடுமை/கொலை செய்வான் என்று தெரியவில்லை, எனவே எல்லா ஆண்களையும் சிறையில் அடைக்கலாமா?" எனக் குறிப்பிட்டுள்ளார். இது இணையத்தில் பெரும் விவாதத்தையே தூண்டியுள்ளது. பலரும் இந்த ஒப்பீடே முதலில் தவறு எனக்கூறி வருகின்றனர்.
நடிகை திவ்யா தமிழில் 'குத்து', 'பொல்லாதவன்', 'வாரணம் ஆயிரம்' போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான AppleBox Studios மூலம் படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். விலங்கு நல ஆர்வலரான இவர், தொடர்ந்து சமூக வலைதளங்களில் சமூகப் பிரச்சினைகள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் குறித்து தனது கருத்துகளை துணிச்சலாகப் பதிவு செய்து வருகிறார்.

திவ்யா ஸ்பந்தனாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி
- ஒரு நாய் 'கடிக்கும் மனநிலையில்' இருக்கிறதா என்பதை அறிவது சாத்தியமற்றது
- பொதுப் பாதுகாப்பு விஷயங்களில், 'வருமுன் காப்பதே சிறந்தது'
உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தெருநாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என். வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வழக்கை விசாரித்தது.
நவம்பர் 7, 2025 அன்று நடைபெற்ற கடைசி விசாரணையின்போது, நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் இருந்து தெருநாய்களை அகற்றுவதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட கருத்துகள் சில;
நாயின் மனதை படிக்கமுடியாது
விசாரணை தொடர்ந்தபோது, ஒரு விலங்கின் நடத்தையை கணிப்பதோ அல்லது ஒரு நாய் 'கடிக்கும் மனநிலையில்' இருக்கிறதா என்பதை அறிவதோ சாத்தியமற்றது என்று உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது. பொதுப் பாதுகாப்பு விஷயங்களில், 'வருமுன் காப்பதே சிறந்தது' என்றும் வலியுறுத்தியது.
மாநிலங்களின் மோசமான ஒத்துழைப்பு
விலங்குகளின் பிறப்புக் கட்டுப்பாடு (Animal Birth Control) மற்றும் அவற்றிற்கான இருப்பிடங்களை உருவாக்குவது தொடர்பான செயல்பாட்டு அறிக்கைகளை 10 மாநிலங்கள் மட்டுமே தாக்கல் செய்துள்ளதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இது இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் காட்டாதது அல்லது அரசின் அலட்சியத்தன்மையை (மெத்தனப் போக்கை) காட்டுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
நிறுவன தோல்வி
பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற முக்கியமான பொது இடங்களை தெருநாய்களின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பதில் உள்ள 'கட்டமைப்பு ரீதியான தோல்வி' குறித்து உச்ச நீதிமன்றம் மீண்டும் தனது கவலையைத் தெரிவித்தது. பாதுகாப்புக்காக இந்த இடங்களிலிருந்து தெருநாய்கள் அகற்றப்பட வேண்டும் என்றும், மீண்டும் அந்த இடங்களிலேயே அவை விடப்படக்கூடாது என்றும் நவம்பர் 7 அன்று தான் பிறப்பித்த உத்தரவை அது சுட்டிக்காட்டியது.
நிர்வாக சிக்கல் மற்றும் செலவுகள்
நீதிபதிகளின் கருத்துகளுக்கு மத்தியில் மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் ஆஜராகி, இந்தியாவில் சுமார் 5.25 கோடி தெருநாய்கள் இருப்பதாகவும், அவற்றைப் பராமரிக்க 77,000 தங்குமிடங்கள் தேவைப்படும் என்றும் தெரிவித்தார். அவற்றுக்கு உணவளிக்க தினமும் சுமார் ரூ.62 கோடி செலவாகும் என்று தெரிவித்த அவர், இதில் உள்ள நிர்வாக சிக்கல்களை விளக்கினார்.
சமூக நாய்கள் மற்றும் தெரு நாய்கள்
விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தெரு நாய்களுக்கும், நிறுவனப் பகுதிகளில் காணப்படும் நாய்களுக்கும் இடையே வேறுபாடு காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். நிறுவனப் பகுதிகளில் உள்ள நாய்களை "சமூக நாய்கள்" என்று குறிப்பிட்ட அவர், அவற்றை நிரந்தரமாக அகற்றுவதற்குப் பதிலாக, விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகள் (ABC) கீழ் நிர்வகிக்க வேண்டும் என்றார்.
தற்போதைய சட்டங்களின் கீழ் நாய்களுக்கு உணவளிப்பதன் சாத்தியக்கூறுகளையும் சிபல் கேள்வி எழுப்பினார். அதற்கான மிகப்பெரிய செலவுகளையும், நிர்வாக தேவைகளையும் யார் ஏற்பார்கள் என்று கேட்ட அவர், நாய்களைப் பெருமளவில் நிறுவனங்களில் அடைப்பதற்கு எதிராகவும் வாதிட்டார்.
மிகைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்கள்
இந்த வழக்கில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சால்வ்ஸ், நாய் கடி தொடர்பான புள்ளிவிவரங்கள் மிகைப்படுத்தி காட்டப்படுவதாக வாதிட்டார். மேலும், ஒவ்வொரு ரேபிஸ் தடுப்பூசியையும் ஒரு தனித்தனி நாய் கடி வழக்காகக் கணக்கிடுகிறார்கள், அதாவது ஒரு நாய் கடி சம்பவம் என்பது 5 முதல் 7 தனித்தனி வழக்குகளாகக் கணக்கிடப்பட வாய்ப்புள்ளது என்றுக் கூறினார்.
நெடுஞ்சாலை பாதுகாப்பு
இந்திய நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகள் (நாய்கள் மற்றும் கால்நடைகள் இரண்டும்) குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அமர்வு, இது தொடர்பாகத் தனது தீவிர கவலையை வெளிப்படுத்தியது. சமீபத்திய விபத்துகளைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், சாலைகளில் தடுப்புகளை (Barricades) அமைப்பது குறித்து NHAI மற்றும் மாநில அரசுகளிடம் விளக்கம் கோரியுள்ளது.
எண்ணிடலங்கா மனுக்கள்
இந்த வழக்கு தொடர்பாகத் தங்களுக்கு வந்துள்ள மனுக்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் தனது வியப்பை வெளிப்படுத்தியது. 'பொதுவாக மனிதர்கள் தொடர்பான வழக்குகளில் கூட இவ்வளவு விண்ணப்பங்கள் வருவதில்லை' என்றும் குறிப்பிட்டது.
- மற்ற 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
- விசாரணைக்கு முந்தைய சிறை காலத்தை தண்டனையாக கருத முடியாது என நேற்றைய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமின் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமின் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.
சமீபத்தில் தனது சகோதரியின் திருமணத்திற்காக அவருக்கு 14 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. ஜாமின் காலம் முடிந்து கடந்த டிசம்பர் 29 காலித் சிறை திரும்பினார்.
இந்நிலையில், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
அதே சமயம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரா ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகிய 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது குறித்து உமர் காலித் உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியவற்றை குறித்து அவரது தோழி பானோஜ்யோத்ஸ்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "எனக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்றாலும், மற்றவர்களுக்குக் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது சிறையே எனது வாழ்க்கை ஆகிவிட்டது. மற்றவர்கள் விடுதலை ஆவதைப் பார்க்கும்போது நான் மிகவும் நிம்மதியாக உணர்கிறேன்" என உமர் காலித் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு வழங்கப்படும் விசாரணைக்கு முந்தைய சிறை காலத்தை தண்டனையாக கருத முடியாது என நேற்றைய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, விசாரணையே இல்லாமல், குற்றம் நிரூபிக்கப்டாமல் கடந்த 5 ஆண்டுகளாக உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் சிறையில் வைக்கப்பட்டிருப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதே அதற்கு அர்த்தம்.
- இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமீன் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது
- உச்சநீதிமன்றம் உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது
2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமின் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமின் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.
சமீபத்தில் தனது சகோதரியின் திருமணத்திற்காக அவருக்கு 14 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. ஜாமின் காலம் முடிந்து கடந்த டிசம்பர் 29 காலித் சிறை திரும்பினார்.
இதனிடையே நியூயார்க் நகரின் புதிய மேயராகப் பதவியேற்றுள்ள ஜோஹ்ரான் மம்தானி ஏற்கனவே உமர் காலித்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மேலும், உமர் காலித்துக்கு ஜாமின் வழங்கக் கோரியும், சர்வதேச சட்டங்களின்படி அவருக்கு நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தியும் அமெரிக்காவின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தூதருக்குக் கடிதம் எழுதினர். அமெரிக்க எம்.பி.க்களின் இந்தத் தலையீட்டிற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது. அதே சமயம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரா ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகிய 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
உமர் காலித், ஷர்ஜில் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை விட மிக முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு வழங்கப்படும் விசாரணைக்கு முந்தைய சிறை காலத்தை தண்டனையாக கருத முடியாது என சொல்லி இருப்பதுதான்
நீதித்துறையின் பாரபட்சம்:
'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம், தனது ஆசிரமத்தில் 2 பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு மற்றும் பத்திரிகையாளர் கொலை வழக்கு ஆகியவற்றில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். ஆனால் 2017-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மொத்தம் 15 முறை பரோலில் வெளியே வந்துள்ளார்.
இதேபோல் உன்னா பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, டெல்லி ஐகோர்ட் ஜாமினும் வழங்கி உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்பட்டது.இதனையடுத்து செங்காரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பெண்கள் மீது கொடூர செயல்களை செய்ய நபர்களுக்கு கூட பலமுறை ஜாமின் தரும் இந்த நீதித்துறை உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எந்த குற்றமும் நிரூபிக்கப்படாத விசாரணை கைதிகளுக்கு ஜாமின் தராமல் இழுத்தடிப்பதும் அந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் அனுபவிக்கும் சிறை காலத்தை தண்டனையாக கருத முடியாது என சொல்லி இருப்பதுதான் அநியாத்தின் உச்சக்கட்டம் ஆகும்.
நம் நாட்டில் அதிகாரத்தின் நிழலில் இருப்பவர்கள் எத்தகைய கொடூர குற்றம் புரிந்து தண்டனை கொடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு எளிதாக பரோல் கிடைக்கிறது.
ஆனால் அதிகாரத்திற்கு எதிராக யாரவது இருந்தால் அவர்களை எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசு தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்கலாம் என்ற பேராபத்து ஏற்பட்டுள்ளது.
- இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமீன் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது.
- உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமீன் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.
2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமின் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமின் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.
சமீபத்தில் தனது சகோதரியின் திருமணத்திற்காக அவருக்கு 14 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. ஜாமின் காலம் முடிந்து கடந்த டிசம்பர் 29 காலித் சிறை திரும்பினார்.
இதனிடையே நியூயார்க் நகரின் புதிய மேயராகப் பதவியேற்றுள்ள ஜோஹ்ரான் மம்தானி ஏற்கனவே உமர் காலித்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மேலும், உமர் காலித்துக்கு ஜாமின் வழங்கக் கோரியும், சர்வதேச சட்டங்களின்படி அவருக்கு நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தியும் அமெரிக்காவின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தூதருக்குக் கடிதம் எழுதினர். அமெரிக்க எம்.பி.க்களின் இந்தத் தலையீட்டிற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது. அதே சமயம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரா ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகிய 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
- ஆன்லைன் போர்டல் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.
- விசாரணை தேதிக்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்னதாகத் தாக்கல் செய்ய வேண்டும்.
வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் தாங்கள் வாதாட எடுத்துக்கொள்ளும் நேரத்தை ஒருநாள் முன்னரே தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,
"மூத்த வழக்கறிஞர்கள், வாதிடும் வழக்கறிஞர்கள் மற்றும்/அல்லது பதிவுபெற்ற வழக்கறிஞர்கள், நோட்டீஸ் அனுப்பப்பட்ட மற்றும் வழக்கமான விசாரணை என அனைத்து விவகாரங்களிலும், தங்களது வாய்மொழி வாதங்களை முன்வைப்பதற்கான கால அளவை விசாரணை தொடங்குவதற்கு குறைந்தது ஒரு நாளைக்கு முன்னதாகவே சமர்ப்பிக்க வேண்டும். பதிவுபெற்ற வழக்கறிஞர்களுக்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 'வருகை சீட்டுகளை' சமர்ப்பிக்கும் ஆன்லைன் போர்டல் வாயிலாகவே இதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வாதாடும் வழக்கறிஞர்கள் மற்றும்/அல்லது மூத்த வழக்கறிஞர்கள், தங்களின் 'பதிவுபெற்ற வழக்கறிஞர்' மூலமாகவோ அல்லது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நோடல் வழக்கறிஞர் மூலமாகவோ, ஐந்து பக்கங்களுக்கு மிகாத ஒரு சுருக்கமான குறிப்பு அல்லது எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும். அந்த காலக்கெடுவை உறுதி செய்யும் வகையில், அதன் நகலை எதிர் தரப்பினருக்கு வழங்கிய பிறகு, விசாரணை தேதிக்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்னதாகத் தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து வழக்கறிஞர்களும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் மற்றும் தங்களுடைய வாய்மொழி வாதங்களை அதற்குள் முடித்துக் கொள்ள வேண்டும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 16 வயதான சிறுமி செங்காரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
- 2019 ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரின் சிறைத்தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனிப்பட்ட பிணையில் செங்காரை ஜாமினில் விடுவித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டைச்சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு செங்கார் செல்லக்கூடாது என்றும், அப்பெண்ணையோ அல்லது அவரது தாயாரையோ அச்சுறுத்தக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது. வாரம் ஒருமுறை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் ஜாமின் ரத்து செய்யப்படும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு 16வயதான சிறுமி செங்காரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே இந்த குற்றத்திற்கு நீதிக்கேட்டு போராடியதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் இருக்கும்போது இச்சிறுமியின் தந்தை உயிரிழந்தார். இந்த காவல் மரண வழக்கிலும் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் இதுதொடர்புடைய பிற வழக்குகள் அனைத்தும் ஆகஸ்ட் 1, 2019 அன்று உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் உத்தரபிரதேசத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்திலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் செங்காரின் மேல்முறையீட்டில் டெல்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்தது.
இன்னலையில், செங்காருக்கு ஆயுள் தண்டனையை, டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்ததற்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
மேலும், டெல்லி இந்தியா கேட் பகுதியில் அப்பெண், போராட்டத்தில் ஈடுபட போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்
- ரிலீஸுக்கு தயாராகியும் படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் உள்ளது.
- பட வெளியீட்டிற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
'மெய்யழகன்' படத்திற்கு பிறகு, நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'வா வாத்தியார்'. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் எப்போதோ வெளியாகி கவனம் ஈர்த்தன. ஆனால் ரிலீஸுக்கு தயாராகியும் படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் உள்ளது. காரணம் படத்தை ஸ்டுடியோ க்ரீன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிறுவனத்தின் உரிமையாளரான ஞானவேல் ராஜா திவாலான தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர் என்பவரிடம் இருந்து ரூ.21 கோடியை கடனாகப் பெற்றதாக கூறப்படுகிறது. இப்பணத்தை திருப்பி தரும்வரை படத்தை வெளியிடக்கூடாது என, அர்ஜுன்லால் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இதனால் படவெளியீடு இன்னும் தள்ளிப்போகும் வாய்ப்புகள் உருவாகி உள்ளது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஸ்டுடியோ கிரீன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.
- ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் சேர்க்க பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு
- இதுபோன்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் கருத்து
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள ஆசிட் வீச்சு வழக்குகள் தொடர்பான விவரங்களை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிட் வீச்சில் இருந்து தப்பிய ஷாஹீன் மாலிக் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும் கடந்த 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மாலிக்கின் வழக்கு தற்போது வரை விசாரணையில் இருப்பது வெட்கக்கேடானது எனவும் கருத்து தெரிவித்தனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மாலிக் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, "சட்ட அமைப்பை எவ்வளவு கேலிக்கூத்தாக்குவது இது. 16 வருடம் இப்படிப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது வெட்கக்கேடானது. ஒரு நாட்டின் தேசிய தலைநகராலேயே இதை கையாள முடியவில்லை என்றால், வேறு யார் செய்வார்கள்? இது தேசத்திற்கே அவமானம்" என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கு ஏன் முடிவுக்கு வரவில்லை என்பதை விளக்கி, பொதுநல மனுவிலேயே ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கும் உத்தரவிட்டார். விசாரணையின்போது, ஆசிட் வீச்சில் இருந்து தப்பியவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான சவால்களை மாலிக் விவரித்தார். அவர்களில் பலர் நிரந்தர காயங்களுடன் வாழ்கின்றனர். செயற்கை உணவு குழாய்கள் தேவைப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், அதனால் சில நலத்திட்டங்களை பெறமுடியும் எனவும் வாதிட்டார்.
இதனைத்தொடர்ந்து ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் சேர்க்க சட்டம் அல்லது தேவைப்பட்டால் அவசரச் சட்டம் மூலம் சட்டத்தை திருத்துவது குறித்து பரிசீலிக்குமாறு தலைமை நீதிபதி மத்திய அரசை வலியுறுத்தினார். மேலும் சரியான நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக இதுபோன்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
- ராஜஸ்தானை தொடர்ந்து குஜராத் உயர் நீதிமன்றமும் ஆறுமாதம் இடைக்கால ஜாமின் வழங்கியது
- ஆசாராம் நிலையாக இருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பு வழக்கறிஞர் வாதம்
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த மதபோதகர் ஆசாராம் பாபு (86). இவருக்கு ராஜஸ்தானின் ஜோத்பூர் உள்ளிட்ட பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. கடந்த ஆகஸ்ட் 2013 -ல் ஜோத்பூருக்கு அருகிலுள்ள மனாய் கிராமத்தில் உள்ள ஆசிரமத்தில், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, குஜராத்தின் சூரத்தில் உள்ள மற்றொரு ஆசிரமத்தில் இரண்டு சகோதரிகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசாராம் மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கிலும் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு, மருத்துவ காரணங்களுக்காக ஜனவரி 7, 2025 அன்று இடைக்கால ஜாமின் பெற்றார். பின்னர் இந்த ஜாமின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஜாமினை நீட்டிக்கக் கோரிய அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்டில் சரண்டைந்தார்.
இச்சூழலில் அக்டோபர் 29 அன்று, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் இருந்த ஆசாராமுக்கு மருத்துவ காரணங்களுக்காக ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஆறு மாதம் ஜாமின் வழங்கியது. ஒரு வாரம் கழித்து, நவம்பர் 6 ஆம் தேதி, குஜராத் உயர் நீதிமன்றமும் ஆசாராமுக்கு ஆறு மாதம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆசாராமிற்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பின் வழக்கறிஞர் அல்ஜோ ஜோசப், ஆசாராம் உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஆசாராம் நாடு முழுவதும் பயணம் செய்து வருவதாகவும், அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம், உயர்நீதிமன்றம் ஒரு மருத்துவக் குழுவை அமைத்ததாகவும், அதன் அறிக்கையில் ஆசாராம் நிலையாக இருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியதாகவும் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் பெற்ற ஆசாராம், அகமதாபாத், ஜோத்பூர் மற்றும் இந்தூர் உள்ளிட்ட பிற இடங்களுக்கு பயணம் செய்து வருவதாகவும் ஜோசப் வாதிட்டார்.
- செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
- வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாஷிவந்தை விடுவித்தனர்.
போரூர் அருகே கடந்த 2017-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன் உடலை எரித்த வழக்கில் தஷ்வந்தை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் தன் தாயை அதே ஆண்டு கொலை செய்து தப்பித்ததாக குற்றம்சாட்டிய போலீசார் மும்பையில் வைத்து தஷ்வந்த்தை கைது செய்தனர்.
இதையடுத்து சிறுமி கொலை வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
தொடர்ந்து கடந்த மாதம், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தஷ்வந்த் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறிய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டது.
வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிறுமி வன்கொடுமை வழக்கில் இருந்து தஷ்வந்த் விடுதலை செய்த தீர்ப்பை று ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்து வரை விடுவித்த தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரிய மனுவை, தீர்ப்பு வழங்கிய நீதிபதி விக்ரம்நாத் நாளை மறுநாள் விசாரிக்க உள்ளார்.
- நீதிபதி பதவியை எப்போதும் சேவை வாய்ப்பாகவே பார்த்தேன்.
- நீதிமன்றங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14 ஆம் தேதி பதவியேற்ற நிலையில், இன்றுடன் பணிஓய்வு பெறுகிறார் பி.ஆர்.கவாய். தனது இறுதி பணி நாளான இன்று உச்ச நீதிமன்றத்தில் உரையாற்றிய அவர்,
"உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பமாக இதை எடுத்துக் கொள்கிறேன். 1985 ஆம் ஆண்டு சட்டத்துறை மாணவராகச் சேர்ந்தேன். இன்று பணி நிறைவின்போது நீதித்துறை மாணவனாக விலகுகிறேன். அரசியலமைப்பு நிலையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அது எப்போதும் பரிணாமம் அடையும். எனவே நீதிமன்றங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.
ஒரு வழக்கறிஞராகவும், பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாக, பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தபோதும் இதனை அதிகாரப் பதவியாக பார்க்கவில்லை. மாறாக சமூகத்திற்கு சேவை செய்வதற்கான, தேசத்திற்கு சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பு என்று நம்பியிருக்கிறேன்.
அம்பேத்கரின் போதனைகளிலிருந்தும், அரசியலமைப்பு முறையாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு 1949 நவம்பர் 25 ஆம் தேதி அவர் ஆற்றிய கடைசி உரையிலிருந்தும் தான் நான் உத்வேகம் பெறுவேன். டாக்டர் அம்பேத்கர் எப்போதும் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக வாதிட்டார்.
அடிப்படை உரிமைகளை, அரசின் கொள்கைகளுடன் சமநிலைப்படுத்துவதன் மூலம் நீதியை நிலை நாட்ட, எப்போதும் முடிந்தவரை நான் முயற்சித்தேன். எளிமையான தீர்ப்புகளை எழுதுவதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். அவை கடைக்கோடி மக்களுக்காக எழுதப்பட வேண்டும்" என தெரிவித்தார்.
2010 ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்ற நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி கவாய் ஆவார். 6 மாதங்களாக பதவி வகித்த கவாய், புத்த மதத்தை சேர்ந்த முதல் தலைமை நீதிபதி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மே 24, 2019 அன்று மும்பை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றார்.






