என் மலர்
நீங்கள் தேடியது "social media"
- பூசாரி தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ஏதாவது உதவி கிடைக்குமா? என்று விசாரித்தார்.
- குழந்தைகளுக்கு ஓரிரு நாட்களில் சிகிச்சை தொடங்கும் என்று தெரிவித்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி ஒருவரின் 5 வயது மகள் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவர் சிறுமியை பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அப்போது சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யுமாறு அறிவுறுத்தினர்.
மேலும் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை செலவாகும் என்றும் அவர்கள் கூறினர். ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பல ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்ததில் ரூ. 7 லட்சம் வரை செலவு செய்த பூசாரியால் இவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார்.
இதையடுத்து பூசாரி தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ஏதாவது உதவி கிடைக்குமா? என்று விசாரித்தார். அப்போது அவரது நண்பர் ஒருவர் பயாஸ் என்பவரது செல்போன் எண்ணை கொடுத்து அவரிடம் உதவி கேட்க கூறினார். இதையடுத்து உடனடியாக அவரை தொடர்பு கொண்டு குழந்தையின் தந்தை மற்றும் அவரது ஊரை சேர்ந்த சிலர் பயாஸ்சை சந்தித்து விபரங்கள் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து பயாஸ், கோவில் பூசாரி வீட்டிற்கு வந்து சிறுமியை சந்தித்து ஒரு வீடியோவை உருவாக்கினார். பின்னர் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி மாலை 6 மணிக்கு அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு உதவி கேட்டனர். இதையடுத்து மறுநாள் காலை 10.30 மணிக்கு ரூ.75 லட்சம் வசூலானது. வீடியோ வெளியிட்ட சுமார் 16½ மணி நேரத்தில் சிறுமியின் சிகிச்சைக்கு ரூ. 75 லட்சம் வசூலானது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து குழந்தைகளுக்கு ஓரிரு நாட்களில் சிகிச்சை தொடங்கும் என்று தெரிவித்தனர்.
- ஒரே கடவுச் சொல்லை பல்வேறு இணைய கணக்குகளுக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்.
- கடவுச்சொல்லை நினைவுகூருவதில் சிரமம் இருப்பவா்கள் அதை பிரத்யேகமாக வேறு தளங்களில் சேமித்து வைக்கலாம்.
உலகம் முழுவதும் கூகுள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களின் 160 கோடி கணக்குகளின் 'கடவுச்சொல்' கசிந்துள்ளதாக கூறப்படும் நிலையில் தங்கள் இணையக் கணக்குளின் கடவுச்சொல்லை பயனாளா்கள் விரைவாக மாற்றுமாறு இணைய நிபுணா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
மேலும், கசிந்துள்ள முக்கியத் தகவல்களை சைபா் குற்றவாளிகள் பல்வேறு குற்றங்களுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அவா்கள் எச்சரித்துள்ளனா்.
ஐரோப்பியாவைச் சோ்ந்த 'சைபா்நியூஸ்' ஆய்வாளா்கள் அண்மையில் இணைய தரவுகளின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை சமா்ப்பித்தனா்.
அதில், '30 தரவுதளங்களில் இருந்து கூகுள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மின்னஞ்சல் முகவரி என உலகளவில் 160 கோடி இணையக் கணக்குகளின் கடவுச்சொல் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் கசிந்துள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.

தற்காலத்தில் ஒருவரே பல சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்துவதால் ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள் பெருமளவில் கசிந்திருக்க வாய்ப்புள்ளது. இதை சைபா் குற்றவாளிகள் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தக்கூடும் என்பதால் இணையவாசிகள் முதலில் தங்கள் கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பாக ஒரே கடவுச் சொல்லை பல்வேறு இணைய கணக்குகளுக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும். ஒவ்வொரு கணக்குக்கும் வெவ்வேறு கடவுச்சொல்லை உருவாக்குவதன் மூலம் தங்களின் இணையக் கணக்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய முடியும்.
கடவுச்சொல்லை நினைவுகூருவதில் சிரமம் இருப்பவா்கள் அதை பிரத்யேகமாக வேறு தளங்களில் சேமித்து வைக்கலாம். அதேபோல் கைப்பேசி, மின்னஞ்சல் என பன்முக அங்கீகார முறையையும் ஏற்படுத்திக் கொள்ளலாம்' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார்.
- மனைவி ஆன்லைனில் பதிவேற்றிய வீடியோக்கள் குறித்து நண்பர்கள் அடிக்கடி கேலி செய்ததால், அவர் மன உளைச்சலை எதிர்கொண்டார்.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் பிரம்மவரா தாலுகா ஹிலியானா கிராமத்தில் உள்ள ஹோசமாதா பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் பூஜாரி (வயது 42). இவரது மனைவி ரேகா (27).
கணேஷ் பூஜாரி சங்கரநாராயணா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பெட்ரோல் பங்கில் உதவியாளராக பணிபுரிந்தார்.
இந்த நிலையில் அவரது மனைவி ரேகா தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் ரீல்களை தொடர்ந்து ஆர்வமாக மணிக்கணக்கில் பார்த்து வந்தார். இதனால் அவரை கணவர் சத்தம் போட்டார். ஆனால் ரேகா கேட்கவில்லை. தொடர்ந்து ரீல்களை பார்ந்து வந்தார்.
இது குறித்து தம்பதியினர் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கணேஷ் பூஜாரி பணி முடித்து வீடு திரும்பினார். அப்போது ரேகா இன்ஸ்டாகிராம் ரீல்களை பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு கோபமடைந்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் கணேஷ் பூஜாரி, ஒரு கத்தியை எடுத்து மனைவி ரேகாவின் கழுத்தில் குத்தி கொலை செய்தார். சம்பவம் நடந்த உடனேயே பூஜாரியை போலீசார் கைது செய்தனர்.
டிஜிட்டல் மோகம் ஒரு குடும்பத்தை இருண்ட பக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் ரீல்களை பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில், பெண் ஒருவர் தனது கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோல் சாமராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பி.ஜி. பால்யா பகுதியை சேர்ந்தவர் குமார் (33).
இவரது மனைவி இன்ஸ்டாகிராமில் தனது வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இதனால் குமாரின் குடும்பத்தினர் கண்டித்தனர். ஆனால் குமாரின் மனைவி கண்டு கொள்ளவில்லை. மேலும் கணவர் தனது ஆட்சேபனைகளை வெளிப்படுத்திய போதிலும், அவரது மனைவி தொடர்ந்து ரீல்களை உருவாக்கி பதிவிட்டதாக கூறப்படுகிறது. அவரது மனைவி ஆன்லைனில் பதிவேற்றிய வீடியோக்கள் குறித்து நண்பர்கள் அடிக்கடி கேலி செய்ததால், அவர் மன உளைச்சலை எதிர்கொண்டார். இதனால் தம்பதியினரிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
வாக்குவாதம் உச்சத்தை எட்டியதை தொடர்ந்து குமார் தற்கொலை செய்து கொண்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தனது மனைவியின் இன்ஸ்டாகிராம் ரீல்களில் அதிகப்படியான ஈடுபாட்டை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.
- விமான பயணத்தில் இவ்வாறு நடந்து கொண்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
- விமான நிறுவனங்கள் தங்களுடைய குறைபாடுகளை சரி செய்ய சொல்வது சரி...
அகமதாபாத் விமான விபத்தில் சிக்கி 241 பேர் பலியான விவகாரம் நாடே சோகத்திற்கு உள்ளாக்கியது. பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சேவைகளை விமான நிறுவனங்கள் மேம்படுத்த வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்களின் சார்பில் பலமாக கோரிக்கை விடுக்கப்படுகிறது.
இந்தநிலையில் பறக்கும் விமானத்தில் பயணிகள் சிலர் சீட்டு விளையாடும் காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் விமானத்தின் நடுவே பயணிகள் மற்றும் சிப்பந்திகள் கடந்து செல்வதற்கான நடைபாதையில் பயணிகள் சிலர் மேஜை போன்று அமைத்து சீட்டு விளையாடினர்.
விமான பயணத்தில் இவ்வாறு நடந்து கொண்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விமான நிறுவனங்கள் தங்களுடைய குறைபாடுகளை சரி செய்ய சொல்வது சரி... ஆனால் பயணிகளும் விமான பயணத்தின்போது தங்களுடைய பொது அறிவை பயன்படுத்தி சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்க வேண்டும் என கருத்து பதிவிட்டனர்.
- பாம்பை தோளில் போட்டுக்கொண்டு, புகை பிடித்தபடி ரீல்ஸ் எடுத்தார்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.
'ரீல்ஸ்' எனும் குறு வீடியோ மோகத்தால், சாகசத்தில் ஈடுபட முயன்று பலர் தங்கள் இன்னுயிரை இழப்பது வாடிக்கையாகி வருகிறது. அதுபோல் இங்கு ஒருவர் பாம்பிடம் கடிவாங்கி சிக்கலில் மாட்டியுள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் ஹைபத்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார். விவசாயி. இவர் பாம்பு பிடிப்பதிலும் கைதேர்ந்தவர்.
இந்தநிலையில் அந்த கிராமத்தில் ஒரு வீட்டில் விஷ பாம்பு ஒன்று புகுந்துவிட்டதாகவும், அதை பிடித்துக் கொடுக்கும் படியும் ஜிதேந்திர குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற அவர், அந்த வீட்டின் சுவரில் இருந்த பொந்தில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்தார்.
இதையடுத்து அந்த பாம்பை தனது தோளில் மாலை போல் போட்டு போஸ் கொடுத்தார். அதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் ஆரவார கூச்சலிட்டனர். அப்போது அவருக்கு, ஊர் மக்கள் மத்தியில் வீர சாகசம் நடத்தி அதை 'ரீல்ஸ்'ஆக வெளியிட வேண்டும் என்ற ஆசை பிறந்தது.
நடக்கப்போகும் விபரீதம் பற்றி அறியாமல், பாம்புக்கு முத்தமிட முயன்றார் ஜிதேந்திர குமார். அப்போது அவரது நாக்கில் பாம்பு கடித்துவிட்டது.
இதனால் உடலில் விஷம் ஏறிய அவரது உடல்நிலை மோசமாகியது. உடனடியாக அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி உள்ளூர் மக்கள் கூறும்போது, ஜிதேந்திர குமார் மதுபோதையில் இருந்தார். பாம்பை தோளில் போட்டுக்கொண்டு, புகை பிடித்தபடி ரீல்ஸ் எடுத்தார். பின்னர் நாங்கள் வேண்டாம் என்று கூறியபோதும், பாம்புக்கு முத்தம் கொடுக்கும் ரீல்ஸ் வெளியிடுகிறேன் என்று கூறி முத்தமிட முயன்றவரை பாம்பு கடித்துவிட்டது என்று கூறினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.
- Spotify தளத்தில் தற்போது பலரும் பாடல்களை கேட்டு வருகின்றனர்.
- இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.
உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இந்த செயலியில் இளம் தலைமுறையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பார்கள்.
அண்மை காலங்களில் இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், Spotify-ல் நீங்கள் கேட்கும் பாடல்களை இன்ஸ்டாகிராம் Notes-ல் பகிரும் வகையில் புதிய அப்டேட்டை மெட்டா வெளியிட்டுள்ளது.
Spotify தளத்தில் தற்போது பலரும் பாடல்களை கேட்டு வரும் நிலையில், மெட்டாவின் இந்த புதிய அப்டேட் இன்ஸ்டாகிராம் பயனாளர்களை கவர்ந்துள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தும் போது கணவர் தனது மனக்குமுறல்களை கொட்டியுள்ளார்.
- இருதரப்பு விளக்கத்தையும் கேட்ட போலீசார் இருவருக்கும் அறிவுரைக் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
பொதுவாக தகராறு, மோசடி, வரதட்சணை கொடுமை போன்ற பல காரணங்களுக்காக காவல்நிலையத்திற்கு வழக்குகள் வந்துள்ளன. ஆனால் தற்போது வினோதமான விசாரணை ஒன்று உத்தரபிரதேச மாநில காவல்நிலையத்தில் அரங்கேறியுள்ளது. அதுகுறித்து பார்ப்போம்....
சமூக வலைத்தளங்களில் அதிக லைக்ஸ் மற்றும் பாராட்டுகளை பெறுவதற்காக வினோதமான முறையில் சிந்தித்து வீடியோவை பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், குடும்பத் தலைவி ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுப்பது, அதனை எடிட் செய்து பதிவிடுவது என சமூக வலைத்தளத்தில் எந்நேரமும் பிசியாக இருந்துள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தினந்தோறும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து காவல்நிலையத்திற்கு இவர்களின் தகராறு சென்றுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தும் போது கணவர் தனது மனக்குமுறல்களை கொட்டியுள்ளார். தனது மனைவி சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். இதனால் வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துவதில்லை. அவள் எப்போதும் வீடியோ எடுப்பது, எடிட் செய்வது என மும்முரமாக இருப்பதால் எங்களுக்கு உணவு கிடைப்பதில் தாமதமாகிறது. எந்நேரமும் மொபைல் போனிலேயே இருக்கிறாள் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கணவர் முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து மனைவி கூறியது தான் ஹைலைட்.
வீடியோ எடுத்து எடிட் செய்து பதிவிடுவது மற்றும் வீட்டுப் பொறுப்புகள் இரண்டையும் நிர்வகிப்பது மிகவும் கடினமாக உள்ளது. ரீல்கள் வெறும் வேடிக்கைக்காக மட்டும் இல்லை. அவை இப்போது என் அடையாளத்தின் ஒரு பகுதியாகும். வீட்டு வேலை காரணமாக எனது வீடியோக்களை பதிவிட தவறவிடும்போது, என்னை பின்தொடர்பவர்களை இழந்துவிடுகிறேன். மேலும் எனது தொடர்பு குறைகிறது. இது ஒரு சிறு வணிகத்தை நடத்துவது போன்றது, யாரும் என்னுடைய அழுத்தத்தைப் புரிந்துகொள்வதில்லை என்று கூறினார்.
இதையடுத்து இருதரப்பு விளக்கத்தையும் கேட்ட போலீசார் இருவருக்கும் அறிவுரைக் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இணையத்தால் குடும்ப உறவுகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு கேக்கின் ஸ்கிரீன்ஷாட் பயனர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.
- விலை குறித்து பயனர்கள் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.
இன்றைய காலக்கட்டத்தில் ஆன்லைன் விற்பனை என்பது பலராலும் விரும்பப்படுகிறது. இதனால் பலரும் வீட்டில் இருந்தப்படியே விரும்பியதை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கிறார்கள். அப்படி ஆன்லைனில் விலை, பொருளின் தரம் பார்த்து ஆர்டர் செய்து டெலிவரி ஆகும் போது சில சமயங்களில் நாம் ஆர்டர் செய்ததற்கு பதில் வேறு பொருளோ, பொருள் சேதமோ என பலவிதமான சம்பவங்களை கேள்விபட்டிருப்போம்.
ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு கேக்கின் ஸ்கிரீன்ஷாட் பயனர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது, "தந்தையர் தின சிறப்பு ஹேசல்நட் சாக்லேட் கேக்" என்று பட்டியலிடப்பட்டுள்ள இந்த பொருளின் விலை ரூ. 5 லட்சம். இது எழுத்துப்பிழை அல்லது தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும் இந்த விலை குறித்து பயனர்கள் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தந்தைக்கு மிகவும் விலையுயர்ந்த பரிசை வழங்க விரும்பினால் இந்த கேக்கை வாங்கி தரலாம் என்றும் சிலர் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கேக்கிற்குள் வைரங்கள் அல்லது தங்கம் இருக்கிறதா என்று தங்கள் அப்பாக்கள் கேட்பார்கள் என்றும் கூறுகின்றனர். இப்படி பலரும் நகைச்சுவையாக பதிவிட்டனர். இதனிடையே, மற்ற கேக்குகள் விலையை குறிப்பிட்டு சிலர் விலை தவறாக பதிவிடப்பட்டுள்ளதாக கூறினர்.
தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான தந்தையர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினத்தையொட்டி பல சிறப்பு அறிவிப்புகளை பல ஆன்லைன் நிறுவனம் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- இளைஞர்களிடையே வன்முறைப் போக்குகள் அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம்.
- கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது.
சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கம் குறித்து கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க விரைவில் கடுமையான விதிகள் அமல்படுத்தப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.
மேக்ரான் கூறுகையில், "15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) கூட்டு முடிவு எடுக்குமா என்பதைப் பார்க்க சில மாதங்கள் காத்திருப்போம். EU-விடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றால், பிரெஞ்சு அரசாங்கமே இந்தத் தடையை அமல்படுத்தும்" என்றார்.
இளைஞர்களிடையே வன்முறைப் போக்குகள் அதிகரித்து வருவதற்கும், குழந்தைகள் மேற்பார்வையின்றி டிஜிட்டல் தளங்களை அணுகுவதற்கும் சமூக ஊடகங்களே முக்கிய காரணம் என்று மேக்ரான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
- "நான் ஒரு நாள் பிரபலமாவேன், நீங்களே பாருங்கள்" என்று ரென்னா என்னிடம் அடிக்கடி கூறுவாள்.
- தங்கள் மகளுக்கு நேர்ந்தது யாருக்கும் நேர கூடாது என்றும் ரென்னாவின் தாய் எச்சரித்தார்.
அமெரிக்காவில் சமூக ஊடகங்களில் வைரலான 'டஸ்டிங்' சவாலை முயற்சித்த 19 வயது இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் அரிசோனாவைச் சேர்ந்த ரென்னா ஓ'ரூர்க். சமூக ஊடகங்களில் அதிக பார்வையாளர்களைப் பெறுவதற்காக 'டஸ்டிங்' மற்றும் 'குரோமிங்' என்றும் அழைக்கப்படும் இந்த சவாலை ரென்னா முயற்சித்தார்.
டஸ்டிங் என்பது கணினி கீபோர்டை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ஸ்ப்ரேயை உள்ளிழுத்து சுவாசிக்கும் ஒரு சவாலாகும்.
ரென்னா தனது பெற்றோருக்குத் தெரியாமல் ஆன்லைனில் ஏரோசல் கீபோர்டு கிளீனரை ஆர்டர் செய்து இந்த சவாலை முயற்சித்துள்ளார். ஸ்ப்ரேயை சுவாசித்த ரென்னாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கடந்த 1 வாரம் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார்.

"நான் ஒரு நாள் பிரபலமாவேன், நீங்களே பாருங்கள்" என்று ரென்னா தன்னிடம் அடிக்கடி கூறுவாள்,ஆனால் அவள் இப்படித் தனது மரணத்தின் மூலம் பிரபலமாவாள் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என ரென்னாவின் தந்தை கண் கலங்கி கூறுகிறார்.
இதுபோன்ற ஸ்ப்ரேக்களை வாங்க எந்த அடையாள அட்டையும் தேவையில்லை என்பதால் குழந்தைகளுக்கு கூட இது எளிதில் கிடைக்கிறது. எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தங்கள் மகளுக்கு நேர்ந்தது யாருக்கும் நேர கூடாது என்றும் ரென்னாவின் தாய் எச்சரித்தார்.
ரசாயனங்களை உள்ளிழுப்பது தற்காலிகமாக போதையை உணரவைக்கும் அதே வேளையில், அது விரைவாக மரணத்திற்கு வழிவகுக்கும். மரணம் பெரும்பாலும் இதய செயலிழப்பு காரணமாக ஏற்படுகிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
- ஆர்டர் செய்யும் போது வேறு பொருட்கள் வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
- பயனர்கள் பலரும் ஆன்லைன் ஆர்டரில் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை பதிவிட்டனர்.
சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீட்டிற்கே வரவழைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஆர்டர் செய்யும் போது வேறு பொருட்கள் வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் ராஜ்கன்வர் என்ற வாலிபர் ஆன்லைன் தளமான பிளிங்கிட்டில் இருந்து முட்டைகள் உள்ள டிரேவை ஆர்டர் செய்தார். அதன்படி முட்டைகளுடன் கூடிய டிரே வந்தது. ஆனால் அதில் அழுகிய முட்டைகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட அது வைரலானது.
வீடியோவில் அவர் தனது பால்கனியில் நின்று கொண்டு தனக்கு ஆர்டர் வந்த முட்டைகளின் நிலையை காட்டுகிறார். அப்போது முட்டை உடைந்தவுடன் அவை அனைத்தும் கெட்டுபோய் துர்நாற்றம் வீசுவதாக கூறுகிறார். அதோடு முட்டைகளை உடைத்ததும் எவ்வளவு கருப்பாக இருக்கிறது என காட்டுகிறார். இந்த வீடியோ 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் ஆன்லைன் ஆர்டரில் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை பதிவிட்டனர்.
- வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனங்களை பதிவிட்டனர்.
- வீடியோ ரீல்சுக்காக எடுக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடந்து வருகிறது.
பொதுவாக ரெயில்களுக்குள் பைக்குகள், சுழற்சி வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. பைக்குகளை விதிமுறைகளை பின்பற்றி பார்சல் மூலம் தொலை தூரங்களுக்கு அனுப்ப முடியும். இந்நிலையில் ஓடும் ரெயிலுக்குள் பயணிகள் அமர்ந்திருக்கும் பெட்டியில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஓட்டி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பீகாரின் சக்தி என்ற தலைப்பில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு வாலிபர் பைக்கில் அமர்ந்து கொண்டு ஓட்டுவது போல காட்சிகள் உள்ளது. அதனை ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இந்த சம்பவம் பாட்னாவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
வைரலான இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனங்களை பதிவிட்டனர். இந்த வீடியோ ரீல்சுக்காக எடுக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடந்து வருகிறது.