search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Social Media"

    • ரெயில் நிலையத்தின் வடிவமைப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்.
    • வடிவமைப்பை பிளம் பிளாசம் போல் இருக்கிறது என்று சொல்வது வெட்கமாக உள்ளது என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

    சீனாவின் நான்ஜிங் வடக்கு ரெயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த ரெயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

    மரக்கூரைகள் மற்றும் ஜன்னல் வடிவங்கள் போன்ற பாரம்பரிய சீன கட்டிடக்கலை அம்சங்களை கொண்டு நவீனத்துவம் கலந்து இந்த ரெயில் நிலைய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள இந்த ரெயில் நிலையம் சீன கட்டிடக்கலையின் தனித்துவத்தை பின்பற்றும் வகையில் இருக்கும் என கருதப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ரெயில் நிலையத்தின் வடிவமைப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர். பிளம் மலர்களால் ஈர்க்கப்பட்டு இந்த ரெயில் நிலையத்தின் வடிவமைப்பு இருப்பதாக சிலர் பதிவிட்டனர். அதே நேரம் இந்த ரெயில் நிலையத்தின் தோற்றம் ராட்சத சானிட்டரி பேட் போல தெரிகிறது. இந்த வடிவமைப்பை பிளம் பிளாசம் போல் இருக்கிறது என்று சொல்வது வெட்கமாக உள்ளது என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

    • நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு யானையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
    • யானை சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய நிலையிலும் அதிர்ஷ்டவசமாக யாரையும் துரத்தவில்லை என சர்க்கஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவின் மொன்டானா நகரில் சர்க்கஸ் யானை ஒன்று சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. பரபரப்பான சாலையில் நாலாபுறமும் ஓடிய யானையால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    ஜோடான் வேர்ல்ட் சர்க்கசில் இருந்து இந்த யானை திடீரென வெளியேறி உள்ளது. பயோலா என்று அழைக்கப்பட்ட இந்த யானையை குளிப்பாட்டி கொண்டிருந்த போது திடீரென கார் சத்தத்தால் அச்சமடைந்து சர்க்கசில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளது. பின்னர் ஒரு வாலிபர் கையில் தடியை ஏந்திக் கொண்டு யானையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தீவிரமாக போராடிய காட்சிகளும் வீடியோவில் இருந்தது.

    ஆனாலும் அந்த யானையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனினும் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த யானையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். யானை சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய நிலையிலும் அதிர்ஷ்டவசமாக யாரையும் துரத்தவில்லை என சர்க்கஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • தவக்காலத்தின் போது 40 நாட்களும் ஆரஞ்சு பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததாக ஆனிஆஸ்போர்ன் என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
    • வீடியோ வைரலான நிலையில் சுகாதார வல்லுனர்கள் சிலர் இத்தகைய கட்டுப்பாடான உணவுகள் பற்றிய சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

    பழச்சாறுகள் குடிப்பது உடலுக்கு நல்லது என்றாலும், 40 நாட்களாக பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததாக ஒரு பெண் கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்லாந்தை சேர்ந்தவர் ஆனிஆஸ்போர்ன். இவர் தவக்காலத்தின் போது 40 நாட்களும் ஆரஞ்சு பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அந்த அனுபவம் அற்புதமாக இருந்தது.

    உணர்ச்சி, உடல் மற்றும் ஆன்மீக நன்மைகளை அனுபவித்தேன். இந்த 'மோமோ டயட்' தனது நீண்ட கால உணவு பழக்கத்தோடு ஒத்துப்போகிறது என்று விளக்கி உள்ளார். அவரது இந்த வீடியோ வைரலான நிலையில் சுகாதார வல்லுனர்கள் சிலர் இத்தகைய கட்டுப்பாடான உணவுகள் பற்றிய சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

    பழங்களை மட்டுமே சாப்பிடுவதன் மூலம் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது என தெரிவித்துள்ளனர்.


    • ஐ.ஐ.எம். மாணவர்கள் உருவாக்கி கொடுத்துள்ள வித்தியாசமான ஹெல்மெட் பேட்டரியில் இயங்க கூடியது.
    • பொதுவாக நாம் அணியக்கூடிய ஹெல்மெட்டின் உள்ளே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அமைப்பில் சிறிய வகையிலான மின்விசிறி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

    நாட்டின் பல நகரங்களிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடும் வெயிலுக்கு மத்தியிலும் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசார் வெயிலால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

    இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதராவில் கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு ஏ.சி.ஹெல்மெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை அணிவதன் மூலம் அவர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். இந்த ஹெல்மெட்டை அணிந்து போக்குவரத்து போலீசார் பணியாற்றி வரும் காட்சிகள் வலைதளங்களில் பரவி வருகிறது. அங்குள்ள ஐ.ஐ.எம். மாணவர்கள் உருவாக்கி கொடுத்துள்ள இந்த வித்தியாசமான ஹெல்மெட் பேட்டரியில் இயங்க கூடியது.

    பொதுவாக நாம் அணியக்கூடிய ஹெல்மெட்டின் உள்ளே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அமைப்பில் சிறிய வகையிலான மின்விசிறி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேன் பேட்டரி மூலம் இயங்கும். ஹெல்மெட்டின் உள்ளே பேன் இருக்கும் நிலையில் அதற்கான பேட்டரியை தனியாக போலீசார் இடுப்பில் அணிந்து கொள்வார்கள். பேட்டரிக்கும், ஹெல்மெட்டில் உள்ள பேனும் வயர் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஹெல்மெட்டின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் பயன்பாட்டில் இருக்கும்.

    முதற்கட்டமாக 450 போக்குவரத்து போலீசாருக்கு இந்த ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது.


    • வீடியோவில், ஜொமோட்டோ ஊழியர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் பயணம் செய்வதை காண முடிகிறது.
    • உயர் ரக பைக்கில் விலை உயர்ந்த ஹெல்மெட் மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டு சவாரி செல்கிறார்.

    ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஜொமோட்டோ ஊழியர் ஒருவர் ஹார்லி டேவிட்சன் போன்ற உயர்ரக பைக்கில் சவாரி செய்யும் வீடியோ இணையத்தில் ஆச்சரியத்தை ஆழ்த்தி உள்ளது.

    இன்ஸ்டாகிராமில் அக்ஷய் ஷெட்டிஹர் என்ற பயனர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஜொமோட்டோ ஊழியர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் பயணம் செய்வதை காண முடிகிறது. அவர் உயர் ரக பைக்கில் விலை உயர்ந்த ஹெல்மெட் மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டு சவாரி செல்கிறார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது. ரூ.2.4 லட்சம் விலை கொண்ட அந்த உயர் ரக பைக்கில் பயணம் செய்த ஊழியர் யார்? என்பது பற்றி பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். சில பயனர்கள், அது ஜொமோட்டோ நிறுவனர் பீபந்தர் கோயலாக இருக்கலாம் எனவும், சில பயனர்கள், அவர் உணவு வினியோக நிறுவனத்தை விளம்பரபடுத்துவதற்காக நியமிக்கப்பட்டவராக இருக்கலாம் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோ இணையத்தில் வைரலாகி 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்துள்ளது.
    • பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    வீடுகளில் ஆண்கள் சமையல் செய்வதை கூட எளிதில் செய்து விடுவார்கள். ஆனால் சமையல் செய்த பாத்திரங்களை கழுவுவது தான் அவர்களுக்கு கஷ்டமாக கருதுகிறார்கள். இந்நிலையில் பாத்திரங்களை கழுவுவதை தவிர்ப்பதற்காக ஒருவரின் நூதன செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தொழிலதிபர் ஹர்ஷ்கோயங்கா எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஒரு நபர் சமையல் செய்த பின் சாதத்தை பாத்திரங்களில் பரிமாற தயாராகும் காட்சியுடன் தொடங்குகிறது. பாத்திரங்கள் கழுவும் பிரச்சனையை உணர்ந்து அந்த நபர் உணவுகளை தட்டில் பரிமாறுவதற்கு முன்பே பாத்திரங்கள் மீது பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி அவற்றை மூடி அதன் மீது உணவுகளை பரிமாறி சாப்பிடும் காட்சிகள் உள்ளது. அவர் தட்டு மட்டுமல்லாது கரண்டி, டம்ளர் என பாத்திரங்கள் அனைத்தையும் பிளாஸ்டிக் கவரால் மூடி பயன்படுத்துகிறார். சாப்பிட்டு முடித்ததும் பிளாஸ்டிக் கவர்களை எந்த சிரமமின்றி அகற்றிவிட்டு பாத்திரங்களில் ஒரு கறை கூட இல்லாமல் அலமாரியில் அழகாக வைக்கும் காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்த நிலையில், பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ சமையல் அறையில் அன்றாடம் எதிர்கொள்ளும் போராட்டங்களை நினைவூட்டுவதாக சில பயனர்களும், தண்ணீர் இல்லாத பொழுது இவ்வாறு செய்யலாம் என சில பயனர்களும் கருத்துக்களை பதிவிட்டனர்.

    ஆனால் சில பயனர்கள், இது போன்ற ஆரோக்கியமற்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கண்டக்டர்கள் பணியை தொடங்கும் முன்பு போதிய சில்லறையை வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
    • பதிவு இணையத்தில் வெளியாகி 71 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.

    அரசு பஸ்களில் பயணம் செய்யும் போது கண்டக்டர் சில்லறை இல்லை என கூறுவதும், அவருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் பார்த்திருப்போம். இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த நிதின்கிருஷ்ணா என்ற பயணி எக்ஸ் தளத்தில் தனது பெங்களூரு மாநகர பஸ் டிக்கெட்டை பகிர்ந்து ஒரு பதிவு செய்துள்ளார்.

    அதில், நான் 5 ரூபாயை இழந்துவிட்டேன். வெறும் 5 ரூபாய் என்று பார்த்தால் அது சிறிய தொகையாக இருக்கும். அதுவே ஐந்து, ஐந்து என்று ஐந்து லட்சம் 5 ரூபாய் என்று நினைத்து பார்த்தால் பெரிய கொள்ளை தானே! பஸ் கண்டக்டர்களின் இந்த நடவடிக்கை கோபத்தை ஏற்படுத்துகிறது. இதை வழக்கமாக வைத்து அவர்கள் அதிகம் சம்பாதிக்க நினைக்கிறார்கள்.

    கண்டக்டர்கள் பணியை தொடங்கும் முன்பு போதிய சில்லறையை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். அல்லது அதற்கு மாற்றாக ஆன்லைன் பரிவர்த்தனை ஆப்ஷன்களை தர வேண்டும் என கூறி உள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வெளியாகி 71 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. பயனர்கள் பலரும் தங்களது பயணத்தின் போது நேர்ந்த அனுபவங்களை பதிவிட்டனர்.

    சில பயனர்கள் பஸ் ஏறும் போது நாம் தான் சில்லறைகளை வைத்து கொள்ள வேண்டும் எனவும், சில பயனர்கள், அரசு பஸ்களில் ஆன்லைன் பரிவர்த்தனையை பயன்படுத்த வேண்டும் எனவும் பதிவிட்டனர். இதனால் அவரது பதிவு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.


    • எதிர்பாராதவிதமாக தீப்பொறிகள் பட்டாசு பெட்டி மீது விழுந்து அவை வெடிக்க தொடங்குகின்றன.
    • வீடியோ வைரலான நிலையில் வாலிபரின் செயலை விமர்சித்து பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    திருமண ஊர்வலங்களின் போது பட்டாசுகளை வெடித்து பிரமாண்ட வரவேற்பு அளிப்பது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

    சில நேரங்களில் பட்டாசுகள் வெடிக்கும் போது விபரீதத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அது போன்ற ஒரு சம்பவம் குறித்த வீடியோ எக்ஸ் தளத்தில் பரவி வருகிறது.

    கார்த்திக் மீனா என்ற பயனர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஒரு வாலிபர் திருமண ஊர்வலத்தில் நடனம் ஆடியபடி செல்கிறார். அப்போது திடீரென அந்த நபர் பட்டாசு பெட்டிகளை தலையில் தூக்கி வைத்து நடனம் ஆடுகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக தீப்பொறிகள் பட்டாசு பெட்டி மீது விழுந்து அவை வெடிக்க தொடங்குகின்றன.

    மேலும் அந்த நபரின் உடை மீது தீ பரவுவது போன்றும், அதில் இருந்து தப்பிக்க அந்த நபர் முயற்சி செய்வது போன்றும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் வாலிபரின் செயலை விமர்சித்து பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வழக்கமாக திருமண வரவேற்புக்கு முன்பாக திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் மது அருந்தி மகிழ்ச்சி அடைவார்கள்.
    • நீண்ட நேரம் காத்திருந்தும் மணமக்கள் வரவில்லை.

    திருமணம் பிடிக்காமல் கடைசி நேரத்தில் மணமகன் அல்லது மணமகள் ஓட்டம் பிடித்தது குறித்த செய்திகளை கேள்வி பட்டிருப்போம். ஆனால் மணமக்கள் தங்களது திருமண வரவேற்பு விழாவுக்கு வராமல் தேனிலவுக்கு சென்ற தகவலை மணமகனின் தங்கை வலைதளத்தில் பகிர்ந்து இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.

    இது தொடர்பாக மணமகனின் தங்கையின் வலைதள பதிவில், எனது அண்ணனின் திருமண வரவேற்புக்காக உறவினர்கள் காத்திருந்தனர். வழக்கமாக திருமண வரவேற்புக்கு முன்பாக திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் மது அருந்தி மகிழ்ச்சி அடைவார்கள். பின்னர் புகைப்படங்கள் எடுத்து கொள்வர். ஆனால் அன்று நீண்ட நேரம் காத்திருந்தும் மணமக்கள் வரவில்லை. அங்கு அவர்கள் வரமாட்டார்கள் என்று எனது அண்ணனின் நண்பர் ஒருவருக்கு மட்டுமே தெரியும்.

    காரணம் மணமக்கள் தேனிலவுக்கு சென்று விட்டனர். இது எங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையறிந்த எனது தாயும், தந்தையும் மிகுந்த வேதனை அடைந்தனர். அவர்கள் தேனிலவுக்கு பிரிஸ்டல் விமான நிலையம் சென்ற பிறகே எங்களுக்கு தகவல் தெரிந்தது என கூறியுள்ளார்.

    • வீடியோவை பகிர்ந்து சுற்றுலா பயணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கடைக்காரரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

    சுற்றுலா தலங்களில் உணவு பொருட்களின் விலை மற்ற இடங்களை காட்டிலும் அதிகமாக இருப்பது சகஜம்தான் என்றாலும், இலங்கையில் சாலையோர கடை ஒன்றில் கொத்து பரோட்டாவுக்கு ரூ.1900 கேட்டதாக சுற்றுலா பயணி ஒருவர் வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பேசு பொருளாகி உள்ளது.

    அந்த பதிவில் அவர் சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுலா சென்ற போது அங்குள்ள சாலையோர கடை ஒன்றுக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது கொத்து பரோட்டா விலை கேட்ட போது ரூ.1900 என கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி விலை அதிகமாக இருப்பது பற்றி கடை உரிமையாளரிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

    அதற்கு அவர் விருப்பம் இருந்தால் வாங்குங்கள். இல்லையென்றால் சென்று விடுங்கள் என கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோவை பகிர்ந்து சுற்றுலா பயணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கடைக்காரரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

    • நபர் தொடர்ந்து போராடி நைசாக குடுவைக்குள் பாம்பின் தலையை கொண்டு செல்கிறார்.
    • எக்ஸ் தள பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோ 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலானது.

    சமூக வலைதளங்களில் தினமும் புது புது வீடியோக்கள் வெளியாகி வருகிறது. அவற்றில் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிக கவனம் பெறுகின்றன. அந்த வகையில் ஒருவர் பாம்பை குடுவைக்குள் அடைக்க போராடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில், ஒரு பாம்பு தரையில் அங்கும் இங்குமாக நெளிந்து செல்கிறது. அதனை பிடிப்பதற்காக பிளாஸ்டிக் குடுவையுடன் ஒருவர் பாம்பின் அருகில் செல்கிறார். அவர் அந்த பாம்பின் தலை அருகே குடுவையை கொண்டு செல்லும் போது அதில் சிக்காமல் பாம்பு தப்பிக்க முயல்கிறது. எனினும் அந்த நபர் தொடர்ந்து போராடி நைசாக குடுவைக்குள் பாம்பின் தலையை கொண்டு செல்கிறார்.

    அதன்பிறகு அதன் வாலை படிப்படியாக குடுவைக்குள் தள்ளி இறுதியில் குடுவையை மூடுவது போன்று காட்சிகள் உள்ளது. 'ஹால் ஆப் பேம்' என்ற எக்ஸ் தள பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலானது.

    • வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரது செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
    • மற்றொரு பயனர் இசை கருவிகளை மதிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    பிரபல பஞ்சாபி பாடகரான ஏ.பி. தில்லான் கோச்செல்லா மேடையில் கிடாரை உடைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளானது.

    பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளை கொண்ட அவர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், 'சம்மர் ஹை' ஹிட்மேக்கர் என்ற பயணத்தின் ஒரு பகுதியாக மேடையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும் காட்சி உள்ளது. அதில் பங்கேற்று நிகழ்ச்சியை நடத்திய அவர் முடிவில் தனது கிடாரை மேடையிலேயே வீசி உடைப்பது போன்று காட்சி உள்ளது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரது செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர் உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்த விசயங்களை மதிக்கவும். இது உங்களுக்கு அழகல்ல என கூறியுள்ளார். மற்றொரு பயனர் இசை கருவிகளை மதிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.



    ×