என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "social media"

    • ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் ஒரே தலைவர் அவர்தான் என்று பேசியபோது டிரம்ப் தலையாட்டுகிறார்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அமெரிக்காவில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர். அப்போது ரஷியா- உக்ரைன் மோதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து அதிபர் டிரம்ப்க்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    அச்சமயம், அதிபர் டிரம்ப் கண்களை மூடி தூங்கிக்கொண்டுள்ளார். டிரம்புக்கு அருகில் அமர்ந்திருந்த வெளியுறவு செயலாளர் ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் ஒரே தலைவர் அவர்தான் என்று பேசியபோது டிரம்ப் தலையாட்டுகிறார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த மக்கள், 79 வயதான டொனால்டு டிரம்பின் உடல்நிலை மோசமடைந்துள்ளதை இந்த வீடியோ காட்டுவதாக கருத்து தெரிவிக்கின்றனர். 



    • 25 கிலோ எடையை அதிகரித்து பின்னர் அதைக் குறைக்கும் சவாலைத் தொடங்கினார்.
    • மாதத்தில் 13 கிலோ அதிகரித்து 105 கிலோவை எட்டியதாக அவர் கூறியிருந்தார்.

    ரஷியாவின் ஷ்யாவின் ஓரன்பர்க் நகரைச் சேர்ந்த 30 வயதான டிமிட்ரி நுயான்சின், உடற்பயிற்சி பயிற்சியாளராகவும் சமூக ஊடகங்க பிரபலமாகவும் உள்ளார்.

    தனது எடை இழப்புத் திட்டத்தை விளம்பரப்படுத்த, அவர் 25 கிலோ எடையை அதிகரித்து பின்னர் அதைக் குறைக்கும் சவாலைத் தொடங்கினார்.

    இதன் ஒரு பகுதியாக, சில வாரங்களுக்கு ஒவ்வொரு நாளும் 10,000 கலோரிகளுக்கு மேல் ஜங்க் ஃபுட் சாப்பிடத் தொடங்கினார்.

    காலையில் பேஸ்ட்ரிகள் மற்றும் கேக்குகள், மதியம் மயோனைஸுடன் பாலாடைக்கட்டிகள், இரவில் ஒரு பர்கர் மற்றும் இரண்டு சிறிய பீட்சாக்கள் சாப்பிடுவார்.

    இந்நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த மாதம் 18 ஆம் தேதி தனது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில், ஒரு மாதத்தில் 13 கிலோ அதிகரித்து 105 கிலோவை எட்டியதாக அவர் கூறியிருந்தார்.

    இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, அவர் தனது நண்பர்களிடம் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், தனது பயிற்சி வகுப்புகளை ரத்து செய்வதாகவும் கூறினார். ஆனால் மறுநாள் அவர் தூக்கத்தில் மாரடைப்பால் இறந்தார். 

    • இரவு 12 மணிக்கு மனைவியை எழுப்பி பிறந்தநாள் கேக்கை வெட்ட வைக்கலாம் என்று நினைத்தார்.
    • இரவு 11 மணிக்கு அலாரம் அடித்ததும், சத்தம்கேட்டு எழுந்த மனைவி அதனை ஆப் செய்துவிட்டு தூங்கினார்.

    பொதுவாக நமக்கு நெருங்கியவர்களின் பிறந்தநாளில் அவர்களுக்கு தெரியாமல் இன்ப அதிர்ச்சியூட்டும் விதமாக திடீரென வாழ்த்து தெரிவிப்போம். அந்த வகையில் கணவர் ஒருவர் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு அவருக்கு தெரியாமல் முன்கூட்டியே பிரிட்ஜில் கேக் வாங்கி வைத்தார்.

    இரவு 12 மணிக்கு மனைவியை எழுப்பி பிறந்தநாள் கேக்கை வெட்ட வைக்கலாம் என்று நினைத்தார். இவரது மனைவியோ இரவு 9½ மணிக்கே தூங்கிவிட்டார். பின்னர் இவரும் செல்போனில் படம் பார்த்துக்கொண்டே ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து இரவு 11 மணிக்கு அலாரம் அடித்ததும், சத்தம்கேட்டு எழுந்த மனைவி அதனை ஆப் செய்துவிட்டு தூங்கினார். இந்நிலையில் காலையில் எழுந்து பிரிட்ஜை திறந்த மனைவிக்கு கேக்கை பார்த்ததும் அதிர்ச்சி. அப்போது அவர் கோபப்படாமல் சிரித்தபடி கணவர் தனக்காக செய்ததை நினைத்து சந்தோஷப்பட்டார். இதையடுத்து கேக் வெட்டுவதுபோன்ற வீடியோ எடுத்து தனது கணவருக்கு காண்பித்தார்.

    இந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட லட்சக்கணக்கானோரின் விருப்பங்களை பெற்று வைரலாகி வருகிறது.



    • ஸ்மிருதி மந்தனாவின் தந்தை திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • மன அழுத்தத்தால் பலாஷ் முச்சலுக்கு உடல்நிலை மோசமானதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவிற்கும், அவரது காதலர், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நேற்று திருமணம் நடைபெறவிருந்தது.

    இச்சூழலில் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் இவர்களின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.

    தொடர்ந்து, ஸ்மிருதியின் காதலர் பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    மன அழுத்தத்தால் பலாஷ் முச்சலுக்கு உடல்நிலை மோசமானதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் முச்சலுக்கு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டதாகவும், இசிஜி உட்பட பிற சோதனைகள் செய்யப்பட்டதாகவும், தற்போது குணமடைந்து வீடு திரும்பியதாகவும், ஆனால் மன அழுத்தத்தில் உள்ளதாகவும் அவரது தாயார் தெரிவித்தார். திருமணம் தடைப்பட்டது இருவரையும் உணர்ச்சி ரீதியாக பாதித்தாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஸ்மிருதி மந்தனா சமூக வலைதளங்களில் இருந்து திருமண புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களை நீக்கியுள்ளார்.

    தந்தை மற்றும் மணமகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் திருமணம் நின்ற நிலையில், சமூக வலைதள பதிவுகள் நீக்கம் செய்துள்ளார்.

    • சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
    • ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.

    உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது. சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

    இதனிடையே 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ ஆஸ்திரேலியா அரசு தடை விதித்துள்ளது. இது வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.

    நிதி மோசடிகள், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற ஆன்லைன் அபாயங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் வகையில் வழிமுறைகளை வகுத்து வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

    ஏற்கனவே டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகள் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வீடியோ, போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
    • சித்திக் அளித்த விளக்கம் சரியாக இல்லாததால் அவரை அதிகாரிகள் பணி நீக்கம் செய்தனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் வக்கார் சித்திக் என்பவர் டாக்டராக வேலை செய்து வந்தார்.

    இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் புது மனைவி கணவரை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த சித்திக் தனது மனைவியை முதல் மாடிக்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு வார்டில் இருந்த நோயாளிகளை வெளியே அனுப்பிவிட்டு தனது சட்டை, பேண்டை கழட்டினார்.

    பின்னர் புது மனைவியை கட்டிப்பிடித்த படியும், கட்டிலுக்கு அடியில் முன்னும், பின்னும் உருண்டு புரண்டார். இதே போல் நீண்ட நேரம் நடனம் ஆடிக்கொண்டு இருந்தனர்.

    இதனை ஆஸ்பத்திரி நோயாளிகள் தங்களது செல்போன்களில் வீடியோ, போட்டோவாக பதிவு செய்தனர்.

    இந்த வீடியோ, போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து சித்திக்கிடம் விளக்கம் கேட்டனர். சித்திக் அளித்த விளக்கம் சரியாக இல்லாததால் அவரை அதிகாரிகள் பணி நீக்கம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் நோயாளிகளை காப்பாற்றும் புனிதமான பணியில் உள்ள டாக்டர் ஒருவர் இது போன்ற செயலில் ஈடுபட்டது ஏற்புடையதல்ல.

    இனி இதுபோல் மீண்டும் ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். 

    • விதிகளை மீறினால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
    • இந்த போட்டியில் 240 பேர் பங்கேற்ற நிலையில், 24 மணிநேரத்துக்குள் 186 பேர் வெளியேற்றப்பட்டனர்.

    சீனாவில் பல்வேறு வினோதமான போட்டிகள் நடத்தப்படுவது சகஜம். அந்த வகையில் பாட்டோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வினோத போட்டி நடத்தப்பட்டது.

    அதாவது நீண்ட நேரம் படுக்கையில் இருந்து எழுந்திருக்காமல் படுத்தே இருக்க வேண்டும் என்பது தான் விதி. இந்த போட்டியில் படுத்திருக்கும் போது செல்போன் பயன்படுத்தலாம். படிக்கலாம். உணவு வரவழைக்கலாம். ஆனால் உட்காரவோ, எழுந்து நிற்கவோ, கழிவறைக்கு செல்லவோ கூடாது. விதிகளை மீறினால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

    கடந்த 15-ந் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் 240 பேர் பங்கேற்ற நிலையில், 24 மணிநேரத்துக்குள் 186 பேர் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், ஒரு இளைஞர் அதிகபட்சமாக 33 மணிநேரம் 35 நிமிடங்கள் வரை படுத்திருந்து போட்டியில் வெற்றி பெற்றார். அவருக்கு ரொக்கப்பரிசாக ரூ.37 ஆயிரம் வழங்கப்பட்டது.

    • சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
    • ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.

    கான்பெரா:

    இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கி கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.

    எனவே 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது. இந்தத் தடையானது வரும் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சமூக வலைதள கணக்குகளை நீக்க டிக்-டாக், எக்ஸ், மெட்டா ஆகிய நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் சுமார் ரூ.283 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதற்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் சமூக வலைதள கணக்குகளில் இருந்து தங்களது தரவுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ள சிறுவர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.

    • வீடியோ வைரலான நிலையில், சத்தீஸ்கரில் உள்ள அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.
    • இச்சம்பவம் தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்றைய காலக்கட்டத்தில் கல்விக்கும், மருத்துவத்துக்கும் மட்டுமே அதிக செலவாகிறது. இதிலும் பிள்ளைகளின் கல்விக்காக மழலையர் வகுப்பு தொடங்கி பட்டயப்படிப்பு வரை பெற்றோர் செய்யும் செலவு சொல்லி மாளாது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தன் பிள்ளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

    தங்கள் குழந்தைகள் நன்றாக படித்து, வளர்ந்து, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கையில் தான் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் சத்தீஸ்கரில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் இருந்து வெளியாகி உள்ள வீடியோ, மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே அடிப்படை கற்றல் கூட தெரியாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஆசிரியரான கமலேஷ் பாண்டே தொடக்கப் பள்ளியில் ஆங்கில வகுப்பை எடுக்கிறார். அப்போது, Friday-க்கு பதில் FarDay, என்றும் Saturday-க்கு பதில் Saterday என்றும் பலகையில் எழுதுகிறார். Father, Mother, Brother, Sister என்று குடும்ப உறுப்பினர் சொற்களுக்கு முறையே Farder, Mader, Barpr, Sester என்றும், அதேபோல் Nose, Ear, Eye-க்கு பதில் Noge, eare, iey என்று கரும்பலகையில் எழுதி மாணவர்களையும் சொல்லச் சொல்லி நோட்டில் எழுதிக்கொள்கின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், சத்தீஸ்கரில் உள்ள அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

    இதனிடையே, தொடக்கப்பள்ளியில் 42 குழந்தைகள் படித்து வருவதாகவும், அவர்களுக்கு கல்வி கற்க இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் அடிக்கடி பள்ளிக்கு குடிபோதையில் வந்து வகுப்பு நேரங்களில் தூங்குவதாகவும், மற்றொருவர் தவறான எழுத்துப்பிழைகளைக் கற்பிப்பதாகவும் கிராமவாசிகள் குற்றம் சாட்டினர்.

    இதனை தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

    • X இன் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பலர் புகாரளித்தனர்.
    • செயலிழப்பு குறித்து X நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.

    முன்னணி சமூக ஊடகமான எக்ஸ் எக்ஸ் தளம் உலகம் முழுவதும் திடீரென முடங்கியது. இன்று (நவம்பர் 18) செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 5 மணியளவில், எக்ஸ் தளத்தை அணுகுவதில் பயனர்கள் சிரமங்களைச் சந்தித்தனர்.

    X இன் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பலர் புகாரளித்தனர். இருப்பினும், செயலிழப்பு குறித்து X நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. இந்நிலையில், மீண்டும் எக்ஸ் வலைத்தளம் செயல்பட தொடங்கியதால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

    X இதுபோன்ற செயலிழப்புகளை சந்திப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, இந்த தளம் பல முறை முடங்கி மீண்டுள்ளது. கடந்த 2022 இல் இந்த ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதற்கு உலக பணக்காரர் எலான் மஸ்க் எக்ஸ் என பெயர் மாற்றியது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்மார்ட்போன் பார்ப்பதால் தான் அவரது கண்ணை சுற்றி அவ்வாறு கருப்பாக இருப்பதாக அந்த பெண் கூறுகிறார்.
    • இந்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது.

    முன்பெல்லாம் குழந்தைகள் கதை கேட்டு தூங்கிய காலம் போய், தற்போது செல்போன் பார்த்து விட்டு தான் தூங்கும் நிலை அதிகரித்து விட்டது. இந்நிலையில் அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைக்கு பாடம் புகட்ட தாய் ஒருவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் இருக்கிறார். அவரது கண்ணை சுற்றி அவரது தாய் கருப்பு மையை தடவி விட்டுள்ளார். ஸ்மார்ட்போன் பார்ப்பதால் தான் அவரது கண்ணை சுற்றி அவ்வாறு கருப்பாக இருப்பதாக அந்த பெண் கூறுகிறார். உடனடியாக அந்த குழந்தை கண்ணாடியை பார்த்து அழத் தொடங்குகிறது. இனிமேல் செல்போன் பார்ப்பியா? என தாய் கேட்கும் போது, குழந்தை அழுதபடி தலையசைத்து மறுக்கிறது. மேலும் குழந்தை எனது கண்கள் சிவப்பாகுமா? என கேட்கும் போது அவரது தாய், இல்லை… கருப்பாகும் என கூறுகிறர்.

    இந்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது. நெட்டிசன்கள் சிலர், இது சூப்பர் ஐடியா, எல்லா அம்மாவும் இதை முயற்சி செய்ய வேண்டும் என்று பாராட்டி பதிவிட்டனர்.

    • கார் பழுதாவது தொடர் கதையானது.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் கணேஷ் சங்கடே. இவர் சமீபத்தில் புதிதாக ஒரு கார் வாங்கினார். ஆனால் அந்த காரில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தான் கார் வாங்கிய ஷோரூம் நிறுவனத்தினரிடம் புகார் செய்தார். ஆனாலும் அவர்கள் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை.

    எனவே கார் பழுதாவது தொடர் கதையானது. இதனால் ஆத்திரம் அடைந்த கணேஷ் சம்பவத்தன்று நூதன போராட்டத்தை நடத்த திட்டமிட்டார். அதன்படி தனது புது காரை மேள தாளங்கள் முழங்க கழுதைகளை வைத்து இழுத்து வந்து ஷோரூம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    ×