என் மலர்
நீங்கள் தேடியது "Arrested"
- பிரபல தாதா ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரிடம் அந்த துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- டக்ளஸ் தேவானந்தாவின் துப்பாக்கி, தாதாவிடம் எப்படி சென்றது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொழும்பு:
இலங்கை முன்னாள் மந்திரியும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடந்த 2001-ம் ஆண்டு, அதிகாரப்பூர்வமாக துப்பாக்கி வழங்கப்பட்டு இருந்தது.
பிரபல தாதா ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரிடம் அந்த துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டக்ளஸ் தேவானந்தாவின் துப்பாக்கி, தாதாவிடம் எப்படி சென்றது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்துவதற்காக கோர்ட்டு உத்தரவு பெற்று, அவரை குற்ற புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர்.
- மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
- கைது செய்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை, அவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வதும், பலமுறை தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை, டிட்வா புயல் காரணமாக ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில், மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை 300-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கட லுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி ஜோசப் என்பவருக்கு சொந்தமான ஒரு படகையும், அதிலிருந்த மூன்று மீனவர்களையும் கைது செய்தனர்.
இதையடுத்து கைது செய்த தங்கச்சிமடம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அருளானந்தன் மகன் ஆமோஸ்டின் (24), அந்தோணியார்புரத்தை சேர்ந்த சத்யம் மகன் ஜோன்தாஸ் (37), மண்டபம் தோப்புகாடு அன்ரோஸ் மகன் பரலோக ஜெபஸ்டின் அன்ரோஸ் (25) ஆகியோரை இலங்கை கடற்படையினர் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மீனவர்கள் மூன்று பேரையும், படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை சிறைபிடித்து சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னை பாரிமுனையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
- கோட்டை நோக்கி நீதி கேட்கும் பேரணி நடத்த முயன்ற தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
நாளை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்து இருந்தனர். நிரந்தர பணி நியமன அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தூய்மை பணியாளர்கள் இன்று பேரணி நடத்த உள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னை பாரிமுனையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் சென்னை பாரிமுனை குறளகத்தில் இருந்து ஜார்ஜ் கோட்டையை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணியாக செல்ல முயன்றனர்.
குறளகத்திற்கு முன்னதாகவே பிராட்வே பேருந்து நிலையத்தில் வைத்து தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோட்டை நோக்கி நீதி கேட்கும் பேரணி நடத்த முயன்ற தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார் அவர்களை வாகனங்களில் ஏற்றினர்.
- போலி மருந்து விசாரணைக்காக போலீஸ் சூப்பிரண்டு நல்லாம்பாபு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
- ஜனவரி முதல் வாரத்தில் சி.பி.ஐ., என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் போலி மருந்து தொழிற்சாலை கண்டறியப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதயம், சர்க்கரை, ரத்தகொதிப்பு நோயாளிகள் அன்றாடம் பயன்படுத்தும் மருந்து மாத்திரைகளை போலி மருந்து தொழிற்சாலை மூலம் தயாரித்து நாட்டில் உள்ள 16 மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரபல நிறுவனம் அளித்த புகாரில் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேட்டுப்பாளையம், திருபுவனை பாளையம், அரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் இயங்கிய போலி மருந்து தொழிற்சாலைகள், 10-க்கும் மேற்பட்ட குடோன்களை சோதனை செய்தனர்.
தொழிற்சாலையில் உள்ள நவீன எந்திரங்கள், பல கோடி மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள், மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 13 இடங்களில் சீல் வைக்கப்பட்டன.
போலி மருந்து தொழிற்சாலை நடத்திய ராஜா என்ற வள்ளியப்பன், அவரது பங்குதாரர் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன், குடோன் பொறுப்பாளர் வெங்கட் உறுதுணையாக இருந்த ராணா, மெய்யப்பன் உட்பட 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருந்தனர்.
தொழிற்சாலை அதிபர் ராஜாவின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 2 ½கோடி அளவிலான பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே போலி மருந்து விசாரணைக்காக போலீஸ் சூப்பிரண்டு நல்லாம்பாபு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
கைதான போலி மருந்து தொழிற்சாலை அதிபர் ராஜாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த புதன்கிழமை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் ராஜா பல தகவல்களை தொடர்ந்து அளித்து வருகிறார். அதன்படி போலீசார் அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதாலும் ரசாயான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டது என்பதாலும், வெளிநாட்டு பண பரிவர்த்தனை காரணங்களால் வழக்கை சி.பி.ஐ., என்.ஐ.ஏ. விசாரணைக்கு கவர்னர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளார். ஜனவரி முதல் வாரத்தில் சி.பி.ஐ., என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர்.
இந்த நிலையில் போலியாக நடத்தப்பட்ட தொழிற்சாலைக்கு ஜி.எஸ்.டி. வரி எப்படி செலுத்தப்பட்டது என்ற கேள்வியை அரசியல் கட்சியினர் எழுப்பினர்.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு குழுவினர் கைதான போலி மருந்து தொழிற்சாலை அதிபர் ராஜாவிடம் ஜி.எஸ்.டி.வரி செலுத்தியது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர். ஜி.எஸ்.டி. வரியை செலுத்த புதுவை வனத்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி சத்தியமூர்த்தி தனக்கு உதவி செய்ததாக கூறினார்.
மேலும் சத்திய மூர்த்தியிடம் ரூ12 கோடி பணம் கொடுத்ததாகவும், ஐ.எப்.எஸ். அதிகாரி தனது அதிகாரிகள் தொடர்பின் மூலம் உதவியதாகவும் ராஜா தெரிவித்தார். இதனிடையே அந்த அதிகாரி தலைமறைவானார்.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஓசூரில் பதுங்கியிருந்த சத்தியமூர்த்தியை நேற்று இரவு கைது செய்தனர் அவரை இரவோடு இரவாக புதுச்சேரி கொண்டு வந்து விஜிலென்ஸ் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் தனக்கு நெருக்கமாக இருந்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் பெயரை சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
இதனையடுத்து புதுவை ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் பணிபுரியும் சூப்பிரண்டு பரிதாவிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ஜி.எஸ்.டி அதிகாரியை கைது செய்ய மத்திய அரசிடம் முன் அனுமதி பெறும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இறங்கியுள்ளனர். விரைவில் ஜி.எஸ்.டி. அதிகாரிகளும் இந்த வழக்கில் கைதாவார்கள் என தெரிகிறது.
- ரம்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- 3-வது மாதம் என்பதால் வழக்கம் போல் தனியார் ஸ்கேன் மையத்திற்கு ரம்யாவை அழைத்து சென்றுள்ளனர்.
ஏரியூர்:
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பூச்சூரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி ரம்யா (வயது 26). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ரம்யா மீண்டும் கர்ப்பம் தரித்தார். கடந்த 1-ந் தேதி ரம்யா மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக அவரது கணவர் கண்ணன் உறவினர்களை நம்ப வைத்துள்ளார்.
இந்த நிலையில் ரம்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணை மேற்கொண்டு வந்தார். விசாரணையில் ரம்யாவிற்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளதால் அவரது கணவர் கண்ணன் சட்ட விரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் பரிசோதிக்க திட்டமிட்டது தெரியவந்தது.
அதன்படி சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த நர்சு சுகன்யா (35), புரோக்கர் வனிதா (35) ஆகியோருடன் சேர்ந்து ஸ்கேன் மூலம் ரம்யாவுக்கு பரிசோதனை நடத்த திட்டமிட்டு உள்ளார். இதையடுத்து 3-வது மாதம் என்பதால் வழக்கம் போல் தனியார் ஸ்கேன் மையத்திற்கு ரம்யாவை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் பரிசோதிக்கப்பட்டதில், அவருக்கு 3-வதும் பெண் குழந்தை என்பதை நர்சு சுகன்யா உறுதிப்படுத்தி கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து நர்சு சுகன்யா, புரோக்கர் வனிதா ஆகியோருடன் சேர்ந்து ரம்யாவிற்கு வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்திட கண்ணன் திட்டமிட்டு உள்ளார். அதன்படி வீட்டில் கருக்கலைப்பின்போது ரம்யாவிற்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் மாடிப்படியில் இருந்து கர்ப்பிணி தவறிவிழுந்து காயம் அடைந்து விட்டதாக கூறி உள்ளனர். இதையடுத்து அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பியபோது வழியில் கர்ப்பிணி இறந்து விட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக ரம்யாவின் கணவர் கண்ணன், நர்சு சுகன்யா, புரோக்கர் வனிதா ஆகிய 3 பேரையும் கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
- வள்ளியூரில் ஒரு வழக்கு தொடர்பாக பல வருடமாக போராடி வருகிறேன்.
- என் எதிர் தரப்பின்னர் எனக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர்
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர் தினேஷ், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் புகழ்பெற்றார்.
இந்நிலையில், பண மோசடி புகாரில் பிரபல சீரியல் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் தினேஷை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியானது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் அளித்த புகாரில், "அரசு வேலை வாங்கி தருவதாக சீரியல் நடிகர் தினேஷ் கடந்த 2022-ல் ரூ.3 லட்சம் பெற்றார். ஆனால் அரசு வேலை வாங்கி தரவில்லை. பணத்தை கேட்டபோது கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் நடிகர் தினேஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பணமோசடி புகாரில் தான் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் போலி என்று நடிகர் தினேஷ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய தினேஷ், "கருணாநிதி என்ற நபர் அவரது மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றி விட்டதாகவும் இது குறித்து அவர் என்னிடம் பேசும்போது நான் அவரை தாக்கியதாகவும் பொய்யான புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
வள்ளியூரில் ஒரு வழக்கு தொடர்பாக பல வருடமாக போராடி வருகிறேன். அதற்காக என் எதிர் தரப்பின்னர் எனக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
- நடிகர் தினேஷ் மீது கருணாநிதி என்பவர் புகார் அளித்துள்ளார்.
- பணத்தை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் பணத்தை திருப்பிக் கேட்டபோது தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
பண மோசடி புகாரில் பிரபல சீரியல் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் தினேஷை பணகுடி போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் அளித்த புகாரில்,
அரசு வேலை வாங்கி தருவதாக சீரியல் நடிகர் தினேஷ் கடந்த 2022-ல் ரூ.3 லட்சம் பெற்றார். ஆனால் அரசு வேலை வாங்கி தரவில்லை. பணத்தை கேட்டபோது கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் நடிகர் தினேஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர் தினேஷ், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஷ்லே டெல்லிஸ் ரகசிய ஆவணங்களை பதுக்கியதாகவும், சீன அரசு அதிகாரிகளை சந்தித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் கீழ் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியவர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய வெளியுறவு கொள்கை ஆலோசகருமான ஆஷ்லே டெல்லிஸ், அமெரிக்க விமானப் படை தொடர்பான ரகசிய ஆவணங்களை பதுக்கியதாகவும், சீன அரசு அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஷ்லே டெல்லிஸ் (64), வர்ஜீனியாவின் வியன்னாவில் உள்ள அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் ரகசிய ஆவணங்கள் உட்பட தேசிய பாதுகாப்பு தகவல்களை சட்டவிரோதமாக வைத்து இருந்ததாக நீதித்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க-இந்திய உறவுகள் குறித்து மரியாதைக்குரிய குரலாகக் கருதப்படும் டெல்லிஸ், பல நிர்வாகங்களின் கீழ் பணியாற்றியுள்ளார். இவர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் கீழ் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியவர்.
மேலும், வெளியுறவுத்துறைக்கு ஊதியம் பெறாத ஆலோசகராகவும், பென்டகனின் நிகர மதிப்பீட்டு அலுவலகத்தின் ஒப்பந்ததாரராகவும் FBI பிரமாணப் பத்திரத்தில் பட்டியலிடப்பட்டுள்ளார்.
ஆஷ்லே டெல்லிஸ் வாஷிங்டன் சிந்தனைக் குழுவான கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸில் ஒரு மூத்த உறுப்பினராகவும் உள்ளார்.
- இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
- பெண்ணின் 3 குழந்தைகளையும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் உமாசங்கர். ஊர் காவல் படையை சேர்ந்தவர் கிரண் குமார்.
இருவரும் அதே பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். யாரிடமாவது சொன்னால், அந்த பெண்ணின் 3 குழந்தைகளையும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். ஆனால், இவருடைய புகாரை போலீசார் தொடர்ந்து நிராகரித்துள்ளனர். இதனால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேட்டி அளித்தார்.
இதைத்தொடர்ந்து பங்காருபாளையும் போலீசார் வழக்கு பதிவு செய்து உமாசங்கர், கிரண்குமாரை கைது செய்தனர். இந்த தகவலை பலமனுார் டி.எஸ்.பி. தெரிவித்தார்.
- சிறுமி கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலியானதாக கூறப்பட்டது.
- சித்தாந்தின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை தான் ஜானவி.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் காந்திகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சித்தாந்த். இவரது மகள் ஜானவி (வயது 7). இந்த சிறுமி கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலியானதாக கூறப்பட்டது. அதாவது மாடியில் விளையாடியபோது கால் தவறி விழுந்து விட்டதாக கூறப்பட்டது. அதன்பேரில் காந்திகஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், சிறுமி பலியான வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியை சித்தாந்தின் 2-வது மனைவி ராதா கீழே தள்ளி விட்டு கொலை செய்தது தெரியவந்தது.
சித்தாந்தின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை தான் ஜானவி. இந்த சிறுமியின் தாய் கடந்த 2023-ம் ஆண்டு இறந்து விட்டார். அதன்பிறகு, சித்தாந்த் ராதாவை 2-வதாக திருமணம் செய்திருந்தார்.
இந்த நிலையில், பக்கத்து வீட்டில் உள்ள கேமராவில் பதிவான காட்சிகளில் ஜானவி 3-வது மாடியில் இருந்து விழுந்தபோது ராதா அருகில் நிற்பது தெளிவாக பதிவாகி இருந்தது. அதாவது 3-வது மாடியில் இருக்கையை மாற்றி போட்டு, அதன்மீது ஜானவியை ராதா ஏற வைத்ததால் தவறி விழுந்தது தெரிய வந்துள்ளது. அந்த காட்சியை பக்கத்து வீட்டுக்காரர் சித்தாந்திற்கு அனுப்பி வைத்திருந்தார். அந்த காட்சிகள் மூலமாக காந்திகஞ்ச் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வளர்ப்பு தாய் ராதாவை கைது செய்தனர்.
- சம்பவத்தன்று அவர்கள் இருவரும் தங்களது வீட்டின் அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் சென்று கொண்டிருந்தனர்.
- இருவரும் தாங்கள் தயாரித்த மலைப்பாம்பு இறைச்சியை வீட்டுக்குள் அமர்ந்து சாப்பிட்டு இருக்கின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பனப்புழா பகுதியில் இருவர் மலைப்பாம்மை கொன்று இறைச்சி சமைப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் தளிப் பரம்பா வனச்சரக அதிகாரி சனூப் கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் பனப்புழா பகுதிக்கு சென்றனர்.
அங்கு சந்தேகத்தின் பேரில் ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருவர் மலைப்பாம்பை கொன்று இறைச்சியாக சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் வனத்துறையினர் பிடித்தனர்.
அவர்கள் மாதமங்கலம் பனப்புழாவை பூர்வீகமாக கொண்ட பிரமோத் (வயது40), வந்தனஞ்சேரி பினீஷ்(37) ஆவர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது மலைப்பாம்பை வேட்டையாடி சாப்பிட்டதை ஒப்புக் கொண்டனர்.
சம்பவத்தன்று மாலை அவர்கள் இருவரும் தங்களது வீட்டின் அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. அதனை பிரமோத் மற்றும் பினீஷ் ஆகிய இருவரும் சேர்ந்து அடித்து கொன்றிருக்கின்றனர்.
பின்பு அதனை தங்களின் வீட்டுக்கு எடுத்து வந்து துண்டுதுண்டாக வெட்டி சுத்தப்படுத்தி இறைச்சியாக சமைத்துள்ளனர். பின்பு இருவரும் தாங்கள் தயாரித்த மலைப்பாம்பு இறைச்சியை வீட்டுக்குள் அமர்ந்து சாப்பிட்டு இருக்கின்றனர்.
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் பிடித்துவிட்டனர். பிரமோத் மற்றும் பினீஷ் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இருவரை யும் வனத்துறையினர் கைது செய்தனர்.
பிரமோத் மற்றும் பினீஷ் தங்கியிருந்த வீட்டில் இருந்து மலைப்பாம்பு உடலின் சில பாகங்கள் மற்றும் அவர்கள் சமைத்து வைத்திருந்த மலைப்பாம்பு இறைச்சி உள்ளிட்டவைகள் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டடது.
- படகுடன் 15 பாகிஸ்தான் மீனவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
- ஒரு மொபைல் போன் மற்றும் பாகிஸ்தான் நாணயத்தில் ரூ.200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கடற்பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு ஒரு படகில் பாகிஸ்தான் மீனவர்கள் இருப்பதை கண்டனர். இதையடுத்து படகுடன் 15 பாகிஸ்தான் மீனவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கைதானவர்கள் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சுஜாவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் படகில் சுமார் 60 கிலோ மீன்கள், 9 மீன்பிடி வலைகள், டீசல், உணவுப் பொருட்கள், ஐஸ், மரக்குச்சிகள், ஒரு மொபைல் போன் மற்றும் பாகிஸ்தான் நாணயத்தில் ரூ.200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த மீனவர்களிடம் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






