என் மலர்
நீங்கள் தேடியது "arrested"
- மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
- எஸ்.எஸ்.காலனி போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
மதுரை
மதுரை பொன்மேனியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (20). சம்பவத்தன்று இவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்றார்.
இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த பாலு மகன் ரமேஷ் (19) மோட்டார் சைக்கிள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தனர்.
மதுரை
மதுரை ஆத்திகுளம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). இவர் சம்பவத்தன்று பீ.பி.குளம் மெயின்ரோட்டில் நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த அகிம்சாபுரத்தைச் சேர்ந்த பாபு மகன் ராஜாமைதீன் (24), செல்லூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த நெல்லை கார்த்திக் (24) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500யை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து2 பேரையும் கைது செய்தனர்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் முத்து (26).
இவர் மெயின்ரோட்டில் நடந்து சென்றபோது நேதாஜி மெயின்ரோட்டைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (26) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார். ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்தனர்.
ராணிபேட்டை மாவட்டம், சோளிங்கர்பாறைமேட்டு தெருவைச் சேர்ந்தவர் சதீஷ். மதுரை வந்த இவர் ஆரப்பாளையம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 1000-த்தை பறித்துச் சென்றது.
இதுகுறித்த புகாரின் பேரில் கோமஸ்பாளையத்தைச் சேர்ந்த திருப்பதிசெல்வம் மற்றும் 17 வயது வாலிபரை கரிமேடு போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.
- அருப்புக்கோட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகில் உள்ள வெள்ளைகோட்டையை சேர்ந்தவர் முத்துராசு (32). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சார்பு ஆய்வாளர் தாமரைக்கண்ணன், தலைமை காவலர் அன்பழகன் மற்றும் போலீசார் முத்து ராசுவை பிடித்து விசாரணை செய்தனர். அப்ேபாது அவரிடம் குட்கா பண்டல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, முத்துராசு மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதை பொதுமக்கள் பாராட்டினர்.
- கிராவல் மண் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்
- லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சியப்பன் தலைமையில் போலீசார் எளம்பலூர் ரோட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த டிப்பர் லாரியை போலீசார் வழிமறித்தனர். டிரைவர் சிறிது தூரம் தள்ளிச்சென்று லாரியை நிறுத்திவிட்டு, லாரியில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டார். பின்னர் போலீசார் சென்று டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில் சட்ட விரோதமாக சுமார் 2½ யூனிட் கிராவல் மண் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக இருந்த லாரி டிரைவர் எளம்பலூர் வடக்கு தெருவை சேர்ந்த சேகர் மகன் பிரசாத்தை (வயது 20) பிடித்து கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
- வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருப்பதியை கைது செய்தனர்.
மதுரை
மதுரை பாக்கியநாதபுரம், ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் சேகர் (56). இவர் நேற்று மதியம் தத்தனேரி காபி கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த, அதே பகுதியை சேர்ந்த திருப்பதி (35) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.400-ஐ பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருப்பதியை கைது செய்தனர்.
- பெண்ணிடம் கிண்டல்; வாலிபரின் தந்தை கைது செய்யப்பட்டார்.
- திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பார்த்திபனை கைது செய்தனர்.
மதுரை
மதுரை தேவி நகரை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி தனபாக்கியம் (35). இவரை அதே பகுதியில் வசிக்கும் பார்த்திபன் (56) என்பவரின் மகன் கிண்டல் செய்து வந்தார். இதுகுறித்து தனபாக்கியம் போலீசில் புகார் செய்தார். ஆத்திரம் அடைந்த பார்த்திபன், அந்த வாலிபரை தாக்கி விட்டு தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பார்த்திபனை கைது செய்தனர்.
- முதியவர் வீட்டின் மீது வெடிகுண்டு வீசியவர் கைது செய்யப்பட்டார்.
- கணவன்-மனைவி பிரச்சினையில் 3-வது நபர் தலையிட்டதால், சரவணகுமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
மதுரை
மதுரை ஆர்.ஆர். மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (60). இவரது வீட்டின் அருகே சரவணன் என்ற சரவணகுமார் (28) குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு சிவகுமார் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அங்கு வந்த சீனிவாசன், இரு தரப்பையும் சமரசம் செய்ய முயன்றார். சரவணகுமார் சத்தம் போடவே, கோபம் அடைந்த முதியவர், 'ஒழுங்காக குடும்பம் நடத்து, இல்லையேல் உனக்குத்தான் சங்கடம்' என்று அறிவுரை கூறி விட்டு சென்றார்.
கணவன்-மனைவி பிரச்சினையில் 3-வது நபர் தலையிட்டதால், சரவணகுமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவு முதியவர் சீனிவாசன் வீட்டில் தூங்கினார். அங்கு வந்த சரவணகுமார், பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பினார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து சீனிவாசன் மதிச்சியம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணன் என்ற சரவணகுமாரை கைது செய்தனர்.
- 2-வது மனைவியை கொன்று கிணற்றில் புதைத்த கணவர் கைது செய்யப்பட்டார்
- நடத்தையில் சந்தேப்பட்டு கொலை செய்தேன்
கரூர்:
கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகேயுள்ள பள்ளசங்கனூரை சேர்ந்தவர் தனபால் (வயது 34). கூலித்தொழிலாளி. இவர் மனைவி மேனகா (24). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இத்தம்பதிக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவரை இழந்த மனைவியின் அக்கா அம்பிகாவை (30) கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தனபால் 2வதாக திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் கடந்த 28ம் தேதி தாய்வீட்டில் இருந்து அம்பிகாவை தனபால் அழைத்து சென்றுள்ளார். அதன்பின் இருவரையும் காணவில்லை.
இதையடுத்து வெள்ளியணை போலீசில் அம்பிகாவின் தாய் காளியம்மாள் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில், தனபால் வெள்ளியணை தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் சித்ராவிடம் சரணடைந்து, நடத்தையில் சந்தேப்பட்டு அம்பிகாவை அடித்து கொலை செய்து உடலை தெற்கு மேட்டுப்பட்டியில் உள்ள பாழடைந்த தண்ணீர் இல்லாத கிணற்றில் புதைத்துவிட்டேன் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து வெள்ளியணை போலீசார் தனபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்
- கண்காணிப்பு கேமராவில் பதிவு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் செம்முனீஸ்வரர், மேல்நிலைப்பட்டியில் பொன் நாச்சியம்மன், நல்லக்குறிச்சி சாய்பாபா கோவில் உள்ளது.
இக்கோவிலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர் திருடி சென்றுள்ளார். இது குறித்து கோவில் நிர்வாகிகள் கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரைக்குடி கானாடுகாத்தன் அருகே கொத்தமங்கலத்தை சேர்ந்த வீரப்பன் மகன் பாண்டியனை(வயது53) என்பவர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளம்பெண் பயணம் செய்த பெட்டியில் அவருடைய இருக்கை அருகே இருந்த நபர் கல்லூரி மாணவியிடம் ’செக்ஸ்’ சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
- இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் திருப்பூர் ரெயில் நிலையம் வந்ததும், ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 19 வயதுஇளம்பெண் கர்நாடகாவில் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று கர்நாடகாவில் இருந்து கோழிக்கோட்டுக்கு யஷ்வந்த்பூர்-கண்ணூர் விரைவு ரெயிலில் சென்று கொண்டிருந்தார். அந்த ரெயில் சம்பவத்தன்று நள்ளிரவு 2மணிக்கு ஈரோட்டில் இருந்து திருப்பூர் வந்து கொண்டிருந்தது.
அப்போது இளம்பெண் பயணம் செய்த பெட்டியில் அவருடைய இருக்கை அருகே இருந்த நபர் கல்லூரி மாணவியிடம் 'செக்ஸ்' சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் திருப்பூர் ரெயில் நிலையம் வந்ததும், ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புலக்காட்டுக்காரா பகுதியை சேர்ந்த ஜியோ ஜார்ஜ் (வயது 39) என்பது தெரியவந்தது. பெங்களூரில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
மேலும் அவர் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
- இன்ஸ்பெக்டர் சாது ரமேஷ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
மதுரை
மதுரை வண்டியூர், சங்கு நகரில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக, அண்ணா நகர் போலீசுக்கு தகவல் வந்தது. இதில் தொடர்புடைய குற்றவா ளிகளை கைது செ ய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமரன் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர் சாது ரமேஷ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று நோட்டமிட்டனர்.
அங்கு 10-க்கும் மேற்பட்ட கும்பல் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அவர்களில் 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் அரிவாள், கத்தி, 4 மிளகாய் பொடி பாக்கெட்டுகள், 3 கயிறுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
5 பேரையும் தனிப்படை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் மதுரை பாலாஜி நகர், செந்தில் மகன் அஜய் (20), செங்கல்பட்டு மாவட்டம், மாத்தூர், மாரியம்மன் கோவில் தெரு, ஜெகன் (25), செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், இந்திரா நகர், சிவராமன் மகன் லோகேஸ்வரன் (20), முனிச்சாலை கான்பாளையம், பாபுஜி மகன் பிரேம்குமார் (19), செங்கல்பட்டு மாவட்டம், செண்டிவாக்கம், மாதா கோவில் தெரு, மனோஜ் குமார் (30) என்பது தெரிய வந்தது.
அவர்கள் கூறுகையில், "மதுரை தாசில்தார் நகரை சேர்ந்த அஜய் மற்றும் முனிச்சாலை பிரேம்குமார் இருவரும் மதுரையில் கொள்ளை அடிப்பதற்காக நோட்டம் பார்த்து வந்தனர். இதில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா இல்லாத 10-க்கும் மேற்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
அந்த பகுதிகளில் கொள்ளை அடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரும் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். நாங்கள் ஆயுதங்களுடன் புறப்பட்டு வந்தோம். மதுரை மாநகரில் எந்தெந்த இடங்களில் கொள்ளையடிப்பது தொடர்பாக 5 பேரும் வண்டியூரில் கூடி சதி திட்டம் தீட்டினோம். இதனை தெரிந்து கொண்ட போலீசார் எங்களை சுற்றி வளைத்து பிடித்து விட்டனர்" என்று வாக்குமூலம் கொடுத்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து மதுரை மாநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளை அடிக்க பதுங்கி இருந்ததாக, 5 பேரையும் அண்ணா நகர் போலீசார் கைது செய்தனர்.
- கல்லிடைக்குறிச்சி கோல்டன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி வசந்த கோகிலா. இவர் அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார்.
- போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவில் ஆய்வுசெய்தபோது 4 பேர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்தது தெரிய வந்தது.
நெல்லை:
கல்லிடைக்குறிச்சி கோல்டன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி வசந்த கோகிலா. இவர் அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார்.
கடந்த மாதம் 6-ந் தேதி இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 22 கிராம் தங்க நகை, ரூ.40 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாக கோகிலா கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவில் 4 பேர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்தது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி கீழ வைராவிகுளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த வசந்த கோபி (வயது 22), அடையகருங்குளம் உல்லாச நகரை சேர்ந்த கண்ணன் (46), இசக்கி பாண்டி (34), இளையராஜா (30) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை மீட்டனர்.