என் மலர்
நீங்கள் தேடியது "Arrested"
- வள்ளியூரில் ஒரு வழக்கு தொடர்பாக பல வருடமாக போராடி வருகிறேன்.
- என் எதிர் தரப்பின்னர் எனக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர்
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர் தினேஷ், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் புகழ்பெற்றார்.
இந்நிலையில், பண மோசடி புகாரில் பிரபல சீரியல் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் தினேஷை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியானது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் அளித்த புகாரில், "அரசு வேலை வாங்கி தருவதாக சீரியல் நடிகர் தினேஷ் கடந்த 2022-ல் ரூ.3 லட்சம் பெற்றார். ஆனால் அரசு வேலை வாங்கி தரவில்லை. பணத்தை கேட்டபோது கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் நடிகர் தினேஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பணமோசடி புகாரில் தான் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் போலி என்று நடிகர் தினேஷ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய தினேஷ், "கருணாநிதி என்ற நபர் அவரது மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றி விட்டதாகவும் இது குறித்து அவர் என்னிடம் பேசும்போது நான் அவரை தாக்கியதாகவும் பொய்யான புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
வள்ளியூரில் ஒரு வழக்கு தொடர்பாக பல வருடமாக போராடி வருகிறேன். அதற்காக என் எதிர் தரப்பின்னர் எனக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
- நடிகர் தினேஷ் மீது கருணாநிதி என்பவர் புகார் அளித்துள்ளார்.
- பணத்தை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் பணத்தை திருப்பிக் கேட்டபோது தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
பண மோசடி புகாரில் பிரபல சீரியல் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் தினேஷை பணகுடி போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் அளித்த புகாரில்,
அரசு வேலை வாங்கி தருவதாக சீரியல் நடிகர் தினேஷ் கடந்த 2022-ல் ரூ.3 லட்சம் பெற்றார். ஆனால் அரசு வேலை வாங்கி தரவில்லை. பணத்தை கேட்டபோது கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் நடிகர் தினேஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர் தினேஷ், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஷ்லே டெல்லிஸ் ரகசிய ஆவணங்களை பதுக்கியதாகவும், சீன அரசு அதிகாரிகளை சந்தித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் கீழ் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியவர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய வெளியுறவு கொள்கை ஆலோசகருமான ஆஷ்லே டெல்லிஸ், அமெரிக்க விமானப் படை தொடர்பான ரகசிய ஆவணங்களை பதுக்கியதாகவும், சீன அரசு அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஷ்லே டெல்லிஸ் (64), வர்ஜீனியாவின் வியன்னாவில் உள்ள அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் ரகசிய ஆவணங்கள் உட்பட தேசிய பாதுகாப்பு தகவல்களை சட்டவிரோதமாக வைத்து இருந்ததாக நீதித்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க-இந்திய உறவுகள் குறித்து மரியாதைக்குரிய குரலாகக் கருதப்படும் டெல்லிஸ், பல நிர்வாகங்களின் கீழ் பணியாற்றியுள்ளார். இவர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் கீழ் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியவர்.
மேலும், வெளியுறவுத்துறைக்கு ஊதியம் பெறாத ஆலோசகராகவும், பென்டகனின் நிகர மதிப்பீட்டு அலுவலகத்தின் ஒப்பந்ததாரராகவும் FBI பிரமாணப் பத்திரத்தில் பட்டியலிடப்பட்டுள்ளார்.
ஆஷ்லே டெல்லிஸ் வாஷிங்டன் சிந்தனைக் குழுவான கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸில் ஒரு மூத்த உறுப்பினராகவும் உள்ளார்.
- இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
- பெண்ணின் 3 குழந்தைகளையும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் உமாசங்கர். ஊர் காவல் படையை சேர்ந்தவர் கிரண் குமார்.
இருவரும் அதே பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். யாரிடமாவது சொன்னால், அந்த பெண்ணின் 3 குழந்தைகளையும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். ஆனால், இவருடைய புகாரை போலீசார் தொடர்ந்து நிராகரித்துள்ளனர். இதனால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேட்டி அளித்தார்.
இதைத்தொடர்ந்து பங்காருபாளையும் போலீசார் வழக்கு பதிவு செய்து உமாசங்கர், கிரண்குமாரை கைது செய்தனர். இந்த தகவலை பலமனுார் டி.எஸ்.பி. தெரிவித்தார்.
- சிறுமி கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலியானதாக கூறப்பட்டது.
- சித்தாந்தின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை தான் ஜானவி.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் காந்திகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சித்தாந்த். இவரது மகள் ஜானவி (வயது 7). இந்த சிறுமி கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலியானதாக கூறப்பட்டது. அதாவது மாடியில் விளையாடியபோது கால் தவறி விழுந்து விட்டதாக கூறப்பட்டது. அதன்பேரில் காந்திகஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், சிறுமி பலியான வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியை சித்தாந்தின் 2-வது மனைவி ராதா கீழே தள்ளி விட்டு கொலை செய்தது தெரியவந்தது.
சித்தாந்தின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை தான் ஜானவி. இந்த சிறுமியின் தாய் கடந்த 2023-ம் ஆண்டு இறந்து விட்டார். அதன்பிறகு, சித்தாந்த் ராதாவை 2-வதாக திருமணம் செய்திருந்தார்.
இந்த நிலையில், பக்கத்து வீட்டில் உள்ள கேமராவில் பதிவான காட்சிகளில் ஜானவி 3-வது மாடியில் இருந்து விழுந்தபோது ராதா அருகில் நிற்பது தெளிவாக பதிவாகி இருந்தது. அதாவது 3-வது மாடியில் இருக்கையை மாற்றி போட்டு, அதன்மீது ஜானவியை ராதா ஏற வைத்ததால் தவறி விழுந்தது தெரிய வந்துள்ளது. அந்த காட்சியை பக்கத்து வீட்டுக்காரர் சித்தாந்திற்கு அனுப்பி வைத்திருந்தார். அந்த காட்சிகள் மூலமாக காந்திகஞ்ச் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வளர்ப்பு தாய் ராதாவை கைது செய்தனர்.
- சம்பவத்தன்று அவர்கள் இருவரும் தங்களது வீட்டின் அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் சென்று கொண்டிருந்தனர்.
- இருவரும் தாங்கள் தயாரித்த மலைப்பாம்பு இறைச்சியை வீட்டுக்குள் அமர்ந்து சாப்பிட்டு இருக்கின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பனப்புழா பகுதியில் இருவர் மலைப்பாம்மை கொன்று இறைச்சி சமைப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் தளிப் பரம்பா வனச்சரக அதிகாரி சனூப் கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் பனப்புழா பகுதிக்கு சென்றனர்.
அங்கு சந்தேகத்தின் பேரில் ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருவர் மலைப்பாம்பை கொன்று இறைச்சியாக சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் வனத்துறையினர் பிடித்தனர்.
அவர்கள் மாதமங்கலம் பனப்புழாவை பூர்வீகமாக கொண்ட பிரமோத் (வயது40), வந்தனஞ்சேரி பினீஷ்(37) ஆவர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது மலைப்பாம்பை வேட்டையாடி சாப்பிட்டதை ஒப்புக் கொண்டனர்.
சம்பவத்தன்று மாலை அவர்கள் இருவரும் தங்களது வீட்டின் அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. அதனை பிரமோத் மற்றும் பினீஷ் ஆகிய இருவரும் சேர்ந்து அடித்து கொன்றிருக்கின்றனர்.
பின்பு அதனை தங்களின் வீட்டுக்கு எடுத்து வந்து துண்டுதுண்டாக வெட்டி சுத்தப்படுத்தி இறைச்சியாக சமைத்துள்ளனர். பின்பு இருவரும் தாங்கள் தயாரித்த மலைப்பாம்பு இறைச்சியை வீட்டுக்குள் அமர்ந்து சாப்பிட்டு இருக்கின்றனர்.
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் பிடித்துவிட்டனர். பிரமோத் மற்றும் பினீஷ் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இருவரை யும் வனத்துறையினர் கைது செய்தனர்.
பிரமோத் மற்றும் பினீஷ் தங்கியிருந்த வீட்டில் இருந்து மலைப்பாம்பு உடலின் சில பாகங்கள் மற்றும் அவர்கள் சமைத்து வைத்திருந்த மலைப்பாம்பு இறைச்சி உள்ளிட்டவைகள் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டடது.
- படகுடன் 15 பாகிஸ்தான் மீனவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
- ஒரு மொபைல் போன் மற்றும் பாகிஸ்தான் நாணயத்தில் ரூ.200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கடற்பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு ஒரு படகில் பாகிஸ்தான் மீனவர்கள் இருப்பதை கண்டனர். இதையடுத்து படகுடன் 15 பாகிஸ்தான் மீனவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கைதானவர்கள் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சுஜாவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் படகில் சுமார் 60 கிலோ மீன்கள், 9 மீன்பிடி வலைகள், டீசல், உணவுப் பொருட்கள், ஐஸ், மரக்குச்சிகள், ஒரு மொபைல் போன் மற்றும் பாகிஸ்தான் நாணயத்தில் ரூ.200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த மீனவர்களிடம் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- புலன் விசாரணையில் உள்ளூரை சேர்ந்த சிலர் கொள்ளையர்களுக்கு உதவியதாக இருந்தது தெரியவந்தது.
- தலைமறைவாக உள்ள 3 கொள்ளையர்களையும் போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம் குளித்தலை காவேரி நகரை சேர்ந்தவர் கருணாநிதி (வயது70). இவர் திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாவித்திரி (65). குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
இவர்கள் குளித்தலை அருகே வை.புதூர், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த 18-ந் தேதி கருணாநிதி மற்றும் அவரது மனைவி சாவித்திரி, இளைய மகள் அபர்ணா (40) ஆகிய மூன்று பேரும் குளித்தலை காவேரி நகரில் உள்ள வீட்டில் இருந்தபோது, அதிகாலை 3 மணியளவில் காரில் வந்த 3 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அவர்கள் 3 பேரையும் கட்டிப் போட்டு 40 பவுன் நகைகள், ரூ.7 லட்சம் ரொக்கம் மற்றும் 3 கைப்பேசிகளை கொள்ளையடித்து காரில் தப்பிச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து கொள்ளையர்களைப் பிடிக்க குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
பின்னர் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் உள்ளூரை சேர்ந்த சிலர் கொள்ளையர்களுக்கு உதவியதாக இருந்தது தெரியவந்தது.
அதை தொடர்ந்து கொள்ளையர்களுக்கு உடந்தையாக இருந்த குளித்தலையை அடுத்த பரளியைச் சேர்ந்த பிரகாஷ் (36), ரெங்கநாதன்(36), பார்த்திபன் (27), ரவிசங்கர் (26), திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த ஹரீஸ் (28), சிவகங்கையைச் சேர்ந்த கண்ணன் (35), பால் பாண்டி (32), அஜய் (28), கரூர் மாவட்டம் கடவூரைச் சேர்ந்த முருகேஷ்(35) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
இவர்கள் கொடுத்த தகவலின்படி தலைமறைவாக உள்ள 3 கொள்ளையர்களையும் போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
இவர்களில் பிரகாஷ் காவலராக பணியாற்றி, பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு திட்டங்களை தீட்டி கொள்ளை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது, தலைமறைவாக உள்ள மூன்று நபர்களை பிடித்த பிறகு பல்வேறு உண்மை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வரும்.
நகை, பணம் குறித்து வீட்டில் ஆயுதங்களால் தாக்கி கொள்ளை அடித்துச் சென்ற மூன்று நபர்களை கைது செய்த பிறகுதான் தகவல் தெரியும் என கூறப்படுகிறது.
- 2018 முதல் தலைமறைவாக இருந்த நிலையில் காவல்துறை கைது செய்துள்ளது.
- சென்னையில் இதேபோல் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது 6 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கடன் மோசடி வழக்கில் டெல்லி பொளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.5 கோடி பணத்தை படத் தயாரிப்பு மற்றும் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இரண்டு முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சீனிவாசன் 2018 முதல் தலைமறைவாக இருந்த நிலையில் காவல்துறை கைது செய்துள்ளது.
ரூ.1000 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்த வழக்கில் போலீசார் சற்றி வளைத்துள்ளனர்.
சென்னையில் இதேபோல் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது 6 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- சம்பவத்தன்று மோகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெங்கடேசனும் கலந்துகொண்டுள்ளார்.
- சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவை சேர்ந்தவர் நிதின்சாய் (வயது 21). சென்னையில் உள்ள கலைக்கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு திருமங்கலத்தில் தனது நண்பர் மோகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
பின்னர் அவர் தனது கல்லூரி நண்பர் அபிஷேக் என்பவருடன் ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருமங்கலம் பள்ளி சாலை அருகே வந்தபோது ஸ்கூட்டர் மீது அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு நிதின்சாய் சம்பவ இடத்திலேயே பலியானார். அபிஷேக் படுகாயம் அடைந்தார்.
கார் மோதியதில் ஸ்கூட்டர் உருக்குலைந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். பலியான நிதின்சாய் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த அபிஷேக் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில், இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
நிதின்சாய் மற்றும் அபிஷேக்கின் நண்பர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவால் இந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த கொலைக்கான பயங்கர பின்னணி வருமாறு:-
கொலையான நிதின் சாயின் நெருங்கிய நண்பரான வெங்கடேஷ் என்பவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி அவரது காதலை ஏற்காமல் கண்டித்து வந்துள்ளார். எனினும் வெங்கடேஷ் விடாமல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அந்த மாணவி தனது நண்பரான பிரணவ் என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர், வெங்கடேசனை நேரில் சென்று மிரட்டி உள்ளார். எனினும் அவரது மிரட்டலை வெங்கடேசன் பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று மோகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெங்கடேசனும் கலந்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து பிரணவ் தனது நண்பர்களுடன் சொகுசு காரில் வந்துள்ளார். ஓட்டலை விட்டு வெளியே வந்தவுடன் வெங்கடேசனை பிரணவ் தரப்பினர் தாக்க முயன்றனர். அப்போது நிதின்சாயும், அபிஷேக்கும் அவர்களை தடுத்து நிறுத்தி வெங்கடேசனுக்கு ஆதரவாக நின்றுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் வெங்கடேசனின் கால் மீது பிரணவ் தரப்பினர் காரை ஏற்றி உள்ளனர். இதனால் ஆவேசம் அடைந்த நிதின் சாய், அபிஷேக் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சொகுசு காரை சேதப்படுத்தி, நம்பர் பிளேட்டையும் உடைத்து எறிந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பிரணவ் தரப்பினர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
அதன்பின்னர், நிதின்சாயும், அபிஷேக்கும் ஸ்கூட்டரில் ஒன்றாக சென்ற போதுதான் பிரணவ் தரப்பினர் காரில் பின்தொடர்ந்து வந்து வேகமாக மோதி கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு திருமங்கலம் போக்குவரத்து போலீசாரிடம் இருந்து சட்டம்-ஒழுங்கு போலீசார் வசம் வந்தது. கொலை வழக்குப்பதிவு செய்து திருமங்கலம் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினார்கள்.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் காரில் வந்தவர்கள், விபத்தில் நிதின்சாய் இறந்தது தெரியாமல் சிரித்தபடி எச்சரிக்கை விடுத்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் சொகுசு காரை ஓட்டி வந்து நிதின்சாய் மீது மோதி கொலை செய்தது கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரின் பேரன் சந்துரு என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று நிதின்சாயின் உறவினர்கள், நண்பர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று திருமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து திருமங்கலம் உதவி கமிஷனர் பிரம்மானந்தன், இன்ஸ்பெக்டர் தீபக் ஆகியோர் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். அதன்படி பிரணவ் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சந்துரு தலைமறைவாகி விட்டதால் அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான தி.மு.க. பிரமுகரின் பேரன் சந்துருவை கைது செய்த திருமங்கலம் போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பங்களாபுதூர் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்
- ஒரு மூட்டை மணல் 120 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வதாக விசாரணையில் தெரியவந்தது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்துள்ள கள்ளிப்பட்டி காந்திசிலை அருகே பங்களாபுதூர் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் வாகனத்தின் உள்ளே ஏராளமான ஆற்று மணல் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து மணல் கடத்தி வந்த வேன் மற்றும் அதில் வந்த நான்கு பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கள்ளிப்பட்டி அடசப்பாளையத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகரன்(35) ,கணக்கம்பாளையம் புதுகாலனியை சேர்ந்த சுரேந்திரன்(45), சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சசிக்குமார்( 28), அடசப்பாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வன்(21) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் நான்குபேரும், கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் மீன்பிடிப்பதற்காக செல்வதுபோல இரவு நேரத்தில் பரிசலுடன் சென்று ஆற்றில் உள்ள மணலை திருட்டுத்தனமாக அள்ளி வந்து அதை மூட்டைகளாக கட்டி வாகனத்தில் கடத்தி சென்றதும், அதை ஒரு மூட்டை மணல் 120 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வதாக விசாரணையில் தெரியவந்தது.
மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் ,75 மணல் மூட்டைகளுடன் ஆற்றில் மணல் அள்ளப்பயன்படுத்திய பரிசல் மற்றும் ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை பங்களாபுதூர் போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மணல் கடத்தல் சம்பவத்தில் கைதாகியுள்ள சந்திரசேகரன் என்பவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், இவர் பல ஆண்டுகளாக தொடர்ந்து பவானி ஆற்றில் மீன் பிடிப்பதாக கூறி பரிசலில் மணலை அள்ளி வந்து மூட்டைகளாக கட்டி விற்பனை செய்து வருவதாகவும் தெரியவருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆறு உள்ளிட்ட இடங்களில் சட்ட விரோதமாக திருடி விற்பனை செய்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நேற்று முன்தினம் சுரேஷ்குமார் மீண்டும் அங்கு சென்று இது தொடர்பாக பெண் உதவி ஆணையரிடம் பேசினார்.
- லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ்குமார் அங்கிருந்து வெளியில் வந்தார்.
கோவை:
கோவை ரத்தினபுரி சுபைதார் லே-அவுட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது52). கட்டிட கான்ட்ராக்டராக உள்ளார்.
இவரது சமூகத்திற்கு சொந்தமான கோவில் சூலூர் அடுத்த பாப்பம்பட்டியில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக நிலம், கட்டிடங்கள் உள்ளன.
இந்த நிலையில் இந்த கோவிலை இந்துசமய அறநிலையத்துறைக்கு மாற்ற வேண்டும் என சுரேஷ்குமார் மற்றும் சிலர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, இதுதொடர்பாக 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து சுரேஷ்குமார், கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு சென்று, அங்கு உதவி ஆணையராக இருக்கும் இந்திரா(54) என்பவரை சந்தித்து, எங்கள் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
ஆனால் பலமுறை சந்தித்து பேசியும் இதற்கான நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் சுரேஷ்குமார் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு சென்று உதவி ஆணையர் இந்திராவை சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறி வந்தார்.
அப்போது இதனை விரைந்து முடிக்க வேண்டும் என்றால் எனக்கு ரூ.3 லஞ்சம் தர வேண்டும் என கேட்டார். அதற்கு சுரேஷ்குமார் மறுப்பு தெரிவித்து அங்கிருந்து சென்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ்குமார் மீண்டும் அங்கு சென்று இது தொடர்பாக பெண் உதவி ஆணையரிடம் பேசினார். அப்போது ரூ.1½ லட்சம் கொடுங்கள். உடனே நடவடிக்கை எடுத்து விடுகிறேன் என தெரிவித்தார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ்குமார் அங்கிருந்து வெளியில் வந்தார். பின்னர் நேராக கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்திற்கு சென்று போலீசாரிடம் இதுதொடர்பாக தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் கேட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி சுரேஷ்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.1½ லட்சம் பணம் கொடுத்தனர்.
அதனை வாங்கி கொண்ட சுரேஷ்குமார், பெண் உதவி ஆணையர் இந்திராவுக்கு போன் செய்து பணம் ரெடி பண்ணிவிட்டதாகவும், எங்கு வந்து தர வேண்டும் என கேட்டார்.
அதற்கு இந்திரா, பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் ரோட்டில் உள்ள பர்னிச்சர் கடைக்கு வருமாறு தெரிவித்தார். அதன்படி நேற்று இரவு சுரேஷ்குமார் ரசாயனம் தடவிய ரூ.1½ லட்சத்தை பணத்தை எடுத்து கொண்டு அங்கு சென்றார்.
பின்னர் பெண் உதவி ஆணையர் இந்திராவை சந்தித்தார். அப்போது அவர் தான் வைத்திருந்த மஞ்சள் நிற பேக்கை காண்பித்து அதில் பணத்தை வைக்குமாறு தெரிவிக்கவே, அவரும் அதில் வைத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையிலான போலீசார், லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆணையர் இந்திராவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
முதலில் லஞ்சம் வாங்கியதை மறுத்த அவர், பின்னர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
இன்று காலை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். முன்னதாக அவரை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.






