என் மலர்
நீங்கள் தேடியது "சமூக வலைத்தளம்"
- மதுரை மண்டல போக்குவரத்து கழகம் விளக்கமளித்துள்ளது.
- சாதாரண பஸ்களில் மட்டும் ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட ராஜபாளையம் கிளையை சேர்ந்த பஸ் ஒன்றில் பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. அதாவது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் செல்ல வழக்கமான கட்டணம் ரூ.75-க்கு பதிலாக ரூ.100 வசூலிக்கப்பட்டுள்ளது. பெண்கள் வங்கிக்கணக்கில் ரூ.5 ஆயிரம் வரவு வைத்து விட்டு தமிழக அரசு பஸ் கட்டணத்தை திடீரென உயர்த்தியுள்ளது என்று அந்த பதிவில் குறிப்பிட்டு வலைத்தளங்களில் வலம் வரத்தொடங்கியுள்ளது.
இது போக்குவரத்துக்கழக வட்டாரத்தில் வைரலாகி உள்ளது. மேலும் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து மதுரை மண்டல போக்குவரத்து கழகம் விளக்கமளித்துள்ளது. அதாவது, ராஜபாளையத்தில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட பஸ்சில் (ரூட் எண்.940-ஏ) ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு பயணம் செய்த பயணி ஒருவர் தனது டிக்கெட்டை பதிவிட்டு ரூ.75-க்கு பதிலாக ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அந்த பஸ்சில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் (ரூ.100) மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. சாதாரண பஸ்களில் மட்டும் ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படும். கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. எனவே, சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளது.
- யாரும் தன்னை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக வாகனத்தின் நம்பர் ப்ளேட் இல்லாமல் உலா வந்துள்ளார்.
- இதற்கு முன்பு இதே போன்ற சம்பவங்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோவிற்கு கிடைக்கும் லைக்கிற்கு ஆசைப்பட்டு பலரும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டு இன்னுயிரை இழக்கும் பல வீடியோக்களை காணமுடிகிறது. இந்த வீடியோக்களை பார்த்து விழிப்புணர்வு வரும் என்று பார்த்தால் இங்கு ஒருவர் அவருக்கு மட்டுமல்லாமல் மற்றவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதெல்லாம் பார்த்து சும்மா விடுவாங்களா நம்ம போலீசார்... அதிரடி ஆக்ஷனில் இறங்கி அந்த வாலிபரை கைது செய்துள்ளனர். அதுகுறித்து பார்ப்போம்...
ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வாலிபர் ஒருவர், சாலையில் இயங்கிக்கொண்டிருக்கும் அரசு பேருந்தின் கதவை திறப்பது, பேருந்தின் முன்பு வேகமாக இருசக்கர வாகனத்தில் போய் நிற்பது மற்றும் சாலையில் செல்லும் வாகனங்களின் கதவை திறப்பது என்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் நடந்துக்கொண்டுள்ளார். மேலும் அதி புத்திச்சாலித்தனமாக யாரும் தன்னை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக வாகனத்தின் நம்பர் ப்ளேட் இல்லாமல் உலா வந்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வாலிபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இருசக்கர வாகனத்தை ஓட்டிய வாலிபரின் அடையாளத்தை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து வடகிழக்கு டெல்லியில் கஜூரி காஸில் வசிக்கும் துஷார் புனியா என்ற வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதற்கு முன்பு இதே போன்ற சம்பவங்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ‘பானிபூரி இவ்வளவு சுவையாக இருப்பதற்கு அந்த எலியும் ஒரு காரணம்’ என கருத்து தெரிவிக்கின்றனர்.
- வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்தவர் கரண் தஞ்சு. இவர் தனது நண்பருடன் ஒரு பந்தயம் கட்டினார். அவர் சாப்பிடும் ஒவ்வொரு பானி பூரிக்கும் ரூ.50 தருவதாகக் கூறினார். இருவரும் சேர்ந்து, உள்ளூர் பானி பூரி கடைக்குச் சென்றனர்.
பானி பூரி விற்பனையாளர் இரண்டு பானி பூரிகளை ஒரு தட்டில் வைத்து தஞ்சுவின் நண்பரிடம் கொடுத்தார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத ஒரு நிகழ்வு நடந்தது.
பானிபூரி மசாலா வாளியில் ஒரு எலி விழுந்து நீந்தியது. எலி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அது அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்தது. பானி பூரி விற்பனையாளர் அதை மிகவும் சிரமப்பட்டு வெளியே எடுத்தார்.
வாளியில் எலி விழுந்தவுடன், அது ஓடத் தொடங்கியது. இருப்பினும், இதையெல்லாம் பார்த்த பிறகும், தஞ்சு மித்ரு போட்டியை நிறுத்த ஒப்புக்கொள்ளவில்லை.
மசாலா வாளியில் எலி விழுந்ததை அறிந்த பிறகும், அவர் பந்தயத்தைத் தொடர்ந்தார். ஒரே நேரத்தில் 31 பானிபூரிகளை சாப்பிட்டார்.
தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 'பானிபூரி இவ்வளவு சுவையாக இருப்பதற்கு அந்த எலியும் ஒரு காரணம்' என கருத்து தெரிவிக்கின்றனர்.
- சிலர் செய்யும் உதவிகள் தொடர்பான வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
- ரேபிடோவில் ஆட்டோவை புக் செய்து பயணித்த போது ஆச்சரியப்பட்டேன்.
இன்றைய அவசரமான காலத்தில் எதிரில் வருபவர்களை கூட கவனிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் பல நேரங்களில் நம்முன்னே நடைபெறும் குற்றச்சம்பவங்களை கூட தட்டிக்கேட்க முடியாத நிலையில் உள்ளோம். இதற்கு உதாரணமாக சமீபத்தில் இரவு நேரத்தில் நடு ரோட்டில் கணவருக்கு உயிருக்கு போராடுவதை கண்டு உதவி கோரிய பெண்ணுக்கு யாரும் உரிய நேரத்தில் உதவாததால் கணவர் இறந்தது தொடர்பான வீடியோ வெளியானது. இந்த வீடியோவை பார்த்த பலரும் மனித நேயம் என்ன ஆனது? என வினா எழுப்பி வருகின்றனர். இதனிடையே சிலர் செய்யும் உதவிகள் தொடர்பான வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால் இங்கே ஒருவர், தாம் செய்த உதவி பெரிதாயினும் அதனை வெளிக்காடாமல், பாராட்டையும் எதிர்பாராமல் உள்ளது நெகிழச் செய்துள்ளது.
லிங்க்டுஇன் வலைத்தளத்தில் பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளாரான உத்யா படேல் என்பவர் பகிர்ந்துள்ள பதிவில், ரேபிடோவில் ஆட்டோவை புக் செய்து பயணித்த போது ஆச்சரியப்பட்டேன். அதாவது அவர் பயணித்த ஆட்டோவில், எங்கள் வாடிக்கையாளருக்கு இலவசம் என்று கூறி குடிநீர், டிஷ்யூ பேப்பர், கை சுத்திகரிப்பான் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு 5 கி.மீ. வரை இலவசம் என்று கூறி நோட்டீஸ் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இருக்கைக்கு அருகில் செயற்கையான பூக்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து எதுவும் கூறாத ஆட்டோ டிரைவர் பாராட்டையும் எதிர்பார்க்காமல் மனித நேயம் அவரது வழக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பது போல அவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றார் எனக்குறிப்பிட்டுள்ளார்.
உத்யா படேலின் பதிவை பார்த்த ரேபிடோ நிறுவனம் மற்றும் சமூக வலைத்தள பயனர்கள் அந்த ஆட்டோ டிரைவரின் செயலை பாராட்டி வருகின்றனர்.
- வீட்டில் மகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்ற சூழ்நிலை உள்ளது.
- சிறுமி வெட்கத்துடன் புன்னகைப்பதும் நெட்டிசன்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
ஆட்டோ டிரைவர்கள் தங்களது வாகனத்தில் வித்தியாசமான அலங்காரம் மற்றும் நவீன வசதிகள் செய்த வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது உண்டு. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ ஒற்றை பெற்றோரின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் காட்சிகள் காண்போரை நெகிழ செய்துள்ளது.
அதில், ஆட்டோ பயணத்தின் போது பயணி ஒருவர் ஆட்டோவின் பின் இருக்கையில் ஒரு சிறுமி மிகவும் அமைதியாக உறங்கி கொண்டிருப்பதை கவனிக்கிறார். அவர் டிரைவரிடம் அந்தச் சிறுமியை பற்றி கேட்கிறார். அதற்கு டிரைவர், அது என் மகள் ஆயுஷி என்று கூறுகிறார். தொடர்ந்து பயணி ஆட்டோ டிரைவரிடம் அவரை பற்றி கேட்ட போது அவர் அளித்த பதில் பலரையும் நெகிழ வைத்துள்ளது. அந்த சிறுமியின் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த தந்தை தனது மகளை தனியாகவே வளர்த்து வருகிறார். வீட்டில் மகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்ற சூழ்நிலை உள்ளது.
எனவே தினமும் ஆட்டோ ஓட்ட செல்லும் போதெல்லாம் தனது மகளையும் உடன் அழைத்து செல்கிறாராம். ஆட்டோவின் இரைச்சல், மேடுபள்ளங்கள் என எதை பற்றியும் கவலைப்படாமல் அந்தத் தந்தை மீதான நம்பிக்கையில் ஆயுஷி நிம்மதியாக உறங்குகிறாள். வேலையையும் குழந்தைப் பராமரிப்பையும் ஒரே நேரத்தில் கவனிக்கும் ஒரு ஒற்றை பெற்றோரின் போராட்டத்தை பிரதிபலிக்கும் இந்த வீடியோவின் முடிவில், அந்தப் பயணி தந்தைக்கும் மகளுக்கும் சிற்றுண்டி வாங்கித் தருவதும், அப்போது அந்தச் சிறுமி வெட்கத்துடன் புன்னகைப்பதும் நெட்டிசன்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், எளியவர்களின் சத்தமில்லாத போராட்டங்களுக்கு இந்தத் தந்தை ஒரு உதாரணம் என பதிவிட்டனர்.
- இந்த வருமானம் ஐ.டி. நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கிறது என கிண்டலாக பதிவிட்டனர்.
- வீடியோ இணையத்தில் விவாத பொருளாக மாறி உள்ளது.
சிறிய தொழில் செய்தாலும், திறம்பட செய்தால் நல்ல வருமானம் ஈட்டலாம் என்பதை உறுதிபடுத்துவது போன்ற வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாவது உண்டு. அந்த வகையில் நளினி உனாகர் என்ற பெண் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு தகவல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நளினி உனாகரின் வீட்டுக்கு அருகே ஒரு டிரை கிளீனிங் கடைக்காரரிடம் அவரது வருமானம் குறித்து பேசும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. கடைக்காரரும், அவரது மனைவியும் மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதிப்பதாக கூறுகிறார்கள். தினமும் சுமார் 350 துணிகளை அயர்ன் செய்வதன் மூலமும், விலை உயர்ந்த புடவைகள் மற்றும் சூட்களை டிரைகிளீனிங் செய்வதன் மூலமும் ஒரு நாளைக்கு ரூ.10,500 வரை வருமானம் கிடைப்பதாக கூறுகிறார்கள். சொந்தக்கடை என்பதால் வாடகை கிடையாது, மின்சாரக் கட்டணம் மற்றும் ஆட்கள் கூலி போக மாதம் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் வரை லாபமாக கிடைப்பதாக கூறுகிறார்கள். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இந்த வருமானம் ஐ.டி. நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கிறது என கிண்டலாக பதிவிட்டனர்.
அதேநேரம் சிலர், இதுபோன்று வருமானம் ஈட்டுபவர்கள் முறையாக வருமான வரி செலுத்துவதில்லை என பதிவிட்டுள்ளனர். இவ்வாறு பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்ட நிலையில் நளினி உனாகரின் இந்த வீடியோ இணையத்தில் விவாத பொருளாக மாறி உள்ளது.
- அறைக்கு சென்று ஒரு நாற்காலியில் நின்று கொண்டு கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு அதனை போனில் படம் பிடித்துள்ளார்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோகினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்கள் அன்றாட வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறி உள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட ஆர்வம் கொண்டவர்கள் அதற்காக எடுக்கும் முயற்சிகளும் விபரீதத்தில் முடிகிறது.
லைக் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆபத்தான முறையில் வீடியோவை எடுக்க முயன்று உயிரிழக்கும் சம்பவங்களும் தினசரி நடைபெறுகிறது. இதுதொடர்பான செய்திகள் வெளியானாலும் விழிப்புணர்வு என்பது இல்லாததே வேதனையாக உள்ளது. லைக்கிற்கு ஆசைப்பட்டு 27 வயதான பெண் செய்த செயலால் இன்றைக்கு அப்பெண்ணின் குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்த மோகினி என்பவர் இணையதளத்தில் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சம்பவத்தன்று வித்தியாசமான ரீல்ஸை எடுக்க முடிவு செய்த அவர், அறைக்கு சென்று ஒரு நாற்காலியில் நின்று கொண்டு கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு அதனை போனில் படம் பிடித்துள்ளார். அப்போது கால் தடுமாறி கழுத்தில் கட்டிக்கொண்ட கயிறு இறுக்கியதால் மோகினி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக குடும்பத்தில் உள்ள எவருக்கும் தெரியவில்லை.
சில மணிநேரம் கழித்து மோகினியின் 4 வயதான மகள் அறைக்குள் நுழைந்த போது தனது தாய் தூக்கில் தொங்குவதைக் கண்டு சத்தம் போடவே இச்சம்பவம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோகினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், ரீல்ஸ் எடுக்க முயன்ற போது இச்சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரீல்ஸ் எடுக்க ஆசைக்கப்பட்ட மோகினி செய்த செயலால் இன்று அவரின் 4 வயது மகள் தாயை இழந்து தவிக்கிறாள்.
- கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.2.50 லட்சம் கொடுத்து சொந்தமாக ஒரு இ-ரிக்ஷா வாங்கி உள்ளனர்.
- இ-ரிக்ஷாவை ஓட்ட முடியாமல் அவர்களின் வருமானம் தடைபட்டது.
மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சில மின்வாகனங்கள் அடிக்கடி பழுதாவதாகவும், அவற்றை பழுது நீக்கி கொடுப்பதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்வருவதில்லை என்றும் இணையத்தில் அதிக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இதுபோன்ற ஒரு சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஷிவ்புரி பகுதியை சேர்ந்தவர் நாராயன். இவரது மனைவி குடியா மஹூர். இவர்கள் இருவரும் இ-ரிக்ஷா ஓட்டி வந்தனர். இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.2.50 லட்சம் கொடுத்து சொந்தமாக ஒரு இ-ரிக்ஷா வாங்கி உள்ளனர். அதனை ஓட்டி வருமானம் ஈட்டி தங்கள் 3 குழந்தைகளையும் வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் வாங்கிய 2 மாதத்திலேயே இ-ரிக்ஷா சரியாக வேலை செய்யாமல் பழுதானது. இதுகுறித்து குடியா மஹூர் இ-ரிக்ஷா வாங்கிய நிறுவனத்தினிடம் புகார் செய்த போதும் அவர்கள் இ-ரிக்ஷாவில் ஏற்பட்ட பழுதை சரிபார்க்காமல் 4 மாதங்களாக அலைக்கழித்து வந்துள்ளனர்.
இ-ரிக்ஷாவில் பேட்டரி வெடித்துள்ளது. இதை நீங்கள் தான் புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என மழுப்பலாக பதில் கூறி உள்ளனர். இதனால் இ-ரிக்ஷாவை ஓட்ட முடியாமல் அவர்களின் வருமானம் தடைபட்டது. இதனால் ரிக்ஷா வாங்குவதற்கு வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல் குடியா மஹூர் திணறினார். இதனால் ஆத்திரமடைந்த குடியா மஹூர் சம்பவத்தன்று தனது இ-ரிக்ஷாவை ஷோரூம் கொண்டு சென்ற நிலையில் திடீரென ஆவேசமடைந்து ஷோரூம் முன்பு வைத்து இ-ரிக்ஷாவுக்கு தீ வைத்து எரித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயை அணைத்ததோடு, குடியா மஹூரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
- உள்ளாடைகளை விற்பனை செய்யும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பெண் ஒருவர் ஆச்சரியத்துடன் வீடியோ எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் இருக்கைகளுக்காக சண்டை போடுவது, கவர்ச்சியாக உடை அணிந்து செல்வது, இளம் ஜோடிகளின் அத்துமீறல் என பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி இருந்தது. ஆனால் தற்போது வைரலாகும் வீடியோவில், டெல்லி மெட்ரோவின் ரோகிணி கிழக்கு ரெயில் நிலையத்தில் சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானங்களுக்கு பதிலாக உள்ளாடைகளை விற்பனை செய்யும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதில், 3 பெரிய கண்ணாடிக் கதவுகளைக் கொண்ட இந்த எந்திரத்தில் பல்வேறு அளவுகளில் உள்ளாடைகள் அடுக்கி வைக்கப்பட்டு மின்னணு திரை மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இதனைப்பார்த்த பெண் ஒருவர் ஆச்சரியத்துடன் வீடியோ எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ வைரலாகி பார்வைகளை குவித்து வருகிறது. நெட்டிசன்கள் சிலர், அவசரத் தேவைகளுக்காகவும் குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் போன்ற இக்கட்டான காலங்களில் இது போன்ற எந்திரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பதிவிட்டுள்ளனர். சில பயனர்கள், மெட்ரோ பயணத்தின்போது உள்ளாடைகளை வாங்குவது என்பது சற்று வினோதமான முயற்சி என்று பதிவிட்டுள்ளனர்.
- கொசுக்கடியில் இருந்து தப்பிக்க பொதுமக்களும் தாங்கள் சுயமாக பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
- விமர்சனங்களும், கேலி-கிண்டல் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் சமீப காலமாகவே கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. வழக்கமாக மழை காலங்களில் தான் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். அதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் தவிக்கும் நிகழ்வுகள் அரங்கேறும். ஆனால் இப்போதெல்லாம் கோடை காலத்தில் கூட கொசுக்கடிக்கு பஞ்சமில்லை. மழைக்காலம், குளிர்காலம், கோடை காலம் என எல்லா பருவ காலத்திலுமே சென்னையில் கொசுக்களின் தொல்லை அதிகரித்தே வருகிறது.
அதிலும் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு சென்னையில் கொசுக்களின் ஆதிக்கம் மிகவும் அதிகரித்து விட்டது. புற்றீசல் போல பல்கிப் பெருகிய கொசுக்கள் காரணமாக சென்னை மக்கள் பெரும்பாலானோர் இரவு தூக்கத்தை தொலைப்பது தினமும் அரங்கேறி வருகிறது. இரவு 7 மணிக்கு மேல் பொது வெளியில் சாலையோரம் சிறிது நேரம் நின்றாலே கொசுக்கள் மொத்தமாக மொய்த்துக்கொண்டு கடிக்கின்றன.
இதுவரை இல்லாத வகையில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் தாங்க முடியாத சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி எந்த அக்கறையும் காட்டவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வாகனங்களில் கொசுமருந்து புகை அடிப்பது பெயரளவுக்கு மட்டுமே நடப்பதாகவும், அதனால் கொசுக்கள் ஒழியவில்லை என்பதும் பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.
கொசுக்கடியில் இருந்து தப்பிக்க பொதுமக்களும் தாங்கள் சுயமாக பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். கொசுவர்த்தி ஏற்றினாலும், கிரீம் பயன்படுத்தினாலும் அவற்றுக்கு கொசுக்கள் சீக்கிரமே பழகி விடுவதாகவும், அதனால் நிரந்தர பலனில்லை என்பதும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
பெரும்பாலானோருக்கு அலர்ஜி பாதிப்பு இருப்பதால் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கும் ஸ்பிரே உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த முடிவதில்லை. இதனால் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க வழியில்லாமல் பொதுமக்கள் தவிக்கிறார்கள். மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பால் பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கொசுக்களை ஒழிப்பதற்காக நூதன முயற்சி ஒன்றை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் புதிதாக கையாண்டு வருகிறார்கள். மழைநீர் வடிகால்களுக்கு கொசுவலை போர்த்தும் திட்டம் தான் அது. முதல் கட்டமாக திருவொற்றியூர், திரு.வி.க.நகர் உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் இந்த பணிகள் நடந்து வருகிறது.
சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரை வடிகால்வாயில் விழச் செய்வதற்காக ஆங்காங்கே சிறிய அளவிலான தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தொட்டிகளின் மூடியை திறந்து கொசுவலை போர்த்தி, அதன் மேல் மீண்டும் மூடி வைக்கப்படுகிறது. மழைநீர் வடிகால்வாய் தொட்டிக்குள் உள்ள கொசுக்கள் தொட்டி மூடியில் உள்ள துளை வழியே வெளியேறுவதை தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் இந்த முயற்சியானது பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக வலைதளங்களில் வறுத்தெடுக்கிறார்கள்.
இது தொடர்பான விமர்சனங்களும், கேலி-கிண்டல் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கொசுவலை முயற்சியால் உண்மையிலேயே பயன் இருக்குமா என்கிற சந்தேகத்தையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெர்மாக்கோல் மிகவும் பிரபலமானதை யாரும் மறந்துவிட முடியாது. வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க அப்போது அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ அணை நீரின் மேற்பரப்பில் தெர்மாகோலை மிதக்கவிட்டார். ஆனால் தண்ணீரில் ஏற்பட்ட அலையால் அனைத்து தெர்மாக்கோல்களும் சில நிமிடங்களிலேயே கரை ஒதுங்கின. அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
அந்த தெர்மாக்கோல் முயற்சியுடன், இந்த கொசுவலை முயற்சியை தொடர்புபடுத்தி 'அன்று தெர்மாக்கோல் இன்று கொசுவலை' என்று பலரும் இப்போது நகைச்சுவையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த விமர்சனங்கள் வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
'கொசுவை பிடிக்க வலைவிரிக்கும் சென்னை மாநகராட்சி... வாகன ஓட்டிகளே உஷார்!', கொசு வலைகளை கரையான் அரிக்காமல் இருக்க பூச்சி மருந்து தெளிக்கப்படுமா?, 'கொசு உற்பத்தியை தடுக்க புதிய வழி... நீங்க ஒரு சிட்டி விஞ்ஞானி!', 'தெர்மாக்கோல் சம்பவமே இதைவிட பரவாயில்லை போல!', 'மதுரைக்கு தெர்மாக்கோல்,,, சென்னைக்கு கொசுவலை...' என்று நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறார்கள்.
திரைப்படத்தில் வரும் 'என் கட்சிக்கு மட்டும் நிதி நெருக்கடி இல்லாமல் இருந்திருந்தால் ஒரு பிரமாண்டமான கொசுவலையை வாங்கி தொகுதி முழுவதும் பந்தல் போட்டு மூடி இருப்பேன்... என்னால் முடியவில்லையே...' என்று நடிகர் வடிவேல் பேசும் சினிமா டயலாக்கையும் பதிவிட்டு வருகிறார்கள்.
கவுண்டமணி, செந்தில் காமெடியில் செந்தில், கவுண்டமணியிடம், செந்தில் கேள்வி எழுப்புகிற 'மீனுக்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும்? மீன் இருக்கும். மானுக்கு வலை போட்டா வலைக்குள் என்ன இருக்கும்? மான் இருக்கும். கொசுவுக்கு வலைபோட்டா வலைக்குள் என்ன இருக்கும்? என்ற காமெடியையும் பதிவிட்டுள்ளனர்.
எது எப்படியோ சென்னையில் கொசு ஒழிந்தால் போதும்... அதுதான் பொதுமக்களின் விருப்பம்.
- ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் ஒரு பொருளை ஆர்டர் போட்டு வரவழைத்தனர்.
- பலரும் கலவையான கருத்துக்களை பதிவிட்டனர்.
"இரவு பால்கனியில் இருந்தபடி வானத்தை ரசிப்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்... ஆனால் அப்போது பால்கனி உட்புறமாக மூடிக் கொண்டால் கதவை திறக்க முடியாத அந்த வேதனை எப்படியிருக்கும் ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள்...
அதுபோல ஒரு சம்பவம் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்துள்ளது. 2 நண்பர்கள் இரவில் பால்கனியில் பொழுதை கழித்தனர். அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் வீட்டுக்குள் நுழைய முயன்றபோதுதான் பால்கனி உட்புறமாக பூட்டிக் கொண்டது தெரியவந்திருக்கிறது. வீட்டிற்குள் பெற்றோர் உறங்கிக் கொண்டிருந்தனர். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் அவர்களை எழுப்ப மனமில்லாத அவர்கள், திடீரென சாதுரியமாக செயல்பட ஆரம்பித்தார்கள்.
அவர்கள் ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் ஒரு பொருளை ஆர்டர் போட்டு வரவழைத்தனர். டெலிவரி செய்பவர் வீடு தேடி வந்தபோது அவரிடம் நடந்த சம்பவத்தை விளக்கி கூறி மாற்றுச்சாவி இருக்கும் இடத்தை சொல்லி அதன் மூலம் கதவைத் திறந்து பால்கனியில் இருந்து விடுதலை பெற்றனர்.
அவர்கள் மாடியில் இருந்து டெலிவரி ஊழியரை வரவேற்பது, அவரிடம் நிலைமையை விளக்கிச் சொல்வது, தங்களை மீட்டதும் அவருக்கு நன்றி சொல்லி சிரிப்பது போன்ற காட்சியுடனான வீடியோவை மிஹிர் கஹுகர் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டார், அவரது வீடியோ விரைவாக வைரலானது. பலரும் அவர்களது செயலுக்கு கலவையான கருத்துக்களை பதிவிட்டனர்.
- பெரிய கத்திரிக்கா, முட்டைகோஸ் போன்றவற்றை பச்சையாக சாப்பிட்டார்.
- பலரும் நகைச்சுவை கருத்துகளை பதிவிட்டனர்.
சமூக வலைதளங்களில் எப்படியாவது பிரபலமடைந்து விடவேண்டும் என்ற ஆர்வம் பலரிடமும் அதிகரித்து வருகிறது. அதற்காக எதையும் செய்யலாம் என்ற எண்ணத்திற்கு பலர் சென்றுவிடுகிறார்கள். அதற்கு திருத்தணி தாக்குதல் சம்பவம் ஒரு உதாரணம்.
அதற்கு நேர்மாறாக முற்றிலும் வேடிக்கையாக, ஒருவர் செய்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. ரெயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார் அந்த வாலிபர். திடீரென அவர் பையில் இருந்து தக்காளி சாஸ் பாக்கெட்டை எடுக்கிறார். அவர் ஏதோ சிற்றுண்டி சாப்பிடப் போகிறார் என்று சக பயணிகள் நினைத்தபோது அவர் முழு இஞ்சியை எடுத்து அதில் சாஸை ஊற்றி சாப்பிட்டார். அடுத்து ஒரு டீயை வாங்கியவர் அதில் வாழைப்பழத்தை தொட்டு சாப்பிட்டார். அதேபோல் பெரிய கத்திரிக்கா, முட்டைகோஸ் போன்றவற்றை பச்சையாக சாப்பிட்டார். இதனால் சக பயணிகள் அவரை வியப்புடன் பார்த்தனர். சிலர் சற்று முகம் சுளித்தனர்.
சமூக வலைதளங்களில் வெளியான அவரது வீடியோ, லட்சக்கணக்கானோரின் பார்வைகளையும், விருப்பங்களையும் பெற்றது. பலரும் நகைச்சுவை கருத்துகளை பதிவிட்டனர்.






