என் மலர்
நீங்கள் தேடியது "வீடியோ வைரல்"
- யாரும் தன்னை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக வாகனத்தின் நம்பர் ப்ளேட் இல்லாமல் உலா வந்துள்ளார்.
- இதற்கு முன்பு இதே போன்ற சம்பவங்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோவிற்கு கிடைக்கும் லைக்கிற்கு ஆசைப்பட்டு பலரும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டு இன்னுயிரை இழக்கும் பல வீடியோக்களை காணமுடிகிறது. இந்த வீடியோக்களை பார்த்து விழிப்புணர்வு வரும் என்று பார்த்தால் இங்கு ஒருவர் அவருக்கு மட்டுமல்லாமல் மற்றவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதெல்லாம் பார்த்து சும்மா விடுவாங்களா நம்ம போலீசார்... அதிரடி ஆக்ஷனில் இறங்கி அந்த வாலிபரை கைது செய்துள்ளனர். அதுகுறித்து பார்ப்போம்...
ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வாலிபர் ஒருவர், சாலையில் இயங்கிக்கொண்டிருக்கும் அரசு பேருந்தின் கதவை திறப்பது, பேருந்தின் முன்பு வேகமாக இருசக்கர வாகனத்தில் போய் நிற்பது மற்றும் சாலையில் செல்லும் வாகனங்களின் கதவை திறப்பது என்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் நடந்துக்கொண்டுள்ளார். மேலும் அதி புத்திச்சாலித்தனமாக யாரும் தன்னை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக வாகனத்தின் நம்பர் ப்ளேட் இல்லாமல் உலா வந்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வாலிபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இருசக்கர வாகனத்தை ஓட்டிய வாலிபரின் அடையாளத்தை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து வடகிழக்கு டெல்லியில் கஜூரி காஸில் வசிக்கும் துஷார் புனியா என்ற வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதற்கு முன்பு இதே போன்ற சம்பவங்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ‘பானிபூரி இவ்வளவு சுவையாக இருப்பதற்கு அந்த எலியும் ஒரு காரணம்’ என கருத்து தெரிவிக்கின்றனர்.
- வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்தவர் கரண் தஞ்சு. இவர் தனது நண்பருடன் ஒரு பந்தயம் கட்டினார். அவர் சாப்பிடும் ஒவ்வொரு பானி பூரிக்கும் ரூ.50 தருவதாகக் கூறினார். இருவரும் சேர்ந்து, உள்ளூர் பானி பூரி கடைக்குச் சென்றனர்.
பானி பூரி விற்பனையாளர் இரண்டு பானி பூரிகளை ஒரு தட்டில் வைத்து தஞ்சுவின் நண்பரிடம் கொடுத்தார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத ஒரு நிகழ்வு நடந்தது.
பானிபூரி மசாலா வாளியில் ஒரு எலி விழுந்து நீந்தியது. எலி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அது அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்தது. பானி பூரி விற்பனையாளர் அதை மிகவும் சிரமப்பட்டு வெளியே எடுத்தார்.
வாளியில் எலி விழுந்தவுடன், அது ஓடத் தொடங்கியது. இருப்பினும், இதையெல்லாம் பார்த்த பிறகும், தஞ்சு மித்ரு போட்டியை நிறுத்த ஒப்புக்கொள்ளவில்லை.
மசாலா வாளியில் எலி விழுந்ததை அறிந்த பிறகும், அவர் பந்தயத்தைத் தொடர்ந்தார். ஒரே நேரத்தில் 31 பானிபூரிகளை சாப்பிட்டார்.
தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 'பானிபூரி இவ்வளவு சுவையாக இருப்பதற்கு அந்த எலியும் ஒரு காரணம்' என கருத்து தெரிவிக்கின்றனர்.
- சிலர் செய்யும் உதவிகள் தொடர்பான வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
- ரேபிடோவில் ஆட்டோவை புக் செய்து பயணித்த போது ஆச்சரியப்பட்டேன்.
இன்றைய அவசரமான காலத்தில் எதிரில் வருபவர்களை கூட கவனிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் பல நேரங்களில் நம்முன்னே நடைபெறும் குற்றச்சம்பவங்களை கூட தட்டிக்கேட்க முடியாத நிலையில் உள்ளோம். இதற்கு உதாரணமாக சமீபத்தில் இரவு நேரத்தில் நடு ரோட்டில் கணவருக்கு உயிருக்கு போராடுவதை கண்டு உதவி கோரிய பெண்ணுக்கு யாரும் உரிய நேரத்தில் உதவாததால் கணவர் இறந்தது தொடர்பான வீடியோ வெளியானது. இந்த வீடியோவை பார்த்த பலரும் மனித நேயம் என்ன ஆனது? என வினா எழுப்பி வருகின்றனர். இதனிடையே சிலர் செய்யும் உதவிகள் தொடர்பான வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால் இங்கே ஒருவர், தாம் செய்த உதவி பெரிதாயினும் அதனை வெளிக்காடாமல், பாராட்டையும் எதிர்பாராமல் உள்ளது நெகிழச் செய்துள்ளது.
லிங்க்டுஇன் வலைத்தளத்தில் பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளாரான உத்யா படேல் என்பவர் பகிர்ந்துள்ள பதிவில், ரேபிடோவில் ஆட்டோவை புக் செய்து பயணித்த போது ஆச்சரியப்பட்டேன். அதாவது அவர் பயணித்த ஆட்டோவில், எங்கள் வாடிக்கையாளருக்கு இலவசம் என்று கூறி குடிநீர், டிஷ்யூ பேப்பர், கை சுத்திகரிப்பான் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு 5 கி.மீ. வரை இலவசம் என்று கூறி நோட்டீஸ் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இருக்கைக்கு அருகில் செயற்கையான பூக்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து எதுவும் கூறாத ஆட்டோ டிரைவர் பாராட்டையும் எதிர்பார்க்காமல் மனித நேயம் அவரது வழக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பது போல அவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றார் எனக்குறிப்பிட்டுள்ளார்.
உத்யா படேலின் பதிவை பார்த்த ரேபிடோ நிறுவனம் மற்றும் சமூக வலைத்தள பயனர்கள் அந்த ஆட்டோ டிரைவரின் செயலை பாராட்டி வருகின்றனர்.
- வீட்டில் மகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்ற சூழ்நிலை உள்ளது.
- சிறுமி வெட்கத்துடன் புன்னகைப்பதும் நெட்டிசன்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
ஆட்டோ டிரைவர்கள் தங்களது வாகனத்தில் வித்தியாசமான அலங்காரம் மற்றும் நவீன வசதிகள் செய்த வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது உண்டு. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ ஒற்றை பெற்றோரின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் காட்சிகள் காண்போரை நெகிழ செய்துள்ளது.
அதில், ஆட்டோ பயணத்தின் போது பயணி ஒருவர் ஆட்டோவின் பின் இருக்கையில் ஒரு சிறுமி மிகவும் அமைதியாக உறங்கி கொண்டிருப்பதை கவனிக்கிறார். அவர் டிரைவரிடம் அந்தச் சிறுமியை பற்றி கேட்கிறார். அதற்கு டிரைவர், அது என் மகள் ஆயுஷி என்று கூறுகிறார். தொடர்ந்து பயணி ஆட்டோ டிரைவரிடம் அவரை பற்றி கேட்ட போது அவர் அளித்த பதில் பலரையும் நெகிழ வைத்துள்ளது. அந்த சிறுமியின் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த தந்தை தனது மகளை தனியாகவே வளர்த்து வருகிறார். வீட்டில் மகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்ற சூழ்நிலை உள்ளது.
எனவே தினமும் ஆட்டோ ஓட்ட செல்லும் போதெல்லாம் தனது மகளையும் உடன் அழைத்து செல்கிறாராம். ஆட்டோவின் இரைச்சல், மேடுபள்ளங்கள் என எதை பற்றியும் கவலைப்படாமல் அந்தத் தந்தை மீதான நம்பிக்கையில் ஆயுஷி நிம்மதியாக உறங்குகிறாள். வேலையையும் குழந்தைப் பராமரிப்பையும் ஒரே நேரத்தில் கவனிக்கும் ஒரு ஒற்றை பெற்றோரின் போராட்டத்தை பிரதிபலிக்கும் இந்த வீடியோவின் முடிவில், அந்தப் பயணி தந்தைக்கும் மகளுக்கும் சிற்றுண்டி வாங்கித் தருவதும், அப்போது அந்தச் சிறுமி வெட்கத்துடன் புன்னகைப்பதும் நெட்டிசன்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், எளியவர்களின் சத்தமில்லாத போராட்டங்களுக்கு இந்தத் தந்தை ஒரு உதாரணம் என பதிவிட்டனர்.
- இந்த வருமானம் ஐ.டி. நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கிறது என கிண்டலாக பதிவிட்டனர்.
- வீடியோ இணையத்தில் விவாத பொருளாக மாறி உள்ளது.
சிறிய தொழில் செய்தாலும், திறம்பட செய்தால் நல்ல வருமானம் ஈட்டலாம் என்பதை உறுதிபடுத்துவது போன்ற வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாவது உண்டு. அந்த வகையில் நளினி உனாகர் என்ற பெண் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு தகவல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நளினி உனாகரின் வீட்டுக்கு அருகே ஒரு டிரை கிளீனிங் கடைக்காரரிடம் அவரது வருமானம் குறித்து பேசும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. கடைக்காரரும், அவரது மனைவியும் மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதிப்பதாக கூறுகிறார்கள். தினமும் சுமார் 350 துணிகளை அயர்ன் செய்வதன் மூலமும், விலை உயர்ந்த புடவைகள் மற்றும் சூட்களை டிரைகிளீனிங் செய்வதன் மூலமும் ஒரு நாளைக்கு ரூ.10,500 வரை வருமானம் கிடைப்பதாக கூறுகிறார்கள். சொந்தக்கடை என்பதால் வாடகை கிடையாது, மின்சாரக் கட்டணம் மற்றும் ஆட்கள் கூலி போக மாதம் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் வரை லாபமாக கிடைப்பதாக கூறுகிறார்கள். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இந்த வருமானம் ஐ.டி. நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கிறது என கிண்டலாக பதிவிட்டனர்.
அதேநேரம் சிலர், இதுபோன்று வருமானம் ஈட்டுபவர்கள் முறையாக வருமான வரி செலுத்துவதில்லை என பதிவிட்டுள்ளனர். இவ்வாறு பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்ட நிலையில் நளினி உனாகரின் இந்த வீடியோ இணையத்தில் விவாத பொருளாக மாறி உள்ளது.
- கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.2.50 லட்சம் கொடுத்து சொந்தமாக ஒரு இ-ரிக்ஷா வாங்கி உள்ளனர்.
- இ-ரிக்ஷாவை ஓட்ட முடியாமல் அவர்களின் வருமானம் தடைபட்டது.
மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சில மின்வாகனங்கள் அடிக்கடி பழுதாவதாகவும், அவற்றை பழுது நீக்கி கொடுப்பதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்வருவதில்லை என்றும் இணையத்தில் அதிக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இதுபோன்ற ஒரு சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஷிவ்புரி பகுதியை சேர்ந்தவர் நாராயன். இவரது மனைவி குடியா மஹூர். இவர்கள் இருவரும் இ-ரிக்ஷா ஓட்டி வந்தனர். இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.2.50 லட்சம் கொடுத்து சொந்தமாக ஒரு இ-ரிக்ஷா வாங்கி உள்ளனர். அதனை ஓட்டி வருமானம் ஈட்டி தங்கள் 3 குழந்தைகளையும் வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் வாங்கிய 2 மாதத்திலேயே இ-ரிக்ஷா சரியாக வேலை செய்யாமல் பழுதானது. இதுகுறித்து குடியா மஹூர் இ-ரிக்ஷா வாங்கிய நிறுவனத்தினிடம் புகார் செய்த போதும் அவர்கள் இ-ரிக்ஷாவில் ஏற்பட்ட பழுதை சரிபார்க்காமல் 4 மாதங்களாக அலைக்கழித்து வந்துள்ளனர்.
இ-ரிக்ஷாவில் பேட்டரி வெடித்துள்ளது. இதை நீங்கள் தான் புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என மழுப்பலாக பதில் கூறி உள்ளனர். இதனால் இ-ரிக்ஷாவை ஓட்ட முடியாமல் அவர்களின் வருமானம் தடைபட்டது. இதனால் ரிக்ஷா வாங்குவதற்கு வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல் குடியா மஹூர் திணறினார். இதனால் ஆத்திரமடைந்த குடியா மஹூர் சம்பவத்தன்று தனது இ-ரிக்ஷாவை ஷோரூம் கொண்டு சென்ற நிலையில் திடீரென ஆவேசமடைந்து ஷோரூம் முன்பு வைத்து இ-ரிக்ஷாவுக்கு தீ வைத்து எரித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயை அணைத்ததோடு, குடியா மஹூரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
- உள்ளாடைகளை விற்பனை செய்யும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பெண் ஒருவர் ஆச்சரியத்துடன் வீடியோ எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் இருக்கைகளுக்காக சண்டை போடுவது, கவர்ச்சியாக உடை அணிந்து செல்வது, இளம் ஜோடிகளின் அத்துமீறல் என பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி இருந்தது. ஆனால் தற்போது வைரலாகும் வீடியோவில், டெல்லி மெட்ரோவின் ரோகிணி கிழக்கு ரெயில் நிலையத்தில் சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானங்களுக்கு பதிலாக உள்ளாடைகளை விற்பனை செய்யும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதில், 3 பெரிய கண்ணாடிக் கதவுகளைக் கொண்ட இந்த எந்திரத்தில் பல்வேறு அளவுகளில் உள்ளாடைகள் அடுக்கி வைக்கப்பட்டு மின்னணு திரை மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இதனைப்பார்த்த பெண் ஒருவர் ஆச்சரியத்துடன் வீடியோ எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ வைரலாகி பார்வைகளை குவித்து வருகிறது. நெட்டிசன்கள் சிலர், அவசரத் தேவைகளுக்காகவும் குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் போன்ற இக்கட்டான காலங்களில் இது போன்ற எந்திரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பதிவிட்டுள்ளனர். சில பயனர்கள், மெட்ரோ பயணத்தின்போது உள்ளாடைகளை வாங்குவது என்பது சற்று வினோதமான முயற்சி என்று பதிவிட்டுள்ளனர்.
- ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் ஒரு பொருளை ஆர்டர் போட்டு வரவழைத்தனர்.
- பலரும் கலவையான கருத்துக்களை பதிவிட்டனர்.
"இரவு பால்கனியில் இருந்தபடி வானத்தை ரசிப்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்... ஆனால் அப்போது பால்கனி உட்புறமாக மூடிக் கொண்டால் கதவை திறக்க முடியாத அந்த வேதனை எப்படியிருக்கும் ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள்...
அதுபோல ஒரு சம்பவம் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்துள்ளது. 2 நண்பர்கள் இரவில் பால்கனியில் பொழுதை கழித்தனர். அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் வீட்டுக்குள் நுழைய முயன்றபோதுதான் பால்கனி உட்புறமாக பூட்டிக் கொண்டது தெரியவந்திருக்கிறது. வீட்டிற்குள் பெற்றோர் உறங்கிக் கொண்டிருந்தனர். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் அவர்களை எழுப்ப மனமில்லாத அவர்கள், திடீரென சாதுரியமாக செயல்பட ஆரம்பித்தார்கள்.
அவர்கள் ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் ஒரு பொருளை ஆர்டர் போட்டு வரவழைத்தனர். டெலிவரி செய்பவர் வீடு தேடி வந்தபோது அவரிடம் நடந்த சம்பவத்தை விளக்கி கூறி மாற்றுச்சாவி இருக்கும் இடத்தை சொல்லி அதன் மூலம் கதவைத் திறந்து பால்கனியில் இருந்து விடுதலை பெற்றனர்.
அவர்கள் மாடியில் இருந்து டெலிவரி ஊழியரை வரவேற்பது, அவரிடம் நிலைமையை விளக்கிச் சொல்வது, தங்களை மீட்டதும் அவருக்கு நன்றி சொல்லி சிரிப்பது போன்ற காட்சியுடனான வீடியோவை மிஹிர் கஹுகர் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டார், அவரது வீடியோ விரைவாக வைரலானது. பலரும் அவர்களது செயலுக்கு கலவையான கருத்துக்களை பதிவிட்டனர்.
- பெரிய கத்திரிக்கா, முட்டைகோஸ் போன்றவற்றை பச்சையாக சாப்பிட்டார்.
- பலரும் நகைச்சுவை கருத்துகளை பதிவிட்டனர்.
சமூக வலைதளங்களில் எப்படியாவது பிரபலமடைந்து விடவேண்டும் என்ற ஆர்வம் பலரிடமும் அதிகரித்து வருகிறது. அதற்காக எதையும் செய்யலாம் என்ற எண்ணத்திற்கு பலர் சென்றுவிடுகிறார்கள். அதற்கு திருத்தணி தாக்குதல் சம்பவம் ஒரு உதாரணம்.
அதற்கு நேர்மாறாக முற்றிலும் வேடிக்கையாக, ஒருவர் செய்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. ரெயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார் அந்த வாலிபர். திடீரென அவர் பையில் இருந்து தக்காளி சாஸ் பாக்கெட்டை எடுக்கிறார். அவர் ஏதோ சிற்றுண்டி சாப்பிடப் போகிறார் என்று சக பயணிகள் நினைத்தபோது அவர் முழு இஞ்சியை எடுத்து அதில் சாஸை ஊற்றி சாப்பிட்டார். அடுத்து ஒரு டீயை வாங்கியவர் அதில் வாழைப்பழத்தை தொட்டு சாப்பிட்டார். அதேபோல் பெரிய கத்திரிக்கா, முட்டைகோஸ் போன்றவற்றை பச்சையாக சாப்பிட்டார். இதனால் சக பயணிகள் அவரை வியப்புடன் பார்த்தனர். சிலர் சற்று முகம் சுளித்தனர்.
சமூக வலைதளங்களில் வெளியான அவரது வீடியோ, லட்சக்கணக்கானோரின் பார்வைகளையும், விருப்பங்களையும் பெற்றது. பலரும் நகைச்சுவை கருத்துகளை பதிவிட்டனர்.
- புத்தாண்டு அன்று நண்பர்கள் குழு ஒரு வீட்டிலிருந்து ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்துள்ளனர்.
- வீடியோ இணையத்தில் வைரலாகி ஏராளமானோரின் பார்வைகளையும் பெற்று வருகிறது.
ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்பவர்கள் நேரமும், சூழலும் பாராமல் வாடிக்கையாளருக்கு குறித்த நேரத்தில் பொருட்களை ஒப்படைக்க போராடுவார்கள். அதை பலரும் உணர்ந்து கொள்ளாமல் டெலிவரிபாய் என்று ஏளனமாக நினைப்பார்கள், அல்லது டிப்ஸ் எதிர்பார்ப்பார்கள் என்று சில்லறைகளை கொடுத்து அனுப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்களும் மனிதர்கள், உழைப்பாளிகள் என்று நட்புடன் கொடுக்கப்படும் மரியாதை அவர்களை நெகிழச் செய்கிறது. அதுபோன்ற நிகழ்வு பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
புத்தாண்டு அன்று நண்பர்கள் குழு ஒரு வீட்டிலிருந்து ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்துள்ளனர். அவர்கள் ஆர்டர் செய்த உணவை, குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த நபர் டெலிவரி செய்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த அவர்கள், தங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் டெலிவரி ஊழியரையும் சேர்த்துக் கொண்டனர்.
முதலில் கூச்சப்பட்டு தயங்கிய அந்த நபரை, ஒருவர் ஓடி வந்து தூக்கி நட்புடன் செயல்பட ஆரம்பித்ததும், அந்த நபரும் சந்தோஷமாக அவர்களுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கெடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ஏராளமானோரின் பார்வைகளையும் பெற்று வருகிறது.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- கடும் சூறாவளி காற்று வீசுவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தெற்கு பிரேசிலில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீட்டர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை நேற்று வீசிய பலத்த சூறாவளிக் காற்றால் கீழே விழுந்து நொறுங்கியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குவைபா நகரில் பரபரப்பான சாலையில் வாகனங்கள் தொடர்ந்து பயணிக்கும் நேரத்தில் சுதந்திர தேவி சிலை கீழே விழுந்து நொறுங்கியதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
முன்னதாக கடும் சூறாவளி காற்று வீசுவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிலையை அதே இடத்தில் நிறுவவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கடையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட அந்த கடை மேலும் பிரபலமானது.
- ஆண்கள் தரப்பில் இருந்து கண்டன கருத்துக்களும் பதிவிடப்பட்டது.
தெருவோர கடையில் அலைமோதுகிறது பெண்கள் கூட்டம். வழக்கமாக பெண்கள் டீ கடைகளிலோ, தெருவோர ஓட்டல்களிலோ ஆண்களுக்கு நிகராக நின்று சுதந்திரமாக பேசி சிரித்தபடி சாப்பிடமாட்டார்கள். ஆனால் இந்த கடையில் மட்டும் அவர்கள் சிரித்தபடி பானிபூரியை ருசிக்கிறார்கள். காரணம் அந்த கடையில் வைக்கப்பட்டிருக்கும் வித்தியாசமான பெயர் பலகைதான். "ஆண்கள் யாருக்கும் அனுமதி கிடையாது" என்று எழுதப்பட்டிருப்பதால் பெண்கள் சுதந்திரமாக உணர்கிறார்கள்.
சிலர், அந்த கடையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட அந்த கடை மேலும் பிரபலமானது. பலர் பாராட்டினாலும், ஆண்கள் தரப்பில் இருந்து கண்டன கருத்துக்களும் பதிவிடப்பட்டது. ''அந்த பானிப்பூரியை விற்பவரே ஒரு ஆண்தானே'' என்று ஒருவர் எழுதியிருந்தார். இதுகுறித்த வீடியோ பல லட்சம் பேரால் பார்வையிடப்பட்டு உள்ளது.






