என் மலர்
நீங்கள் தேடியது "வீடியோ வைரல்"
- ஒரு சில வீடியோக்கள் மட்டும் மொழி, மாநிலம் கடந்து ரசிகர்களின் அன்பை பெறுகின்றன.
- இதுவரை லட்சக்கணக்கானோரின் லைக்ஸ்களை குவித்து வைரலாகி வருகிறது.
சமூகவலைத்தளங்களில் பலரும் நடனம் மற்றும் பாடல்களை பாடி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். எனினும் எல்லா வீடியோக்களும் மக்களின் கவனம் பெறுவதில்லை. ஒரு சில வீடியோக்கள் மட்டும் மொழி, மாநிலம் கடந்து ரசிகர்களின் அன்பை பெறுகின்றன.
அந்தவகையில் ஒரு பெண் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பிரபல இந்தி பாடலான `உயி அம்மா' பாடலுக்கு சிறுமியுடன் சேர்ந்து அவர் நடனமாட அதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றினர்.
அதில் சேலை அணிந்து கொண்டு அவர் ஆடிய நடனம் பலரையும் ஈர்த்துள்ளது. இதுவரை லட்சக்கணக்கானோரின் லைக்ஸ்களை குவித்து வைரலாகி வருகிறது.
- வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவின.
- பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஈரானின் ஹோர்மோஸ் தீவில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனை தொடர்ந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் இந்த வெள்ளம் ரத்தம்போல செந்நிறத்தில் பாய்ந்தது. இந்த தண்ணீர் கடலில் கலந்ததால் கடலும் சிவப்பாக மாறியது.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவின. இதனை பார்த்த பலரும் இது என்ன ரத்த மழையா? அல்லது கடவுளின் கோபமா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஆனால் உண்மையில் இது அந்த பகுதியின் இயற்கை அதிசயம் ஆகும். அதாவது ஹோர்மோஸ் தீவில் உள்ள மண்ணில் அதிகளவு இரும்பு ஆக்சைடு இருப்பதால் இதுபோன்று ஏற்படுவதாக விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இயற்கையின் இந்த அழகை காணவே அங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவர் எனவும் அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
- கைதிகள் உரிமைகள் மீறப்பட்டதாக கடுமையான குற்றசாட்டுகள்.
- சர்ச்சைக்கு போலீசார் இதுவரை பதில் அளிக்கவில்லை.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத், போதன் நகரை சேர்ந்த வாலிபர் மீது அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் குற்றம் சாட்டப்பட்ட நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபரை போலீஸ் நிலையத்தில் உள்ள அறையில் அடைக்க வேண்டும். அதற்கு பதிலாக போலீசார் அந்த நபரின் கை கால்களில் கனமான இரும்பு சங்கிலியால் பிணைத்தனர்.
பின்னர் அந்த வாலிபரிடம் போலீஸ் நிலையம் முழுவதையும் சுத்தப்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தினர். இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்ட வாலிபர் துடைப்பத்தை கையால் பிடித்துக் கொண்டு மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து போலீஸ் நிலையம் முழுவதையும் தூய்மைப்படுத்தினார்.
அப்போது போலீஸ் நிலையத்திற்கு வந்த ஒருவர் அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இந்த காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
கைதிகள் உரிமைகள் மீறப்பட்டதாக கடுமையான குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.
இது தெலுங்கானாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்கு போலீசார் இதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- மாணவியை பிடித்து இழுத்து கழுத்தில் கத்தியால் அறுத்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சியில் பதிவாகி இருந்தது.
- இந்த வீடியோ தற்போது சமூக வளைதலைங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசித்து வருபவர் நவீன் குமார் (21). பெயிண்டராக வேலை செய்து வரும் இவர் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட 4 வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் சத்திய மங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவரை நவீன்குமார் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மாணவியின் பின்னால் சுற்றி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரில், நவீன்குமாரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர். இதையடுத்து ஜாமீனில் வெளிவந்த நவீன்குமார், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார்.
இதில் மாணவியின் கழுத்தில் 6 இடங்களில் கத்தி குத்து விழுந்தது. வலியால் அலறித்துடித்த மாணவியின் குரலை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே நவீன்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை அங்கிரு ந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நம்பியூரில் வைத்து நவீன்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மாணவி பின்னால் நவீன் செல்லும் காட்சி, மாணவியை பிடித்து இழுத்து கழுத்தில் கத்தியால் அறுத்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சியில் பதிவாகி இருந்தது.
இந்த வீடியோ தற்போது சமூக வளைதலைங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மாணவி பெருந்து றையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- சுமார் 16 வினாடிகள் கொண்ட வீடியோவில், வாலிபர் காளையின் மீது அமர்ந்து ரிஷிகேசில் உள்ள தெருக்களில் சவாரி செய்கிறார்.
- வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
குடிமகன்களின் சேட்டைகள் சில நேரம் சிரிப்பை வரவழைக்கும். சில சம்பவங்கள் ஆத்திரத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் பகுதியில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் காளை மீது ஏறி சவாரி செய்வது போன்று காட்சிகள் பதிவாகி உள்ளது.
சுமார் 16 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், வாலிபர் காளையின் மீது அமர்ந்து ரிஷிகேசில் உள்ள தெருக்களில் சவாரி செய்கிறார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்தனர். மேலும் அவருக்கு அறிவுரை வழங்கி, இனி இது போல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
- வாலிபர் தனது மோட்டார் சைக்கிள் சாவியில் உள்ள கத்தியை எடுத்து பஸ் டிரைவரை குத்த முயன்றார்.
- சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் பைபாஸ் சாலை வழியாக மினி பஸ் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு வந்தது. அந்த பஸ்சின் முன்னால் மோட்டார் சைக்கிளிலில் தனியார் உணவு டெலிவரி வாலிபர் ஒருவர் சென்றார். அப்போது வாலிபர் மினி பஸ்சுக்கு வழிவிடாமல் சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து மினி பஸ் டிரைவர், உணவு டெலிவரி வாலிபர் சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு பஸ் டிரைவர் ஏன் வழிவிடாமல் மோட்டார் சைக்கிளில் சென்றாய் என்று தனியார் உணவு டெலிவரி வாலிபரிடம் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர் உடனே பஸ் டிரைவரிடம் வாக்குவாத த்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் தகராறாக மாறியது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். மேலும் உணவு டெலிவரி வாலிபர் தனது மோட்டார் சைக்கிள் சாவியில் உள்ள கத்தியை எடுத்து பஸ் டிரைவரை குத்த முயன்றார்.
இதை பார்த்த பஸ் நிலையத்தில் அருகில் இருந்தவர்கள் இவர்களை பிடித்து சமாதானப்படுத்தி விலக்கிவிட்டனர். இந்நிலையில் இவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை யிடும் காட்சியை அங்கிரு ந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலை தளங்கலில் வெளி யிட்டனர். இந்த வைரலான வீடியோ காட்சி மூலம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொள்ள உத்தர விட்டார். உத்தரவின்பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மினி பஸ்சை ஓட்டி வந்தது சிதம்பரம் அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் (வயது 35) என்பதும், தனியார் உணவு டெலிவரி வாலிபர்கோவிந்தசாமி பகுதியை சேர்ந்த கணேஷ் (41) என்பதும் தெரிய வந்தது. பின்னர் இவர்களிடம் போலீசார் இதுபோன்ற செயல்களில் ஈடுபட க்கூடாது என்றும், மேலும் இதுபோன்று பொது மக்களுக்கு இடையூராக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டால் உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.
- இந்த காட்சிகள் அனைத்தும் அப்ப குதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது.
- இருவரின் அடையாளம் மற்றும் அவர்கள் வந்த இருசக்கர வாகனம் ஆகியவை தெளிவாக தெரிகிறது.
குழித்துறை :
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பனவிளை பகுதியை சேர்ந்தவர் அஜின் (வயது 35). இவர் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சமீபம், போலீஸ் நிலைய சந்திப்பில் உள்ள பிரபல நகைக்கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த 10-ந்தேதி கடையின் முன்பு மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை அதிகாலையில் நிறுத்தி விட்டு பணிக்கு சென்றுள்ளார்.
அங்கு மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள், அஜினின் இரு சக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து, கள்ள சாவியை போட்டு திறக்க முயற்சிக் கின்றனர். ஆனால் அந்த வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியாமல் இருவரும் ½ மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அந்த இருசக்கர வாகனத்தை அங்கிருந்து எடுத்துச்செல்கின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அப்ப குதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ கட்சிகள் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இருவரின் அடையாளம் மற்றும் அவர்கள் வந்த இருசக்கர வாகனம் ஆகியவை தெளிவாக தெரிகிறது. ஆனால் அவர்கள் இதுவரை கைது செய்யப்பட வில்லை.
மேலும் 2, 3 மாதங்களில் மார்த்தாண்டம் மேம்பா லத்தின் அடிப்பகுதியிலிருந்து ஏராளமான இருசக்கர வாகனங்கள் திருட்டு சென் றுள்ளன. ஆனால் குற்ற வாளிகள் கைது செய்யப்பட வில்லை. மார்த்தாண்டத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி.கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஆனால் கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக திருட்டு வேலைகளில் ஈடுபடுவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. மேலும் தொடர்ந்து மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு மற்றும் இரு சக்கர வாகன திருட்டுகளை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மம்முட்டியின் ரசிகர்கள் உள்பட பலரும் சனோஜூக்கு கண்டனம் தெரிவித்தனர்.
- தான் அன்றைய தினம் மது போதையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் வரும் புத்தாண்டில் நிகழ வேண்டிய மாற்றங்கள் என்ற தலைப்பில் ஒரு யூடியூப் சேனல் நிகழ்ச்சி நடத்தியது. இதில் பங்கேற்ற சனோஜ் என்பவர், நடிகர் மம்முட்டி இறக்க வேண்டும் என்று பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. மம்முட்டியின் ரசிகர்கள் உள்பட பலரும் சனோஜூக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு சனோஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தான் அன்றைய தினம் மது போதையில் இருந்ததாக தெரிவித்துள்ளார். தான் 2 நாட்களாக தூங்கவில்லை என்றும், தனது செயலுக்காக மம்முட்டி, அவரது மகன் மற்றும் குடும்பத்தினர், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
- அஜித் சினிமா நடிப்பு மட்டுமின்றி, புகைப்படம் எடுத்தல்,கார்கள், பைக்குகள் ஓட்டுதல் மிக ஆர்வம் உள்ளவர். மேலும் சிக்கன் பிரியாணி செய்வதில் 'ஸ்பெஷலிஸ்ட்'
- அவரது ருசியான பிரியாணி பலரையும்ஆச்சரிய படுத்தி உள்ளது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார்.'தல' என அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
அஜித் சினிமா நடிப்பு மட்டுமின்றி, புகைப்படம் எடுத்தல்,கார்கள், பைக்குகள் ஓட்டுதல் மற்றும் சமையல் உள்ளிட்டசெயல்பாடுகளில் மிக ஆர்வம்உள்ளவர். மேலும் சிக்கன் பிரியாணி செய்வதில் 'ஸ்பெஷலிஸ்ட்' . அவரது ருசியான பிரியாணி பலரையும்ஆச்சரிய படுத்தி உள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது மத்திய பிரதேசத்தில் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்று உள்ளார்.'விடாமுயற்சி' நட்பால் நடிகர் ஆரவும் இந்த சுற்றுப் பயணத்தில் அவருடன் இணைந்து உள்ளார்.
ஒரு அடர்ந்த காட்டில் நடிகர் அஜித் கேஸ் அடுப்பில் ஒரு அண்டாவில் சிக்கன் பிரியாணி சமைத்து அவரது நண்பர்களுக்கு வழங்கி மகிழ்ந்து உள்ளார். தற்போது அந்த பிரியாணி சமையல் வீடியோ, புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

மேலும் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதனை ரசிகர்கள் பார்த்து வியப்படைந்து வருகின்றனர்
நடிகர் அஜித் சிக்கன் பிரியாணி தயாரிப்பதில் வல்லவர். அவர் தயாரித்த பிரியாணியை சாப்பிட்ட பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அதனை பாராட்டி உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வீடியோ எடுத்துக் கொண்டிருந்த வாலிபர் மீது சிலிண்டரின் பாகம் பட்டு உயிரிழப்பு.
- தீ விபத்தால், தீ பரவி அருகில் இருந்த டீக்கடை, 3 சக்கர வாகனம் நாசம்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், கான்பூரில் உள்ள தாபாவில், பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
விபத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த வாலிபர் மீது சிலிண்டரின் பாகம் பட்டு, உயிரிழந்தார்.
இந்த தீ விபத்தால், தீ பரவி அருகில் இருந்த டீக்கடை, 3 சக்கர வாகனம் ஆகியவையும் எரிந்து சாம்பலானது.
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக பில்ஹூர் மருத்துவுமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தீ விபத்து ஏற்பட்டபோது, உயிரிழந்த நபர் எடுத்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தந்தையை மகன் அடித்து கொன்று வீடியோ வெளியாகி பரபரப்பானது.
- டிஜிபி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் மீது வழக்குப் பதிவு செய்ய டிஜிபி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வாழும் அமிர்தா சேகோ தொழிற்சாலை நிறுவனர் திரு. குழந்தை வேலு அவர்களை அவரது மகன் சந்தோஷ் சொத்திற்காக அடித்து உதைத்து கொடுமை படுத்தும் காட்சிகள். தாக்குதலுக்கு ஆளான திரு. குழந்தை வேலு அவர்கள் கடந்த 21.04.2024 அன்று இறந்து விட்டார். காவல்துறை சந்தோஷ் மீது எவ்வித வழக்கையும் இதுவரை பதிவு செய்யவில்லை. ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டு வழக்கை பதிவு செய்யாமல் ஒரு கொடும் படுகொலையை மூடி மறைக்க பார்க்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்தது.
தந்தையை மகன் அடித்து கொன்று வீடியோ வெளியாகி பரபரப்பானது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக சமூக வலைதளங்கள் தகவல் பரவியது.
இந்தச் செய்தி டிஜிபி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அதிகாரிகளை அழைத்து வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டு, தற்போது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
- சகோதரியின் திருமணத்திற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் குடும்பத்தில் இந்த சோகம் ஏற்பட்டது
சிறுவயதிலேயே மாரடைப்பு ஏற்படுவது இந்த காலக்கட்டத்தில் அதிகரித்திருப்பது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. சமீபகாலமாக 'மாரடைப்பு' காரணமாக வாலிபர்கள், சிறுவர்கள், பெண்கள் என அனைத்து வயது தரப்பிரனரும் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏராளம் அரங்கேறி வருகிறது.
முன்னதாக, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது இளைஞர் ஒருவர் மாரடைப்பால் இறந்தார். பல பிரபலங்களும் சமீபத்தில் மாரடைப்பால் இறந்தனர்.
இந்நிலையில் உத்தர பிரதேசம் மாநிலம் மீரட்டில் தனது சகோதரியின் ஹல்டி விழாவில் நடனமாடும்போது ரிம்ஷா என்ற 18 வயது சிறுமி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
சகோதரியின் ஹல்டி நிகழ்ச்சியில் ரிம்ஷா தனது சக தோழிகள் மற்றும் சிறுவர்களுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. சற்று தடுமாறி பிறகு மீண்டும் நடனத்தில் ஈடுப்பட்டார். பின்னர் நெஞ்சை பிடித்தவாரு தரையில் விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு ரிம்ஷாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரிம்ஷா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதை கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
சகோதரியின் திருமணத்திற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் குடும்பத்தில் இந்த சோகம் ஏற்பட்டது அந்த பகுதியில் உள்ள அனைவனையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஹல்டி நிகழ்ச்சியில் மாரடைப்பால் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சிறுமியின் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.