என் மலர்
நீங்கள் தேடியது "ஆட்டோ டிரைவர்"
- தனது குழந்தைகளுடன் அந்த இளம்பெண், அனீசுடன் விடுதி அறையில் தங்கினார்.
- இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த அந்த இளம்பெண், அதனை வெளியே கூறாமல் அப்படியே மூடி மறைத்துவிட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மாதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனீஷ்(வயது40). ஆட்டோ டிரைவரான இவருக்கு சமூக வலைதளத்தின் மூலமாக இளம்பெண் ஒருவர் அறிமுகமானார். அந்த பெண்ணுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
இருந்தபோதிலும் அந்த இளம்பெண்ணுடன் அனீஷ் பழகி வந்தார். நாளடைவில் அது கள்ளத்தொடர்பாக மாறியது. இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் அனீஷ், அந்த இளம்பெண்ணை அந்தூர் நகராட்சிக்குட்பட்ட பரசினிக்கடவு பகுதிக்கு அழைத்திருக்கிறார்.
அதன்படி அந்த இளம்பெண், 2 மகள்கள் உள்பட 3 குழந்தைகளுடன் அங்கு சென்றார். இளம்பெண்ணின் மூத்த மகள் பிளஸ்-2 வும், இரண்டாவது மகள் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தனது குழந்தைகளுடன் அந்த இளம்பெண், அனீசுடன் விடுதி அறையில் தங்கினார்.
இரவில் அனைவரும் ஒரே அறையில் படுத்து தூங்கினர். அப்போது அதிகாலை 2 மணியளவில், 9-ம் வகுப்பு படிக்கும் இளம்பெண்ணின் 14 வயது மகளை அனீஷ் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை மூத்த மகளான 12-ம் வகுப்பு மாணவி பார்த்து விட்டார்.
அதுபற்றி அவர் தனது தாயிடம் கூறினார். ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த அந்த இளம்பெண், அதனை வெளியே கூறாமல் அப்படியே மூடி மறைத்துவிட்டார். இருந்தபோதிலும் தனக்கு நடந்த கொடுமையை மறக்க முடியாத சிறுமி, அதுபற்றி தன்னுடைய வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்தார்.
அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து "சைல்டுலைன்" அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அதுபற்றி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஆட்டோ டிரைவர் அனீசை கைது செய்தனர்.
அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கள்ளக்காதலியுடன் விடுதியில் தங்கியிருந்த போது, அவரது மகளையே கள்ளக்காதலன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆட்டோ டிரைவரும், சினேகாவும் மோதலில் ஈடுபட்டனர்.
- இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கினர்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி மாநில செயலாளராக இருப்பவர் சினேகா (வயது 32). இவர், நேற்று தனது தோழியுடன் வாடகை ஆட்டோவில் பயணம் செய்தார்.
அப்போது ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி சென்றது குறித்து சினேகா கேள்வி எழுப்பி உள்ளார். இதையடுத்து டிரைவர் பிரசாத்துக்கும், சினேகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த சமயத்தில் சினேகா ஆட்டோ சாவியை பறிக்க முயன்றார். அப்போது ஆட்டோ டிரைவரும், சினேகாவும் மோதலில் ஈடுபட்டனர். இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கினர். அந்த வழியாக வந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இருந்தபோதிலும் இருவரும் தாக்குதலை கைவிடவில்லை.
சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மயிலாப்பூர் போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சினேகா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் பிரசாத்தை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து ஆட்டோ டிரைவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சினேகா மற்றும் அவரது தோழியுமே ஆட்டோ டிரைவர் பிரசாத்தை முதலில் ஒருமையில் திட்டி அவதூறாக பேசினர் என்பதும், அதன் பேரில் பிரசாத் அவர்களை ஆட்டோவிலிருந்து இறங்க சொன்னதும் தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோ டிரைவர் பிரசாத்திடம் புகார் பெறப்பட்டு சினேகா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- அதிகப்படியான பைகள் வந்தால் அதனை பாதுகாப்பாக வைத்திருக்க போலீஸ் அதிகாரி ஒருவருடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
- பட்டப்படிப்பு படிக்காமலேயே மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் அவரது திறமையை பலரும் பாராட்டினர்.
மும்பையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பாதிப்பதாக அதிகாரி ஒருவர் சமூக வலைதளத்தில் செய்த பதிவு பேசுபொருளாகி உள்ளது.
பிரபல நிறுவனமான லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராகுல்ரூபானி தனது லிங்க்டு -இன் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்த வாரம் விசா விண்ணப்பிக்க அமெரிக்க தூதரகம் சென்றேன். அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் எனது பையை உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது அங்கிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், பையை என்னிடம் தாருங்கள். நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். அதற்கு ரூ.1,000 கட்டணம் என்றார். முதலில் நான் தயங்கினேன். ஆனாலும் வேறு வழியின்றி அவரிடம் கொடுத்துவிட்டு சென்றேன். பிறகு தான் தெரிந்தது. இது அற்புதமான வணிகம் என்று. அந்த டிரைவர் தினமும் 20 முதல் 30 பேரின் உடமைகளை தனது ஆட்டோவில் பாதுகாக்கிறார்.
இதன்மூலம் அவருக்கு மாதம் ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என்று கருதுகிறேன். ஆட்டோ ஓட்டாமலேயே அவர் நன்றாக சம்பாதிக்கிறார் என பதிவிட்டுள்ளார். மேலும் அதிகப்படியான பைகள் வந்தால் அதனை பாதுகாப்பாக வைத்திருக்க போலீஸ் அதிகாரி ஒருவருடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த போலீஸ் அதிகாரிக்கு சிறிய லாக்கர் வசதி இருக்கிறது. இதனால் பைகளை பாதுகாப்பாக வைத்து கொடுக்கிறார் என கூறியுள்ளார். அவரது இந்த பதிவு வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டனர். பட்டப்படிப்பு படிக்காமலேயே மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் அவரது திறமையை பலரும் பாராட்டினர்.
- ஆட்டோ டிரைவர் மின்னல் வேகத்தில் பெண்களை பின் தொடர்வதை கண்டு அந்த நண்பர்களும் அந்த வழியாக சென்றனர்.
- இரு பெண்கள் சென்ற மொபட்டை இடித்து சாலையில் தள்ளிய ஆட்டோ நிற்காமல் சென்று விட்டது.
சேலம்:
சேலம் மாநகரில் அழகாபுரம், அஸ்தம்பட்டி, வின்சென்ட், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ஜங்சன், 4 ரோடு, 5 ரோடு, செவ்வாய்ப்பேட்டை, குகை, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை இருசக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும்.
இந்த நிலையில் சேலம் மாநகரில் வின்சென்ட் பிரதான சாலையில் ஆட்டோ ஒன்று தாறுமாறாக செல்வதை கண்டு அந்த வழியாக மொபட் ஓட்டிச்சென்ற பெண்கள் கையை நீட்டி சத்தம் போட்டுள்ளனர்.
இதனால் திரும்பி வந்த ஆட்டோ டிரைவர் தன்னை சத்தம் போட்ட பெண்கள் சென்ற மொபட்டை வழிமறித்து வம்பு செய்தார். மேலும் அந்த பெண்களை நோக்கி ஆபாசமாக பேசி எச்சரித்ததோடு அவர்களை செல்லவிடாமலும் தடுத்தார். மற்ற வாகன ஓட்டிகள் ஆட்டோ ஓட்டுனரை சத்தம் போட்டு வழிவிட செய்தனர். இதனையடுத்து இரு பெண்களும் அங்கிருந்து சென்றனர்.
ஆனாலும் ஆத்திரம் அடங்காத அந்த ஆட்டோ டிரைவர், அந்தப் பெண்களின் மொபட்டை பின் தொடர்ந்து சென்றார். இந்த காட்சிகளை மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற நண்பர்கள் செல்போனில் படம் பிடித்துச்சென்றனர்.
ஆட்டோ டிரைவர் மின்னல் வேகத்தில் அந்த பெண்களை பின் தொடர்வதை கண்டு அந்த நண்பர்களும் அந்த வழியாக சென்றனர். அதற்குள்ளாக அந்த இரு பெண்கள் சென்ற மொபட்டை இடித்து சாலையில் தள்ளிய ஆட்டோ நிற்காமல் சென்று விட்டது.
கீழே விழுந்ததால் கைகளில் சிராய்ப்பு காயங்களுடன் அவதிப்பட்ட இரு பெண்களையும் அங்கிருந்த பெண்கள் மீட்டு அசுவாசப்படுத்திக் கொண்டிருந்தனர். புத்தி சொன்ன பெண்களை பழிவாங்கும் நோக்கில் பட்டப்பகலில் பின் தொடர்ந்து சென்று ஆட்டோவால் மோதி சாய்த்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், இளம்பெண்களை இடித்துச்சென்ற ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.
- போலீசாருக்கும் ஆட்டோ டிரைவருக்கும் இடையே வாக்குவாதம்
- போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோவை நிறுத்தி இருந்ததாக ரூ.2 ஆயிரம் அபராதம் விதிப்பு.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்துக்கு இடை யூறாக நிற்கும் வாகனங்க ளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பீச் ரோடு பகுதியில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஆட்டோ டிரைவர் காந்தி என்பவர் தனது ஆட்டோவை அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் முன்பு நிறுத்தி இருந்தார்.போக்குவரத்துக்கு இடை யூறாக இருப்பதாக கூறி போலீசார் அந்த ஆட்டோவை அங்கிருந்து ஓரமாக நிறுத்துமாறு கூறிய தாக தெரிகிறது.அப்போது போலீசாருக்கும் ஆட்டோ டிரைவர் காந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது.
இதையடுத்து போக்கு வரத்துக்கு இடையூறாக ஆட்டோவை நிறுத்தி இருந்த தாக காந்திக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதை கண்டித்து ஆட்டோ டிரைவர் காந்தி தனது மனைவி மகனுடன் மாலையில் பீச் ரோடு சந்திப்பில் மண்எண்ணை கேனுடன் வந்து நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தற்கொலை செய்து கொள்ளப் போவ தாகவும் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதற்கு இடையில் அங்கு போக்குவரத்து பணியில் இருந்த போக்குவரத்து பிரிவு போலீஸ்ஏட்டு முத்து சங்கர் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆட்டோ டிரைவர் காந்தி மீது கோட்டார் போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து ஆட்டோ டிரைவர் காந்தி மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- கருங்கல் போலீசார் ஆட்டோ டிரைவரிடம் எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே பாலப் பள்ளம் ஒற்றப்பனவி ளையை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி சிவஜோதி (வயது 35). இவர் மார்த்தாண்டத்தில் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ம் தேதி வேலை முடிந்து சிவஜோதி வீட்டிற்கு வரும் வழியில் சேவிளையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மரியதாஸ் (56) என்பவர் தகராறு செய்தார்.
இது குறித்து சிவஜோதி கருங்கல் போலீசில் புகார் செய்தார்.கருங்கல் போலீசார் மரியதாசிடம் எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிவஜோதி ஒற்றப்பனவிளையில் சென்றுக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த மரியதாஸ் மீண்டும் சிவஜோதியை தகாத வார்த்தையால் திட்டி தகராறு செய்தார். இது குறித்து சிவஜோதி குளச்சல் போலீசில் புகார் செய்தார். குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரியதாசை கைது செய்தனர்.
- பெண் பயணி தவறவிட்ட பணத்தை ஆட்டோ டிரைவர் போலீசில் ஒப்படைத்தார்.
- தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணி வித்தனர்.
மதுரை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரெங்கநாதன் என்பவரின் மனைவி லதா. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் துக்கம் விசாரிக்க மதுரைக்கு வந்துள்ளார். அவர் தனது உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு திரும்பிய போது அவர் வைத்திருந்த பணப்பையை ஆட்ேடாவில் விட்டு விட்டுச் சென்று விட்டார்.
பின்னர் அவர் வீட்டுக்கு சென்றதும் ஆட்டோவில் பணப்பையை தவறவிட்டது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் பயணம் செய்த ஆட்டோவின் பதிவு எண் பற்றி எதுவும் அவருக்கு தெரியவில்லை. அதனால் எப்படி ஆட்டோவை கண்டு பிடிப்பது? என குழப்பம் அடைந்தார்.
இந்த நிலையில் பயணி யின் பணப்பையை கண்டெ டுத்த ஆட்டோ டிரைவர் பாண்டி என்பவர் அதனை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனை போலீசார் சோதனை செய்து பார்த்த போது அதில் ஒரு ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. போலீசார் ஏ.டி.எம். கார்டு மூலம் ஆய்வு செய்து ஆட்டோவில் பயணம் செய்த பெண் பயணியின் முகவரியை கண்டுபிடித்தனர். பின்னர் பணத்தை தவற விட்ட பயணிக்கு தகவல் தெரி வித்தனர்.
அதன்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு வந்த அந்த அந்த பயணியின் கணவர் ரெங்கநாதனிடம் போலீசார் முன்னிலையில் ஆட்டோ டிரைவர் பணப்பையை ஒப்படைத்தார். பெண் பயணி தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணிவித்தனர்.
- பெண் பயணி தவறவிட்ட பணத்தை ஆட்டோ டிரைவர் போலீசில் ஒப்படைத்தார்.
- தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணி வித்தனர்.
மதுரை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரெங்கநாதன் என்பவரின் மனைவி லதா. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் துக்கம் விசாரிக்க மதுரைக்கு வந்துள்ளார். அவர் தனது உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு திரும்பிய போது அவர் வைத்திருந்த பணப்பையை ஆட்ேடாவில் விட்டு விட்டுச் சென்று விட்டார்.
பின்னர் அவர் வீட்டுக்கு சென்றதும் ஆட்டோவில் பணப்பையை தவறவிட்டது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் பயணம் செய்த ஆட்டோவின் பதிவு எண் பற்றி எதுவும் அவருக்கு தெரியவில்லை. அதனால் எப்படி ஆட்டோவை கண்டு பிடிப்பது? என குழப்பம் அடைந்தார்.
இந்த நிலையில் பயணி யின் பணப்பையை கண்டெ டுத்த ஆட்டோ டிரைவர் பாண்டி என்பவர் அதனை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனை போலீசார் சோதனை செய்து பார்த்த போது அதில் ஒரு ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. போலீசார் ஏ.டி.எம். கார்டு மூலம் ஆய்வு செய்து ஆட்டோவில் பயணம் செய்த பெண் பயணியின் முகவரியை கண்டுபிடித்தனர். பின்னர் பணத்தை தவற விட்ட பயணிக்கு தகவல் தெரி வித்தனர்.
அதன்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு வந்த அந்த அந்த பயணியின் கணவர் ரெங்கநாதனிடம் போலீசார் முன்னிலையில் ஆட்டோ டிரைவர் பணப்பையை ஒப்படைத்தார். பெண் பயணி தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணிவித்தனர்.
- .எஸ்சி. நர்சிங்படித்து வருகிறார்.சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற அந்த மாணவி திடீரென மாயமனார்.
- கரும்புதோட்டத்தில்பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவர்சரண்ராஜை சுற்றிவளைத்துபிடித்தனர்.
கடலூர்:
விழுப்புரம் அருகே உள்ளநரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பண்ருட்டியில் உள்ள தனியார் கல்லூரியில்பி.எஸ்சி. நர்சிங்படித்து வருகிறார்.சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற அந்த மாணவி திடீரென மாயமனார்.இதுகுறித்து மாணவியின்பெற்றோர், பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார்செய்தனர். அந்தபுகாரில், தங்களது மகள் பண்ருட்டி எல்.என்.புரம்அய்யனார் கோவில் வழியாக கல்லூரிக்கு சென்று வருவார்அப்போது அதேபகுதியை சேர்ந்த சரண்ராஜ் ( 22 ) என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றுவிட்டதாக கூறியிருந்தனர்.
அதன்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்தங்கவேலு ஆகியோர்வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற சரண்ராஜ் என்பவரையும் தேடி வந்தனர்.அதனை தொடர்ந்து பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டார்.அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு தலைமையி லானதனிப்படை போலீசார் விசாரரணை நடத்தினர். அப்போது 2 பேரும் தஞ்சையில் இருப்பது தெரிய வந்தது. உடனே பொலீசார் தஞ்சை விரைந்தனர்.அங்கு கரும்புதோட்டத்தில்பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவர்சரண்ராஜை சுற்றிவளைத்துபிடித்தனர்.விசாரணையில் சரண்ராஜ்க்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது. இது போன்று ஆட்டோ டிரைவர் பல பெண்களின் விளையாடியதும் தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து போக்சோவில் சரண்ராஜை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவியை மீட்டு பண்ருட்டி அழைத்து வந்தனர்அதன்பின்னர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்வள்ளி, சப்.இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் கடத்தப்பட்ட கல்லூரிமாணவியிடம்விசாரணைநடத்தினர். பின்னர் மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தி மகளிர் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
- ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
- சி.சி.டிவி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு
நாகர்கோவில்:
நாகர்கோவில் ராமன் புதூர் கார்மல் தெருவை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (வயது 54), ஆட்டோ டிரைவர்.
இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டி லிருந்து சவாரிக்கு செல்வ தாக மனைவி மேரி லதா விடம் கூறிவிட்டு சென் றார். பின்னர் இரவு வீடு திரும்பவில்லை. இதை யடுத்து அவரது மனைவி மேரிலதா கிறிஸ்துராஜை செல்போனில் தொடர்பு கொண்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
கிறிஸ்துராஜ் மாயமானது குறித்து மேரிலதா நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கிறிஸ்துராஜ் ஆசா ரிப்பள்ளம் இந்திரா நகர் பகுதியில் ரோட்டோரத்தில் ரத்த காயங்களுடன் கிடப் பதாக நேசமணி நகர் போலீ சுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
காயங்களுடன் கிடந்த கிறிஸ்துராஜை மீட்டு சிகிச் சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது .
கிறிஸ்துராஜ் ரத்த காயங் களுடன் கிடந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது ஆட்டோவையும் போலீசார் மீட்டு நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். கிருஷ்ணராஜை தாக்கியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சவாரிக்கு அழைத்து சென்று கிறிஸ்துராஜை யாராவது தாக்கினார்களா? முன் விரோதம் காரணமாக தாக்கப்பட்டாரா? வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசா ரணை நடத்தப்பட்டு வரு கிறது. கிறிஸ்துராஜ் ரத்த காயங்களுடன் கிடந்த பகுதி யில் உள்ள சி.சி.டிவி. கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கன்னியாகுமாரி, பிப்.26-
நாகர்கோவில் ராமன் புதூர் கார்மல் தெரு பகுதி யைச் சேர்ந்தவர் கிறிஸ்து ராஜ் (வயது 54), ஆட்டோ டிரைவர்.
இவர் கடந்த 16-ந்தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி மேரி லதா, நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலை யில் கிறிஸ்துராஜ் ஆசாரி பள்ளம் இந்திராநகர் பகுதியில் காயங்களுடன் கிடந்தார். போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த கிறிஸ்துராஜ் பரிதாபமாக இறந்தார். கிறிஸ்துராஜின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கிறிஸ்துராஜை கொலை செய்தவர்களை கைது செய்தால் மட்டுமே அவரது உடலை பெற்றுக் கொள்வோம் என்று தெரி வித்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். குற்ற வாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட் டது. தனிப்படை போலீ சார் அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்த னர். மேலும் செல் போன் உதவியுடனும் துப்பு துலக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது வடக்கு கோணம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (21) என்பவரை போலீசார் பிடித்தனர். பிடிபட்டவரிடம் விசாரனை நடத்திய போது கிறிஸ்துராஜை தாக்கியதை ஒப்புக் கொண்டார்.இதையடுத்து போலீசார் அருண்குமாரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அருண்குமார் போலீசாரிடம் கூறியதாவது:-
நான் கொத்தனாராக வேலை பார்த்து வரு கிறேன். சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள மதுக்கடைக்கு கிறிஸ்து ராஜை அழைத்து சென்றேன். பின்னர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது ஆட்டோவிற்கு வாடகை கொடுப்பதற்காக என்னிடம் உள்ள பணத்தை அவரிடம் கொடுத்தேன். அவர் தனது பர்ஸ்சை எடுத்து சில்லறை எடுத்தபோது அவரது பர்சில் அதிகமான பணம் இருந்தது.
இதையடுத்து அவரிடம் உள்ள பணத்தை எடுக்க திட்டம் தீட்டினேன். உடனே கிறிஸ்துராஜிடம் வாட்டர் கேன் எடுக்க வேண்டும் என்று கூறி ஆசாரிப்பள்ளம் இந்திரா நகர் பகுதிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரது பர்சை பறிக்க முயன்றேன். ஆனால் அவர் பர்சை விடவில்லை. இறுக்கமாக பிடித்துக் கொண்டார். இதையடுத்து அவரது கழுத்தை பிடித்து நெரித்தேன். அவர் என்னிடமிருந்து தப்பி ஓட முயன்றார். துரத்தி சென்று அவரை தாக்கினேன். அப்போது கீழே விழுந்தார். பின்னர் எனது காலால் அவரது கழுத்தில் மிதித்தேன். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விட்டார். பின்னர் பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து எனது தந்தைக்கு போன் செய்தேன். அவர் என்னை வந்து அழைத்து சென்றார். நான் தாக்கியதில் கிறிஸ்துராஜ் இறந்து விடுவார் என்று எதிர் பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறி னார்.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் அருண்குமாரின் தந்தை தங்கராஜிடமும் விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் அவரை கைது செய்த போலீசார் அருண்குமார், தங்கராஜ் இருவரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- கள்ளக்காதல் விவகாரம் வம்சிக்கு தெரிய வந்ததால் தனது மனைவியை கண்டித்தார்.
- தாய் வீட்டிற்கு செல்வதாக வம்சியிடம் கூறிவிட்டு சென்ற மனைவி மீண்டும் திரும்பி வரவில்லை.
திருப்பதி:
திருப்பதி மாவட்டம், ரங்கம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வம்சி. ஆட்டோ டிரைவர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் வம்சிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருப்பதி அருகே உள்ள முஸ்லிம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் அன்வர். இவர் தனது ஆட்டோவை வம்சிக்கு வாடகைக்கு கொடுத்து இருந்தார். இதனால் அன்வர் வம்சியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது வம்சியின் மனைவிக்கும் அன்வருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
கள்ளக்காதல் விவகாரம் வம்சிக்கு தெரிய வந்ததால் தனது மனைவியை கண்டித்தார்.
கடந்த மாதம் தனது தாய் வீட்டிற்கு செல்வதாக வம்சியிடம் கூறிவிட்டு சென்ற மனைவி மீண்டும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது தனது மனைவி அன்வருடன் குடும்பம் நடத்தி வருவது வம்சிக்கு தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வம்சி உள்ளூரில் வசிக்க பிடிக்காமல் பெங்களூருக்கு சென்று ஆட்டோ ஓட்டி வந்தார்.
அப்போது அன்வர் வம்சியின் மனைவியுடன் இருக்கும் போட்டோக்கள் பேஸ்புக்கில் பதிவிடப்பட்டு இருந்தது. இதனை கண்ட வம்சி இருவரும் இறந்துவிட்டதாகவும் உங்களுடைய ஆன்மா சாந்தி அடையட்டும் ரிப்ஸ் என பதிவிட்டு இருந்தார்.
இதனை கண்டு ஆத்திரமடைந்த அன்வர் கடந்த மாதம் 8-ந் தேதி பெங்களூருக்கு சென்று வம்சியை கடத்தி திருப்பதிக்கு கொண்டு வந்தார். மறுநாள் திருப்பதி அருகே உள்ள ராயலாபுரத்தில் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று வம்சிக்கு மொட்டை அடித்தார்.
வம்சிக்கு மொட்டை அடிக்கும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவவிட்டார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் வம்சிக்கு மொட்டை அடித்து கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கருதி ஆட்டோ டிரைவர்கள் போலீசில் புகார் செய்தனர். ஆனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வம்சி பெங்களூரில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.






