search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் அருகே பெண்ணிடம் தகராறு செய்த ஆட்டோ டிரைவர் கைது
    X

    கோப்பு படம் 

    குளச்சல் அருகே பெண்ணிடம் தகராறு செய்த ஆட்டோ டிரைவர் கைது

    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • கருங்கல் போலீசார் ஆட்டோ டிரைவரிடம் எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே பாலப் பள்ளம் ஒற்றப்பனவி ளையை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி சிவஜோதி (வயது 35). இவர் மார்த்தாண்டத்தில் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ம் தேதி வேலை முடிந்து சிவஜோதி வீட்டிற்கு வரும் வழியில் சேவிளையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மரியதாஸ் (56) என்பவர் தகராறு செய்தார்.

    இது குறித்து சிவஜோதி கருங்கல் போலீசில் புகார் செய்தார்.கருங்கல் போலீசார் மரியதாசிடம் எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிவஜோதி ஒற்றப்பனவிளையில் சென்றுக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த மரியதாஸ் மீண்டும் சிவஜோதியை தகாத வார்த்தையால் திட்டி தகராறு செய்தார். இது குறித்து சிவஜோதி குளச்சல் போலீசில் புகார் செய்தார். குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரியதாசை கைது செய்தனர்.

    Next Story
    ×