என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகராறு"

    • குப்பை கொட்டும் தகராறில் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான பூபதியை ஆத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் வசிக்கும் அனிதா என்பவர் பக்கத்து வீட்டு அருகே குப்பை கொட்டியதால் அவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் மோதல் ஏற்பட்டது.

    குப்பை கொட்டியதில் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் பூபதி அவரது உறவினரை வைத்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றி உள்ளார். இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் பெண்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த தகராறு தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் என்பவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் குப்பை கொட்டும் தகராறில் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பாலமுருகன், அவரது மனைவி செல்வி, உறவினர் அன்பரசி கைது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    லாரியை ஏற்றி கொல்ல முயன்ற பாலமுருகன், அவரை தூண்டிவிட்ட அன்பரசி, பூபதி, கதிரவன் ஆகியோர் மீது கொலை முயற்சி, பொதுச்சொத்து சேதம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான பூபதியை ஆத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    • பக்கத்து வீட்டுக்காரர் பூபதி அவரது உறவினரை வைத்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றி உள்ளார்.
    • பெண்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

    சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் வசிக்கும் அனிதா என்பவர் பக்கத்து வீட்டு அருகே குப்பை கொட்டியதால் அவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் மோதல் ஏற்பட்டது.

    குப்பை கொட்டியதில் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் பூபதி அவரது உறவினரை வைத்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றி உள்ளார். இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் பெண்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த தகராறு தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் என்பவரை தேடி வருகின்றனர்.

    • ராகேஷ் தற்போது வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
    • புனேவுக்கு தப்பிச் செல்ல முடிவு செய்த ராகேஷ் உள்ளூர் காவல்நிலையத்திற்கு தற்கொலை என தகவல் தெரிவித்துள்ளார்.

    பெங்களூரில் மனைவியைக் கொன்று, அவரது உடலை ஒரு கேட்கேஸில் அடைத்து நடந்ததை மாமியார் வீட்டாருக்கு போன் செய்து கணவர் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் தொட்டகண்ணஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் ராகேஷ். இவர் ஒரு ஐடி நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி உள்ளார். தற்போது வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவரது மனைவி கௌரி அனில் சம்பேகர். இவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்.

    இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறு ஏற்படும் போதெல்லாம் ராகேஷே அவரது மனைவி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்றுமுன்தினம் தம்பதிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராகேஷ், மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தி கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் முழு உடலையும் மடித்து ஒரு டிராலி பையில் (சூட்கேஸ்) அடைத்து குளியலறையில் வைத்துவிட்டு மாமியார் வீட்டாருக்கு போன் செய்து உங்கள் மகளைக் கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். இதன்பின் புனேவுக்கு தப்பிச் செல்ல முடிவு செய்த ராகேஷ் உள்ளூர் காவல்நிலையத்திற்கு தற்கொலை என தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குளியலறையில் இருந்த கௌரி அனிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இததையடுத்து புனேவுக்கு தப்பி செல்ல முயன்ற ராகேஷையும் கைது செய்தனர்.

    மேலும் இவ்வழக்கு தொடர்பாக போலீசார் கூறுகையில், உடல் துண்டுகளாக வெட்டப்படவில்லை. அது அப்படியே இருந்தது. இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது, மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணையில் தெரியவரும் என்றனர். 

    • மோட்டார்சைக்கிளில் சென்ற சரவணன் தரப்பினருக்கும், சோலைவேல் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • காயம் அடைந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாலைசதுரன். இவரது மகன் சாலைமுனீஸ் (வயது 25). இவரது நண்பர் சரவணன் (21).

    கத்திக்குத்து

    இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று சங்கரன்கோவில் டவுண் பகுதிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓடைத்தெரு பகுதியில் திரு.வி.க. தெருவை சேர்ந்த சோலைவேல் மற்றும் அவரது நண்பர் கதிர்வேல்(26)ஆகியோர் நடுரோட்டில் நின்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அவ்வழியே மோட்டார்சைக்கிளில் சென்ற சரவணன் தரப்பினருக்கும், சோலைவேல் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே சாலைமுனீஸ், சரவணன் ஆகியோரை எதிர்தரப்பினர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

    கைது

    மேலும் தடுக்க வந்த மாரிமுத்து, வீராசாமி , சுவாமிநாதன் ஆகியோருக்கும் சரமாரி குத்து விழுந்தது. இதில் காயம் அடைந்த 5 பேரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுண் போலீசார் கதிர்வேலை கைது செய்தனர். தப்பி ஓடிய சோலைவேலை வலைவீசி தேடி வருகின்றனர். 

    • 23-ந்தேதி பிரியதர்ஷினி வீட்டு வாசல் முன்பு பட்டாசு வெடித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • அருகில் இருந்தவர்கள் அவர்களுக்கு இடையே சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ரமேஷ்குமார் வசித்து வருகிறார். இந்நிலையில் மெல்டில்டா பிரியதர்ஷினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று கடந்த 23-ந்தேதி பிரியதர்ஷினி வீட்டு வாசல் முன்பு பட்டாசு வெடித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன், முத்துசாமி, அம்பிகா தேவி, ஜெயலட்சுமி, லோகேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து பிரியதர்ஷினியை பார்த்து இங்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று கூறி பிரியதர்ஷினியை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிற

    து. பின்னர் அருகில் இருந்தவர்கள் அவர்களுக்கு இடையே சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து மீண்டும் லோகேஸ்வரன் என்பவர் பிரியதர்ஷினி வீட்டின் மீது பாட்டில் வீசி பிரியதர்ஷினி மீது தாக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சின்னசேலம் போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
    • தகராறு முற்றியதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சேவப்ப நாயக்கன்வாரியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 32) தொழிலாளி. சம்பவத்தன்று இவர் சீனிவாசபுரம் பூங்கா அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக மேலவீதியை சேர்ந்த ரகுவரன் (22) மற்றும் அவருடைய சகோதரர் ராஜா ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அவர்களிடம் கந்தசாமி கேட்ட போது அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

    தகராறு முற்றியதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த கந்தசாமி மற்றும் ராஜா ஆகிய 2 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து கந்தசாமி தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் ராஜா மற்றும் ரகுவரன் மீது வழக்குப்பதிவு செய்து ரகுவரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊரணிபுரம் மதுக்கடை அருகே தகராறு ஏற்பட்டது.
    • போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

    திருவோணம்:

    திருவோணம் அருகே உள்ள காரியாவிடுதி வெட்டி க்காட்டான் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 43).

    கூலித் தொழி லாளி. இவருக்கும், புது விடுதியை சேர்ந்த ரவி என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரணிபுரம் மதுக்கடை அருகே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது

    இந்நிலையில், ரவி சம்பவத்தன்று பீர் பாட்டிலால் வெள்ளை ச்சாமியை குத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயமடைந்த வெள்ளைச்சாமி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் வெள்ளைச்சாமி அளித்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார்.

    வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரவியை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் ரவியை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் எனக்கூறி வெள்ளைச்சாமியின் பெற்றோர், கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் திருவோணம் காவல் நிலையத்தில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்,

    • ஆத்திரம் அடைந்த கோகுல் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசாரை மிரட்டி ரகளையில் ஈடுபட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலை கைது செய்தனர்.

    போரூர்:

    சென்னை, கே.கே. நகர் ராஜமன்னார் சாலை அருகே நேற்று நள்ளிரவு வாலிபர்கள் சிலர் மதுபோதையில் ரகளையில் ஈடுபடுவதாக கே.கே. நகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ஜீவா, மற்றும் போலீஸ்காரர் விஜயராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த கும்பல் தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் அதே பகுதியை சேர்ந்த கோகுல் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர், இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசாரை மிரட்டி ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலை கைது செய்தனர். கோகுல் மீது ஏற்கனவே கே.கே நகர் மற்றும் எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் நிலையங்களில் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மது போதையில் அருவருப்பான செயல்களில் ஈடுபட்டனர்
    • போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரனை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் பஸ் நிலையம் எப்போதும் பரப்பரப்பாக காணப்படும் அதன் அருகில் போஸ்ட் ஆபிஸ், அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளன. காலை, மாலை வேளைகளில் பஸ் ஏறுவதற்கு மாணவ, மாணவிகள் அதிகம் பேர் இந்த பஸ் நிலையத்தில் காத்து நிற்பது வழக்கம். அதன் அருகில் தென் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற ஆதிகேசவன் பெருமாள் கோவிலும் அமைந்து உள்ளது.

    இந்த நிலையில் பஸ் நிலையம் அருகே அரசுக்கு சொந்தமான மதுபான கடையும் செயல்பட்டு வருகிறது. இதனால் இளை ஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் மது அருந்திக் கொண்டு பஸ் ஏறுவதற்கு இங்குதான் வருவார்கள்.

    இதில் போதை தலைக்கு ஏறிய ஆசாமிகள் சிலவேளைகளில் அரு வருப்பான செயல்களில் ஈடுபடுவார்கள்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் குமரன்குடி, செம்பருத்தி காளை விளை பகுதியை சேர்ந்த சுனில் (வயது 34) மற்றும் ராஜேந்திரன் (43) 2 பேரும் சேர்ந்து மது போதையில் அருவருப்பான செயல்களில் ஈடுபட்டு வந்தனர் இதனால் அந்த பகுதியில் பஸ் ஏறுவதற்கு நின்றவர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்ப்பட்டது. உடனே அந்த பகுதியில் நின்றவர்கள் திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து 2 பேரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசா ரனை நடத்தினார்கள் திருவட்டார் உதவி ஆய்வா ளர் ஜெயராம் சுப்ரமணியன் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தினார்.

    • குடிபோதையில் வீட்டிற்கு சென்று தவறாக நடக்க முயன்றார்.
    • ஜோதி அவரது மகள்கள் ரம்யா, வசந்தி ஆகிய 3 பேரையும் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே கல்யாணபுரத்தை சேர்ந்த சீனிவாசன் மனைவி ஜோதி (வயது 55).

    இதில் சீனிவாசன் இறந்து விட்டார்.

    ஜோதி தனது மகள்கள் வசந்தி (35), ரம்யா (30) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (25) என்பவர் குடிபோதையில் ஜோதி வீட்டிற்கு சென்று ரம்யாவிடம் தவறாக நடக்க முயன்றார்.

    இது குறித்து திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஜோதி புகார் செய்ய இருப்பதாக கேள்விப்பட்ட சரவணன் மீண்டும் தகராறு செய்து ஜோதி அவரது மகள்கள் ரம்யா, வசந்தி ஆகிய 3 பேரையும் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விட்டார்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த 3 பேரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் அப்பர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

    • அதே பகுதி சேர்ந்தவர் ஜெயகாந்தன் இவர்கள் இருவர் குடும்பத்திற்கும் முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்தது.
    • காயமடைந்த நாகம்மாள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி  அருகே ஏ.பி.குப்பத்தை சேர்ந்தவர் அய்யனார்,அதே பகுதி சேர்ந்தவர் ஜெயகாந்தன் இவர்கள் இருவர் குடும்பத்திற்கும் முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்தது. நேற்று மீண்டும் இவர்களுக்குள் தகராறுஏற்பட்டது.ஜெயகாந்தன் மற்றும் அவரது மகன்கள் திருவேந்திரன் (30) டிரைவர்,கொளஞ்சியப்பன் (32),ஆகியோர், அய்யனார் மனைவி நாகம்மாள் (50)என்பவரை அசிங்கமாக திட்டி இரும்பு கம்மி, தடியால் தாக்கினார்.

    காயமடைந்த நாகம்மாள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் இது குறித்து 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் திருவேந்திரன் (30)என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணத்தகராறில் தீர்த்து கட்டியது அம்பலம்

    கன்னியாகுமாரி:

    இரணியல் அருகே மணக்கரை அவரி விளக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் பிள்ளை (வயது 78). இவரது மகன் அய்யப் பன் ேகாபு (43) இவரது மனைவி துர்கா (38).

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ராணுவ வீரரான அய்யப்பன்கோபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து துர்கா கணவரின் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மாமனார்ஆறுமுகம் பிள்ளைக்கும், மருமகள் துர்காவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் பிள்ளை அவரது மகன் மது (43) இருவரும் சேர்ந்து துர்காவை சரமா ரியாக தாக்கினார்கள். கல்லாலும், கம்பாலும் தாக்கியதில் துர்கா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந் தார்.

    இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துர்காவின் சகோதரர் பகவத்சிங் இரணியல் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் ஆறுமுகம் பிள்ளை, அவரது மகன் மது ஆகி யோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது ஆறுமுகம் பிள்ளை கூறியதாவது:-

    எனது மகன் அய்யப்பன் கோபு கடந்த சில மாதங் களுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு அவருக்கு எல்லை பாதுகாப்பு படையிலிருந்து நிதி உதவி வழங்கப்பட்டது. அந்த பணம் எனது மருமகள் துர்காவிடம் வந்து சேர்ந்தது. இந்த பணம் பிரச்சினை தொடர்பாக எனக்கும் எனது மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    நேற்றும் எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற் பட்டது. அப்போது எனது இன்னொரு மகன் மது அங்கு வந்தார். ஆத்திர மடைந்த நாங்கள் துர்காவை சரமாரியாக தாக்கினோம். இதில் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    போலீசார் கைது செய் யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மருமகளை மாம னார் மைத்துனர் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×