என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பை"

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் எப்படி இங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    • கடலூர் புதுநகர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பில்லுக்கடை சந்து தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை குப்பை வாகனத்தை தூய்மை பணியாளர்கள் எடுத்துச்செல்ல முயன்றனர்.

    அப்போது குப்பை எடுக்கும் வாகனத்தில் கட்டு கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் அதிக அளவில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தேர்தல் வாக்கு பதிவின் போது வைக்கப்படும் மை, சீல் ஆகியவையும் கிடந்தது.

    இதனைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் தாசில்தார் மகேஷ் குப்பை அள்ளும் வாகனத்தில் இருந்த வாக்காளர் அடையாள அட்டைகளை சோதனை செய்த போது அனைத்து வாக்காளர் அடையாள அட்டைகளும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் என்பது உறுதி செய்யப்பட்டது.

    பின்னர் தாசில்தார் இதனை கைப்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் எப்படி இங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் குப்பை வாகனத்தில் இருந்த வயர்களும் அறுக்கப்பட்டு இருந்தன. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாநகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    • குப்பை கொட்ட வந்த ஒரு லாரியும் சிறை பிடிக்கப்பட்டது.
    • அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அனுப்பர் பாளையம்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் நெருப்பெரிச்சல் ஜி.என்., கார்டன் பத்திர பதிவு அலுவலகம் அருகில் உள்ள தனியார் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது. குடியிருக்க முடியவில்லை. எனவே, குப்பை கொட்டக்கூடாது என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    கடந்த 24-ந்தேதி அனைத்து கட்சி சார்பில் ஜி.என். கார்டன் பஸ் நிறுத்தம் அருகே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து பாறைக்குழியில் குப்பைகளை கொட்டி வரும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஜி.என். கார்டன் பகுதியில் கடையடைப்பு மற்றும் குப்பை லாரி சிறைபிடிப்பு போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, கொ.ம.தே.க., தே.மு.தி.க., பா.ஜ.க., த.வெ.க., சமூக நல அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும், குப்பை கொட்ட வந்த ஒரு லாரியும் சிறை பிடிக்கப்பட்டது.

    மேலும் அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், மறியல் போராட்டத்தை கைவிடாததால் சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் பூலுவப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • மூதாட்டி வீட்டு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த பிரேமா என்பவர் குப்பை கொட்டியுள்ளார்.
    • மூதாட்டிக்கு குப்பை கொட்டிய பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர்தாலுகா கவுதம்புரா என்ற பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி ஹுச்சம்மா (76). இவரது வீட்டு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த பிரேமா என்பவர் குப்பை கொட்டியுள்ளார். இதைப்பார்த்த மூதாட்டி ஹுச்சம்மா அவரிடம் ஏன் எனது வீட்டின் முன்பு குப்பை கொட்டினாய் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் பிரேமாவுக்கு ஆதரவாக அவரது குடும்பத்தை சேர்ந்த மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோர் வந்து மூதாட்டியிடம் வாக்குவாதம் செய்தனர்.

    பின்னர் ஆத்திரம் அடைந்த பிரேமா, மூதாட்டி ஹுச்சம்மாவை அந்த பகுதியில் இருந்த ஒரு மரத்தில் கட்டிவைத்து தாக்கினார். இந்த சம்பவத்தில் பிரேமாவுக்கு ஆதரவாக மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோர் செயல்பட்டனர். மூதாட்டியை பிரேமா மரத்தில் கட்டி வைத்து தாக்கியதை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மேலும் ஒரு கட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் மூதாட்டியை மீட்டனர்.

    பின்னர் இது குறித்து தாக்கப்பட்ட ஹுச்சம்மாவின் மகன் கண்ணப்பா என்பவர் ஆனந்த்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் பிரேமா, மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோர் மீத தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் வயதான பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய பிரேமாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோரின் பங்கு என்ன என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..

    • குப்பைகளை அகற்றும் ஒப்பந்தங்களிலிருந்து கூட கமிஷன் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர்.
    • இதுபோன்ற கருத்துக்களைக் கேட்க உத்தரபிரதேசம் முழுவதும் பாக்கியம் பெற்றுள்ளது

    "குப்பையில் இருந்து தங்கம் உருவாக்கும் இயந்திரத்தை மீரட்டில் தயாரித்து வருகிறோம். மிக விரைவில் அது பயன்பாட்டுக்கு வந்துவிடும்" என்று உத்தரபிரதேச பால்வளத்துறை அமைச்சர் தரம்பால் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பாஜக அமைச்சர் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். .

    அந்த எக்ஸ் பதிவில், "குப்பைகளை தங்கமாக மாற்றும் இயந்திரங்களைப் பற்றி பேசுவதற்கு முன்பு, கன்னோஜில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள ஒரு பால் ஆலையை செயல்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தரம்பால் சிங் கவனம் செலுத்த வேண்டும்.

    ஒருவேளை பாஜகவின் ஊழல் தற்போது மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. அவர்கள் இப்போது குப்பைகளை அகற்றும் ஒப்பந்தங்களிலிருந்து கூட கமிஷன் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர் .இதுபோன்ற கருத்துக்களைக் கேட்க உத்தரபிரதேசம் முழுவதும் பாக்கியம் பெற்றுள்ளது" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    • குப்பை கொட்டும் தகராறில் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான பூபதியை ஆத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் வசிக்கும் அனிதா என்பவர் பக்கத்து வீட்டு அருகே குப்பை கொட்டியதால் அவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் மோதல் ஏற்பட்டது.

    குப்பை கொட்டியதில் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் பூபதி அவரது உறவினரை வைத்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றி உள்ளார். இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் பெண்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த தகராறு தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் என்பவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் குப்பை கொட்டும் தகராறில் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பாலமுருகன், அவரது மனைவி செல்வி, உறவினர் அன்பரசி கைது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    லாரியை ஏற்றி கொல்ல முயன்ற பாலமுருகன், அவரை தூண்டிவிட்ட அன்பரசி, பூபதி, கதிரவன் ஆகியோர் மீது கொலை முயற்சி, பொதுச்சொத்து சேதம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான பூபதியை ஆத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    • பக்கத்து வீட்டுக்காரர் பூபதி அவரது உறவினரை வைத்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றி உள்ளார்.
    • பெண்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

    சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் வசிக்கும் அனிதா என்பவர் பக்கத்து வீட்டு அருகே குப்பை கொட்டியதால் அவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் மோதல் ஏற்பட்டது.

    குப்பை கொட்டியதில் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் பூபதி அவரது உறவினரை வைத்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றி உள்ளார். இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் பெண்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த தகராறு தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் என்பவரை தேடி வருகின்றனர்.

    • நொச்சிபாளையம் பிரிவிலிருந்து அல்லாளபுரம் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும்.
    • திருப்பூர் மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட இடம்.

    வீரபாண்டி :

    திருப்பூர் நொச்சிபாளையம் பிரிவிலிருந்து அல்லாளபுரம் சாலை வழியாக பொங்கலூர் செல்லும் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இதில் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக வாகன தணிக்கை செய்யும் இடத்திற்கு போகும் இடத்தில் குப்பை கொட்டியுள்ளார்கள்.இந்த இடம் திருப்பூர் மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்டது. குப்பையை எடுத்து 1மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடக்கும் பொழுது மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. இந்த இடத்தில் பலவகையான கழிவுகளை கொட்டுவதால் அதனை சாப்பிடுவதற்காக தெருநாய்கள் வருகின்றன.

    இந்த தெரு நாய்கள் சாலையின் குறுக்கே செல்வதால் வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்துக்கள் தினந்தோறும் ஏற்படுகிறது . இதுவரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் குப்பையை உடனடியாக அகற்றியும் குப்பைத் தொட்டியை வேறு இடத்தில் வைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கால்நடைகள் துவசம் செய்து வருவதால் குப்பைகள் ரோட்டின் நடு பகுதிக்கு வந்து விடுகிறது.
    • குப்பைகளால் துர்நாற்றம் ஏற்பட்டு மூக்கை பிடித்துக் கொண்டே பயணிகள் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    உடுமலை:

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட மலையப்ப கவுண்டர் லேஅவுட்டில் இருந்து காந்தி நகர் செல்லும் ரோட்டின் ஓரத்தில் மலை போல் குப்பைகள் குவிக்கப்பட்டு உள்ளது.

    அவற்றை கால்நடைகள் துவசம் செய்து வருவதால் குப்பைகள் ரோட்டின் நடு பகுதிக்கு வந்து விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தற்போது அடிக்கும் காற்றால் குப்பை மழையில் நனைந்து கொண்டே வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த குப்பைகளால் துர்நாற்றம் ஏற்பட்டு மூக்கை பிடித்துக் கொண்டே பயணிகள் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே இவற்றை அப்புறப்படுத்தி குப்பைத் தொட்டி வைத்து குப்பைகளை அதில் போட்டு அப்புறப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் சுமார் 15 ஏக்கர் உள்ளது.
    • பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் நல்லூர் பகுதி 3-ம் மண்டலத்தில் அமைந்துள்ள 46வது வார்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் சுமார் 15 ஏக்கர் உள்ளது. அந்த நிலத்தை சுற்றிலும் சுமார் 5000 குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். அந்த நிலத்தில் அனைத்து வகையான குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு கொசு தொல்லை மற்றும் பல நோய்கள் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

    மாநகராட்சி மூலமாக எடுக்கப்படும் கழிவு நீர்கள் இங்கே வந்து கொட்டப்படுகின்றன. இதனால் கொசு உற்பத்தியாகி அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. எத்தனையோ முறை பொதுமக்கள் சார்பாக தடுத்து பார்த்தும் குப்பைகள் மற்றும் கம்பெனி கழிவுகள், மீன் கழிவுகள், கோழி கழிவுகள் என அனைத்து வகையான கழிவுகளும் கொட்டும் இடமாக அந்த இடம் மாறி வருகிறது. அதுபோக அந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அச்ச நிலையையும் நோய் தொற்று பரவும் அபாயத்திலிருந்தும் காப்பாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது . திருப்பூர் தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் பஸ் நிறுத்தம், கரட்டாங்காடு பஸ் நிறுத்தம் அருகில் குப்பைகள் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    மேலும் மாநகரின் பல இடங்களில் கழிவு நீர் கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவு நீரில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் ஓடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் காமாட்சி புரம் கல்லூரி சாலையில், மின் இணைப்புக்கு இடையூறாக இருந்த மரத்தை வெட்டி சாலை ஓரத்தில் போட்டுள்ளதால் கால்வாய் அடைத்து கழிவுநீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே மரங்களை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொடுவாய் பஸ் நிறுத்தம் என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
    • ஊராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ளது கொடுவாய். இங்கு சுமார் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் திருப்பூர் - ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையும் செல்கிறது. இந்த வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்களும் சென்று வருகிறது. எனவே கொடுவாய் பஸ் நிறுத்தம் என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

    இதன் அருகே ஏராளமான பேக்கரிகள், உணவகங்கள், பள்ளிக்கூடம், மின்மயானம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் உள்ளது. இந்த நிலையில் இந்த பகுதியில் மின்மயானத்தின் அருகே ஊராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. மேலும் குட்டை போல் தேங்கியுள்ள கழிவு நீரில் இந்த குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தியும் அதிக அளவில் உள்ளது. இந்த வழியாக செல்பவர்கள் இந்த துர்நாற்றத்தை சகித்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் மின்மயானத்திற்கு வருபவர்கள் அங்கு சிறிது நேரம் கூட உள்ளே நிற்க முடியாத அளவிற்கு மின்மயானத்தை சுற்றிலும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை அப்புறப்படுத்த எந்தவித நடவடிக்கையும் ஊராட்சி சார்பில் எடுக்கப்படாததால் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக இந்த குப்பைகளை அகற்றி ஒரு சுகாதாரமான சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Add Comments

    • வீடு, வீடாக தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து வாங்கி நாள்தோறும் வரும் வாங்கி வாகனங்கள் மூலம் நகராட்சி குப்பை கிடங்கில் கொண்டு கொட்டுகின்றர்.
    • நாள்தோறும் இந்த குப்பைகளை அகற்றினாலும் குப்பைகள் அகற்றிய உடனே பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் பல்வேறு இடங்களில் நகராட்சி சார்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம்பிரித்து வைத்து எடுத்து செல்லும் வகையில் குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் நகராட்சி சார்பில் வீடு, வீடாக தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து வாங்கி நாள்தோறும் வரும் வாங்கி வாகனங்கள் மூலம் நகராட்சி குப்பை கிடங்கில் கொண்டு கொட்டுகின்றர்.

    இந்நிலையில் சீர்காழி நகராட்சி 14வது வார்டில் உள்ள கல்யாணி சீனிவாசபுரம் செல்லும் பகுதியில் முகப்பில் குப்பைகள் அதிக அளவு கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சி யளிக்கிறது. நாள்தோறும் இந்த குப்பைகளை அகற்றினாலும் குப்பைகள் அகற்றிய உடனே பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.

    அதன்படி சீர்காழி நகராட்சி சார்பில் அப்பகுதியில் பொது இடத்தில் குப்பை கொட்ட தடை விதித்து, மீறினால் நடவடிக்கை அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாக

    சார்பில் எச்சரிக்கை விடுக்கும் எச்சரிக்கை பலகை தயார் செய்யப்பட்டு அப்பகுதியில் வைக்கப்பட்டது. இந்தப் பணியை நகர மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு மற்றும் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.

    • குப்பைகளுக்கு தீ வைத்தபோது எதிர்பாராத விதமாக செல்லம்மாள் அணிந்திருந்த சேலையில் தீப்பற்றியது.
    • சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள மேல மாவிளையைச் சேர்ந்தவர் பொன்னையன். இவரது மனைவி செல்ல ம்மாள் (வயது 80).

    இவரது வீட்டின் பின் புறம் ஓலைகள் மற்றும் குப்பைகள் கிடந்து உள்ளன. அதனை அகற்ற செல்லம்மாள் திட்டமிட்டார்.

    இதற்காக நேற்று அனை த்தையும் ஓரே இடத்தில் சேர்த்தார். பின்னர் அந்த குப்பைகளுக்கு அவர் தீ வைத்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக செல்லம்மாள் அணிந்திருந்த சேலையில் தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலறினார்.

    இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த னர். அவர்கள் தீயை அணைத்து செல்லம்மாளை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×