search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடுவாய் பகுதியில்குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு
    X
    குப்பை குவிந்து கிடக்கும் காட்சி.

    கொடுவாய் பகுதியில்குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு

    • கொடுவாய் பஸ் நிறுத்தம் என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
    • ஊராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ளது கொடுவாய். இங்கு சுமார் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் திருப்பூர் - ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையும் செல்கிறது. இந்த வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்களும் சென்று வருகிறது. எனவே கொடுவாய் பஸ் நிறுத்தம் என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

    இதன் அருகே ஏராளமான பேக்கரிகள், உணவகங்கள், பள்ளிக்கூடம், மின்மயானம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் உள்ளது. இந்த நிலையில் இந்த பகுதியில் மின்மயானத்தின் அருகே ஊராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. மேலும் குட்டை போல் தேங்கியுள்ள கழிவு நீரில் இந்த குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தியும் அதிக அளவில் உள்ளது. இந்த வழியாக செல்பவர்கள் இந்த துர்நாற்றத்தை சகித்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் மின்மயானத்திற்கு வருபவர்கள் அங்கு சிறிது நேரம் கூட உள்ளே நிற்க முடியாத அளவிற்கு மின்மயானத்தை சுற்றிலும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை அப்புறப்படுத்த எந்தவித நடவடிக்கையும் ஊராட்சி சார்பில் எடுக்கப்படாததால் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக இந்த குப்பைகளை அகற்றி ஒரு சுகாதாரமான சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Add Comments

    Next Story
    ×