என் மலர்
நீங்கள் தேடியது "health disorder"
- நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுஉலை நிர்வாகம் சார்பில் அங்குள்ள சுற்று வட்டார பகுதிகளில் சமூக பொறுப்பு நிதியில் இருந்து பல பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
- பணிகள் 2 ஆண்டுகளாக கிடப்பில் கிடப்பதால் மழை நீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் அந்த கால்வாயில் தேங்கி நிற்கிறது
பணகுடி:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுஉலை நிர்வாகம் சார்பில் அங்குள்ள சுற்று வட்டார பகுதிகளில் சமூக பொறுப்பு நிதியில் இருந்து பல பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கூடங்குளம் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்காக ஊரின் நடுப்பகுதியில் கால்வாய் கட்டும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தற்போது அந்த பணிகள் 2 ஆண்டுகளாக கிடப்பில் கிடப்பதால் மழை நீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் அந்த கால்வாயில் தேங்கி நிற்கிறது.
இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்டும் நிலை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டம் அறிவிப்பு
அந்த கால்வாயை பார்வையிட்ட பின்னர், பா.ஜனதா ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் சார்பில் பல கோடி ரூபாய் நிதியில் கழிவு நீர் கால்வாய் கட்டுமான பணி நடந்தது. எந்தவித திட்டமிடலும் இல்லாமல் வேலை தெரியாதவர்களை வைத்து பணிகளை செய்தனர்.
தற்போது கழிவு நீர், மழை நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த சுகாதார சீர்கேட்டை வருகிற 22-ந்தேதிக்குள் ஊராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை என்றால் பா.ஜனதா சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.
- நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அலுவலகம் அருகிலேயே தான் உள்ளது.
- பொதுமக்கள் தங்கு தடை இன்றி வந்து செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தாராபுரம்:
தாராபுரம் உடுமலை சாலையில் உள்ளது தினசரி காய்கறி மார்க்கெட். இந்த சந்தை முன்பு பழைய பஸ் நிலையமாக இருந்தது. 1986-ம் ஆண்டு முதல் காய்கறி சந்தையாக செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. இங்கு தினசரி ஆயிரம் கிலோவிற்கு மேல் காய்கறி குப்பைகள் தேங்கி விடுகின்றன. இந்த சூழ்நிலையில் அருகிலேயே நகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்தம் மற்றும் நகராட்சியின் குடிநீர் தொட்டி ஆகியவை அமைந்துள்ளது. நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அலுவலகம் அருகிலேயே தான் உள்ளது.
இந்த சூழ்நிலையில் இங்கு குப்பைகளை வாரத்திற்கு ஒரு முறை இரண்டு முறை அள்ளுவதால்குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. மழைக்காலங்களில் குப்பைகள் ரோட்டில் அடித்துச் செல்லப்பட்டு மார்க்கெட் முழுவதும் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்படுகின்றன. இதனை உடனடியாக தீர்க்க வேண்டும் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் கடைக்காரர்கள் கூறி வந்த நிலையில் சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த தாராபுரம் தி.மு.க. நகர செயலாளர் பொறியாளர் முருகானந்தம் சாலை மறியல் செய்ய வேண்டாம் .உங்களுக்கு உடனடியாக குப்பைகளை அள்ளுவதற்கும் சாக்கடை வசதி மழைநீர் தண்ணீர் வெளியே செல்வதற்கு உண்டான வசதி அனைத்தும் செய்து தரப்படும் எனக் கூறியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது .இது குறித்து மார்க்கெட் தினசரி மார்க்கெட் கடைக்காரர் டேவிட் கூறிய போது, இங்கு மழை நீர் தேங்கி விடுகின்றது .மழை நீரோடு சாக்கடை நீரும் கலந்து வருகிறது .இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் .பொதுமக்கள் தங்கு தடை இன்றி வந்து செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
- கொடுவாய் பஸ் நிறுத்தம் என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
- ஊராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ளது கொடுவாய். இங்கு சுமார் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் திருப்பூர் - ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையும் செல்கிறது. இந்த வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்களும் சென்று வருகிறது. எனவே கொடுவாய் பஸ் நிறுத்தம் என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
இதன் அருகே ஏராளமான பேக்கரிகள், உணவகங்கள், பள்ளிக்கூடம், மின்மயானம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் உள்ளது. இந்த நிலையில் இந்த பகுதியில் மின்மயானத்தின் அருகே ஊராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. மேலும் குட்டை போல் தேங்கியுள்ள கழிவு நீரில் இந்த குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தியும் அதிக அளவில் உள்ளது. இந்த வழியாக செல்பவர்கள் இந்த துர்நாற்றத்தை சகித்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் மின்மயானத்திற்கு வருபவர்கள் அங்கு சிறிது நேரம் கூட உள்ளே நிற்க முடியாத அளவிற்கு மின்மயானத்தை சுற்றிலும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை அப்புறப்படுத்த எந்தவித நடவடிக்கையும் ஊராட்சி சார்பில் எடுக்கப்படாததால் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக இந்த குப்பைகளை அகற்றி ஒரு சுகாதாரமான சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Add Comments
- நோயால் இறந்து விடும் கோழிகளை நிலத்தில் குழி தோண்டி முறையாக அப்புறப்படுத்துவது வழக்கம்.
- தினந்தோறும் சுமார் 10 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா, உட்பட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் தினந்தோறும் சுமார் 10 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா, உட்பட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்தநிலையில் நோயால் இறந்து விடும் கோழிகளை நிலத்தில் குழி தோண்டி முறையாக அப்புறப்படுத்துவது வழக்கம். ஆனால் சில பண்ணையாளர்கள் முறையாக அப்புறப்படுத்தாமல் சாக்குகளில் கட்டி பல்லடம் பகுதியில் உள்ள வாய்க்கால்கள், ரோட்டோரங்களில், வீசி சென்று விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்தாமல் ரோட்டோரங்களில் வீசிச் செல்லும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
- அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை....
- நோய் பரவும் அபாயம்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணான் ஏரி உள்ளது. இந்த ஏரியை தூர் வாராததால் முட்புதர்கள் மண்டி கிடக்கின்றது. இந்நிலையில் ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது பன்றிகள் இறந்து அழுகிய நிலையில் கிடந்தது. பன்றிகள் அதிக அளவில் இறந்து கிடப்பதால் நோய் ஏற்பட்டு பன்றிகள் இறந்து இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இந்த பன்றிகளால் துர்நாற்றம் வீசுவதாலும், நாய் மற்றும் பறவைகள் இதை உண்பதாலும் நோய் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். ஏரியில் உள்ள நீரை பொதுமக்கள் குளிப்பதற்கும், கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கு குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இறந்து பன்றியை தண்ணீரில் வீசி உள்ளதால் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.மேலும் கால்நடைகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். இறக்கும் பன்றிகளை புதைக்காமல் தூக்கி எறியும் சம்பவம் சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் இறந்த பன்றிகளை அப்புற படுத்தி தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வேட்டைக்காரன்புதூர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது.
- சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டிசெட்டிபட்டியில் இருந்து வேட்டைக்காரன்புதூர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது.
பாதள சாக்கடை
இந்த குடியிருப்பில் இருந்து கழிவுநீர் வெளிேயறுவதற்கு வசதியாக 6 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை கட்டி முடிக்கப்பட்டது.
அவற்றை சரியாக கட்டி முடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதன் காரணமாக சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேட்டைக்காரன்புதூர் பகுதியில் இருந்து பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவ -மாணவிகள் மூக்கை அடைத்துக் கொண்டு கழிவுநீரை மிதித்துச் செல்வதால் நோய் தொற்றும் ஏற்படும் அபாயம் உள்ளது. கழிவுநீர் வெளியேறி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கழிவு நீரில் விழும் அபாயமும்
ஏற்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தினசரி காய்கறி சந்தையில் இருந்து காய்கறி கழிவுகளை எடுத்து வந்து உணவாக அளித்து வருகிறார்.
- குமார் நகர் பகுதியில் வசிக்கும் தனிநபர் ஒருவர் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
உடுமலை:
உடுமலை அருகே சின்ன வீரம்பட்டி ஊராட்சி உள்ளது. இந்தப் பகுதிக்கு உட்பட்ட சேகர் புரம்,குமார் நகர்,சித் தாண்டீஸ்வரர் லே-அவுட், பெதப்பம்பட்டி ரோடு,ஏரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தனிநபர் ஒருவர் காய்கறி கழிவுகளை கொட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் புகார் அனுப்பி உள்ளனர்.அதில் கூறியுள்ளதாவது:- குமார் நகர் பகுதியில் வசிக்கும் தனிநபர் ஒருவர் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். அவர் வளர்த்து வருகின்ற கால்நடைகளுக்கு உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ராஜேந்திர சாலையில் உள்ள தினசரி காய்கறி சந்தையில் இருந்து காய்கறி கழிவுகளை எடுத்து வந்து உணவாக அளித்து வருகிறார். அதில் இருந்து எழும் துர்நாற்றம் சுற்றுப்புற வீடுகளில் வசித்து வரும் பொது மக்கள் குழந்தைகளுக்கு உடல் ஒவ்வாமைகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட நபரிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் சின்ன வீரம்பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே சின்ன வீரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குமார் நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் நபர்மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.
- 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்
- அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
வேலூர்,
வேலூர் தொரப்பாடி ஜெயில் அருகே ராம் சேட் நகர் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
ராம் சேட் நகர் நுழைவு வாயில் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று காலை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இங்கு கால்நடை ஆஸ்பத்திரி கட்டுவதால் ஏராளமான கால்நடைகள் இங்கு கட்டுவார்கள் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தியாகும்.
இதனால் இப்பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டக்கூடாது. புறநகர் பகுதியில் வேறு எங்காவது கட்ட வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை ஆஸ்பத்திரி கட்ட அதிகாரிகள் நில அளவீடு செய்ய சென்றனர். ஆஸ்பத்தி 2-வது நாளாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
செய்வது அறியாது தவித்த பொதுமக்கள் சிறிது நேரத்திற்கு பின்னர் அவர்களாகவே கலைந்து சென்றனர்.
- ஏரி கால்வாயில் ெகாண்டு செல்ல திட்டம்
- நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம்
வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம், நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் அடுத்த கணபதி நகரில் சுமார் 200 வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்களின் வசதிக்காக தெருக்களின் ஓரம் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது.
குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் மூலம், மோர்தானா அணையில் இருந்து நெல்லூர் பேட்டை பெரிய ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயில் ெகாண்டு செல்ல திட்டமிடப்பட்டது.
இதற்காக தற்போது குடியாத்தம்- பேரணாம்பட்டு சாலையின் ஓரத்தில் செல்லும் மழைநீர் கால்வாயில், கழிவுநீர் செல்ல கால்வாய் கட்டப்பட்டது. பல்வேறு காரணங்களால் அந்த கால்வாய் பணி முழுமையடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தற்போது அந்த கால்வாயில் வரும் கழிவுநீர், பாதியில் கால்வாய் கட்டிடம் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து செல்ல வழியில்லாமல் அதிகளவில் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்தபடியே செல்கின்றனர்.
பல நாட்களாக தேங்கிநிற்கும் கழிவுநீரில் கொசக்களின் உற்பத்தி அதிகரித்து, சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
பொதுமக்களின் வசதிக்காக கடந்த 3 ஆண்டுக்கு முன்பு குடியிருப்பு பகுதியில் மட்டும் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக குடியிருப்பில் இருந்து நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு கழிவுநீர் எடுத்துசெல்ல கடந்த 2 மாதத்திற்கு முன்பு கால்வாய் விரிவாக்கம் செய்யப்பட்டது.
அந்த பணியும் முழுமையாக முடியாததால், கழிநீர் குளம்போல் தேங்கி கொசு உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
இரவு நேரத்தில் கொசுக்கள் துரத்தி, துரத்தி கடிப்பதால் நாங்கள் தூக்கத்தை இழந்து தவிக்கிறோம். மாலையில் கொசுக்கள் தொல்லை அதிகாம இருப்பதால் நாங்கள் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழல் நிலவி வருகிறது.
கழிவுநீர் தேங்கி நிற்கும் இடத்தில் இருக்கும் விவசாய நிலங்கள் அதிகளவில் பாதிப்படைகிறது. மழை காலங்களில், ஏரிக்கு வரும் மழைநீர் கழிவுநீரோடு கலந்து, விவசாய நிலத்தில் தேங்கி பயிர்களை நாசம் செய்கிறது. இதனால் மழை காலங்களில் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே மக்களின் நலன் கருதி கால்வாய் கட்டும் பணியை முழுமையாக செய்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.
- பக்கத்து நிலத்துகாரின் பசு மாடு முட்டியதில் இறந்ததாக புகார்
- நஷ்ட ஈடு பெற்று தர வலியுறுத்தல்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த பள்ளகொள்ளை கிராமத்தை சேர்ந்த வர் குமாரசாமி, விவசாயி. இவர் சொந்தமாக பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த பசுமாடு தற்போது 8 மாத சினையாக இருந்தது.
பசுமாட்டை கடந்த 1-ந் தேதி குமாரசாமி கோட்டையூர் ஏரியில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்துவிட்டு அணைக்கட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அங்கிருந்த பள்ளத்தில் பசுமாடு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து குமாரசாமி அணைக்கட்டு போலீசில், பனந்தோப்பு பட்டியைச் சேர்ந்த பக்கத்து நிலத்துகாரின் பசு மாடு முட்டியதில் தனது பசுமாடு இறந்ததாகவும், அதற்கு நஷ்ட ஈடு பெற்று தர வேண்டும் எனவும் புகார் கொடுத்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், நிவாரணம் கிடைக்கும் வரை இறந்த பசுமாட்டை அப்புறப்படுத்த உரிமையாளர் மறுப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
6 நாட்கள் ஆகியும் இறந்துபோன பசுமாட்டை அப்பு றப்ப டுத்தாமல் ஏரியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்ப டுத்துகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்கமுடியாமல் மூக்கை பிடித்த படியே கடந்து செல்கின்றனர்.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இறந்து போன மாட்டை அந்த பகுதியில் இருந்து அப்பு றப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொது மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது
- கலெக்டரிடம் புகார்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் சகாய அன்னை ஆலய பங்குத்தந்தை கிளமென்ட் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகளை சகாய அன்னை ஆலய சுற்றுசுவர் மற்றும் அக்சீலியம் தொழிற் கல்வி சுற்றுசுவர் அருகில் கொட்டப்பட்டு தீயிட்டு கொளுத்துகின்றனர்.
தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் குப்பைகள் கொளுத்தும் போது புகை மண்டலம் சூழ்ந்து பொது மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மாசு கலந்து காற்றை சுவாசிப்பதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை அள்ளி வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் குப்பைகளை தீயிட்டு எரிக்கக்கூடாது. இவ்வாறு இதில் கூறப்பட்டிருந்தது.
- மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு பண்ருட்டி நகரில் 5-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாகனங்களை வைத்துள்ளனர்.
- பறிமுதல் செய்து அந்த வாகனங்களுக்கு முறையான அனுமதி மற்றும் உரிமம் உள்ளதா?
கடலூர்:
பண்ருட்டி நகரில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் உள்ள செப்டிக் டேங்குகளில் சேகரமாகும் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு பண்ருட்டி நகரில் 5-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாகனங்களை வைத்துள்ளனர். இந்த வாக னங்கள் மூலம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள செப்டிக் டேங்க் கழிவு களை அகற்ற அகற்றும் வாகனங்க ளில் எடுத்து சென்று பின்னர் அந்த கழிவுகளை பண்ருட்டி கெடிலம் ஆற்று பகுதி யில் திறந்த வெளியில் கொட்டு கின்றனர்.
கழிவுகளால் அப்பகுதி யில் துர்நாற்றம் வீசுவ தோடு, சுகாதாரக் சீர்கேடும் ஏற்படு கிறது. இதனால் கழிவுகளை திறந்த வெளி யில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுப்ப தோடு, அத்துமீறி கொட்டு பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையாளர் பானுமதி, நகராட்சி துப்புரவு அலுவலர் முருகேசன் ஆகியோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இன்று அதிகாலை பண்ருட்டி கெடிலம் ஆற்றுப் பகுதியில் செப்டிக் டேங்க் கழிவுகளை திறந்து வெளியில் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய 5 வாகனங்களை பறிமுதல் செய்து அந்த வாகனங்களுக்கு முறையான அனுமதி மற்றும் உரிமம் உள்ளதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






