search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health disorder"

    • ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
    • போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட மேலபுலம் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் உள்ள நடுத்தெரு, பெரிய தெரு, வண்ணாரப்பேட்டை தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் தெருக்களில் தேங்குவதை தவிர்க்க மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்யும் தொடர்மழையின் காரணமாக, மழை நீருடன் கலந்த கழிவுநீர் கால்வாயில் தேங்கி துர்நாற்றத்தை வீசுகிறது.

    அதனால் கொசு உற்பத்தி அதிகமாகி நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. சுகாதார சீர்கடி ஏற்படுத்தும் வகையில் கால்வாயில் தேங்கிய நீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை. இதனால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் திரண்டு சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் அனிதா நாராயணன்,பொறியாளர் ராஜேஷ், கிராம நிர்வாக அலுவலர் கொய்யாமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் அதிகாரிகளை சூழ்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் புகார்
    • சமுதாயக்கூடம் கட்டித் தர கோரிக்கை

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர். அப்போது காட்பாடி அருகே பெரியபட்டரையைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது;-

    காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் எங்கள் ஊருக்கு தண்ணீர் வருவதில்லை, போர்வெல் பழுதடைந்து 1மாதம் ஆகிறது. போதிய கால்வாய் வசதி இல்லாததால் பல மாதங்களாக மழை நீருடன் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதி பொதுமக்களுக்காக 1993-ம் ஆண்டு தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதில் ஊர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா, பொது காரியங்கள் செய்வதற்கான மண்டபம் மற்றும் போக்குவரத்து வசதிக்காக சாலைகளுக்காக இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த இடத்தில் ஒரு சிலர் தவறான அணுகுமுறையில் பட்டா பெறப்பட்டு அங்கே குடியேறி வீடு கட்டி உள்ளனர்,

    எனவே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொது உபயோகத்திற்கான இடத்தையும் மற்றும் பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தும் பிரதான சாலையும் மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த பொது உபயோக இடத்தில் எங்கள் பகுதி மக்களுக்கு காரியமண்டபம் மற்றும் சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மழைக்காலங்களில் தண்ணீர் கால்வாயில் செல்லாமல் குடியிருப்புகளில் தேங்கும் நிலை காணப்படுகிறது.
    • 4-வது தெருவில் மட்டும் பெயரளவுக்கு கால்வாயை தூர் வாரி சென்றுள்ளனர் என்று குற்றம் சாட்டினர்.

    தாம்பரம் மாநகராட்சி 38-வது வார்டுக்குட்பட்ட அஸ்தினாபுரம் மற்றும் மகேஸ்வரி நகரில் 7 தெருக்கள் உள்ளன. இங்கு 130 வீடுகள் உள்ளன.

    இந்த குடியிருப்புகளில் உள்ள தெருக்களில் இருந்து வெளியேறும் மழைநீர் 4-வது தெரு வழியாக சென்று அங்குள்ள ரேஷன் கடையையொட்டியுள்ள காய்வாய் வழியாக ஓடி செம்பரம்பாக்கம் ஏரியை சென்றடையும். இந்த கால்வாய் மற்றும் தண்ணீர் சென்று சேரும் இடம் ஆகியவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் கால்வாயில் செல்லாமல் குடியிருப்புகளில் தேங்கும் நிலை காணப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் இந்த பிரச்சினை ஏற்படுவதால் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே மகேஸ்வரி நகரில் உள்ள கால்வாயை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள தெருக்களிலும் கால்வாய்கள் தூர் வாரப்படாமலேயே உள்ளது.

    4-வது தெருவில் மட்டும் பெயரளவுக்கு கால்வாயை தூர் வாரி சென்றுள்ளனர் என்று குற்றம் சாட்டினர்.

    அப்பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவில் குப்பைகள் அதிக அளவில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

    கழிவு நீரும் தேங்கி நிற்கிறது. 2 மாதங்களுக்கும் மேலாக குப்பைகள் தேங்கி கழிவு நீரும் கலந்துள்ளதால் அஸ்தினாபுரம் பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

    தேங்கி கிடக்கும் குப்பை மற்றும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது என்றும் மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காய்ச்சலை கட்டுப்படுத்தவும், சுகாதார சீர்கேட்டை சரி செய்யவும் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

    இதற்கிடையே ஒரு குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோயும் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு மாநகராட்சி மண்டல அதிகாரிகள் விரைந்து சென்று அஸ்தினாபுரத்தில் நிலவும் சுகாதார சீர்கேட்டை போக்குவதற்கு நிரந்தர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • பெருமாநல்லூர் ஊராட்சியில் மெயின் ரோட்டில் இருந்து 100 அடி தூரத்துக்கும் மேல் குழி தோண்டி உள்ளார்கள்.
    • கழிவுநீர் கால்வாயும் அமைக்கவில்லை. அடுத்த 300 அடிக்கு மேல் கால்வாய் அமைத்துள்ளார்கள்.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் காலனி, கே.எம்.சி. பப்ளிக் ஸ்கூல் எதிரில் உள்ள தெருவில் மத்திய அரசு நிதியில் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பே கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பெருமாநல்லூர் ஊராட்சியில் மெயின் ரோட்டில் இருந்து 100 அடி தூரத்துக்கும் மேல் குழி தோண்டி உள்ளார்கள். ஆனால் கால்வாய் அமைக்க வில்லை. அடுத்த 200 அடிக்கு மேல் குழியும் தோண்டவில்லை. கழிவுநீர் கால்வாயும் அமைக்கவில்லை. அடுத்த 300 அடிக்கு மேல் கால்வாய் அமைத்துள்ளார்கள். அதன் தரம் மிகவும் மோசமாக உள்ளது. மேலும் கால்வாயில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கியுள்ளது. வீடுகளே இல்லாத பக்கம் கால்வாய் நேர்கோட்டில் இல்லாமல் வளைந்தும், நெளிந்தும் போடப்பட்டுள்ளது. இது அமைத்ததன் நோக்கமே புரியாமல் அந்த தெருவில் உள்ள மக்கள் புலம்பி தவிக்கிறார்கள். வீடுகள் அதிகம் உள்ள பகுதியில் கால்வாய் அமைக்காமல் ஊருக்கு ஒதுக்குப்புறம் குறைந்த வீடுகளே உள்ள பகுதியாக தேர்ந்தெடுத்து பாதி பகுதிக்கு மட்டும் கழிவுநீர் கால்வாய் அமைத்ததால் நிதி முறைகேடு ஏற்பட்டு இருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகிக்கிறார்கள். எனவே இது பற்றி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம். மேலும் திருப்பூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொதுமக்களை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தகவலை திருப்பூர் மாவட்டம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. பொது செயலாளர் பா.குமார் தெரிவித்துள்ளார்.

    • கழிவுநீர் தேங்கி நிற்பதால் இங்கு கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது.
    • கழிவுநீர் தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்

    பல்லடம்:

    பல்லடம் அண்ணா நகர் பகுதியில், சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாநகர் மேற்குப்பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்றும் இதனால் கழிவுநீர் தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    அண்ணாநகர் மேற்குப் பகுதியில் முறையான கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாததால் இங்குள்ள தாழ்வான பகுதியில் கழிவு நீர் குளம் போல் தேங்கி விடுகிறது. மேலும் மழை பெய்தால் இங்கு மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கழிவுநீர் தேங்கி நிற்பதால் இங்கு கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. இங்குள்ள ஆழ்குழாய் கிணறு அருகே கழிவுநீர் தேங்குவதால் ஆழ்குழாய் கிணற்று மூலம் வரும் நீரும் கழிவு நீராகவே வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவு நீர் கால்வாய் அமைத்து இந்தப் பகுதியில் கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு பண்ருட்டி நகரில் 5-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாகனங்களை வைத்துள்ளனர்.
    • பறிமுதல் செய்து அந்த வாகனங்களுக்கு முறையான அனுமதி மற்றும் உரிமம் உள்ளதா?

    கடலூர்:

    பண்ருட்டி நகரில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் உள்ள செப்டிக் டேங்குகளில் சேகரமாகும் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு பண்ருட்டி நகரில் 5-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாகனங்களை வைத்துள்ளனர். இந்த வாக னங்கள் மூலம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள செப்டிக் டேங்க் கழிவு களை அகற்ற அகற்றும் வாகனங்க ளில் எடுத்து சென்று பின்னர் அந்த கழிவுகளை பண்ருட்டி கெடிலம் ஆற்று பகுதி யில் திறந்த வெளியில் கொட்டு கின்றனர்.

    கழிவுகளால் அப்பகுதி யில் துர்நாற்றம் வீசுவ தோடு, சுகாதாரக் சீர்கேடும் ஏற்படு கிறது. இதனால் கழிவுகளை திறந்த வெளி யில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுப்ப தோடு, அத்துமீறி கொட்டு பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையாளர் பானுமதி, நகராட்சி துப்புரவு அலுவலர் முருகேசன் ஆகியோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இன்று அதிகாலை பண்ருட்டி கெடிலம் ஆற்றுப் பகுதியில் செப்டிக் டேங்க் கழிவுகளை திறந்து வெளியில் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய 5 வாகனங்களை பறிமுதல் செய்து அந்த வாகனங்களுக்கு முறையான அனுமதி மற்றும் உரிமம் உள்ளதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பொது மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது
    • கலெக்டரிடம் புகார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் சகாய அன்னை ஆலய பங்குத்தந்தை கிளமென்ட் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகளை சகாய அன்னை ஆலய சுற்றுசுவர் மற்றும் அக்சீலியம் தொழிற் கல்வி சுற்றுசுவர் அருகில் கொட்டப்பட்டு தீயிட்டு கொளுத்துகின்றனர்.

    தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் குப்பைகள் கொளுத்தும் போது புகை மண்டலம் சூழ்ந்து பொது மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    மாசு கலந்து காற்றை சுவாசிப்பதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை அள்ளி வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    மேலும் குப்பைகளை தீயிட்டு எரிக்கக்கூடாது. இவ்வாறு இதில் கூறப்பட்டிருந்தது.

    • பக்கத்து நிலத்துகாரின் பசு மாடு முட்டியதில் இறந்ததாக புகார்
    • நஷ்ட ஈடு பெற்று தர வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த பள்ளகொள்ளை கிராமத்தை சேர்ந்த வர் குமாரசாமி, விவசாயி. இவர் சொந்தமாக பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த பசுமாடு தற்போது 8 மாத சினையாக இருந்தது.

    பசுமாட்டை கடந்த 1-ந் தேதி குமாரசாமி கோட்டையூர் ஏரியில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்துவிட்டு அணைக்கட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அங்கிருந்த பள்ளத்தில் பசுமாடு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து குமாரசாமி அணைக்கட்டு போலீசில், பனந்தோப்பு பட்டியைச் சேர்ந்த பக்கத்து நிலத்துகாரின் பசு மாடு முட்டியதில் தனது பசுமாடு இறந்ததாகவும், அதற்கு நஷ்ட ஈடு பெற்று தர வேண்டும் எனவும் புகார் கொடுத்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், நிவாரணம் கிடைக்கும் வரை இறந்த பசுமாட்டை அப்புறப்படுத்த உரிமையாளர் மறுப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    6 நாட்கள் ஆகியும் இறந்துபோன பசுமாட்டை அப்பு றப்ப டுத்தாமல் ஏரியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்ப டுத்துகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்கமுடியாமல் மூக்கை பிடித்த படியே கடந்து செல்கின்றனர்.

    பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இறந்து போன மாட்டை அந்த பகுதியில் இருந்து அப்பு றப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏரி கால்வாயில் ெகாண்டு செல்ல திட்டம்
    • நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம், நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் அடுத்த கணபதி நகரில் சுமார் 200 வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்களின் வசதிக்காக தெருக்களின் ஓரம் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது.

    குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் மூலம், மோர்தானா அணையில் இருந்து நெல்லூர் பேட்டை பெரிய ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயில் ெகாண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

    இதற்காக தற்போது குடியாத்தம்- பேரணாம்பட்டு சாலையின் ஓரத்தில் செல்லும் மழைநீர் கால்வாயில், கழிவுநீர் செல்ல கால்வாய் கட்டப்பட்டது. பல்வேறு காரணங்களால் அந்த கால்வாய் பணி முழுமையடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

    தற்போது அந்த கால்வாயில் வரும் கழிவுநீர், பாதியில் கால்வாய் கட்டிடம் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து செல்ல வழியில்லாமல் அதிகளவில் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்தபடியே செல்கின்றனர்.

    பல நாட்களாக தேங்கிநிற்கும் கழிவுநீரில் கொசக்களின் உற்பத்தி அதிகரித்து, சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    பொதுமக்களின் வசதிக்காக கடந்த 3 ஆண்டுக்கு முன்பு குடியிருப்பு பகுதியில் மட்டும் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக குடியிருப்பில் இருந்து நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு கழிவுநீர் எடுத்துசெல்ல கடந்த 2 மாதத்திற்கு முன்பு கால்வாய் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    அந்த பணியும் முழுமையாக முடியாததால், கழிநீர் குளம்போல் தேங்கி கொசு உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

    இரவு நேரத்தில் கொசுக்கள் துரத்தி, துரத்தி கடிப்பதால் நாங்கள் தூக்கத்தை இழந்து தவிக்கிறோம். மாலையில் கொசுக்கள் தொல்லை அதிகாம இருப்பதால் நாங்கள் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழல் நிலவி வருகிறது.

    கழிவுநீர் தேங்கி நிற்கும் இடத்தில் இருக்கும் விவசாய நிலங்கள் அதிகளவில் பாதிப்படைகிறது. மழை காலங்களில், ஏரிக்கு வரும் மழைநீர் கழிவுநீரோடு கலந்து, விவசாய நிலத்தில் தேங்கி பயிர்களை நாசம் செய்கிறது. இதனால் மழை காலங்களில் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது.

    எனவே மக்களின் நலன் கருதி கால்வாய் கட்டும் பணியை முழுமையாக செய்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு தெரிவித்தனர்.

    • 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்
    • அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

    வேலூர்,

    வேலூர் தொரப்பாடி ஜெயில் அருகே ராம் சேட் நகர் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    பொதுமக்கள் எதிர்ப்பு

    ராம் சேட் நகர் நுழைவு வாயில் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று காலை ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இங்கு கால்நடை ஆஸ்பத்திரி கட்டுவதால் ஏராளமான கால்நடைகள் இங்கு கட்டுவார்கள் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தியாகும்.

    இதனால் இப்பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டக்கூடாது. புறநகர் பகுதியில் வேறு எங்காவது கட்ட வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆஸ்பத்திரி கட்ட அதிகாரிகள் நில அளவீடு செய்ய சென்றனர். ஆஸ்பத்தி 2-வது நாளாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    செய்வது அறியாது தவித்த பொதுமக்கள் சிறிது நேரத்திற்கு பின்னர் அவர்களாகவே கலைந்து சென்றனர்.

    • தினசரி காய்கறி சந்தையில் இருந்து காய்கறி கழிவுகளை எடுத்து வந்து உணவாக அளித்து வருகிறார்.
    • குமார் நகர் பகுதியில் வசிக்கும் தனிநபர் ஒருவர் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

    உடுமலை:

    உடுமலை அருகே சின்ன வீரம்பட்டி ஊராட்சி உள்ளது. இந்தப் பகுதிக்கு உட்பட்ட சேகர் புரம்,குமார் நகர்,சித் தாண்டீஸ்வரர் லே-அவுட், பெதப்பம்பட்டி ரோடு,ஏரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தனிநபர் ஒருவர் காய்கறி கழிவுகளை கொட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் புகார் அனுப்பி உள்ளனர்.அதில் கூறியுள்ளதாவது:- குமார் நகர் பகுதியில் வசிக்கும் தனிநபர் ஒருவர் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். அவர் வளர்த்து வருகின்ற கால்நடைகளுக்கு உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ராஜேந்திர சாலையில் உள்ள தினசரி காய்கறி சந்தையில் இருந்து காய்கறி கழிவுகளை எடுத்து வந்து உணவாக அளித்து வருகிறார். அதில் இருந்து எழும் துர்நாற்றம் சுற்றுப்புற வீடுகளில் வசித்து வரும் பொது மக்கள் குழந்தைகளுக்கு உடல் ஒவ்வாமைகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட நபரிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் சின்ன வீரம்பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே சின்ன வீரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குமார் நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் நபர்மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

    • வேட்டைக்காரன்புதூர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது.
    • சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டிசெட்டிபட்டியில் இருந்து வேட்டைக்காரன்புதூர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது.

    பாதள சாக்கடை

    இந்த குடியிருப்பில் இருந்து கழிவுநீர் வெளிேயறுவதற்கு வசதியாக 6 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை கட்டி முடிக்கப்பட்டது.

    அவற்றை சரியாக கட்டி முடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதன் காரணமாக சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    வேட்டைக்காரன்புதூர் பகுதியில் இருந்து பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவ -மாணவிகள் மூக்கை அடைத்துக் கொண்டு கழிவுநீரை மிதித்துச் செல்வதால் நோய் தொற்றும் ஏற்படும் அபாயம் உள்ளது. கழிவுநீர் வெளியேறி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கழிவு நீரில் விழும் அபாயமும்

    ஏற்பட்டுள்ளது.

    சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×