search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rain water"

    • கூடுதல் செலவு ஏற்படுவதோடு மாணவர்கள், வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் ஆகியோர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.
    • ஊர்மக்கள் கையில் கருப்புக்கொடியுடன் வெள்ள நீருக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18-ந்தேதி பெய்த கனமழையால் உடன்குடி அருகேயுள்ள சடையநேரிகுளம் உடைந்து, குளத்து தண்ணீர் பல்வேறு ஊர்களுக்குள் புகுந்தது.

    இதில் உடன்குடி அருகே வட்டன்விளை, வெள்ளாளன்விளை கிராமம் அதிகமாக பாதிக்கப்பட்டு நான்கு புறமும் தண்ணீரால் சூழப்பட்ட தனித்தீவாக மாறியது.

    போக்குவரத்து வசதி இல்லாமல் வெள்ளாளன் விளை கிராமத்தின் சர்ச் வழியாக வெளியூர்களுக்கு சென்று வந்தனர். இதனால் வட்டன்விளையில் இருந்து உடன்குடி மற்றும் பரமன்குறிச்சிக்கு நேர்வழியில் செல்லும் பாதை தடைபட்டு பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

    இதனால் கூடுதல் செலவு ஏற்படுவதோடு மாணவர்கள், வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் ஆகியோர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். பல அடி உயரத்திற்குநீர் தேங்கி நிற்கும் வட்டன்விளை வடக்குத் தெரு தார்ச்சாலை வழியாக பரமன்குறிச்சி- மெஞ்ஞான புரம் பிரதான சாலைக்கு செல்ல தற்காலிகமாக மணலை கொட்டி சாலை வசதி செய்து தர வேண்டி இப்பகுதியில் உள்ள மக்கள் மாவட்ட கலெக்டரிடமும், அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இைதயொட்டி நேற்று ஊர் முழுவதும் கருப்பு கொடி கட்டப்பட்டது சுமார் 50 நாட்களாக 2 கிலோ மீட்டர் தூரத்தில் செல்லும் நாங்கள் 7 கி.மீ. தூரம் சுற்றி செல்கிறோம் என்றும், 2 கி.மீ. வழியாக சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும் அல்லது உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில் திரண்ட ஊர்மக்கள் கையில் கருப்புக்கொடியுடன் வெள்ள நீருக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம், கிராம அதிகாரி கணேசபெருமாள் மற்றும் அதிகாரிகள் ஊர்மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.ஓரு வாரத்திற்கு தற்காலிக சாலை வசதி செய்து தரப்படும் என அதிகாரிகள் கூறியதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

    மேலும் இப்பகுதியில் உள்ள ஏராளமான விவசாய தோட்டங்களில் இன்னும் தண்ணீருக்குள்ளே இருக்கின்றன. தோட்டத்திற்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    • மழை பெய்து கொண்டிருந்த போதே நேரு தெருவில் தேங்கிய வெள்ளம் ஆட்களை மூழ்கடிக்கும் அளவுக்கு காணப்பட்டது.
    • மதியத்துக்கு பிறகே அந்த பகுதியில் சாக்கடை குழாயில் பள்ளம் தோண்டி சரி செய்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    சென்னை சூளைமேடு அண்ணா நெடும்பாதையை ஒட்டியுள்ள நேரு தெரு மிகவும் பள்ளமான தெருவாகும். சென்னை சாலிகிராமம், வடபழனி, கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் இந்த தெருவில்தான் வந்து சேருகிறது. இதனை சுற்றியுள்ள தெருக்கள் சற்று மேடாக காணப்படுவதால் இங்கிருந்து வெள்ளம் வெளியேறவில்லை.

    இந்த பகுதியில் உள்ள மழை நீர் வடிகாலும் தூர்ந்து போய்விட்டதால் வெள்ளம் வடியாமல் 4 நாட்களாக தேங்கி கிடந்தது. மழை பெய்து கொண்டிருந்த போதே நேரு தெருவில் தேங்கிய வெள்ளம் ஆட்களை மூழ்கடிக்கும் அளவுக்கு காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி தவித்தனர்.

    மழை ஓய்ந்து 3 நாட்களாக வெள்ளத்தை அப்புறப்படுத்திய நிலையில் நேரு தெருவில் வெள்ளத்தை அகற்ற நேற்று காலை வரை யாரும் வரவில்லை. இதனால் நேற்று காலை வரை ஒரு ஆள் உயரத்துக்கு வெள்ளம் தேங்கி நின்றது. நேற்று மதியத்துக்கு பிறகே அந்த பகுதியில் சாக்கடை குழாயில் பள்ளம் தோண்டி சரி செய்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இன்று காலை அந்த பகுதியில் வெள்ளம் முழுமையாக வெளியேற்றப்பட்டது. இதனால் 4 நாட்களாக அந்த பகுதி மக்கள் உணவுக்கே வழியில்லாமல் தவித்தனர்.

    • சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
    • என்.டி. தமிழ்ச்செல்வன். என்.ராமச்சந்திரன், முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நேற்று மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்திய படி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.


    நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாத்திடும் வகையில் பாலாஜி நகரைச் சேர்ந்த நேர்மை நகரில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமினை பார்வையிட்ட பின், பாலாஜி நகர் பிரதான சாலை, குமரன் நகர், திருப்பதி நகர், வளர்மதி நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப்படும் பணிகளையும், சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அக்பர் ஸ்கொயர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவினை வழங்கினார்,

    இந்த ஆய்வின் போது நகர் ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன், மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையர் கே.ஜே.பிரவீன் குமார், மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ் குமார், பா. முரளீதரன், ஏ. நாகராஜன், கே.சந்துரு, சி.மகேஷ்குமார், என்.டி. தமிழ்ச்செல்வன். என்.ராமச்சந்திரன், முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாநகராட்சி, மாவட்ட நிா்வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை சாா்பில் சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
    • கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

    சென்னை:

    சென்னையில் மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    வடகிழக்குப் பருவமழை, காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரில் சில இடங்களில் மழைநீா் தேங்கி நோய்த்தொற்று பரவும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, மாநகராட்சி, மாவட்ட நிா்வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை சாா்பில் சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

    இது தொடா்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பருவமழை காலத்தில் வெள்ளநீா் தேங்காத வகையில் கழிவுகளை அகற்றுவது அவசியம். மழை நீா் தேக்க மடைந்த பகுதிகளில் தூய்மைப் பணிகளை விரிவாக மேற் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக, குடிநீரில் குளோரின் கலந்து விநியோகிக்குமாறும், உணவுப் பொருள்களின் தரத்தை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    வயிற்றுப் போக்கு, உணவு ஒவ்வாமை பாதிப்புகள், காலரா பாதிப்புகள் கண்டறியப்பட்டால், அது குறித்து சம்பந்தப்பட்ட தனியாா், அரசு மருத்து வமனைகள் சுகாதாரத் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

    • பாளை சீனிவாசன் நகர் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி அனைவரும் அந்த கழிவு நீரின் வழியாகத்தான் சென்று வரும் நிலை உள்ளது.
    • கழிவுநீர் ஓடை சரியான முறையில் இல்லாததால் அங்கு மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக காணப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி 38-வது வார்டு பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் ராமலட்சுமி, சின்னத்துரை, ஜெபமணி, நடராஜன், கந்தசாமி, நாராயணன், தங்கம், கோலப்பன், சுந்தரி, மகாராஜன் ஆகியோர் மாநகராட்சி மண்டல அதிகாரிகளிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாளை சீனிவாசன் நகர் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கி தெருக்களில் பள்ளி குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அந்த கழிவு நீரின் வழியாகத்தான் சென்று வரும் நிலை உள்ளது. சீனிவாசன் நகர் பகுதியில் நாங்குநேரி சர்வீஸ் ரோட்டில் அமைந்திருக்கும் ஆதித்தனார் 1-வது தெருவில் கழிவுநீர் ஓடை சரியான முறையில் இல்லாததால் அங்கு மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை நோய்வாய்ப்படும் நிலை உள்ளது.

    எனவே மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதியை பார்வையிட்டு தாழ்வாக இருக்கும் கழிவு நீர் ஓடையை உயர்த்தி அமைத்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனிவாச நகர் தனியார் மஹால் முதல் கோகுலம் நகர் அடுத்ததாக அமைந்துள்ள குளம் வரை ஓடையை நீட்டிப்பு செய்து சரியான முறையில் கழிவுநீர் ஓடை அமைத்து தரவேண்டும். இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    • மழை காலங்களில் வடிகால் வாய்க்கால் வழியாக தண்ணீர் வடிந்து விடும்.
    • தற்போது வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குகாடு கிராம கமிட்டியை சேர்ந்த மக்கள் முத்துப்பேட்டை தாசில்தார் மகேஷ்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    முத்துப்பேட்டை பாமணி ஆறு உடைப்பு ஏற்பட்டகாலங்களிலும் மற்றும் மழை வெள்ளம் ஏற்பட்ட காலங்களிலும் முத்துப்பேட்டை சில்லாடி வழி பட்டறைக்குளம் வடிகால் வாய்க்கால் என்று அழைக்கப்படும் வடிகால் வாய்க்கால் வழியாக தண்ணீர் பட்டறைக்குளம் சென்று அங்கிருந்து கோறையாற்றில் தண்ணீர் வடிந்து விடும்.

    தற்போது அந்த வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே சில்லடி வாய்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    • கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
    • ஜே.சி.பி. மற்றும் டேங்கர் லாரி உதவியுடன் மழை நீரை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து தலைவர் அனுராதா செய்தார்.

    நெல்லை:

    பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பிருந்தாவன் நகர், ஆசிரியர் டி காலனி, மீனாட்சிசுந்தரம் நகர், அருணாசலபுரம் 6-வது தெரு குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மழைநீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் வீடுகளில் இருந்த வெளியேற முடியாமலும், அவர்களது அன்றாட பணிகள் முடங்கி கிடப்பதாகவும் பஞ்சாயத்து தலைவி அனுராதா ரவிமுருகனிடம் புகார் கூறினர்.

    இதையடுத்து உடனடியாக அங்கு சென்று மழைநீர் தேங்கி கிடக்கும் பகுதிகளை பஞ்சாயத்து தலைவர் அனுராதா ரவிமுருகன் பார்வையிட்டார். பின்னர் உடனடியாக ஜே.சி.பி. மற்றும் டேங்கர் லாரி உதவியுடன் மழை நீரை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, ஒன்றிய மேற்பார்வையாளர் முருகன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் தண்டபாணி குமரன், வார்டு உறுப்பினர்கள் சுரேஷ், பூர்ணிமா மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள தாழ்வான சில இடங்களில் மழைநீர் தேங்கியது.
    • தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி மாநகராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வேகமாக நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள தாழ்வான சில இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஒவ்வொரு பகுதியாக அதிகாரிகளுடன் சென்று மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், இந்த பகுதிகளில் துரித நடவடிக்கை எடுத்து வருவது மட்டுமின்றி சில பகுதிகளுக்கு தனது சொந்த செலவில் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்து, சில பகுதிகளுக்கு ஊழியர்களை நியமித்து, நடைபெறும் பணிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிக்கும் அதிகாரிகளையும், கட்சியினரையும் தொடர்பு கொண்டு அப்பகுதியில் நடைபெறும் பணிகள் என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித்தும் அவ்வப்போது விசாரித்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

    இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட அன்னை தெரசா மீனவர் காலனி, பாக்கியநாதன் விளை, தஸ்நேவிஸ் நகர், பொன்சுப்பையாநகர், 7-வது வார்டுக்குட்பட்ட கலைஞர்நகர், லூர்தம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதாக தகவல் கிடைத்தவுடன், அப்பகுதிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டு, மழைநீரை விரைவாக வெளியேற்றுவதற்கான பணிகளை செய்தார். மேலும், கலைஞர்நகர் மற்றும் பாக்கியநாதன் விளை பகுதிகளில் உள்ள மழைநீரை வெளியேற்றும் மின் மோட்டார் அறையை ஆய்வு செய்தார்.

    மேலும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

    இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

    தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.. அதனை அகற்றும் பணி மாநகராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வேகமாக நடைபெற்று வருகிறது.

    மழைநீர் எங்கெங்கு தேங்கி இருக்கிறதோ அங்கு மக்களுக்கு காலை மற்றும் மதிய உணவு கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், கவுன்சிலர் ஜெயசீலி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டபிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, அல்பர்ட் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • ஜே.சி.பி. எந்திரம் மூலம் வடிகால் அமைத்து மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளை மேயர் பார்வையிட்டார்.
    • சேதமான சாலைகளை செப்பனிடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மேயர் அறிவுறுத்தினார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேலப்பாளையம் 31-வது வார்டு மேல குலவணிகர்புரம், குறிச்சி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் மழைநீர் தேங்கிய இடங்களை மேயர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்பகுதியில் போர்க்கால அடிப்படையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தற்காலிகமாக சிறு மழைநீர் வடிகால் அமைத்து மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு மீண்டும் மழைநீர் தேங்காத வண்ணம் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

    அதைதொடர்ந்து 48-வதுவார்டு கருங்குளம் ராஜாஜி தெரு, மற்றும் ஜான்ஸ் ஹெலன் சிட்டி பிரதான சாலையில் தேங்கிய மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்திடவும், சேதமான சாலைகளை உடனடியாக செப்பனி டவும் சம்பந்தப் பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, துணை கமிஷனர் தாணுமூர்த்தி, கவுன்சிலர் ஆமினாசாதிக், உதவி செயற்பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் சிவசுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் முருகன், சுகாதார அலு வலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன் உடன் இருந்தனர்

    • நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் அந்த கண்வாயில் செல்ல வழி இல்லாமல் விளைநிலங்களுக்குள் புகுந்தது.
    • சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை தாலுகா பண்பொழி-வடகரை சாலையில் கரிசல்குடியிருப்பு விலக்கில் உள்ள ஆற்று பாலத்தில் 3 கண்வாய்கள் உள்ளது. இதில் ஒரு கண்வாய் பல நாட்களாக அடைத்து சீரமைக்கப்படாமல் இருந்து வருவதாகவும், அதனை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் அந்த கண்வாயில் செல்ல வழி இல்லாமல் விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் விவசாயிகள் பயிர் செய்திருந்த நெற் பயிர்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
    • 18-வது வார்டுக்கு உட்பட்ட ராஜகோபால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு விட்டதால் சாலையில் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது.

    தூத்துக்குடி மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட அன்னை தெரசா நகர், ஹரிராம் நகர், ராஜீவ்நகர் மற்றும் 18-வது வார்டுக்கு உட்பட்ட ராஜகோபால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள துரிதப்படுத்தினார்.

    அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகராட்சி உதவி ஆணையர் சேகர், கவுன்சிலர் ராமர், ஜான் மற்றும் பாஸ்கர், மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.

    • யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
    • தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது

    வேலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடலோர மாவட்டங்களில் தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் ஒரு சில வட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று சில பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.

    பல்வேறு இடங்களில் சேரும் சகதியுமாக மாறியது. வேலூரில் முள்ளிப்பாளையம், கேகே நகர், சம்பத் நகர், சைதாப்பேட்டை, சுண்ணாம்பு கார தெரு, கொசப்பேட்டை உட்பட பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தின் உள்ள பழமையான மரம் உள்ளது. இந்த மரம் ஒரு பகுதி பட்டுப்போன நிலையில் இருந்தது.

    கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக மரத்தின் பெரிய கிளைகள் நேற்று இரவு முறிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    ×