என் மலர்
நீங்கள் தேடியது "rain water"
- தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- தொடர்ந்து இன்று காலையிலும் திருச்செந்தூர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.
திருச்செந்தூர்:
வடகிழக்கு பருவமழை மீண்டும் தொடங்கி உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உள்பட 4 மாவட்டங்களில் இன்று பரவலான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு உட்பட்ட சிவன் கோவில் வளாகத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அங்கு தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இன்று காலையிலும் திருச்செந்தூர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
- மழை நீரால் பல்வேறு முதுமக்கள் தாழிகள் மற்றும் மணல்திட்டுகள் சேதமடைந்து உள்ளது.
- மழை நீர் விழும் இடத்தின் நேர் பிளாஸ்டிக் பொருட்களை வைத்து மழைநீர் குழிகளுக்குள் செல்லாமல் இருக்க வைத்துள்ளனர்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அகழாய்வு பணிகள் நடந்தது. இந்த அகழாய்வில் ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் தோண்டப்பட்ட குழிகளில் தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம், இரும்பு மற்றும் வெண்கலப் பொருட்கள் மட்டுமல்லாமல் 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதை பாதுகாக்க தற்காலிகமாக கூரைகள் அமைக்கப்பட்டது. இந்த கூரைகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டு வந்தது. எனவே மழை காலத்திற்கு முன்பு அதை அகற்றி புதிய கொட்டகை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று பெய்த கனமழையால் ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூரையில் உள்ள சேதமடைந்த பகுதி வழியாக அகழாய்வு குழிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் மழை நீரால் பல்வேறு முதுமக்கள் தாழிகள் மற்றும் மணல்திட்டுகள் சேதமடைந்து உள்ளது.
மழை நீர் விழும் இடத்தின் நேர் பிளாஸ்டிக் பொருட்களை வைத்து மழைநீர் குழிகளுக்குள் செல்லாமல் இருக்க வைத்துள்ளனர். ஆனால் அந்த பொருட்களிலும் நீர் நிரம்பி தொல்லியல் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து வருவது தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- அம்பை சுற்றுவட்டாரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
- முழங்கால் அளவிற்கு தேங்கிய தண்ணீரால் பக்தர்கள் பெரும் அவதி அடைந்தனர்.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 1 மாதத்திற்கும் மேலாக கோடை மழையானது அவ்வப்போது பரவலாக பெய்து வருகிறது. இதனால் ஓரளவுக்கு பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும், பிற்பகலில் பரவலாக மழை பெய்வதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். நேற்று சேரன்மகாதேவி சுற்றுவட்டாரத்தில் பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை சிறிது நேரம் பெய்தது. அங்கு அதிகபட்சமாக 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. நெல்லையில் 2.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து எஸ்டேட் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. காக்காச்சியில் 10 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 8 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
அம்பை சுற்றுவட்டாரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மின்தடை பாதிக்கப்பட்டு ஏராளமான கிராமங்கள் இருளில் மூழ்கின. கல்லிடைக்குறிச்சி அருகே வெள்ளாங்குளியில் சுடலைமாடசுவாமி கோவில் அருகே உள்ள மரம் சாலையில் முறிந்து விழுந்தது. அப்போது அவ்வழியாக சென்ற காரின் முன்பகுதி கண்ணாடி உடைந்தது. காரில் இருந்தவர்கள் உயிர்தப்பினர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கடனாநதி, ராமநதி மற்றும் கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மெல்ல அதிகரித்தது.
அதிகபட்சமாக கருப்பாநதியில் 40 மில்லிமீட்டரும், கடனா நதி நீர்பிடிப்பு பகுதியில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது. சங்கரன்கோவிலில் 28 மில்லிமீட்டர் மழை பெய்தது. சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழையால் சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவிலில் தண்ணீர் புகுந்தது. முழங்கால் அளவிற்கு தேங்கிய தண்ணீரால் பக்தர்கள் பெரும் அவதி அடைந்தனர்.
தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருவதால் உடனடியாக தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து தண்ணீர் தேங்கி கிடந்ததால் இன்று 2-வது நாளாக தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான சிவன் தெரிவித்தபோது, 1 மணி நேரம் பெய்த கனமழைக்கு சங்கரன்கோவிலில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதற்கு காரணம் வாறுகால்களின் அளவு சுருங்கி விட்டது.
கோவிலை சுற்றி உள்ள சாலைகளின் உயரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கோவில் இருக்கும் இடம் தாழ்வான இடம் ஆகி விட்டது. ஒவ்வொரு முறை புதிய சாலை போடும்போது சாலையை தோண்டி போடாமல் உயரமாக்கிக் கொண்டே செல்வதால் இந்த நிலை ஏற்படுகிறது. இதை அரசும் கண்டு கொள்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான ஆய்வு செய்து வடிகால் வசதியை சரி செய்ததால் கோவிலுக்குள் மழை நீர் தேங்காத நிலை உருவாகும் என்றார்.
- தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் கத்தி மாறன்வளவு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது.
- இங்கு 295 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் கத்தி மாறன்வளவு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 295 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமைஆசிரியராக நாகவள்ளி என்பவர் பணி புரிந்து வருகிறார்.
இந்த பள்ளி சற்று தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் மழை காலங்களில், பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறிவிடுகிறது. இதனால் மாணவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர், கடந்த வாரம் கல்வி அதிகாரிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக பள்ளியில் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால், நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு அருகில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் வைத்து பாடம் நடத்தப்பட்டது.
இதுபற்றி அறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு தலைமைஆசிரியரிடம் வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த வட்டார கல்வி அலுவலர் வாசுகி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கருணாநிதி, ஒன்றிய குழு தலைவர் சுமதிபாபு, ஊராட்சி மன்ற தலைவர் பெரியதாயி ஆகியோர் பள்ளிக்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், பள்ளியில் தண்ணீர் புகாதவாறு தற்காலிகமாக தடுப்பு பணி மேற்கொள்வதாகவும், மழைநீர் வடிந்த பிறகு ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து நிரந்தர கால்வாய் அமைத்து கொடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
- கரூர் நகரப் பகுதிகளில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது
- குடியிருப்புகளிலும் மழை நீர் புகுந்தது.
கரூர்:
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக விட்டுவிட்டு லேசான அளவில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வெங்கமேடு, தாந்தோணிமலை, சுங்ககேட், கரூர் ஜவகர் பஜார் உட்பட பல்வேறு பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து வடிகால்களில் சென்றதோடு ஒரு சில பகுதிகளில் குடியிருப்புகளிலும் புகுந்தது.
- கனமழையால் மழைநீர்வடிய வழியின்றி வீடுகளை சூழ்ந்துள்ளது.
- ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு மழைநீர் வடிய வைக்கும் பணி.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி தோட்ட மானியத்தில் சில மாதங்களுக்கு முன்பு மயான சாலை பேவர் பிளாக் முலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளின் குறுக்கே செல்லும் வடிகால் வாய்கால்கள் பகுதி சாலை போடப்பட்டதால் குறுகியது.
தற்பொழுது பெய்து வரும் கனமழையால் மழை நீர்வடிய வழியின்றி வீடுகளை சூழ்ந்துள்ளது இதனால்பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டன மேலும் விசப்பூச்சிகள், பாம்புகள் வருவதால் பேரூராட்சி நிர்வாகம் விரைவாக புதிதாக அமைக்கப்பட்ட சாலை குறுக்கே வடிகால் குழாய்களை அமைத்துமழை நீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க கோரி 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இது குறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் இதனால் மயிலாடுதுறை சிதம்பரம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு வெட்டி மழை நீர் வடிய வைக்கப்பட்டது.
- தேங்கிய மழைநீரை அகற்ற தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்தார்.
- தரைபாலத்தை நேரடி கண்காணிப்பில் நகராட்சி எடுத்து கொண்டு துரித நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும்.
மழைநீர் அகற்றும் பணியை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- சத்திரப்பட்டி ரோட்டில் ெரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள், 50-க்கும் மேற்பட்ட நூற்பாலை மற்றும் விசைத்தறி கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கணபதியாபுரம் ெரயில்வே தரைபாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
மழையால் ெரயில்வே தரை பாலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பள்ளி மாணவர்கள், மில் தொழிலா ளர்கள் உரிய நேரத்துக்கு பள்ளிக்கும், வேலைக்கும் செல்ல முடியா மல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதனை கேள்விப்பட்ட ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா ஆகியோர் நேரில் ஆய்வு செய்து ராட்சத மின்மோட்டார்களை வர வழைத்து தேங்கிய மழைநீரை துரிதமாக வெளியேற்றி பாதையை ஒழுங்குபடுத்தினர்.
நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தி மழைநீர் வெளியேறி செல்லும் நீரோடையின் அடைப்பை நீக்கி மழைநீர் தங்குதடையின்றி செல்ல உரிய நடவடிக்கைகளை எடுத்தனர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ. வும், நகரசபை தலைவரும் கூறுகையில், மேம்பால பணிகள் நிறைவடையும் வரை மழை காலங்களில் கணபதியாபுரம் ெரயில்வே தரைபாலத்தை நேரடி கண்காணிப்பில் நகராட்சி எடுத்து கொண்டு துரித நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள ப்படும்.
மாணவர்கள், மில் தொழிலாளர்கள் இனி அச்சமின்றி கணபதியாபுரம் தரைபாலத்தை கடந்து செல்ல வழிவகை செய்து தரப்படும் என்றனர்.
- நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அலுவலகம் அருகிலேயே தான் உள்ளது.
- பொதுமக்கள் தங்கு தடை இன்றி வந்து செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தாராபுரம்:
தாராபுரம் உடுமலை சாலையில் உள்ளது தினசரி காய்கறி மார்க்கெட். இந்த சந்தை முன்பு பழைய பஸ் நிலையமாக இருந்தது. 1986-ம் ஆண்டு முதல் காய்கறி சந்தையாக செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. இங்கு தினசரி ஆயிரம் கிலோவிற்கு மேல் காய்கறி குப்பைகள் தேங்கி விடுகின்றன. இந்த சூழ்நிலையில் அருகிலேயே நகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்தம் மற்றும் நகராட்சியின் குடிநீர் தொட்டி ஆகியவை அமைந்துள்ளது. நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அலுவலகம் அருகிலேயே தான் உள்ளது.
இந்த சூழ்நிலையில் இங்கு குப்பைகளை வாரத்திற்கு ஒரு முறை இரண்டு முறை அள்ளுவதால்குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. மழைக்காலங்களில் குப்பைகள் ரோட்டில் அடித்துச் செல்லப்பட்டு மார்க்கெட் முழுவதும் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்படுகின்றன. இதனை உடனடியாக தீர்க்க வேண்டும் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் கடைக்காரர்கள் கூறி வந்த நிலையில் சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த தாராபுரம் தி.மு.க. நகர செயலாளர் பொறியாளர் முருகானந்தம் சாலை மறியல் செய்ய வேண்டாம் .உங்களுக்கு உடனடியாக குப்பைகளை அள்ளுவதற்கும் சாக்கடை வசதி மழைநீர் தண்ணீர் வெளியே செல்வதற்கு உண்டான வசதி அனைத்தும் செய்து தரப்படும் எனக் கூறியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது .இது குறித்து மார்க்கெட் தினசரி மார்க்கெட் கடைக்காரர் டேவிட் கூறிய போது, இங்கு மழை நீர் தேங்கி விடுகின்றது .மழை நீரோடு சாக்கடை நீரும் கலந்து வருகிறது .இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் .பொதுமக்கள் தங்கு தடை இன்றி வந்து செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
- நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ரத வீதிகளில் வடக்கு ரத வீதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
- தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து உதவி கமிஷனர் வெங்கட்ராமன் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ரத வீதிகளில் வடக்கு ரத வீதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த ரத வீதியில் லேசான சாரல் மழை பெய்தாலே குளம் போல தண்ணீர் தேங்கி கிடக்கும். இதனால் அந்த பகுதியில் சாலையோர கடை வைத்திருப்பவர்களும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்து வருவதாக தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காணும் படி மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, உதவி கமிஷனர் வெங்கட்ரா மனிடம் அறிவுறுத்தினார். அவரது வழிகாட்டுதலின் பேரில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையிலான பணியாளர்கள் இன்று வடக்கு ரத வீதியில் தேங்கி கிடந்த மழைநீரை மாநகராட்சி லாரியை கொண்டு மோட்டார் மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து அந்த பகுதியில் தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து உதவி கமிஷனர் வெங்கட்ராமன் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.
இது தொடர்பாக அப்பகுதி யில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடமும் கருத்து கேட்கப்பட்டது. மேலும் ஒரு சில இடங்களில் தேங்கி கிடந்த மழை நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக அந்த நீரில் மருந்து தெளிக்கும் பணியிலும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
- அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையிலே செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.
- வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தத்தளித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூரில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற லோடு லாரி சர்வீஸ் சாலை துவக்கத்திலேயே பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டதால் அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையிலே செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் திருச்சிக்கு செல்லக்கூடிய சர்வீஸ் சாலையில் திருப்பி அனுப்பியதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனால் அனைத்து வாகனங்களும் சுமார் 5 மணி நேரம் நகரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இதில் ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தற்போது வடகிழக்கு பருவ மழையின் காரணமாக இரவு முழுக்க மழை பெய்து கொண்டே இருந்த சூழ்நிலையில் சர்வீஸ் சாலை முழுக்க மழை நீர் தேங்கி நின்றததால் அதில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தத்தளித்து சென்றது குறிப்பிடத்தக்கது எனவே மேம்பால பணியை விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.
- பல்லடத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது.
- 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.
பல்லடம் :
பல்லடத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
நேற்று முன்தினம் காலை முதல் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து இரவு முழுவதும் அவ்வப்போது விட்டு, விட்டு பெய்தவண்ணம் உள்ளது. நேற்று அதிகாலை முதலே வானம் மப்பும், மந்தாரமுமாக இருந்தது. தொடர்மழையால் பல்லடம் அண்ணாநகர் பகுதியில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கிருந்த மக்கள் இரவு முழுவதும் மழைநீரை வெளியேற்றியபடி இருந்தனர். நகராட்சி ஊழியர்கள், மழைநீர் தேங்கியுள்ள அண்ணாநகரில் மோட்டார் வைத்து மழைநீரை வெளியேற்றி வருகின்றனர். இதே போல பல்லடம் பச்சாபாளையம், பனப்பாளையம், காலனி பகுதிகளில் உள்ள சில வீடுகளில் மழை நீர் புகுந்தது. மழைநீர் பாதித்த இடங்களை, பல்லடம் தாசில்தார் நந்தகோபால், நகராட்சி ஆணையாளர் விநாயகம்,உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தினர். பல இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
- கல்லாங்காடு வலசு, சக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கின்றன.
வெள்ளகோவில்:
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் மிதமான முதல் கன மழை பெய்து வந்தது. இதனால் குடியிருப்பு பகுதியை மழைநீர் சூழ்ந்தன. வெள்ளகோவில் பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்ததால் வெள்ளகோவில் நகர் பகுதியில் குமாரவலசு, கல்லாங்காடு வலசு, சக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கின்றன. இதனால் கொசு உற்பத்தியாகி நோய்த்தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி மழை நீர் தேங்கி இருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.






