என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traffic damage"

    • அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையிலே செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.
    • வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தத்தளித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற லோடு லாரி சர்வீஸ் சாலை துவக்கத்திலேயே பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டதால் அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையிலே செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் திருச்சிக்கு செல்லக்கூடிய சர்வீஸ் சாலையில் திருப்பி அனுப்பியதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதனால் அனைத்து வாகனங்களும் சுமார் 5 மணி நேரம் நகரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இதில் ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தற்போது வடகிழக்கு பருவ மழையின் காரணமாக இரவு முழுக்க மழை பெய்து கொண்டே இருந்த சூழ்நிலையில் சர்வீஸ் சாலை முழுக்க மழை நீர் தேங்கி நின்றததால் அதில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தத்தளித்து சென்றது குறிப்பிடத்தக்கது எனவே மேம்பால பணியை விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

    • பொக்லைன் எந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டது
    • தீப திருவிழாவுக்கு முன்பு சீரமைக்க வலியுறுத்தல்

    செங்கம்:

    செங்கம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணிகள் மந்தகதியாக நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக செங்கம் அருகே உள்ள முறையாறு, கரியமங்கலம், கொட்டகுளம், மண்மலை உள்ளிட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் தற்போது வரை மெத்தனமாக நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக மண்மலை மற்றும் கரியமங்கலம் பகுதிகளில் நீர் வழி கால்வாய்கள் மீது சிறிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    கரியமங்கலம் பகுதியில் சிறிய பாலம் அமைக்கப்பட்டு தற்காலிகமாக மண் கொண்டு மூடப்பட்டிருந்தது. தொடர் மழையின் காரணமாக தற்காலிகமாக மண் போட்டு மூடப்பட்ட இடத்தில் சரக்கு ஏற்றி வந்த லாரி நேற்று சிக்கிக் கொண்டது.

    இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நின்றன. இதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் சேற்றில் சிக்கிக்கொண்ட லாரி மீட்கப்பட்டது.

    இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தீபத் திருவிழா நெருங்கிவரும் சூழலில் செங்கம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சூழல் உள்ளது.

    எனவே இந்த சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அபராதம் விதிப்பதில் மும்முரம் காட்டும் போலீசார் ராஜபாளையம் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • ஆனால் போலீசார் அபராதம் விதிப்பது மட்டும் எந்த விதத்தில் நியாயம்? என்று தெரிவித்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகராட்சியான ராஜபாளையத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகன எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ராஜ பாளையம் நகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பெரும்பாலான சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு அதனை சரியாக மூடாமல் குண்டும், குழியுமாக காட்சிய ளிக்கிறது.

    இதுதவிர சத்திரப்பட்டி ரோடு ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகளும் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதனால் ராஜ பாளையம் பொது மக்கள் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி படும் அவஸ்தை சொல்லி மாளாது.

    ராஜபாளையம்-தென்காசி மெயின் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்தப்பகுதியை கடக்க குறைந்தது 30 நிமிடங்கள் ஆகிறது. ராஜபாளையத்தில் இருந்து வேறொரு பகுதிக்கு செல்ல எந்த சாலையை பயன்படுத்தினாலும் அங்கு ஏதாவது திட்டப்பணிகள் என்ற பெயரில் பள்ளம் தோண்டி வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    ராஜபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த போதிய போலீசார் நியமிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் இஷ்டத்திற்கு சென்று மேலும் மேலும் போக்குவரத்து நெரிசலை சிக்கலாக்குகின்றன.

    ஆனால் இதை யெல்லாம் கண்டு கொள்ளாமல் தற்போது ராஜபாளையம் போலீசார் ஹெல்மெட் அணியாமல் மற்றும் விதிமுறைகளை பின்பற்றவில்லை என கூறி மோட்டார் சைக்கிள்களை மறித்து அபராதம் போடும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

    கண் எதிரே போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் சாலையின் நடுவில் வாகனங்களை மறித்து போலீசார் அபராதம் விதிப்பது ராஜபாளையம் பகுதி மக்களை கடும் அதிருப்பதியடைய செய்துள்ளது. போலீசார் வாகனத்தின் எண்களை பதிவு செய்து அபராத தொகையை செலுத்துமாறும் உரிமையாளரின் செல்போனுக்கு தகவல் அனுப்புகிறார்கள். போலீசாரின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ராஜபாளையம் நகரில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித சாலைப்பணிகளும் நடைபெறவில்லை. அதற்கு மாறாக நன்றாக இருக்கும் சாலைகளையும் பள்ளம் தோண்டி வைத்துள்ளனர். மழை காலங்களில் சேறும், சகதியுமாகவும் மற்ற நேரங்களில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சரி செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் போலீசார் அபராதம் விதிப்பது மட்டும் எந்த விதத்தில் நியாயம்? என்று தெரிவித்தனர்.

    • வலது பக்கம் திரும்பியபோது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக ஆம்னி பஸ்சில் மோதியது.
    • 150-க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

    திண்டிவனம், நவ.20-

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 29). டிரைவர். இவர் சென்னையிலிருந்து நத்தத்திற்கு ஆம்னி பஸ்சில் 50 பயணிகளுடன் திண்டிவனம்- கருணா வூர் பேட்டை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் பழுதாகி லாரி ஒன்று நின்றி ருந்தது. லாரி மீது மோதாமல் இருக்க வலது பக்கம் திரும்பியபோது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக ஆம்னி பஸ்சில் மோதியது. அதேபோல் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ஆம்னி பஸ் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சென்னை அமந்த கரை பகுதியை சேர்ந்த ஆனந்தன், இவரது நண்பர்கள் 3 பேருடன் சென்னையில் இருந்து மதுரைக்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தனர்.

    இவர்கள் 3 பேரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இந்த விபத்தில் 3 ஆம்னி பஸ்களிலும் வந்த பயணிகள் மற்றும் காரில் வந்தவர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மேலும் இந்த விபத்தால் திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 3 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் சுமார் 1 மணி நேரம் போக்கவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டிவனம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக இருந்தது.

    • கல்வராயன் மலை ஓடைகளில் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடியது.
    • போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் வெளியூருக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கல்வராயன் மலையில் துரூர், தும்பை, பாச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் கல்வ ராயன் மலை ஓடை களில் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடியது. இதனால் பெரியார் மேகம் போன்ற நீர்வீழ்ச்சியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இந்நி லையில் நேற்று முன் தினம் கல்வராயன் மலை பகுதியில் பெய்த கனமழை யால் துருவூர் செல்லும் சாலையில் ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இைத தொடர்ந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது .அருகிலுள்ள தரைபாலமும் மழைநீர் வெள்ளத்தில் அடித்து ெசல்லப்பட்டது.

    துரூர் சாலையில செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியூருக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். கல்வராயன் மலை அடிவாரத்தில் பெய்த கன மழையால் முஷ்குந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் மங்கலம் மற்றும் அருளம் பாடி பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொது மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். அந்த வழி யாக வருபவர்களை மாற்று வழியில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    • சிதம்பரத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி தனியார் பஸ் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு வந்தது.
    • ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    சிதம்பரத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி தனியார் பஸ் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு வந்தது. திட்டக்குடியை அடுத்துள்ள ஆவினங்குடி அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் திடீரென சாலையின் குறுக்கே திரும்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதாமல் இருக்க வலது புறம் திருப்பினார். இதில் சாலையோர பள்ளத்தில் பஸ் இறங்கி நின்றது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோர் சிறுகாயமின்றி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். பள்ளத்தில் இறங்கிய தனியார் பஸ் பொக்லின் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது. இதனால் திட்டக்குடி- விருத்தாசலம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • சுமார் 420 அடி நீள காற்றாலை விசிறியின் இறக்கையை, நீளமான லாரியில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வழியாக சென்றது.
    • காற்றாலை இறக்கையை ஏற்றிச் செல்லும் இந்த லாரியை முந்தி செல்ல முடியாமல் நீண்ட வரிசை யில் அணிவகுத்து சென்றது.

    பரமத்தி வேலூர்:

    சேலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் பகுதியில் இருந்து மதுரையை நோக்கி சுமார் 420 அடி நீள காற்றாலை விசிறியின் இறக்கையை, நீளமான லாரியில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வழியாக சென்றது. பரமத்தி வேலூர் போலீஸ் சோதனைச் சாவடி எதிரே செல்லும்போது, பின்னால் வந்த பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள் என ஏராளமான வாகனங்கள் காற்றாலை இறக்கையை ஏற்றிச் செல்லும் இந்த லாரியை முந்தி செல்ல முடியாமல் நீண்ட வரிசை யில் அணிவகுத்து சென்றது.

    இதனால் நீண்ட நேரம் சேலம்-கரூர் தேசிய

    நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    வாகன ஓட்டி கள், பஸ் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியா மல் அவ திப்பட்டனர். காற்றாலை விசிறியை பகல் நேரத்தில் ஏற்றிக்கொண்டு செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்த லாரிகள் இரவு 11 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றால்போக்குவரத்து பாதிப்பு இருக்காது. எனவே இறக்கையை கொண்டு செல்லும் லாரிகளை இரவு நேரங்களில் இயக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மறுபுறம் பணிகள் முழுவதும் முடிவடையாத நிலை யில் சாலை கரடுமு ரடாக இருந்து வருகிறது.
    • லாரியை ஓட்டி சென்ற டிரைவர் காயங்களுடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    கடலூர்:

    விருத்தாசலம்- உளுந்தூ ர்பேட்டை சாலையில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. சாலையின் ஒருபுறம் பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் மறுபுறம் பணிகள் முழு வதும் முடிவடையாத நிலை யில் சாலை கரடுமு ரடாக இருந்து வருகிறது. நேற்று இரவு 9:30 மணி அளவில் விருத்தாசலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி காலி அட்டை பெட்டிகள் ஏற்றி சென்ற லாரி ஒன்று சாலையில் கரடு முரடான வழியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்தது. லாரியை ஓட்டி சென்ற டிரைவர் காயங்களுடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தால் விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • விழுப்புரம் அருகே இன்று காலை பழனி கோவிலுக்கு சென்று வந்த வேன் கவிழ்ந்து விபத்து : போக்குவரத்து பாதிப்பு:
    • நிலை தடுமாறிய வேன் சாலை நடுவில் இருந்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து..

    சென்னை அடையார் பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனி கோயிலுக்கு தைப்பூச விழாவில் கலந்து கொள்ள ஒரு வேன் மூலம் பழனிக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு திரும்பி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்  இந்த வேனை சென்னை திருமுல்லைவாயில் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராஜேஷ் ஓட்டி வந்தார். வேனில், ஏழுமலை, கலியமூர்த்தி, சுலோச்சனா, அகிலா, ராஜேஷ், ரேவதி, உட்பட10 ஆண்கள் குழந்தைகள் உட்பட 12 பெண்கள், மொத்தம்22 பேர் பயணம் செய்தனர்    வேன் விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிறுத்தம் பகுதியில் இன்று அதிகாலை சென்றது  அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடியது.

    இதில் நிலை தடுமாறிய வேன் சாலை நடுவில் இருந்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து   வேன் கவிழ்ந்த இடம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.சாலையில் கவிழ்ந்த வேனை போலீசார் அகற்றினர். அதன்பின்னரே போக்குவரத்து சீரானது. 

    • காவேரிப்பாக்கம் அருகே கார் பழுதாகி நின்றது
    • சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ் சாலையில் சாலை விரிவாக்க பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    இதனால் ஒரு சில இடங்களில் ஒரு வழி பாதையாக வாகனங்கள் செல்கிறது மேலும் மேம்பாலம் கட்டும் பணிகளும் ஒரு சில இடத்தில் நடைபெற்ற வருவதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர்

    இந்நிலையில் நேற்று மாலை தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற கார் ஒன்று திடீரென பழுதாகி நின்றது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் வரிசை கட்டி ஒரே இடத்தில் நின்றது. காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்

    இதனால் வாகனங்கள் சாலையில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு மேலாக அணிவகுத்து நின்றது.

    எனவே சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • இன்று காலை சாலையின் குறுக்கே 2 பஸ்களை நிறுத்தி அவர்களுக்கிடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது
    • ட்டக்குடியில் கடுமை யான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் கடலூர், திருச்சி மாநில நெடுஞ்சாலையில் காலை பள்ளிக்கு செல்லும் வாகனங்கள், கனரக வாகனங்கள், பாதசாரிகள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், சைக்கிளில் செல்வோர் என அதிக அளவில் இந்த சாலையை அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய மான சாலையாகும் இந்த சாலையில் இன்று காலை 2 தனியார் பஸ்கள் காலதாமதத்தால் ஏற்பட்ட பிரச்சினையில் இன்று காலை சாலையின் குறுக்கே 2 பஸ்களை நிறுத்தி அவர்களுக்கிடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதில் கனரக வாகனங்கள், விவசாய டிராக்டர், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் என அதிக அளவில் அணிவகுத்து நின்றதால் திட்டக்குடியில் கடுமை யான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்று தனியார் பஸ்களின் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் அன்றாடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதும், சில நேரங்க ளில் கைக லப்பாக மாறி மோதிக் கொள்வதும் நிகழ்கிறது.  போலீசார் சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு உரிய அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தால் இது போன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கலாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னை - பெங்களூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • சர்வீஸ் சாலை வழியாக வாகனங்களை மாற்றி விட்டனர்

    வாணியம்பாடி:

    சென்னையில் இருந்து காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் இறக்கையை ஏற்றிக் கொண்டு கனரக லாரி ஒன்று இன்று காலை வாணியம்பாடி வழியாக சென்று கொண்டு இருந்தது.

    வாணியம்பாடி வளையாம்பட்டு சென்னை - பெங்களூர் 6 வழிச்சாலையில் மேம்பாலத்தில் கனரக லாரி வந்து கொண்டு இருந்தபோது திடீரென வாகனத்தில் என்ஜின் பழுதானது. இதனால் லாரி சாலையை மறித்தபடி மேம்பாலத்தில் நின்றதால் மற்ற எந்த வாகனமும் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மேம்பாலத்தில் சிக்கி திணறினர். நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மேம்பாலம் வழியாக சென்ற வாகனங்களை சர்வீஸ் சாலை வழியாக மாற்றி விட்டனர்.

    சர்வீஸ் சாலையில் வாகனங்கள் எதிரும் புதிருமாக வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் லாரி டிரைவர் என்ஜீனில் ஏற்பட்ட பழுதை சரி செய்தார்.

    இதையடுத்து லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. 6 வழிச் சாலையில் லாரி பழுதாகி நின்றதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனால் வெளியூர் செல்ல வேண்டியவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    ×