என் மலர்
நீங்கள் தேடியது "Fines"
- முதல்கட்டமாக 500 கருவிகளை மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது.
- அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
சென்னை:
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாள்தோறும் 7 ஆயிரம் டன் வரையிலான குப்பைகள் அகற்றப்படுகிறது. இதில், பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் விதிகளை மீறி கட்டிட கழிவுகள் மற்றும் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் அபராதத் தொகை ரூ.500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக மாநகராட்சி உயர்த்தியது.
கடந்த 10 நாட்களில் மட்டும் பொது இடங்களில் விதிகளை மீறி குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.2½ லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அபராதத் தொகை விதிக்கும் நடைமுறையை டிஜிட்டல் மயமாக்க மாநகராட்சி திட்டமிட்டது. அதன்படி, போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்க பயன்படுத்தும் கருவி போல் டிஜிட்டல் கருவியை மாநகராட்சி சோதனை முறையில் பயன்படுத்தி வருகிறது.
முதல்கட்டமாக 500 கருவிகளை மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது. இந்த கருவிகள் 15 மண்டலங்களில் வழங்கும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது.
டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டடிருந்தார்.
- தன்னை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவமதித்ததாக மெலோனி தொடர்ந்த வழக்கில் ராபர்ட்டோ சேவியானோ என்ற மற்றொரு பத்திரிகையாளருக்கு 1000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
இத்தாலி நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடித்த அந்நாட்டு பெண் பத்திரிகையாளருக்கு நீதிமன்றம் 5000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. இத்தாலியில் சுயாதீன பத்திரிகையாளராக செயல்பட்டு வரும் கோர்டீஸே[Cortese] கடந்த 2021 இல் தனது எக்ஸ் [ட்விட்டர்] பக்கத்தில் தற்போதைய பிரதமர் மெலோனியின் பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டடிருந்தார்.
'நீ என்னை பயமுறுத்த முடியாது,மெலோனி.. நீ வெறும் 1.2 மீட்டர் [4 அடி] உயரம்தான். என்னால் உன்னை பார்க்க கூட முடியவில்லை' என்றும் கோர்ட்டிஸே எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். எக்ஸ் தளத்தில் மட்டுமின்றி பல்வேறு சமூக ஊடகங்களிலும், உள்ளூர் ஊடகங்களிலும் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இந்த கருத்து தொடர்பாக இருவருக்குமிடையில் சமூக வலைதளத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் மெலோனி கோர்டீஸே மீது நீதிமன்றத்தில் உருவ கேலி வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த மிலான் நீதிமன்றம் தற்போது கோர்டீஸே -கு 5000யூரோக்கள் [ ரூ.4.5 லட்சம்] அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2021 இல் மெலோனியின் தீவிர இடதுசாரி சகோதரர்கள் கட்சி எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதன்பின்னர் 2022 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அக்கட்சி சார்பில் மெலோனி இத்தாலி பிரதமர் ஆனார். தற்போது இந்த தீர்ப்பு குறித்து பேசியுள்ள கோர்டீஸே,'கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்துக்கு எதிராக தீவிர பிரச்னையை இத்தாலி அரசு கொண்டுள்ளது. இது சுயாதீன பத்திரிகையாளர்களுக்கு கடுமையான காலம். வரும் காலத்தில் சிறந்த நாட்களுக்காக நாம் காத்திருப்போம். நாங்கள் மனம் தளரப் போவதில்லை' என்று தெரிவித்துள்ளார்.
Italy's government has a serious problem with freedom of expression and journalistic dissent. This country seems to get closer to Orbán's Hungary: these are bad times for independent Journalists and opinion leaders. Let's hope for better days ahead. We won't give up!@Reuters https://t.co/sWojOlMJz1
— Giulia Cortese (@GiuliaCortese1) July 18, 2024
முன்னதாக ராபர்ட்டோ சேவியானோ என்ற பத்திரிகையாளர் தன்னை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவமதித்ததாக மெலோனி தொடர்ந்த வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரோம் நீதிமன்றம் ராபர்ட்டோவுக்கு 1000 யூரோக்கள் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- 15 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜய லலிதாம்பிகைக்கு ரகசிய தகவல்கள் வந்தன.
இதையடுத்து இன்று காலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து மங்கலம் ரோடு, மில்லர் பஸ் நிறுத்தம், போயம்பாளையம், தென்னம்பாளையம் ஆகிய பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 5 கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது இதையடுத்து 5 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்தனர். மேலும் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் வியாபாரியான கேரளாவை சேர்ந்த முகமது பர்கான் (23) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- இன்று (மே 29) வரலாறு காணாத வகையில் 52.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
- குடிநீர் வீணாகாமல் தடுப்பதை கவனிக்க 200 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் பருவநிலை குழம்பிபோயுள்ள நிலையில் அதன் தாக்கம் உலக நாடுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. துபாய் கனமழை, ஆப்கனிஸ்தான வெள்ளம், இந்தியாவில் தலையெடுக்கத் தொடங்கியுள்ள தண்ணீர் பஞ்சம் உள்ளிட்டவை இதில் அடக்கம்.
சமீப காலமாக தண்ணீர் பஞ்சத்தின் பிடியில் கர்நாடக தலைநகர் பெங்களூரு சிக்கித் தவிக்கும் நிலையில், இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. தற்போது டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.
இன்று (மே 29) வரலாறு காணாத வகையில் 52.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அரியானா மாநிலம் டெல்லிக்கு திறந்து விடும் தண்ணீரை நிறுத்தியுள்ளது நிலைமையை மேலும் மோசமாகியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து கார் கழுவுவது, கட்டுமான பணியிடங்கள் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் வேலைகளுக்கு குடிநீரைப் பபயன்படுத்துவது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி ஆம் ஆத்மி அரசு எச்சரித்துள்ளது.
மக்கள் தேவைக்கு அதிகமாக நீரைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. குடிநீர் வீணாகாமல் தடுப்பதை கவனிக்க 200 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கோரிக்கை விடுத்தும் அரியானா அரசு தண்ணீர் திறந்துவிட வில்லை என்றும் அரியானா பாஜகஅரசு டெல்லி அரசுக்கு எதிராக சதி செய்கிறதுஎன்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உடனடியாக தண்ணீர் திறக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்ல இருப்பதாக டெல்லி அமைச்சர் அதிஷி நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இடத்ற்கிடையில் டெல்லியில் சில பகுதிகளில் லேசான மலை பெய்ததால் மக்கள் சற்று ஆசுவாசம் அடைத்துள்ளனர்.
- வேட்டையாடி, கறியை சமைத்து சாப்பிட முயற்சிப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
- கைது செய்யப்பட்ட 8 பேரையும் எச்சரித்து விடுதலை செய்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அறுநூற்றுமலை பெலாப்பாடி கிராமத்துக்கு, வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை நாய்கள் துரத்தியுள்ளது. களைத்துப்போன இந்த மானை அதே பகுதியைச் சார்ந்த 8 பேர் கொண்ட கும்பல் வேட்டையாடி, கறியை சமைத்து சாப்பிட முயற்சிப்பதாக சேலம் மண்டல வன பாதுகாவலர் ராகுல், ஆத்தூர் கோட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து தும்பல் வனச்சரகர் விமல்ராஜ் தலைமையிலான வனத்துறையினர், பெலாப்பாடி கிராமத்திற்கு சென்று மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட முயற்சித்த அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, மாயவன், பாஸ்கரன், சண்முகம், கிருஷ்ணன், சரவணன், சிதம்பரம், ராஜேந்திரன் ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.
மேலும் புள்ளிமானை வேட்டையாடிய குற்றத்திற்காக ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து வசூலித்து, கைது செய்யப்பட்ட 8 பேரையும் எச்சரித்து விடுதலை செய்தனர்.
அருநூற்றுமலை ஆலடிப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராமங்களிலும் வனவிலங்குகளை வேட்டையாட மாட்டோம் என வனத்துறையினர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றி கிராம மக்கள் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
- சிலர் தனியார் பஸ்களில் சென்னை, பெங்களூரு, கோவை உள்பட பல முக்கிய நகரங்களுக்கு புறப்பட்டனர்.
- தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி வெளியூர்களில் தங்கி வேலை பார்த்தவர்கள் கடந்த சில நாட்களாக சொந்த ஊர்களுக்கு வந்தனர். பினனர் தேர்தல் முடிந்ததால் அவர்கள் நேற்று மீண்டும் அவரவர் வசிக்கும் இடங்களுக்கு புறப்பட்டனர். இதையொட்டி பஸ் , ரெயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதியது. மேலும் சிலர் தனியார் பஸ்களில் சென்னை, பெங்களூரு, கோவை உள்பட பல முக்கிய நகரங்களுக்கு புறப்பட்டனர். அப்போது தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக தனியார் வாகனங்களை கண்காணித்தனர். மேலும் சேலம் புதிய பஸ்நிலையம், ஓமலூர், வாழப்பாடி, நத்தக்கரை, சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நிர்ணயித்ததை விட அதிக கட்டணம், கூடுதல் நபர்களை ஏற்றி சென்றது உள்பட பல்வேறு சாலை விதிகளை மீறியதாக கூறி 40 ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களுக்கு ரூ. 85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
- இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன
- சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்
பெங்களூருவில் 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்மணிக்கு ₹1.36 லட்சம் அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ் அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளது.
இந்தப் பெண் வழக்கமாக பெங்களூரு, பனஸ்வாடியில் உள்ள காக்ஸ் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டரில் பயணித்து வருவது வழக்கம். இவர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் இல்லாமல் பயணியை பின்னால் அமர வைத்துச் சென்றது, தவறான திசையில் வாகனத்தை ஓட்டிச் சென்றது, வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பேசியது, போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் கடந்து செல்வது போன்ற பல்வேறு வகையான விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.
இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, டிராஃபிக் சிக்னல்களை கடைப்பிடிக்காதது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன.
இந்நிலையில் அந்த பெண் அண்மையில் தலைக்கவசம் அணியாமல் தனது ஸ்கூட்டரில் 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்றார். இதையடுத்து அவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து ரசீது வழங்கினர். அதில் அபராதத் தொகை ரூ.1.36 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதாவது இதற்கு முன்பு அந்தப் பெண் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்கான அபராதத்தையும் சேர்த்து, இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அவர் ஓட்டும் ஸ்கூட்டரின் விலையை விட கூடுதலாகும்.
இந்தக் கணக்குகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, இதுபோன்ற அபராதங்களில் சிக்காமல் இருக்கவும், பாதுகாப்பு கருதியும் வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
- குப்பைகளை தனித்தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
- வீட்டின் பின் புறத்திலும், இடை முடுக்குகளிலும், கழிவு நீர் ஓடைகளிலும், பொது இடங்களிலும் குப்பைகளை கொட்டக்கூடாது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின்படி மேலப்பா ளையம் மண்டலத்தில் தூய்மை பணி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு
மாநகராட்சி துணை கமிஷனர் தாணு மூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின் பேரில் மண்டல உதவி கமிஷனர் காளிமுத்து மற்றும் சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து தங்கள் வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் மேலப்பாளையம் பகுதிகளில் குப்பைகளை வீட்டின் பின் புறத்திலும், இடை முடுக்குகளிலும், கழிவு நீர் ஓடைகளிலும், பொது இடங்களிலும் கொட்டக்கூடாது எனவும் மீறினால் மாநகராட்சி சார்பாக அபராதம் விதிக்கப்படும் என்றும் ஒலிபெருக்கி மூலம் வீதி வீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் அப்துல் வஹாப், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மணிகண்ட பூபதி, சொக்கலிங்கம் உட்பட வார்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- சட்டம் 1997-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- இந்திய தண்டனைச் சட்டம் 289-ன்படியும் பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் 11 (எச்)-ன்படியும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆவடி:
பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் கால்நடைகளை வளர்த்து வரும் பொது மக்கள் தங்களது மாடுகளை மாட்டு கொட்டகையில் கட்டி வளர்த்து முறையாகப் பராமரித்து கொள்ள வேண்டும்.
தவறும் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யவும், மீறுபவர்கள் மீது விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகள்) சட்டம் 1997-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டத்தை மீறும் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 289-ன்படியும் பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் 11 (எச்)-ன்படியும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பூந்த மல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் கால்நடை வளர்ப்பு கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நகரசபை தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் ஸ்ரீதர், ஆணையர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கால்நடை உரிமையாளர்களுக்கு மேற்கண்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் குழு உறுப்பினர்களான போலீஸ் அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டு கால்நடை உரிமையாளர்களுக்கு கால்நடைகளை சாலையில் திரியவிடாமல் முறையாக வளர்ப்பது குறித்தும், கால் நடைகளால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினர்.
- புதுச்சேரி மாநிலத்தில் இருந்துவரும் வாகனங்களில் மது பாட்டில் கள் கடத்தப்படுகிறதா? என்று சோதனை செய்து வருகின்றனர்.
- வழக்குகள் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் ஆல்பேட்டை யில் சோதனை சாவடி யில் தினந்தோறும் போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். குறிப்பாக புதுச்சேரி மாநிலத்தில் இருந்துவரும் வாகனங்களில் மது பாட்டில் கள் கடத்தப்படுகிறதா? என்று சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று நள்ளிரவு ஆல்பேட்டை சோதனை சாவடியில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த சில வாகனங்களில் மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், மது பாட்டில்களை அழித்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதில் மது போதையில் வாகனம் ஓட்டியது, ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டி யது உள்ளிட்ட வழக்கு கள் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப் பட்டது.
- மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
- 5பஸ்களுக்கு தலா ஆயிரம் ரூபாய்அபராதம் விதிக்கப் பட்டது.
விழுப்புரம்:
திண்டிவனத்தில் பஸ்களில் ஏர்ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டிவனம் நகரில் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்கு மன உளை ச்சலை ஏற்படுத்துவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதன் பேரில், திண்டிவனம் வட்டாரப் போக்கு வரத்து அதிகாரி முக்கண்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர், போக்குவரத்து கழக உதவி பொறியாளர்நேற்று திண்டிவனம் பஸ் நிலையம் ,திண்டிவனம்- மரக்காணம் சாலை மற்றும் செஞ்சி பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினா்.
இதில் 5தனியார் பஸ்கள், மினி பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக சத்தம் எழுப்ப கூடிய ஏர் ஹாரன்கள், கண்கள் கூசும் அளவுக்குஅதிக ஒளியுடன் திகைப்பூட்டும் விளக்குகள் பொருத்தப் பட்ட 5பஸ்களுக்கு தலா ஆயிரம் ரூபாய்அபராதம் விதிக்கப்பட்டது. 16 வாகனங்களை சோதனை செய்து அறிவிக்கை செய்யப்பட்டது.அதிக பாரம் ஏற்றிவந்த சரக்கு வாகனத்ைத நிறுத்தி சோதனை செய்தனர்.ஒரு வாகனத்திற்கு ரூ5 ஆயிரம் வரி விதிக்கப்பட்டது.
- கனரக வாகனங்கள் வந்து செல்வதால் வாகனஓட்டிகள் மீண்டும் அவதியடைந்தனர்.
- அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி நகரில் வந்து சென்ற வாகனங்களுக்கு அபராதம்.
சீர்காழி:
சீர்காழி நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க பள்ளி நேரங்களான காலை 8மணி முதல் 10 மணிவரையிலும், மாலை 4மணி முதல் 6மணி வரையிலும் கனரக வாகனங்கள் வந்து செல்ல போக்குவரத்து போலீசார் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் போலீசாரின் அறிவிப்பை மீறி நகரில் கனரக வாகனங்கள் வந்து செல்வதால் வாகனஓட்டிகள் மீண்டும் அவதியடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிறைசந்திரன் தலைமையில் போலீ சார்வாகனதணிக்கை செய்தனர்.
அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி நகரில் வந்து சென்ற கனரக வாகனங்கள் நிறுத்தி அபராதம் விதித்து ஓட்டுனரை எச்சரித்தனர்.