search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "buses"

    • கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
    • பஸ் டிரைவர், கண்டக்டர் எப்படி சமாளிப்பார்கள்? பல இடங்களில் டிரைவர், கண்டக்டர்களை தாக்கும் வீடியோக்களையும் பார்க்க முடிகிறது.

    மதுரை:

    தமிழகத்தில் பள்ளி நேரத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளையும் ஐகோர்ட்டு பிறப்பித்தது.

    கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், பள்ளி தொடங்கும் நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்கினாலும், மாணவர்கள், இளைஞர்களின் படிக்கட்டு பயணமும் விபத்தும் குறையவில்லை. அவர்களை பஸ் டிரைவர், கண்டக்டர் எப்படி சமாளிப்பார்கள்? பல இடங்களில் டிரைவர், கண்டக்டர்களை தாக்கும் வீடியோக்களையும் பார்க்க முடிகிறது.

    எனவே இளைஞர்கள், மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் பஸ்களில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து பஸ்களிலும் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளை பொருத்துவது அவசியம் என அறிவுறுத்தினர்.

    பின்னர், தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • சமீபத்தில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 புதிய பஸ்களை தொடங்கி வைத்தார்.
    • எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் வெறும் 3 ஆயிரம் பஸ்கள் மட்டுமே வாங்கப்பட்டன.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் நேற்று நிறைவடைந்த பிறகு, தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது, 'தி.மு.க. ஆட்சி காலத்தில் புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை' என்று அவர் குற்றம்சாட்டினார். அதற்கு பதில் அளித்து தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி வருமாறு:-

    சமீபத்தில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 புதிய பஸ்களை தொடங்கி வைத்தார். ஏற்கனவே உள்ள 99 புதிய பஸ்களுடன் இப்போது 199 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. 4 ஆயிரம் பஸ்களை வாங்குவதற்கான டெண்டர் விடப்பட்டு, விரைவில் அவை வாங்கப்பட உள்ளன. தமிழ்நாடு அரசு நிதியில் 2 ஆயிரம் பஸ்களை வாங்குவதற்கான பணியும், ஜெர்மன் வங்கி நிதி உதவியில் 2 ஆயிரம் பஸ்களை வாங்குவதற்கான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதுதவிர சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 மின்சார பஸ்கள் வாங்கப்பட உள்ளன. கொரோனா காலத்தில் தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தால் புதிய பஸ்கள் வாங்க முடியாத நிலை இருந்தது. கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது 15 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டன. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் 10 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டன. ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் வெறும் 3 ஆயிரம் பஸ்கள் மட்டுமே வாங்கப்பட்டன.

    ஆசியாவிலேயே சிறந்த பஸ் நிலையமாக கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் வருவதற்கு தயாராக இருந்தால் நானும், அமைச்சர் சேகர்பாபுவும், அங்கு என்னென்ன வசதிகள் உள்ளன? என்பதை அவருக்கு காட்ட தயாராக இருக்கிறோம்.

    300-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இன்றும் கிளாம்பாக்கம் பஸ் முனையத்திலிருந்துதான் இயக்கப்படுகின்றன. தற்போது வரை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

    • அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும்.
    • சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் நேற்று ஓடும் பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து கீழே விழுந்த பெண் பயணி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

    இந்த சம்பவத்தையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    * அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும்.

    * சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    மிக மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • பயணிகள் தேவைக்கு ஏற்ப கும்பகோணம் கோட்டம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பஸ் சேவையை அளிக்க ஏதுவாகும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ;-

    வருகிற 25-ந் தேதி பழனி தைப்பூசம், திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம், 26-ந் தேதி குடியரசு தினம் மற்றும் 27, 28 ஆகிய தேதிகள் ( சனி, ஞாயிறு) வார விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது.

    எனவே பயணிகள் தேவைக்கு ஏற்ப கும்பகோணம் கோட்டம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அதன்படி தைபூசம், மற்றும் பவுர்ணமி கிரிவலம் முன்னிட்டு பழனி, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு நாளை (புதன்கிழமை) முதல் 28-ந் தேதி வரை 5 நாட்கள் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது .


    மேலும் 25, 26 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பஸ்கள் உட்பட நாளொன்றுக்கு சுமார் 300 பஸ்கள் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை இயக்கப்படுகின்றன.

    இதேப்போல் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இயக்கப்பட உள்ளது.

    மேலும், விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் முடிந்து பயணிகள் அவரவர் ஊர்களுக்கு திரும்பி செல்ல 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்கள் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயகொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் , திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம் , தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே பயணிகள் முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பஸ் சேவையை அளிக்க ஏதுவாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி, கல்லூரிகளில் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இதில் பெரும்பாலான மாணவ-மாணவிகள் பஸ்களிலே வந்து செல்கின்றனர். ஆனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய அளவில் பஸ்கள் இல்லாததால் பஸ் படிக்கட்டில் தொங்கியப்ப டியும், பின்னால் ஏறி நின்றும் ஆபத்தான வகையில் மாணவர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்று காலை ஒரத்தநாட்டில் இருந்து தஞ்சைக்கு வந்த தனியார் பஸ்சில் புத்தக பைகளை தொங்கவிட்டப்படி படிக்கட்டில் தொங்கி கொண்டும், பின்னால் ஏணியில் ஏறி நின்றும் பல மாணவர்கள் ஆபத்தான வகையில் பயணம் செய்து வந்தனர். எதிர்பாராத வகையில் தவறி விழுந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேதனைப்பட்டனர்.

    இது குறித்து மாணவர்கள் கூறும்பாது, தஞ்சையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரத்தநாடு, பூதலூர், திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறோம். ஆனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படவில்லை.

    இதனால் வேறு வழியின்றி பஸ்சில் தொங்கியப்படி பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் சில மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு பஸ்சை விட்டால் அடுத்த பஸ் வருவதற்குள் பள்ளி, கல்லூரிகள் வகுப்பு தொடங்கி விடும். இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தாலும் வேறு வழியின்றி ஏறி வருகிறோம்.

    படிக்கட்டில் தொங்கும் போதும், பின்னால் ஏணியில் ஏறி நிற்கும் போதும் தவறி விழுந்து விடுவோமோ என ஒருவித அச்சத்தில் தான் பயணிக்கிறோம். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும். குறிப்பாக ஒரத்தநாடு, பூதலூர், பாபநாசம், திருவையாறு பகுதிகளில் இருந்து தஞ்சைக்கும், இங்கிருந்து அந்தந்த பகுதிகளுக்கும் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • சிவகங்கையில் வீதிமீறலில் ஈடுபட்ட பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • 2 அரசு பேருந்துகளும், 5 தனியார் பேருந்துகளிலும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை பேருந்து நிலையத்தில் ஆர்.டி.ஒ தலை மையிலான குழுவினர் சோதனை செய்ததில் விதி முறைகளை பின்பற்றாமல் இயக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்து களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப் படும் பேருந்துகளில் அரசு விதிமுறைகளை பின்பற்றா மல் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் அதிக ஒளி வீசும் விளக்குகள் பயன்படுத்தப்படுவதாக அடிக்கடி புகார் எழுந்தது.

    மேலும் போக்குவரத்து துறை ஆணையர் சார்பில் வாகனங்களை அடிக்கடி போக்குவரத்து துறையினர் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் சிவகங்கை வட்டார போக்கு வரத்து அலுவலர் மூக்கன் மற்றும் ஆய்வாளர் மாணிக் கம் தலைமையிலான குழுவினர் சிவகங்கை பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற் கொண்டனர்.

    இதில் 2 அரசு பேருந்துகளும், 5 தனியார் பேருந்துகளிலும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் அதிக ஒளி வீசும் விளக்குகள் பயன்படுத்தப்பட்டதும் அதே போல் ஓட்டுநர்கள் தங்களது பெயர்கள் பொறிக்கப்பட்ட பேட்ச்கள் அணியாமல் விதிமுறை களை மீறியது தெரியவரவே அவர்களுக்கு ரூ17.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    • பட்டாசுக் கிடங்குகள் மற்றும் பட்டாசுக்கடைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டு வருவதுடன் தேவையான பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசுக் கிடங்குகள், பட்டாசு விற்பனைக்குரிய இடங்களை வருவாய்த்துறை, காவல் துறை, தொழிலக பாதுகாப்புத்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அலுவலர்களைக் கொண்ட குழு உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடை பிடிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    தீபாவளி பண்டிகையை யொட்டி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசுக் கிடங்குகள் மற்றும் பட்டாசுக்கடைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டு வருவதுடன் தேவையான பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    குறிப்பாக பட்டாசு தயாரிக்கும் இடங்களில் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று பட்டாசு கிடங்குகளில் நிர்ண யிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டி ருந்தால் பட்டாசுக் கிடங்குகள் உடனடியாக சீல் வைத்து மூடவும் உத்தரவி டப்பட்டுள்ளது.

    தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வேண்டி விண்ணப்பிப்ப வர்களுக்கு பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திறந்தவெளி மைதானங்களில் பட்டாசுக் கடைகளை அமைத்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசுக் கிடங்குகள், பட்டாசு விற்பனைக்குரிய இடங்களை வருவாய்த்துறை, காவல் துறை, தொழிலக பாதுகாப்புத்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அலுவலர்களைக் கொண்ட குழு உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடை பிடிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    பட்டாசுப் பொருட்களை பொதுமக்கள் ெரயில், பஸ்கள், வாடகை கார் உள்ளிட்ட வாகனங்களில் எக்காரணம் கொண்டும் எடுத்துச் செல்லக்கூடாது. இதனை மீறினால் கடுமை யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் பொருட்டு சிறப்பு தணிக்கைக் குழு அமைக்கப்பட்டு ரெயில், பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், சுங்கச் சாவடிகள் மற்றும் ஆங்காங்கே ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். பட்டாசுகளால் விபத்துக்கள் ஏற்படாமல் தடுத்திட பொதுமக்கள், பட்டாசு தயாரிப்பா ளர்கள், விற்பனை யாளர்கள் என அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 300 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • கைப்பேசி செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் இன்று (புதன்கிழமை) 750 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் தங்களது ஊா்களுக்கு திரும்புவதற்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, மன்னாா்குடி, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்து றைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்க ளிலிருந்து சென்னைக்கு 450 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேப்போல் கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, கரூா், புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து கோவை, திருப்பூருக்கும், மதுரை, தஞ்சாவூா், வேளாங்கண்ணி, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய ஊா்களிலிருந்து திருச்சிக்கும் 300 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூா், ஜெயங்கொண்டம், அரியலூ ரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்து றைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூா், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும் பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயணிகள் இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    மேலும் கைப்பேசி செயலி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இன்று 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழித்தடங்களில் 1900 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    முக்கிய பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி வார இறுதி நாட்கள் மற்றும் வருகிற 23-ந்தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இன்று 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சேலம் புதிய பஸ் நிலையம், பெங்களூர், சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் பஸ் நிலையங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலை, ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்திற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்கள் இயக்கம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.

    எனவே பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    • முதுகுளத்தூர் பகுதிக்கு கூடுதலாக 41 பஸ்கள் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
    • அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரே வாரச் சந்தை ரூ.2 கோடியே 45 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள புதிய வாரச்சந்தையின் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். நவாஸ் கனி எம்.பி., முருகேசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்த னர். முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் வரவேற்றார்.

    அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்து கொண்டு புதிய வாரச் சந்தையை திறந்து வைத்தார். விழாவில் முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி, மாவட்ட ஊராட்சி துணை சேர்மன் மாவீரன், வேலுச் சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலு வலர் அன்புக்கண்ணன், முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, பேரூராட்சி துணைத் தலைவர் வயணப் பெரு மாள் ஆகியோர் கலந்து கொண்டனா்.

    பின்னர் முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 100 பெண்க ளுக்கு சீர்வரிசைகளை வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் பேசுகையில், முதுகுளத்தூர் பகுதியில் கூடுதலாக 41 பஸ்கள் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது. பார்த்திபனூர் பைபாஸ் சாலை பணிகள் முடிவ டைந்து விட்டன. கமுதி- சாயல்குடி பகுதியில் மில் தொடங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் வள்ரச்சித் துறை அலுவலர்கள் சசிகலா, லாவண்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ராமேசுவரத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
    • தினமும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை யிலான பக்தா்கள், சுற்று லாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் இந்தியாவின் தேசிய புனிதத் தலமாகவும் சுற்றுலாப் பகுதியாகவும், இருந்து வரு கிறது. தினமும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை யிலான பக்தா்கள், சுற்று லாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனா். மேலும், விடுமுறை நாள்கள், அமாவாசை நாள்க ளில் ஆயிரக்கணக்கா னோா் வந்து செல்கின்றனா். பாம்பன் ெரயில் பாலம் சேதமடைந்த நிலையில் ராமேசுவரத்துக்கு ெரயில் போக்குவரத்து நிறுத் தப்பட்டது.

    இதனால் ெரயில்களில் வந்து கொண்டிருந்த 8 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பயணி கள் தற்போது ராமநாதபுரத்தி லிருந்து ராமேசுவரத்துக்கு வருவதற்கு அரசு பஸ், சொந்த வாகனம் அல்லது வாடகை வாகனங்களை பயன்படுத்தும் நிலை உள் ளது. தனியாா் பஸ் வசதி இல்லாத நிலையில், முழு மையாக அரசு பஸ்களை நம்பி பய ணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

    இதே போல, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் இருந்து 5 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் தங்களின் சொந்த பணி, வியாபாரம், மருத்து வம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிமித்தமாக ராம நாதபுரத்துக்கு வந்து செல் கின்றனா்.

    ராமேசுவரத்தி லிருந்து ராமநாதபுரத்துக்கும்,

    ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரத்துக்கும் இயக்க படும் பஸ்கள் வழக்கமான எண்ணிக்கையில் இயக்கப் படுவதால், ஒவ்வொரு பஸ் சிலும் 80 முதல் 90 போ் வரை கடும் நெடுக்கடிக்கு இடையே பயணம் செய்ய வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

    இதனால், ராமேசுவரம்-ராமநாதபுரம் இடையே கூடுதல் பஸ்கள் இயக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தர் கள் கோரிக்கை விடுத்தனா்.

    • கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் இந்த பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
    • மகளிர் மற்றும் மாணவிகளுக்காக இயக்கப்படும் இந்த பேருந்து முறையாக இயக்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் நகர பேருந்துகள் மிகவும் குறைவாக உள்ளது. பெரும்பாலான மகளிர் தமிழக அரசு சார்பாக இயக்கப்படும் இலவச நகர பேருந்துகளில் சென்று வருகின்றனர்.

    ஆனால் குன்னூர் பகுதிகளில் 4 நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த பேருந்துகள் குன்னூர் மவுண்ட் பேஸன்ட் பிளாக் பிரிட்ஜ், சிம்ஸ்பார்க், பெட் போர்டு வழியாக இயக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் இந்த பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.

    குறிப்பாக மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை அந்த வழித்தடங்களில் நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்றும், அதற்கு பதிலாக சில பேருந்துகளை வேறு பகுதிக்கு இயக்கப்படுவதால் குறிப்பிட்ட நேரங்களில இந்த பகுதியில் மகளிர் பயணம் செய்ய முடிவதில்லை என்றும், ஒரே நேரத்தில் 3 பேருந்துகளும் வரிசையாக நிறுத்தப்பட்டும், ஒரே நேரத்தில் அனைத்தும் இயக்கப்படுவதால் நீண்ட நேரம் மகளிர் பேருந்துகளுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

    எனவே மகளிர் மற்றும் மாணவிகளுக்காக இயக்கப்படும் இந்த பேருந்து முறையாக இயக்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×