search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "taluk"

    • ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்ப கவுண்டர். இவர் இறந்து விட்டார்.
    • இவருக்கு பட்ட ணம் கலரம்பள்ளியில் உள்ள 2 ஏக்கர் 20 செண்ட் நிலத்தை 1996-ல் ஆதி திராவிடர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கு வதற்காக அரசு கையகப் படுத்தியது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்ப கவுண்டர். இவர் இறந்து விட்டார். இவருக்கு பட்ட ணம் கலரம்பள்ளியில் உள்ள 2 ஏக்கர் 20 செண்ட் நிலத்தை 1996-ல் ஆதி திராவிடர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கு வதற்காக அரசு கையகப் படுத்தியது.

    அதற்காக அப்போது வழங்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை என்றும் அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் நாமக்கல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் இறந்த பிறகு அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வழக்கை நடத்தி வந்தனர். தற்போது ராசிபுரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

    கடந்த 2008-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுமார் ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த தொகையை ஆதிதிராவிடர் நலத்துறை வழங்குவதில் காலதாமதம் செய்து வருவதால் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை அமுல்படுத்தா ததால் ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தர விட்டார். இதையடுத்து நேற்று கோர்ட்டு ஊழி யர்கள் ஜப்தி செய்ய தாசில்தார் அலுவல கத்திற்குச் சென்றனர்.

    ஆனால் தாசில்தார் சுரேஷ், மாவட்ட கலெக்ட ரிடம் எடுத்துச் சொல்லி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது ஜப்தி செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதால் கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்யாமல் திரும்பிச் சென்றனர்.

    தாசில்தார் அலுவல கத்தை கோர்ட்டு ஊழியர் கள் ஜப்தி செய்ய சென்ற தால் ராசிபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தாலுகா அலுவலகத்தில் வருகிற 16-ந் தேதி முதல் 23.05.23 வரை தினமும் காலை 10 மணிக்கு உதவி கலெக்டர் கவுரவ் குமார் தலைமையில் நடக்கிறது.
    • 23-ந் தேதி சங்கரப்பேரி, தூத்துக்குடி பகுதி 1, 2 ஆகிய கிராமங்களுக்கும் ஜமா பந்தி நடக்கிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடி தாலுகாவில் கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தாலுகா அலுவலகத்தில் வருகிற 16-ந் தேதி முதல் 23.05.23 வரை தினமும் காலை 10 மணிக்கு உதவி கலெக்டர் கவுரவ் குமார் தலைமையில் நடக்கிறது. 16-ந் தேதி உமரிக்கோட்டை, மேலதட்டப்பாறை, கீழதட்டப்பாறை, அல்லிகுளம், மறவ ன்மடம், செந்திலாம்பண்ணை, தெற்கு சிலுக்கன்பட்டி, 17-ந் தேதி முத்துசாமிபுரம், வடக்கு சிலுக்கன்பட்டி, அய்யனடைப்பு, ராமசாமிபுரம், தளவாய்புரம், கூட்டுடன்காடு, பேரூரணி, 18-ந் தேதி திம்மராஜபுரம், வர்த்தகரெட்டிபட்டி, ராமநாதபுரம், முடிவைத்தானேந்தல், கட்டாலங்குளம், சேர்வைக்காரன் மடம், குலையன்கரிசல், 19-ந் தேதி கோரம்பள்ளம் பகுதி1, 2, குமாரகிரி, முள்ளக்காடு பகுதி 1, 2, மீளவிட்டான் பகுதி 1, 2, ஆகிய கிராமங்களுக்கும், 23-ந் தேதி சங்கரப்பேரி, புலிப்பாஞ்சான்குளம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி பகுதி 1, 2 ஆகிய கிராமங்களுக்கும் ஜமா பந்தி நடக்கிறது.

    எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு சம்பந்தப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், அந்தந்த நாட்களில் தங்களது குறைகள் தொ டர்பான மனுக்களை கொடுத்து உரிய தீர்வுகள் பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களில் நடைபெற உள்ளது
    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களில் நடைபெற உள்ளது. அதன்படி அவினாசி தாலுகாவில் ஈட்டிவீரம்பாளையம் கிராமத்துக்கு முட்டியங்கிணறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், தாராபுரம் தாலுகாவில் கிளாங்குண்டல் கிராமத்துக்கும், காங்கயம் தாலுகாவில் கீரனூர் கிராமத்துக்கும், மடத்துக்குளம் தாலுகாவில் ராமேகவுண்டன்புதூர் கிராமத்துக்கும், பல்லடம் தாலுகாவில் கே.அய்யம்பாளையம் கிராமத்துக்கும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

    இதுபோல் திருப்பூர் வடக்கு தாலுகாவில் செட்டிப்பாளையம் கிராமத்துக்கும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் மங்கலம் கிராமத்துக்கும், உடுமலை தாலுகாவில் தும்பலப்பட்டி கிராமத்துக்கும், ஊத்துக்குளி தாலுகாவில் செங்கப்பள்ளி கிராமத்துக்கும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வருவாய் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று மனுக்களுக்கு தீர்வு காண்பார்கள். பொதுமக்கள் ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெற மனுக்களை பதிவு செய்யலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • கோரிக்கையை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நல்ல அறிவிப்பு வரும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தை தனி தாலுக்காகவாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.

    கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இது தொடர்பாக நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கேள்வி எழுப்பிய போது, வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் இந்தக் கோரிக்கையை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் இம்மாதம் 20-ம் தேதி 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது.

    இந்தக் கூட்டத் தொடரில் திருமருகல் தனி தாலுகா அறிவிப்பு செய்ய வேண்டுமென, நேற்று சென்னையில் வருவாய்த் துறை அமைச்சரை ஷா நவாஸ் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

    நல்ல அறிவிப்பு வரும் என்று அமைச்சரும் உறுதியளித்தார்.

    இதனால் திருமருகல் தனி தாலுகா அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நாகை தொகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

    • திருமருகலிருந்து திருப்பயத்தங்குடி வரை கூடுதலாக பஸ் இயக்க வேண்டும்.
    • திருமருகலை தனி தாலுகாவாக உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு இளைஞர் மன்ற ஒன்றிய பொருளாளர் விமல்ராஜ் தலைமை தாங்கினார்.இளைஞர் மன்றம் ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், ஒன்றிய தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் மாரிகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் திருமருகலில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொண்டு வர வேண்டும், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களின் நலன் கருதி திருமருகலிருந்து திருப்பயத்தங்குடி வரை கூடுதலாக பஸ் இயக்க வேண்டும், ஒன்றிய பகுதிகளில் மழைக்காலங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும், திருமருகலை தனி தாலுக்காவாக உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கடையம் யூனியனுக்குட்பட்ட கீழக்கடையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார்.
    • கடையத்தை தனி தாலுகாவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , மேலும் கீழக்கடையம் ஊராட்சியில் கூடுதலாக தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட கீழக்கடையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில், ஆதிதிராவிட ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் , கடையத்தை தனி தாலுகாவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , மேலும் கீழக்கடையம் ஊராட்சியில் கூடுதலாக தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் துணைத்தலைவர் , உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ஜெயசக்திவேல் நன்றி கூறினார்.

    • இந்நிலையில்புதிதாக உருவாக உள்ள திருவோணம் தாலுகாவில் நம்பி வயல் கிராமத்தை சேர்ப்பதாக தமிழகஅரசு அறிவிப்பு வெளியானது.
    • இதுபோன்று பல்வேறு துறைகள் பட்டுக்கோட்டை பகுதியை சார்ந்தே அமைந்துள்ன.

    பட்டுக்கோட்டை:

    புதிதாக துவங்கப்பட உள்ள திருவோணம் தாலுகாவில் நம்பிவயல்கிராமத்தை இணைப்பதை எதிர்த்து நம்பிவயல் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நம்பிவயல் கிராமத்தின் மொத்த பரப்பளவு 881 ஹெக்டர், கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 2500 பேர், விவசாய பரப்பளவு 650 ஹெக்டர், நம்பிவயலின் இரண்டு பக்கத்திலும் சரியாக பத்து கிலோமீட்டர் தொலைவில் பட்டுக்கோட்டை மற்றும் திருவோணம் எதிரெதிர் திசையில் இருக்கிறது. நம்பிவயல் பிரசிடெண்ட் ஊராட்சி மன்ற தலைவராக கல்யாண சுந்தரம் என்பவர் இருக்கிறார்.

    இந்நிலையில்புதிதாக உருவாக உள்ள திருவோ ணம் தாலுகாவில் நம்பி வயல் கிராமத்தை சேர்ப்பதாக தமிழகஅரசு அறிவிப்பு வெளியானது. அதனடிப்படையில் திருவோணத்துடன் சேர்த்தால் தங்கள் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என போராட்டக்காரர்கள் கூறினர். இந்த நம்பிவயல் கிராமத்தின் எம்எல்ஏ பேராவூரணி தொகுதியை சேர்ந்தவர்.

    ஊராட்சி ஒன்றியமோ பட்டுக்கோட்டையை சேர்ந்தது, வட்டாட்சியர் அலுவலகம், பட்டுக்கோ ட்டையிலும்காவல் நிலையமோ, திருவோணத்தி லும், இருக்கிறது. அதேபோல் கோட்டாட்சியர் அலுவலகம், பத்திர பதிவுத்துறை பட்டுக்கோட்டையிலும், மின்வாரிய அலுவலகம், கலியராயன் விடுதியிலும், வேளாண்மைத் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பட்டுக்கோ ட்டையிலும் இருக்கிறது.

    இதுபோன்று பல்வேறு துறைகள் பட்டுக்கோட்டை பகுதியை சார்ந்தே அமைந்துள்ன. இந்நிலையில் புதிதாக உருவாக உள்ள திருவோணம் தாலுக்காவில் நம்பிவயல் கிராமத்தை சேர்ப்பதை எதிர்த்து பட்டுக்கோட்டை - திருச்சி சாலையில் இன்று காலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், ஒரத்தநாடு டி.எஸ்.பி பிரவீன், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ பிரபாகர் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • கடையம் ஒன்றியம் ஆனது கடையம், ஆழ்வார்குறிச்சி என இரண்டு பிர்காகளை உள்ளடக்கியதாகும்.
    • சபாநாயகருக்கு, கடையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி ராமதுரை மற்றும் 23 பஞ்சாயத்து தலைவர் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் 23 பஞ்சாயத்துகளையும் ஒரு பேரூராட்சியையும் உள்ளடக்கியதாக உள்ளது. சுமார் ஒரு லட்சம் மக்கள்தொகை உடையது.

    தற்போது ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் உள்ளது.தென்காசி மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பு அம்பை தாலுகாவில் இணைந்திருந்தது.

    கடையம் ஒன்றியம் ஆனது கடையம், ஆழ்வார்குறிச்சி என இரண்டு பிர்காகளை உள்ளடக்கியதாகும். அடைச்சாணி ஆம்பூர் போன்ற கிராமங்களில் இருந்து தென்காசி தாலுகா அலுவலகம் செல்வதற்கு சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க வேண்டியுள்ளது .இதையடுத்து கடையத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது.

    இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கடையம் வந்த சபாநாயகர் அப்பாவுவிடம் தெற்குகடையம் பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி ராமதுரை மற்றும் கடையம் 23 பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

    கொடுக்கப்பட்ட மனுவை சபாநாயகர் அப்பாவு வருவாய் துறை அமைச்சருக்கு, கடையத்தை தாலுகாவாக பிரித்து உதவிட வேண்டுமென்று பரிந்துரை செய்துள்ளார்.

    இதையடுத்து சபாநாயகருக்கு, கடையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி ராமதுரை மற்றும் 23 பஞ்சாயத்து தலைவர் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

    ×