என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "notice"
- அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சியில் சுகாதாரமற்ற வகையில் இயங்கி வந்த ஐந்து இறைச்சி கடைகளுக்கு சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
- புகையிலைப் பொரு ள்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு ரூ.1,100 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சியில் சுகாதாரமற்ற வகையில் இயங்கி வந்த ஐந்து இறைச்சி கடைகளுக்கு சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
திருமானூர் வட்டார சுகாதார மேற்பா ர்வை யாளர் வகீல் தலைமை யிலான சுகாதார ஆய்வா ளர்கள் குமார் மற்றும் சிவராமன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஏலாக்கு றிச்சி பகுதியிலுள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இறைச்சி கடைகள் நடத்திய வருக்கும், டெங்கு கொசுக்கள் உருவா கும் வகையில் இருப்பி டங்களை வைத்திருந்த 2 நபர்களுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். மேலும், பள்ளிகளுக்கு அருகே புகையிலைப் பொரு ள்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு ரூ.1,100 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது.
- இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட திருச்சி வாலிபர்கள் 7 பேருக்கு லைசென்ஸ் ரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது
- விளக்கம் அளிக்க ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது
திருச்சி,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிவிடை சிறுமருதூர் பகுதியில் தஞ்சாவூர் சீனிவாசபுரத்தை சேர்ந்த மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் பட்டாசுகளை வைத்து வெடித்து (வீலிங்) சாகசம் ெசய்தார்.
அதற்கு திருச்சி புத்தூர் கல்லாங்காட்டை சேர்ந்த அஜய் (வயது 24) உடந்தையாக இருந்தார். சிலர் பட்டாசு வெடித்து சிதறக்கூடிய காட்சிகளை வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பத விட்டனர்.
இந்த வீடியோ காட்சிகள் வைரல் ஆனதை தொடர்ந்து திருச்சி பேலீசார், இது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களை கண்காணித்து, விசாரணை நடத்தி 9 பேரை கைது செய்தனர்.
இதில் லால்குடி காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர், காணகிளியநல்லூர் போலீசார் கைது செய்த ஒரு நபர், திருச்சி சமயபுரம், திருச்சி அரசு மருத்துவமனை காவல்நிலைய போலீசார் கைது செய்த தலா ஒருவர் என மொத்தம் 7 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளது.
இந்த நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க 7 நாட்கள் அவகாம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சரியான விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில் அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.
இந்த நிலையில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தெரிவித்துள்ளதாவது:-
திருச்சி மாவட்ட பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு சாகசம் என்ற பெயரில் பிறரை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிச் சென்று பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது பைக்குகள் பறிமுதல் ெசய்யப்பட்டுள்ளது.பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்குகளை ஒட்டி அதனை வீடியோவாக பதிவிடும் நபர்களை கண்காணிக்க சிறப்பு வலைதள கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற பைக் சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- திருப்பத்தூரில் நாளை சிவகங்கை மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
- இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாரும், அமைச்சருமான பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூரில் நாளை (3-ந் தேதி) சிவகங்கை மாவட்ட தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் கணேசன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கல், சேர்த்தல் தொடர்பான பணிகள், கழக வளர்ச்சி பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 22 வீடுகளை காலி செய்ய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- அப்புறப்படுத்த 2 ஜே.சி.பி. எந்திரங்களும் வரவழைக்கப்பட்டது.
கடலூர்:
சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள புகழ் பெற்ற குருநமச்சிவாயர் மடத்துக்குச் சொந்தமான இடத்தில் விநாயகர், ஆத்மநாதர், யோகாம்பாள், குருநமச்சிவாயர், மாணிக்க வாசகர் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த மட வளாகத்தில் கோவில் அருகே உள்ள இடத்தை ஆக்கிரமித்து 22 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் கோவில் வளாகத்தில் வழிபாட்டுக்கு இடையூறாக அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 22 வீடுகளை காலி செய்ய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து 8 வீடுகளின் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மீதமுள்ள 14 வீடுகளை காலி செய்ய இந்து அறநிலையத் துறையினர் வருவாய் துறை மூலம் கடந்த ஜூலை மாதத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும், வீடுகளில் வசிப்பவர்கள் 3 மாதத்திற்குள் காலி செய்ய வேண்டுமென நோட்டீசில் கூறப்பட்டிருந்தது. இதனை ஒரு சிலர் பெற மறுத்தனர். இதையடுத்து அந்த வீட்டின் கதவுகளில் அதிகாரிகள் நோட்டீசினை ஒட்டினர். இந்நிலையில் இந்த 14 வீடுகளை அப்புறப்படுத்த இந்து அறநிலையத் துறை துணை ஆணையர் சந்திரன், சிதம்பரம் தாசில்தார் செல்வக்குமார், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் ஆகியோர் இன்று காலை வந்தனர். இவர்களுடன் வருவாய்த் துறை ஊழியர்களும், 50-க்கும் மேற்பட்ட போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், வீடுகளை அப்புறப்படுத்த 2 ஜே.சி.பி. எந்திரங்களும் வரவழைக்கப்பட்டது.
அங்கிருந்த வீடுகளில் வசித்தவர்கள் இதனை கண்டு, அதிகாரிகளுடன் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்து அறநிலையத் துறை துணை ஆணையர் சந்திரன், தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதாக இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்திடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தி னர். இதையடுத்து வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தி னர்.
- தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நடக்கிறது.
- உரிய ஆவணங்களுடன் தவறாமல் இளைஞரணி நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் சட்ட மன்ற உறுப்பினரு மான காதர் பாட்சா முத்து ராமலிங்கம் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை யின்பேரில், மாநில இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் நாளை (நவ.1) ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகரில் உள்ள தனியார் ஓட்டலில் மதியம் 2 மணிக்கு நகர, ஒன்றிய, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பொறுப் பிற்கு விண்ணப்பித்தவர்க ளுக்கான நேர்காணல் நடக்கிறது. எனது தலைமை யில் (காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம்) நடக்கும் இந்த நேர்காணலில் ஒன்றிய, நகர, பேரூர், அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பா ளர்கள் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தங்களுடைய வயதை நிரூபிப்பதற்கான கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, உறுப்பினர் அட்டை, இளைஞரணி போன்ற கழக அமைப்பு களில் ஏற்கெனவே பணியாற்றியிருந்தால், அதுதொடர்பான உரிய ஆவணங்களுடன் தவறாமல் இளைஞரணி நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெரம்பலூரில் சாலை ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
- இது தொடர்பான அறிவிப்பு கடிதம் சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூரில் சாலை ஓரங்களில் பொது மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள தள்ளுவண்டிகள் மற்றும் கடைகளை அறிவிப்பு கிடைக்கப்பட்ட 3 தினங்களுக்குள் தாங்களாகவே முன் வந்து அகற்றி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தவறினால் நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறையினர்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றப்படுவதுடன் தாங்கள் வைத்துள்ள பொருட்களை பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையாளர் ராமர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு கடிதம் சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது.
- சாலையின் மையப்பகுதி வரை தட்டிகள், விளம்பர பதாகைகள் வைத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து தொடா்ந்து புகாா்கள் வருகின்றன
- தவறும் பட்சத்தில் நகராட்சியால் அப்புறப்படுத்தப்படுவதுடன், தங்களது குத்தகை உரிமமும் ரத்து செய்யப்படும்
காங்கயம்,அக்.2-
காங்கயம் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் கனிராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
காங்கயம் பேருந்து நிலையம், சென்னிமலை சாலை பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் சாலையின் மையப்பகுதி வரை தட்டிகள், விளம்பர பதாகைகள் வைத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து தொடா்ந்து புகாா்கள் வருகின்றன. நேரடி ஆய்வின்போது, கடைகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி நீட்டித்து வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்துக்குள் தங்களது கடைகளுக்கு முன்புறம் உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களாவே அகற்றி கொள்ள வேண்டும்.
தவறும் பட்சத்தில் நகராட்சியால் அப்புறப்படுத்தப்படுவதுடன், தங்களது குத்தகை உரிமமும் ரத்து செய்யப்படும். மேலும் அபராத தொகையும் வசூலிக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
- உரங்கள் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்கவும், போலி உரங்கள் விற்பனையை தடுக்கவும் மாவட்டத்தில் 14 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- இந்த சோதனையில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத 4 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 195 தொடக்க வேளாண்ைம கூட்டுறவு கடன் சங்கங்கள், 327 தனியார் உரக்கடைகள் என ெமாத்தம் 522 கடைகள் செயல்பட்டு வருகின்றன. ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பருத்தி, மக்காச்சோளம், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் மலர் செடிகளின் தேவைக்காக 3294 டன் யூரியா, 2130 டன் டி.ஏ.பி., 1398 டன் பொட்டாஸ், 9048 டன் கலப்பு உரங்கள், 889 டன் சூப்பர் பாஸ்பேட் என 16760 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்த உரங்கள் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்கவும், போலி உரங்கள் விற்பனையை தடுக்கவும் மாவட்டத்தில் 14 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் கடந்த 5 நாட்களுக்கு மேலாக மாவட்டத்தில் உள்ள அனைத்து உரக்கடைகளிலும் சுழற்சி முறையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கடைகளில் வைக்கப்பட்டுள்ள எடை கருவி, கடைகளின் உரிமம், விற்பனை விவரம், இருப்பு விவரம் உள்ளிட்ட 27 வகையான கள அறிக்கை விவரங்களை தனித்தனியாக இந்த குழுவினர் சேகரித்து வருகின்றனர். இந்த சோதனையில் 15 உரக்கடைகள் தரப்பில் உரிமம் புதுப்பிப்பதற்கும், 10 கடைகள் ஓ படிவம் கேட்டும், வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாட்டு அலுவ லகத்தில் விண்ணப்பம் அளித்திருந்தனர்.
இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் தெரிவிக்கையில், வேளாண்ைம உதவி இயக்குனர், வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலுவலர்கள் ஆகியோரை கொண்ட 14 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள உரக்கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத 4 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
உர விற்பனையாளர்கள் லாப நோக்கில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- சென்னையில் வருகிற 25-ந்தேதி காலவரையற்ற உண்ணா நோன்பு போராட்டம் நடைபெறுகிறது.
- கடந்த இரண்டரை ஆண்டுகளில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
திருப்பூர்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியா்கள் சென்னையில் வருகிற 25-ந்தேதி காலவரையற்ற உண்ணா நோன்பு போராட்டத்தை நடத்த இருப்பதாக ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கத்தின் மாநிலத்தலைவா் பழ.கௌதமன் கூறியதாவது: -அரசுப்பள்ளிகளில் 2012-ம் ஆண்டு முதல் மிக குறைந்த ஊதியத்தில் பகுதிநேர ஆசிரியா்கள் பணியாற்றி வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடியும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.கடந்த சட்டப்பேரவை தோ்தலின்போது தி.மு.க., தனது தோ்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்வோம் என கூறியிருந்தது.
ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. 3 ஆண்டுகளுக்கு முன்பு என்ன ஊதியம் வாங்கினோமோ அதையேதான் இப்போதும் வாங்கி கொண்டிருக்கிறோம். கடந்த 12 ஆண்டுகளாக எங்களுக்கு மே மாத சம்பளமும் வழங்கப்படுவதில்லை. கடந்த மே மாதம் நாங்கள் நடத்திய போராட்டத்தின்போது அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 2 ஆண்டுகளுக்கான மே மாத ஊதியம் தருகிறோம் என்றும், பணிநிரந்தரம் செய்ய தாமதமாகும் பட்சத்தில் ஊதியத்தை உயா்த்தி அனைத்து வேலை நாட்களும் முழுநேர வேலை தருவதாகவும் உத்தரவாதம் கொடுத்ததன் அடிப்படையில் போராட்டத்தை ஒத்திவைத்தோம். ஆனால் அந்த வாக்குறுதிகள் கூட தற்போது வரை நிறைவேற்ற ப்படவில்லை.
எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்தும் வருகிற 25-ந் தேதி முதல் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் காலவரையற்ற உண்ணா நோன்பு போராட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவெடுத்துள்ளோம் என்றாா்.
- சுற்றுலா விசா பெற்று இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
- ஊர்பெரியவர்கள் முன்னிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
திருப்பதி:
இலங்கையை சேர்ந்தவர் விக்னேஸ்வரி. இவருக்கு ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வி.கோட்டா அடுத்த அரிமகுலப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன் (கட்டிட மேஸ்திரி) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
லட்சுமணனை திருமணம் செய்ய விக்னேஸ்வரி முடிவு செய்தார். இதற்காக சுற்றுலா விசா பெற்று இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
விமான நிலையத்தில் லட்சுமணன், விக்னேஸ்வரியை வரவேற்று தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
தனது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். லட்சுமணன் குடும்பத்தினரும் இவர்கள் காதலை ஏற்று கொண்டனர்.
இதனை தொடர்ந்து, ஊர்பெரியவர்கள் முன்னிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதேபகுதியில் உள்ள சாய் பாபா கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையே, விக்னேஷ்வரியின் விசா ஆகஸ்ட் 6-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே அதற்குள் விக்னேஸ்வரி நாட்டை விட்டு வெளியேறுமாறு போலீசார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
மேலும், வெளிநாட்டு இளம்பெண்ணின் திருமணத்தை இலங்கையில் உள்ள விக்னேஸ்வரியின் பெற்றோருக்கு தெரிவித்து சட்டப்பூர்வமாக பதிவு செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
தற்போது எல்லை தாண்டிய காதல் அதிகரித்து வருகிறது. அந்த பட்டியலில் இவர்களும் சேர்ந்துள்ளனர்.