search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "warning"

    • இயல்பைவிட 5,6 செல்சியசுக்கு மேல் அதிகமாக வெப்பம் தாக்கினால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்படும்.
    • வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு வெப்ப பக்கவாதம் (ஸ்டோக்) ஏற்படக்கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மார்ச் மாதத்திலேயே தொடங்கிவிட்டது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் வெயில் தாக்கம் தொடங்கி மே மாதத்தில் அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் உக்கிரம் உச்சத்தை அடையும்.

    ஆனால் இந்த வருடம் கோடை வெயில் முன் கூட்டியே தாக்கி வருவதால் பொதுமக்கள் வாடி வதங்கி வருகின்றனர். பருவகால மாற்றத்தால் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது.

    தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் இயல்பைவிட 3,4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை.

    தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் தாக்கி உள்ளது. சேலத்தில் 107, தர்மபுரி 106 டிகிரி வெயில் கொளுத்தியது.

    ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெப்ப அலை வீசி வருவதால் மக்கள் பகலில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் உஷ்ணத்தில் அவதிப்படுகிறார்கள்.

    14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கி வருகிறது. வெயில் தாக்கத்தால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். சிறுவர்கள், முதியவர்கள் வெயிலில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் வெயில் அதிகமாக இருப்பதால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பகலில் வெளியே வரவேண்டாம் என அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. வெயிலின் கோர தாண்டவத்தை தாங்க முடியாமல் உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பொது மக்கள் கோடை வெயில் தாக்கத்தால் பாதிக்கக்கூடாது என்பதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெப்ப ஸ்டோக், மயக்கம், சோர்வு ஏற்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக வெப்பதாக்குதல் அதிகரித்து வருவதால் சென்னை வானிலை மையமும் பொதுமக்களுக்கு அவ்வப்போது முன்னெச்சரிக்கை செய்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகின்றது.


    இதுகுறித்து வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-

    வெப்ப அலை என்பது புதிதல்ல. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஏற்படக் கூடியவைதான். சராசரி வெப்ப அளவைவிட கூடுதலாக 4,5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் போது வெப்ப அலை என்கிறோம். காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் அதாவது 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தால் உடலில் இருந்து வியர்வை ஆவியாக மாறாது. ஆவியாக மாறாமல் போகும் போது உடலில் சூடு ஏற்படும். பல பிரச்சினைகள் வரும்.

    தலைவலி, மயக்கம், சோர்வு போன்றவை ஏற்படக் கூடும். வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு வெப்ப பக்கவாதம் (ஸ்டோக்) ஏற்படக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளை ஒட் டிய மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    அதே நேரத்தில் கடல் காற்று உள்ளே வரும் போது வெப்ப நிலை குறையும். பொதுமக்கள் காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை வெயிலில் செல்லாமல் தவிர்ப்பது நல்லது. இதனால் வயல் வெளியில் வேலை செய்பவர்கள் கூலித் தொழிலாளர்கள், மூட்டைத் தூக்குபவர்கள் பாதிக்கக்கூடும். ஓட்டப் பயிற்சி, உடல் பயிற்சி செய்பவர்கள் கூட கவனமாக அதில் ஈடுபட வேண்டும்.

    வெப்ப அலையை மஞ்சள் அலர்ட் மூலம் எச்சரிக்கப்படுகிறது. இயல்பைவிட 5,6 செல்சியசுக்கு மேல் அதிகமாக வெப்பம் தாக்கினால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்படும். தமிழகத்தில் அது போன்ற நிலை இல்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • சசிதரூர் மீது தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் புகார் செய்தனர்.
    • எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று அவருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் தற்போதைய எம்.பியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் மீண்டும் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் பன்னியன் ரவீந்திரன் உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர்.

    இந்த தொகுதியில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும்போட்டி நிலவுகிறது. அந்த கட்சிகளின் வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சசிதரூர், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில், ஓட்டு வாங்க பொதுமக்கள் மற்றும் பாதிரியார் உள்ளிட்ட கிறிஸ்வத தலைவர்களுக்கு பாரதிய ஜனதா வேட்பாளரான மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.

    சசிதரூரின் இந்த கருத்துக்கு தன்மீது ஆதார மற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சசிதரூர் மீது தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் புகார் செய்தனர்.

    இந்நிலையில் மத்திய மந்திரி மீது ஓட்டுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டு விவகாரத்தில் சசிதரூருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று அவருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • குளச்சல் கடற்கரையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
    • பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள பல்வேறு கடல் பகுதிகளிலும் நேற்று மாலை திடீரென கடல் அலைகள் சீற்றமாக காணப்பட்டன. சுனாமி காலத்தில் ஏற்பட்டது போன்று அலையின் வேகம் இருந்தது. இதனால் கடலோரப் பகுதிகளில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது.

    கொல்லங்கோடு இறையு மன்துறை பகுதியில் கடலில் எழுந்த ராட்சத அலைகள், தடுப்புச் சுவரை தாண்டியதால் கரையோரம் இருந்த வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அச்சத்தில் சாலைக்கு வந்தனர். கடல் நீர், கரையோரம் இருந்த கல்லறை தோட்டங்கள் கடல் நீரால் சூழப்பட்டன. குளச்சல் கடற்கரையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அங்கு ராட்சத அலைகள் எழும்பியதை பார்த்த அவர்கள், அங்கிருந்து அவரச அவசரமாக பாதுகாப்பான இடங்களை தேடிச் சென்றனர். அவர்கள் அமர்ந்திருந்த மணல்பரப்பு வரை கடல் நீர் வந்து சென்றது. சிலர் அதில் கால் நனைத்து மகிழ்ந்தனர்.

    கன்னியாகுமரியிலும் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. இதனை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், கன்னியாகுமரி போலீசாரும் விரைந்து செயல்பட்டு சுற்றுலா பயணிகளை கடற்கரை பகுதியில் இருந்து வெளியேற்றினர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாகவும் குமரி மாவட்ட கடற்பகுதியில் ராட்சத அலைகள் எழும்பின. இதனால் கடலோரப் பகுதிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், அரபிக் கடல், வங்கக்கடல் ஆகிய 3 கடல்களும் ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தன. சுமார் 10அடி முதல் 15 அடி உய ரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி ஆக்ரோஷமாக வந்து பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.

    கடல் சீற்றம் காரணமாக நேற்று மதியம் நிறுத்தப்பட்ட விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கான படகு போக்குவரத்து இன்று காலையும் ரத்து செய்யப்பட்டே இருந்தது. காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பாக படகு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், கடல் சீற்றம் தணிந்த பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்படும் என்றனர்.

    குளச்சல் கடலில் எழுந்த ராட்சத அலைகள், மணற் பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 பைபர் வள்ளங்களை இழுத்து சென்றதால் அவை சேதமடைந்தன. ஒரு சில கட்டுமரங்களையும் காணவில்லை என மீனவர்கள் கூறினர்.

    • வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.
    • ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளும், தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை அதிகம் நம்பி உள்ளது.

    தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கான உணவு தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வந்துவிட்டன.

    அமராவதி அணையில் நீர்இருப்பு உள்ளதால் அணைப் பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் அவற்றுக்கான உணவு தண்ணீர் தேவை தற்காலிகமாக பூர்த்தி அடைந்து உள்ளது.

    மேலும் யானைகள் காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். இதன் காரணமாக யானைகள் மிரண்டு வாகனஓட்டிகளை துரத்திச் சென்ற சம்பவமும் நிகழ்ந்து உள்ளது.

    இதனால் உடுமலை மூணாறு-சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் அங்கிருந்து செல்லும் வரை ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீதுகற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை மூணாறு- சாலை மலைஅடிவாரப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஒவ்வொரு நாளும் துயரத்துடன் கட லுக்கு சென்றுவரும் மீனவர்கள் மீது அக்கறை கொண்டு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • இலங்கையில் மன்னார், பேசாளை, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதி மீனவர்களும் தற்போது இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி சிறை பிடித்து வருகின்றனர். மேலும் படகுகளை பறிமுதல் செய்வதுடன் மீனவர்களுக்கும் தண்டணை விதித்து வருகின்றனர்.

    இதனால் வாழ்வாதாரம் இழந்த ஏராளமான மீனவர்கள் மாற்று தொழிலை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மீன்பிடி தொழிலை சார்ந்துள்ள லட்சக்கணக்கானோரும் வேலையிழந்து தவித்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் துயரத்துடன் கட லுக்கு சென்றுவரும் மீனவர்கள் மீது அக்கறை கொண்டு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது.

    மீனவர்கள் சிறை பிடிப்பதை கண்டித்தும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று இலங்கையில் மன்னார், பேசாளை, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதி மீனவர்களும் தற்போது இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடிக்கும் போது தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதன் காரணமாக ராமேசுவரத்தில் சிறிய படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்றுள்ளது. பெரிய படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது. இலங்கை கடற்படையை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தற்போது தமிழக மீனவர்களை கண்டித்து இலங்கை மீனவர்கள் போராட்டத்தில் குதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.
    • பெரும்பாலான படகுகள் எச்சரிக்கை காரணமாக கரை திரும்பி உள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதாக கூறி சமீப காலமாக தொடர்ந்து கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். இதில், படகுகள் பறிமுதல் செய்யப்படுவது டன் இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.

    இதனை கண்டித்து, ராமேசுவரம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டனர். மேலும் இலங்கை மீனவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொண்ட ராமேசுவரம் மீனவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு மீண்டும் கடலுக்கு சென்றனர்.

    இதனை கண்டித்து, இலங்கை மன்னார், பேசாளை, நெடுந்தீவு பகுதி மீனவ சங்கத்தினர் கண்டனம் தெரிவித்ததுடன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் வந்து மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று இலங்கை மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்பு கொடியுடன் நடுக்கடலில் போராட்டம் அறிவித்துள்ளனர்.

    இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க செல் லும் மீனவர்களுக்கு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர். மேலும் பெரும்பாலான படகுகள் எச்சரிக்கை காரணமாக கரை திரும்பி உள்ளனர்.

    ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் போது இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மீண்டும் மீனவர்கள் பிரச்சினை ஏற்படும். இதனை தடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக இந்திய தமிழ் மீனவர்கள் இலங்கை தமிழ் மீனவர்களிடையே பெரும் மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை தடுக்க குறுகிய மீன்பிடி கடல் பகுதியை கொண்ட ராமேசுவரம் பகு தியில் அரசின் அனுமதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்துவது, அதிவேக படகுகளை மாற்று துறைமுகத்திற்கு கொண்டு செல்லுவது, எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லுவதை கட்டுப்படுத்துவது, இந்திய-இலங்கை மீனவர்கள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இரு நாட்டு மீனவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண் டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஹமாசுக்கு ஆதரவாக இருக்கும் போராளிகள் குழுக்கள் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளன.
    • தாக்குதலின் உண்மையான காரணத்தை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது.

    வாஷிங்டன்:

    பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. இதனால் ஹமாசுக்கு ஆதரவாக இருக்கும் போராளிகள் குழுக்கள் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளன.

    இந்த நிலையில் ஜோர்டானில் நடந்த டிரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிரியா எல்லைக்கு அருகில் வட கிழக்கு ஜோர்டானில் அமெரிக்க படைகள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் இரவு இந்த படைகளை குறி வைத்து அதிரடி டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 3 பேர் உயிர் இழந்தனர். 36 பேர் படுகாயம் அடைந்ததாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கிய பிறகு முதன் முறையாக அமெரிக்க படைகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அதிபர் ஜோபைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஜோர்டானில் அமெரிக்க தளங்களின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 வீரர்களை இழந்து இருக்கிறோம். இந்த தாக்குதலின் உண்மையான காரணத்தை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது. இது சிரியா மற்றும் ஈராக்கில் இயங்கும் தீவிர ஈரான் ஆதரவு போராளி குழுக்களால் நடத்தப்பட்டது என்பது எங்களுக்கு தெரியும். இதற்குதக்க பதிலடி கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாங்கள் அனுப்பும் செயலி மூலமாக முதலீடு செய்தால் போதும், விரைவில் லட்சாதிபதிகளாவும், கோடிசுவர்களாகவும் மாறி விடலாம் என ஆசைவார்த்தை கூறி நம்ப வைக்கிறார்கள்.
    • வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளின் எண்களுக்கு முன்னால் பிளஸ் குறியீடு வரும்.

    சென்னை:

    நாடு முழுவதும் செல்போன் பயன்படுத்துவோர்களில் 40 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வாட்ஸ் அப் செயலி வழியாக பல்வேறு தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.

    இந்த நிலையில் செல்போன் திரையை அனுப்பி வைக்கும் புதிய வசதி வாட்ஸ் அப்பில் உள்ளது. இதனை பயன்படுத்தி மோசடி பேர்வழிகள் கோடிக்கணக்கில் பணம் சுருட்டி இருப்பது அம்பலமாகி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பேசி வாட்ஸ் அப் பயனாளர்களை மயக்கும் இந்த கும்பல் குறுகிய காலத்தில் நீங்கள் பணக்காரர்கள் ஆகிவிடலாம், நாங்கள் அனுப்பும் செயலி மூலமாக முதலீடு செய்தால் போதும், விரைவில் லட்சாதிபதிகளாவும், கோடிசுவர்களாகவும் மாறி விடலாம் என ஆசைவார்த்தை கூறி நம்ப வைக்கிறார்கள்.

    இந்த நிலையில் மோசடி கும்பல் வாட்ஸ் அப் திரைககளையும் விட்டு வைக்கவில்லை. பொதுமக்களிடம் இருந்து வாட்ஸ் அப் திரைகளை அனுப்ப சொல்லி, அதில் உள்ள ரகசிய தகவல்களை மோசடி கும்பல் திருடிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாட்ஸ் அப்பில் பேசி அரசு அதிகாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு உயர் பதவிகளில் இருப்பவர்கள் போல் பேசி இந்த மோசடி ஆசாமிகள் பணத்தை வாரி சுருட்டி உள்ளனர்.

    வியட்நாம், கென்யா, எத்தியோப்பியா, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து மோசடி ஆசாமிகள் நாடு முழுவதும் 10 ஆயிரம் கோடி அளவுக்கு பணத்தை சுருட்டி இருக்கிறார்கள். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் ரூ. 10 ஆயிரத்து 319 கோடி அளவுக்கு வாட்ஸ் அப் பயன்படுவோரிடம் இருந்து வெளிநாட்டு மோசடி கும்பல் பணத்தை சுருட்டி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காவல் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு செயல்பாட்டு மையம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. எனவே வாட்ஸ் அப்பயன்படுத்துவோர்கள் எந்த எந்த விஷயங்களை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்கள்.

    வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளின் எண்களுக்கு முன்னால் பிளஸ் குறியீடு வரும். அதன் பிறகு 84, 63, 24 என்பது போன்ற எண்களில் இருந்து மோசடி அழைப்புகள் வருகின்றன. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் பொது மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீண்ட நேரம் வாட்ஸ்- அப்பை பயன்படுத்துவோர்களை குறி வைத்து இந்த மோசடி அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • தாமிரபரணி ஆற்றில் சுமார் 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மாதம் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் சுமார் 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. மேலும் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருருப்பதாவது:-

    கனமழை எச்சரிக்கை உள்ளதாலும், நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் மழையாலும், தாமிரபரணி ஆற்றில் அதிகபடியான மழைநீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், உப்பாற்று ஓடை கரையோர பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.
    • மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக, தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.

    ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை உள்ள ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அம்மாவட் ஆட்சியர் அறிவறுத்தியுள்ளார்.

    • உரத்தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • அமோனியா வாயுவால் மயக்கம் அடைந்த பின்னரே இதுபற்றி வெளியே தெரியவந்தது.

    எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்த விவகாரம் முடியாத நிலையில் உரத்தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமோனியா வாயுவை சுவாசித்த எண்ணூரை சுற்றி உள்ள 10 மீனவ கிராமமக்கள் மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த உடன் நிர்வாகத்தினர் அபாய ஒலி எழுப்பி சுற்றி உள்ளகிராமக்ககளை எச்சரிக்கை செய்யாதது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    மேலும் வாயு கசிந்தஉடன் அருகில் உள்ள பொதுமக்களை வாகனங்கள் மூலம் வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று இருக்கலாம் எனவும், நிலைமையின் வீரியத்தை தெரிவித்து இருக்கலாம் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அமோனியா வாயுவால் மயக்கம் அடைந்த பின்னரே இதுபற்றி வெளியே தெரியவந்தது. மக்களின் உயிரோடு தொழிற்சாலை நிறுவனங்கள் விளையாடக்கூடாது என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    • யானை கூட்டத்தால் ஆயிரக்கணக்கான ரூபாய் இப்பகுதி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
    • யானைகள் நடமாடும் பகுதிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல வேண்டாம்.

    அருவங்காடு:

    குன்னூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் உணவுக்காக இடம் பெயர்ந்து குன்னூர் மலைப்பாதை, கொல க்கம்பை மற்றும் தூதர்ம ட்டம் பகுதியிலும் முகாமிட்டு வருகிறது.

    குன்னூர் மலைப்பாதையில் குட்டியுடன் கூடிய 10 யானைகள் மலைப்பாதை மற்றும் மலை ரெயில் பாதைகளில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் பீதி அடைந்துள்ளனர். இந்த யானை கூட்டத்தை விரட்ட குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் தலைமையில் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு யானை கூட்டத்தை மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை பகுதியில் 2 குட்டி களுடன் மேலும் 5 யானைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி போகும் நிலை உருவாகியுள்ளது. தூதர்மட்டம் பகுதியில் அந்த யானை கூட்டம் அங்குள்ள மேரக்காய், பீன்ஸ், கேரட் பயிரிடப்பட்ட விளைநிலங்களை சேதப்படுத்தியதுடன் அருகே உள்ள காய்கறி சேமிப்பு குடோன்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறை களை முற்றிலுமாக சூறை யாடியது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

    இந்த யானை கூட்டத்தால் ஆயிரக்கணக்கான ரூபாய் இப்பகுதி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் யானைகள் தொடர்ந்து இப்பகுதியில் முகாமிட்டு ள்ளதால் வனத்துறையினர் தகரங்களைக் கொண்டு சத்தம் எழுப்பி விரட்டி அடிக்கும் பணியில் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் கூறுகையில் யானைகள் நடமாட்டம் குறித்து வன குழுவினர் ஆங்காங்கே இரவும், பகலுமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே யானைகள் நடமாடும் பகுதிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல வேண்டாம். சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறியதை வனத்துறையினரால் உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

    ×