என் மலர்

    நீங்கள் தேடியது "warning"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடைகளை காலி செய்யக் கோரி அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் வழங்கினர்.
    • முன்னதாக அனைத்து கடைகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    ஆலந்தூர், கத்திப்பாரா ஜி.எஸ்.டி. சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது.

    இது கடந்த 1967-ம் ஆண்டு தனியார் ஒருவருக்கு 40 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது. இங்கு மது பார், ஒட்டல், டீக்கடை என 17 கடைகள் கட்டப்பட்டு வணிக வளாகமாக செயல்பட்டது. குத்தகை முடிந்த பின்னரும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தொடர்ந்து ஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு செயல்பட்டு வந்தன.

    இதைத்தொடர்ந்து கடைகளை காலி செய்யக் கோரி அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் வழங்கினர். ஆனால் கடைகள் தொடர்ந்து செயல்பட்டன.

    இந்நிலையில் பல்லாவரம் தாசில்தார் முன்னிலையில் இன்று காலை வருவாய்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து செயல்பட்டு வந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.

    முன்னதாக அனைத்து கடைகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் கடைகளில் இருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் ரூ. 150 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இது தொடர்பான பெரிய பேனரையும் அங்கு வைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மண்டல உதவி ஆணையர் நவேந்திரன் முன்னிலை வகித்தார்.
    • குடிநீர் பிரச்சினையை போக்க கவுன்சிலர்கள் மனு அளித்தால் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருவொற்றியூர்:

    சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடைபெற்றது. மண்டல உதவி ஆணையர் நவேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எம்.ஆர்.எப்., சாலை 83 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்துதல் உள்ளிட்ட 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மண்டல குழு தலைவர் தனியரசு பேசுகையில், குடிநீர் பிரச்சினையை போக்க கவுன்சிலர்கள் மனு அளித்தால் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடலோரப் பகுதிகளில் 3000 தெரு விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் கால்வாயில் முறைகேடாக இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை கண்டறிய குழு அமைக்கப்படும் அவ்வாறு கண்டறியப்பட்டு மழை நீர் கால்வாயில் கழிவு நீரை விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுபோதையில் வாகனம் ஓட்டாமல் இருக்க, போக்குவரத்து போலீசார், தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
    • போலீசார் காரைக்காலின் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்ட னர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் அண்மைக் காலமாக, இரவு 7 மணி முதல் 11 மணி வரை மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால், சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதனால், மதுபோதையில் வாகனம் ஓட்டாமல் இருக்க, போக்குவரத்து போலீசார், தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சாலையில் செல்லும் சந்தேகப்படும் படியான நபர்களை சுவாச பரிசோ தனை கருவி (பிரீத் அனலை சர்) மூலம் பரிசோதனை செய்து, மது அருந்தி வாகனம் ஓட்டினால், அவரது புகைப்படத்துடன், கோர்ட்டுக்கு சார்ஜ்சீட் அனுப்பி வைத்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர்.

    இத்திட்டம் ஏற்கனவே இருந்தாலும், இரவுநேர விபத்தை தடுக்கும் பொருட்டு தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. அதன்படி, சீனியர் போலீஸ் சூப்பி ரண்டு (பொறுப்பு) நிதின் கவ்ஹால்ரமேஷ் உத்தர வின் பேரில், காரைக்கால் போக்குவரத்து இன்ஸ் பெக்டர் மரிகிறிஸ்டியன் பால் மற்றும் போக்குவரத்து போலீசார் காரைக்காலின் பல்வேறு இடங்களில் சோதனை மேற் கொண்டனர். இந்த பரிசோதனை இனி அடிக்கடி நடைபெறும் என்பதால், வாகன ஓட்டி கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. அதிவேக மாக வும் வாக னம் ஓட்டக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ள னர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேற்று பிற்பகல் 12 மணியளவில் சாத்தனூர் அணையானது முழு கொள்ளளவை எட்டியது.
    • அந்த நேரத்தில் ஆற்றில் வெள்ள நீர் அதிக அளவு செல்லும்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்திற்கு உட்பட்ட குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாள ர்களுக்கு சாத்தனூர் அணை உதவி செயற்பொறியாளர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;- நேற்று பிற்பகல் 12 மணியளவில் சாத்தனூர் அணையானது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவு தண்ணீரினை திறந்து விட உள்ளோம். அந்த நேரத்தில் ஆற்றில் வெள்ள நீர் அதிக அளவு செல்லும். இந்த நேரத்தில் பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்க கூடாது. மேலும் ஆற்றினை கடக்கவும் அனுமதிக்க கூடாது.

    ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு சாத்தனூர் அணையின் உதவி செயற்பொறியாளர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாலிபர் தனது மோட்டார் சைக்கிள் சாவியில் உள்ள கத்தியை எடுத்து பஸ் டிரைவரை குத்த முயன்றார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் பைபாஸ் சாலை வழியாக மினி பஸ் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு வந்தது. அந்த பஸ்சின் முன்னால் மோட்டார் சைக்கிளிலில் தனியார் உணவு டெலிவரி வாலிபர் ஒருவர் சென்றார். அப்போது வாலிபர் மினி பஸ்சுக்கு வழிவிடாமல் சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து மினி பஸ் டிரைவர், உணவு டெலிவரி வாலிபர் சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு பஸ் டிரைவர் ஏன் வழிவிடாமல் மோட்டார் சைக்கிளில் சென்றாய் என்று தனியார் உணவு டெலிவரி வாலிபரிடம் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர் உடனே பஸ் டிரைவரிடம் வாக்குவாத த்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் தகராறாக மாறியது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். மேலும் உணவு டெலிவரி வாலிபர் தனது மோட்டார் சைக்கிள் சாவியில் உள்ள கத்தியை எடுத்து பஸ் டிரைவரை குத்த முயன்றார்.

    இதை பார்த்த பஸ் நிலையத்தில் அருகில் இருந்தவர்கள் இவர்களை பிடித்து சமாதானப்படுத்தி விலக்கிவிட்டனர். இந்நிலையில் இவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை யிடும் காட்சியை அங்கிரு ந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலை தளங்கலில் வெளி யிட்டனர். இந்த வைரலான வீடியோ காட்சி மூலம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொள்ள உத்தர விட்டார். உத்தரவின்பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மினி பஸ்சை ஓட்டி வந்தது சிதம்பரம் அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் (வயது 35) என்பதும், தனியார் உணவு டெலிவரி வாலிபர்கோவிந்தசாமி பகுதியை சேர்ந்த கணேஷ் (41) என்பதும் தெரிய வந்தது. பின்னர் இவர்களிடம் போலீசார் இதுபோன்ற செயல்களில் ஈடுபட க்கூடாது என்றும், மேலும் இதுபோன்று பொது மக்களுக்கு இடையூராக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டால் உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகர் உள்ளிட்ட போலீசார் தகடி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அவரிடமிருந்து 10 கிலோ அளவிலான புகையிலை பொருட்களை கைப்பற்றிய போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகர் உள்ளிட்ட போலீசார் தகடி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் மணி கண்டன் (வயது 38) என்பவர் தனது மளிகை கடையில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

    அவரிடமிருந்து 10 கிலோ அளவிலான புகையிலை பொருட்களை கைப்பற்றிய போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கூறுகையில், கள்ள க்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அ ரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது கடத்தினாலோ அவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிக அளவில் பகுதிநேர வேலை என்ற பெயரில் பெரிய அளவில் மோசடி நடைபெற்று வருகின்றது.
    • வேலை வாய்ப்புகள் தேடுவதற்காக சுய விவரங்களை இணைய தளங்களில் பதிவிடுகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவின்படி, சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல்.பாலசந்திரன் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிப்ப தாவது:-

    தற்போது அதிக அளவில் பகுதிநேர வேலை( பார்ட் டைம் ஜாப்) என்ற பெயரில் பெரிய அளவில் மோசடி நடைபெற்று வருகின்றத

    இதில் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடியவர்கள் படித்துவிட்டு வேலையில்லா மல் இருக்கும் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பட்டதாரி பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    இவர்களுடைய டேட்டாக்கள் இவர்கள் வேலை வாய்ப்புகள் தேடுவதற்காக சுய விவரங்களை இணைய தளங்களில் பதிவிடு கின்றனர்.

    இதன்மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களின் சுய விவரங்களை திருட்டுத்தனமாக தெரிந்து கொண்டு மேற்கண்ட பகுதி நேர வேலை எனக்கூறி சில தொகைகளை கட்ட சொல்லி கொடுத்து இன்வெஸ்ட்மென்ட் என்ற பெயரில் பல லட்சங்களை சுருட்டி விடுகின்றனர்.

    எனவே இது போன்ற பகுதி நேர வேலை இவை களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதே போல் தங்களுடைய சுய விவரங்களை தேவையில்லாமல் எந்த வெப்சைட்டிலும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலியான வேலை வாய்ப்புகள் உள்ளதாக எஸ்.எம்.எஸ். இ.மெயில், மூலமாக விளம்பரங்களை அனுப்பி உங்களை ஏமாற்றக்கூடும்.

    அவர்கள் ஏதேனும் காரணம் கூறி பணம் செலுத்தக் கூறினால் அவர்களிடம் பணத்தை செலுத்தி ஏமாறாதீர்கள்.

    மேலும் இது போன்ற அசம்பாவிதங்கள் உங்களுக்கு நடந்து விட்டால் பதட்டம் அடையாமல் உங்கள் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை அணுக வேண்டும் அல்லது உடனடியாக மாநில சைபர் கிரைம் உதவி எண் (1930) 24 மணி நேரத்துக்குள் தொடர்பு கொண்டால் உங்களது பணம் மீட்டு தரப்படும் என்றும்.

    இதேபோல் தேவையில்லாத லிங்க்,வீடியோ கால் போன்றவற்றை தொடவேண்டாம் எனவும் மக்கள் இது போன்ற விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
    • காலி மனை உரிமையாளர்கள் தங்கள் மனைகளை சுத்தம் செய்து தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உழவர்கரை நகராட்சி யின் பல பகுதிகளில் காலி மனைகள் உரிமை யாளர்களால் பராமரிக் கப்படவில்லை. இதனால் புதர் மண்டி விஷ பூச்சி, தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகி அருகில் வசிப்பவர்களுக்கு அச்சுறுத்தல், சுகாதார கேடு விளைவிக்கிறது.

    பாதாள சாக்கடை வசதி இருந்தும், இணைப்பு தராமல் பல வீடுகளின் கழிவுநீர் திறந்தவெளி கால்வாயில் விடப்படுவதால் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி காலி மனை உரிமையாளர்கள் தங்கள் மனைகளை சுத்தம் செய்து தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டும்.

    கழிவுநீரை பாதாள சாக்கடையில் இணைக்க வேண்டும். தவறினால் சுற்றுப்புற சீர்கேடு தடுப்பு நடவடிக்கையின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    • இருந்தபோதிலும் கோவை மாநகராட்சி ரோடுகளில் கால்நடைகள் சுற்றி திரிவது தொடர்கதையாக நீடித்து வருகிறது.

    ேகாவை,

    கோவை மாநகராட்சியில் உள்ள போக்குவரத்து சாலைகளில் கால்நடைகளில் திரிகின்றன. இதனால் அந்த பகுதியில் விபத்துகள் ஏற்படும அபாயம் உள்ளது. எனவே கோவை ரோடுகளில் கால்நடைகளை திரியவிட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கால்நடைகள் 2-வது முறையாக மீண்டும் சாலைக்கு வந்தால், அவற்றை பிடித்து கோசாலையில் ஒப்படைத்து விடுவோம் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது.

    ஆனாலும் கோவை மாநகர சாலைகளில் கால்நடைகளின் நடமாட்டம் குறையவில்லை. இந்த நிலையில் 62-ம் வார்டுக்கு உட்பட்ட சாரமேடு, ஜெ.ஜெ.நகர் ஆகிய பகுதிகளில் கால்நடைகள் ரோட்டில் திரிவதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது.

    இதனை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு நடுரோட்டில் திரிந்த 4 மாடுகள் மற்றும் ஒரு குதிரை ஆகியவை சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டது. அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்கள் மூலம், கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர். பின்னர் சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    இருந்தபோதிலும் கோவை மாநகராட்சி ரோடுகளில் கால்நடைகள் சுற்றி திரிவது தொடர்கதையாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் மாநகர போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில், கால்நடைகளை வளர்ப்போர் வீட்டில் கட்டி வைத்து வளர்க்க வேண்டும். ரோட்டில் திரியவிடக்கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொது விநியோக பொருள்களான கடத்துவதும் பதுக்குவதும் குற்றமாகும்
    • புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

    போரூர்:

    சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுதுறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விபரம் வருமாறு :- பொது விநியோக பொருள்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்றவற்றை கடத்துவதும் பதுக்குவதும் குற்றமாகும் இந்த குற்றத்தை செய்யும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது விநியோக பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடர்பான புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.