search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smuggling of ration rice"

    • போலீசார் விசாரணை
    • வாலாஜா நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புல னாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டுகள் சந்திரன், அருள் ஆகியோர் ரத்தினகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ரத்தினகிரி நவாப் நகர் மசூதி அருகில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், போலீசார் அங்கு சென்று பார்த்த போது, அரிசி மூட்டைகளை அடிக்கி வைத்துக்கொண்டிருந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார்.

    உடனே போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், இம்ரான் (வயது 29) என தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து, வாலாஜா நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இம்ரானை கைது செய்தனர்.

    • 200 கிலோ பறிமுதல்
    • கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 3-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. ரெயிலில் முன்பகுதியில் உள்ள பொது பெட்டியில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    10 மூட்டைகளில் 200 கிலோ ரேஷன் அரிசியை 2 பெண்கள் கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • கபிஸ்தலம் காவிரி ஆற்று பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 19 மூட்டைகளில் 950 கிலோ ரேஷன் புழுங்கல் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

    தஞ்சாவூர்:

    தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அருண், ரேஷன் அரிசி பதுக்கலை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

    பொது வினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை பதுக்கி விற்பவர்களை கண்டறிந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    அவரது உத்தரவின் பேரில் திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தஞ்சாவூர் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம்,
    சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் தஞ்சை அருகே கபிஸ்தலம் காவிரி ஆற்று பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அங்கு 19 மூட்டைகளில் 950 கிலோ ரேஷன் புழுங்கல் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதுகுறித்து நடத்திய விசாரணையில் மேலகபிஸ்தலத்தை சேர்ந்த ரகுபதி (வயது 32) என்பவர் மாடுகளுக்கு தீவனம் கொடுப்பதற்காக ரேஷன் அட்டைதாரர்களிடம் புழுங்கல் அரிசியை விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்தது தெரியவந்தது.

    இதையடுத்து ரகுபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பதுக்கி வைத்திருந்த 950 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • 450 கிலோ பறிமுதல்
    • கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி மற்றும் போலீசார் ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    1-வது பிளாட்பாரத்தில் 3 பெண்கள் 30 மூட்டைகளில் ரேசன் அரிசியை ரெயிலில் கடத்துவதற்காக தயார் நிலையில் வைத்து இருந்தனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர் விசாரணையில் ஜோலார்பேட்டையில் இருந்து கர்நாடகாவிற்கு ரெயிலில் ரேசன் அரிசி கடத்த இருந்ததாக தெரிவித்தனர்.

    இதைய டுத்துஜோலார்பேட்டை கோடியூரை சேர்ந்த விஜயலட்சுமி (வயது 48 ), மலை அடிவாரம் அம்மு (38), சோமநாயக்கன்பட்டி சரசு (70) ஆகியோரை போலீசார் கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து 450 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உதவ வேண்டும்

    திருப்பூர் :

    தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் சென்னையில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவுப்படி, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பொதுமக்கள் 18005995950 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.

    இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் சார்பில் திருப்பூர் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், கரடிவாவி சோதனை சாவடி, உடுமலை பஸ் நிலையம், குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை அலுவலகம் ஆகிய இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உதவ வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • 250 கிலோ பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன், பரமேஸ்வரி மற்றும் போலீ சார் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவர்கள் திருத்தணியை சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் ஆந்திர மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து அவர்களிடம் இருந்து தலா 25 கிலோ கொண்ட 10 மூட் டைகளில் சுமார் 250 கிலோ எடையிலான ரேசன் அரி சியை பறிமுதல் செய்து இருவ ரையும் கைது செய்தனர்.

    • வேனில் சட்ட விரோதமாக அனுமதியின்றி ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கடத்தப்படுவது தெரியவந்தது.
    • போலீசார் வேனை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் சமீபகாலமாக லாட்டரி சீட்டு விற்பனை, கஞ்சா, ஹான்ஸ் மது பாட்டில் உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோதமான செயல்கள் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா அதிரடி நடவடிக்கையில் முற்றிலுமாக குறைந்து வருகிறது.இந்நிலையில் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு வேன் மூலம் ரேசன் அரிசி கடத்துவதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனை அடுத்து அவரது உத்தரவின் பேரில் வளத்தி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இன்று காலை செஞ்சியில் இருந்து சேப்பட்டு நீலாம்பூண்டி பஸ் நிறுத்தம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வேன் ஒன்று அதிவேகமாக வந்தது. இதைப் பார்த்த போலீசார் உடனே வேனை மறித்து அதில் சோதனை செய்தனர். இதில் வேனில் சட்ட விரோதமாக அனுமதியின்றி ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கடத்தப்படுவது தெரியவந்தது. உடனே போலீசார் வேனை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு கீழ்ரவளந்தவாடி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 32) டிரைவர் என்பது தெரிய வந்தது. மேலும் போலீசார் இது குறித்து விழுப்புரம் குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கிருஷ்ணமூர்த்தியை ஒப்படைத்தனர்.இது குறித்து குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த ரேஷன் அரிசி யார் மூலம் எங்கு கடத்த ப்பட்டுள்ளது மேலும் இந்தக் கடத்தலுக்கு தொடர்பா னவர்கள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 10 கி.மீ. விரட்டி சென்று அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்
    • நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே ஆந்திரா மாநிலத்திற்கு காரில் ரேசன் அரிசி கடத்துவதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்திய போது நிற்காமல் சென்றது இதனால் அந்த வாகனத்தை வருவாய் துறையினர் பணியாண்டப்பள்ளி பகுதியில் இருந்து மூக்கனூர் வழியாக ஒரு வழி பாதையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு வரை துரத்தினர். அப்போது நாட்டறம்பள்ளி அருகே சண்டியூர் பகுதியில் காரை மடக்கி பிடித்த போது டிரைவர் காரை நிறுத்தி விட்டு சினிமா பாணியில் ரேசன் கடத்தும் கும்பல் டிரைவரை காப்பாற்ற பின் தொடர்ந்து வந்து மற்றொரு காரில் ஏறி தப்பி ஓடிவிட்டார்.

    அதன் பிறகு காரை சோதனை செய்ததில் 20 மூட்டைகளில் சுமார் ஒரு டன் ரேசன் இருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து வருவாய் துறையினர் சுமார் 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்து காரை பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். பின் வாகனத்தை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படை த்தனர் நாட்டறம்பள்ளி பகுதியில் சினிமா பாணியில் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வெட்டுகாட்டுப்புதூரில் சிலர் ரேஷன் அரிசியை கடத்தவதாக வந்த தகவல் கிடைத்தது.
    • குற்றபுலணாய்வு உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள வெட்டுகாட்டுப்புதூரில் சிலர் ரேஷன் அரிசியை கடத்தவதாக வந்த தகவலை அடுத்து நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றபுலணாய்வு உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பரமத்தி வேலூர், பழைய பை-பாஸ் சாலையில் உள்ள வெட்டுக்காட்டுப்புதூர் மாரியம்மன் கோயில் பகுதியில் இருந்து வந்த லாரியை மடங்கி விசாரணை செய்தனர். இதில், 15 சாக்கு மூட்டைகளில் 750 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தி வந்த பரமத்தி அருகே பிராந்தகத்தை சேர்ந்த சங்கர் மகன் மணிகண்டன் ( வயது 39), புதுச்சத்திரம், கல்யாணி பகுதியை சேர்ந்த மருதன் மகன் பழனிவேல் (60), பரமத்திவேலூர் அருகே கோட்டணம்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி மகன் ராஜேந்திரன்(30), அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன்(23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்த போலீசார், இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1,140 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளி லிருந்து வெளி மாநிலங்க ளுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையின் வேலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகுமார் மேற் பார்வையில் இன்ஸ்பெக்டர் ரேகா, சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் வின்டர்பேட்டை பகுதியில் ஈடுபட்டனர்.

    அப்போது சுகுமார் என்பவரது மனைவி விஜயா (வயது 50) 40 கிலோ எடை கொண்ட 26 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1,140 கிலோ ரேஷன் அரிசியை அவர்கள் பறிமுதல் செய்து அரக்கோணம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இதனிடையே விஜயா தப்பிவிட்டார்.

    அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சின்னசேலம் அருகே லாரியில் கடத்திய 13.5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • காட்டுமன்னார்குடி அருகே குமராட்சியை சேர்ந்த முத்துகுமாரசாமி கடத்தி வந்து உள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி, ரேசன் அரிசி கடத்தல் மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பாக்குறிச்சி டோல்கேட்டில் கீழ்குப்பம் போலீஸ் தனிப்பிரிவுசப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையில் இன்று அதிகாலை செம்பாக்குறிச்சி டோல்கேட் அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தனர். அந்த லாரியில் 13.5 டன் ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இந்த ரேசன் அரிசியினை காட்டுமன்னார்குடி அருகே குமராட்சியை சேர்ந்த முத்துகுமாரசாமி கடத்தி வந்து உள்ளார். பின்னர் அவரை கைது செய்து, அரிசி மற்றும் கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்து விழுப்புரம் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் கடத்தப்பட்ட ரேசன் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியும், ராஜேந்திரனையும் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கூறுகையில் கள்ள க்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோத ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • வேப்பூர் அருகே 3 டன் ரேசன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
    • திடீரென ஒருவர் வண்டியில் இருந்து தப்பி ஓடியதால் சந்தேகமடைந்த போலீசார், வண்டியில் இருந்த மற்றொரு நபரை பிடித்து விசாரித்தனர்.

    கடலூர்:

    வேப்பூர் போலீஸ் ஏட்டு ஞானசேகரன் தலைமையிலான போலீசார், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் கூட்டுரோடு அருகே வாகண தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த மகேந்திரா பிக்கப் வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். திடீரென ஒருவர் வண்டியில் இருந்து தப்பி ஓடியதால் சந்தேகமடைந்த போலீசார், வண்டியில் இருந்த மற்றொரு நபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் வேப்பூர் அருகே பெரியநெசலூரைச் சேர்ந்தவர் சசிக்குமார், (வயது37) என்பவர் ரேசன் அரிசி கடத்தல் ஏஜெண்டாக இருப்பதும், 3 டன் ரேசன் அரிசியை கடத்தி செல்வதும் தெரிய வந்தது. அதை தொடர்ந்து, இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, சசிக்குமாரை கைது செய்தனர். தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×