search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Storm"

    • 23 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • 85 ஆயிரம் குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

    அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சூறாவளி புயல் தாக்கியது. பலத்த மழையும் பெய்தது. புயலால் ஏராளமான வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தன. வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மரங்கள், மின் கம்பிகள் சரிந்து விழுந்தன.

    சூறாவளி புயல் மழைக்கு குழந்தை உள்பட 6 பேர் பலியானார்கள். 23 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். புயல் காரணமாக டென்னசியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் 85 ஆயிரம் குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவித்தனர். புயலால், மாண்ட்கோமெரி கவுண்டி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு கொண்டு வருகிறார்கள்.

    • புயல் கரையை கடந்ததை தொடர்ந்து மீன்வளத்துறை தடையை விலக்கி கொண்டனர்.
    • புயல் காரணமாக கடலில் நீரோட்டம் மாறி தங்கள் வலையில் அதிக மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் சென்றுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 27-ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத் துறையினர் தடை விதித்தனர்.

    இதனால் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வேதாரணியம், கோடியக்கரை, ஆற்காடு துறை உள்ளிட்ட 25 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும் 5000 மேற்பட்ட நாட்டுப் படகுகளையும் துறைமுகங்களில் 8 நாட்களாக பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

    மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் மட்டுமல்லாமல் மீன்பிடித் தொழிலைச் சார்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கட்டது.

    இந்நிலையில் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து மீன்வளத்துறை தடையை விலக்கி கொண்டனர். இதனால் மகிழ்ச்சியடைந்த மீனவர்கள் இன்று அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    முன்னதாக மீன்வளத்துறையினர் தடையை நீக்குவார்கள் என்ற நம்பிக்கையில் நேற்று காலையில் இருந்து சில மீனவர்கள் கடலுக்குச் செல்ல தேவையான டீசல், ஐஸ் கட்டிகள் தண்ணீர், உணவு பொருட்களை சேகரித்து வந்த நிலையில் நேற்று இரவு கடலுக்குச் செல்ல விதித்த தடையை நீக்கியதால் இன்று அதிகாலை முதல் குறைந்த அளவிலான விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். புயல் காரணமாக கடலில் நீரோட்டம் மாறி தங்கள் வலையில் அதிக மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் சென்றுள்ளனர்.

    • ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • வீட்டில் இருந்த இடிபாடுகளில் சிக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

    திருப்பதி:

    மிக்ஜம் புயல் காரணமாக ஆந்திராவில் திருப்பதி, பாபட்லா, என்.டி.ஆர், கிருஷ்ணா, நெல்லூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால் பல ஆயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. நெல், வாழை, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடியது.

    இதனால் ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பதி அடுத்த ஏர்பேடு மண்டலத்தில் உள்ள சிந்தேபள்ளி, எஸ் டி காலனியை சேர்ந்த சிறுவன் யஷ்வந்த் (வயது 4). கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் சிறுவனின் வீட்டு சுவர் நேற்று இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த இடிபாடுகளில் சிக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

    • வடபெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
    • கால்வாயை முறையாக பராமரிக்காததே இதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் கடந்த 29-ந்தேதி கொட்டி தீர்த்த கன மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இதையடுத்து அதிகாரிகள் பம்பரமாக சுழன்று மழை நீர் தேங்கிய இடங்களில் தண்ணீரை வடிய வைப்பதற்கான பணிகளை முடுக்கிவிட்டனர்.

    இதையடுத்து பல இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது. இருப்பினும் சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக கோடம்பாக்கம், மாதவரம் மஞ்சம்பாக்கத்தை அடுத்த வடபெரும்பாக்கம், புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விளாங்காடுப்பாக்கம் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தேங்கிய மழை நீர் இன்னும் வடியாமலேய உள்ளது.

    கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் நேற்று மாலை வரையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நின்றது. ரங்கராஜாபுரம் மெயின் ரோடு, ஆசாத் நகர் உள்ளிட்ட இடங்களிலும் தேங்கிய மழைநீர் வடிந்துள்ளன.

    மாதவரம் மஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள வடபெரும்பாக்கத்தில் குடியிருப்பு பகுதிகளை புழல் ஏரி நீர் தண்ணீர் அதிக அளவில் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இன்று 4-வது நாளாக தவித்து வருகிறார்கள்.

    மாதவரத்தில் இருந்து வடபெரும்பாக்கம், வடகரை, விளாங்கால்பாக்கம், செங்குன்றம், ஞாயிறு உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கு வடபெரும்பாக்கத்தில் உள்ள பிரதான சாலையைத்தான் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சாலையில் மழை நீர் வடிகால் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சிக் குட்பட்ட இந்த பகுதியில் 4 நாட்களாக அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வடபெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஆந்திரா நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு உள்ளன.

    வட பெரும்பாக்கம் வி.எஸ்.மணி நகர் அதனை சுற்றியுள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதப்பதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். வட பெரும்பாக்கம் பகுதியில் தனியார் ஆம்னி பஸ் நிறுத்தங்கள் 2 இடங்களில் உள்ளன. குறிப்பிடப்பட்ட 2 நிறுவனங்களை சேர்ந்த பஸ்கள் அங்கு நிறுத்தப்படுவது வழக்கம்.

     இந்த பஸ்களும் வட பெரும்பாக்கம் சாலையில் செல்ல முடியாமல் புழல் காவாங்கரை, வடகரை வழியாக வட பெரும்பாக்கத்தை சென்றடைந்தன.

    புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விளாங்காடுப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் 4-வது நாளாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. விளாங்காடுப்பாக்கம் ஊருக்குள்ளும் புதிதாக அங்கு தோன்றியுள்ள மல்லிகா கார்டன் மற்றும் அதன் அருகில் உள்ள நியூஸ்டார் சிட்டி குடியிருப்பு தர்காஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.

    விளாங்காடுப்பாக்கம் கல்மேடு நியூஸ்டார் சிட்டியில் தொடை அளவுக்கு தேங்கி நின்ற தண்ணீர் தற்போதுதான் முட்டியளவுக்கு குறைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள கால்வாயை முறையாக பராமரிக்காததே இதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    செங்குன்றம் பகுதியில் இருந்து வரும் நீளமான இந்த கால்வாயை முறையாக தூர்வாரி முன்கூட்டியே கரைகளை பலப்படுத்தி இருந்தால் தண்ணீர் தேங்கி இருக்காது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் இதுபோன்று சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

    எனவே அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு மழை பாதிப்பை சரிசெய்ய வேண்டும் என்றும், புழல் ஊராட்சி ஒன்றிய அதிகாரி களுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விளாங்காடு பாக்கம் வடகரை கிராண்ட்லைன் ஆகிய ஊராட்சிகளில் புதிய கால்வாய் வசதி இல்லாததாலும் ஏற்கனவே இருக்கும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாலும் தற்போது பெய்து வரும் மழையில் நீர் வடியாமல் குடியிருப்புகளில் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். விளாங்காடு பக்கம் ஊராட்சியில் உள்ள தர்காஸ் கண்ணம்பாளையம் சிங்கிலி மேடு நியூ ஸ்டார் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது இதே போல் தீர்த்தங்கரையும் பட்டு ஊராட்சியில் உள்ள குமரன் நகர் சன்சிட்டி கிரானைட் ஊராட்சியில் உள்ள உதயசூரியன் நகர் கிரானைட் வடகரை பகுதியில் உள்ள பாபா நகர் வடகரை ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த பகுதிகளில் மழை நீர் செல்வதற்கு கால்வாய்கள் இருந்து வந்தன. இந்த கால்வாய்களை தனியார் சிலர் ஆக்கிரமித்தும் வீட்டு மனை விற்பனை செய்ப வர்கள் கால்வாய்களை ஆக்கிரமித்தும் உள்ளதால் மழைநீர் வெளியேறாமல் இருந்து வருகிறது.

    இந்த மழை நீரை வெளி யேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து ஏற்கனவே இருந்த மழைநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து இருப்பவர்களிடம் இருந்து மீட்டு சீரான கால்வாய் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • இயல்பைவிட 17 சதவீதம் அளவுக்கு குறைவாகவே மழை பெய்துள்ளது.
    • தமிழகத்தில் புயலால் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் கணித்து உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட குறைவாகவே பெய்துள்ளது. அக்டோபர் 1 முதல் தற்போது வரையில் 1½ மாதத்தில் எப்போதும் 283 மி.மீ. மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 243 மி.மீ. அளவுக்கே மழை பெய்துள்ளது. இயல்பைவிட 17 சதவீதம் அளவுக்கு குறைவாகவே மழை பெய்துள்ளது.

    இந்நிலையில் மத்திய மேற்கு வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது புயலாக மாறி வங்கதேச கடற்கரை நோக்கி சென்றுவிட்டது.

    இதனால் தமிழகத்தில் புயலால் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் கணித்து உள்ளது.

    இந்நிலையில் வருகிற 19-ந்தேதிக்கு பிறகு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராம நாதபுரம், சிவகங்கை, புதுக் கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    மறுநாள் 20-ந்தேதி தமிழகம்-புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.

    • 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    • நாகை மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

    நாகப்பட்டினம்:

    மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

    மேலும் இது வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, நாளை அக்டோபர் 25 ஆம் தேதி நண்பகலில் கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்காளதேச கடற்கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.

    இந்நிலையில் புயல் உருவாகிய உள்ளது என்பதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகை ,எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    மீன்வளத்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையின்படி நாகை மாவட்டத்தில் 700 விசைபடகுகள் 3000 பைபர் படகுகள் 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல், 75 கி.மீ வேகத்திலும், இடையிடையே 85 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
    • புதுவையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனிடையே, தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் கடந்த 19-ந் தேதி காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    இது தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் புயலாக உருவெடுத்தது.

    மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு தேஜ் அதி தீவிர புயலாக வலுப்பெற்று தென்மேற்கு அரபிக்கடலில் சகோத்ரா நகருக்கு 330 கி.மீ கிழக்கு-தென்மேற்கேயும், சலாலா நகருக்கு 690 கி.மீ தெற்கு-தென்கிழக்கேயும் மற்றும் அல் கைடா நகருக்கு 720 கி.மீ தென்கிழக்கேயும் மையம் கொண்டு ள்ளது.

    இன்று மதியம் புயல் மேலும் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதேபோல் வங்ககடல் பகுதியில் அந்தமான் தீவுகளுக்கு மேற்கே மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

    இது அந்தமான் தீவுகள் போரட் பிளேயருக்கு வடக்கு வடமேற்கில் சுமார் 110 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுக்கு தென்-தென்கிழக்கே ஆயிரத்து 460 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

    இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்பு உள்ளது. அப்போது மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல், 75 கி.மீ வேகத்திலும், இடையிடையே 85 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை காலை மத்திய வங்கக்கடல் பகுதியில் இது புயலாக மாற வாய்ப்புண்டு. இந்த புயலுக்கு ஹாமூன் என பெயரிடப்பட்டுள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து 25-ந் தேதி அதிகாலை டின்கோனா தீவு மற்றம் சாண்ட்விப் இடையே வங்கதேச கடற்கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும், மீனவர்கள் யாரும கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

    இந்த நிலையில், புதுவையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் நாளையும், நாளை மறுநாளும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.         

    • சூறாவளியுடன் கனமழை பெய்ததால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது
    • 60 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1650 பேர் வீடுகளை இழந்து தவிப்பு

    பிரேசில் நாட்டின் தென்மாநிலம்  ரியோ கிராண்ட் டோ சுல்-ஐ பயங்கரமான புயல் தாக்கியதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புயல் காரணமாக இடைவிடாத கனமழை பெய்ததால் 60 நகரங்கள் பாதிக்கப்பட்டன. 1,650 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

    ரியோ கிராண்ட் டோ சுல் மாநில கவர்னர் எட்வர்டோ லைட் கூறுகையில் ''பருவநிலை மாற்றம் காரணமாக மாநிலத்தில் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. இந்த புயலால் 60 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது வெப்பம் மண்டல சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    பெண் ஒருவர் மீட்பு பணியின்போது வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டார். கயிறு கட்டி அந்த பெண்ணை மீட்டபோது, கயிறு அறுந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற முடியவில்லை'' என்றார்.

    ரியா கிராண்ட் டோ சுல் பகுதியில் ஆற்றங்கரையோரம் வசித்து வந்த மக்கள், மொட்டை மாடியில் இருந்து உதவி கேட்பது போன்ற வீடியோ காட்சி நெஞ்சை பதைபதைக்க செய்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கு முன் ஜூன் மாதம் இதுபோன்று பயங்கர சூறாவளி புயல் ஏற்பட்டது. அப்போது 16 பேர் உயிரிழந்தனர். 40 நகரங்கள் பாதிக்கப்பட்டன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சூறாவளி காரணமாக இந்த பகுதியில் கனமழை மற்றும் பெருமளவு பாதிப்பு
    • உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது

    அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் இந்த வருடம் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிமாக தாக்கியது. இதுவரை இல்லாத வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை பலமான சூறாவளி தாக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

    ஹிலாரி என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி நேற்று உருவானது. இது கிழக்கு பசிபிக் கடல் பகுதியை நோக்கி விரைகிறது. இந்த சூறாவளி மெக்சிகோ நாட்டிலும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலும் கனமழை பொழிவை ஏற்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளனர்.

    கடைசியாக 1939-ம் ஆண்டு சூறாவளி காரணமாக இந்த பகுதியில் கனமழை மற்றும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. இந்த முறையும் இது நடந்தால் கிட்டத்தட்ட 84 வருடங்களுக்கு பிறகு ஏற்படும் சூறாவளியாக இருக்கும். தற்போதைய நிலவரப்படி, மணிக்கு 140 மைல் (மணிக்கு 225 கி.மீ.) வேகத்தை அடைந்துள்ள இந்த சூறாவளியை 4வது ரகமாக தேசிய சூறாவளி மைய நிபுணர்கள் வகைப்படுத்தி இருக்கின்றனர்.

    இதனால் தென்மேற்கு அமெரிக்காவில் இன்று தொடங்கி அடுத்த வாரம் புதன்கிழமை வரை கடும் புயல் காற்றும், கனமழையும் பெய்யக்கூடும் என்றும் இது நாளை, நாளை மறுநாள் மேலும் தீவிரமடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புயல் காரணமாக கடுமையான சேதங்கள் உண்டாகலாம் எனவும் தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது.

    இந்த சூறாவளி தெற்கு கலிபோர்னியா, தெற்கு நிவேடா, மேற்கு அரிசோனா மற்றும் தென்மேற்கு உட்டா பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சூறாவளி மற்றும் கனமழை எச்சரிக்கையை அடுத்து, மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ள நீர் புகுவதை தடுக்க மண்மூட்டைகளை அடுக்கியும், மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதை சமாளிக்க ஜெனரேட்டரையும் தயார் செய்து வருகின்றனர்.

    மழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து வசதி தடைபடலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், அவசரகால சேவை அமைப்புகளும், பேரிடர் மேலாண்மை அமைப்புகளும், மக்களுக்கு பாதுகாப்பான தங்குமிட வசதிகளையும், அங்கு தேவைப்படும் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் சேமித்து, சீராக வினியோகம் செய்வதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • கஜா புயலுக்கு பின் லட்சக்கணக்கான மரங்களை அடியோடு சாய்த்தன.
    • சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் மரங்கள், செடிகொடிகள் நிரைந்து காணப்பட்டது.

    ஆனால், கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயலுக்கு பின், முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் லட்சக்கணக்கான மரங்களை அடியோடு சாய்த்தன.

    இதனை மீட்டெடுக்கும் வகையில், முத்துப்பேட்டை அடுத்த மேலத்தொண்டியக்காடு கிராமத்தில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 75 மரக்கன்றுகள் அப்பகுதியில் நடப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள், கிராம நிர்வாகிகள் மற்றும் மன்ற நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சூறாவளிக்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தது.
    • பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் ஷியோகிராண்ட டொசூல் மாநிலத்தில் புயல் காரணமாக கடும் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறாவளிக்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தது.

    இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்ததால் ரோடுகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுயது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

    அவர்களை மீட்பு குழுவினர் விரைந்து சென்று படகு மூலம் மீட்டனர். வெள்ளத்தில் சிக்கிய 3,713 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். 20-க்கும் மேற்பட்டவர்களை வெள்ளம் அடித்து சென்றது. அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் அதிரடியாக மீட்கப்பட்டனர். இந்த சூறாவளி புயலுக்கு 4 மாத குழந்தை உள்பட 13 பேர் பலியாகிவிட்டனர், 20-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி விட்டனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை, அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்துவிட்டனர்.

    அவர்கள் அங்குள்ள விளையாட்டு மைதானங்களில் தற்காலிமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பலர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு விட்டதால் உயிர்சேதம் பெருமள வில் இல்லாமல் தடுக்கப்பட்டது.

    • அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது.
    • டிட்லி, ஃபானி மற்றும் குலாம் ஆகிய பேரிடர்களின் பெயர்களை தொடர்ந்து தற்போது பிபோர்ஜோய் பெயரும் இணைந்துள்ளது.

    இந்தியாவில் இயற்கை பேரிடர்களின்போது பிறக்கும் குழந்தைகளுக்கு தனித்துவமாக இருப்பதற்காக பெற்றோர்கள் தங்களின் குழந்கைளுக்கு அதன் பெயர்களை வைத்து மகிழ்ந்து வருகின்றனர். சுனாமி, சூறாவளி முதல் கொரோனா, லாக்டவுன் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின் பெயர்களிலும் இந்தியாவில் குழந்தைகள் உள்ளது என்றே கூறலாம்.

    டிட்லி, ஃபானி மற்றும் குலாம் ஆகிய சூறாவளி பெயர்களை தொடர்ந்து தற்போது பிபோர்ஜோய் பெயரும் இணைந்துள்ளது.

    ஆம், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்தப் புயல் இன்று மாலை குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த முகாம்களில் தங்கியுள்ள குஜராத்தை சேர்ந்த பெற்றோர் தங்களின் ஒரு மாத பெண் குழந்தைக்கு புயலின் பெயரான பிபோர்ஜோய் என பெயர் வைத்துள்ளனர். இது அனைவரது கனத்தையும் ஈர்த்துள்ளது.

    ×