என் மலர்
நீங்கள் தேடியது "AR Rahman"
- யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
- அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு நடனப் புயல்- இசைப்புயல் இணைந்துள்ள படம் 'மூன்வாக்'. அதாவது பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்துள்ள இப்படத்தை என்.எஸ்.மனோஜ் இயக்கி உள்ளார். 'மூன்வாக்' என்பது 'பாப்' இசை உலகின் மன்னர் என்று போற்றப்படும் மைக்கேல் ஜாக்சனின் உலகப் புகழ் பெற்ற நடன அசைவாகும். இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.
இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். குடும்ப பொழுதுபோக்காக, நகைச்சுவை கலந்து உருவாகி உள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு உரிமையை 'லஹரி மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 'மூன்வாக்' படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடல்களின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
- நிகழ்வில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து இந்த தர்காவுக்கு மக்கள் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி 469-வது ஆண்டாக கந்தூரி விழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு 7.30 மணியளவில் நாகை யாஹூசைன் பள்ளிவாசல் தெருவில் இருந்து புறப்பட்டது. முன்னதாக சிறப்பு துவா ஓதப்பட்டு புறப்பட்ட சந்தனக்கூடு, அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள், செட்டிபல்லக்கு, சாம்பிராணி சட்டி, பெரிய ரதம், சின்னரதம் உள்ளிட்ட அலங்கார ரதங்களுடன் நாகையின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
ஊர்வலத்திற்கு முன்பாக பலர் பாரம்பரிய நடனம் ஆடியபடி சென்றனர். வழிநெடுகிலும் உள்ளூர், வெளியூர், பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளானோர் நின்று சந்தனக்கூடு ஊர்வலத்தை கண்டு களித்தனர். இன்று அதிகாலை ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசுவதற்காக நாகூர் தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தது. இந்நிகழ்வில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் சந்தனம் பூசும் வைபவம் விழாவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆட்டோவில் வந்தார். அதனை தொடர்ந்து நாகூர் ஆண்டவர் சமாதியில் நீண்ட நேரம் காத்திருந்து வழிபட்டார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
'மின்சார கனவு' படத்துக்கு பிறகு, 28 ஆண்டுகளுக்கு பிறகு என்.எஸ்.மனோஜ் இயக்கத்தில் உருவாகும் படம் 'மூன்வாக்'. இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்த படத்தில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் இசை, நடனம், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து பான் இந்தியா படமாக தயாராகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்
படத்தை பிஹைன்வுட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையை 'லஹரி மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 'மூன்வாக்' படத்தின் பாடல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், மூன்வாக் திரைப்படத்தின் 'STORM Anthem' பாடலுக்கான அதிகாரப்பூர்வ வீடியோ வெளியானது. Storm Anthem பாடலை அறிவு எழுதி பாடியுள்ளார்.
ஜென்டில்மேன், காதலன், லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து பிரபுதேவா-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராம் சரண்- ஜான்வி கபூர் அடிக்க புச்சி பாவு பெத்தி படத்தை இயக்கி வருகிறார்.
ராம் சரண்- இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் 'பெத்தி' படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் எப்போது என்ற அறிவிப்பை நாளை காலை 11.07 மணிக்கு வெளியிட இருக்கிறது. இது தொடர்பாக சிகிரி என்றால் என்ன? என்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
- புச்சி பாபு இயக்கத்தில் பெத்தி படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார்.
- இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
ராம் சரண் - இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் மக்களிடையே போதிய அவரவேற்பை பெறவில்லை.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் பெத்தி படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது . இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இந்நிலையில், 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூரின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ஆச்சியம்மா என்ற கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார்.
- 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் தற்போது இரண்டாவது தேசிய விருதை பெற்றுள்ளார்.
- ‘சூரரைப் போற்று’ படத்திற்கு தேசிய விருது பெற்றுள்ளார்.
டெல்லியில் கடந்த மாதம் 23-ந்தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தேசிய விருது பெற்றார்.
'வாத்தி' படத்தில் பாடல்கள் அமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் ஜி.வி. பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றார். 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் தற்போது இரண்டாவது தேசிய விருதை பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு 'சூரரைப் போற்று' படத்திற்கு தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக தேசிய விருதை பெற்ற ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பரிசு ஒன்றை வழங்கி உள்ளார். இதுதொடர்பாக ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு. இரண்டாவது முறையாக தேசிய விருதுகளைப் பெற்றதற்காக ஏ.ஆர்.ரகுமான் சார் இந்த அழகான வெள்ளை கிராண்ட் பியானோவை எனக்குப் பரிசளித்தார்.
மிக்க நன்றி சார், இது நிறைய அர்த்தம் தருகிறது. லெஜெண்ட் பயன்படுத்திய பியானோ. இதைவிட சிறந்த பரிசு என்னவென்று நான் கேட்க முடியும் என்று கூறியுள்ளார்.
- பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார்.
- பொன்னியின் செல்வன் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் . இப்படத்தில் விக்ரம், ரவி மோகன், கார்த்தி, திரிஷா,ஐஷ்வர்யா ராய் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற வீர ராஜ வீர பாடலின் மீது காப்புரிமை வழக்கு தொடுக்கப்பட்டது.இப்படத்தில் இடம் பெற்ற வீர ராஜ வீர பாடலின் மீது காப்புரிமை வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனை பாடகரான ஃபையாஸ் வசிஃபுதின் டகர் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடுத்தார். ஏனெனில் இப்பாடல் அவர் தந்தை ஃபையாசுதின் டகர் மற்றும் மாமா ஸாஹிருதின் டகர் இசையமைத்த சிவ துதி பாடலில் இருந்து இப்பாடல் இசையமைப்பட்டுள்ளதாக வழக்கை தொடுத்தார்.
இந்த வழக்கில், ஏ.ஆர். ரகுமானுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் ரூ.2 கோடி நீதிமன்றத்தில் டெபாசிட் கட்டவேண்டும் எனவும் அனைத்து ஆன்லைன் தளங்களிலும் தாஹர் சகோதரர்கள் பெயரை கிரெடிட்டாக கொடுக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி உத்தரவுகள் பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஏ.ஆர். ரகுமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தொடந்தார். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு, "தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
- தமிழக அரசின் பாராட்டு ஒட்டுமொத்த இசை கலைஞருக்கான அங்கீகாரம் என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.
- ஒவ்வொரு இசைக்கலைஞருக்கும் இசைத்துறையில் புதுமையை செய்ய ஊக்கமளிக்கிறது.
திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் 'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
இந்நிலையில், இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை ஆகியவற்றுக்கிடையே இருந்த வேறுபாடுகளை தன் இசையின் வழியே களைந்த இசை மேதை இளையராஜா.
திரையிசையை கடந்து முழுமையான மேற்கத்திய செவ்வியல் இசையில் அவர் நிகழ்த்தியிருக்கும் சிம்பொனி என்ற சாதனை, ஒவ்வொரு இசைக்கலைஞருக்கும் இசைத்துறையில் புதுமையை செய்ய ஊக்கமளிக்கிறது.
இசை உலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர் இசைஞானி இளையராஜா.
இமாலய சாதனை, எளிமை ஒருங்கிணைந்த மாமனிதர். தமிழக அரசின் பாராட்டு விழாவை இளையராஜாவிற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இசை கலைஞருக்கான அங்கீகாரமாக பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய பாரதிராஜா தற்போது படங்களிலும் நடித்து வருகிறார்.
- திருச்சிற்றம்பலம் படத்தில் இவரது கதாபாத்திரம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
முருகையா இயக்கத்தில் பாரதிராஜா நடிக்கும் 'புலவர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த பர்ஸ்ட் லுக் வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய பாரதிராஜா தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். குரங்கு பொம்மை, திருச்சிற்றம்பலம் போனற படங்களில் இவரது கதாபாத்திரம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
- எஸ்ஜே சூர்யா மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
- படத்திற்கு கில்லர் என தலைப்பு வைத்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் எஸ்.ஜே சூர்யா. குறிப்பாக பல நட்சத்திர ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.. இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யா மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். படத்திற்கு கில்லர் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளரை படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
படக்குழு வெளியிட்ட போஸ்டரில் "நாம் இருவரும் சேரும் சமயம், நம் கைகளிலே வரும் இமயம்.நாம் தொட்டது எதுவும் அமையும். இது அன்பால் இணைந்த இதயம்" என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.
எஸ் ஜே சூர்யா நடித்து இயக்கிய நியூ, அன்பே ஆருயிரே படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். படத்தில் நடிக்கும் பிற நடிகர்களை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படம் இந்தியா மற்றும் மெக்சிகோ ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட இருக்கிறது.
எஸ்ஜே சூர்யா அடுத்து சர்தார் 2 மற்றும் லவ் இன்சூரன் கம்பெனி ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தனது ஸ்டூடியோவுக்கு வந்த ஏ.ஆர்.ரகுமான் திரைப்படம் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
- மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஸ்டூடியோவுக்கு நேரில் வந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை திடீரென சந்தித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அய்யர்கண்டிகை கிராமத்தில் திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான பிரமாண்ட ஸ்டூடியோ உள்ளது. நேற்று தனது ஸ்டூடியோவுக்கு வந்த ஏ.ஆர்.ரகுமான் திரைப்படம் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் அங்கு நேரில் வந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு இரவு 7.10 வரை நீடித்தது.
இவர்களின் இந்த திடீர் சந்திப்பு உறுதிபடுத்தப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு நமது கலாசாரம் சம்பந்தப்பட்ட 'சத்யம், சிவம், சுந்தரம் எனும் வெவ்ஸ்' என்ற குறும்படத்துக்கு இசை அமைத்து கொடுத்ததால் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை அவர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நன்றி சொன்னதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதற்கான எந்த விவரங்களும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தக் லைஃப் திரைப்படம்.
- திரைப்படத்தின் பாடலான முத்த மழை பாடலை இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடினார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தக் லைஃப் திரைப்படம். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
திரைப்படத்தின் பாடலான முத்த மழை பாடலை இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடினார். இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வைரலானது. இதனால் படத்தில் விஷ்வலாக இப்பாட்டு எப்படி இருக்கும் என ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் படத்தில் அந்த பாட்டு வராதது மக்களுக்கு மிகவும் ஏமாற்றமாக அமைந்தது.
திரைப்படம் வெளியாகி சில வாரங்கள் கழித்து முத்த மழை பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டது. மக்கள் அனைவரும் மிக பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பை வீடியோ பாடல் பூர்த்தி செய்யவில்லை.
பாடலை ஆடியோவாக கேட்கும் போது நமக்குள் அதன் விஷ்வலை கற்பனையாக நாம் வளர்க்கிறோம் ஆனால் படத்தில் அம்மாதிரி இல்லாதபோது நமக்கும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. இது இந்த காலக்கட்டத்தில் மட்டுமல்ல 90-ல் காலக்கட்டத்திலும் இதுப்போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.
1970, 1980களின் நிறைய பாடல்கள் செவி வழியாக அறிமுகமாகி, மனதுக்குள் மெதுவாக ஊடுருவி, நினைவிடுக்குகளில் நிரந்தரமாக நிறைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு பாடல்களும் நம்முடைய ஏதோ ஒரு வாழ்வின் நினைவோடு பொருந்திருக்கும்.
அந்த காலக்கட்டத்தில் பாடலின் விஷ்வல்களை அவ்வளவு எளிதாக பார்க்க முடியாது. எல்லாம் ஒளியும் ஒலியும் என்ற பாடல் நிகழ்ச்சியின் மூலம் செவி வழியாக கேட்கத்தான் முடியும்.
ஆனால் அதே பாடல்களை திரையரங்கிள் சென்று பார்க்கும் போது என்னடா இது? என நொந்து போகும் அளவிற்கு அதன் விஷ்வல்கள் இருக்கும்.
அதற்கு உதாரணமாக
மீன் கொடி தேரில் மன்மத ராஜனா ஊர்வலம் போகின்றான் - இளையராஜா இசையில் வெளியான கரும்பு வில் திரைப்படம்
ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்- சிவப்பு மல்லி திரைப்படம்
சின்னப்புறா ஒன்று எண்ணக் கனாவில் நின்று... - அன்பே சங்கீதா திரைப்படம்
தேவதை இளம் தேரில் - ஆயிரம் நிலவே வா திரைப்படம்
இப்படி நிறைய பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
1980கள் மட்டுமல்ல, 1990களின் எவர்கிரீன் பாடல்களும் அப்படித்தான்.
தூது வளை இலை அரைச்சி...
எருக்கஞ் செடி ஓரம் இருக்கிப் பிடிச்ச என் மாமா...
பாடல்கள் எல்லாம் அந்த ரகம் தான்.
அதனால், பாடல்கள் கேட்டு ரசிப்பதற்கும் மனதுக்கு இனிமையாகவும் இருந்தால் அப்படியே விட்டு விட வேண்டும்.
முகவரி சொல்லாமல் முகம் தனை மறைத்து, ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும் சுவாரஸ்யமானது, காதலுக்கு மட்டுமல்ல, இது மாதிரியான பாடல்களுக்கும் தான்.






