என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் விஜய் சேதுபதி"

    ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்தின் உயிர்.

    மும்பையில் ஒரு சாதாரண மனிதனாக விஜய் சேதுபதி வாழ்ந்து வருகிறார். வாழ்க்கையில் தொடர்ந்து சந்திக்கும் இழப்புகள், பண நெருக்கடி, மன அழுத்தம் ஆகியவற்றுக்கு நடுவே அவர் பயணம் தொடங்குகிறது. மறுபக்கம் பெரும் பணக்காரரான அரவிந்த் சாமி, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு தனது சொத்துக்களை இழக்கிறார்.

    இருவரும் ஒரு கட்டத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். அதன்பின் இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? இவர்களின் நிலைமைக்கு என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விஜய் சேதுபதி பார்வை, உடல் மொழி, முகபாவனை மூலம் கவர்ந்து இருக்கிறார். எந்த டயலாக் இல்லாமலும் ஒரு மனிதனின் வலி, கோபம், குழப்பம், அமைதி ஆகிய அனைத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் அவரது நடிப்பு தான் முக்கிய பலம்.

    அரவிந்த் சுவாமி, குறைந்த காட்சிகளில் வந்தாலும் கதைக்கு தேவையான அழுத்தத்தை கொடுக்கிறார். அதிதி ராவ், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் அமைதியான நடிப்பை கொடுத்துள்ளார். அனைவருமே வசனம் இல்லாத இந்த உலகத்துக்குள் நன்றாக பொருந்தி நடித்துள்ளனர்.

    காந்தி டாக்ஸ் வழக்கமான வணிகப்படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான முயற்சி. வசனமே இல்லாமல், காட்சிகள், முகபாவனைகள், இசை மூலமாக மட்டுமே கதை சொல்லப்பட்டிருக்கிறது.

    இயக்கம்

    இயக்குனர் கிஷோர் பாண்டுரங்கா பெலேக்கர், ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை போராட்டத்தை மிக அமைதியாக சொல்ல முயற்சி செய்துள்ளார். சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், படம் தன் பாதையை விட்டு விலகவில்லை.

    எல்லாவற்றையும் பார்வையாளரே உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையோடு படம் நகர்கிறது. காந்தி டாக்ஸ் எல்லோருக்குமான படம் அல்ல. வசனம், மாஸ் காட்சிகள், வேகமான திரைக்கதை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இது சவாலாக இருக்கலாம். ஆனால் வித்தியாசமான முயற்சி, நடிப்பை ரசிக்கும் பார்வையாளர்களுக்கு இது ஒரு புதிய அனுபவம்.

    இசை

    ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்தின் உயிர். இவர் இசை இல்லாமல் இந்த படம் முழுமை பெறாது. ஒவ்வொரு காட்சிக்கும் தேவையான உணர்வை இசை மூலம் கொண்டு வந்துள்ளார்.

    ஒளிப்பதிவு

    கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவு படத்தின் மனநிலையை அழகாக பதிவு செய்துள்ளது.

    ரேட்டிங்-3/5

    • வசனங்கள் எதுவுமின்றி மெளனப் படமாக காந்தி டாக்ஸ் உருவாகியுள்ளது.
    • 'காந்தி டாக்ஸ்' படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

    மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் நடித்திருந்தனர். இதன்பின்னர் இந்த மூவர்கள் கூட்டணி இணைந்துள்ள படம் 'காந்தி டாக்ஸ்'.

    வசனங்கள் எதுவுமின்றி மெளனப் படமாக உருவாகியுள்ள காந்தி டாக்ஸ், டார்க் காமெடி ஜானரில் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    கிஷோர் பி பெல்லேக்கர் இயக்கியுள்ள 'காந்தி டாக்ஸ்' படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    மேலும், 'காந்தி டாக்ஸ்' படம் காந்தி நினைவுதினமான வருகிற 30-ந்தேதி உலகளவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், காந்தி டாக்ஸ் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

    • மௌன படமாக உருவாகி உள்ள இப்படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது
    • பா.விஜய்யின் வரிகளில் பாடல் வெளியாகி உள்ளது.

    விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைத்ரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மௌன படம் காந்தி டாக்ஸ். கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் இம்மாதம் இறுதியில் 30ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.

    இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான 'ஏதோ ஏதோ' வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் பா.விஜய் எழுத்துகளில் உருவாகி உள்ள இப்பாடல் நல்ல மெலடியாக அமைந்துள்ளது. மௌனப் படம் என்பதால் இதன் பின்னணி இசை படத்திற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதற்கேற்றவாறே இசைப்புயலின் இசையும் அமைந்துள்ளது.  


    • பிக்பாஸ் சீசனில் சபரி இரண்டாம் இடம் பிடித்தார்.
    • விக்கல்ஸ் விக்ரம் மூன்றாவது இடம்பிடித்தார்.

    சென்னை:

    நூறு நாட்களைக் கடந்து ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

    இந்த நிகழ்ச்சியில் திவ்யா கணேஷ், சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் மற்றும் அரோரா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகினர்.

    இவர்களில் முதலில் அரோரா, அடுத்து விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் வெளியேறினர்.

    திவ்யா, சபரிநாதன் இருவரும் இறுதிச்சுற்றுக்கான மேடையில் இருந்தனர். இவர்களில் இருவரில் திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவித்தார் விஜய் சேதுபதி. சபரிநாதன் ரன்னராக அறிவிக்கப்பட்டார்.

    ஏற்கனவே, கானா வினோத் ரூ.18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.

    இந்த சீசனில் பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டனர்.

    • இந்த சீசனில் பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது.
    • டைட்டில் வின்னர் ஆவார் என்று கூறப்பட்ட கானா வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறினார்

    பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. போட்டியின் நாட்கள் நெருங்க நெருங்க கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வந்தது.

    இந்த சீசனில் பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது. குறிப்பாக டிக்கெட் டூ பைனல் டாஸ்கின் கடைசி விளையாட்டில் காரில் இருந்து சான்ட்ராவை பாருவும் கமருதீனும் கீழே தள்ளிவிட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளானது. இதனையடுத்து இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

    டைட்டில் வின்னர் ஆவார் என்று பெரும்பாலானோரால் கூறப்பட்ட கானா வினோத் ரூ.18 லட்ச பணப்பெட்டியுடன் வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்நிலையில், திவ்யா கணேஷ், சபரி, விக்கல்ஸ் விக்ரம், ஆரோரா ஆகிய 4 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் பிக்பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்வாகியுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது. 

    விஜய் சேதுபதி பெரும் நிதி உதவி அளித்தார்.

    நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சமூக ஆர்வலர் வீரராகவன் ஆகியோர் இணைந்து முன்னெடுத்து வரும் "வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம்" (VVVSI) இளைஞர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

    புதுச்சேரியைச் சேர்ந்த வீரராகவன் என்பவர் ஒரு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். 2016-ஆம் ஆண்டு முதல் பகுதி நேரமாக வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் தகவல்களைப் பகிர்ந்து வந்தார்.

    விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வீரராகவன் பங்கேற்றபோது, அவரது சேவையைக் கண்டு வியந்த விஜய் சேதுபதி, "நீங்கள் வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக இதைச் செய்யுங்கள், உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன்" என்று வாக்குறுதி அளித்தார்.

    வாக்கு கொடுத்தபடியே, இந்த இயக்கம் ஒரு முழுமையான அலுவலகமாகச் செயல்பட விஜய் சேதுபதி பெரும் நிதி உதவி அளித்தார்.

    விஜய் சேதுபதி புதுச்சேரியில் இதற்கான பிரத்யேக அலுவலகத்தை அமைத்துக் கொடுத்து தொடங்கி வைத்தார்.

    அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வீரராகவன் ஆகியோருக்கான மாதாந்திரச் சம்பளத்தைத் தனது சொந்தப் பணத்திலிருந்து விஜய் சேதுபதியே வழங்கி வருகிறார்.

    காந்தி நினைவு தினமான வருகிற 30-ந்தேதி உலகளவில் வெளியாகிறது காந்தி டாக்ஸ்

    மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் நடித்திருந்தனர். இதன்பின்னர் இந்த மூவர்கள் கூட்டணி இணைந்துள்ள படம் 'காந்தி டாக்ஸ்'.

    வசனங்கள் எதுவுமின்றி மெளனப் படமாக உருவாகியுள்ள காந்தி டாக்ஸ், டார்க் காமெடி ஜானரில் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    கிஷோர் பி பெல்லேக்கர் இயக்கியுள்ள 'காந்தி டாக்ஸ்' படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    மேலும், 'காந்தி டாக்ஸ்' படம் காந்தி நினைவுதினமான வருகிற 30-ந்தேதி உலகளவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், காந்தி டாக்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று வெளியாகியுள்ளது.

    ட்ரெய்ன் படத்திற்கு மிஷ்கின் இசையமைக்கிறார்.

    பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் ட்ரெயின். மிஷ்கின் கடைசியாக 2020ம் ஆண்டில் சைக்கோ படம் வெளியானது. இதில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஆகியோர் நடித்துருந்தனர். இந்தப் படம் இளையராஜாவின் இசையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    இதற்கிடையே, ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காகக் காத்திருக்கிறது. இதுவும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் இன்று பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு, ட்ரெய்ன் படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி கையில் ஒரு பையுடன், மிகவும் எதார்த்தமான அதே சமயம் தீவிரமான ஒரு தோற்றத்தில் காணப்படுகிறார்.

    பெயருக்கு ஏற்றார் போலவே, இந்தப் படத்தின் கதை பெரும்பாலும் ரெயிலை மையமாக வைத்தே நகரும் ஒரு டார்க் த்ரில்லர் வகை எனத் தெரிகிறது.

    • இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    • ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தெரிவித்து இருந்தார்.

    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியா அளவில் இப்படம் தயாராக உள்ளதாகவும், இப்படத்தை சார்மி கவுர் தயாரிப்பதாக கூறப்பட்டுள்ளது. நடிகை தபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அதன்பின் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இந்த நிலையில், விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவரின் புதிய படம் தொடர்பான அறிவிப்பை ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது.

    அதாவது, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு 'Slum Dog - 33 Temple Road' என பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான போஸ்டரை வெளியிட்டு விஜய் சேதுபதிக்கு படக்குழு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. போஸ்டரில் விஜய் சேதுபதி ஆக்ரோஷமாக ரத்தக்கறை படிந்த கத்தியுடன் பணப்பெட்டிகளுக்கு நடுவில் நிற்கும்படியாக உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜூன் மாதம் வெளியாக உள்ள 'ஜெயிலர் 2' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார்.
    • ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் பாலய்யா நடிக்கிறார்.

    சென்னை:

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது. 'கூலி' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகிறார். 'ஜெயிலர்' முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது.

    இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளை முடித்த அவர், 2026, ஜூன் மாதம் 12-ம் தேதி 'ஜெயிலர் 2' வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.

    ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகின்றனர்.

    அதன்படி, இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன், பாலய்யா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, சந்தானம், ஃபஹத் பாசில், தமன்னா, வித்யா பாலன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது

    இதற்கிடையே, 'ஜெயிலர் 2' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாகவும், கோவா படப்பிடிப்பின் போது அவர் படப்பிடிப்பு தளத்தில் இணைந்ததாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, ஜெயிலர் 2 படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, விஜய் சேதுபதி அளித்த பேட்டியில், எனக்கு ரஜினி சாரை பிடிக்கும். அதனால்தான் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறேன். அவருடன் இருக்கும்போது பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன் என தெரிவித்தார்.

    கார்த்திக் சுப்பராஜின் பேட்ட (2019) படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இதுவாகும்.

    • பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது.
    • சான்ட்ராவை பாருவும் கமருதீனும் கீழே தள்ளிவிட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.

    பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.

    பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 80 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    குறிப்பாக பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது. இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பைனல் டாஸ்கின் கடைசி விளையாட்டில் காரில் இருந்து சான்ட்ராவை பாருவும் கமருதீனும் கீழே தள்ளிவிட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளானது. இதனையடுத்து இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

    இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சுபிக்ஷா வெளியேறிய நிலையில், இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்றது. முதலில் சபரி ரூ.7 லட்ச ரூபாய் பணப்பெட்டியுடன் வெளியேறியதாக தகவல் பரவிய நிலையில், தற்போது கானா வினோத் ரூ.18 லட்ச பணப்பெட்டியுடன் வீட்டில் இருந்து வெளியேறியதாக தகவல் கிடைத்துள்ளது.

    டைட்டில் வின்னர் ஆவார் என்று பெரும்பாலானோரால் கூறப்பட்ட கானா வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

    • பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது.
    • பார்வதி - கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

    பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.

    பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 80 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது. இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பைனல் டாஸ்கின் கடைசி விளையாட்டில் காரில் இருந்து சான்ட்ராவை பாருவும் கமருதீனும் கீழே தள்ளிவிட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.

    இந்த நடவடிக்கைக்காக இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கவேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இந்த வார வீக்கெண்ட் எபிசோடில் இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வெளியேறுவார்கள். அப்படி, கடந்த சில வாரங்களாக பிரவீன் காந்தி, நந்தினி, அரோரா சி.ஜே., ஆதிரை, துஷார், பிரவீன் காந்தி, திவாகர், கெமி, பிரஜின், ரம்யா ஜோ, FJ மற்றும் ஆதிரை ஆகியோர் வெளியேறினார்கள்.

    இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சுபிக்ஷா வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×