என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரைவிமர்சனம்"

    • நண்பன் விஷ்ணு, கெளஷிக் பணிபுரியும் நிறுவனத்தில் டீம் லீடராகிறான்.
    • காதல் மோதலுடன் கமர்ஷியலாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்.

    நாயகன் கெளஷிக் உட்பட நான்கு பேர் சென்னையிலுள்ள ஒரு பூங்காவில் சந்தித்துப் பழகி நட்பாகிறார்கள். பூங்கா மூலம் கிடைத்த நண்பன் விஷ்ணு, கெளஷிக் பணிபுரியும் நிறுவனத்தில் டீம் லீடராகிறான். ஒரு கட்டத்தில் அந்த விஷ்ணுவை கெளஷிக் கடுமையாக தாக்குகிறான். நட்பில் விரிசல் ஏற்படுகிறது. அது மட்டுல்லாது பூங்காவுக்கு தன் காதலியுடன் வந்து போய்க் கொண்டிருக்கும் இன்னொரு இளைஞனையும் கெளஷிக் அடிக்கிறார்.

    இறுதியில் கெளஷிக் அவர்கள் மீது அப்படி என்னதான் கோபம்? எதற்காக அப்படி நடந்துகொள்கிறார்? நண்பர்களுக்குள் உருவான பிரச்சனை தீர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கெளஷிக், காதல், கோபம் என நடிப்பில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் ஆரா, காதலுக்குத் தேவையான மயக்கம், கிறக்கம், நடனம் என தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.

    பிராணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்ரீதேவி, ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன், கோவிந்தராஜ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    நட்பு, உறவு, சந்தோஷத்தை பூங்காக்களில் சுற்றித்திரிகிற மனிதர்கள் மூலம் பெற முடியும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர். இதில் காதல் மோதலுடன் கமர்ஷியலாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். திரைக்கதை வழுவில்லாமல் நகர்த்தி இருக்கிறார்.

    அகமது விக்கியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆர்.ஹெச்.அசோக்கின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். 

    மாலைமலர் ரேட்டிங் : 2 / 5

    • மிருகங்கள் எல்லாம் சேர்ந்து மனிதர்களை போல வீடு வாசல், வேலை என ஒரு நகரத்தில் வாழந்தால் எப்படி இருக்கும்.
    • உலகிலேயே மிக சோம்பேறியான ஸ்லோத் மிருகங்கள் ஜூடோபியாவில் அரசு அதிகாரிகளாக வேலை செய்கின்றன.

    மிருகங்கள் எல்லாம் சேர்ந்து மனிதர்களை போல வீடு வாசல், வேலை என ஒரு நகரத்தில் வாழந்தால் எப்படி இருக்கும். அந்த நகரம் தான் 'ஜூடோபியா'

    2016இல் வெளியான முதல் பாகத்தில் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு காவல்துறை வேளையில் சேர முயல் குடும்பத்தை சேர்ந்த ஜூடி ஹாப்ஸ் செல்கிறாள்.

    அங்கு ஒரு திருட்டு நரி (நிக் வைல்ட்) உதவியுடன் ஒரு வழக்கின் மர்மங்களை ஜூடி ஹாப்ஸ் கண்டுபிடிப்பதே கதை. இறுதியில் நிக் வைல்டும் காவல் அதிகாரி ஆகிவிடுகிறான்.

    இந்நிலையில் 'ஜூடோபியா 2' படத்தின் கதை முதல் பாகத்திலிருந்து தொடர்கிறது. காவல் துறையில் பார்ட்னர்களாக இருந்து வரும் ஜூடி ஹாப்ஸ் மற்றும் நிக் வைல்ட் இருவரிடையே பிரிவு ஏற்படுகிறது.

    ஜூடி ஒரு பாம்பு ஜூடோபியாவில் ஊடுருவியதாக சந்தேகிக்கிறாள். ஜூடோபியா ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பாம்புகள் அங்கு வந்தது என அவள் கூறியதை யாரும் நம்பவில்லை.

    ஆனால் ஜூடி நிக்கை சம்மதிக்க வைத்து அவனுடன் சேர்ந்த இதுகுறித்து விசாரணையை தொடங்குகிறாள்.

    இதற்கிடையில், ஜூடோபியாவின் நிறுவனர்களான லிங்க்ஸ்லி என்ற சிங்கக் குடும்பம் ஒரு விருந்து வைக்கிறது. இந்த விருந்தின்போது ஒரு திருட்டு நடக்கிறது. பாம்பு ஏன் ஊருக்குள் வந்தது, அதற்கும் இந்த திருட்டுக்கும் என்ன தொடர்பு, ஜூடியும், நிக்கும் ஒற்றுமையாக இந்த மர்மத்தை அவிழ்த்தார்களா என்பதே மீதிக்கதை.

    நடிகர்கள்: படம் அனிமேஷன் என்பதால் டப்பிங் கலைஞர்கள் கையில் தான் கதாபாத்திரங்களின் உயிர் உள்ளது. மேலும் முதல் படத்தை போல காமெடி வசனங்கள், சம்பவங்களுக்கு பஞ்சமில்லை.

    இயக்கம்: அனிமேஷன் காட்சியமைப்புகள் ஜூட்டோபியாவுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன.கதை மீதான பார்வையாளரின் நம்பிக்கையை நிறுவுகின்றன. ஒவ்வொரு சிறிய காட்சியும் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் அமர்க்களப்படுகிறது.

    நகரில் மனிதர்களை போல வெவ்வேறு பணிகளை செய்யும் வெவ்வேறு விலங்குகளை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக உலகிலேயே மிக சோம்பேறியான ஸ்லோத் மிருகங்கள் ஜூடோபியாவில் அரசு அதிகாரிகளாக வேலை செய்வது அங்கு கள எதார்த்தம் போலும். மேலும் மிருகங்களுக்கு இடையே இருக்கும் முரண்களை வைத்து நகைச்சுவை, சமூக கட்டமைப்பு, வர்க்க பேதங்கள் என அசல் நவநாகரீக மனித நகரங்களை கண் முன் கொண்டு வந்ததற்கு பாராட்டுகள்.

    நிக், ஜூடி இடையே ஏற்படும் சச்சரவுகள், சண்டை என இருந்தாலும், இருவருக்கும் உள்ள கெமிஸ்ரிக்கு 100 மார்க் கொடுக்கலாம்.

    மொத்தத்தில் கத்தி, துப்பாக்கி, சிவப்பு பெயிண்ட் (ரத்தம்) என கண்களை புண்ணாக்கும் படங்களுக்கு மத்தியில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் செல்ல ஏதுவான டிசம்பர் ட்ரீட் இந்த 'ஜூடோபியா 2' 

    மாலைமலர் ரேட்டிங் : 3.5 / 5

    வன்முறை சூழ்ந்த ரவுடிகளின் வாழ்க்கையின் மறுபக்கத்தை சொல்லும் கதை "ப்ரைடே".

    மைம் கோபிக்கு அடியாளாக இருப்பவர் நாயகன் அனிஷ் மாசிலாமணி. அனிஷ் மற்றும் கே.பி.ஒய் தீனா சேர்ந்து ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அப்போது, தீனா எதிர்பாராதவிதமாக எதிரி கும்பலிடம் மாட்டும்போது, அனிஷ் மாசிலாமணி அவரை காப்பாற்றி இருவரும் ஒரு இடத்தில் தஞ்சம் அடைகின்றனர்.

    தன்னை கொலை செய்ய முயன்றவர்களை அடியாட்களுடன் தேடி வருகிறார்கள். ஒரு பக்கம் இப்படி இருக்க, மறுபக்கம் தீனாவும் அனிஷ் மாசிலாணியுடன் இருந்துக் கொண்டே அவரை கொலை செய்ய திட்டமிடுபவருக்கு உதவுகிறார்.

    இறுதியில், அனிஷ் மாசிலாமணி யாரை, எதற்காக கொலை செய்ய முயன்றார்? தீனா ஏன் அதற்கு உதவுகிறார்? இதில் இருந்து அனிஷ் மாசிலாமணி தப்பித்தாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிக் கடை..

    நடிகர்கள்

    கே.பி.ஒய் தீனா எளிமையான கதாபாத்திரத்தில் நடித்து 2ம் பாதியில் கதையின் திருப்புமுனையாக இருக்கிறார். நடிகர் அனிஷ் மாசிலாமணி அளவான நடிப்பு மூலம் ரவுடி கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார். மைம் கோபி தனது அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    இயக்கம்

    படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஹரி வெங்கடேஷ், வன்முறை சூழ்ந்த ரவுடிகளின் மறுபக்கத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார் ஹரி வெங்கடேஷ். ஒரு சாதாரண கதையை சுவாரஸ்யமாக எடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அது இயக்குனருக்கு கைக்கொடுக்கவில்லை.

    இசை

    படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு பலம்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ஜானி கதைக்களத்தின் பயங்கரத்தை பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு.

    ரேட்டிங்- 1.5/5

    ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.

    சென்னை காசிமேடு பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார் தான்யா ரவிச்சந்திரன். இவர் போலீஸ், முன்னாள் எம்.எல்.ஏ, மருத்துவ செயலாளர் என்று யாருடைய மிரட்டலுக்கும் அடிபணியாமல் நேர்மையாக இருக்கிறார். இதனால், அப்பகுதியில் உள்ள ரவுடி டேனியல் பாலாஜி அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.

    இந்த விவகாரத்தில் தலையிடும் சென்னை காவல்துறை ஆணையர், டேனியல் பாலாஜியை அழைத்து மிரட்டி அசிங்கப்படுத்தி விடுகிறார். இதனால் கடும் கோபம் அடையும் டேனியல் பாலாஜி, காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி தன்யா ரவிச்சந்திரனை பழிவாங்க துடிக்கிறார்.

    இறுதியில் டேனியல் பாலாஜி தான்யா ரவிச்சந்திரனை பழி வாங்கினாரா? இல்லையா? என்பதை மீதி கதை.

    நடிகர்கள்

    கதையின் நாயகியாக நடித்திருக்கும் தான்யா ரவிச்சந்திரன், எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் துணிச்சலான பெண் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். ரவுடி கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இயக்குநர் கே.பாக்யராஜ் அழுத்தமான கதாபாத்திரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், இரண்டாம் பாதிக்கு மேல் அவரது கதாபாத்திரம் பலம் இழந்து விடுகிறது.

    முன்னாள் எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் அருள்தாஸ், காவல்துறை ஆணையராக நடித்திருக்கும் தமிழ், சமூக ஆர்வலராக நடித்திருக்கும் ஜாக் அருணாச்சலம், நாயகியின் தங்கையாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி, சகோதரராக நடித்திருக்கும் ரங்கா, தோழியாக நடித்திருக்கும் நயனா ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    இயக்கம்

    அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் மற்றும் ரவுடி இடையிலான மோதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெ.பி. நீயா நானா என்று போட்டி போட்டு நடிக்க வைத்திருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி லாஜிக் மிரல்களை தவிர்த்து இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.

    இசை

    பாடல்கள் இல்லை என்றாலும் தனது பின்னணி இசை மூலம் காட்சிகளில் இருக்கும் பதற்றத்தை பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

    ரேட்டிங்- 2.5/5

    இசையமைப்பாளர் பரத் ஆசிகவன், பின்னணி இசை மூலம் ரசிக்க வைத்து இருக்கிறார்.

    நாயகன் ஹரிஷ் ஓரி குடும்ப சூழ்நிலை காரணமாக மலை கிராமத்திற்கு செல்கிறார். அங்கிருக்கும் அவரது உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு சுமை தூக்கும் வேலையை செய்து வருகிறார்.

    இந்நிலையில், அந்த மலை கிராம மக்களை ஏமாற்றி, நிலத்தை அபகரித்து, மக்களை அங்கிருந்து வெளியேற்றி வருகிறார் ஊர் தலைவர். இதை அறிந்த ஹரிஷ் ஓரி மற்றும் அவரது மனைவி அபிராமி போஸ் இருவரும் ஊர் தலைவர் திட்டத்தை முறியடிக்க முயற்சி செய்கிறார்கள்.

    இறுதியில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் இருவரது முயற்சி என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். ஹரிஷ் ஓரியின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ், கிராமத்து பெண்ணாக நடித்து கவர்ந்து இருக்கிறார். மலை கிராம மக்கள் பலர் மற்ற கதாபாத்திரங்களில் நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்.

    இயக்கம்

    அடிப்படை தேவைகள் இல்லாத மலை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார். மலை கிராம மக்களின் வலிகளை சொல்லும் படங்கள் பல வடிவங்களில் பல வந்திருந்தாலும், அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும் வகையில், மூலிகை ரசம் உள்ளிட்ட புதிய விசயங்களை சேர்த்து, படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி இருக்கிறார்.

    இசை

    இசையமைப்பாளர் பரத் ஆசிகவன், பின்னணி இசை மூலம் ரசிக்க வைத்து இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ராம் தேவ், சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்.

    ரேட்டிங்- 3/5

    படத்தின் இரண்டாவது ஹீரோ ஏ.ஆர்.ரகுமான்.

    இந்திய விமானப்படை வீரராக இருக்கும் தனுஷ் கோபக்காரராக இருக்கிறார். தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், தனக்கு மேல் உள்ள அதிகாரிகள் பேச்சையும் கேட்காமல் தன் மனதிற்கு சரி என பட்டதை செய்கிறார்.

    ஆனால், இந்திய விமானப்படை சார்பில் தனுஷின் கோபத்தை கட்டுப்படுத்தி, ஒழுக்கமாக பணியாற்ற வேண்டும் என சைக்காலஜி மருத்துவரிடம் கவுசிலிங் எடுக்க உத்தரவிடப்படுகிறது.

    தனுஷூக்கு கவுன்சிலிங் கொடுக்க வருகிறார் கதாநாயகி க்ரித்தி சனோன். இருவரும் சந்திக்கின்றனர். ஒரு பக்கம் க்ரித்தி தனது ஆய்வறிக்கை மூலம் வன்முறையான மனிதனை சராசரி மனிதனாக மாற்ற முடியும் என நம்புகிறார். இதற்காக, தனுஷிடம் பழகுகிறார்.

    தனுஷை மாற்றிவிட்டால் ஆய்வறிக்கை நிறைவு பெறும் என நினைக்கிறார். ஆனால், தனுஷ்க்கு க்ரித்தி மீது காதல் மலர, க்ரித்தியோ நீ வேண்டுமானால் காதலித்துக் கொள், நான் அப்படி பார்க்கவில்லை என்கிறார். ஆனால், காலங்கள் கடக்க இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.

    இருந்தாலும், வன்முறையோடு இருக்கும் இப்படி ஒரு மனிதனை கீர்த்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், தனது தந்தையை வந்து பார்க்கும்படி தனுஷிடம் கூறுகிறார்.

    அப்போது, தனுஷை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டு வரும்படி சவால் விடுகிறார். அதன்பிறகு, தனுஷ் சவாலில் ஜெயிக்கிறாரா? க்ரித்தியை கரம் பிடிக்கிறாரா? என்பது படத்தின் மீதிக்கதை..

    நடிகர்கள்

    சர்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனுஷ் மிரட்டியிருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் ராஞ்சனாவை நினைவுப்படுத்துகிறார். க்ரித்தி சனோன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். க்ரித்தியின் தந்தையாக நடித்துள்ள பிரகாஷ் ராஜ் கண் கலங்கவைத்துவிட்டார்.

    இயக்கம்

    ராஞ்சனா படத்தை போல் இப்படத்திலும் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தனது வழக்கமான காதல் கதையில் பட்டையை கிளப்பியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் நம்மை கலங்க வைத்திருக்கிறார். அதுவே படத்தின் வெற்றி.

    இசை

    படத்தின் இரண்டாவது ஹீரோ ஏ.ஆர்.ரகுமான். பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு உயிர்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவு படத்தின் பலம்.

    ரேட்டிங்: 3.5/5

    அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    கிஷோர் தனது மனைவி அபிராமி, தங்கை மகளுடன் வாழ்ந்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கிஷோர், சிறு பிரச்சனையில் வேலையை விட்டு சொந்தமாக கார் வாங்கி கால் டாக்ஸி ஓட்டி வருகிறார். ஃபுட் டெலிவரி செய்து வரும் டிடிஎஃப் வாசன், கிஷோரின் தங்கை மகளை காதலித்து வருகிறார்.

    ஒரு நாள் கிஷோருக்கு விபத்து ஏற்பட்டு காலில் அடிபடுகிறது. இதிலிருந்து கார் ஓட்ட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதே சமயம் போலீஸ் அதிகாரியாக இருக்கும் போஸ் வெங்கட், லாக்கப்பில் ஒருவரை அடித்து கொன்று விடுகிறார். இந்த பழியை கிஷோர் மீது சுமத்தி அவரை சிக்க வைக்கிறார்.

    இறுதியில் லாக்கப் டெத் கொலை வழக்கில் இருந்து கிஷோர் மீண்டாரா? கிஷோரை சிக்க வைக்க காரணம் என்ன? டிடிஎஃப் வாசன் கிஷோருக்கு உதவினாரா? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குடும்பத்தினருடன் சந்தோஷமாகவும், குடும்ப கஷ்டத்திற்காக வருந்துவது, அடிவாங்குவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். பொறுப்பான குடும்பத் தலைவியாகவும், கணவருக்காக வருந்தும் இடத்திலும் அபிராமி நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

    படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிய டிடிஎஃப் வாசனுக்கு நடிப்புத்திறனை வெளிப்படுத்த அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். போலீஸ் அதிகாரியான போஸ் வெங்கட், கிஷோரின் நண்பர் சிங்கம்புலி, முதலமைச்சர் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    இயக்கம்

    லாக்கப் டெத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கருணாநிதி. முதல் பாதி திரைக்கதை புரியாமலும் இரண்டாம் பாதி திரைக்கதை மெதுவாகவும் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். தேவையில்லாத காட்சிகள் படத்திற்கு பலவீனம். அழுத்தமான காட்சிகளை வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    இசை

    அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணிசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    பிச்சுமணியின் ஒளிப்பதிவை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.

    ரேட்டிங்- 2.5/5

    நடராஜன் சங்கரனின் பின்னணி இசை கதை கேற்றவாறு பயணித்துள்ளது.

    கிராமத்து விவசாயி பரோட்டா முருகேசனின் மகன் விஜயன் தியா சிறிய வயதில் தவறி கிணற்றுக்குள் விழுந்து விடுகிறார். உயிருக்கு போராடும் விஜயன் தியா உயிர் பிழைக்க வேண்டி ஒண்டிமுனி சாமியிடம் மகனை காப்பாற்றி கொடு உனக்கு நேர்த்திக்கடனாக ஆட்டுக்குட்டியை பலி கொடுக்கிறேன் என வேண்டுகிறார் பரோட்டா முருகேசன். மகன் விஜயன் தியாவும் உயிர் பிழைத்து விடுகிறார்.

    வேண்டிக்கொண்டபடி ஒண்டி முனிக்கு கிடாவை பலி கொடுக்க நினைக்கிறார். ஆனால் ஊர் செல்வந்தர்கள் இரண்டு பேர் இதற்கு தடையாக இருக்கிறார்கள். ஆண்டுகளும் கடந்து ஓடுகிறது. பரோட்டா முருகேசனின் மகன் விஜயன் தியாவும் வளர்ந்து பொறுப்பின்றி இருந்து வருகிறார். இந்நிலையில் ஒண்டிமுனிக்கு பலி கொடுக்க இருந்த கிடா காணாமல் போகிறது.

    இறுதியில் காணாமல் போன கிடாவை பரோட்டா முருகேசன் கண்டுபிடித்தாரா? ஒண்டிமுனிக்கு கிடாவை பலி கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    பரோட்டா முருகேசனின் இயல்பான நடிப்பு படத்திற்கு பலம். காடு மேடுகளில் செருப்பு இல்லாமல் நடந்து செல்வது, குடும்பத்துக்காக அவர் படும் கஷ்டங்கள், கிடா விருந்து வைப்பதற்கு அவர் அனுபவிக்கும் சிரமங்கள் என உடலை வருத்திக் கொண்டு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

    மகனாக வரும் விஜயன் தியா பொறுப்பற்ற கிராமத்து இளைஞனாக நடித்து, பின்னர் தந்தையின் நிலையை அறிந்து வாழ தொடங்குவது என காட்சிகளில் கவனிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாநாயகியாக வரும் வித்யா சக்திவேல் கிராமத்து காதலை கண்முன் நிறுத்தியுள்ளார். பரோட்டா முருகேசன் மகளாக வரும் சித்ரா நாகராஜனின் எதார்த்த நடிப்பு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

    இயக்கம்

    கிராமத்தில் நடந்த ஒரு உண்மை கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுகவனம். மனிதர்களின் வாழ்வியலை யதார்த்தத்தோடும் இயல்பாகவும் வெளிக் கொண்டு வந்துள்ள இயக்குனர் சுக வனத்துக்கு பெரிய பாராட்டுக்கள்.

    இசை

    நடராஜன் சங்கரனின் பின்னணி இசை கதை கேற்றவாறு பயணித்துள்ளது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ஜேடி விமல், கிராமத்தின் அழகை மாறாமல் படம் பிடித்து இருக்கிறார்.

    சான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

    நாயகி கீர்த்தி சுரேஷ் பாண்டிச்சேரியில் தாய் ராதிகா, அக்கா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் அக்கா குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட இருக்கும் நிலையில், பிரபல ரவுடி சூப்பர் சுப்பராயன் போதையில் வீட்டுக்கு வருகிறார். அப்போது எதிர்பாராத விதமாக ரவுடியை கீர்த்தி சுரேஷும், ராதிகாவும் அடிக்கிறார்கள். மயங்கி கீழே விழுந்த ரவுடி இறந்து விடுகிறார்.

    சூப்பர் சூப்பராயன் பிணத்தை எப்படி அப்புறப்படுத்துவது என்று குடும்பத்தினருடன் கீர்த்தி சுரேஷ் திட்டம் போடுகிறார். இதற்கிடையில் ரவுடியின் எதிர் கும்பல் பிணத்தை அடைய  முயற்சி செய்கிறார்கள்.  சூப்பர் சுப்பராயனின் மகன் சுனில் தந்தையைத் தேடி அலைகிறார்.

    இறுதியில் கீர்த்தி சுரேஷ் சூப்பர் சூப்பராயனின் பிணத்தை எப்படி அப்புறப்படுத்தினார்? பிணத்தை அடைய நினைத்த கும்பலின் நிலை என்ன ஆனது? தந்தை தேடி அலைந்த சுனில் என்ன செய்தார் என்பதே படத்தின் மீதி கதை?

    நடிகர்கள்

    படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் ஆரம்பித்திலேயே டெலிவரிக்கு பிளான் சொல்லும் காட்சி, போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பிக்கும் காட்சி, சுனிலுடன் நீண்ட வசனம் பேசும் காட்சி, ஆகிய இடங்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இவருக்கு அடுத்தபடியாக தாயாக நடித்திருக்கும் ராதிகா தனது வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

    வில்லனாக நடித்திருக்கும் சுனில் படம் முழுக்க தந்தையை இறுக்கமான முகத்துடன் தேடி வருகிறார். அதிக வசனமும் அதிக முக பாவனைகள் இல்லாதது வருத்தம். போலீஸ் அதிகாரியாக வரும் ஜான் விஜய், ஓவர் ஆக்டிங் போல் இருக்கிறது. ரெடிங் கிங்ஸ்லி, கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்கரவர்த்தி. சென்ராயன் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.

    இயக்கம்

    கர்மா இஸ் பூமராங் என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜே கே சந்துரு. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதை நகர்த்திருக்கிறார். ஆனால் டார்க் காமெடி பெரியதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

    இசை

    சான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    ரேட்டிங்: 2.5/5

    • இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது.

    கதாநாயகன் ரஜினி கிஷன் மற்றும் கதாநாயகி திவிகா இருவரும் காலக்கின்றனர். இவர்கள் ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கின்றனர். திவிகாவை எப்படியாவது திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடுகிறார் அவரது மாமாவான கூல் சுரேஷ். இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துக்கொள்வதை தெரிந்த கூல் சுரேஷ் தடுக்க முயற்சிக்கிறார். ஆனால், முனீஷ்காந்த் மற்றும் நண்பர்களின் உதவியுடன் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பிறகுதான் தெரிகிறது, ரஜினி கிஷன் திவிகாவின் கழுத்தில் கட்டியிருக்கும் தாலியில் பேய் மறைந்து இருப்பது தெரிய வருகிறது.

    பேய் இருக்கும் தாலி எப்படி இவர்கள் கையில் சிக்கியது..? திவிகாவை விட்டு பேய் விரட்டியடித்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை..

    நடிகர்கள்

    கதாநாயகனாக நடித்துள்ள ரஜினி கிஷன் இப்படத்தி்கு பொறுத்தம். திவிகா கதாப்பாத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார். கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், முனீஷ்காந்த், கல்கி உள்ளிட்டோர் படத்திற்கு பலம்.

    இயக்கம்

    இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ள காமெடி த்ரில்லர் கதை வர்க் அவுட் ஆகியுள்ளது. முதல் பாதி படம் கொஞ்சம் இழுவையாக இருந்தாலும், இரண்டாவது பாதியில் நகைச்சுவை கலந்து ஹாரர் படமாக விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார். பேயை வைத்து கமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்.

    இசை

    இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    டைசன் ராஜ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சுமார் ரகம்.

    சிங்கப்பூரில் வசிக்கிற நாயகன் ஆதித் சிலம்பரசன் சொந்த ஊருக்கு வந்ததும் தனது காதலியை தேடிப் போகிறார். அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகிவிட்ட விவரம் தெரிந்து அதிர்ச்சியடைகிறார். அந்த அதிர்ச்சியிலிருந்தும் கவலையிலிருந்தும் அவனை மீட்க அவனது நண்பன் தனது தங்கையை திருமணம் செய்து வைக்கிறார்.

    நாட்கள் நல்லபடியாக நகர முரளியின் மனைவி தாய்மையடைகிறாள். அந்த சந்தர்ப்பத்தில் தனது முன்னாள் காதலியைப் பற்றி சில விஷயங்கள் முரளியின் கவனத்துக்கு வருகிறது. அவளுக்கு திருமணமான விவரம் தெரிந்தபோது அதிர்ச்சியடைந்ததை விட பல மடங்கு அதிர்ச்சியடைகிறார்.

    இறுதியில் ஆதித் சிலம்பரசன் அதிர்ச்சி அடைய காராரணம் என்ன? அவரது வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஆதித் சிலம்பரசன், பெண்ணின் குணமறிந்து காதலில் விழும்போதும், நண்பனின் தங்கையை திருமணம் செய்யும்போதும், நடிப்புக்குப் புதியவர் என்பது தெரியாதபடி உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். காதலியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, நாயகனுடன் காதல், வேறொருவருடன் வாழ்க்கை, என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். வர்ஷிதா, நாயகனுக்கு நண்பனாக வருகிற தம்பி சிவன், அனுகிருஷ்ணா, சரத், ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    காதல் கதையே மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ.பி.ராஜீவ். மனிதர்களை சந்தர்ப்பச் சூழ்நிலை என்னவெல்லாம் செய்யும் என்பதை சொல்ல வந்திருக்கிறார். நாயகன் காதலியை தவிக்கவிட்டு வெளிநாடு சென்றதற்கான காரணம் தெளிவாக இல்லை. லாஜிக்கே இல்லாமல் நகரும் சில காட்சிகள் படத்திற்கு பலவீனம்.

    இசை

    டைசன் ராஜ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சுமார் ரகம்.

    ஒளிப்பதிவு

    ஹரிகாந்த்தின் ஒளிப்பதிவை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.

    படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமார்.

    யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இன்ப்ளூயன்சராக இருக்கிறார் நாயகன் மற்றும் சிலர். தாங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற யூடியூப் இன்ப்ளூயன்சர்களை தேர்ந்தெடுக்கும் மர்ம நபர் கடத்தி கொலை செய்கிறார். இதுபோன்று, யூடியூப் இன்ப்ளூயன்சரான நாயகனும் கடத்தப்படுகிறார்.

    மர்மமாக கொலை செய்யும் தொடர் கொலையாளி யார்? கொலையாளியின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை..

    நடிகர்கள்

    கதையின் நாயகனாக வரும் மஹேந்திரன் கதாப்பாத்திற்கு ஏற்ப இயல்பாக நடித்திருக்கிறார். நாயகி நீமா ரேய் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். கருப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் சிக்கல் ராஜேஷின் நடிப்பு படத்திற்கு பலம்.

    இயக்கம்

    எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சிக்கல் ராஜேஷ், தற்போதைய சோசியல் மீடியா மோகத்தில் மூழ்கியிருப்பவர்களின் அத்துமீறிய செயல்களை கண்டிப்பதோடு, அவர்களுக்கு அதிரடியான முறையில் அறிவுரை கூற முயற்சித்திருக்கிறார். படம் முழுவதும் தொய்வு இருக்கிறது. படம் எடுக்கும் விதத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    இசை

    படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமார். இசையமைப்பாளர் ஏ.எம்.அசார் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    காட்சிகளை நேர்த்தியாக விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

    ரேட்டிங்- 1/5

    ×