மெல்லிசை- திரைவிமர்சனம்

பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
மெல்லிசை- திரைவிமர்சனம்
Published on

தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறார் கிஷோர். மனைவி, மகன், மகள் என அன்பான குடும்பத்துடன் வாழந்த வருகிறார். இசை மீது தீராத ஆசைக்கொண்ட கிஷோருக்கு எப்படியாவது பாடகராக வேண்டும் என்பது கனவு. ஆனால், அந்த ஆசை நிறைவேறாமல் போகிறது.

ஆனால், அவரது மகள் தனது தந்தை எப்படியாவது பாடகராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக பல மேடைகளை ஏறுகிறார். அதன் மூலம், வாழ்க்கையில் முன்னேற்றத்தை கண்டு வரும் கிஷோருக்கு மீண்டும் சறுக்கல் ஏற்படுகிறது. இதனால், மனமுடைந்து போகிறார்.

இந்த சூழலில் இருந்து கிஷோர் எப்படி வெளியே வருகிறார்? அவரது வாழ்க்கை என்னவானது? என்பதே படத்தின் மீதி கதை..

நடிகர்கள்

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கிஷோர், ஏக்கங்களோடு வாழும் ஒரு குடும்ப தலைவரின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கிஷோரின் மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா ராபர்ட், இயல்பாக நடித்து ஸ்கோர் செய்து இருக்கிறார்.

மகன் மற்றும மகளாக நடித்திருக்கும் தனன்யா வர்ஷினி, ஜஸ்வந்த் மணிகண்டன் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

இயக்கம்

குடும்பத்தாரின் ஆதரவும், அன்பும் இல்லாமல் சரிந்து போகும், சராசரி மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் திரவ். சுவாரஸ்யமாக கதையை நகர்த்தியிருக்கிறார்.

இசை

பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் தேவராஜ் புகழேந்தி கதைக்களத்திற்கு அதிகமான வலிமையை சேர்த்திருக்கிறது.

ரேட்டிங்-3/5

X

Maalai Malar
www.maalaimalar.com