என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Movie review"

    வர்கீஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    நாயகன் சௌந்தரராஜா, நாயகி தேவனந்தாவை திருமணம் செய்து கொண்டு உறவினர் வீட்டில் தங்குவதற்காக மலைப்பகுதிக்கு செல்கிறார். அங்கு நாயகியுடன் சந்தோஷமாக வாழ்ந்து விட்டு, பணம் நகைகளை இந்த வீட்டில் மறைத்து வைத்துவிட்டு சில தினங்களில் வருவதாக சொல்லி நாயகி தனியே விட்டு செல்கிறார்.

    இரண்டு மூன்று வருடங்கள் ஆகியும் சௌந்தரராஜா வராமல் இருக்கிறார். இந்நிலையில் பாம்பு கடித்ததாக கூறி வீட்டுக்கு வரும் சந்தோஷ் தாமோதரன், நாயகி தேவனந்தாவை அடைய நினைக்கிறார். மேலும் சௌந்தரராஜா வீட்டில் மறைத்து வைத்திருக்கும் பணம் மற்றும் நகைகளை தேடுகிறார்.

    இறுதியில் சந்தோஷ் தாமோதரன் யார்? எதற்காக பணம் நகைகளை தேடுகிறார்? நாயகி தேவனந்தாவை அடைந்தாரா? சௌந்தரராஜா தேவானந்தாவை தேடி மீண்டும் வந்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சௌந்தரராஜா, காதல், கோபம், சண்டை என நடிப்பில் பளிச்சிடுகிறார். இவருக்கு படம் ஆரம்பம் மற்றும் இறுதி காட்சிகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் தேவனந்தா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். துணிச்சலான கதாபாத்திரத்தை தைரியமாக செய்ததற்கு பாராட்டுக்கள். குறிப்பாக கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

    சந்தோஷ் தாமோதரன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி தேவனந்தாவை அடைய நினைப்பது, அவருக்காக ஏங்குவது, சண்டை போடுவது என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். அப்புகுட்டி கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

    இயக்கம்

    மலைப்பகுதியில் வாழும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் அனில் குமார். ஒரு பெண்ணை அடைய நினைப்பவர்கள், அவர்களை அந்த பெண் எப்படி சமாளிக்கிறார் என்பதை திரை கதையாக கொடுத்திருக்கிறார். மெதுவாக செல்லும் திரை கதையும், சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாததும் படத்திற்கு பலவீனம்.

    இசை

    வர்கீஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.

    ஒளிப்பதிவு

    ராமச்சந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். மலைப்பகுதிகளை அழகாக படம் வீட்டில் ரசிக்க வைத்திருக்கிறார்.

    ரேட்டிங்- 2/5

    ரகு நந்தனின் இசையில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் கேட்கும் ரகம்.

    னந்த் முருகன் மதுரையையே ஆட்டிப்படைக்கும் பிரபல ரவுடியின் சிஷ்யனாக இருக்கிறார்.பின்னர், ஆனந்த் முருகன் குருவின் இடத்தை பிடித்து மதுரையில் மேலோங்கி நிற்கிறார்.

    ஆனந்த் முருகனை கதையின் நாயகன பாலஹாசன் தனது நண்பர்ளுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிடுகிறார். இவர், அப்பா, அம்மா, மனைவி, குழந்தை என குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் ஆனந்த் முருகனை கொலை செய்ய திட்டிமிடுகிறார்.

    பாலஹாசன், மதுரையின் மிகப்பெரிய சக்தியாக திகழும் ரவுடி ஆனந்த் முருகனை கொலை செய்ய முயற்சிப்பது ஏன் ? அவரது முயற்சி வெற்றி பெற்றதா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதிகதை.

    நடிகர்கள்

    அறிமுக நடிகர் ஆனந்த் முருகன் ரவுடி கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருக்கிறார்.மிக நேர்த்தியாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாலஹாசன், படத்திற்கு படம் கதாபாத்திரங்களில் வித்தியாசத்தை காட்டுவதோடு, தனது நடிப்பிலும் வேறுபாட்டை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்கிறார்.

    சீரியல் நாயகன் ஸ்ரீதேவா, யாசர், விஜே ஆண்ட்ரூஸ் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திருக்கிறார்கள்.

    நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, சோசியல் மீடியா மோகத்தினால் வாழ்க்கையை தொலைக்கும் பெண்களை எச்சரிக்கும் விதமாக நடித்திருக்கிறார்.

    இயக்கம்

    மதுரையை ஆட்டிப்டைக்கும் அசாதாரண மனிதன் ஒருவனை சாதாரணமான ஒருவன் வீழ்த்த முடிவு செய்வதும், அந்த முடிவை செயல்படுத்த போராடுவதையும் விறுவிறுப்பாக காட்டியிருகிறார். படத்தில் ஆங்கங்கே தொய்வும் இருக்கிறது. கதை ஓட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலம்.

    இசை

    ரகு நந்தனின் இசையில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் கேட்கும் ரகம். ஜோஸ் ஃபிராங்கிளினின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைக்கதைக்கு பலம்.

    ஒளிப்பதிவு

    கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் குகநேசன் சோனைமுத்து, பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்துவிடுகிறார்.

    ரேட்டிங்- 2/5

    யுவன் சங்கர் ராஜா இசையில் 2 பாடல்கள் மட்டுமே ரசிக்க முடிகிறது.

    மதுரை அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வரும் சரத்குமார் ஊரில் நல்லது கெட்டது விஷயங்களில் கலந்து கொண்டு பெரிய மனிதராக வாழ்ந்து வருகிறார். அதே ஊரில் தாய் தந்தையை இழந்த சிறுவன் சண்முக பாண்டியன், சரத்குமாரை ஒரு சிறிய சண்டையில் காப்பாற்றுகிறார். அதிலிருந்து சரத்குமார் உடனே பயணிக்கிறார் சண்முக பாண்டியன்.

    இருவரும் ஊரில் கஞ்சா கடத்தி விற்று சம்பாதித்து வருகிறார்கள். போலீஸ்காரர்களின் சூழ்ச்சியால் சண்முக பாண்டியன் கஞ்சாவுடன் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறார். இதனால் கோபமடையும் சரத்குமார் போலீஸ் நிலையத்தை எரித்து சண்முக பாண்டியனே வெளியில் கொண்டு வந்து விடுகிறார்.

    இறுதியில் போலீஸ் இவர்களை பிடித்தார்களா? சரத்குமார், சண்முக பாண்டியன் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தில் கெத்தான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சரத்குமார். ஊருக்காக போராடுவது, சண்முக பாண்டியன் மீது பாசம், அவருடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி மற்றும் வெகுளித்தனமான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்.

    நாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியன், காதல், ஆக்ஷன், நடனம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் தரணிகா போலீஸ் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

    இயக்கம்

    வைகை அணை கட்டும் போது பல கிராமங்கள் செழிப்பானாலும், சில கிராமங்கள் பாதிக்கப்பட்டது. இதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பொன்ராம். ஆனால், வைகை அணை பற்றி அதிகம் பேசாமல், கமர்ஷியல் படத்திற்கு தேவையான அனைத்தும் வைத்து எடுத்து இயக்கி இருக்கிறார்.

    விவசாயம் பற்றி சில வசனங்கள் மூலம் மேலோட்டமாக சொல்லி இருக்கிறார். முதல் பாதி திரைக்கதை சுமாராகவும், இரண்டாம் பாதி திரைக்கதை விறுவிறுப்பாகவும் நகர்த்தி இருக்கிறார். காமெடி காட்சிகள் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை.

    இசை

    யுவன் சங்கர் ராஜா இசையில் 2 பாடல்கள் மட்டுமே ரசிக்க முடிகிறது. பின்னணி இசையில் கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறார்.

    ஔிப்பதிவு

    பால சப்பிரமணியம் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் சிறப்பு.

    ரேட்டிங்- 2/5

    தேவாவின் இசை மற்றும் கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவும் ரசிக்க வைக்கிறது.

    பறை இசை கலைஞர்களான சிவகுமார், ஆர்யன் ஆகியோர் பாரம்பரிய பறை இசையை உலகறிய செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கிராமத்தில் வாழும் சிறுவர்களுக்கும் பறை இசையை கற்றுக் கொடுக்கின்றனர்.

    சிவகுமார் மற்றும் ஆர்யனின் நடவடிக்கைகளுக்கு கிராமத்தில் உள்ள ஆதிக்க சக்திகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க வேறு சமூக பெண்ணான காயத்ரி ரெமாவை சிவகுமார் காதலித்து திருமணம் செய்கிறார்.

    இந்த நிலையில் அருகில் உள்ள கிராமத்துக்கு இருவரும் பறை இசை நிகழ்ச்சிக்கு செல்லும்போது ஆர்யன் உயிரிழக்கிறார். சில தினங்களில் சிவகுமாரும் கொலை செய்யப்படுகிறார். இருவரையும் கொலை செய்தது யார்? கொலைக்கான பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் லியோ சிவகுமார் பறை இசை கலைஞர் கதாப்பாத்திரத்திற்கு கேரக்டருக்கு தகுந்தவாறு அவரது அழுத்தமான நடிப்பை கொடுத்துள்ளார். மனைவி காயத்ரி ரெமாவுடன் ரொமான்ஸ் மற்றும் உயிர் நண்பன் ஆர்யன் உயிரிழந்ததும் கதறும் காட்சிகளில் அவரது நடிப்பு சிறப்பு. குறிப்பிட்ட காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கும்படி ஆர்யன் நடிப்பு அமைந்துள்ளது. இசை நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் அவர் கொலை செய்யப்படும் காட்சிகள் பரிதாபத்தை வரவழைக்கிறது.

    கணவர் லியோ சிவகுமாருடன் ரொமான்ஸ் மட்டுமின்றி அவர் கொலை செய்யப்பட்டதும் இறுதி காட்சியில் ஆக்ரோசத்தில் காயத்ரி ரெமா விஸ்வரூபம் எடுப்பது மிரள வைக்கிறது. கஜராஜ், ரமா, சேரன் ராஜ், அசோக் ராஜா ஆகியோர் நடிப்பு கதைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.

    இயக்கம்

    பாரம்பரிய பறை இசைக்கு பெருமை சேர்க்கும் வகையில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ்.விஜய் சுகுமார். ஆனால் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாக சொல்லாமல் விட்டிருக்கிறார். காட்சிகளில் தடுமாற்றத்தை கொஞ்சம் கவனித்திருந்தால் படத்தை இன்னும் ரசித்திருக்கலாம்.

    இசை மற்றும் ஒளிப்பதிவு

    தேவாவின் இசை மற்றும் கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவும் ரசிக்க வைக்கிறது.

    ரேட்டிங்-2/5

    கடந்த 12ம் தேதி அன்று படையப்பா ரீ ரிலீஸ் ஆனது.

    கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ம் ஆண்டில் வெளியான படம் படையப்பா.நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன், மறைந்த சவுந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    தமிழ் சினிமா வரலாற்றில் பிளாக் பஸ்டர் படங்களில் படையப்பாவும் ஒன்று. ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.

    நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் மற்றும் 50 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக கடந்த 12ம் தேதி அன்று படையப்பா ரீ ரிலீஸ் ஆனது. ரஜினி நிறைய சம்பாதித்து தன் சொந்த ஊருக்கு விடுமுறைக்கு வருகிறார், அங்கோ ரஜினியின் குடும்பம் தான் பெரிய தலைக்கட்டு.

    அவர்கள் தான் ஊரில் இருக்கும் அனைவரின் திருமணத்தையும் ஆறுபடையப்பன் முன்பு நடத்தி வைக்கின்றனர். அதிலும் ஆண்-பெண் இருவர் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடக்கும், அப்படியில்லை என்றால் அந்த திருமணம் நடக்காது என்ற எழுதப்படாத சட்டம் உள்ளது.

    இந்த நேரத்தில் ரஜினி அந்த ஊர் பெண் சௌந்தர்யாவை காதலிக்க, ரஜினியின் முறை பெண் ரம்யா கிருஷ்ணன் ரஜினியை காதலிக்க ரஜினியோ சௌந்தர்யாவை திருமணம் செய்கிறார். பிறகு என்ன நீலாம்பரி எப்படியெல்லாம் படையப்பனை பழி வாங்க வேண்டும் என 18 வருடம் கழித்தும் அதே பகையில் வளர பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

    1996ம் ஆண்டில் படையப்பா திரைப்படம் உலகம் முழுவதும் 60 கோடி வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. 25 ஆண்டுகளுக்கு பிறகு, 2கே தலைமுறையினர் மத்தியில் படம் ரீ ரிலீஸ் ஆனாலும், மவுசு குறையான படமாக படையப்பா இருக்கிறது.

    --கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ம் ஆண்டில் வெளியான படம் படையப்பா.நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன், மறைந்த சவுந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் சினிமா வரலாற்றில் பிளாக் பஸ்டர் படங்களில் படையப்பாவும் ஒன்று. ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.

    நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் மற்றும் 50 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக கடந்த 12ம் தேதி அன்று படையப்பா ரீ ரிலீஸ் ஆனது.

    படத்தின் கதை

    ரஜினி நிறைய சம்பாதித்து தன் சொந்த ஊருக்கு விடுமுறைக்கு வருகிறார், அங்கோ ரஜினியின் குடும்பம் தான் பெரிய தலைக்கட்டு.

    அவர்கள் தான் ஊரில் இருக்கும் அனைவரின் திருமணத்தையும் ஆறுபடையப்பன் முன்பு நடத்தி வைக்கின்றனர். அதிலும் ஆண்-பெண் இருவர் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடக்கும், அப்படியில்லை என்றால் அந்த திருமணம் நடக்காது என்ற எழுதப்படாத சட்டம் உள்ளது.

    இந்த நேரத்தில் ரஜினி அந்த ஊர் பெண் சௌந்தர்யாவை காதலிக்க, ரஜினியின் முறை பெண் ரம்யா கிருஷ்ணன் ரஜினியை காதலிக்க ரஜினியோ சௌந்தர்யாவை திருமணம் செய்கிறார். பிறகு என்ன நீலாம்பரி எப்படியெல்லாம் படையப்பனை பழி வாங்க வேண்டும் என 18 வருடம் கழித்தும் அதே பகையில் வளர பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

    படையபப்பா வசூல்

    1996ம் ஆண்டில் படையப்பா திரைப்படம் உலகம் முழுவதும் 60 கோடி வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. 25 ஆண்டுகளுக்கு பிறகு, 2கே தலைமுறையினர் மத்தியில் படம் ரீ ரிலீஸ் ஆனாலும், மவுசு குறையான படமாக படையப்பா இருக்கிறது.

    தமனின் இசை படத்திற்கு மற்றொரு பலம்.

    அகண்டா முதல் பாகத்தில் தனது தம்பி மகள் ஹர்ஷாலிக்கு ஏதாவது கஷ்டம் ஏற்பட்டால் உடனடியாக அங்கு நான் வருவேன் என அகண்டா சத்தியம் செய்திருந்தார். இதில், இருந்து 2ம் பாகம் தொடர்கிறது. ஆண்டுகள் கடந்து செல்ல பாலைய்யாவின் மகள் நன்றாக வளர்ந்து விஞ்ஞானியாக பணிபுரிகிறார். இது ஒருபக்கம் இருக்க, இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்கிற எண்ணத்துடன் எதிர்நாட்டில் உள்ள ஜெனரல், இந்தியர்களை கொன்று குவிக்கிறார்.

    கடவுள் நம்பிக்கையுள்ள இந்திய மக்கள், இனி கடவுளே ஒருவர் இல்லை என்று கடவுளை வெறுக்கும் வகையில் முடிவு கட்ட திட்டமிடுகிறார் எதிர்நாட்டு ஜெனரல். இதற்காக, நாட்டில் உள்ள அரசியல்வாதியுடன் கைகோர்த்து மகா கும்பமேளாவிற்கு வரும் மக்கள் மேல் வைரஸை பரப்பி விடுகிறார்கள்.

    இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. நாடு முழுவதும் பிரச்சனை வெடிக்கிறது. அப்போது, கடவுளே இல்லை என வெறுக்கும் மக்கள் நம்பிக்கையை இழக்கின்றனர். இந்தநிலையில், விஞ்ஞானியான பாலைய்யாவின் மகள் ஹர்ஷாலி, பரவிக் கொண்டிருக்கும் வைரசை அழிக்கும் மருந்தை கண்டுபிடிக்கிறார். இது எதிரி நாட்டிற்கு தெரிய வர, விஞ்ஞானிகள் குழுவையும் அழிக்கிறது.

    அங்கிருந்து தப்பிக்கும் ஹர்ஷாலியை கொலை செய்ய அந்த கூட்டம் துரத்துகிறது.எதிரி கூட்டத்திடம் இருந்து ஹர்ஷாலியை காப்பாற்ற அகண்டா வந்தாரா? வைரசை அழிக்க கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை மக்களிடம் கொண்டு சேர்த்தாரா? மக்கள் மத்தியில் கடவுள் நம்பிக்கை வந்ததா? என்பது படத்தின் மீதி கதை..

    நடிகர்கள்

    கதாநாயகனாக நடித்துள்ள பாலகிருஷ்ணா அவருக்கே உரிதான நடிப்பில் மொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து செல்கிறார். சண்டை, நடனம், வசனம் என அனைத்திலும் மாஸ். பாலய்யா ரசிகர்களுக்கு அகண்டா 2 ஸ்பெஷல் விருந்து என்றே சொல்லலாம்.

    அகண்டா கதாபாத்திரத்தை தவிர வேறு யாருக்கும் வலுவான ரோல் இல்லை.படம் முழுவதும் பாலய்யாவின் மேஜிக்தான் நிறைந்திருக்கிறது. படம் பார்க்க வருபவர்கள் லாஜிக் எதிர்க்காமல் வந்தால் நல்லது.

    இயக்கம்

    பாலகிருஷ்ணா என்ற கூர்மையான ஆயுதத்தை 4-வது முறையாக பட்டை தீட்டி இருக்கும் இயக்குனர் போயபட்டி ஸ்ரீனு, இந்த முறையில் மாஸ் கதையை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

    இசை

    தமனின் இசை படத்திற்கு மற்றொரு பலம்.

    ஒளிப்பதிவு

    அகண்டா 2 படத்தை அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

    சௌந்தர்யன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    அரசு பள்ளி ஆசிரியரான நாயகன் பிரபாகரன், மாணவர்களுக்கு படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், சமூகப் பணி மற்றும் அரசியல் பற்றியும் கற்றுக் கொடுத்து, அநீதிகளுக்கு எதிராக போராடும் எண்ணத்தையும் மனதில் விதைக்கிறார். தொடர்ந்து ஆசிரியர் பிரபாகரனின் அதிரடி நடவடிக்கையால், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் லெனின் வடமலை பாதிக்கப்படுகிறார்.

    இதனால், ஆசிரியர் பிரபாகரனை பழிவாங்குவதற்கு சரியான நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் லெனின் வடமலை. இந்த நிலையில், பள்ளியில் புதிதாக வேலைக்கு சேரும் ஆசிரியை மேஹாலி மீனாட்சியும், பிரபாகரனும் காதலிக்கிறார்கள். மேஹாலி மீனாட்சி ஏற்கனவே திருமணமானவராக இருக்கிறார்.

    இறுதியில் திருமணமான மேஹாலி மீனாட்சி பிரபாகரனை காதலிப்பது ஏன்? வில்லன் லெனின் வடமலை, பிரபாகரனை பழி வாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    கதாநாயகனாக நடித்திருக்கும் பிரபாகரன், கிராமத்து ஆசிரியர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் மேஹாலி மீனாட்சி, குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்து இருக்கிறார்.

    வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் லெனின் வடமலை, தோற்றம் மற்றும் நடிப்பு இரண்டிலும் மறைந்த டேனியல் பாலாஜியை நினைவுப்படுத்துகிறார். வில்லன் லெனின் வடமலையின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் துகின் சே குவேரா, வியக்க வைக்கும் விதத்தில் வசன உச்சரிப்பு, உடல் மொழி என்று நடிப்பில் மிரட்டுகிறார்.

    இயக்கம்

    சாதி பாகுபாடு மற்றும் மூடநம்பிக்கையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் லெனின் வடமலை. தற்போதைய காலக்கட்டத்தில், அறிவியலும், தொழில்நுட்பமும் மிகப்பெரிய வளர்ச்சியடைந்தாலும், இன்னமும் சாதி பாகுபாடு மற்றும் மூடநம்பிக்கையில் மூழ்கியிருக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். விறுவிறுப்பான காட்சிகள் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    இசை

    சௌந்தர்யன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ஜான்ஸ் வி.ஜெரின், தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.

    ரேட்டிங்- 2/5

    பிரவீன் குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

    குரங்கணி மலைப்பகுதியில் யாழி கிராம மக்களுக்கும் அடிவார பகுதி மக்களுக்கும் 3000 ஆண்டுகால பகை இருந்து வருகிறது. குறிப்பாக யாழி கிராமத்தில் இருக்கும் சாமி சிலையை அடிவார பகுதி மக்கள் அபகரிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார்கள். யாழி கிராமத்தைச் சேர்ந்த நாயகன் விமல் கிராம மக்களுக்கும் சாமி சிலைக்கும் பாதுகாவலனாக இருந்து வருகிறார்.

    யாழி கிராமத்தில் சித்ரா பௌர்ணமி அன்று கோவில் திருவிழா நடத்த முயற்சி செய்கிறார்கள். அன்றைய தினத்தில் அடிவார பகுதி மக்கள், சாமி சிலையை திருட நினைக்கிறார்கள். அதே சமயம் மற்றொரு கும்பல் சாமி சிலையை வனப்பகுதி காவல் அதிகாரி ஜான் விஜய் மூலம் திருட திட்டம் போடுகிறார்கள்.

    இறுதியில் யாழி கிராமத்தில் திருவிழா நடைபெற்றதா? சாமி சிலை என்ன ஆனது? சாமி சிலையை விமல் பாதுகாத்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விமல் மிகவும் சாதாரணமாக நடித்திருக்கிறார். பல இடங்களில் நடிக்காமல் பொம்மை போல் நிற்கிறார். செங்குட்டுவன் என்ற பெயரில் இருக்கும் கம்பீரம் நடிப்பில் இல்லை. நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பொம்மி என்ற கதாபாத்திரத்தில் சாதாரண பெண்ணாகவும் ஆக்ரோஷமான பெண்ணாகவும் நடித்து கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இவரது நடிப்பு மட்டுமே படத்திற்கு பெரிய பலம்.

    வனத்துறை அதிகாரியாக வரும் ஜான்விஜய் படம் முழுவதும் கத்திக் கொண்டே இருக்கிறார். யோகி பாபுவின் காமெடி பெரியதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. வில்லனாக நடித்திருக்கும் கபீர் சிங் கடைசி பத்து நிமிடமே மட்டுமே வந்து கவனத்தை பெற்று இருக்கிறார். அடிவார பகுதி மக்கள் தலைவியாக வரும் மகிமா குப்தா அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

    இயக்கம்

    கோவில் சிலையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன். தெளிவான திரைக்கதை இல்லாமல் படத்தை நகர்த்திருக்கிறார் இயக்குனர். காட்சிகளின் தொடர்ச்சி இல்லாதது வருத்தம். கதாபாத்திரங்களிடையே வேலை வாங்காமல் விட்டிருக்கிறார். நிறைய லாஜிக் மீறல்கள், சம்மந்தம் இல்லாத காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

    இசை

    பிரவீன் குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை ஒரு சில இடங்களில் மட்டுமே ரசிக்க முடிகிறது.

    ஒளிப்பதிவு

    மனாஸ் பாபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். இவரது கேமரா மலைப்பகுதிகளை அழகாக படம் பிடித்து இருக்கிறது.

    ரேட்டிங்- 1.5/5

    சமந்த் நாக் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

    திருப்பரங்குன்றம் பகுதியில் வாழ்ந்து வரும் நாயகன் நிஷாந்த், தனது மாமா லொள்ளு சபா மாறன் நண்பர்கள் பால சரவணன், கும்கி அஸ்வின் ஆகியோருடன் திருச்சிக்கு வேலைக்கு செல்கிறார். அங்கு நாயகி காயத்ரியை பார்த்தவுடன் காதலில் விழுகிறார். பின்னர் அவருடன் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி சந்திக்கிறார்.

    ஒரு கட்டத்தில் நிஷாந்த் காதலை சொல்லும் போது, காயத்ரி மறுக்கிறார். காதல் தோல்வியை தாங்க முடியாத நிஷாந்த் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். அப்போது ஆமானுஷ்ய சக்தி கொண்ட மொட்டை ராஜேந்திரன், நிஷாந்த் தற்கொலையை தடுக்கிறார்.

    இறுதியில் நிஷாந்த், காயத்ரியுடன் இணைந்தாரா? மொட்டை ராஜேந்திரன் யார்? நிஷாந்த் தற்கொலையை மொட்டை ராஜேந்திரன் தடுக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் நிஷாந்த் ரூசோ காதல், ஆக்ஷன், காமெடி என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் காயத்ரி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    மொட்டை ராஜேத்திரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன், கும்கி அஸ்வின் ஆகியோர் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள். அர்ஷத் வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்து இருக்கிறார்.

    இயக்கம்

    காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் பாண்டியன். இதில் பேண்டஸி, காமெடி கலந்த திரைக்கதை அமைத்திருக்கிறார். முதல் பாதி காதல் இரண்டாம் பாதி பேண்டஸி என திரைக்கதையை நகர்த்திருக்கிறார். காமெடி காட்சிகள் பெரிதாக எடுபடவில்லை. முதல் பாதி திரைக்கதை வழக்கமான சினிமா தனம் போல் அமைந்திருப்பது படத்திற்கு பலவீனம்.

    இசை

    சமந்த் நாக் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    ஒளிப்பதிவு

    ஜோன்ஸ் வி ஆனந்த் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

    ரேட்டிங்- 2/5

    தேவாவின் இசையில் பாடல்கள் படத்தின் முதுகெலும்பாக அமைந்திருக்கிறது.

    சுனாமியல் குடும்பத்தை இழந்த நாயகன் கௌதம் கண்ணகி நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தீபா உமாபதியை ஐந்து பேர் சேர்ந்து கடத்தி கற்பழித்து கொன்றதாக கௌதமுக்கு தகவல் கிடைக்கிறது. இதை அறிந்த கௌதம் அவர்களை பழிவாங்க திட்டம் போடுகிறார்.

    இறுதியில் தீபாவிற்கு என்ன ஆனது? அந்த ஐந்து பேர் யார்? கௌதம் அவர்களை பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் கதையின் நாயகனாக நடித்து இருக்கும் கௌதம், கண்ணகி நகர் மொழியை உள்வாங்கி, முக பாவனைகளில் வெளிப்படுத்துகிறார். நாயகியான தீபா உமாபதி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    எல்லா உறவுகளையும் இழந்த பின்பு ஒரு மனிதனின் கடைசி முடிவு என்ன என்பதை மக்களுக்கு காட்டியிருகிறார் இயக்குனர் குணா. சென்னை தமிழ், கண்ணகி நகர், காட்சிப்படுத்திய விதம் அருமை. வலுவான காட்சிகள் இல்லாதது படத்திற்கு பலவீனம்.

    இசை

    தேவாவின் இசையில் பாடல்கள் படத்தின் முதுகெலும்பாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையை தேவையான அளவிற்கு கொடுத்து இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    பா.மு.முஹம்மது ஃபர்ஹான்  ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

    ரேட்டிங்- 2/5

    படத்தின் பின்னணி இசை பாராட்டக்கூடியது.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகிறார் கதையின் நாயகன் நிவாஸ் ஆதித்தன். ஒரு கட்டத்தில் ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்குகிறார். இதனால், எதிர்பாராத விபரீதத்தை சந்திக்கிறார்.

    இந்த கடனில் சூழல் என்ன ?, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை..

    நடிகர்கள்

    கதையின் நாயகன் நிவாஸ் ஆதித்தன், உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார். அளவாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் பலம் சேர்த்திருக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநய், நாயகனுக்கு இணையாக கவனம் ஈர்க்கிறார்.

    ஆத்விக், எஸ்தர் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.

    இயக்கம்

    ஒரு சம்பவத்தின் மூலம் பல உண்மைகளை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அபிஷேக் லெஸ்லி. உண்மை சம்பவத்தின் பின்னணியில், அதிர்ச்சிகரமான கற்பனை மூலம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஆங்காங்கே படத்தின் ஓட்டத்தில் வரும் தொய்வு படத்திற்கு பலவீனம். கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    இசை

    படத்தின் பின்னணி இசை பாராட்டக்கூடியது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் சபரி நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். 

    ரேட்டிங்- 1.5/5

    • அம்பிகா அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார்
    • நாடக வடிவில் நகர்கிறது படம்.

    கட்டுமான நிறுவனம் ஒன்றில் முதன்மை பொறியாளராக பணியாற்றுகிறார் படத்தின் நாயகி சாக்ஷி அகர்வால் (சாரா). சாராவுக்கும், அங்கு பணியாற்றும் மற்றொரு பொறியாளர் விஜய் விஷ்வாவுக்கும் காதல் மலர்கிறது. காதலுக்கு சாராவின் பெற்றோரும் ஒப்புதல் அளித்தனர். இச்சூழலில் கட்டிடங்களுக்கு கலப்பட மணல் அனுப்பி ஏமாற்றும் வெட்டுக்கிளிக்கும் (மிரட்டல் செல்வா) சாராவுக்கும் பகை ஏற்படுகிறது.

    இவர்களுக்கு மத்தியில் கட்டுமான நிறுவனத்தில் வாட்ச்மேனாக இருப்பவர் ரோபோ சங்கர். காசுக்காக எதையும் செய்பவர். அவருடைய நண்பன் யோகிபாபு. இவர்களின் அனைவரின் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி, மதிக்கப்படாமல் அந்த இடத்தை சுற்றி கொண்டிருக்கும் ஒரு நபர் செல்லக்குட்டி.  இவர்கள் அனைவரும் வெட்டுக்கிளிக்கு உதவியாக சாரவைக் கடத்த முயல்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு முன்னால் செல்லக்குட்டி சாராவையும், அவளது காதலரையும் கடத்துகிறார். செல்லக்குட்டி ஏன் சாராவை கடத்தவேண்டும்? கல்யாணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை. 

    நடிப்பு

    தனக்கான ரோலில் கட்சிதமாக நடித்துள்ளார் சாக்ஷி அகர்வால். விஜய் விஷ்வா, சில காட்சிகளோடு காணாமல் போகிறார். படத்தின் இயக்குநர் செல்லக்குட்டி, வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரையே மிஞ்சுகிறார் என பார்வையாளர்கள் விமர்சனம் செய்வதற்கு ஏற்றார்போல ஓவர்டோஸ் நடிப்பு. அம்பிகா அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். யோகி பாபு, ரோபோ சங்கர், பழைய ஜோக் தங்கதுரை ஆகியோரின் காமெடி பரவாயில்லை. ஆனால் ஆபாச வசனங்களை தவிர்த்திருக்கலாம். இறுதியாக நாடக வடிவில் நகர்கிறது படம். 

    இயக்கம்

    இயக்குநர் செல்லகுட்டி, தான் சொல்ல நினைத்த கதையில் எப்படியோ பாதியை சொல்லிவிட்டார். பவர் ஸ்டார், நடிப்பு அரக்கன் என அனைத்து கோமாளிகளையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் செல்லகுட்டி, இயக்குநராக வெற்றி பெறவில்லை என்றாலும், ஒரு நடிகராக நிச்சயம் டிரெண்டாக வாய்ப்புள்ளது. 

    இசை

    இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை. 

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மன் குமார் கதைக்கு ஏற்ப காட்சிகளை படமாக்கியுள்ளார். படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம் இயக்குநரின் கதையை சிதைக்காத வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

    ×