என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Movie Review"

    வன்முறை சூழ்ந்த ரவுடிகளின் வாழ்க்கையின் மறுபக்கத்தை சொல்லும் கதை "ப்ரைடே".

    மைம் கோபிக்கு அடியாளாக இருப்பவர் நாயகன் அனிஷ் மாசிலாமணி. அனிஷ் மற்றும் கே.பி.ஒய் தீனா சேர்ந்து ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அப்போது, தீனா எதிர்பாராதவிதமாக எதிரி கும்பலிடம் மாட்டும்போது, அனிஷ் மாசிலாமணி அவரை காப்பாற்றி இருவரும் ஒரு இடத்தில் தஞ்சம் அடைகின்றனர்.

    தன்னை கொலை செய்ய முயன்றவர்களை அடியாட்களுடன் தேடி வருகிறார்கள். ஒரு பக்கம் இப்படி இருக்க, மறுபக்கம் தீனாவும் அனிஷ் மாசிலாணியுடன் இருந்துக் கொண்டே அவரை கொலை செய்ய திட்டமிடுபவருக்கு உதவுகிறார்.

    இறுதியில், அனிஷ் மாசிலாமணி யாரை, எதற்காக கொலை செய்ய முயன்றார்? தீனா ஏன் அதற்கு உதவுகிறார்? இதில் இருந்து அனிஷ் மாசிலாமணி தப்பித்தாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிக் கடை..

    நடிகர்கள்

    கே.பி.ஒய் தீனா எளிமையான கதாபாத்திரத்தில் நடித்து 2ம் பாதியில் கதையின் திருப்புமுனையாக இருக்கிறார். நடிகர் அனிஷ் மாசிலாமணி அளவான நடிப்பு மூலம் ரவுடி கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார். மைம் கோபி தனது அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    இயக்கம்

    படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஹரி வெங்கடேஷ், வன்முறை சூழ்ந்த ரவுடிகளின் மறுபக்கத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார் ஹரி வெங்கடேஷ். ஒரு சாதாரண கதையை சுவாரஸ்யமாக எடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அது இயக்குனருக்கு கைக்கொடுக்கவில்லை.

    இசை

    படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு பலம்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ஜானி கதைக்களத்தின் பயங்கரத்தை பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு.

    ரேட்டிங்- 1.5/5

    ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.

    சென்னை காசிமேடு பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார் தான்யா ரவிச்சந்திரன். இவர் போலீஸ், முன்னாள் எம்.எல்.ஏ, மருத்துவ செயலாளர் என்று யாருடைய மிரட்டலுக்கும் அடிபணியாமல் நேர்மையாக இருக்கிறார். இதனால், அப்பகுதியில் உள்ள ரவுடி டேனியல் பாலாஜி அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.

    இந்த விவகாரத்தில் தலையிடும் சென்னை காவல்துறை ஆணையர், டேனியல் பாலாஜியை அழைத்து மிரட்டி அசிங்கப்படுத்தி விடுகிறார். இதனால் கடும் கோபம் அடையும் டேனியல் பாலாஜி, காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி தன்யா ரவிச்சந்திரனை பழிவாங்க துடிக்கிறார்.

    இறுதியில் டேனியல் பாலாஜி தான்யா ரவிச்சந்திரனை பழி வாங்கினாரா? இல்லையா? என்பதை மீதி கதை.

    நடிகர்கள்

    கதையின் நாயகியாக நடித்திருக்கும் தான்யா ரவிச்சந்திரன், எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் துணிச்சலான பெண் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். ரவுடி கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இயக்குநர் கே.பாக்யராஜ் அழுத்தமான கதாபாத்திரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், இரண்டாம் பாதிக்கு மேல் அவரது கதாபாத்திரம் பலம் இழந்து விடுகிறது.

    முன்னாள் எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் அருள்தாஸ், காவல்துறை ஆணையராக நடித்திருக்கும் தமிழ், சமூக ஆர்வலராக நடித்திருக்கும் ஜாக் அருணாச்சலம், நாயகியின் தங்கையாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி, சகோதரராக நடித்திருக்கும் ரங்கா, தோழியாக நடித்திருக்கும் நயனா ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    இயக்கம்

    அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் மற்றும் ரவுடி இடையிலான மோதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெ.பி. நீயா நானா என்று போட்டி போட்டு நடிக்க வைத்திருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி லாஜிக் மிரல்களை தவிர்த்து இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.

    இசை

    பாடல்கள் இல்லை என்றாலும் தனது பின்னணி இசை மூலம் காட்சிகளில் இருக்கும் பதற்றத்தை பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

    ரேட்டிங்- 2.5/5

    படத்தின் இரண்டாவது ஹீரோ ஏ.ஆர்.ரகுமான்.

    இந்திய விமானப்படை வீரராக இருக்கும் தனுஷ் கோபக்காரராக இருக்கிறார். தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், தனக்கு மேல் உள்ள அதிகாரிகள் பேச்சையும் கேட்காமல் தன் மனதிற்கு சரி என பட்டதை செய்கிறார்.

    ஆனால், இந்திய விமானப்படை சார்பில் தனுஷின் கோபத்தை கட்டுப்படுத்தி, ஒழுக்கமாக பணியாற்ற வேண்டும் என சைக்காலஜி மருத்துவரிடம் கவுசிலிங் எடுக்க உத்தரவிடப்படுகிறது.

    தனுஷூக்கு கவுன்சிலிங் கொடுக்க வருகிறார் கதாநாயகி க்ரித்தி சனோன். இருவரும் சந்திக்கின்றனர். ஒரு பக்கம் க்ரித்தி தனது ஆய்வறிக்கை மூலம் வன்முறையான மனிதனை சராசரி மனிதனாக மாற்ற முடியும் என நம்புகிறார். இதற்காக, தனுஷிடம் பழகுகிறார்.

    தனுஷை மாற்றிவிட்டால் ஆய்வறிக்கை நிறைவு பெறும் என நினைக்கிறார். ஆனால், தனுஷ்க்கு க்ரித்தி மீது காதல் மலர, க்ரித்தியோ நீ வேண்டுமானால் காதலித்துக் கொள், நான் அப்படி பார்க்கவில்லை என்கிறார். ஆனால், காலங்கள் கடக்க இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.

    இருந்தாலும், வன்முறையோடு இருக்கும் இப்படி ஒரு மனிதனை கீர்த்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், தனது தந்தையை வந்து பார்க்கும்படி தனுஷிடம் கூறுகிறார்.

    அப்போது, தனுஷை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டு வரும்படி சவால் விடுகிறார். அதன்பிறகு, தனுஷ் சவாலில் ஜெயிக்கிறாரா? க்ரித்தியை கரம் பிடிக்கிறாரா? என்பது படத்தின் மீதிக்கதை..

    நடிகர்கள்

    சர்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனுஷ் மிரட்டியிருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் ராஞ்சனாவை நினைவுப்படுத்துகிறார். க்ரித்தி சனோன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். க்ரித்தியின் தந்தையாக நடித்துள்ள பிரகாஷ் ராஜ் கண் கலங்கவைத்துவிட்டார்.

    இயக்கம்

    ராஞ்சனா படத்தை போல் இப்படத்திலும் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தனது வழக்கமான காதல் கதையில் பட்டையை கிளப்பியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் நம்மை கலங்க வைத்திருக்கிறார். அதுவே படத்தின் வெற்றி.

    இசை

    படத்தின் இரண்டாவது ஹீரோ ஏ.ஆர்.ரகுமான். பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு உயிர்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவு படத்தின் பலம்.

    ரேட்டிங்: 3.5/5

    அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    கிஷோர் தனது மனைவி அபிராமி, தங்கை மகளுடன் வாழ்ந்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கிஷோர், சிறு பிரச்சனையில் வேலையை விட்டு சொந்தமாக கார் வாங்கி கால் டாக்ஸி ஓட்டி வருகிறார். ஃபுட் டெலிவரி செய்து வரும் டிடிஎஃப் வாசன், கிஷோரின் தங்கை மகளை காதலித்து வருகிறார்.

    ஒரு நாள் கிஷோருக்கு விபத்து ஏற்பட்டு காலில் அடிபடுகிறது. இதிலிருந்து கார் ஓட்ட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதே சமயம் போலீஸ் அதிகாரியாக இருக்கும் போஸ் வெங்கட், லாக்கப்பில் ஒருவரை அடித்து கொன்று விடுகிறார். இந்த பழியை கிஷோர் மீது சுமத்தி அவரை சிக்க வைக்கிறார்.

    இறுதியில் லாக்கப் டெத் கொலை வழக்கில் இருந்து கிஷோர் மீண்டாரா? கிஷோரை சிக்க வைக்க காரணம் என்ன? டிடிஎஃப் வாசன் கிஷோருக்கு உதவினாரா? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குடும்பத்தினருடன் சந்தோஷமாகவும், குடும்ப கஷ்டத்திற்காக வருந்துவது, அடிவாங்குவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். பொறுப்பான குடும்பத் தலைவியாகவும், கணவருக்காக வருந்தும் இடத்திலும் அபிராமி நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

    படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிய டிடிஎஃப் வாசனுக்கு நடிப்புத்திறனை வெளிப்படுத்த அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். போலீஸ் அதிகாரியான போஸ் வெங்கட், கிஷோரின் நண்பர் சிங்கம்புலி, முதலமைச்சர் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    இயக்கம்

    லாக்கப் டெத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கருணாநிதி. முதல் பாதி திரைக்கதை புரியாமலும் இரண்டாம் பாதி திரைக்கதை மெதுவாகவும் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். தேவையில்லாத காட்சிகள் படத்திற்கு பலவீனம். அழுத்தமான காட்சிகளை வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    இசை

    அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணிசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    பிச்சுமணியின் ஒளிப்பதிவை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.

    ரேட்டிங்- 2.5/5

    நடராஜன் சங்கரனின் பின்னணி இசை கதை கேற்றவாறு பயணித்துள்ளது.

    கிராமத்து விவசாயி பரோட்டா முருகேசனின் மகன் விஜயன் தியா சிறிய வயதில் தவறி கிணற்றுக்குள் விழுந்து விடுகிறார். உயிருக்கு போராடும் விஜயன் தியா உயிர் பிழைக்க வேண்டி ஒண்டிமுனி சாமியிடம் மகனை காப்பாற்றி கொடு உனக்கு நேர்த்திக்கடனாக ஆட்டுக்குட்டியை பலி கொடுக்கிறேன் என வேண்டுகிறார் பரோட்டா முருகேசன். மகன் விஜயன் தியாவும் உயிர் பிழைத்து விடுகிறார்.

    வேண்டிக்கொண்டபடி ஒண்டி முனிக்கு கிடாவை பலி கொடுக்க நினைக்கிறார். ஆனால் ஊர் செல்வந்தர்கள் இரண்டு பேர் இதற்கு தடையாக இருக்கிறார்கள். ஆண்டுகளும் கடந்து ஓடுகிறது. பரோட்டா முருகேசனின் மகன் விஜயன் தியாவும் வளர்ந்து பொறுப்பின்றி இருந்து வருகிறார். இந்நிலையில் ஒண்டிமுனிக்கு பலி கொடுக்க இருந்த கிடா காணாமல் போகிறது.

    இறுதியில் காணாமல் போன கிடாவை பரோட்டா முருகேசன் கண்டுபிடித்தாரா? ஒண்டிமுனிக்கு கிடாவை பலி கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    பரோட்டா முருகேசனின் இயல்பான நடிப்பு படத்திற்கு பலம். காடு மேடுகளில் செருப்பு இல்லாமல் நடந்து செல்வது, குடும்பத்துக்காக அவர் படும் கஷ்டங்கள், கிடா விருந்து வைப்பதற்கு அவர் அனுபவிக்கும் சிரமங்கள் என உடலை வருத்திக் கொண்டு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

    மகனாக வரும் விஜயன் தியா பொறுப்பற்ற கிராமத்து இளைஞனாக நடித்து, பின்னர் தந்தையின் நிலையை அறிந்து வாழ தொடங்குவது என காட்சிகளில் கவனிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாநாயகியாக வரும் வித்யா சக்திவேல் கிராமத்து காதலை கண்முன் நிறுத்தியுள்ளார். பரோட்டா முருகேசன் மகளாக வரும் சித்ரா நாகராஜனின் எதார்த்த நடிப்பு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

    இயக்கம்

    கிராமத்தில் நடந்த ஒரு உண்மை கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுகவனம். மனிதர்களின் வாழ்வியலை யதார்த்தத்தோடும் இயல்பாகவும் வெளிக் கொண்டு வந்துள்ள இயக்குனர் சுக வனத்துக்கு பெரிய பாராட்டுக்கள்.

    இசை

    நடராஜன் சங்கரனின் பின்னணி இசை கதை கேற்றவாறு பயணித்துள்ளது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ஜேடி விமல், கிராமத்தின் அழகை மாறாமல் படம் பிடித்து இருக்கிறார்.

    சான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

    நாயகி கீர்த்தி சுரேஷ் பாண்டிச்சேரியில் தாய் ராதிகா, அக்கா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் அக்கா குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட இருக்கும் நிலையில், பிரபல ரவுடி சூப்பர் சுப்பராயன் போதையில் வீட்டுக்கு வருகிறார். அப்போது எதிர்பாராத விதமாக ரவுடியை கீர்த்தி சுரேஷும், ராதிகாவும் அடிக்கிறார்கள். மயங்கி கீழே விழுந்த ரவுடி இறந்து விடுகிறார்.

    சூப்பர் சூப்பராயன் பிணத்தை எப்படி அப்புறப்படுத்துவது என்று குடும்பத்தினருடன் கீர்த்தி சுரேஷ் திட்டம் போடுகிறார். இதற்கிடையில் ரவுடியின் எதிர் கும்பல் பிணத்தை அடைய  முயற்சி செய்கிறார்கள்.  சூப்பர் சுப்பராயனின் மகன் சுனில் தந்தையைத் தேடி அலைகிறார்.

    இறுதியில் கீர்த்தி சுரேஷ் சூப்பர் சூப்பராயனின் பிணத்தை எப்படி அப்புறப்படுத்தினார்? பிணத்தை அடைய நினைத்த கும்பலின் நிலை என்ன ஆனது? தந்தை தேடி அலைந்த சுனில் என்ன செய்தார் என்பதே படத்தின் மீதி கதை?

    நடிகர்கள்

    படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் ஆரம்பித்திலேயே டெலிவரிக்கு பிளான் சொல்லும் காட்சி, போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பிக்கும் காட்சி, சுனிலுடன் நீண்ட வசனம் பேசும் காட்சி, ஆகிய இடங்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இவருக்கு அடுத்தபடியாக தாயாக நடித்திருக்கும் ராதிகா தனது வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

    வில்லனாக நடித்திருக்கும் சுனில் படம் முழுக்க தந்தையை இறுக்கமான முகத்துடன் தேடி வருகிறார். அதிக வசனமும் அதிக முக பாவனைகள் இல்லாதது வருத்தம். போலீஸ் அதிகாரியாக வரும் ஜான் விஜய், ஓவர் ஆக்டிங் போல் இருக்கிறது. ரெடிங் கிங்ஸ்லி, கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்கரவர்த்தி. சென்ராயன் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.

    இயக்கம்

    கர்மா இஸ் பூமராங் என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜே கே சந்துரு. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதை நகர்த்திருக்கிறார். ஆனால் டார்க் காமெடி பெரியதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

    இசை

    சான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    ரேட்டிங்: 2.5/5

    • இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது.

    கதாநாயகன் ரஜினி கிஷன் மற்றும் கதாநாயகி திவிகா இருவரும் காலக்கின்றனர். இவர்கள் ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கின்றனர். திவிகாவை எப்படியாவது திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடுகிறார் அவரது மாமாவான கூல் சுரேஷ். இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துக்கொள்வதை தெரிந்த கூல் சுரேஷ் தடுக்க முயற்சிக்கிறார். ஆனால், முனீஷ்காந்த் மற்றும் நண்பர்களின் உதவியுடன் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பிறகுதான் தெரிகிறது, ரஜினி கிஷன் திவிகாவின் கழுத்தில் கட்டியிருக்கும் தாலியில் பேய் மறைந்து இருப்பது தெரிய வருகிறது.

    பேய் இருக்கும் தாலி எப்படி இவர்கள் கையில் சிக்கியது..? திவிகாவை விட்டு பேய் விரட்டியடித்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை..

    நடிகர்கள்

    கதாநாயகனாக நடித்துள்ள ரஜினி கிஷன் இப்படத்தி்கு பொறுத்தம். திவிகா கதாப்பாத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார். கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், முனீஷ்காந்த், கல்கி உள்ளிட்டோர் படத்திற்கு பலம்.

    இயக்கம்

    இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ள காமெடி த்ரில்லர் கதை வர்க் அவுட் ஆகியுள்ளது. முதல் பாதி படம் கொஞ்சம் இழுவையாக இருந்தாலும், இரண்டாவது பாதியில் நகைச்சுவை கலந்து ஹாரர் படமாக விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார். பேயை வைத்து கமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்.

    இசை

    இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    டைசன் ராஜ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சுமார் ரகம்.

    சிங்கப்பூரில் வசிக்கிற நாயகன் ஆதித் சிலம்பரசன் சொந்த ஊருக்கு வந்ததும் தனது காதலியை தேடிப் போகிறார். அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகிவிட்ட விவரம் தெரிந்து அதிர்ச்சியடைகிறார். அந்த அதிர்ச்சியிலிருந்தும் கவலையிலிருந்தும் அவனை மீட்க அவனது நண்பன் தனது தங்கையை திருமணம் செய்து வைக்கிறார்.

    நாட்கள் நல்லபடியாக நகர முரளியின் மனைவி தாய்மையடைகிறாள். அந்த சந்தர்ப்பத்தில் தனது முன்னாள் காதலியைப் பற்றி சில விஷயங்கள் முரளியின் கவனத்துக்கு வருகிறது. அவளுக்கு திருமணமான விவரம் தெரிந்தபோது அதிர்ச்சியடைந்ததை விட பல மடங்கு அதிர்ச்சியடைகிறார்.

    இறுதியில் ஆதித் சிலம்பரசன் அதிர்ச்சி அடைய காராரணம் என்ன? அவரது வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஆதித் சிலம்பரசன், பெண்ணின் குணமறிந்து காதலில் விழும்போதும், நண்பனின் தங்கையை திருமணம் செய்யும்போதும், நடிப்புக்குப் புதியவர் என்பது தெரியாதபடி உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். காதலியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, நாயகனுடன் காதல், வேறொருவருடன் வாழ்க்கை, என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். வர்ஷிதா, நாயகனுக்கு நண்பனாக வருகிற தம்பி சிவன், அனுகிருஷ்ணா, சரத், ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    காதல் கதையே மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ.பி.ராஜீவ். மனிதர்களை சந்தர்ப்பச் சூழ்நிலை என்னவெல்லாம் செய்யும் என்பதை சொல்ல வந்திருக்கிறார். நாயகன் காதலியை தவிக்கவிட்டு வெளிநாடு சென்றதற்கான காரணம் தெளிவாக இல்லை. லாஜிக்கே இல்லாமல் நகரும் சில காட்சிகள் படத்திற்கு பலவீனம்.

    இசை

    டைசன் ராஜ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சுமார் ரகம்.

    ஒளிப்பதிவு

    ஹரிகாந்த்தின் ஒளிப்பதிவை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.

    படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமார்.

    யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இன்ப்ளூயன்சராக இருக்கிறார் நாயகன் மற்றும் சிலர். தாங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற யூடியூப் இன்ப்ளூயன்சர்களை தேர்ந்தெடுக்கும் மர்ம நபர் கடத்தி கொலை செய்கிறார். இதுபோன்று, யூடியூப் இன்ப்ளூயன்சரான நாயகனும் கடத்தப்படுகிறார்.

    மர்மமாக கொலை செய்யும் தொடர் கொலையாளி யார்? கொலையாளியின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை..

    நடிகர்கள்

    கதையின் நாயகனாக வரும் மஹேந்திரன் கதாப்பாத்திற்கு ஏற்ப இயல்பாக நடித்திருக்கிறார். நாயகி நீமா ரேய் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். கருப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் சிக்கல் ராஜேஷின் நடிப்பு படத்திற்கு பலம்.

    இயக்கம்

    எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சிக்கல் ராஜேஷ், தற்போதைய சோசியல் மீடியா மோகத்தில் மூழ்கியிருப்பவர்களின் அத்துமீறிய செயல்களை கண்டிப்பதோடு, அவர்களுக்கு அதிரடியான முறையில் அறிவுரை கூற முயற்சித்திருக்கிறார். படம் முழுவதும் தொய்வு இருக்கிறது. படம் எடுக்கும் விதத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    இசை

    படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமார். இசையமைப்பாளர் ஏ.எம்.அசார் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    காட்சிகளை நேர்த்தியாக விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

    ரேட்டிங்- 1/5

    பரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் ஒன்று மட்டுமே கேட்கும் படியாக இருக்கிறது.

    நாயகன் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். ஒரு நாள் எழுத்தாளர் ஒருவர் விபத்தில் சிக்குகிறார். அதன் பிறகு அங்கேயே மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். சில நாட்களில் தொழிலதிபரான ராம்குமார் மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார்.

    அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்க, இதை யார் செய்தார்கள் என்பதை தீவிர விசாரணையில் இயங்குகிறார் அர்ஜுன். ஒரு கட்டத்தில் இந்த கொலைகளை எல்லாம் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் செய்கிறார் என்பது தெரிய வருகிறது.

    இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷ் யார்? எதற்காக கொலைகள் செய்கிறார்? போலீஸ் அதிகாரியான அர்ஜுன் எப்படி ஐஸ்வர்யா ராஜேஷை கண்டுபிடித்தார்? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அர்ஜுன் போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். நடை, உடை, உடல் மொழி, ஆக்சன் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன காட்சிகளில் கவனம் பெற்று இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் நெகிழ வைத்திருக்கிறார்.

    அபிராமி வெங்கடாசலம், ஐஸ்வர்யா ராஜேஷ் இன் காதலராக வரும் பிரவீன் ராஜா, தொழிலதிபர் ராம்குமார், போலீஸ் கான்ஸ்டபிள் தங்கதுரை ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    இயக்கம்

    பழிவாங்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் தினேஷ் லட்சுமணன். ஒரு கொலை, அதன் பின்னணி, ஒரு பிளாஷ்பேக் என வழக்கமாக பல படங்களில் நாம் பார்த்த கதையை அப்படியே எடுத்திருக்கிறார். முதல் பாதையில் திரைக்கதை புரியாமல் செல்கிறது. இரண்டாம் பாதியில் வழக்கமான திரைக்கதையாகவே செல்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் எதிர்பாராத ஒரு திருப்பம் மட்டும் ரசிக்க வைக்கிறது.

    இசை

    பரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் ஒன்று மட்டுமே கேட்கும் படியாக இருக்கிறது. பின்னணி இசை திரைக்கதைக்கு ஒட்டவே இல்லை.

    ஒளிப்பதிவு

    சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவை ஓரளவு ரசிக்க முடிகிறது.

    ரேட்டிங்: 1.5

    ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    நாயகன் கவின் தனியார் துப்பறியும் நிபுணர் (பிரைவேட் டிடெக்டிவ்) என்ற பெயரில் பலரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார். அதேபோல் நாயகி ஆண்ட்ரியா பெண்கள் பாதுகாப்பு, சமூக ஆர்வலர் என்ற பெயரில் தவறான செயல்களை செய்து வருகிறார்.

    இந்நிலையில் அரசியல்வாதியான பவன், தேர்தலுக்காக தொகுதி மக்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பல கோடி ரூபாய் பணத்தை ஆண்ட்ரியாவிடம் கொடுக்கிறார். அந்த பணத்தை ஆண்ட்ரியா தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் பதுக்கி வைக்கிறார். அந்த பணத்தை மாஸ்க் அணிந்த சிலர் கொள்ளை அடித்து விடுகிறார்கள். அந்த பணத்தை தேடும் பணியை ஆண்ட்ரியா கவினிடம் கொடுக்கிறார்.

    இறுதியில் கவின் அந்த பணத்தை கண்டுபிடித்தாரா? பணத்தை கொள்ளை அடித்தவர்கள் யார்? என்பதே படத்தின் மீதி கதை..

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கவின், எதார்த்தமாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். இவரது நடிப்பில் மற்றொரு நடிகரின் சாயல் தெரிகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் கவனிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆண்ட்ரியா, பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார். இவரது வில்லத்தனமான நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

    மற்றொரு நடிகை ஆக வரும் ருஹானி சர்மா அழகாக வந்து சென்று இருக்கிறார். அரசியல்வாதியாக நடித்திருக்கும் பவன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக், ரெடின் கிங்ஸ்லீ ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    இயக்கம்

    ஒரு இடத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீண்டும் அதே இடத்தில் கொடுக்க வைப்பதை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விகர்ணன் அசோக். டார்க் காமெடி ஜானரில் படத்தை இயக்கியிருக்கிறார். பெரியதாக டார்க் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. நெல்சன் இன் பின்னணி குரல் படத்திற்கு பலவீனம்.

    இசை

    ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    ஒளிப்பதிவு

    ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையும் ஆர்.டி ராஜசேகரின் ஒளிப்பதிவும் கதையோடு பயணித்திருக்கிறது.

    அபி ஆத்விக்கு ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

    நாயகி பூர்ணிமா ரவி அப்பா டெல்லி கணேஷ், தாய் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். திடீரென்று டெல்லி கணேசுக்கு உடல் நலம் குன்றியதால், குடும்ப பொறுப்பினை அவர் ஏற்கிறார். அதன் பிறகு காதல் தோல்வி, பிடிக்காத வேலை, மன அழுத்தம், ஒவ்வொரு நாளுமே துயரமாக கடந்து செல்கிறது.

    இதன் காரணமாக, பூர்ணிமா தன்னுடைய சிறு வயதில் பழகிய நபர்களை தேடிச் செல்கிறார். இறுதியில் அவர்களை சந்தித்தாரா? பூர்ணிமா ரவியின் வாழ்க்கை என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகியாக நடித்திருக்கும் பூர்ணிமா ரவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல் தோல்வி, அழுத்தம் கொடுக்கும் வேலை, குடும்ப பாரம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். நாயகனாக நடித்திருக்கும் வைபவ் முருகேசன் துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவர்கள் ஒன்றாக பயணிக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. தந்தையாக நடித்திருக்கும் டெல்லி கணேஷ் அனுபவ நடிப்பையும், சிறு வயது தோழியாக வரும் நமிதா கிருஷ்ணமூர்த்தி அழகான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    இயக்கம்

    ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரி மகாதேவன். அழுத்தமான தருணங்களிலும், தோல்விகளின் போதும் நம்மை எவ்வாறு எதிர் கொண்டு, அடுத்தக்கட்ட நகர்வினை நோக்கி எப்படி பயணப்பட வேண்டும் என்பதை, அழகாக சொல்லியிருக்கிறார். தன்னம்பிக்கை கொடுக்கக்கூடிய வசனங்கள் பாராட்டும் படி இருக்கின்றன. இரண்டாம் பாதி நீளத்தை குறைத்து இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    இசை

    கிளிஃபி கிரிஸ், இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. பின்னணி சரி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

    ஒளிப்பதிவு

    அபி ஆத்விக்கு ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். மலை, அருவி என இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது சிறப்பு.

    ×