என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muneeskanth"

    என்.டி.ஆர் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

    செல்வந்தரான நாயகி ஆஷ்னா சவேரி தற்கொலை செய்து கொள்ள விஷத்துடன் தயாராகிறாள். அந்த நேரமாகப் பார்த்து ஒரு திருடன் முனீஷ்காந்த் வீட்டுக்குள் நுழைகிறார். அவரைப் பார்த்த அதிர்ச்சியில் விஷம் இருக்கிற பாட்டில் உடைந்து சிதறிவிட, தன் கையிலிருக்கும் துப்பாக்கியைக் கொடுத்து கொல்ல சொல்கிறார் ஆஷ்னா சவேரி.

    பதட்டமடையும் முனீஷ்காந்த், நான் திருடத்தான் வந்தேன், கொலை செய்கிற அளவுக்கு எனக்கு தைரியமில்லை, என்னை விட்டு விடுங்கள் என்கிறார். என்னை கொல்லாவிட்டால், திருட வந்த குற்றத்துக்காக உன்னை போலீஸிடம் ஒப்படைத்து விடுவேன் என்று ஆஷ்னா சவேரி, முனீஷ்காந்த்தை மிரட்டுகிறார்.

    இறுதியில் முனிஷ்காந்த், ஆஷ்னா சவேரியை கொலை செய்தாரா? எதற்காக ஆஷ்னா சவேரி தற்கொலை முயற்சி செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா சவேரி, தற்கொலைக்கு முயற்சிப்பது, திருடன் வந்ததும் அவனிடம் துப்பாக்கியைக் கொடுத்து சுட சொல்வது, மறுக்கும்போது மிரட்டி சம்மதிக்க வைப்பது, தற்கொலை முடிவுக்கான காரணத்தை விளக்குவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

    ஆஷ்னாவின் கணவராக நடித்து இருக்கும் அசோக், மனைவியைக் கொடுமைப்படுத்துபவர், மனைவியால் கொடுமைகளை அனுபவிப்பவர் என இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    திருடனாக வரும் முனீஷ்காந்த், ஆஷ்னா சவேரியிடம் மாட்டிக்கொண்டு, தவிக்கும் காட்சியில் சிரிக்க வைத்து இருக்கிறார். நிழல்கள் ரவி, வினோத் சாகர், ஷரவண சுப்பையா, ராட்சசன் சரவணன், ஆர்.எஸ். நித்தீஷ், அஸ்மிதா உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரங்களில் வந்து போகிறார்கள்.

    இயக்கம்

    சூழ்நிலைகள்தான் மனிதர்கள் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் மாறுவதற்கு காரணமாக அமைகிறது என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்தி தட்சிணாமூர்த்தி. திரில்லர் பாணியில் படத்தை கொடுக்க நினைத்து இருக்கிறார். திரைக்கதையில் சுவாரசியம் கூட்டியிருந்தால் ரசித்து இருக்கலாம்.

    இசை

    என்.டி.ஆர் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

    ஔிப்பதிவு

    ஒரு வீட்டுக்குள்ளேயே கேமரா கோணங்களை அமைத்திருக்கும் ஆர்.அதிசயராஜின் ஒளிப்பதிவு சிறப்பு.

    ரேட்டிங்-2/5

    • கடந்த 2008 ஆம் வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது.
    • டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் 'தி டார்க் ஹெவன்' படத்தில் நகுல் பிசியாக நடித்துவருகிறார்.

    பிரபல தமிழ் நடிகை தேவயானியின் இளைய சகோத்தரர் நகுல் சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். நகுல் நடப்பில் கடந்த 2008 ஆம் வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது.

     

    இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னணி பாடகராகவும் உள்ள நகுல் இடையில் சூப்பர் சிங்கர் 7 நிகச்சியில் சிற்ப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டார்.

    தற்போது டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் 'தி டார்க் ஹெவன்' படத்தில் நகுல் பிசியாக நடித்துவருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்த 'வாஸ்கோடகாமா'  திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

    அதன்படி 'வாஸ்கோடகாமா' படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×